Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நீங்கள் ஊடகங்களில் அவதானித்திருப்பீர்கள். வடக்கு மாகாண அமைச்சுக்களிலிருந்து நிதி திரும்பப் போகிறது எனச் சொல்லுகிறார்கள். நிதி இன்னும் செலவழிக்கப்படாமலிருக்கிறது எனச் சொல்லுகிறார்கள். ஆனால், அமைச்சரான நான் நிதி பற்றாக் குறைவாகவிருக்கிறதே எனச் சொல்லுகிறாரே என நீங்கள் சிந்திப்பீர்கள். உண்மையில் அதுவொரு விஷமத்தனமான பிரசாரம். திட்டமிடப்பட்டு வட மாகாண சபைக்கும், அதனுடைய தலைமைத்துவமாக வாய்த்திருக்கக் கூடிய சிறந்த தலைவர் விக்கினேஸ்வரன் ஐயாவுக்கும் திட்டமிட்டு சேறு பூச வேண்டும் என்பதற்காகச் சொல்லப்படுகின்ற விமர்சனங்கள் என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும…

  2. நல்லாட்சி வலையில் சிக்கிய முதல் நான்கு மீன்கள் ரணில் - மைத்திரி நல்லாட்சி வலையில் மூன்று அரசியல் கட்சிகள் விழுந்துள்ளன. இந்த கட்சிகளை சார்ந்த நான்கு பேருக்கு அமைச்சு பதிவிகள் வழங்குவதற்கு பேரம் பேசப்பட்டுள்ளது. ஐந்தாண்டு திட்டத்திற்கு தேவையான அரசியல் ஸ்தீரதன்மையை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இதனடிப்படையில் கூட்டு எதிர்க் கட்சி உறுப்பினர்களை குறி வைத்து காய் நகர்த்து நல்லாட்சி அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிலையான பெரும்பான்மையை தக்க வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதத்தில் ஆறுமுகம் தொண்டமான், முத்துசிவலிங்கம், டக்ளஸ் தேவானந்தா மற்றும் முஸ்லிம் தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா ஆகியோருக்…

  3. உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தால் அம்பாறை மாவட்ட பாணம மக்களின் காணிகள் தொடர்பாக களஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது . இதன் போது தங்களது காணிகளை இழந்து தவிக்கும் மக்கள் பல பிரச்சனைக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் தனது ஆதங்கத்தையும் வெளியிட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் நாங்கள் மிகவும் சந்தோசமாக இருந்தோம். எம்மை அவர்கள் எதுவும் செய்யவில்லை. அவர்கள் சாதாரண மக்களின் பிரச்சனைகளை பற்றி நன்கு தெரிந்தவர்கள். எங்களுக்கு எங்களது காணிகளில் பயிர் செய்து கடல் தொழில் செய்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தோம். எமக்கு என்று நிலம் இருந்தது தற்போது அதை எமது அரசாங்கம் சூறையாடியுள்ளது . எம்மை கிர…

  4. “கிழக்கு மாகாணத்தை வடக்குடன் பலவந்தமாக இணைக்க முடியாது” கிழக்கு மாகாணத்தை வடக்குடன் பலவந்தமாக இணைக்க முடியாது. அவ்வாறு இணைப்பதாயின் கிழக்கு மாகாண மக்களின் விருப்பை அறிந்து கொள்வதற்காக சர்வஜன வாக்கெடுப்பினை நடத்த வேண்டும் என கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்தார். எவ்வாறாயினும் கிழக்கு மாகாண மக்கள் வடகிழக்கு இணைப்பை ஒருபோதும் விரும்பமாட்டார்கள். நாட்டில் இனவாத தூண்டும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனும் அரசியல் சாணக்கிய நாடகத்தை அரகேற்றுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். புறகோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேச…

