ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
குவைத்தில் சட்ட விரோதமான முறையில் தொழில் புரிந்த 71 இலங்கையர்களைகுவைத்தில் வைத்து இன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவின் உத்தரவிற்கிணங்ககுறித்த இலங்கை பிரஜைகள் குழு பண்டாரநாயக்க சர்வதே விமான நிலையத்தில்தரையிறக்கப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்ட 71 பேரில் 9 ஆண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் 4 மற்றும் 6 வருடங்கள் குவைத்தில் தங்கியிருந்து சட்டவிரோதமாகதொழில் புரிந்துள்ளார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது. இந்த வருடத்தில் இவ்வாறான காரணங்கள் காரணமாக 1,151 இலங்கையர்கள் திருப்பிஅனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 221 இலங்கையர்கள் பாத…
-
- 0 replies
- 471 views
-
-
மடு தேவாலயத்திற்கு வந்த சிங்கள குடும்பம் ஒன்று மாவீரர் துயிலும் இல்லத்தை தேடி அலைந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. நாளைய தினம் இடம்பெற இருக்கும் மடு தேவாலய உற்சவத்திற்காக இன்று வருகைத் தந்திருந்த குடும்பத்தார் அயல் கிராமமாகிய பெரிய பண்டி விரிச்சானுக்கு சென்று அங்கு முன்பிருந்த துயிலும் இல்லத்தை தேடியுள்ளனர். 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் மடு ஆலயத்திற்கு வரும் சிங்கள மக்கள் பெரும்பாலானவர்கள் ஆலயத்தில் இருந்து ஒன்றரை கிலோமீற்றருக்கு அப்பால் அமைந்திருந்த பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தை பார்வையிட்டு செல்வது வழக்கம். யுத்தத்தின் பின்னர் அந்த மாவீரர் துயிலும் இல்லம் இலங்…
-
- 0 replies
- 517 views
-
-
கொழும்பு நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பரவியுள்ள ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையை ஒழிக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் விசேட தேடுதல் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளன. இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அடங்கிய படையணி மூலம் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் தேவையான நேரத்தில் விமானப்படையின் உதவியும் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது. போதைப்பொருள் ஒழிப்புக்காக ஆரம்பிக்கப்படும் இந்த நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து ஒரு மாதத்தின் பின்னர் ஜனாதிபதியும் பிரதமரும் ஆராய்வார்கள். இரண்டாவது மாத நடவடிக்கையின் போது முதல் படையணியை விட இரண்டு மடங்கு அதிகமான படையினர…
-
- 0 replies
- 361 views
-
-
குரு மாற்றம் காரணமாக இலங்கையின் அரசியல் நடவடிக்கைகளில் எவ்வாறான மாற்றங்கள் நிகழும் என பிரபல ஜோதிடர் சுஜித் நிஷாந்த யோகி ஆருடம் தெரிவித்துள்ளார். சமகால அரசாங்கம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த போதும், 2020ஆம் ஆண்டு வரை எவ்வித தடையும் இன்றி நடத்திச் செல்லப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் ஏற்பட்ட குரு மாற்றம் தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஜோதிடர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜோதிடரின் ஆருடத்திலிருந்து முக்கிய விடயங்களாவன, 1. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நல்லாட்சி அரசாங்கம் 2020ஆம் ஆண்டு வரை எந்த தடையும் இன்றி நடத்தி செல்லப்படும். 02. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் போராட்…
-
- 0 replies
- 333 views
-
-
கொழும்பில் இருந்து லண்டனுக்கான பயணத்தின் போது பயணிகளுக்கான கேட்கும் கருவிகள் வழங்கப்படாமையால், குறித்த விமான நிறுவனத்தின் மீது பயணிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக கொழும்பில் இருந்து இயங்கும் ஊடகம் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது. குறித்த செய்திக் குறிப்பில், தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, நேற்றைய தினம் கொழும்பில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட யு எல் 503 ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இக்கோனமி வகுப்பில் பயணித்தவர்களுக்கு (Headsets) கேட்கும் கருவிகள் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக விநோதங்களை அனுபவிக்கமுடியாத நிலை ஏற்பட்டதாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்நிலையில், விமானத்தில் பயணித்த பயணிகள் தலா 200 பவுண்ட்ஸ் என்ற அடிப்படையில் 53ஆயிரத்து 80…
