Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 5 பில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்ட போதிலும் எவரும்கைது செய்யப்படவில்லை இலங்கையில் அண்மையில் சில சந்தர்ப்பங்களில் ஐந்து பில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்ட போதிலும் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. காவல்துறை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் இந்த விடயம் குறித்து கொழும்பு பிரதான நீதவானுக்கு நேற்றைய தினம் அறிவித்துள்ளனர். பிரேஸிலிருந்து கொழும்புக்கு கொண்டு வரப்பட்ட கொக்கேய்ன் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர். கொக்கேய்ன் போதைப் பொருள் மாதிரியை அரச…

  2. தேசிய அர­சாங்­கத்தை வீட்­டுக்கு அனுப்­புவோம் ; ஸ்ரீலங்கா மக்கள் கட்சி சூளுரை : பாத­யாத்­தி­ரைக்கும் ஆத­ரவு தேசிய அர­சங்கம் மக்­களை ஏமாற்­றி­யுள்­ளது என்­பதை பொதுமக்கள் தற்போது உணர்ந்­துள்­ளனர். மக்­களை ஏமாற்­றிய அர­சங்­கத்தை வீட்­டுக்கு அனுப்­ப­வேண்டும் என சூளு­ரைத்­துள்ள ஸ்ரீலங்கா மக்கள் கட்சி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் ஒன்­றி­ணைந்த எதி­ர­ணி­யினர் நடத்தும் பாத­யாத்­தி­ரைக்கும் பூரண ஆத­ர­வ­ளிப்­ப­தாக அறி­வித்­துள்­ளது. ஸ்ரீலங்கா மக்கள் கட்­சியின் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நேற்று திங்­கட்­கி­ழமை கொழும்பு கிராண்ட் ஒரி­யன்டல் ஹோட்­டலில் நடை­பெற்­றது. இந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் அக்­கட்­சியின் தலை­வரும் பொதுச்­செ­ய­லா­ள­ரு…

  3. நேற்றிரவு முதல் வீதியில் படுத்து ஆர்ப்பாட்டம் : புறக்கோட்டையில் கடும் வாகன நெரிசல் ஊனமுற்ற இராணுவத்தினர் சிலர் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன் நேற்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒல்கோட் வீதியில் நேற்றிரவும் வீதியில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு இன்று காலையும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் கொழும்பு கோட்டை பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியத்தினை கோரியே இவ்வார்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். http://www.virakesari.lk/article/9412

  4. கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் மூலம் எதிர்வரும் வாரங்களில் 16 திருவள்ளுவர் சிலைகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட உள்ளதாக த ஹிந்து செய்திவெளியிட்டுள்ளது. இந்த 16 திருவள்ளுவர் சிலைகளையும் வட மாகாணத்தில் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் சாவக்கச்சேரி ஆகிய பிரதேசங்களிலும், வடமேல் மாகாணத்தில் புத்தளத்திலும், மேல் மாகாணத்தில் கொழும்பிலும், மத்தியமாகாணத்தில் மாத்தளை, ஹட்டன் மற்றும் நாவலப்பிட்டியிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இடங்களில் நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சர்வதேச தமிழ் சங்கத்தினால் இலங்கைக்கு வழங்கியிருந்த திருவள்ளுவர் சிலைகளைப் பெற்றுக் கொள்ளும் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் கலந்துக…

  5. மீள்குடியேற்ற செயலணியை வட மாகாணசபை சீர்குலைக்க முயற்சி-அமைச்சர் ரிஷாத் குற்றச்சாட்டு மத்திய அரசு தற்போது முன்னெடுத்துள்ள மீள்குடியேற்றக் கட்டமைப்பைச் சீர்குலைப்பதற்கு வட மாகாண சபை முன்னிற்பது வேதனையானது. மீள்குடியேற்றச் செயலணியின் செயற்பாடுகளை முடக்கும் வகையிலான வடக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளை நாம் பொறுத்துக்கொண்டு, அதன் வாலாக இருக்கப் போவதில்லை என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் முறையாக ஒரு கட்டமைப்பின் கீழ் குடியேற்ற வேண்டும். வெளியேற்றப்பட்ட …

  6. வடக்கின் பொருளாதார மத்திய நிலையத்தை அநுராதபுரத்தில் அமைக்க முயற்சி? வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்திலா அல்லது ஓமந்தையிலா அமைப்பது என்பது குறித்த கருத்து வேறுபாட்டை பயன்படுத்தி அநுராதபுரம் மாவட்டத்தில் அதனை நிறுவும் முயற்சியில் மத்திய அரசாங்க த்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் உள்ளிட்ட பலர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்க ப்படுகிறது. இந்த நிலையில் வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்க தவறும் பட்சத்தில் மாங்குளத்தில் அமைக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதியளித்துள்ளார். வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம், வட மாகாண நிர்வாக க…

