ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143420 topics in this forum
-
வடக்கின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராய்வு வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்தோரை மீளக்குடியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட வடமாகாண மீள்குடியேற்ற செயலணி பல்வேறு சிக்கலான விடயங்கள் குறித்து கடந்த 20 ஆம் திகதி ஆராய்ந்ததுடன் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் சில முடிவுகளை மேற்கொண்டதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தக்கூட்டத்தில் மீள்குடியேற்றச் செயலணியின் இணைத்தலைவர்களான சிறைச்சா லைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் எ.எம்.சுவாமிநாதன், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், விவசாய அமைச்சர் துமிந்த திஸ…
-
- 3 replies
- 435 views
-
-
முல்லையில் பிடிபட்டது 77 கிலோ கஞ்சா முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணைப்பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றில் இருந்து 77.450 கிலோகிராம் கேரள கஞ்சாவை பொலி ஸார் கைப்பற்றியுள்ளனர். முல்லைத்தீவு கடற்படையினர் வழங்கிய தகவலையடுத்து கடற்படையினரும் முல்லைத்தீவு மாவட்ட பொலிசாரும் அம்பலவன் பொக்கணைப்பகுதிக்கு சென்று அங்கு முச்சக்கரவண்டியில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த 77.450கிலோகிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியதுடன், முச்சக்கரவண்டியையும் பொலிஸ்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை. இதேவேளை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கஞ்சா மற்றும் முச்சக்கர…
-
- 2 replies
- 271 views
- 1 follower
-
-
எழுக தமிழ் நிகழ்வை குழப்ப சில ஊடகங்கள் சதி செய்வதாக சுரேஷ் பிரேமசந்திரன் குற்றச்சாட்டு எழுக தமிழ் பேரணியில் கலந்து கொள்பவர்கள் எழுக தமிழ் என்ற செற்பதத்துடன் அவர்களது பதாதைகளுடன் இப்பேரணியில் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் ஏற்பாடுக் குழு சார்பில் அழைப்பு விடுத்துள்ளார். அது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது, எதிர் வரும் சனிக்கிழமை 24 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு எழுக தமிழ் மக்கள் பேரணி நல்லூர் கந்தசுவாமி கோவிலின் முன்றளிலிருந்தும் யாழ் பல்கலைக்கழக முன்றளிலிருந்தும் ஆரம்பமாகி யாழ் முற்றவெளியை சென்றடைய இருக்கின்ற…
-
- 9 replies
- 770 views
- 1 follower
-
-
ஜப்பானிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் விசாரணை வளையத்துள் ஜப்பானில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 30 இலங்கையர்களிடம் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோதமாக ஜப்பானில் தங்கியிருந்தமை தொடர்பில் இவர்களிடம் விசாரணைகள் நடத்தப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.நேற்றுமுன்தினம் குறித்த 30 சட்டவிரோத குடியே றிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட னர். இவ்வாறு அழைத்துவரப்பட்டவர்கள், குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்க ப்ப ட்டனர்.இதனையடுத்து இவர்கள் குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் குற்றத்தடுப்பு பிரிவி னரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.நாடு கடத்தப்பட்டவர்களில் 3…
-
- 0 replies
- 343 views
-
-
தலைமை பதவியிலிருந்து விலகினார் ஓமல்பே சோபித தேரர் ஜாதிக ஹெல உறுமயவின் தலைமை பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் வண. ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். இன்று சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற 13 ஆவது கட்சி மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதனடிப்படையில் புதிய இணைத்தலைவர்களாக வண. ஹெட்டிகல விமலசார தேரர் மற்றும் பிரதியமைச்சர் கருணாசேன பரணவிதாரண நியமக்கப்பட்டுள்ளார். மேலும் பொதுச்செயளாளராக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/11716
