ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143424 topics in this forum
-
மாணவிகள் எவ்வாறு உடை அணிய வேண்டும் கொழும்பில் பிரபல பாடசாலை மதில்களில் சுவரொட்டிகள் கொழும்பின் பிரபல்யமான ஆண்கள் கல்லூரியின் சுவரொன்றில், மாணவிகள் எப்படியான உடை அணிந்து கல்லூரிக்கு வரவேண்டும் என்பது பற்றிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது, பலரின் கோபத்தைக் கிளறியுள்ளதாக பிபிசியின் இலங்கை நிருபர் ஆயிஷா பெரேரா கூறியுள்ளார். கொழும்பின் பிரபல்யமான ஆண்கள் கல்லூரியான சென்ட் ஜோசப் கல்லூரியில் 16 படங்கள் அடங்கிய சுவரொட்டி கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தப் 16 படங்களிலும் கல்லூரி மாணவிகள் வெவ்வேறு விதமான உடைகள் அணிந்து காணப்படுகின்றார்கள். இவற்றுள் எது அனுமதிக்கத் தக்கது என்பதை இந்த சுவரொட்டிகள் குறித்திருப்பதுதான் பலருக்கு கோபத்தை…
-
- 3 replies
- 575 views
-
-
நாடாளாவிய ரீதியில் முஸ்லீம் குடியேற்ற திட்டங்களையும் வீடமைப்பு திட்டங்களையும் செய்து வருகின்ற அமைச்சர் ஹிஸ்புல்லா தலைமையிலான ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவில் உள்ள ஒல்லிக்குளம் மேற்கு, ஒல்லிக்குளம் கிழக்கு, மண்முனை மற்றும் கீச்சான்பள்ளம் பகுதிகளில் மாபெரும் வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் கடந்த புதன்கிழமை நாட்டி வைக்கப்பட்டது. ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். ஏறாவூர், பாலமுனை, பொலன்னறுவை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் தேசிய ரீதியில் முஸ்லீம் மக்களுக்கான வீடமைப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
-
- 3 replies
- 526 views
-
-
ஏறாவூரில் பதற்றம்!! (காணொளி இணைப்பு) ஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சற்றுமுன்னர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு பற்றநிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். கைது செய்யத நபர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு பொதுமக்கள் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக முற்றுகையிட்டுள்ளனர். இதனால் குறித்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/11443
-
- 3 replies
- 523 views
-
-
கிளிநொச்சி, பொதுச் சந்தை வளாக தீவிபத்து- விரைவில் மீளவும் நிர்மாணிக்க நடவடிக்கை - முதலமைச்சர் சீ.வி: கிளிநொச்சி, பொதுச் சந்தை வளாகத்தில் ஏற்பட்ட தீயினால் சேதமடைந்த வர்த்தகத் தொகுதிகளை விரைவில் மீளவும் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மத்திய அரசுடன் பேசி அந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு விரைவில் உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாவும் அவர் கூறியுள்ளார். கடந்த 16ம் திகதி இரவு கிளிநொச்சி பொதுச் சந்தை வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் சுமார் 100 கடைகள் சேதமடைந்தன. இதனால் கோடிக்கணக்கான நஸ்டம் ஏற்பட்டதாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தநி…
-
- 0 replies
- 305 views
-
-
ரயில் நிலையத்தின் பெயர்ப்பலகைகளில் உள்ள தமிழ் பிழைகளைத் திருத்துமாறு மனோ கணேசன் பணிப்புரை தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர், மனோ கணேசன் இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது ரயில் நிலையத்தில் உள்ள பெயர்ப்பலகைகள் மற்றும் தமிழ் அறிவித்தலில் உள்ள பிழைகளை அவதானித்து அதனைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மனோ கணேசன் அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார். Share This http://newsfirst.lk/tamil/2016/09/ரயில்-நிலையத்தின்-பெயர்ப/
