Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளானதாக கூறப்பட்ட பிரித்தானியர் நாடு திரும்பினார்: இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளானதாகக் கூறப்பட்ட பிரித்தானியர் நாடு திரும்பியுள்ளார். இலங்கை அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்த பிரித்தானியர் குற்றம் சுமத்தியிருந்தார். திருமணம் செய்த கொள்வதற்காக இலங்கை சென்றிருந்த போது துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆர்.ரேணுகரூபன் என்ற 36 வயதான நபரே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிவித்து தம்மை தாக்கி சிறையில் தடுத்து வைத்ததாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தாய் வீட்டில் வைத்து கடத்தப்பட்டதா…

  2. யாழ், புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை விசாரணைகளுக்கு சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் இடையூறு விளைவிப்பதாக குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த வழக்கு தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அறிக்கைக்கு அமைய மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு குறித்த பொலிஸ் அதிகாரி பல தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளதுடன்,அதன் அறிக்கைகளானது தற்போது சட்ட ஆலாசனைகளைப் பெறுவதற்காக சட்டமா திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த வழக்கை விசாரிப்பதற்கு, யாழ். மேல் நீதிமன்றத்தி…

    • 0 replies
    • 224 views
  3. ஜனாதிபதியின் மீது பிக்குக்கு கடுங்கோபம் வசந்த சந்திரபால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (10) விஜயம்செய்து, பல்வேறு வைபவங்களிலும் பங்கேற்றிருந்தார். அந்த வைபவங்களில் பங்கேற்றிருந்த வடக்கு-கிழக்குப் பிரதான தேரர், மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி வண. அம்பிட்டியே சுமனரத்ன தேரர், தன்னுடைய விஹாரைக்கு வருமாறு அழைப்புவிடுத்தார். எனினும், அங்கு வருவதற்கு தனக்கு நேரமில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துவிட்டார். இதனால், கோபங்கொண்ட தேரர், தன்னுடைய விஹாரையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரைக் கொண்டிருக்கின்ற நினைவுபடிகக்கல்லை, சிலசால் அடித்து நொறுக்கினார். - See more a…

    • 8 replies
    • 970 views
  4. இறுதி முடிவை நீங்களே எடுங்கள்.! வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமையவேண்டும் என்பது தொடர்பான இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிடத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா ஒப்படைத்துள்ளார். வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு உகந்ததாக கூறப்படும் ஓமந்தையில் காணப்படும் இரு இடங்களையும், தாண்டிக்குளத்திலுள்ள இடத்தையும் நேற்று முன்தினம் வவுனியாவுக்குச் சென்ற மாவை.சேனாதிராஜா நேரில் பார்வையிட்டிருந்தார். இந்நிலையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும் மாவை.சேனாதிராஜா எம்.பிக்கும் இடையிலான சந்திப்பு யா…

  5. இடியுடன் கூடிய மழைபெய்யும் காற்றின் வேகமும் அதிகரிக்கலாம் நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசி வருகின்றமையினால் வடமத்திய, மத்திய,மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் என அனர்த்த முகாமைத் துவ மத்திய நிலையத்தின் ஊடகப்பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். அதேநேரம் கடற்பரப்பில் நிலைகொள்ளும் காற்றின் வேகம் அதிகரித்துவருவதால் அதன் தாக்கத்தை தெற்கு, சப்ரகமுவ, மத்திய,வடமத்திய மாகாணங்கள் எதிர்கொள்ள நேரிடும் என்றும் வளிமண்டள வியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத் துள்ளது. எவ்வாறாயினும் காற்று கடற் பரப்பை அண்டிய பிரதேசங்களிலேயே அதிக வேகத்தில் வீசும் என்றும் அது தவிர்ந்த ஏனைய பிரதேசங்களுக்கு அதிக …

