Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக்கு சுற்றுலா வந்த நெதர்லாந்து நாட்டு பெண்ணின் கைத்தொலைபேசியை திருடிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எல்ல பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் கான்ஸ்டபிளே இவ்வாறு இன்று கைது செய்யப்பட்டுள்ளார். எல்ல புகையிரத நிலையத்தில் வைத்து குறித்த பெண்ணின் 79,000 பெறுமதியான கைத்தொலைபேசி உள்ளிட்டவைகள் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளால் திருடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.tamilwin.com/community/01/119906

  2. சம்பள உயர்வை வலியுறுத்தி மலையத்தின் பல்வேறு பகுதிகளில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பத்தாவது நாளாகவும் இன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பத்தனை, ஸ்டோனிகிளிப் தோட்டத்தின் 4 பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 300 இற்கும் அதிகமான தொழிலாளர்கள் இன்று காலை முதல் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஸ்டோனிகிளிப் தோட்டத் தொழிலாளர்கள், ஹற்றன் - நுவரெலியா பிரதான வீதியை மறித்து, கொட்டகலை நகரில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன்போது தொழிலாளர்கள் தங்களின் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி கோஷம் எழுப்பியதுடன், சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர். பத்தனை …

    • 2 replies
    • 1.5k views
  3. கொழும்பு - கண்டி அதிக வேக வீதியின் மூன்றாம் கட்டத்தை நிர்மாணிப்பதற்கான கேள்விப் பத்திரத்தை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தெரிவு செய்துள்ள ஜப்பானின் டைய்செய் கோர்பரேஷன் நிறுவனத்தின் கேள்விப் பத்திரத்திற்கமைய சமர்ப்பிக்கப்பட வேண்டி ஏல பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. பில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்படும் இந்த அதிவேக நெடுஞ்சாலை, பொத்துஹெரயில் இருந்து கண்டி வரை மூன்றாம் கட்டத்தின் கீழ் நிர்மாணிப்பிற்காக ஜப்பான் கடன் உதவியுடன் அந்நாட்டு நிறுவனம் ஒன்றுக்கு ஏலம் விடுப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அதற்காக ஜப்பான் நிர்மாணிப்பு நிறுவனங்கள் ஆர்வம் செலுத்தியிருந்த போதிலும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் விசேட ஆலோசகரின் நிறுவ…

  4. மனிதன் அன்றாடம் தனது வாழ்வில் பல சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது. பிறந்த குழந்தைகளிலிருந்து தள்ளாடும் வயோதிபர்கள் வரை உதவிகள் எப்போது தேவைப்படும் என்பது யாரும் அறியாத விடயம். அவ்வாறு எதிர்பாராத நேரத்தில் ஏதேனும் விபரீதங்கள் நேர்ந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? யாருக்கு அறியப்படுத்துவீர்கள்? எவ்வாறு பிரச்சினைகளை தீர்ப்பீர்கள்? இவ்வாறு பல வினாக்கள் எழும். இதற்கான தீர்வுகளையே இப்போது உங்களுக்காக நாம் கொண்டுவந்துள்ளோம். ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டாலோ, விபத்துக்கள் ஏற்பட்டாலோ எடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துங்கள். 1. அவசர பொலிஸ் பிரிவு - 119, 011-5717171 2. அம்புலன்ஸ் (கொழும்பு) - 110 3. பெண்களிற்க…

  5. வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்கும் போது விதிக்கப்படும் வரியை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தின் போது இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்குவது குறித்த சட்ட மூலத்தில் திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்கும் போது 15 வீத வரி அறவீடு செய்யப்பட்டு வந்தது. 2013ம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்படும் வரையில் இது தொடர்பிலான சட்ட மூலம் 2014ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாறு வரி அறவீட்டை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. http://www.tamilwin.com/pro…

  6. கடந்த ஆட்சியின் போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலருக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் காணி பெற்றுக்கொடுத்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.கதிர்காமம் கோவிலை சுற்றியுள்ள காட்டு பகுதியில் ஒருவருக்கு 15 ஏக்கர் என்ற ரீதியில், 15 நீதிபதிகளுக்கு காணிகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரபல நீதிபதிகளுக்கு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைய காணிகள் வழங்கப்பட்டதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். காணி வழங்கல் தொடர்பில் நாடாளுமன்றில் தகவல் வெளியிட்ட பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, காணிகளை பெற்ற நீதிபதிகள் தொடர்பில் முழு நாட்டிற்கும் தகவல் வெளியாகும் என…

