Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஒரு மில். அமெரிக்க டொலருடன் முள்ளியவளைவாசி இந்திய கடற்பகுதியில் கைது! இந்திய – இலங்கை எல்லைப் பகுதியான தனுஷ்கோடி மூன்றாம் மணல்திட்டில் அநாதரவாக இருந்த நிலையில் இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள ஈழத் தமிழர் ஒருவர் இந்திய பாதுகாப்புத்துறையினரால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய அருள் ஜெயரத்தினம் என்பவர் தமிழகத்தில் அரசியல் தஞ்சம் கோரி கடல் வழியாக சென்றவேளையே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தனுஷ்கோடி அருகே மூன்றா…

    • 2 replies
    • 628 views
  2.  'புலிகளுடன் இருக்கும்போது தமிழினிக்கு புற்றுநோய் இல்லை' -எஸ்.என்.நிபோஜன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருக்கும்போது தமிழினிக்கு புற்றுநோய் இருக்கவில்லை என அவரது தாயார் தெரிவிக்கின்றார். - See more at: http://www.tamilmirror.lk/181833/-ப-ல-கள-டன-இர-க-க-ம-ப-த-தம-ழ-ன-க-க-ப-ற-ற-ந-ய-இல-ல-#sthash.vxAsXID3.dpuf

  3. Started by Athavan CH,

    குளியாப்பிட்டியில் அமைந்துள்ள வயம்பா தேசிய கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இவ்வாண்டுக்கான இலங்கைப் பல்கலைக்கழக விளையாட்டு விழா. நிறைவு நிகழ்வில் தமிழ். http://thuliyam.com/?p=41241

  4. திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நேற்று (13) கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெரிய கரச்சன் மற்றும் சின்ன கரச்சன் பகுதிகளில் நிலவும் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட சில விடயங்களை அடிப்படையாகக்கொண்டு இந்த வாக்குவாதம் ஏற்பட்டது. இணைத்தலைவர்களான எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் மஹ்ரூப், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண அமைச்சர் ஆரியவதி கலப்பதி மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் ஆகியோருக்கு இடையே வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. காணொளியில் காண…

  5. வடக்கில் அரச நியமனங்களுக்கான வயதெல்லை அதிகரிப்பு வட மாகாணத்தில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படுபவர்களின் வயதெல்லை 35இல் இருந்து 40ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அம் மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டுள்ளார். அளுநர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், ´வட மாகாணத்தில் மக்களின் வாழ்க்கை ஜீவனோபாயம் மற்றும் வேலையில்லாப் பிரச்சினை என்பன முக்கிய பிரச்சினையாக உள்ளது. மக்கள் சந்திப்பு தினங்களில் வேலை வாய்ப்பினை எதிர்ப்பார்த்து பலர் வருகை தருகின்றனர். அவர்களில் பட்டதாரிகள், ஆசிரியர்கள், அமைச்சுக்கள் – திணைக்களங்களில் நீண்டகாலம்…

  6. நல்லூர் கிட்டு பூங்காவில் நாளாந்தம் சமூகவிரோத செயல்கள்- கட்டுப்படுத்த கோரிக்கை யாழ்.நல்லூர் கிட்டு பூங்காவில் நாளாந்தம் நடைபெறும் சமூகவிரோத செயல்களால் பல இன்னல்களை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகளின் காலத்தில் இப்பூங்கா தூய்மையாக பராமரிக்கப்பட்டு வந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தமது பொழுதுபோக்கினை இப்பூங்காவில் களித்தனர். ஆனால் யுத்தம் காரணமாக இப்பூங்கா கைவிடப்பட்டது. தற்போது இப் பூங்கா பாரிய பற்றைக் காடுகளாகவும் விச ஜந்துகளின் உறைவிடமாகவும் காணப்படுகின்றது. இப் பூங்காவில் மாலை வேளைகளில…