    • 2 replies
    • 577 views
  5. வாசுவும் விக்கியும் கூட்டுச் சதியில் ஈடுபடவில்லை (க.கமலநாதன்) ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவுக்கும் வடக்கு முதல்வருக்கும் எந்தவித இரத்த உறவும் இல்லை. அவர்களின் பிள்ளைகள் திருமணம் செய்துக்கொண்டதாலேயே இந்த பந்தம் ஏற்பட்டது. எனவே அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிரான கூட்டுச் சதிகளை முன்னெடுப்பதாக கூறுவதை தாம் முற்றிலும் மறுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்கினேஸ்வரனும் கூட்டு சதிகளை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்ததையடுத்தே அவர் இதனை மறுப்பதாக கேசரிக்கு தெரிவித்தார். …

  6. வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி 9 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. குறிப்பாக கட்டட புனரமைப்பு மற்றும் மாணவர்களுக்கான மலசல கூடங்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்த காங்கேசன்துறையில் ஒரு தொகுதி காணிகளை அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுவித்திருந்தார். இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியும் விடுவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட பாடசாலையில் உள்ள சிறிய வளங்களைக் கொண்டு…

  7. பௌத்த மயமாகும் தமிழர் தாயகம் மறுக்க முடியாத ஆதாரங்கள் மூலம் அனைவர் கவனத்தையும் ஈர்த்த பிரித்தானிய தமிழர் பேரவை ஜெனீவாவிலுள்ள ஐ நா மனித உரிமை கழகத்தின் 33வது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் மத்தியில் பிரித்தானிய தமிழர் பேரவை சமர்ப்பித்த ஆவணங்கள் சிறிலங்காவின் முன்னைய அரசு மற்றும் இன்றைய "நல்லாட்சி" அரசின் நிலப் பறிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது. நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழக (UNHRC) கூட்டத் தொடரில் இலங்கையில் தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ மயமாக்கல் மற்றும் நில அபகரிப்பு தொடர்பாக நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. பிரித்தானி…

    • 4 replies
    • 400 views
  8. விக்னேஸ்வரன் அரசியல் முதிர்ச்சியற்றவர் – எஸ்.பி. திஸாநாயக்க வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் அரசியல் ரீதியில் முதிர்ச்சியற்றவர் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். எழுக தமிழ் போராட்டம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். அரசியல் நோக்கங்களுக்காக விக்னேஸ்வரன் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மெய்யான வாழ்க்கையில் விக்னேஸ்வரன் ஓர் காலி பாத்திரம் எனவும் அதில் எதுவும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்காக போராடும் ஓர் நபராக தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள முயற்சிப்பதாகவும் பிரபாகரனின் பெரியப்பாவைப் போன்று செயற்பட முயற்சிப்…

    • 2 replies
    • 317 views
  9. தகவல் அறியும் உரிமை அனைத்து பிரிவுகளுக்கும் திறந்துவிடப்பட வேண்டும் : ஜனாதிபதி ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் போசித்து பாதுகாக்கும் நாடென்ற வகையில் தகவல் அறியும் உரிமையானது நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் திறந்துவிடப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார். 'சர்வதேச தகவல் அறியும் நாள்' தொடர்பில் இன்று கொழும்பு ஜெய்க் ஹில்ரன் ஹோட்டலில் ஆரம்பமான சர்வதேச மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு கூறினார். தகவல் அறிந்துகொள்ளும் உரிமையை சமூகத்தின் அடிப்படை உரிமை உறுதிப்படுத்துதல் தொடர்பாக நீண்ட காலமாக அரசியல் மேடைகளிலும், சிவில் அமைப்புக்களாலும், பொதுமக்களிடையேயும…

  10. நெடுந்தீவு மரபுரிமை குதிரைகள் இராணுவத்தினரால் கடத்தல் ? வலி.வடக்கில் கடந்த 26 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து அண்மையில் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட காங்கேசன்துறை பகுதிகளில் நான்கு குதிரைகள் கட்டாகாலிகளாக அலைந்து திரிகின்றன. இந்த குதிரைகளை இராணுவத்தினரே வளர்ப்பதாக தெரிய வருகின்றது. குறித்த நான்கு குதிரைகளில் ஒரு குதிரை நெடுந்தீவில் வாழும் நபர் ஒருவரின் வளர்ப்பு குதிரை என கண்டறியப்பட்டு உள்ளது. குறித்த குதிரையில் காணப்படும் சூல குறியீடு மூலமே குதிரை அடையாளம் காணப்பட்டு உள்ளது. இந்த குதிரைகள் எவ்வாறு வலி.வடக்கு பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டது என்பது தெரியவரவில்லை. இராணுவத்தினரால் கடத்தி வரப்பட்டு இருக்கலாம் எனவு…