    • 1 reply
    • 323 views
  7. புதுடில்லி: மீனவர்கள் எல்லை தாண்டுவதால்தான் கைது செய்யப்படுவதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். பிரதமருடன்சந்திப்பு: டில்லி வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இன்று இலங்கை பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து பேசினார். டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். ஐதராபாத் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ரணில் விக்ரமசிங்கே எடுத்துரைத்தார். மேலும் இரு நாட்டு உறவு, மீனவர் பிரச்னை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்த ரணில், இரு நாட்டு உறவு மற்றும் வர்த்தகம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது பல மூத்த அத…

  8. சிறுநீரக நோயை கட்டுப்படுத்த உதவ முன்வந்தது ஜேர்மன் இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு உதவ ஜேர்மன் அரசாங்கம் முன்வந்துள்ளது. இலங்கைக்கான ஜேர்மனியின் புதிய தூதுவர் ஜோர்ன் ரோட் அவரது நியமனக் கடிதத்தை இன்று (05) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளித்த போதே இதனை தெரிவித்தார். இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் சிறுநீரக நோயை தடுப்பதற்கான நிகழ்ச்சித்திட்ட ங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாகக் குறிப்பிட்ட தூதுவர் ரோட், ஜேர்ம னிக்கும் இல ங்கைக்கும் இடையிலான கூட்டுறவு மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும் கடந்த வருடம் ஜனாதிபதி சிறிசேனவின் ஜேர்மனிக்…

  9. “நானும் கடும் அதிருப்தியில் இருக்கின்றேன்” : ராஜித்த பாரிய ஊழல்கள் தொடர்பில் விசாரிக்கப்படாமை தொடர்பில் நானும் கடும் அதிருப்தியில் இருக்கின்றேன். அதாவது சிறிய விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்துகின்றது. ஆனால் மிக பெரிய சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதில்லை. இது தொடர்பில் நான் ஜனாதிபதி மற்றும் பிரதமருடனும் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். அதாவது சிறிய விடயங்களை விடுத்து மிகப் பெரிய விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாம் கோருகின்றோம். வெறுமனே சிறிய விடயங்களுக்காக அதிகாரிகளை விசாரிப்பதில் அர்த்தமி…

  10. வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள ஈழத் தமிழர்களை திருப்பி அனுப்பும் அளவிற்கு இன்னமும் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிறீலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சுவிற்சர்லாந்து நீதி மற்றும் காவற்துறை அமைச்சர்களுடன் வருகை தந்துள்ள ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தஞ்சம் கோரியுள்ள ஈழத் தமிழர்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்புமளவுக்கு நாட்டில் நிலமை மாற்றமடையவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் இணைந்து நடாத்தும் ஆட்சியிலும் 17 சித்திரவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன எனத் …

  11. முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரால் வசந்த கரன்னாகொடவிடம் ஒன்பது மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குற்ற விசாரணைப் பிரிவினர் இன்றைய தினம் முன்னாள் கடற்படைத் தளபதியிடம் இவ்வாறு விசாரணை நடத்தியுள்ளனர். சுமார் ஒன்பது மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டதாக குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் 13 பேர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இன்று காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் 11 இளைஞர்கள் கடத்தி காணாமல் போகச் செய்யப்பட்டமை மற…

  12. அகதிகளை நாடு கடத்துவது தொடர்பாக சுவிட்சர்லாந்து சிறீலங்காவுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இருதரப்பு உடன்பாடு ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. சுவிற்சர்லாந்தின் நீதியமைச்சர் சிமோனேட்டா சொம்மாறுகாவுக்கும், சிறிலங்காவின் உள்விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்னவுக்கும் இடையில் இந்த உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டது. நாடு கடத்தும் நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பான உடன்பாட்டிலேயே கையெழுத்திடப்பட்டுள்ளது. அத்துடன் தாயகம் திருப்பி அனுப்பப்படும் இலங்கை அகதிகள் சித்திரவதைக்குட்படுவார்கள் என்ற கருத்தை சுவிட்சர்லாந்தின் நீதியமைச்சர் நிராகரித்துள்ளார். முன்பு போலவும், இந்த உடன்பாட்டுக்கமையவும் ஒவ்வொருத்தரும் பரிசீலிக்கப்படுவார்கள். இதன்படி யாருக்கு உதவி தேவை, …