-
- 0 replies
- 277 views
-
-
முன்மாதிரி... யாழ். முற்றவெளி மைதானத்தில் இன்று சனிக்கிழமை (24) பல்லாயிரக்கணக்கான வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழ் மக்களின் பங்கேற்புடன் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற 'எழுக தமிழ்' பேரணி நிகழ்வின் இறுதியில் அம் மைதானத்தில் நிறைந்திருந்த பிளாஸ்ரிக் மற்றும் கடதாசிக் குப்பைகளை மக்களே சேகரித்து அகற்றினர். நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய நிகழ்வில் கலந்துகொண்ட மக்களில் ஒரு பகுதியினர் குப்பைகளை சேகரித்து மைதானத்தின் ஒரு பகுதியில் ஒதுக்கியுள்ளனர். ஒவ்வொரு நிகழ்வுகளின் இறுதியிலும் ஒவ்வொரு மைதானத்திலும் பெருமளவான பிளாஸ்ரிக் மற்றும் கடதாசி குப்பைகள் நிறைந்து காணப்படுவதுடன், அவற்றை அப…
-
- 3 replies
- 428 views
-
-
மலையக தமிழ் இளைஞர்களுக்கு எதிராக பொலிஸார்களால் அரங்கேற்றப்படும் அடிதடி அராஜகத்தை கண்டித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் இளைஞர்கள் வீதிக்கு வருவதற்க்கு அஞ்சப்படும் சூழ்நிலையை மீண்டும் இந்நாட்டில் அரங்கேற்ற இடம் கொடுக்க வேண்டாமென மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கணகராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். ஹட்டன் நகரில் நேற்று (23) மாலை சிகையலங்கார நிலைய ஊழியர் ஒருவர் ஹட்டன் பொலிஸ் அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்டதை கண்டித்து ஹட்டன் நகரில் இன்று பகல் 1.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில…
-
- 0 replies
- 319 views
-
-
சகல இனங்களும் ஒற்றுமையாக வாழ சமஷ்டிமுறையிலான ஆட்சியையே கேட்கிறோம்-வடக்கு முதல்வர் இலங்கையில் சகல இனங்களும் சுதந்திரமாகவும் சகோதரத்துவத்துடனும்வாழ்வதற்கான ஒரு சமஸ்டி முறையிலான ஆட்சி முறையை தோற்றுவிக்கக் கேட்டுக் கொண்டிருக்கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து ள்ளார். வடக்கு மாகாண பண்பாட்டுப்பெருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் கூறியவை வருமாறு இன்றைய எமது அரசியல் முன்னெடுப்புக்களில் தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கையில் சுதந்திரமாகவும…
-
- 1 reply
- 313 views
-
-
மகிந்த தம்பதிகள் நுவரெலியா வீதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவும் நுவரெலியாவுக்கு நேற்று மாலை விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த தம்பதியினர் இன்று காலை கிரகரி வாவியை சுற்றி நடைப் பயிற்சி மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சந்தர்ப்பத்தில் அங்கு கூடிய மக்களுடன் எடுத்துக் கொண்டுள்ள சிலை புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. http://onlineuthayan.com/news/18025
-
- 1 reply
- 449 views
-
-
நேற்று முன்தினம் சிறீலங்கா அரசாங்கத்தின் புனர்வாழ்வு அமைச்சினால் புனர்வாழ்வுக்குட்படுத்தப்படுவதாகக் கூறி 23 தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டது. இதில் பலர் ஏற்கனவே விடுதலையாகியுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. அப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இராசலிங்கம் பார்த்தீபன், டேவிட் சுரஞ்சித், தட்சணாமூர்த்தி செல்வகுமாரன், கோவிந்தசாமி சுந்தரமணி மற்றும் சட்சிணாமூர்த்தி செல்வகுமார் ஆகிய ஐவரும் கடந்த வருடம் நவம்பர் மாதம் விடுவிக்கப்படுவர் என சுமந்திரனால் வெளியிடப்பட்ட பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை ஐவரின் பெற்றோரும் உறுதிப்படுத்தியுள்ளனர். அதேபோன்று பெயர்கள் வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ள தர்மலிங்கம் சத்தியலிங்கம் கடந்த ஜூன் மாதம் 28ஆம் திகதி வ…