  7. இலங்கையில் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த இடைக்கால கொடுப்பணவு ரூபாய் 2,500 இம்மாத சம்பளத்தில் வழங்கப்படவில்லை. கடந்த ஜுன் மற்றும் ஜுலை மாதங்களுக்கு வழங்கப்பட்டிருந்த இக்கொடுப்பணவு, இம் மாத சம்பளத்திலும் சேர்த்து கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த தங்களுக்கு இதனால் ஏமாற்றமாகிவிட்டதாக தொழிலாளர்களினால் கவலை வெளியிடப்பட்டுள்ளது. மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இக்கொடுப்பணவு வழங்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்ட மூலமொன்றும் சில மாதங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டிருந்தது. தேயிலைத் தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்குகின்ற காரணத்தை முன் வைத்து தோட்ட நிர்வாகங்கள் அதனை வழங்க மறுத்திருந்தன. இருந்தபோதிலும் நிதி அமைச்…

  8.  இறுதி யுத்தத்தின்போது இலங்கை மீது 'அமெரிக்கப்படை தாக்கவிருந்தது' 'இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, இலங்கை மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தக்கூடிய சாத்தியம் இருந்தது. இது தொடர்பில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் சீனாவின் இராணுவத் தளபதியும் எச்சரிக்கை விடுத்திருந்தனர் என்று, இறுதி யுத்தத்தின் போது, புலிகள் இயக்கத்துடன் போரிட்ட 53ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்ட மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். 35 வருட இராணுவ சேவையிலிருந்து விடைபெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, தன்னுடைய இராணுவ வாழ்க்கையின் நினைவுகளடங்கிய 'ரண மக திகே நந்திக்கடல்' …

  9. வவுனியா, ஓமந்தை கள்ளுத் தவறணை பெண்களால் அடித்து நொறுக்கப்பட்டது 2016-09-13 08:21:28 (பாஸ்கரன் கதீஷன்) வவுனியா ஓமந்தை நவ்வி கிராமத்தில் கள்ளுத் தவறணை ஒன்று பிரதேச பெண்களால் தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. வவுனியா ஓமந்தை பாலமோட்டை கிராம சேவையாளர் பிரிவில் பாடசாலை மற்றும் சமயவழிபாட்டுத் தலங்களுக்கு அருகே காணப்பட்ட கள்ளுத் ததவறணையே இவ்வாறு அடித்து உடைக்கப்பட்டது. பொதுமக்கள் பலமுறை உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லையென குற்றஞ்சாட்டியே பிரதேச மக்கள் இதன் மீது தாக்குதல் ம…

  10. பாடசாலை செயற்பாட்டில் மனித உரிமை ஆர்வலர்கள் திருப்தி - எம்.றொசாந்த் பாடசாலை மீள ஆரம்பித்து நடப்பது தொடர்பில் மனித உரிமை ஆர்வலர்கள் திருப்தி கொண்டுள்ளதாக உடுவில் மகளிர் கல்லூரியின் புதிய அதிபர் திருமதி பற்ரீசியா சுனித்தா தெரிவித்தார். பாடசாலை, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (13) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பில் அவர் கருத்துக்கூறுகையில், உடுவில் மகளிர் கல்லூரியில் 1,200 மாணவிகள் கல்வி கற்கின்றனர். இன்று (நேற்று) பாடசாலைக்கு 650 மாணவர்கள் வருகை தந்துள்ளனர். கல்விச் செயற்பாடு ஒழுங்காக நடைபெறுகின்றது. மனித உரிமை ஆர்வலர்கள் இன்று (நேற்று) பாடசாலைக்கு வருகை தந்தனர். அவர்களை வகுப்புக்களுக்கு அழைத்துச் சென்று மாணவிகளுடன் கலந்துரையாடுவத…

  11. நாட்டின் நிலைமை குறித்து தனக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக விமர்சனங்களை முன்வைப்பவர்களிடம் ஜனாதிபதி கேள்வி ஜனவரி 8 மாற்றம் நிகழ்ந்திருக்காவிட்டால் இன்று நாட்டின் நிலைமை எத்தகையதாக இருந்திருக்கும் என அரசாங்கத்தையும் தம்மையும் விமர்சிக்கின்ற எல்லோரிடமும் தாம் கேட்க விரும்புவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இந்த அனுபவங்களின்றி சிலர் நாடு எதிர்நோக்கியுள்ள பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச ரீதியாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துவருகின்ற செயற்பாடுகளை விமர்சித்து வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, விமர்சனங்களை முன்வைப்பதை விடுத்து அவற்றுக்கு அவர்களிடம் உள்ள தீர்வுகளை முன் வைக்குமாறு தாம் அழைப்ப…

