Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சி வர்த்தகச் சந்தை இயங்காதிருப்பது ஏன்? முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் கேள்வி:- “கிளிநொச்சி நகரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் வர்த்தகச் சந்தை இன்னும் இயங்காதிருப்பது ஏன்? சந்தைத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் முழுமைடைந்திருக்கின்ற போதும் அதனை இயங்க வைப்பதற்கு சம்மந்தப்பட்ட தரப்புகள் இன்னும் முயற்சி எடுக்கவில்லை. வடபகுதி விவசாயிகளின் நலன் கருதி பல லட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்தச் சந்தை பயனற்று மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. இந்தச் சந்தையைத் திறந்து இயங்க வைக்காத நிலையில் வவுனியாவில் புதிய வர்த்தக வளாகத்தை எந்தப் பகுதியில் அமைப்பது என்ற சர்ச்சை உருவாகியுள்ளது. இது வேடிக்கையானது“ என முன்னாள் பாராளுமன்ற உறு…

  2. தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எதுவும் செய்யப்படாது – சுவாமிநாதன் தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எதுவும் செய்யப்படாது என சிறைச்சாலைகள் புனரமைப்பு மற்றும் சமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களை பாதிக்கக் கூடிய எதனையும் அரசாங்கம் செய்யவில்லை எனவும், அனைத்து தமிழ் மக்களின் நலன்களையும் உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும், அவர் தெரிவித்துள்ளார். வடக்கு மக்களின் நலன்களை கருத்திற் கொண்டே திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அவர், தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்படவில்லை என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/…

  3. அனைவரது குரல்களுக்கும் செவிசாய்ப்பேன்: ஜனாதிபதி இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகள் நடந்துகொண்டதைப் போல நடந்துகொள்ளத் தான் தயாரில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, தான் ஜனநாயகத்தையும் ஒற்றுமையையும் மதிக்கும் அனைவரதும் குரல்களுக்கு செவிசாய்க்கும் ஒரு ஜனாதிபதி எனக் குறிப்பிட்டார். தற்போதுள்ள ஜனாதிபதி, பிரதமருக்குக் கட்டுப்பட்டவரென முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, தான் இந்நாட்டின் பொதுமக்களுக்கு மாத்திரமே கட்டுப்படுவதாகத் தெரிவித்தார். அப்போதிருந்த ஏகாதிபத்திய ஆட்சி மக்களினால் நிராகரிக்கப்பட்டதன் காரணமாகவே தான் இந்நாட்டு ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்டதாகக் கூறிய ஜனாதிபதி, அனைவரது குரல்களுக்கும் தான் செவி…

  4. லசந்த கொலையுடன் தொடர்புடைய முக்கியநபர் சிரேஷ்ட ஊடகவியலாளரும் சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான லசந்த விக்ரமதுங்கவின் கொலை சம்பந்தமாக முக்கிய சந்தேக நபர் ஒருவர் அடுத்த வாரம் கைதுசெய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்தேக நபர் இராணுவ புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய நபர் என்பதுடன் கொலைக்கு கட்டளையிட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர் எனவும் கூறப்படுகிறது. லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்ய மூன்று இராணுவ புலனாய்வுப் பிரிவின் அணிகள் தனித்தனியாக ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக தகவல் கிடைத்துள்ளது என குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கல்கிஸை நீதவான் முன்னிலையில் தெரிவித்திருந்தனர். …

  5. மத்திய வங்கியின் புதிய ஆளுநர் ஜனாதிபதியுடன் சந்திப்பு இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் வைத்தே ஜனாதிபதியை டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி சந்தித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகபிரிவு தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/8425