  11. 26 வருடங்களின் பின்னர் ஆலய திருவிழா கொண்டாடிய பக்தர்கள் கிளிநொச்சி கண்டாவளை கொம்படி அம்மன் ஆலயத்தின் 108 பாற்குட பவனி நிகழ்வு 26 வருடங்களின் பின்னர் நேற்று காலை இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை கடற்கரையோரத்தில் அமைந்திருக்கும் கொம்படி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் 26 வருடங்களுக்குப் பின்னர் தற்போது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கண்டாவளை ஆவரஞ் குறிஞ்சிப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் 108 பெண்கள் மஞ்சள் நிற புடவை அணிந்து தலையில் பாற்செம்புகளை தாங்கி சுமார் 4 கிலோ மீற்றர் தூரம் நடைபவனியாக கொம்படி அம்பாள் ஆலயத்திற்கு வ…

    • 3 replies
    • 385 views
  12. தயா மாஸ்டருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் குற்றப் பகிர்வுப் பத்திரம் சட்ட வலுவற்றது. எனவே, அந்த விதிகள் சட்ட வலுவற்றது என தீர்ப்பளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும் என விடுத்த வேண்டுகோளை பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது என தெரிவித்து, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் இந்த வழக்கை நவம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார். …

  13.  5 வயது சிறுமிக்கு மார்பகப் புற்றுநோய் அறுவைச் சிகிச்சை மார்பகப் புற்றுநோய்கான முதலாவது அறுவை சிகிச்சை இன்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் கனிஷ்க டி சில்வா தெரிவித்துள்ளார். 5 வயதுடைய சிறுமிக்கே இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதுடன் இது மிகவும் அரியதொரு சந்தர்ப்பம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/182776/-வயத-ச-ற-ம-க-க-ம-ர-பகப-ப-ற-ற-ந-ய-அற-வ-ச-ச-க-ச-ச-#sthash.lVZxo78q.dpuf

  14.  1000 ரூபாய் கோரி.... தோட்டத் தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமனெ கோரி, நானுஓயா பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் இன்றுப் புதன்கிழமை ரதெல்ல பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பெண்ணொருவர் வீதியில் படுத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.  1000 ரூபாய் கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன் 1000 ரூபாய் சம்பள உயர்வைக் கோரி, பொகவந்தலாவைக்கு உட்பட்ட தோட்ட மக்கள் பொகவந்தலாவை பிரான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அவ்வீதி வழியான போக்குவரத்…

  15. சிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கும் பெண் நீர்வேலியில் சம்பவம்: யாழ்.நீர்வேலி பகுதியில் தாயொருவர் ஆறுவயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை மிக மூர்க்கத்தனமாக தாக்கும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது. இது தொடர்பில் தெரியவருவதவாது , நீர்வேலி பகுதியில் உள்ள தோட்ட காணி ஒன்றில் வாழும் ஒரு குடும்பத்தை சேர்த்த தாயொருவர் ஆறு வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை கத்தியினால் மிக மோசமாக தாக்கும் காட்சி வீடியோவில் பதியப்பட்டு உள்ளது. தாக்குதலுக்கு இலக்கான சிறுமியின் தாயார் உயிரிழந்தமையால் , தகப்பனார் வேறு திருமணம் முடித்து உள்ளார். அவ்வாறு இரண்டாம் தரமாக மணமுடித்த பெண்ணே சிறுமியை மிக மூர்க்க தனமாக தாக்கி யுள்ளா…