-
- 3 replies
- 400 views
-
-
கிளிநொச்சி பொது சந்தையில் பாரிய தீ ; தீயை கட்டுபடுத்தும் முயற்சிகள் தீவிரம் (படங்கள் இணைப்பு) கிளிநொச்சி பொது சந்தை தொகுதியில் பாரிய தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேத விபரம் பற்றி சரியாக கணிக்கப்படவில்லை. எனினும் குறித்த தீயினால் 40 இற்கும் மேற்பட்ட கடைகள் சேதமடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தீ பரவியதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். மேலும் குறித்த தீயை அனணப்பதற்காக தீயைணைப்பு வாகனங்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலையில் கடை உரிமையாளர்கள் மற்றும் மக்கள் தீயை அணைப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை குறித்த…
-
- 22 replies
- 1.6k views
- 1 follower
-
-
அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய்கிறது அரசு-யாழில் பிரதமர் தெரிவிப்பு மாகாணங்கள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கு, மத்தியில் இருந்து அதிகாரங்கள் பகிரப்படும் வகையிலான ஒரு அதிகார பகிர்வு குறித்து கலந்துரையாடி வருவதுடன் காய ப்பட்டுள்ள மக்களுடைய மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கான முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கமைய தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது? என்ற உண்மை நிலையை கண்டறிவதற்காகவே காணாமல் போனவர்கள் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பழிவாங்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் கூறினார். …
-
- 2 replies
- 417 views
-
-
மருத்துவ மாணவி மரணம் வைத்தியர் கைது முல்லைத்தீவைச் சேர்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியொருவரின் மரணம் தொடர்பாக இரத்தினபுரி வைத்தியசாலையில் கடமை புரிந்து வந்த வைத்தியர் ஞானகணேஸ் ரஜித் (ஜெனா) கடந்த செவ்வாய்க்கிழமை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பகுதியை சேர்ந்த குறித்த வைத்தியரும் மரணமடைந்த இணை மருத்துவப்பிரிவு மாணவி லோறன்ஸ் அனா எப்சிபாவும், திருநெல்வேலி பகுதியில் வீடொன்றில் வசித்து வந்த நிலையில், குறித்த பெண் தீப்பற்றி எரிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமானார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் சந்தேகத்தின் பேரில் மருத்துவரை கைது செய்துள்ளனர். http://…
-
- 0 replies
- 425 views
-
-
அரசி வன்னி நாச்சியாருக்கு சிலை -கே.எல்.ரி.யுதாஜித்,ஆர்.ஜெயஸ்ரீராம் பனிச்சங்கேணி அரசி வன்னி நாச்சியாரின் திருவுருவச்சிலை, பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலய வளாகத்தில்; சனிக்கிழமை (17) திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு, வாகரைப் பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலயம் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதன்போது, 'பனிச்சங்கேணி அரசி வன்னி நாச்சியாரின் ஒரு வரலாற்றுப் பார்வை' எனும் நூலை வாகரை வாணன் வெளியிட்டு வைத்ததுடன், இவரது சேவையைப் பாராட்டி கிராம அபிவிருத்திச் சங்கம் அவருக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தது. கி.பி. 16ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் அர…
-
- 0 replies
- 387 views
-
-