-
- 1 reply
- 239 views
-
-
அடுத்த நடக்கவுள்ள எந்தவொரு அதிபர் தேர்தல்களிலும் தாம் போட்டியிடப் போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று அஸ்கிரிய, மல்வத்தை பீடங்களில் மகாநாயக்க தேரர்களை கோத்தாபய ராஜபக்ச நேற்று சந்தித்துப் பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “அடுத்த அதிபர் தேர்தலில் நான் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகப் பரவிய வதந்தியால் நான் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டேன். இராணுவ அதிகாரியாக இருபது ஆண்டுகள் நாட்டுக்கு மிகச் சிறந்த சேவையை ஆற்றியுள்ளேன். பாதுகாப்புச் செயலராக மேலும் 10 ஆண்டுகள் பணியாற்றினேன். அரசியலில் எனக்கு அனுபவம் இல்லை. கூட்டு எதிரணியால் …
-
- 2 replies
- 381 views
-
-
பழிவாங்கவேண்டாம் அரசிடம் கெஞ்சும் மகிந்த மென்மேலும் கூட்டு எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பழிவாங்க வேண்டாம் என அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். சிங்கள மொழி ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடும் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார். எழுந்தமாறாக ஏனோதானோவென்று மேற்கொள்ளப்படும் இந்தப் பழிவாங்களினால், அரச அதிகாரிகளும் தமது கடமையை செய்வதற்கு பயப்படுகின்றார்கள். இது நாட்டின் அபிவிருத்திக்கு ஒரு பெரும் பாதிப்பாகும். பழிவாங்குவதற்கும் எல்லையொன்று இருக்க வேண்டும். இந்தப் பழிவாங்கல் எப்போது நிறைவடையும் …
-
- 0 replies
- 380 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஸவிற்கு சொந்தமான சீ.எஸ்.என் தொலைகாட்சி நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள காணியை நகர அபிவிருத்தி அதிகார சபை எடுத்துக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இவர்களுக்கு வழங்கிய இந்த நிலத்தின் குத்தகை பத்திரமும் ரத்து செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் உள்ள ஏனைய சொத்துக்கள் மற்றும் கட்டிடங்கள் என்பன அரசுடடையாக்கப்படும் என்று நிதி மோசடி விசாரணை பிரிவு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதேவேளை, முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு சொந்தமான வீடு ஒன்றை அரசு உடமையாக்குவதற்கு அனுமதித் தருமாறு நிதிமோசடி விசாரணை பிரிவினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். …
-
- 1 reply
- 290 views
-
-
பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழ்.நகரப் பகுதியில் வர்த்தகநிலையங்கள் பூட்டு தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று இடம்பெறவுள்ள 'எழுக தமிழ்' மாபெரும் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பா ணத்தில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ள அதேவேளை சில இடங்களுக்கான தனியார் பேருந்துசேவைகள் இடம்பெறு வதுடன் இ.போ.ச சேவைகள் வழமைபோல் இடம்பெற்றுவருகின்றன. யாழ்ப்பாணம் நகர் பகுதியிலுள்ள வர்த்க நிலையங்கள் உள்ளிட்ட ஏனைய பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. உணவகங்கள் மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் வழங்கும் நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. http://onl…
-
- 2 replies
- 640 views
-
-