  6. கச்சதீவை இந்தியா ஒருபோதும் கோரமுடியாது கச்­ச­தீவை இந்­தியா மீண்டும் பெற வேண்­டு­மானால் இலங்­கைக்கு எதி­ராக போர் தொடுக்க வேண்டும். அதை­வி­டுத்து வேறு வழி­யில்லை எனத் தெரி­வித்­துள்ள தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார, தமிழ்­நாட்டு மக்­களின் உண்­மை­யான பிரச்­சி­னை­களை மூடி­ம­றைக்­கவே கச்­ச­தீவை மீட்போம் என்ற விட­யத்தை ஜெய­ல­லிதா முன்­வைக்­கின்றார் என்றும் அவர் குறிப்­பிட்டார். இது தொடர்­பாக டாக்டர் வசந்த பண்­டார மேலும் கூறு­கையில், 1976 ஆம் ஆண்டு இந்­திய பிர­த­ம­ரான இந்­தி­ரா­காந்­தியால் சட்­ட­ரீ­தி­யாக உடன்­ப­டிக்கை மூலம் அன்­றைய இலங்­கையின் பிர­த­ம­ரான ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்­க­விடம் கச்­ச­தீவு கைய­ளிக்…

  7. வடக்கு, கிழக்கு அபிவிருத்தி பின்னடைந்தமையில் 'எனக்கு சந்தேகம்' ஏ.எச்.ஏ.ஹூஸைன், எஸ்.எஸ்.எம்.நூர்தீன் வடக்கு, கிழக்கு உட்பட 9 மாகாணங்களுக்கும் சம அளவிலான அபிவிருத்திகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், அது குறித்த பரிசீலனைகள் மேற்கொள்ளப்படும். அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி அபிவிருத்தி நடவடிக்கைகள் பின்னடைந்தமைக்கு, காலநிலையே காரணமாக அமைந்திருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது. இது தொடர்பிலும் பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். 'அத்துடன், இந்த நாட்டிலே வாழ்கின்ற சிங்கள பௌத்தர்களுக்கும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களு…

  8. அனுராதபுரம் கெக்கிராவ பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் இருந்து 5 அடி நீளமான சுமார் 12 கிலோ கிராம் எடைகொண்ட விலாங்கு மீன் பிடிப்பட்டுள்ளது. திப்பட்டுவாவே பகுதியில் மகாவலி ஆற்றில் இந்த மீனை தான் நேற்று பிடித்ததாக கெகிராவ கொரசகல்ல பிரதேசத்தை சேர்ந்த் தினுஷ சம்பத் ஜயவர்தன என்பவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அளவு பெரிய விலாங்கு மீனை நான் என் வாழ்நாளில் பார்த்தில்லை. இவை எமது சுற்றாடலில் வாழும் அப்பாவி உயிரினங்கள். விலாங்கு மீன் நல்ல உடல் நிலையை கொண்டுள்ளதுடன் இதன் எடை சுமார் 12 கிலோ கிராமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை குளத்திலோ அல்லது ஆற்றிலேயே விட்டால் எவராது கொன்று சாப்பிட்டு விடுவார்…

  9. வடக்கு ஊடகவியலாளர்கள், ஜனாதிபதி, பிரதமருடன் ‘போடோ சூட்’ செய்யவா கொழும்பு வந்தார்கள்? வடக்கு ஊடகவியலாளர்களே மனோ கணேசனின் கேள்விக்கு உங்கள் பதில் என்ன? கடந்த காலத்தில் வடக்கு ஊடவியலாளர்களுக்காக போராடியவர்களை சந்திக்காமல் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் போட்டு சூட் செய்துகொள்ள மாத்திரமா வடக்கு ஊடகவியலாளர்கள் கொழும்பு வந்தார்கள் என்று அமைச்சர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு ஊடகவியலாளர்களின் கொழும்பு பயணம் தொடர்பில் முக நூலில் இட்ட பதிவொன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவு பின்வருமாறு, இந்த நொடியில் என் மனதில் - 09/07/16 வந்தார்கள்;கண்டார்கள்;போனார்கள், என்பதாக திடீரென வடக்கில் …

    • 3 replies
    • 355 views
  10. வவுனியா பொருளாதார மத்திய நிலையம் குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் குழப்பம் இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை நகர்ப்புறத்திலா அல்லது நகருக்கு வெளியிலா அமைப்பது என்பதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை இறுதி முடிவின்றி தொடர்கின்றது. வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அரசினால் வழங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை வவுனியா நகரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது. எனினும், அதனை அங்கு அமைக்க முடியாது என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒரு சாரரும், நகருக்கு வெளியில் ஓமந்தையிலேயே அதனை அமைக்க வே…

