ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்ட வேளை விஷ ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளத் தயாரென அறிவித்திருந்த இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தற்போது மருத்துவ பரிசோதனை நடத்த மறுத்துள்ளது. அமெரிக்கத் தூதுவரின் உறுதிமொழியையும் வடக்கு மாகாண முதலமைச்சரின் அறிவிப்பையும் அடுத்து அமெரிக்க விமானப் படையின் மருத்துவ முகாமில் பரிசோதனை மேற்கொள்ள நேற்று வெள்ளிக்கிழமை நீண்டநேரம் காத்திருந்த 25 க்கு மேற்பட்ட முன்னாள் போராளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப்புடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னே…
-
- 1 reply
- 566 views
-
-
அரசியல்வாதிகள் தங்களது சுய லாபங்களை நோக்குடன் கொண்டு தமிழ் மக்களுக்காக நாங்கள் இருக்கின்றோம் என்று கூறுவதை தவிர தமிழ் மக்களின் பிரச்சனையை யாரும் கவனிப்பதில்லை . என இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (17.08.2016) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கும் போதே முன்னாள் போராளி ஒருவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். முன்னாள் போராளிகள் 107 நபர்கள் மரணித்துள்ளனர். விஷ ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக பல கருத்துக்கள் வருகின்றன. நாங்கள் தடுப்பு முகாங்களில் இருந்த சமயத்தில் எமக்கு உணவுகள் வழங்கப்பட்டது, தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. வழங்க…
-
- 8 replies
- 804 views
- 1 follower
-
-
பிரபாகரனுக்கு பணம்கொடுத்து உடன்படிக்கை செய்து கொண்டு தேர்தலில் வெற்றிபெற்றவர் தேசத் துரோகியா அல்லது தேர்தலில் தோல்வியுற்று எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த நான் தேசத்துரோகியா என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பனார். கிராமத்தையும் நாட்டையும் எதிர்காலத்தையும் கட்டியெழுப்ப ஒன்றுபட்டு செயற்படுவோம். தேர்தலில் பிரிந்து நின்று போட்டியிடுவோம். உலகத்திற்கு புதிய அரசியல் கலாசாரத்தை உலகிற்கு வெளிப்படுத்துவோம் என்றும் பிரதமர் தெரிவித்தார். மாத்தறை சனத ஜயசூரிய மைதானத்தில் இன்று வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற இணக்கப்பாட்டு தேசிய அரசாங்கத்தின் ஒருவருட பூரத்தி விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்…
-
- 0 replies
- 343 views
-
-
வடக்கில் மீள்குடியேற்றம் இந்த வருட இறுதிக்குள் நிறைவுறுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. மீள்குடியேற்ற அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நிலம் அற்ற 936 குடும்பங்கள் உள்ளன. எனினும் இதில் 971 குடும்பங்களுக்கு வீடுகளை அமைக்க அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கீரிமலைக்கு அருகில் உள்ள காங்கேசன்துறை பகுதியில் இராணுவத்தின் உதவியுடன் வீடுகள் அமைக்கப்படுகின்றன. மேலும் 104 வீடுகள், பலாலி வடக்கு பகுதியில் அமைக்கப்படுகின்றன. அவை, எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் நிறைவுப்பெறவுள்ளன. இதனைதவிர, நிலமற்ற குடும்பங்களை குடியேற்றுவதற்காக 250 காணித்துண்டுகளை அதிகாரிகள், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்ச…
-
- 1 reply
- 422 views
-
-
இலங்கை மத்திய வங்கியின் பணியாளர்களுக்கு பாரியளவில் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கியின் பணியாளர்களுக்கு மிகவும் பாரியளவில் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக வங்கியின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் இருவர் முறைப்பாடு செய்துள்ளனர். நிதி மோசடி விசாரணைப் பிரிவிடமும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர். மத்திய வங்கி வரலாற்றில் மட்டுமன்றி இலங்கை அரச சேவை வரலாற்றில் இந்தளவு தொகை சம்பளம் உயர்த்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்படி, மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர்களின் சம்பளங்கள் 110 வீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 267000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்ப…