வற்வரி முறைமை அவசியம் வருமான அதிகரிப்பும் தேவை ; சர்வதேச நாணய நிதியம் (பா.ருத்ரகுமார்) அரசாங்கத்தின் முறையான வரிக்கொள்கை முறைமை மற்றும் நம்பகத்தன்மை என்பன அடுத்த ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத் தில் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வலியுறுத்தியுள்ளது. தற்போது இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள வற் வரி முறைமை அவசியமான தேவையாக காணப்படுகின்ற போதும் அது மக்களை பாதிக்கும் வகையில் அமைந்துவிடக்கூடாது என்பதை கருத்திற்கொண்டு வருமான அதிகரிப்புக்கு தேவையான ஆலோசனைகளையும், வரவுசெலவுத்திட்டத்தில் ஏற்படுத்த வேண்டிய உள்ளீடுகள் தொடர்பிலும் அரசாங்கத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்…
-
- 0 replies
- 256 views
-
-
முதலமைச்சரால் கிளிநொச்சி சந்தைக்கு 9 மில்லியன் ஒதுக்கீடு தீ விபத்தினால் கடந்த 16 ஆம் திகதி எறிந்த கிளிநொச்சிப் பொதுச் சந்தையினை 17 ஆம் திகதி வந்து பார்வையிட்ட வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மிகவிரைவில் குறித்த சந்தையினை மீண்டும் இயங்க வைப்பதற்கு தற்காலிகக் கடைகளை அமைப்பதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறிச் சென்றிருந்தார். அதன்பிரகாரமும் கரைச்சிப் பிரதேச சபையினரால் வழங்கப்பட்டுள்ள மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலும் தீவிபத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிப் பொதுச் சந்தை வர்த்தகர்களுக்கு தற்காலிகக் கடைகளை அமைப்பதற்கு இன்று 9 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த 9 மில்லியன் ரூபாய் இன்றையதினம் ஒதுக்கப்ப…
-
- 7 replies
- 520 views
-
-
"தமிழ் மக்களிடம் நிலங்கள் ஒப்படைக்கப்படாததற்கு இந்திய அரசு தான் காரணம்” - இலங்கை எம்.பி நேர்காணல் இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பை மட்டக்களப்பு எம்.பி. சீனித்தம்பி யோகேஷ்வரன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதுரை வந்திருந்தார். மதுரையிலுள்ள முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களை சந்திக்க நினைத்தவருக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் அவரை சந்தித்து இலங்கையில் தமிழர்களின் நிலை எப்படியுள்ளது என்பது பற்றி பேசினோம். "யாழ் பல்கலையில் தமிழ்-சிங்கள மாணவர்களிடையே பிரச்னை எப்படி உள்ளது?" "இப்போது அமைதி நிலவுகிறது. இலங்கை அரசு எப்படி தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களைத் திட்டமிட்டுச் செய்கிறதோ, தமிழர் பகுதிகளில் புத்த விகாரைகளை அமைக…
-
- 1 reply
- 658 views
-
-
சம்பூரில் யானை தாக்கி 6 பிள்ளைகளின் தாய் பலி !! சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் ஜானகி என்பவர் இன்று அதிகாலை யானை தாக்கி உயிரிழந்துள்ளார் . விளாம்பழம் பொறுக்கச்சென்றபோதே யானை தாக்கியுள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளார் . உயிரிழந்தவர் 65 வயதுடைய 6 பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது . http://www.virakesari.lk/article/11696
-
- 2 replies
- 432 views
-
-
-
உண்மைகளை வெளிப்படுத்தும் போது அனைவருக்கும் வலிக்கத்தான் செய்யும் ஆனால் அதற்காக உண்மைகளை தெரிவிக்காமல் இருக்க முடியாது என சரத் பொன்சேகா தெரிவித்தார். இன்றைய பாராளுமன்ற ஒன்று கூடலின் போது கடந்த மஹிந்தவின் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பில் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டார். இதன் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடுகையில், கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆரம்பம் முதலாகவே கூச்சலிட்டு அவருடைய உரையினை தடுக்க முயன்றனர் ஆனாலும் அவர் தொடர்ந்தும் உரையாற்றினார். இதன் போது விமல் வீரவன்ச கூச்சலிட்டதால் “ஐந்து சதத்திற்கும் பெறுமதி இல்லாத விமல் திருடன் இங்கு கூச்சலிடுகின்றார் அவருடைய கூச்சலை நிருத்த வேண்டும்” எ…
-
- 1 reply
- 268 views
-
-