  11. “எனது வீட்டிற்குள் நுழையும்போது தாய் தந்தையின் அன்பான பராமரிப்பினையே நான் உணருகிறேன்…” மீண்டும் வீட்டிற்கு செல்லும் எதிர்பார்ப்புடன் இருக்கும் கேப்பாப்பிலவு வயோதிபர் ஒருவரே இவர். இந்த வருடம் மார்ச் மாதம் 24ஆம் திகதி கேப்பாப்பிலவு மக்களால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கடந்துபோயிருக்கும் இரு மாதங்களாக புதிய அரசாங்கம் காணிகளை விடுவிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தமது சொந்த ஊருக்குச் செல்ல இன்றும் காத்திருக்கின்றனர். மே மாதம் இடம்பெற்ற கோவில் திருவிழாவை முன்னிட்டு இராணுவம் பாதைகளை திறந்து விட கேப்பாப்பிலவு மக்களுக்கு தமது வீடுகளை கண்ணுக்கெட்டிய தூரத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து. “ஒவ்வொரு வருடமும் எமது காணிகளில் …

  12. வவுனியா பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பில் இழுபறி தொடரும் நிலையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மத்திய அமைச்சர் றிசாட் பக்கம் சார்ந்து செயற்படுவதாக பொதுமக்கள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். வடமாகாண விவசாயிகள், மக்கள், மக்கள் பிரதிநிதிகள் எனப் பலரும் ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதேபோல் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கமும் ஆரம்பத்தில் ஓமந்தையிலேயே அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் அமைச்சர் றிசாட் கோருவது போன்று தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்க வேண்டும் என அமைச்சர் சத்தியலிங்கம் விடாப்பிடியாக நிற்பதுடன் தனக்கு சார்பான அணி ஒன்ற…

    • 2 replies
    • 387 views
  13. புத்தளத்தில் 24 வயதான யுவதிக்கு அடையாளம் தெரியாத நபர் எடுத்த தவறுதலான தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து இருவரும் மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். இந்த தொடர்பு இவர்களுக்கு இடையில் காதலாக மாறியுள்ளது. நீண்டகாலமாக தொலைபேசியில் உரையாடி வந்த இவர்கள் வெளியில் சந்திப்பது என தீர்மானித்துள்ளனர். தொலைபேசி மூலம் அறிமுகமான இளைஞன், புத்தளத்தில் தான் ஒரு ஹொட்டலில் பணிப்புரிவதாக கூறி அந்த ஹொட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பல நாட்கள் இவர்கள் இந்த ஹொட்டலில் சந்தித்துள்ளனர். இவ்வாறு இவர்கள் தொடர்ந்தும் ஹொட்டலுக்கு சென்று வந்துள்ளனர். ஒரு நாள் குறித்த இளைஞன் யுவதிக்கு பானம் ஒன்றை அருந்த கொடுத்துள்ளார். அதனை பருகிய யுவதிக்கு உறக்கம் ஏற்பட்டுள்ளது. இ…

  14. யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஏழாம் கட்டைச் சந்திக்கு அருகாமையில் நேற்று இரவு 7.15 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். தனது வீட்டில் இருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையில் யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறைக்கு சென்று கொண்டிருந்த இ.போ.ச பேருந்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பேருந்தின் சக்கரங்களினுள் நசியுண்டதால் படுகாயமுற்றிருந்த இளைஞனை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் சிங்கைநகர் புலோலி தெற்கைச் சேர்ந்த 26 வயதுடைய மினிஸ்வரன் விஜிதரன் என்ற இளைஞர் என்றும் குறித்த நபர் வெளி…