-
- 0 replies
- 221 views
-
-
யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவித்துள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த நடவடிக்கையானது, மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கத்த்தின் முதலமைச்சரையும், அமைச்சர்களையும் புறக்கணிக்கும் செயல் என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். எனினும், தாம் இந்த மாநாடு தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் அறிவித்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜீனோல்ட் குரே தெரிவித்துள்ளார். தாம் அவரை இந்த நிகழ்வுக்கு அழைத்தபோது அதற்கு அவர் மறுப்பு வெளியிடவில்லை என்றும் ரெஜீனோல்ட் குரே குறிப்ப…
-
- 0 replies
- 292 views
-
-
நம்பிக்கையோடு இருங்கள்... நம்பிக்கையோடு இருங்கள்... தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்? என்ற பிரச்சினைதான் கூட்டமைப்புக்கிடையே பக்கச்சார்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மாகாண அரசின் இயங்குநிலை இன்று வரை சரிப்பட்டு வரவில்லை. அமைச்சர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விட்டவர்கள் இப்போது அதற்கு முதலமைச்சர் இணக்கம் தெரிவித்தவுடன் வேண்டாம் என்று கூறும் அளவுக்கு வந்து விட்டனர். வடக்கு மாகாண அரசு அமைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் விசாரிப்பதா? அல்லது ஓய்வுபெற்ற நீதிபதிகள் விசாரிப்பதா என்று வாதம் நடத்தும் அளவிலேயே வடக்கு மாகாண சபையின் நிலைமை உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக …
-
- 3 replies
- 623 views
-
-
கடந்த இரண்டு மாதங்களில் 600 தொன் மீன்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதித் தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியதை அடுத்து, இந்த வளர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கடந்த அரசாங்கம் மீது கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதற்கான கால அவகாசமும் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தன. எனினும், அப்போதைய மஹிந்த அரசாங்கம் அதனை கண்டுகொள்ளாமையினால், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 480 views
-
-
நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தின் பிரபல தாதா என அழைக்கப்படும் சன்னா என்பவர் சங்குவேலிப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரை வெட்டிப் படுகொலை செய்தார். சங்குவேலி வடக்கு பகுதியைச் சேர்ந்த சிவகுமார் பிரணவன் (வயது 35) என்ற குடும்பஸ்தரே பலியாகியிருந்தார். மீண்டும் நேற்றிரவு மீண்டும் நடைபெற்ற வாள்வெட்டுத் தாக்குதில் சங்குவேலிப் பகுதியில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். முன்பகை காரணமாக இரண்டு இளைஞர் குழுக்கழுக்கிடையில் நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவத்திலேயே குறித்த இளைஞர் காயமடைந்துள்ளார் எனத் தெரியவருகின்றது. சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமுக்கருகிலேயே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வாள் வெட்டுத் தாக்குதல்கள் இரண்டும் சங்குவேலிப் பிரதேசத்திலேயே …
-
- 1 reply
- 488 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்குவதற்கு துணைபோனதாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயகுமாரியின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மீண்டும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைக்கு அழைத்திருந்த நிலையில், இன்று காலை விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாலேந்திரன் ஜெயகுமாரியின் சட்டத்தரணி தெரிவித்தார். ஜெயகுமாரியின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டமைக்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என குறித்த சட்டத்தரணி தெரிவித்தார். http://www.onlineuthayan.com/news/16475