ஐ.நா.வின் 71 ஆவது அமர்வில் பங்கேற்க ஜனாதிபதி இன்று அமெரிக்கா பயணம் ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச்சபை அமர்வு அமெரிக்க ஐனாதிபதி பராக் ஒபாமா தலைமையில் நாளை அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. நாளை ஆரம்பமாகவுள்ள இந்த பொதுச்சபை அமர்வானது எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவொன்று இன்று நியூயோர்க் செல்லவுள்ளதுடன் ஜனாதிபதி எதிர்வரும் 21 ஆம் திகதி ஐ.நா. பொதுச்சபை அமர்வில் உரையாற்றவுள்ளார். ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பதவி காலம் முடிவடைகின்ற …
-
- 0 replies
- 544 views
-
-
குமரன் பத்மநாதனை கைது செய்யுமாறு இன்டர்போல் அழுத்தம் கொடுக்காது தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனை கைது செய்யுமாறு இன்டர்போல் அழுத்தம் கொடுக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்டர்போலின் ஊடகப் பிரிவு இதனை உறுதி செய்துள்ளது. சிகப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ள எந்தவொரு நபரையும் கைது செய்யுமாறு நாடுகள் மீது இன்டர்போல் அழுத்தம் கொடுக்காது எனவும் குமரன் பத்மநாதனை கைது செய்வதா இல்லையா என்பதனை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் குமரன் பத்மநாதன் தேடப்பட்டு வரும் ஓர் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்க…
-
- 0 replies
- 319 views
-
-
பிரபாகரனின் அடையாள அட்டையை நினைவுப் பொருளாக வைத்திருக்கும் கமால் குணரத்ன விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அடையாள அட்டையைத் தாமே நினைவுப் பொருளாக எடுத்து வைத்திருப்பதாக, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இறுதிக்கட்டப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொன்ற 53 ஆவது டிவிசனுக்கு தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். “பிரபாகரனின் உடல் தகனம் செய்யப்பட்டது. அதற்குப் பின்னர் நாம் அங்கிருந்து விலகி விட்டோம்.அந்த இடத்தில் இருந்து நான் ஒரு நினைவுப் பொருளை எடுத்துக் கொண்டேன். பிரபாகரனின் அடையாள அட்டையே அது. …
-
- 0 replies
- 335 views
-
-
இராணுவத்தினர் தொடர்பில் நீலிக்கண்ணீர் வடிக்கும் மகிந்த, கோத்தா-பொன்சேகா சாடல் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்த பாயவும் இராணுவத்தினரைப் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள் என அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எனவே இராணுவத்தினர் தொடர்பில் கருத்துக்கள் தெரிவிப்பதை இவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர்களைப் பற்றி பேசுவதற்கு உரிமையற்றவர்களே மஹிந்தவும், கோத்தாவும் என்று பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினருக்காக முன்னெடுக்கப்பட்ட “நமக்காக நாம்” என்ற நிதியத்தின் மூலம் 6 இலட்சத்தக்கு அதிகமான ப…
-
- 2 replies
- 420 views
-
-
அகற்றப்பட்டது ஆயுதப்பயிற்சிமுகாம் வவுனியா – செட்டிகுளம் மாணிக்கம் பண்ணை குடியிருப்புக்களுக்கு அருகில் இருந்த 25 ஆவது படைப்பிரிவின் ஆயுதப் பயிற்சி முகாம் அகற்றப்பட்டுள்ளது. குறித்த இராணுவ ஆயுதப் பயிற்சி முகாமிற்கு திடீரென வருகைதந்த கனரக வாகனங்கள், பயிற்சிக்காக வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் மற்றும் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த இரா ணுவத்தினர்களையும்ஏற்றிச் சென்றுள்ளதாக குறித்த பிரதேசத்தை மக்கள் தெரிவி த்துள்ள னர். இதேவேளை வவுனியா செட்டிகுளம் மாணிக்கம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள பழைய நெற்களஞ்சியசாலையில் இருந்தும் இராணுவத்தினர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்ப டுகிறது http://onlineuthayan.com/news/17729
-
- 2 replies
- 414 views
-
-
அரசியல் அமைப்பு பேரவையின் அரசியல் தீர்மானம் வருகிற ஒக்டோபர் மாதம்( 2016/10) மக்களின் பார்வைக்காக வெளியிடப்படும்