  12. 4 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்னுடன் பொலிவிய நாட்டு பெண் தென் ஆபிரிக்காவில் போதைப் பொருள் கடத்தி சிறைத் தண்டனை பெற்றவர் - கொள்ளுப்பிட்டி ஹோட்டல் ஒன்றில் வைத்து இலங்கையருக்கு கையளிக்க திட்டம் 2016-09-14 10:29:54 (ரெ.கிறிஷ்­ணகாந், நீர்­கொ­ழும்பு நிருபர்) கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் நேற்று முன்­தினம் சுமார் 4 கோடி ரூபா பெறு­ம­தி­யான கொக்கெய்ன் போதைப்­பொ­ரு­ளுடன் பொலி­விய நாட்டு பிர­ஜை­யான பெண் ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக சுங்க அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் அதி­க­ள­வான கொக்­கெய்னை கைப்­பற்­றி­யமை இதுவே முதல் தட­வை­யென்றும் அதன் நிறை 2.6 கிலோ என்றும் விமான நிலைய பி…

  13. பம்­ப­லப்­பிட்டி குடி­யி­ருப்­பி­லி­ருந்து வெளி­யே­று­மாறு எமக்கு அழுத்தம் : தொடர்­மாடி குடி­யி­ருப்பு மக்கள் விசனம் பம்­ப­லப்­பிட்டி குடி­யி­ருப்­பி­லி­ருந்து வெளி­யே­று­மாறு எமக்கு அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றது. எவ்­வி­த­மான கரி­ச­னை­யு­மற்ற வகையில் 64 மாடி­களை கொண்ட தொடர்­மாடி குடி­யி­ருப்பில் எம்மை அடைத்து துன்­பு­றுத்­தவே அர­சாங்கம் விரும்­பு­கின்­றது என்று பம்­ப­ல­ப்பிட்டி தொடர்­மாடி குடி­யி­ருப்பு மக்கள் விசனம் தெரி­வித்­தனர். இந்தக் குடி­யி­ருப்பு தொகு­தியை வர்த்­தக நட­வ­டிக்­கை­க­க­ளுக்­காக பயன்­ப­டுத்­திக்­கொண்டு முதி­யோரையும் சிறு­வர்­க­ளையும் அநா­த­ர­வா­கவே பலரும் முயற்­சிக்­கின்­றனர். குறித்த விவ­கா­ரத்தில் உட­ன­டி…

  14. பாரத லக்ஷ்மன் கொலை ; பேஸ்புக்கில் போட்டியிடும் ஹிருணிகா, துமிந்தவின் சகோதரி தயவுசெய்து விருப்பம் இல்லாதவர்கள் இந்த படங்களை பார்வை இடுவதை தவிர்க்கவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் புகைப்படங்களை துமிந்த சில்வாவின் சகோதரியான டிலினி சில்வா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மீது துப்பாக்கிச்கிச்சூடு நடத்தப்பட்ட போது துமிந்த சில்வாவின் தலையில் துப்பாக்கி தோட்டா துளைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் போது இவருக்கு மண்டையோட்டுப்பகுதியில் சிங்கப்புர் வைத்தியசாலையில் வைத்து சத்திரசிகிச்சை செய்யப்பட்டிருந…

  15. ஷானுக ரத்வத்த உள்ளிட்ட ஐவர் கைது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்தவத்வின் மகனான ஷானுக ரத்வத்த மற்றும் மேலும் 4 பேர், நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே இவர், இன்று புதன்கிழமை (14) கைதுசெய்யப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/181858/ஷ-ன-க-ரத-வத-த-உள-ள-ட-ட-ஐவர-க-த-#sthash.EIvhWLZV.dpuf