  16. ரஞ்சனுக்கும் ஊடகவியலாளருக்கும் கடுமையான வாக்குவாதம் : கெமராவை தாக்கிய ரஞ்சன் : அதிர்ச்சி தகவல்களையும் வெளியிட்டார் (காணொளி இணைப்பு) பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் ஊடகவியலாளர் ஒருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதோடு அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வீடியோ கமராவை தாக்கியுள்ளார். சிறப்பு பரிசோதனைகளுக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் விடயம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக நேற்று மாலை தனது வீட்டில் ஊடகவியலாளர் சந்திப்பை ரஞ்சன் ராமநாயக்க ஆயத்தப்படுத்தியிருந்தார். ஊடகவியலாளர் மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னர் ஊடகவியலாளர்கள் சிலர், 'லசந்த ஆயுதம் ஒன்றாக …

  17. இந்திய - அமெரிக்க ஊடுருவலால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! - புலம்புகிறார் பீரிஸ் [Wednesday 2016-09-28 08:00] இலங்கையின் தேசிய பொருளாதாரத்தின் மீதான அமெரிக்க மற்றும் இந்திய ஊடுருவல்களால் பாதுகாப்பு உள்ளிட்ட அரசின் உள்ளக இரகசியங்கள் அம்பலமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பை மிகவும் மோசமான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டு ஒப்பந்தத்தை அரசாங்கம் மக்கள் ஆணையை மீறி கொண்டு வரப்பட்டால் பாரிய சவால்களையே எதிர் கொள்ள நேரிடும். ஆகவே அமெரிக்கா மற்றும் இந்த…

    • 0 replies
    • 265 views
  18. பயங்கரவாதப் பட்டியலிலிருந்து புலிகள் நீக்கப்படுவதனை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை பயங்கரவாத பட்டியலிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் நீக்கப்படுவதனை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஐரோப்பிய ஒன்றிய பயங்கரவாத பட்டியலிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை நீக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அந்த முயற்சியை முறியடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. என்ன காரணத்திற்காக புலிகள் தொடர்ந்தும் பயங்கரவாத பட்டியலில் நீடிக்கப்பட வேண்டும் என்பதற்கான சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய பயங்கரவாத பட்டியலிலிருந்து தமிழீழ விடுத…

  19. சிறீலங்காவின் கடன் சுமையைக் குறைப்பதற்காக சில நாடுகள் உத்தியோகபூர்வமாக உதவ முன்வந்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஜேர்மன், பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகளே, சிறீலங்காவின் கடன் சுமையைக் குறைப்பதற்கு உதவியளிக்க முன்வந்துள்ளன. அந்தந்த நாடுகளின் தூதுவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இது தொடர்பான உறுதிமொழியை அவர்கள் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த நான்கு நாடுகளும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் உலக சந்தையை வலுப்படுத்துவதை இலக்காகக் கொண்டு உருவாக்கிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பானது மிகவும் பலம் வாய்ந்த ஒன்றாகக் காணப்படுவதால், அந்த அமைப்பினூடாக கொடுக்கல் வாங்கல்களின் போது வட்டி விகிதங…

  20. ஜெனீவாவிலுள்ள ஐ நா மனித உரிமை கழகத்தின் 33வது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் மத்தியில் பிரித்தானிய தமிழர் பேரவை சமர்ப்பித்த ஆவணங்கள் சிறிலங்காவின் முன்னைய அரசு மற்றும் இன்றைய “நல்லாட்சி” அரசின் நிலப் பறிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது. நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழக (UNHRC) கூட்டத் தொடரில் இலங்கையில் தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ மயமாக்கல் மற்றும் நில அபகரிப்பு தொடர்பாக நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. பிரித்தானிய தமிழர் பேரவை (BTF), பசுமை தாயகம் மற்றும் அமெரிக்காவினை தளமாகக் கொண்டியங்கும் USTPAC இணைந்து இந் நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தனர். தமிழர் பிரதேசங்களில் நிர…