-
- 0 replies
- 162 views
-
-
உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம் தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் கருத்து உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம் தொடர்பில் சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டார் காணொளியில் காண்க… Share This http://newsfirst.lk/tamil/2016/09/உடுவில்-மகளிர்-கல்லூரி-வ-2/
-
- 4 replies
- 765 views
- 1 follower
-
-
மன்னாரில் ஐயனார் வழிபாட்டுக்குரிய தொல்பொருள் ஆதாரங்கள் கண்டுபிடிப்பு மன்னார் – கட்டுக்கரைக்குளம் மற்றும் குருவில் பகுதிகளில் ஐயனார் வழிபாட்டுக்குரிய தொல்பொருள் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யாழ். பல்கலைக்கழக தொல்லியல் சிறப்புக்கலை மாணவர்களினால், மன்னார் – கட்டுக்கரைக்குளம் மற்றும் குருவில் பகுதிகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டன. யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் பரமு. புஸ்பரட்ணத்தின் தலைமையில் 25 பேர் அடங்கிய பல்கலை மாணவர்கள் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடந்த முதலாம் திகதி முதல் இன்று வரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போதே, 6 ஆம் அல்லது 8 ஆம் நூற்றாண்டுக்குரிய வழிபாட்டு முறைக்கான ஆதாரப்பூர்வ பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொல்பொ…
-
- 2 replies
- 1.1k views
-
-
நிசா பிஸ்வால் தமிழ் புலம்பெயர் சமூகத்துடன் பேச்சுவார்த்தை அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்hவல், தமிழ் புலம்பெயர் சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மனித உரிமை விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் டொம் மலினோவ்ஸ்கீயும் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. க்ளோபல் தமிழ் போராம் அமைப்புடன் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் ஆக்கபூர்வமான சந்திப்பு ஒன்றை புலம்பெயர் சமூகத்துட…
-
- 2 replies
- 610 views
- 1 follower
-
-
"மௌனமொழி" ஓவியக் கண்காட்சி யாழ்ப்பாணத்தின் சிறந்த ஓவியக்கலைஞர் சி.சிவதாசனின் "மௌனமொழி" ஓவியக் கண்காட்சி இன்றுகாலை நெல்லியடி வதிரி பூவற்கரை பிள்ளையார் ஆலயத்தின் ரவீந்திரசர்மா மண்டபத்தில் ஆரம்பமானது. இக்கண்காட்சியின், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட யாழ் பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலைப் பேராசிரியர் எம்.நடராஜசுந்தரம் கண்காட்சியை ஆரம்பித்துவைத்தார். மனதில் தோன்றும் எண்ணங்களை அழகிய ஓவியமாக தீட்டிய இக்கண்காட்சி,தொடர்ச்சியாக 3 நாட்கள் நடைபெறவுள்ளன. http://onlineuthayan.com/news/17724
-
- 1 reply
- 332 views
-
-
யாழ்.மாவட்ட செயலக புதிய கட்டட தொகுதி பிரதமரால் திறப்பு யாழ். மாவட்ட செயலக புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதி இன்று (சனிக்கிழமை) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது. புதிய நிர்வாக அலுவலகத்தை திறந்து வைக்கும் முகமாக யாழ்.வந்த பிரதமருக்கு பொன்னாடை போர்த்தி தமிழ் கலாச்சார முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலான வாத்தியங்கள் முழங்க பிரதமர் மாவட்ட செயலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டுதலின் கீழ் நிர்மாணிக்கப்பட புதிய நிர்வாகக் கட்டடத் தொகு…
-
- 1 reply
- 647 views
-
-
சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டார் கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவான் கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு இன்று (சனிக்கிழமை) சென்ற கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவான் அ.சிவசுப்பிரமணியம் நிலைமைகளை பார்வையிட்டார். கிளிநொச்சியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தீ விபத்தில் 125 கடைகள் முழுமையாகவும், பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. குறித்த தீ விபத்தினால் பல லட்சம் பெறுமதியான பொருட்களும் தீக்கிரையாகி கோடிக்கண க்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
-
- 0 replies
- 244 views
-
-
கிளிநொச்சி தீ விபத்து: பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு முதல்வர் நிதியுதவி மாங்குளத்தில் அல்லது அதனை அண்டிய பகுதியில் விரைவில் தீயணைப்பு பிரிவை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எதிர்காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நேற்றைய தினம் இடம்பெற்ற சம்பவம் உணர்த்தியுள்ளதாகவும் வடமாகாண முத லமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பொதுச்சந்தையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 132க்கும் மேற்பட்ட வர்த்தகர்களை நேரில் சென்று சந்தித்த முதலமைச்சர், பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு 20 ஆயிரம் ரூபா வீதம் நிதியுதவி வழங்கி வைத்தார். கிளிநொச்சி நகர மத்தியில் அமைந்துள்…
-
- 0 replies
- 350 views
-
-
வடக்கு, கிழக்கை மையப்படுத்தியே தீர்வு தமிழ்பேசும் மக்களாக ஒருமித்து பயணிப்போம் அஷ்ரப் நினைவு நிகழ்வில் சம்பந்தன் அழைப்பு (ஆர்.ராம்) அனைவரும் சமமாக வாழக்கூடிய புதிய அரசியல் சாசனத்தினை உருவாக்கக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இறுதியாக ஏற்படும் அரசியல் தீர்வானது வடக்கு, கிழக்கை மையமாகக் கொண்டதாக அமைவதோடு இற்றைவரையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒழுங்குகளுக்கு அமைய இருத்தல் வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். அனுபவித்த இழப்புக்கள், அழிவுகளுக்கு ஈடுகொடுக்கக்கூடியதாக அத்தீர்வு அமைய வேண்டு…
-
- 0 replies
- 284 views
-
-
அதிகாரங்கள் மாகாண ரீதியில் பயன்படுத்தப்பட்டால் மக்களுக்கான சேவைகள் துரிதப்படும் – இரா.சம்பந்தன் அதிகாரங்கள் மாகாண ரீதியில் பயன்படுத்தப்பட்டால், மக்களுக்காற்றப்படும் சேவை துரிதமாகவும் சிறப்பானதாகவும் அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் நிலவி வருகின்ற தேசிய பிரச்சினைக்கு ஆட்சி அதிகாரங்களை மாற்றியமைப்பதன் மூலமாகவும் அதிகாரப் பகிர்வின் மூலமாகவும் அரசியல் தீர்வொன்றைக் காண முடியும் என இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டார். இன்று சம்பூரில் இடம்பெற்ற கிழக்கு மாகாண விவசாய கண்காட்சி மற்றும் பொருட்கள் விற்பனை நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இக்கருத்தினைக் கூறினார். Share T…
-
- 4 replies
- 439 views
-
-
சாம்சுங்7 ரக கைபேசிகளுக்கு எயார்லங்கனில் “சார்ஜ்“ ஏற்றத் தடை தமது விமானங்களில் சாம்சுங்7 ரக கைபேசிகளை வைத்திருக்கும் பயணிகள் அவற்றை விமானத்தினுள் சார்ஜ் செய்வதை எயர்லங்கன் விமான நிறுவனம் முற்றாகத் தடை செய்துள்ளது. சார்ஜ் செய்யும்போது கைபேசிகள் வெடித்துள்ளதாக பல பாவனையாளர்கள் முறைப்பாடு செய்ததை அடுத்து, சாம்சுங் நிறுவனம் தனது பிந்திய வெளியீடான சம்சுங் 7 ரக கைபேசிகளின் விற்பனையை தடைசெய்துள்ளது. இத் தடை பற்றி விமான நிலையங்களிலும், விமானத்தினுள்ளும் பயணிகளுக்கு அறிவிக்கப்படும் என்றுஅதிகாரிகள்தெரிவித்துள்ளனர். எயர்லங்கனை விட வேறு பல விமான நிறுவனங்களும், இந்த ரக அலைபேசி பாவனைக்கு தடை விதித்த…
-
- 4 replies
- 537 views
-