புலம்பெயர்ந்தோரின் தேவைகளை நிறைவேற்றுவது நல்லிணக்கமல்ல-கோட்டா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் புலம்பெயர் அமைப்புக்களினதும், இனவாத குழுக்களினதும் வேண்டுகோள்களை செவிமடுத்து அவைகளை நடைமுறை ப்படு த்துவது உண்மையான நல்லிணக்கமல்ல என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டா பய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மாறாக மாகாண சபையை அமைத்து அதற்கான தேர்தலை நடத்தி வடபகுதி மக்களுக்கு வாக்குரிமையை வழங்கியமை, முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்தமை போன்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளே உண்மையான நல்லிணக்கத்திற்கான அடையாளம் என்றும் கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டார். கண்டிக…
-
- 2 replies
- 389 views
-
-
கிளிநொச்சி பொதுச்சந்தை வழமைபோல் நாளை இயங்கும் (எஸ்.என்.நிபோஜன்) கிளிநொச்சி பொதுச்சந்தையினை நாளையதினம் மூடவேண்டும் என சந்தை வர்த்தக சங்கத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கை கிளிநொச்சி கரச்சி பிரதேச சபைச் செயலாளர் கம்சநாதணினால் மறுக்கப்பட்டுள்ளது குறித்த வேண்டுகோள் தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது கடந்த 16 ஆம் திகதி ஏற்பட்ட பாரிய தீவிபத்தினால் தமது வாழ்வாதரத்தினை தொலைத்து மீண்டுகொண்டுள்ள சந்தைவர்த்தகர்கள் கடைகளை அடிப்பதனால் அவர்களது வாழ்வாதாரம் இன்னமும் பாதிக்கப்படும் அதனால் கிளிநொச்சி பொதுச் சந்தை நாளையும் வழமைபோல் நடைபெறவேண்டும் என தெரிவித்துள்ளார் ஆனால் அவர்கள் தனிப்பட்ட ரீதியில் குறித்த பேரணிக்கு ஆதரவு …
-
- 0 replies
- 279 views
-
-
தமிழரின் வயல் காணிகளில் சிங்கள மக்கள் பன்றி வளர்ப்பு-நெற்செய்கை மேற்கொள்ளமுடியாத அவலம் முல்லைத்தீவு கொக்குளாய் கிழக்கு ஐயங்கோயில்வெளி வயல்காணிகளில் சிங்கள மக்கள் பன்றி வளர்ப்பில் ஈடுபடுவதால் தமக்கு நெற்செய்கை மேற்கொள்ள முடியாதுள்ளதாக தமிழ் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 1984 ஆம் ஆண்டு கொக்குளாயிலிருந்து இடம்பெயரந்து சென்ற நிலையில் சிங்கள மக்கள் தமது காணிகளை கையகப்படுத்தியுள்ளதுடன், தமது வயல் காணிகளில் பன்றிகளை வளர்த்து வருவதாகவும் தமிழ் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். 2009 ஆம் ஆண்டு இறுதி கட்ட யுத்தம் நிறைவடைந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதும் தமது 7 ஏக்கர் வயல்காணிகளில் பயிர…
-
- 0 replies
- 361 views
-
-
வடமாகாண சுகாதார அமைச்சுக்கு ஒஸ்திரிய நாட்டினால் வழங்கப்படவுள்ள 900 கோடி ரூபாய் நிதியில் வடக்கின் 5 மாவட்டங்களிலும் சகல வசதிகளும் கொண்ட வைத்தியசாலைகள் அமைக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். நேற்றய தினம் வடமாகாணசபையின் 62 ஆவது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் 9 மாகாணங்களையும் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள் மத்திய சுகாதார அமைச்சரை 3 மாதங்களுக்கு ஒரு தடவை சந்திப்பது வழக்கம். இந்த சந்திப்பில் மத்திய சுகாதார அமைச்சுக்கு ஒஸ்திரிய நாட்டினால் சுமார் 60 மில்லியன் யூரோ மென்கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளதாக கூறப்பட…
-
- 3 replies
- 427 views
-
-
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் நாளையதினம் யாழ்.சிறைக்கு அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பல அரசியல் கைதிகள் நாளையதினம் (சனிக்கிழமை) யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படவு ள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 21ஆம் திகதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் கரு த்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யுமாறும், அவ்வாற…
-
- 0 replies
- 298 views
-