    • 3 replies
    • 256 views
  6. கடல்சார் பாதுகாப்பு ஆற்றலை முன்னேற்றும் திட்டத்தின் கீழ், சிறிலங்காவுக்கு 2.4 பில்லியன் ரூபாவை ஜப்பான் கொடையாக வழங்கியுள்ளது. சிறிலங்கா கடலோரக் காவல்படையின் கடல்பாதுகாப்பு ஆற்றலை முன்னேற்றும் நோக்கில் ஜப்பான் இந்த உதவியை வழங்கியுள்ளது. இதன் மூலம், கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, கடற்கொள்ளை முறியடிப்பு, கடல்கடந்த குற்றங்களை தடுத்தல், கடல்வளங்கள் அழிக்கப்படுவதை தடுத்தல் போன்றவற்றில் ஈடுபடுவதற்கு, சிறிலங்கா கடலோரக்காவல்படைக்கு இரண்டு ரோந்துக் கப்பல்கள் வாங்கப்படவுள்ளன. இந்த இரண்டு ரோந்துக் கப்பல்களும் 30 எம் ரகத்தைச் சேர்ந்தவையாகும். ஜப்பானில் கட்டப்படும் இந்தக் கப்பல்கள் சிறிலங்காவிடம் ஒப்படைக்கப்படும். அத்துடன் சிறிலங்கா கடலோரக் காவல்படையினர…

    • 4 replies
    • 364 views
  7. மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட இந்திரஜித் குமாரசுவாமிக்கு கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்தை தினேஸ் குணவர்தன தனது டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை உடனடியாக பதவி விலகுமாறு கூட்டு எதிர்க்கட்சியே அழுத்தம் கொடுத்தது. இந்திரஜித் குமாரசுவாமி தனது பதவியை திங்கட்கிழமை பொறுப்பேற்பார் என்று ஜனாதிபதி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. புதிய மத்திய வங்கி ஆளுநரை வாழ்த்திய கூட்டு எதிர்க்கட்சியின் முதல் உறுப்பினர் தினேஸ் குணவர்தன என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/politics/01/109706

    • 0 replies
    • 234 views
  8. திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒன்பது வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் நேற்று உத்தரவிட்டார். மூதூர், பாட்டாளிபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதோடு மனைவியோடு ஏற்பட்ட தகராறு காரணமாகவே சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்தேக நபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உறவுக்காரர் எனவும், சிறுமியின் தாய் தந்தை காட்டுக்கு விறகு எடுக்கச் சென்ற நிலையிலே சந்தேக நபர் சிறுமியை துஷ்பிரயோ…

  9. கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. மத்திய வங்கியின் பிணைமுறி விற்பனையில் நடைபெற்றுள்ள மோசடிகள் குறித்து பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு (கோப்) கணக்காய்வாளர் நாயகம் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளார். இந்த அறிக்கை ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் மட்டும் தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும் தமிழ் மொழிபெயர்ப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முறையிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். மேலும் அறிக்கையின் தமிழ்ப் பிரதிகளை தயாரிப்பதில் காட்டிய அசிரத்தை குறித்து கணக்காய்வாளர் நாயகத்துக்கும் தமது கண்டனங்களைத் த…

  10. தாமதம் குறித்து ஆராய்கிறோம் : கூட்டமைப்பு தெரிவிப்பு ; செய்ட் அல் ஹுசேனின் அறிக்கையையும் வரவேற்பு (ஆர்.ராம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் சமர்ப்பித்த இலங்கை குறித்த வாய்மூல அறிக்கையை வரவேற்கின்றோம். அதேவேளை முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பதில் வெளிக்காட்டப்படும் தாமதம் குறித்தும் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம் என்று பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நிலையான சமாதானமும் கிட்டக்கூடிய வகையில் நீதியினை நிலைநாட்டுவதற்கு ஏற்ற வகையில் போதிய அரசியலமைப்பு ஏற்பாடுகளின் ஊடாக தேசியப் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றினை முன்வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ள கூட்…

  11. பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கம் விலகாதிருக்க காத்திரமான நடவடிக்கை தேவை