  7. யாழ்.பல்கலைக்கழக பாதுகாப்பிற்கு இராணுவம் நிறுத்தப்படாது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்ற நிலையில் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பிற்காக, இராணுவத்தினரை நிறுத்த வேண்டிய அவசியமில்லை என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் பிரதமரின் ஆலோசனைக்கு அமைய சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க, யாழ்ப்பாண பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். தெற்கின் சில தரப்ப…

  8. மீள்குடியேற்றச் செயலணியின் செயற்பாடுகளை முடக்கும் வகையிலான வடக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளை நாம் பொறுத்துக்கொண்டு, அதன் வாலாக இருக்கப் போவதில்லை என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் முறையாக ஒரு கட்டமைப்பின் கீழே குடியேற்ற வேண்டும். வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குயேற்றி அவர்களை நிம்மதியாக வாழ வைக்கவென உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணியின் செயற்பாடுகளை முடக்கும் வகையில் வடக்கு மாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. செயலணியின் நோக்கங்களை திரிவுபடுத்தி அதன் எதிர்கால நடவடிக்கைகளை கறுப்புக் கண்ணோடு பார்த்துவரும் வடக்கு மாகாண சபைய…

    • 1 reply
    • 293 views
  9. பல்கலைகழக மோதலுக்கு ஏழு மாணவர்களே காரணம் என்கிறது கோப்பாய் பொலிஸ் யாழ்.பல்கலைகழக மோதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் மோதல் சம்பவத்திற்கு ஏழு மாணவர்களே காரணம் என கண்டறிந்து உள்ளனராம். யாழ்.பல்கலைகழக விஞ்ஞான பீட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் தமிழ் - சிங்கள மாணவர்கள் இடையில் கடந்த 16ம் திகதி மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்று உள்ளது. குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். அதில் குறித்த மோதல் சம்பவத்திற்கு ஏழு மாணவர்களே காரணம் எனவும் அதில் நான்கு மாணவர்கள் சிங்கள மாணவர்கள் எனவும் , மூவர் தமிழ் மாணவர்கள் என கோப்பாய் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் கண்டறிந்து உள்…

  10. எமது நண்பனை சுன்னாக பொலிசார் அடித்தே கொன்றனர். சந்தேகநபர்கள் நீதிமன்றில் வாக்குமூலம் தமது நண்பரை " உனக்கு தனி நாடு தேவையா ? " என கேட்டே பொலிசார் அடித்துக் கொலை செய்து விட்டு , அந்த கொலையை தற்கொலையாக மாற்றி மரண சான்றிதழ் வழங்கியதாக மல்லாகம் நீதிமன்றில் சந்தேகநபர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளனர். மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் இன்றைய தினம் திருட்டுகுற்ற சாட்டு வழக்கு ஒன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் போது குற்ற சாட்டப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலை ஆகி தமது வாக்கு மூலங்களை இன்று திங்கட்கிழமை பதிவு செய்தனர். அதில் அவர்கள் குறிப்பிட்டதாவது , கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் திகதி நாம் வறிய நிலையில் உள்ள…

  11. வட மாகாணசபைக்கான புதிய கட்டடத்தை மாங்குளத்திற்கு மாற்றுவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் அடங்கிய குழு ஒன்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் விவசாய அமைச்சர் ஜங்கரநேசன் ஆகியோரை இன்று சந்தித்தனர். இந்த சத்திப்பு யாழ்ப்பாணம் – கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் காலை 9.30 க்கு இடம்பெற்றது. இதன்போதே வட மாகாணசபைக்கான புதிய கட்டடத்தை வவுனியா – மாங்குளத்திற்கு மாற்றுவது குறித்து ஆராயப்பட்டுள்ளது. சந்திப்பில் வவுனியா மாவட்ட விவசாய திணைக்கள அரச உத்தியோகஸ்தர்கள், விவசாய அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். …

  12. பாலியல் குற்றம் புரிபவர்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாம்! பாலியல் குற்றங்கள் ஆபத்தானவை, பாலியல் வன்புணர்வு புரிபவர்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாமென, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கல்விச் சமூகத்தினரிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார். யாழ் மாவட்டத்தில் மாணவர்கள் மீதான குற்றச்செயல்கள் குறித்து சட்ட ரீதியான நீதி கொள்கை விடயங்களை அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று, இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. அம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், கலந்துகொண்டு, சட்டம் பற்றி விளக்கமளிக்கும் போதே, இளஞ்செழியன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, யாரையும் குற்றம் காண்பதற்காக இந்த கலந்துரையாடல் நடைபெறவில்லை. அதி…