-
- 1 reply
- 298 views
-
-
காணாமல்போனோர் விடயத்தில் அரசாங்கத்துடன் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நாடகமாடுவதாக போரினால் மோசமாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சிறீலங்கா அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள காணாமல்போனோர் அலுவலகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றைய தினம் (வியாழக்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் நடாத்தியதுடன் இந்தக் குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளனர். மேலும், நேற்றைய தினம் முல்லைத்தீவிலமைந்துள்ள இராயப்பர் தேவாலயத்தில் ஒன்றுதிரண்ட இம்மக்கள் காணாமல்போனோர் அலுவலகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அத்துடன், 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் கைது செய்து காணாமல் ஆக்கப்பட்டோரும், இராணுவத்தினரிடம் சரணடைந்து கா…
-
- 4 replies
- 421 views
-
-
முன்னாள் போராளிகளின் மர்மச் சாவுகள் குறித்து விசாரணையொன்றினை நடாத்துமாறு ஐ.நாவிடம் அவசர கோரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட குறுகிய காலங்களில் 100க்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் சந்தேகத்துக்குரிய வகையில் சாவடைந்த நிலையில், இக்கோரிக்கையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ளார். ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் செயத் அல்உசேன், ஐ.நாவின் சிறப்பு கடத்தப்பட்டோர் விவகாரங்களுக்கான ஐ.நாவின் சிறப்பு ஆய்வாளர், உடல்நல விகாரங்களுக்கான ஐ.நாவின் சிறப்பு ஆய்வாளர், உண்மைக்கு நீதிக்குமான ஐ.நாவின் சிறப்பு ஆய்வாளர் ஆகியோருக்கு இது தொடர்பில் அவசர கடிதங…
-
- 0 replies
- 214 views
-
-
‘அறிவாயுதம்’ குழுவினரால் வரும் ஓகஸ்ட் 28 ம் நாள் சென்னை உமாபதி அரங்கில் போராளிகளின் மர்ம மரணம் தொடர்பில் மாபெரும் கரத்தரங்கு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்களால் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசியல் தலைவர்கள், மனித உரிமையாளர்கள், ஊடகவியலாளர்கள், மருத்துவ நிபுணர்கள், இனஅழிப்பு வல்லுனர்கள் என்று பல்வேறுபட்ட தரப்பினரையும் ஒன்றிணைத்து இந்த மாபெரும் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. கருத்தரங்க முடிவில் எடுக்கப்படும் தீர்மானங்கள் தமிழக மற்றும் இந்திய அரசின் கவனங்களுக்கு கொண்டுசெல்லப்படுவது மட்டுமல்ல அனைத்துலக கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும் வகையில் இக் கருத்தரங்கை அறிவாயுதம் …
-
- 3 replies
- 535 views
-
-
முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுள்ளமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதி யுள்ளதாக அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்த அமைச்சர், சிறைச்சாலைகளின் நிலைமைகளை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பகுதிக்கும் விஜயம் செய்த அமைச்சர் கைதிகளையும் பார்வையிட்டதுடன் அவர்களுடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் சிறைச்சாலையின் பிரதம அதிகாரி ரி.பிரபாகரன் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்து…
-
- 0 replies
- 308 views
-
-
சுதந்திரத்தின் பின்னர் மொழியுரிமையை பிரதான இரண்டு கட்சிகளும் இணங்கி வழங்கியி ருந்திருந்தால் 30 வருடகால யுத்தமொன்று ஏற்பட்டிருக்கவே இருக்காது என்று உயர்கல்வி அமைச்சரும், சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கடந்த கால யுத்தத்தில் வெற்றிபெற்றவர் எவரும் இல்லை மாறாக அனைவரும் தோல்வி யையே சந்தித்திருக்கின்றோம் என்றும் அமைச்சர் கூறினார். திருகோணமலை கோணேசபுரியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில், உயர்கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடி மாணவர் விடுதி மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையம் என்பன இன்று வெள்ளி க்கிழமை வைபவரீதியாகத் திறந்து வைக்கப்படன. திருகோணமலை வளாக முதல்வர் வி. …