  12. திருகோணமலை, கிளிவெட்டி – குமாரபுரம் பகுதியில் 1996ம் ஆண்டில் 26 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், மேலும் இருவர் இன்று சாட்சியமளித்துள்ளனர். ஜூரிகள் முன்னிலையில் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இந்த படுகொலை வழக்கு விசாரணைகள் ஐந்தாவது நாளாகவும் இன்று நடைபெற்றது. ஜூரிகள் முன்னிலையில் இன்று ஆஜரான இருவரி்ல் ஒருவர் தனது மகன் மற்றும் மகளின் கொலையை நேரடியாகப் பார்வையுற்ற சாட்சியாளராகவும், மற்றையவர் தனது குடும்பத்தினர் ஏழு பேரை இரத்த வௌ்ளத்தில் பார்த்த சாட்சியாகவும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளனர். இதன்போது இன்றைய முதலாவது சாட்சியாக சாட்சியமளித்துக் கொண்டிருந்த பெண் தன் பிள்ளைகளின் படுகொலைகள் தொடர்பில் விபரிக்கும் போத…

    • 2 replies
    • 456 views
  13. என்னுடைய கணவரை இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றேன் : ஜெனிவாவில் அனந்தி சசிதரன் உருக்கம் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) யுத்தத்தின்போது 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்காலில் எனது இரண்டு பிள்ளைகளுடன் உயிர் பிழைத்த நான் இன்னும் எனது கணவரை தேடிக்கொண்டிருக்கின்றேன் என்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இன்று நடைபெற்ற இலங்கை தொடர்பான உப குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேலயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 2009 ஆம் ஆண்டு யுத்தத்தின்போது நான் முள்ளிவாய்காலில் எனது இரண்டு பிள்ளைகளுடன் உயிர் பிழைத்தேன். நான் இன்னும் இலங்கை இராணுவத்தினால் ப…

  14. கொழும்பு கறுவாத்தோட்டம் கேம்பிரிஜ் டெரஸ் பிரதேசத்தில் உள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த கொள்ளையில் ஈடுபட்ட நபர் எனக் கூறப்படும் வெலிபென்னே கே. பிரியந்த பெரேரா என்ற இந்த நபரை எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று உத்தரவிட்டுள்ளார். கொள்ளையிட்டதாக கூறப்படும் தங்க ஆபரண்ஙகளின் ஒரு தொகையை சந்தேக நபர் பேருவளை தர்கா நகரில் உள்ள ஒருவருக்கு விற்றுள்ளதுடன் அவர் அதனை உருக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சந்தேக நபர் கறுவாத்தோட்ட பிரதேசத்தில் உள்ள 5 பங்களாக்களி…

    • 2 replies
    • 510 views
  15.  காணமல்போனோருக்கான பணியகம் காலத்தை கடத்தும் ஒரு நடவடிக்கை ஸ்ரீ லங்கா அரசாங்கத்தினால் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காணமல்போனோருக்கான பணியகம், பரணகம ஆணைக்குழு போன்று சாட்சியங்களை மாத்திரம் பதியும் ஒன்றாகவே காணப்படும். இதனால் எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பனர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். முல்லைத்தீவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பிரதிநிதிகளுடன் நேற்று வெள்ளிக்கிழமை காணாமல்போனோருடைய உறவுகள் நடாத்திய கலந்துரையாடலில் கலந்துகொண்டு விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் கடந்துவிட்டபோது,…

  16. 07/01/2016 இனியொரு... LEAVE A COMMENT வடக்கு மாகாண முதல்வர் சீ.வீ.விக்னேஸ்வரன் ஆட்சிக்கு வரும் போதே ‘புலிகளின் ஆட்சி காலத்தில் ஜனநாயகம் இல்லை, இப்போது ஜனநாயகம் கிடைத்திருக்கிறது. அதனாலேயே அரசியலுக்கு வருகிறேன்’ என அதரெண ஊடகத்திற்கு நேர்காணல் ஒன்றை வழங்கினார். இன்றோ நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. விக்னேஸ்வரனின் பின்னால் புலம்பெயர் புலி ஆதரவாளர்களில் பலர் அணிவகுத்துள்ளனர். இலங்கை அரசின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக விக்னேஸ்வரன் பதவி வகித்த வேளையில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கி சிறைக்குள் அடைத்தார். இன்று நிலைமை வேறு, தமிழ் மக்களின் உரிமைக்காக விக்னேஸ்வரன் பேசுவதான தோற்றப்பாட்டை ஏற்படுத்துகிறார்கள். யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரனின…