-
- 0 replies
- 498 views
-
-
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில், புதிதாக உருவாக்கப்படவுள்ள காணாமல்போனோர் அலுவலகத்துக்கு 7 பேர் கொண்ட குழுவை அரசியல் அமைப்பு பேரவை பரிந்துரைக்கும் என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த அலுவலகத்தை அமைப்பதற்கான பணிகள் அடுத்த வாரங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன. அரசியல் அமைப்பு பேரவையின் பரிந்துரைக்கு அமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த அலுவலகத்துக்கான உறுப்பினர்களை நியமிப்பார். நிறைவேற்றப்பட்ட இந்த சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்ட பின்னரே அதுசட்டமாகும். இதன் பின்னர் குறித்த அலுவலகம் இந்த வருடத்துக்குள் தமது பணிகளை ஆரம்பிக்கும் என்றும்விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். குறித்த அலுவலகத்துக்கு நியமி…
-
- 0 replies
- 385 views
-
-
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, பாராளுமன்ற உறுப்பினர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல, மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோரைக் கைது செய்ய பொலிஸ் பாரிய நிதிக் குற்றப் பிரிவு சட்டமா அதிபரிடம் ஆலோசனையைக் கோரியுள்ளது. சிங்களப் பத்திரிகையொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. ஏ.டி.ராஜபக்ச நினைவு மண்டபத்தை அமைக்க தாழ் நிலத்தை நிரப்பும் சபையிடமிருந்து 61 மில்லியன் ரூபாவைப் பெற்றுக் கொண்டதற்காக கோத்தபாய ராஜபக்சவிடம் விசாரணை நடத்தவும், ஜனாதிபதி நிதியத்திலிருந்து 20 மில்லியன் ரூபாவைச் சிகிச்சைக்காக பெற்றுக் கொண்டதற்காக கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் விசாரணை நடத்தவும், விளையாட்டுத்துறை அமைச்சுக்கு விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாக கூறப்படும…
-
- 0 replies
- 552 views
-
-
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்கு தீர்மானித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான சட்ட திருத்தங்கள் மற்றும் விசேட ஏற்பாடுகள் தொடர்பில் குறித்த திருத்தத்தில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது. இவ் பரிந்துரைகள் தொடர்பில் ஏற்கனவே சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான துணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு சட்மூலமானது பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் அவர்களின் தேவைகளை கண்டறிந்து அரசு மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் பல கடமை பொறுப்புக்களை விதந்துரைக்கின்றது. மேலும் தென்னாபிரிக்க அரிசியலமைப்பின் 198 ஆவது சரத்தின்படி தேசிய பாதுகாப்பு தொடர்பாக துணைக்குழுக்களின் அவசியம் தொட…
-
- 0 replies
- 324 views
-
-
கவிஞர் நா.முத்துக்குமார் காலமானார்! கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான நா.முத்துக்குமார் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 41. தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற ''ஆனந்த யாழை மீட்டுகிறாய், அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்'' பாடலுக்காக தேசிய விருது பெற்றார். சைவம் படத்தில் ''அழகே அழகே எதுவும் அழகே அன்பின் விழியில் எல்லாம் அழகே'' என்ற பாடலுக்காகவும் தேசிய விருது பெற்றார். 2005ல் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதினையும், பல பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். 7ஜி ரெயின்போ காலனி, தெய்வத் திருமகள், சைவம், தலைவா, சிவாஜி, சந்திரமுகி உள்பட …
-