-
- 0 replies
- 281 views
-
-
மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 19 பேர் காயமடைந்த நிலையில், மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு அருகாமையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மன்னாரில் இருந்து குஞ்சுக்குளம் பகுதிக்கு பயணித்த பட்டா ரக வாகனம், கட்டுப்பாட்டை இழந்து வீதியில் தலைகீழாக புரண்டது. குறித்த வாகனத்தில் பயணித்த மன்னார் சாந்திபுரத்தைச் சேர்ந்த உறவுக்காரர்களான 19 பேர் காயமடைந்தனர். இதில் 16 பேர் ஆண்கள், 3 பெண்கள் இரண்டு வயது பிள்ளைகள் உள்ளடங்குகின்றனர். விபத்து இடம்பெற்ற பகுதிக்குச் சென்ற மன்னார் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை மே…
-
- 1 reply
- 419 views
-
-
காணாமல்போனோர் அலுவலகம் தேவையில்லை என தெரிவித்து முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். முல்லைத்தீவு புனித இராஜப்பர் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் அலுவலகம் வரை சென்று முடிவடைந்தது. போராட்டத்தின் முடிவில் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு மகஜர் கையளிக்கப்பட்டது. இந்த போராட்டத்தை காணாமல்போனோரின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். …
-
- 1 reply
- 364 views
-
-
நீதி கோரும் முஸ்லிம்கள் இலங்கையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்கள் மீது இன ரீதியாக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பாக உண்மை நிலை கண்டறியப்பட வேண்டும் என நல்லிணக்க பொறிமுறைகளுக்கான செயலணியிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க பொறிமுறைகளுக்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வு முன்னிலையில் இந்த கோரிக்கை முஸ்லிம்கள் சார்ந்த சிவில் அமைப்புகளினால் முன் வைக்கப்பட்டுள்ளன. நல்லிணக்க பொறிமுறைகளுக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இறுதி அமர்வு இன்று வியாழக்கிழமை பட்டிப்பளை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது இந்த அமர்வின் போது கருத்தை முன் வைத்த சமூக நல்லிணக்கத்திற்கும் வலுவூட்டலுக்குமா…
-
- 3 replies
- 841 views
-
-
தமிழர்களின் பூர்வீக நிலப் பகுதிகளான வடக்கு, கிழக்கு மிக வேகமாக பௌத்த மயப்பட்டு வருகின்றது. இலங்கையில் தீவிர அரசியல் கலப்புக்குள்ளாகிவிட்ட பௌத்த தத்துவமும், அதன் துறவிகளும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் தரப்பினரும் இதனை முன்னின்று செய்கின்றனர். வழிநடத்துகின்றனர். இந்த நடவடிக்கைகள் குறித்து யார் கேள்வி எழுப்பினாலும், “இவ்விடங்களிலெல்லாம் முன்பொரு காலத்தில் பௌத்தம் இருந்தது. புத்தர் விஜயம் செய்தார்” என்கிற மாதிரியான வரலாற்றுக் கதைகளை அவிழ்த்துவிடுகின்றனர். இந்தக் கதையவிழ்ப்புக்களின் அடிப்படையில்தான், வடக்கு கிழக்கில் நாளாந்தம் பௌத்த விகாரைகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு வடக்கு, கிழக்கை பௌத்தமயப்படுத்துவதற்கு பெரும்பான்மையினர் கொடுக்கும் விளக்கம் சரியானதா? …
-
- 11 replies
- 1.7k views
-
-
2009ஆம் அண்டு இறுதி யுத்தத்தின்பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் மரணமடைந்து வருவதைக் கண்டித்தும், சர்வதேச விசாரணையைக் கோரியும் ஜேர்மனி – பேர்லின் நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டம் ஜேர்மனி வெளிவிவகார அமைச்சின் செயலகத்துக்கு முன்னால் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சர்வதேச விசாரணையைக் கோரியும், தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்தும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், போராட்டத்தின் நிறைவில் ஜேர்மனி வெளிவிவகார அமைச்சுக்கு மனுவொன்றையும் கையளித்திருந்தனர். http://thuliyam.com/…