    • 2 replies
    • 530 views
  13. கட்டுநாயக்க விமான நிலையத்தின் 200 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் 200 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக இலங்கை விமான சேவையின் தலைவர் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள புனர்நிர்மான பணிகளின் நிமித்தம் குறித்த விமான சேவைகள் இரத்து செய்யப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். http://www.virakesari.lk/article/12080

  14. விக்கிப்பீடியாவில் தமிழீழம்:தலைநகராக திருகோணமலை விக்கிப்பீடியா இணையக் கலைக்களஞ்சியத்தில் Tamil Eelam (தமிழீழம்) என்ற பெயரில் பக்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த பக்கத்தில், இன்று 5ஆம் திகதி இறுதியாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. விக்கிப்பீடியா இணையக் கலைக்களஞ்சியத்தில் ஒவ்வொருவருக்கும் பக்கங்களை அமைத்து பராமரிக்க முடியும். குறித்த பக்கம் தொடர்பில் விக்கிப்பீடியா தலைமையகத்துக்கு இணையத்தின் ஊடாக முறைப்பாடுகளை செய்ய முடியும். AddThis Sharing Buttons Share to FacebookShare to TwitterShare to Goog…

  15. யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற 'எழுக தமிழ்' பேரணியின் போது, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாகச் சர்ச்சைகள் எழுப்பப்பட்டுவரும் கருத்துக்கள், அவரால் பேசப்பட்டிருக்கவில்லை என்று, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (04) சபையில் விளக்கமளித்தார். எழுக தமிழ் நிகழ்வில் போது, பௌத்த சாசனத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணான வகையிலுமான கருத்துக்களை விக்னேஸ்வரன் முன்வைத்தார் என்று சுட்டிக்காட்டிய, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, 23/2ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ், நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்து உரையாற்றுகையிலேயே, சம்பந்தன…

  16. புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் விதிகள், பயங்கரவாத தடைச்சட்டத்தை விடவும் மோசமாக அமையலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கவலை வெளியிட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றைக் கொண்டுவரப்போவதாக அண்மையில் நியூசிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டபோது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். இது குறித்தது புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் பயங்கரவாதத்துக்கு எதிராக தீவிரவாத முடியடிப்புச் சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்படவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உற…

    • 0 replies
    • 459 views
  17. வடக்கில் இராணுவத்தின் பிடியில் காணப்படும் சகல காணிகளும் இவ்வருட இறுதிக்குள் விடுவிக்கப்படுமென காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். காணி அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமை ச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் குறித்து அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்- ”நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக, தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டே வடக்கில் படையினர் நிலைகொண்டிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. தற்போது சுமுகமான சூழல் நிலவுவதால் கடந்த காலத்தில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள கையளிக்கவேண்டியது அவசியமாகும். வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களி…

  18. வடக்கு மாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனின் இறப்பையடுத்து அவரது கதிரைக்கு கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமக்குள் முட்டிமோதிக்கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது வெற்றிடமாகியுள்ள பிரதி அவைத்தலைவர் வெற்றிடத்துக்கு முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரே நியமிக்கப்படவேண்டுமெனவும் குரல்கள் வலுத்துள்ளன. இருப்பினும், பிரதி அவைத்தலைவர் வெற்றிடத்துக்கு கிளிநொச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரியரத்தினத்தை நியமிக்கவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தி வருகின்றார். ஏற்கனவே முன்னாள் கல்வியதிகாரியான அரியரத்தினம் தனக்கு கல்வியமைச்சர் பதவி வேண்டுனெ கோரிக்கைவிடுத்திருந்தபோது…

    • 3 replies
    • 327 views
  19. பௌத்த சமயத்தை உருவாக்கிய புத்தபெருமானே இந்தியாவிலிருந்து தான் இலங்கைக்கு வந்தவர். அவர் இலங்கைக்குவர முன்பு இங்கிருந்த மதம் என்னவென்று ஞானதேரருக்குத் தெரியுமா? என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் பகிரங்கமாக கேள்வியெழுப்பியுள்ளார். திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக்கழகம் நடாத்திய கவிந்திரன் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இலங்கையில் பூர்வீகமாக இருந்துவந்த தமிழ்மக்களை இந்தியாவிற்குப் போ என்று சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது. முன்னைய காட்டுமிராண்டித்தனமான அரசின் …