  13. அதிபர் தேர்தலில் தாம் மகிந்த ராஜபக்சவை மட்டும் தோற்கடிக்கவில்லை என்றும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா எதிர்கொண்ட குற்றச்சாட்டுகளையும் வெற்றிகரமாகத் தோற்கடித்ததாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. கேகாலையில் நேற்று நடந்த தர்மசிறி சேனநாயக்க நினைவு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “கடந்த ஆண்டு தொடக்கத்தில், அதிபர் தேர்தலை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச முன்கூட்டியே நடத்தியதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. அதில் ஒன்று, 2015 மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படவிருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையாகும். அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை மட்டும் நான் தோற்கடிக்கவில்லை. ஐ.நா மனித உரிம…

  14. சுன்னாக பொலிஸ் நிலையத்தினுள் சித்திரவதை அறை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தினுள் சித்திரவதை அறை ஒன்று உள்ளதாக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் சாட்சியம் அளித்துள்ளனர். மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கொன்றில் , திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் எனும் குற்ற சாட்டில் நான்கு சந்தேக நபர்கள் முன்னிலையாகி இருந்தனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தினுள் ஒரு பிரத்தியோக அறை ஒன்று உள்ளதாகவும் , அந்த அறைக்குள் கைது செய்யப்படுபவர்களை கொண்டு சென்று அவர்கள் மீது மின்சாரம் பாய்சுதல் , கால் பாதத்தில் ஆணி அடித்தல் குறட்டினால் நகங்களை புடுங்குதல் போன்ற சித்தரவதைக…

  15. மணி விழா காணும் பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தமும் தீர்க்கப்படாத இனப் பிரச்சினையும்! இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம், 1957 ஜூலை 26, 1957 அன்று கைச்சாத்திடப்பட்டது. இன்றோடு ஐம்பது வருடங்களை இந்த ஒப்பந்தம் கடந்து அறுபதாவது வருடமான, மணி விழாவைக் காணுகின்ற போதும் இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் எவையும் காணப்படாத நிலையே நீடிக்கிறது. மேற்குறிப்பிட்ட ஒப்பந்தங்களை அன்று நடைமுறைப்படுத்தியிருந்தால் தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களை கையில் எடுத்திருக்க மாட்டார்கள் என்றும்…

  16. வடக்கில் எப்போது குண்டு வெடிக்கும் என மஹிந்த ராஜபக்சவும் அவரது ஆதரவாளர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சோசலிச இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் சகோதரத்துவ தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துகொள்ளும் முகமாக 1983ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜூலை கலவரத்தினை ஏற்படுத்தினார். ஐக்கிய தேசியக் கட்சி, அபிவிருத்தி குழு யாழ்பாணத்தில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக யாழ். பொது நூலகத்தினை எரித்தது. இந்நிலையிலேயே, மீண்டும் ஆட்சி அதிகாரத்தினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கைப்பற்ற வேண்டும் என்பதற்கா…

  17. முழங்காவிலில் பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம் கிளி­நொச்சி மாவட்டம் முழங்­கா­விலில் பழங்­கள், மரக்­க­றிகள் பத­னிடும் நிலையம் நேற்று திறந்­து­ வைக்­கப்­பட்­டுள்­ளது. அவுஸ்­தி­ரே­லி­யாவின் இலங்­கைக்­கான உயர் ஸ்தானிகர் பிறைஸ் கட்­செ­சன், இந்­தியத் துணைத்­தூ­துவர் ஆ.நட­ரா­ஜன், வடக்கு கூட்­டு­றவு அமைச்சர் பொ.ஐங்­க­ர­நேசன் ஆகியோர் இணைந்து இதனைத் திறந்­து­வைத்­துள்­ளனர். போரின் கார­ண­மாக செயலற்­றி­ருந்த விநா­ய­க­புரம் விவ­சா­யிகள் கூட்­டு­றவுச் சங்கம் கடந்த ஆண்டில் இருந்து மீளவும் இயங்­கி­வ­ரு­கி­றது. இச் ­சங்­கத்தில் ஆண்­களும் பெண்­க­ளு­மாக 500 வரை­யான அங்­கத்­தவர்கள் உள்­ளனர். …

  18. ஈரானிடம் இருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு சிறிலங்கா தயாராக இருப்பதாக, சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். தெஹ்ரானில் நேற்று ஈரானிய எண்ணெய் வளத்துறை அமைச்சர் பிஜாம் நம்டார் சன்ஜெனேயுடன் நடத்திய பேச்சுக்களை அடுத்தே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஈரானும் சிறிலங்காவும், நெருக்கமான பழைய நண்பர்கள் என்றும், எண்ணெய் துறையில் இருநாடுகளும் நெருக்கமான ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்ளவிருப்பதாகவும் சிறிலங்கா அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த எண்ணெய் ஏற்றுமதி தடை நீக்கப்பட்டது சிறிலங்கா மக்களுக்கு நல்ல செய்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஈரான் அமைதி அணுசக்தி திட்டத்துக்கு இணங்கியதை அடுத்…