  15. இலங்கையுடன் நட்பு வைத்திருப்பதால் இந்தியாவுடனான உறவு பாதிக்காது: சீன வெளியுறவுத் துறை அமைச்சர் உறுதி சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, கொழும்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை நேற்று சந்தித்துப் பேசினார். இலங்கையுடன் நெருங்கிய நட்பு வைத்திருப்பதால் பிற (இந்தியா) நாடுகளுடனான உறவு பாதிக்காது என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி நேற்று தெரிவித்தார். இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இம்மாத இறுதியில் சீனா செல்கிறார். இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி 3 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை நேற்று சந்தித்துப் பேசினார். பின்னர் வாங் யி செய்தியாளர்களிடம் கூறியதாவது…

  16. உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் உயர்மட்டப் பிரமுகர்கள் அடுத்தடுத்து சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதால் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது. மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்திருந்த சீன வெளிவிகார அமைச்சர் வாங் யி இன்று பீஜிங் திரும்பவுள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், மூன்று நாள் பயணமாக வரும் செவ்வாய்க்கிழமை கொழும்பு வரவுள்ளார். இவர் நாடு திரும்பியவுடன், ரஷ்ய வெளிவிவகார அமைச்சர், சேர்ஜி லாவ்ரோவ் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இவர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களுடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார். மேலும், புல்லர்ஸ் வீத…

  17. 13 ஆயிரம் இராணுவ வீரர்கள் சட்டபூர்வமாக நீக்கம் : பொதுமன்னிப்பு காலம் ஜூலை 12 ஆம் திகதியுடன் நிறைவு இராணுத்திலிருந்து தப்பிச் சென்ற 13 ஆயிரம் இராணுவ வீரர்கள் பொது மன்னிப்பின் கீழ் சட்டரீதியாக இராணுவ சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில், 12,298 இராணுவ சிப்பாய்களும் 755 கடற்படையினரும் 544 விமானப்படையினரும் உள்ளடங்குவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர சிறிசேன தெரிவித்தார். இதேவேளை குறித்த பொதுமன்னிப்பு காலம் எதிர்வரும் மாதம் 12 ஆம் திகதி வரை நடைமுறையில் இருப்பதுடன், முப்படைகளிலிருந்தும் சேவையிலிருந்து தப்பிச் சென்றுள்ள வீரர்கள் அதற்கு முன்னர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும…

  18. வடபகுதிக்கான பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா ஓமந்தைப் பகுதியில் அமைப்பதற்கு உடனடியாக காணியை கையளிக்க முடியுமென வடமாகாண காணி ஆணையாளர் தனக்கு தெரியப்படுத்தியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு 2010 ஆம் ஆண்டிலேயே மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது ஓமந்தையில் அந்தக் காணியை பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு கையகப்படுத்தவேண்டுமென்றால் அதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையின் (யு.டி.ஏ.) அனுமதிவேண்டுமென்று சிலர் கூறினர், இந்த நிலையம் விரைவில் அமைக்கப்படுவதை தட்டிக்கழிக்க முற்படுவது குறித்து முதலமைச்சரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுப…

    • 3 replies
    • 351 views
  19. பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்திய மீனவர்கள் தயார் இலங்கை அதிகாரிகளுடன் அவசர பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகவுள்ளதாக இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மாற்றுத் தீர்வு ஒன்று முன்வைக்கப்படுமாக இருந்தால் அது தொடர்பில் ஆலோசிக்க தாம் தயாராக உள்ளதாக தமிழ்நாடு மீனவர் சங்கத்தின் தலைவர் எஸ்.எமிரேட் தெரிவித்துள்ளார். மீனவர்களது பிரச்சினை, வாழ்வாதாரம் குறித்து இரண்டு நாட்டு அரசாங்கங்களும் புரிந்துணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதேவேளை, மீனவர்கள் பிரச்சினை குறித்து விரைவில் யுத்தமின்றிய தீர்வு எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை(07) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்க…