  17. கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா துறையில் மிகவும் பிரபல்யமான கல்குடா, பாசிக்குடா பகுதியில் உள்ள மீனவர்களின் வாடி அமைக்கப்பட்டுள்ள இடங்களை அரசாங்கம் சுற்றுலாத் துறைக்காக அபகரிக்க முயற்சி செய்வதாக அங்குள்ள மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர் . இது தொடர்பாக பாதிக்கப்படவுள்ள மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடந்த ஆட்சியாளர் காலங்களில் இருந்து சுற்றுலாத் துறைக்காக தங்களது தொழில் செய்வதற்கு உகந்ததாக இருந்த கடல் வள காணிகளை அபகரித்து இறுதியாக ஒரு ஒதுக்குப் புறமான இடத்திற்குச் செல்லுமாறு கூறப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் தங்களது கடல் வள காணிகளை விட்டு ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்களது தொழில் நடவடிக்கையை மேற்கொண்டு வந்துள்ளனர் . தற்போது மிகுதியாக உள்ள இந்த இடத்தையும் விடுவிக்…

    • 0 replies
    • 193 views
  18. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராட் அல் ஹூசைன் சாட்சியங்களை முன்வைக்காது இலங்கைக்கு எதிராக போர் குற்றங்களை முன்வைத்துள்ளார் என தெரிய வந்திருப்பதாக சிங்கள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் ராதா சோனியா, இம்ரான் பாண்டியன் ஆகிய படைப் பிரிவுகளில் இருந்த புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் வழங்கிய பொய் தகவல்களின் அடிப்படையிலேயே மனித உரிமை ஆணையாளர் இந்த பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக ஜெனிவா மனித உரிமை பேரவையின் தகவல்கள் தெரிவிப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. தமக்கு தகவல்களை வழங்கிய சாட்சியாளர்கள் யார் என்பதை வெளியிட மனித உரிமை ஆணையாளர் தடைவிதித்துள்ளார். சாட்சியாளர்களை மறைத்து இலங்கை அரசின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவது சட்டவிரோதம…

    • 0 replies
    • 207 views
  19. காலி கடலில் தப்பியோடிய கப்பலை ; கடற்படை படகுகளால் சுற்றிவளைப்பு காலி கடற் பரப்பில் சந்தேகப்படும் வகையில் போக்குவரத்தில் ஈடுப்பட்டிருந்த கப்பலொன்றை நேற்று இரவு சுற்றிவளைத்து பிடித்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த கப்பலில் இருந்த 27 பேரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு துறைமுகத்தில் கப்பல்கள் நங்குரமிடும் பகுதியில் குறித்த கப்பலில் வந்தவர்களிடம் சுங்க திணைக்கள அதிகாரிகள் அடையாள சோதனை செய்ய முற்பட்டவேளையில் அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்நிலையில் குறித்த கப்பலை பிடிக்க இலங்கை சுங்கத்திணைக்கள அதிகாரிகள் கடற்படையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து, கடற்படையினர் இர…

    • 3 replies
    • 352 views
  20. வலிகாமம் வடக்கில் 273 குடும்பங்களுக்கு தலா இரண்டு பரப்பு வீதம் இன்று அரசகாணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு ஜே.254 கிராம சேவகர் பிரிவிலுள்ள அன்ரனிபுரம் பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகள் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதனால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. பலாலி வடக்கு அன்ரனிபுரத்தைச் சேர்ந்த 144 குடும்பங்களுக்கும், பலாலி வடக்கில் மீள்குடியமர்வுக்குப் பதிவுசெய்த காணியற்ற 129 குடும்பங்களுக்கும் தலா 2 பரப்புக்காணி வீதம் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு ஜே. 254 பகுதியிலுள்ள அன்ரனிபுரம…