-
- 0 replies
- 311 views
-
-
சிங்களப் புலம்பெயர் அமைப்பு ஒன்றை உருவாக்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இத்தாலிக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் பங்கேற்குமாறு மஹிந்த ராஜபக்ஸவிற்கு சுதந்திரக் கட்சி நேரடி அழைப்பு விடுத்துள்ளது. எனினும் இந்த நிகழ்வுகளை தவிர்த்து வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொள்ள மஹிந்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஸ மட்டுமன்றி கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் இவ்வாறு நிகழ்வினை புறக்கணிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/ar…
-
- 0 replies
- 307 views
-
-
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் மகள் ஆகியோர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த மூன்று பேரின் சடலங்களும் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. நஞ்சு அருந்தி உயிரிழந்திருக்கலாம் அல்லது நஞ்சூட்டப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135057/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 229 views
-
-
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய காலம் மலர்ந்துள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். குறுகிய அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் அன்றி நல்லிணக்கத்தை ஏற்படுத்த இணைந்து செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். பௌத்த மதத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என ஏனைய மதத் தலைவர்கள் குரல் கொடுக்கும் நிலையில் அரசியல்வாதிகள் புத்தி சாதூரியமாக நடந்து கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். உலகின் மிக உயரமான கிறிஸ்மஸ் மரத்தை உருவாக்கும் முயற்சியின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அடுத்த தலைமுறையினருக்கு நாட்டை ஒப்படைக்கும் போது இனங்களுக்கு இடையில் முரண்பாடு இருக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். பௌத்த நாடு என்ற ரீதியில் இந்த …
-
- 0 replies
- 292 views
-
-
இப்பொழுதெல்லாம் வன்னியில் ஒரு முன்னாள் போராளியை மற்றொரு முன்னாள் போராளி சந்தித்தால் உனக்கும் தடுபில் ஊசி போட்டதா? உடம்பில ஏதாவது மாற்றங்கள் நடக்குதா? என்று கேட்கின்றார்கள் என கிளிநொச்சி திருவையாறைச் சேர்ந்த ஒரு முன்னாள் போராளி தெரிவித்தார். இதனை விட தனது மனைவி அப்பா நீங்கள் தடுப்பில் இருந்த நேரத்தில் உங்களுக்கு ஊசி ஏதாவது போட்டவங்களா? சொல்லுங்கோ எனக்கு பயமா இருக்கு அப்படி போட்டிருந்தால் கொழும்புக்கு கொண்டுபோய் பிறைவேற்றா என்றாலும் எவ்வளவு காசு செலவழிஞ்சாலும் பரவாயில்லை செக்கப் செய்யவம் என தொடர்ச்சியாக கெஞ்சிக் கேட்பதாக அந்த முன்னாள் போராளி குறிபிட்டார். மேலும் கிளிநொச்சி தொண்டமான்நகரை சேர்ந்த மற்றொரு முன்னாள் போராளி சொன்னார் தனது அம்மா பல தடவைகள் தன்னை அழுதழு…
-
- 3 replies
- 572 views
-
-
இலங்கையில் டெங்கு நோயால் மூன்று பேர் உயிரிழக்கும் போது, புகையிலை பாவனையால் நாள் ஒன்றுக்கு 55 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதை தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் வைத்தியர் சமன் குமார இந்த தகவலை தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஆண்டு ஒன்றுக்கு புகையிலை பாவனையால் இலங்கையில் 20,000 பேர் உயிரிழப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஊடக அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், உலகில் 95 வீதமானோர் புகைத்தல் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக கூறியுள்ளார். அத்துடன், இலங்கையில் 22 வீதமான ஆண்கள் புகைத்தல் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாகவும் அவர் ச…
-
- 2 replies
- 536 views
-