  16. தந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஹிருணிக்கா தனது தந்தையின் தலையை தாக்கியிருந்த துப்பாக்கிச் சூட்டினை பார்க்கும் போது, அப்படியான தாக்குதலுக்கு இலக்காகும் ஒருவர் ஒரு வினாடிகூட உயிர்வாழ முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். தனது தந்தையான பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்த புகைப்படத்தை தனது பேஸ்புக் இல் பதிவு செய்து இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். அதேவேளை தான் குறித்த புகைப்படத்தை முதல் தடவையாக வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ”இந்த புகைப்படத்தை பார்க்கும் ஒவ்வொரு நேரமும், இது ஒரு …

  17. சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு தமிழ் பொறுப்பதிகாரி நியமனம் யாழ் .சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட தமிழரான எம்.செல்வகுமார் திங்களன்று தன் கட மையைப் பொறுப்பேற்றுள்ளார். சுன்னாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட முன்பு இவர் நுவரெலிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்தார். யாழ் பிராந்தியத்திலுள்ள 17 பொலிஸ் நிலையங்களில் இவரே முதற் தடவையாக பொறுப்பதிகாரியாக நியமிக்கப்படும் தமிழ் அதிகாரியாவார். ஏற்கனவே மூன்று வருட காலம் சுன்னாகத்தில் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய எச்.வி.எல். துஸ்மந்த டங்கொட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு;ள்ளார். …

  18. மக்களை தேவையின்றி பீதியடையச் செய்ய வேண்டாம் விமல் வீரவன்சவிற்கு, மல்வத்து பீடாதிபதி ஆலோசனை மக்களை தேவையின்றி பீதியடையச் செய்ய வேண்டாம் என ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்சவிற்கு கண்டி மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். உத்தேச அரசியல் சாசனம் தொடர்பில் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தவோ பொய்யான பிரச்சாரங்களையோ செய்ய வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் எவ்வித யோசனைகளும் உள்ளடக்கப்படாது என ஜனாதிபதியும் பிரதமரும் தமக்கு உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நட…

  19. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் இந்த நாட்டில் ஒரு பெரும் தமிழின அழிப்பு நடவடிக்கை தொடர்ந்தது. அப்போது ஆட்சிப்பீடத்தில் இருந்தவர்கள் எதுவும் செய்வார்கள் என்ற ஏக்கம் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றி தென்பகுதி மக்களிடமும் இருந்தது என்பது உண்மையே. இத்தகையதோர் சூழ்நிலையில்தான் ஜனாதிபதித் தேர்தல் நடந்தது. உலக நாடுகளின் ஊக்கமும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களின் கூட்டும் சேர தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவோடு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆகினார். எனினும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆனதும் ஒரு பெரிய பிரச்சினை முடிந்து போனதாக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் உணர்ந்து கொண்டமைதான் ம…

  20. அனைத்தும் கேள்விக் குறிகளாகவே இருக்கின்றன! தமிழ் மக்களின் உயிர் இழப்புகளுக்கான பரிகாரங்கள் என்ன? தம் அன்புக்குரியோரைப் பறிகொடுத்தவர்கள் நீதியையும் நியாயத்தையும் வேண்டி நிற்பதில் பிழை என்ன? தமிழ் மக்களுக்கு ஏதாவது விமோசனம் இதுவரையில் கிடைக்கப் பெற்றதா? இவை அனைத்தும் கேள்விக் குறிகளாகவே இருக்கின்றன என, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் இன்றைக்கு 2000ம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களின் வாழ்விட பூமியாக இருந்து வந்துள்ளது. அண்மைக் காலங்களில் …