  21. கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை (24/09/2016) அன்று பல்கலைக் கழக மாணவர்களுக்கிடையே மென்பந்து கிரிகட் சுற்றுப்போட்டி ஒன்று பல்கலைக்கழக மாணவ விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த விளையாட்டுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் ஒலித்த போது அங்கிருந்த சிங்கள மாணவர்கள் ஆத்திரமுற்று நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களுடன் முரண்பட்டுள்ளனர். "தேசிய கீதத்தினை தமிழில் ஒலிக்க விடவேண்டாம் என்றும் அவ்வாறு ஒலிக்க செய்ய வேண்டுமானால் சிங்களத்திலே முதலில் தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்யவேண்டும்" என்றும் முரண்பட்டுள்ளனர். இவ் முரண்பாட்டில் விவசாய பீட மற்றும் வணிக முகாமைத்துவ பீட சிங்கள மாணவர்களே ஈடுபட்டுள்ளனர்.இதனால் அவ் இடத்தில் பரபரப்பு ஏற்ப…

  22. ஆலயத்தில் வழிபட பத்து நாட்கள் மட்டுமே அனுமதி இராணுவத்தினரின் கட்டுப்பட்டில் உள்ள பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி பூஜை வழிபாடுகளை நடாத்துவதற்கு இராணுவம் அனுமதியளித்துள்ளது. எதிர்வரும் நவராத்திரி விழாவை முன்னிட்டு பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து 10 ஆம் திகதி வரை காலை 9 மணி தொடக்கம் 3 மணிவரை பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட முடியும் என ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர். ஆலயத்தின் அனைத்து வழிபாடுகளையும் மேற்கொள்ளவதற்காக இராணுவத்தினரிடம் அனுமதி கேட்டிருந்தது. தற்போது அதற்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் குறித்த …

  23. பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க முதலீட்டாளரை தேடும் அரசு கடந்தகால யுத்த நடவடிக்கையால் சிதைந்துபோன பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள புனரமைத்து ஆரம்பிப்பதற்கும், ககட்டகக பென்சில்கரி அகழும் சுரங்கப் பணிக்கும் முதலீட்டாளர்களை அரசு தேடுகின்றது. பரந்தன் இரசாயன கூட்டுதாபனம் என்ற பெயரில் முன்பு வடமாகாணத்தில் இயங்கிவந்த இரசாயனத் தொழிற்சாலையின் சேதமடைந்த கட்டடங்கள் இந்த வருட முடிவுக்கு முதல் முழுமையாகக் கட்டிமுடிக்கப் பட வேண்டும். தொழிற்சாலை உற்பத்தியை மீண்டும் ஆரம்பிக்க 525 மில்லியன் ரூபா தொகை அவசியப்படும் எனவும் அரசு தெரிவிக்கின்றது. தொழிற்சாலை நிர்மாணப்பணி பூர்த்தியாகியதும் இலங்கைக்கு தேவையா…

  24. வங்குரோத்துநிலையில் விக்கினேஸ்வரன் -ரில்வின்சில்வா சாடல் வட மாகாண முதலமைச்சர் சிவீ.விக்னேஸ்வரன் வங்குரோத்து அடைந்துள்ளார் என மக்கள் விடுத்லை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அந்த கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், விக்னேஸ்வரன் வங்குரோத்து அடைந்துள்ளார். எனவே, விக்னேஸ்வரனின் கருத்துக்களை நாம் நிராகரிக்க வேண்டும். விக்னேஸ்வரனின் கருத்து தெற்கு இனவாதிகளுக்க சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. ராஜபக்சவை சுற்றியிருக்கும் இனவாத சக்திகள் தொங்குவதற்கு ஒரு வைக்கோல் கூட …

  25.  தென் மாகாண சபையில் சி.விக்கு எதிர்ப்பு யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமையன்று எழுக தமிழ் பேரணிக்கு பின்னர் நடத்திய கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் உரையானது இனவாத உரையென்றும் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறி, தென் மாகாண சபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தென் மாகாண சபையின் மாதாந்த அமர்வு கே.ஏ. சோமவன்ச தலைமையில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை கூடியது. அதன் பின்னர் உறுப்பினர் சமிலி விதானாச்சியினால் கண்ட யோசனையொன்று முன்வைக்கப்பட்டது. இந்த யோசனைக்கு, அச்சபையில் அங்கம் வகிக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.