    • 6 replies
    • 1.1k views
  20. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாக வெளியாகியிருந்த பல விடயங்களை அவர் குறிப்பிடவே இல்லையென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென நாடாளுமன்றில் தெரிவித்தார். எழுக தமிழ் நிகழ்வின் போது பௌத்த சாசனத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணான வகையில் விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்ததாக குறிப்பிட்டு, அதற்கு அரசாங்கத்திடம் பதிலை கோரி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான தினேஸ் குணவர்தன 23/2 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பிய சந்தர்ப்பத்திலேயே சம்பந்தன் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.இவ்விடயம் குறித்து சம்பந்தன் சபையில் விளக்கமளிக்கையில்- ”எழுக த…

  21. “ஒற்றையாட்சியைச் சிதைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பும் அரசியல் தீர்வை வழங்குவதற்கு ரணில் – சம்பந்தன் இடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டிருப்பதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாயணக்கார குற்றஞ்சாட்டியுள்ளார்.. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் மைத்திரி – ரணில் அரசின் உருவாக்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்தது எனவும் பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போது அவர் தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்திருப்பதாவது: “தமிழர்களுடைய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கிறோம்.ஆனால், நாட்டைப் பிரிக்காமல் ஒற்றையாட்சிக்குள் அதற்கான தீர்வு வழங்கப்…

    • 0 replies
    • 358 views
  22. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள் நீண்டகாலமாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்ற நிலையில், அரசாங்கம் இவ்விடயம் குறித்து விரைந்து செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் நாம் இந்த அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகிறோம். இவ்விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாட்டுடனான ஏற்பாடுகள், கலந்துரையாடல்கள் இடம்பெற்று அடிப்படையில் அனைவரது மத்தியிலும் பொது இணக்கப்பாடொன்று…

    • 0 replies
    • 266 views
  23. இலங்கையர்களுக்கு, அமெரிக்காவில் நிரந்தர வதிவிட உரிமை (கிறீன் கார்ட்) வழங்குவதற்கு 50,000 பேரை தெரிவு செய்வதற்கு நேற்று முதல் இணையத்தில் விண்ணப்பிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசு வருடாந்தம் பல நாடுகளை சேர்ந்த 50,000 பேரை லொத்தர் குலுக்கல் முறையில் தெரிவு­ செய்து நிரந்தர வதிவிட உரிமை வழங்கி வருகிறது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் இதற்காக வருடாந்தம் லொத்தர் குலுக்கல் நடைபெற்று வருகின்றதுடன், Diversity Visa Program எனும் இந்தக் குழுக்கள் முறையில் விண்ணப்பிப்பதற்கு இலங்கையர்களும் தகுதியுடைவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில் அமெரிக்க வதிவிட உரிமை பெறுவதற்கான DV-2018 குலுக்கல் த…

    • 0 replies
    • 358 views
  24. தனது மூத்த மகன் நாமல் ராஜபக்ஷ, அண்மையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்ததாகவும், சிறையிலிருந்து திரும்பிய அவர், மேற்படி சிறைக்கைதிகள் தொடர்பில், உணர்வுபூர்வமான த்து எம்மால் கேள்வியொன்றைத் தன்னிடம் கேட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். “தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இன்னமும் விடுதலை வழங்கப்படவில்லை?" என்ற நாமலின் கேள்வி, என்னை ஆச்சரியப்பட வைத்தது. அந்தக் கேள்வியை அவர், மிகவும் உணர்வுபூர்வமாகவே எழுப்பினார்” என்று மஹிந்த குறிப்பிட்டார். “அந்தக் கேள்விக்கு பதிலளித்த நான், அவர்கள் தொடர்பில் வழக்குகள் உள்ளன. அவர்களுக்கெதிரான வழக்குகளை வேண்டுமானால், சட்டமா அதிபர்…

  25. இலங்கையில் மீண்டும் மலேரியா நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக வடக்கின் விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் மலேரியா ஒழிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு மற்றும் இலங்கையும் அறிவித்துள்ள போதும், மீண்டும் அந்த நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வவுனியாவில இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணன் சிவராமன் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவுக்கு யாத்திரை மற்றும் வர்த்தக நடவடிக்கைக்காக சென்று மீண்டும் நாடு திரும்புவோர் மூலம் இந்த நோய் பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து…

    • 0 replies
    • 362 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.