- 4 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சி - தருமபுரம் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து கோழி திருடிய இராணுவச் சிப்பாய் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், நீதிமன்றப் பணிப்பின் பேரில் கோழி உரிமையாளருக்கு 3000 ரூபா இழப்பீடு வழங்கினார். 3 மாதங்களுக்கு முன்னர் தருமபுரம் பகுதியில் காவலரண் ஒன்றில் கடமையில் இருந்த இராணுவச்சிப்பாய் ஒருவர் இரவு வேளை அருகிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து கோழிகளைத் திருடிச் சென்றார். இதனைக் கண்ட வீட்டு உரிமையாளர் குச்சலிட்டுக் கத்தவே அங்கு திரண்ட ஊர் மக்கள் கோழி திருடியவரை துரத்திச் சென்றனர். அந்த நபர் ஓடிச்சென்று குறித்து வீட்டுக்கு சற்றுத் தொலைவில் உள்ள இராணுவக் காவலரணுக்குள் புகுந்துகொண்டார். இதனையடுத்தே அவர் படைத் தரப்பைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. ப…
-
- 3 replies
- 448 views
-
-
வெளிநாடுகளிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத முகவர்கள் கொழும்பு, வில்பத்து, காத்தான்குடி போன்ற பிரதேசங்களக்கு ஊடுருவியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது என தெரிவிக்கும் பொதுபல சேன, அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பொதுபல சேனாவின் நிர்வாகப் பணிப்பாளர் கலாநிதி டிலந்த வித்தானகே மேலும் குறிப்பிடுகையில், சிரியாவில் உயிரிழந்த இலங்கையின் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிக்கு இவ் இயக்கம் நஷ்டஈடு வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அத்துடன் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மாலைத்தீவு, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாத முகவர்கள் இலங்கைக்குள் ஊடுருவியிருப்பதாகவும் இவர்கள் கொழும்பு, வில்பத்து, காத்தா…
-
- 2 replies
- 458 views
-
-
போரில் பெரும் அழிவுகளை எதிர்நோக்கிய ஈழத்தமிழினம் தற்போது மீள் எழும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டுள்ளது. இந்த முயற்சிக்கு தொப்புள்கொடி உறவான இந்தியா கைகொடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தெல்லிப்பழையில் நேற்றைய தினம் அலுமினிய பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் விருந்தினர்களில் ஒருவராக யாழ்.இந்திய துணைத் தூதுவர் ஆர்.நடராஜனும் கலந்து கொண்டிருந்தார். அவ்வேளை அங்கு உரையாற்றும் போதே அவைத்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், இந்தியாவிற்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையில் வரலாற்று ரீதியான தொடர்புகள் உள்ளன. இந்த உறவின் அடிப்படையில் தான…
-
- 0 replies
- 250 views
-
-
தமிழ் மக்களது காணிகளில் கட்டடங்களை அமைத்துள்ள இராணுவம் அக்காணிகளை மீண்டும் மக்களிடம் ஒப்படைக்கவேண்டுமானால் அதற்கு பணம் கோருவதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் நேற்று(சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வலிகாமம் வடக்கின் பெறுமதி தெற்கிலுள்ளவர்களுக்கோ அல்லது வெளிநாட்டிலுள்ளவர்களுக்கோ தெரியாது. அதன் பெறுமதி தெரிந்திருந்தால் குறித்த பிரதேசம் இன்றுவரை பாதுகாப்பு வலயமாக இருந்திருக்காது. குறிப்பாக கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளில் தனியாருக்கு சொந்தமான காணிகளும் உள்ளன, அதேபோன்று அரச காணிகளும் உ…
-
- 0 replies
- 323 views
-
-
காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பிலான சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கூட்டு எதிர்க்கட்சியினால் இவ்வாறு தீர்மனரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.காணாமல் போனோர் அலுவலகத்தின் அதிகாரங்கள் தொடர்பில் உன்னிப்பாக ஆராயப்பட்டு வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.இந்த சட்டம் தொடர்பில் வழக்குத் தொடர சில வழிகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதனை கூட்டு எதிர்க்கட்சி எதிர்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறெனினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானஙகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படுவதனை விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டிய…
-
- 0 replies
- 213 views
-
-