  21. வடக்கில் பொருளாதார மையத்தை அமைப்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் முகமாக அவசரமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தை நாளை ஞாயிற்றுக்கிழமை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூட்டுகிறார். கொழும்பில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது. வடக்கில் பொருளாதார மையத்தை எங்கே அமைப்பது என்பது தொடர்பில் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து எல்லோரும் ஒருமித்த தீர்மானத்துடன் முடிவொன்றை எட்டுவதற்கு சம்பந்தன் இக் கூட்டத்தை கூட்டியுள்ளதாக கூட்டமைப்பு …

    • 0 replies
    • 332 views
  22. இராணுவத்தில் இருந்து சட்ட ரீதியாக விலகிக்கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்பு காலத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் தாமாக முன்வந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் சட்டரீதியாக விலகிக்கொள்வதற்காக பொதுமன்னிப்புக் காலம் கடந்த மாதம் 12ம் திகதி முதல் இம்மாதம் 12ம் திகதி வரை பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி நேற்று வரை இராணுவத்தில் இருந்து தப்பியோடிய, சுமார் 10,417 பேர் தாமாக முன்வந்து சட்டரீதியாக இராணுவத்தில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இராணுவத்திலிருந்து தப்பியோடிய மேலும் 15 ஆயிரம் பேர் மறைந்து வாழ்வதாக இராணுவத் தலைமையகத் தகவல்கள் …

  23. நாட்டில் தற்போது றம்புட்டான் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் அனைத்து பாகங்களிலும் அதன் விற்பனையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தலைநகர் கொழும்பின் பெரும்பாலான இடங்களில் றம்புட்டான் பழ விற்பனை சூடுபிடித்துள்ளதனை காணக்கூடியதாய் உள்ளது. குறிப்பாக றம்புட்டான் பழத்தின் பிரதான உற்பத்தி இடமான மல்வானையில் இருந்து அதிகளவான றம்புட்டான் பழங்கள் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு தலைநகரில் குவிந்து கிடக்கும் றம்புட்டான் பழங்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை முண்டியடித்துக் கொண்டு வாங்குவதனை அவதானிக்க முடிகின்றது. Go to Videos தலைநகரில் களைகட்டும் ரம்பு…

    • 5 replies
    • 2.7k views
  24. திருகோணமலை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் 1983ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு படையினரால் சிறிய பாதுகாப்பு சோதனைமுகாமாக பயன்படுத்தப்பட்டு வந்த இடங்களில் இருந்து படையினர் அகன்றுள்ளனர். குச்சவெளி பிரதேசத்தில் புல்மோட்டை பிரதான வீதியிலுள்ள சாம்பல்தீவு, முச்சந்தி, நிலாவெளி மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் தனியார் காணிகளிலும் பொது இடங்களிலும் பரிசோதனை கூடங்களை அமைத்து பாதுகாப்பை பலப்படுத்தி வந்தார்காள். தற்போது குறித்த சோதனை முகாம்கள் இருந்த இடங்களின் காணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த இடங்களிலிருந்து படையினர் அகன்று பழைய சோதனை முகாம்கள் வெறிச்சோடிக் காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். பாதுகாப்பு முகாம்கள் அகற்றப்பட்டதால் பிரதேச மக்கள் அ…

  25. இலங்கையில் மது பாவனையில் முதலிடத்தில் யாழ் மாவட்டம். இலங்கையில் மது பாவனையில்,யாழ்ப்பாண மாவட்டம்முதலாவது இடத்திலும் நுவரெலியா மாவட்டம் இரண்டாவது இடத்திலும் மூன்றாவது இடத்தில் மட்டக்களப்பு மாவட்டமும் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டு மக்களின் எதிர்காலம் நலன் கருதி ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகளின் ஏற்பாட்டில் ‘மதுவுக்கு முற்றுப்புள்ளி’ என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நுவரெலியா சினிசிட்டா மண்ட…

    • 11 replies
    • 2.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.