  20. அரசியல்வாதிகளதும், அரச அதிகாரிகளதும் அடாவடித்தனங்களின் இருப்பிடமாக மாறுகிறதா வடக்கு? சிரேஷ்ட உத்தியோகத்தரின் துன்புறுத்தலால் பணியை துறக்கும் பட்டதாரிப் பயிலுனர்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- முல்லைத்தீவு விவசாயத் திணைக்களத்தில் பணி புரியும்ப சிரேஷ்ட பெண் முகாமைத்துவ உத்தியோகத்தர் ஒருவரின் துன்புறுத்தல் காரணமாக பட்டதாரிப் பயிலுனர் ஒருவர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக இராஜினாமா கடிதத்தை மாகாண விவசாய திணைக்கள பணிப்பாளருக்கு கடிதம் கையளித்துள்ளார். குறித்த பெண் பட்டதாரிப் பயிலுனர் யாழ்ப்பாணத்திலிருந்து கடந்த ஜனவரி மாதம் பட்டதாரிப் பயிலுனராக நியமனம் செய்யப்பட்டு முல்லைத்தீவு விவசாயத் திணைக்கத்திற்குப்…

  21. சிறிலங்கா விமானப்படைக்கு பாகிஸ்தானிடம் இருந்து பத்து ஜே.எவ்-17 போர் விமானங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாக, விரைவில் முடிவெடுக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கொள்வனவு உடன்பாடு குறித்த பேரங்களைக் கையாள்வதற்காக, பிரிகேடியர் முகமட் பசீர் என்ற இராணுவ அதிகாரியை, பாகிஸ்தான் அரசாங்கம் கொழும்பில் தங்க வைத்துள்ளது. இந்த விமானக் கொள்வனவு உடன்பாட்டில் நிதி ஏற்பாடுகள் குறித்த விடயமும் உள்ளடங்கியிருப்பதாகவும், இந்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டதும், 2017ஆம் ஆண்டு ஜே.எவ்-17 போர் விமானங்கள் சிறிலங்கா விமானப்படைக்கு விநியோகிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கடந்த ஜனவரி மாதம், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் சிறிலங்…

  22. மூன்று முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக எதிர்வரும் வாரங்களில் உயர் நீதிமன்றில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட குற்ற விசாரணைகளில் மூன்று விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளன. இந்த விசாரணைகள் பூர்த்தியானதன் பின்னர் குறித்த மூவருக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. தற்போதைய நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், முன்னாள் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் எதிராக இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ள மூன்று பேரில…

  23. இலங்கையின் இரண்டாவது தென்னை முக்கோண வலயமாக யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு ஆகிய 3 மாவட்டங்களை பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திசாநாயக்க பிரகடனப்படுத்தியுள்ளார். நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சர் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அமைந்துள்ள கலாசார மண்டபத்தில் தென்னங்கன்றுகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். இதன்போது உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தம் முடிபுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த யுத்தத்தில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட் டார்கள். இதன்போது எனது தந்தையாரான காமினி திசாநாயக்கவும் கொல்லப்பட்டிருந்தார். இவ்வாறு பலர் உறவுகள் இல்லாமல் இப்போதும் உள்ளதனை நான் அ…

    • 2 replies
    • 451 views
  24.  விமான சேவை மட்டக்களப்பு விமான நிலையத்தில் உள்ளூர் விமானப் போக்குவரத்துச் சேவையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துவைத்தார். இந்நிலையில், 02 விமான சேவைகள் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கும் கொழும்புக்கும் இடையில் தினமும் நடைபெறும். விமான நிலையப் புனரமைப்பு மற்றும் உள்ளூர் விமான போக்குவரத்துச் சேவைக்காக 317 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பிரதியமை…

  25. பாடசாலைக்கு ஒழுங்காகச் செல்லாத 670 மாணவர்கள் கண்டுபிடிப்பு சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைக்கு ஒழுங்காகச் செல்லாத 670 மாணவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாமைக்கான காரணம் கண்டறியப்பட்டு அதற்கான மேலதிக நடவடிக்கைளை கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் மேற்கொண்டுள்ளார். கிராம அலுவலகர், வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர்கள் ஆகியவர்கள் மூலம் இந்தத் தகவல் திரட்டப்பட்டுள்ளது. இதில், முழுமையாக பாடசாலையைக் செல்லாத 21 சிறுவர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களில் 15 சிறுவர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிவானின் உத்தரவுக்கமைய சிறுவர் இல்லங்கள் மற்றும் அரச சான்றுகள் பெற்ற நன்னடத்தை பாடசாலைகளில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.