நாட்டின் அமைதியையும் சமாதானத்தையும் சீர்குலைத்து, வெளிநாடுகளில் இலங்கையின் நற்பெயரை கெடுத்து மோசமான நிலைக்கு கொண்டு சென்றவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என்று வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்று காலை மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் நடைபெற்ற செமட்ட செவன வீடமைப்பு வேலைத் திட்டத்தின் விசிறிநிவாச காசோலை வழங்கல் மற்றும் உறுதிப்பத்திரம் கட்டிடப்பொருட்கள் விநியோக நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். படைத்தரப்பை காட்டி நாட்டை கொள்ளையடித்த கொள்ளையர்களிடமிருந்து நாட்டை பாதுகாத்து இலங்கையை சுபீட்சமிக்க நாடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசங்கவும் இணைந்து…
-
- 1 reply
- 318 views
-
-
வென்னாப்புவ - தும்மலதெனிய பகுதியில் இயங்கி வந்த விபசார விடுதியொன்றை நேற்று இரவு பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். மேலும், அங்கிருந்த 2 பெண்கள் உட்பட 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்கள் 20 மற்றும் 25 வயதானவர்கள் எனவும் இவர்கள் மாரவில மற்றும் பொலனறுவை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் வென்னாப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/10185
-
- 0 replies
- 370 views
-
-
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என பிரித்தானியா தெரிவித்துள்ளது. அண்மையில் இலங்கையில் காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது நல்லிணக்கப் பாதையின் முக்கிய நகர்வாக கருதப்பட முடியும் என பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அலுவலகம் ஊடாக காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு நன்மை ஏற்படும் என தெரிவித்துள்ளது. தாம் நேசித்தவர்களுக்கு என்னவாயிற்று என்பதனை அறிந்து கொள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு ஓர் சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும், இதன் ஊடாக நல்லிணக்கத்தை வலுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளது. ஆயிரக் கணக்கான முறைப்பாடுகள் தொடர்பில் அலுவலகம…
-
- 0 replies
- 163 views
-
-
கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயத்துக்கு அருகில் அமைக்கப்படும் பௌத்த விகாரை தமிழர்களை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கான ஒரு அங்கமே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயச் சூழலில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரையைப் நேற்று பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், 'தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் பௌத்த மயமாக்கும் நோக்கத்துடனேயே இராணுவத்தின் துணையுடன் பௌத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒரு வீதம் கூட பௌத்தர்கள் இல்லாத தமிழர்களை மாத்திரம் கொண்ட பகுதியில் இப்பட…
-
- 1 reply
- 559 views
-
-
மிருசுவில் பகுதியில் சிறுவர்கள் உட்பட 8பேரை வெட்டிப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சிறீலங்கா இராணுவ அதிகாரிக்கு சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கவேண்டுமென தேசிய சுதந்திர முன்னணி் கோரியுள்ளது. நேற்றையதினம் (வெள்ளிக்கிழமை) தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர ‘மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆள ஊடுருவும் படையணியைச் சேர்ந்த சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தார். 187 கைதிகள் சிறீலங்கா அதிபரின் பொதுமன்னிப்பைப் பெற்றுள்ளனர். இவர்களில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பாலியல் வல்லுறவுக் குற்றவாளிகள், பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்கள்…
-
- 5 replies
- 459 views
-
-
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, நேற்றிரவு 9.30 மணியளவில் சீனா சென்றுள்ளார். யுஎல்188 என்ற விமானத்தில் 17 பிரதிநிதிகளுடன் பிரதமர் பயணமானார். இந்தப் பயணத்தின் போது, சீனாவின் தென் மேற்குப் பிராந்தியத்தில் உள்ள சில கைத்தொழில் வலயங்கள், கொள்கலன் முனையங்கள், தொழில்நுட்பப் பூங்காக்கள், நிதி நிலையங்கள், படைப்பு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பொருளாதார அபிவிருத்தி இடங்களை அவர் பார்வையிடவுள்ளார். பிரதமரட எதிர்வரும் 17ஆம் நாள் திகதி வரை சீனாவில் தங்கியிருப்பார். இதற்கிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அடுத்த மாதம் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk…