  19. பொகவந்தலாவ கொக்கஸ்வோல்ட் மேற்பிரிவு மற்றும் கெம்பியன் தோட்ட பகுதியில் தேயிலைத் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த எட்டுப் பெண் தொழிலாளர்களும் 13 பெண் தொழிலாளர்களும் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இன்று காலை 10.00 மணியளவிலேயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட 21 பேரில் 16 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதோடு, ஏனையவர்கள் தொடர்ந்தும் பொகவந்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/community/01/112102

  20. செலிங்கோ நிதி உத்தரவாத நிறுவனத்தில் மோசடி மேற்கொண்ட சந்தேகநபர்களின் 8 ஆவது நபரை ஏழு வருடங்களுக்கு பின்னர் இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த எட்டாவது சந்தேக நபர் இன்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போதே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். செலிங்கோ நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிடுபவர்களின் பணத்தை சிசிலிய கொத்தலாவலவுடன் இணைந்து மோசடி செய்த குற்றத்திற்கே இவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, குறித்த சந்தேகநபரை ரூபா 50 ஆயிரம் பெறுமதியான ரொக்க பிணையிலும், தலா 5 மில்லியன் பெறுமதியான சரீரப்பிணையிலும் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட…

  21. மாத்தறை – தெய்யந்தர பெல்பாமுள்ள பிரதேசத்தை சேர்ந்த எம்.எம்.ஜோசப் என்பவரின் வீட்டில் மீன் தொட்டியில் வளர்க்கும் செல்லபிராணியான அதிசய மீன் ஒன்று நீண்ட நேரம் தண்ணீருக்கு வெளியே வாழ்கிறது. தினந்தோரும் உணவு கொடுக்கும் போது, தான் பேசும் வார்த்தைகளை கேட்டு மீன் செயற்படுவதை அவதானிக்க முடிந்ததாகவும், அதன் பின் மீனை பிடிக்கும் போது நீண்ட நேரம் தனது கைகளில் துள்ளி விழாமல் இருந்ததாகவும் அதன் உரிமையாளர் குறிப்பிட்டார். தற்போது ஒரு நாள் முழுவதும் இந்த மீனினால் நீர் இல்லாமல் நிலத்தில் வாழ முடியுமென உரிமையாளர் கூறினார். தங்களுடன் கட்டிலின் தலையணையிலும் படுத்து இருப்பதாகவும் உணவாக மரவள்ளி இலை, வற்றாளை இலை, கங்குங் கீரை என்பவற்றை மீன் உட்கொள்வதாகவும் அவர் மேல…

  22. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கிய தலைவர்களுள் ஒருவரான கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மனுவை எதிர்வரும் ஒக்டோபர் 25ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=162241&category=TamilNews&language=tamil

  23. வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தம்-கனடா உண்மையான அமைதியைக் கொண்டுவர, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்துக்கு கனடா தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுக்குமென கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார். “கனேடிய தமிழர்களுடன் உலகெங்கும் உள்ள தமிழ்ச் சமூகம் நினைவுகூரும், 1983 கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வுகளில் கனடாவும் இணைந்து கொள்கிறது. தமிழர்களுக்கு எதிரான கலவரங்களின் போதும்,இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போதும் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் அதேவேளை, தமது குடும்ப உறவுகளையும், நண்பர்களையும் இழந்தவர்களுக்கு எமது அனுதாபத்தையும் தெரிவித்துக…

    • 1 reply
    • 236 views
  24. வடக்கு,கிழக்கை இணைக்கமாட்டோம்-அரசாங்கம் வடக்கு கிழக்கு இணைப்பு என்பது ஒருபோதும் சாத்தியமற்றது. நாம் அவ்வாறான எந்தவொரு முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும், மக்கள் விரும்பாத எதையும் எம்மால் கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அடுத்த வருட ஆரம்பத்தில் உத்தேச அரசியல் உத்தேச அரசியல் அமைப்பை நாடாளுமன்றத்தில் முன்வைப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய அரசியலமைப்பு நாட்டில் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும், அதிகாரப்கிர்வு சிக்கலை ஏற்படுத்தும், எனவும் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கு…

  25. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சிங்கள மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி : யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வசந்தி அரசரட்னம் தெரிவித்துள்ளார். தற்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் சிங்கள மாணவர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பல்கலைக்கழக கற்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள மாணவர்களை பல்கலைக்கழகம் திரும்புமாறு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகள் ஆரம்பமாக உள்ளதாகத் தெரிவித்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.