  21. உறுதியுடன் போராடுவதற்கு உதாரணமான சம்பூர் நிலப்போராட்டம்! சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கப்படாது என மின்வலு எரிசக்தி அமைச்சு உச்ச நீதிமன்றில் அறிவித்துள்ள செய்தி சம்பூர் மக்களை மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத் தமிழ் மக்களையும் ஆறுதல் படுத்தியுள்ளது. மின்வலு எரிசக்தி அமைச்சின் சார்பில் சட்ட மா அதிபர் இந்த தகவலை உச்ச நீதிமன்றில் அறிவித்துள்ளார்.அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டால் நீண்ட கால அடிப்படையில் சுற்றாடல் பாதிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டி சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கப்படக் கூடாது எனக் கோரி Environmental Foundation Guarantee Limited என்ற அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது.…

  22.  'தகாத வார்த்தையால் என்னை திட்டுகின்றனர்' - எம்.றொசாந்த் எனக்கு அலைபேசியில் அழைப்பை எடுக்கும் சிலர், பேராயர் என்றும் மதிக்காமல் என்னைத் தகாத வார்த்தைகளால் ஏசுகின்றனர் என தென்னிந்திய திருச்சபையின் பேராயர் கலாநிதி டீ.எஸ்.தியாகராஜா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில், பாதிரியார் என்ற மரியாதை இல்லாமல் தகாத வார்த்தைகளால் ஏசுகின்றனர். ஜனாதிபதி கூட பாதிரியார்களுக்கு மரியாதை செய்கையில் இவர்கள் இவ்வாறு ஏசுகின்றனர். இது கண்டித்தக்கது. பாடசாலையின் பிரச்சினை பெரிதாவதற்கு வெளியாட்களின் உள்நுழைவே காரணம். இதனால், பாடசாலையில் சி.சி.டி.வி கமெ…

  23. 24 வருடங்களின் பின்னர் மீன்பிடிக்க அனுமதி.! கிளிநொச்சி - இரணைதீவில் 24 வருடங்களின் பின்னர் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரணைதீவு மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, நேற்று மாலை முதல் மீனவர்கள் அங்கு தங்கியிருந்து தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக 1992 ஆம் ஆண்டின் பின்னர் இரணைத்தீவில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Tweet http://www.virakesari.lk/article/11297

  24. 9 ஆவது சரத்தை நீக்க வேண்டாம் : அரசியலமைப்பு குறித்து கர்தினால் இலங்கை மதச்­சார்­பில்­லாத நாடு என்ற மேற்­கு­ல­கத்தின் கொள்­கையை நாம் ஏற்­றுக்­கொள்ள வேண்­டிய தேவை கிடையாது எனத் தெரி­வித்­துள்ள கத்­தோ­லிக்க பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பின் 9 ஆவது ஷரத்து நீக்­கப்­படக் கூடாது என்றும் வலி­யு­றுத்­தி­யுள்ளார். கம்­பஹா மாவட்­டத்தில் திரு இரு­த­ய­நாதர் தேவா­ல­யத்தில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யாற்­று­கை­யி­லேயே பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை இவ்­வாறு கருத்து வெளி­யிட்­டுள்ளார். ஆண்­டகை அங்கு மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, இலங்கை மதச்­சார்­பில்­லாத நாடு என்ற கெ…

  25. பணம் கேட்டதை நிரூபித்தால் பேராயர் பதவியை துறப்பேன் - எம்.றொசாந்த் உடுவில் மகளிர் கல்லூரிக்குச் சொந்தமான பணத்தை, தேவாலயம் கட்டவும், மதத் தேவைகளுக்கவும் பேராயர் கேட்டார் என்பதனை எவரனும் நிரூபிப்பார்கள் ஆயின் நான் எனது பேராயார் பதவியைத் துறப்பேன் என பேராயரும், கல்லூரியின் தலைவருமான பேரருட் கலாநிதி டீ.எஸ்.தியாகராஜா தெரிவித்தார். வட்டுக்கோட்டையிலுள்ள தென்னிந்திய திருச்சபையின் பேராயர் இல்லத்தில் நேற்றுத் திங்கட்கிழமை (12) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு சவால் விடுத்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'உடுவில் மகளிர் கல்லூரி நிதியை கையாளுவது, அதிபருடையது பொருளாளரின் பொறுப்பு. பே…

    • 3 replies
    • 422 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.