-
- 1 reply
- 242 views
-
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உள்ளிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவில் அங்கம் வகிப்பவர்கள்அனைவரும் கலந்துகொள்வர். இந்தக் கூட்டத்தில் புதிய அரசமைப்பு, தேர்தல் முறைமை சீர்திருத்தம், ஐ.நா. தீர்மானம், காணாமல்போனோர் அலுவலகம் குறித்த சட்டம் உள்ளிட்ட சமகால அரசியல் விடயங்கள் தொடர்பிலும், இராணுவ ஆக்கிரமிப்பினால் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்படும் என்று…
-
- 1 reply
- 281 views
-
-
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாளை திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அமெரிக்க பசுபிக் கட்டளைப்பீடத்தால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இலவச மருத்துவ முகாம் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நாளை காலை யாழ்ப்பாணம் செல்லும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர், மாலை யாழ்.கிறீன்கிறாஸ் ஹோட்டலில் இந்தச் சந்திப்பை நடத்தவுள்ளார் என்று சுமந்திரன் எம்.பி. குறிப்பிட்டார். இதன்போது அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தி சார்ந்த முக்கிய விடங்கள் குறித்து பேசப்படும் என்று சுமந்த…
-
- 0 replies
- 400 views
-
-
கிளிநொச்சி இரனைமடு கனகாம்பிகை அம்மன் கோவில் ஆலயத்திற்கு மிக அருகில் மிகப்பெரிய புத்த விகாரை அமைப்பது,மற்றும் ஆலயத்தின் மூன்றாவது வீதியை ஆக்கிரமித்து விகாரைக்கான சுற்று மதில் அமைத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவி;த்து எதிவரும் மாதம் ஏழாம் திகதி கிளிநொச்சி மாவட்டம் தழுவிய ரீதியில் மாபெரும் ஜனநாயக வழியிலான பேராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 13-08-2016 சனிக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இரனைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் மூன்றாவது வீதியை ஆக்கிரமித்து படையினர் புத்த விகாரைக்கான மதிலை அமைத்து வரும் அதேவேள…
-
- 0 replies
- 279 views
-
-
உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றுக்காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மோட்டார் சைக்கிள்களில் ஒன்று எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த வேளையில் தீப்பிடித்தது. இதையடுத்து அதற்கு அருகிலிருந்த மோட்டார் சைக்கிளுக்கும் தீ பரவியது. இதன் காரணமாக இரு மோட்டார் சைக்கிள்களும் தீப்பற்றி எரிந்தன. அங்கிருந்தவர்கள் உடனடியாக நீரை ஊற்றி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் காரணமாக பாரிய சேதங்களோ, உயிர் சேதமோ ஏற்படாது தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த எரிபொருள் நிரப்புநிலையத்தில் ஒரு வருடத்திற்கு முன்னரும் இவ்வாறான நிகழ்வு இடம்பெற்றதாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர். இந்…
-
- 2 replies
- 496 views
-
-
இனப்படுகொலைக்கு நீதி கேட்டும் - சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள பௌத்த மயமாக்கலை எதிர்த்தும்- தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும்- மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்தக் கோரியும்- நீதிக்கான நீண்ட நடை பயணத்திற்கான அழைப்பை கிளிநொச்சி கிராம மற்றும் மாதர் அபிவிருத்திச் சங்கங்களின் சமாசமும் பொது அமைப்புக்களின் ஒன்றியமும் இணைந்து விடுத்துள்ளன. எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு ஆனையிறவில் ஆரம்பிக்கின்ற நடைபவனி கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனை முன்பாக உள்ள ஐ.நா செயலகத்தைச் சென்றடையவுள்ளது. தமிழர் தாயக்தின் நயினாதீவில் 60 அடி புத்தர் சிலை வைக்கப்பட்டமை, கொக்கிளாய் கருநாட்டுக்கேணி விநா…
-
- 0 replies
- 404 views
-