ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
கடுவெல பிரதேசத்தில் 13 வயது சிறுமியை துஸ்பிரயோப்படுத்திய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது, கடுவெல பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரைக்கருகில் குறித்த சிறுமியின் வீடு அமைந்துள்ளதாகவும், சில தினங்களாக குறித்த வீட்டின் மீது கல் எறி சம்பவம் இடம்பெற்றதை அடுத்து பிரதேசவாசிகள் அருகில் உள்ள விகாரையின் பிக்குவிடம் இதுதொடர்பில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த வீட்டிற்கு திருஸ்டி ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான பரிகார பூஜைகளை செய்ய வேண்டும் எனவும் பிக்கு குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த வீட்டிலிருந்த சிறுமியை தனியே அழைத்துச் சென்று பாலியல்துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்…
-
- 5 replies
- 786 views
-
-
கூட்டு எதிர்க்கட்சியல்ல புதிய தேசிய சக்தி-மகிந்த கூட்டு எதிர்க்கட்சி அமைக்கவுள்ளது புதிய கட்சியல்ல எனவும் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராகவுள்ள அனைத்து சக்திகளையும் இணைக்கும் ஒரு புதிய தேசிய சக்தி எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த புதிய அணி உருவாக்குவது தொடர்பில் நேற்று மாலை கூட்டு எதிர்க்கட்சியுடன் கலந்துரையாடியதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். அதிகரித்த வற் வரி, அரச சொத்துக்களை விற்பனை செய்தல் போன்றவற்றுக்கு எதிராக அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் பழிவாங்கப்படுகினறனர். இவ்வாறான அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு இந்த புதிய சக…
-
- 0 replies
- 304 views
-
-
புனர்வாழ்வு பெற்ற ஐந்து பேர் இன்று விடுதலை -க.அகரன் வவுனியா புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்று வந்த ஐந்து முன்னாள் போராளிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். இந்நிகழ்வு, வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம் பணிப்பாளர் கேணல் எம்.ஏ.ஆர்.கமிடோன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அதிதியாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஆர்.எம்.ஜெ.ஏ.ரத்நாயக்கா கலந்துகொண்டார். இதன்போது, வவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற பயிலுனர்கள் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து, 25 பயிலுனர்களுக்கு தச்சுத் தொழிலுக்கான உபகரணங்கள் புனர்வாழ்வு ஆணையாளரால் வழங்கி வைக்கப்பட்டன. விசேடமாக …
-
- 1 reply
- 320 views
-
-
யாழ்.இந்துக்கல்லூரி பழைய மாணவர்களினால் உருவாக்கப்பட்டுள்ள இந்துஒளி கணித பாட இலகு கையேட்டின் அறிமுக நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. எமது எதிர்கால சந்ததியின் கல்விக்கு கைகொடுப்போம் என்னும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். ஆசிய மன்றத்தின் சிரேஸ்ட ஆலோசகர் ஏ.சுபாகரன் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார். மட்டக்களப்பு மாவட்டத்தில் கணித பாடத்தின் சித்தி வீதத்தினை அதிகரிக்கும் விசேட செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக இந்த கையேடு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட…
-
- 0 replies
- 365 views
-
-
எதிர்க்கட்சித்தலைவருக்கு விரைவில் புதிய வீடுகள் -அரசாங்கம். எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கு விரைவில் புதிய வீடுகள் அமைத்து தருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார். தொடர்ந்து அவர்ர கருத்து தெரிவிக்கையில், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் வயதில் மூத்தவர், இவருக்கு மாடிப் படிகள் ஏறி இறங்குவதற்கு பெரும் சிரமம் என்பதால், கீழ் வீடு ஒன்றை நிர்மாணிக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், இவர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முக்கிய பதவியில் இருப்பதால் இவருக்கான பாதுகாப…
-
- 0 replies
- 258 views
-
-
யோசித மீது வழக்கு தொடரப்படும் - கடற்படை தற்போது யோசித ராஜபக்ஸ மீது நடாத்தப்படும் ஊழல் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்த பின்னர் கடற்படை சட்டத்தின் பிரகாரம் யோசித மீது வழக்கு தொடரப்படும் என கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்கரம் அலவி இன்று தெரிவித்தார். வெளிநாட்டில் உள்ள தமது உறவினர்களைப் பார்வையிட கே.சி.வெலகெதர அனுமதியின்றி ஒருதடவை வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதற்கு கடற்படை சட்டத்தின்படி இவரது பதவியிலிருந்து குறைந்த மட்டத்திற்கு பதவிக்கு மாற்றப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அனுமதியின்றி 25 தடவைகள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட யோசிதவை கடற்படை தண்டிக்காதமைக்கான காரணம் என்ன? என்று இதன்போது ஊடகவிய…
-
- 0 replies
- 347 views
-
-
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய போவதாக சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அந்த ஒன்றியம் கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட மருத்துவர் வசந்த பண்டார, ஐ நா மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய இலங்கை அரசாங்கம் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் மங்கள சமரவீரவின் செயற்பாடுகள் காரணமாக அமைந்துள்ளன. இதனடிப்படையில் இந்த தேசதுரோக அறிக்கையை தயாரிக்க மங்கள சமரவீர உதவியுள்ளார் என வசந்த பண்டார குறிப்பிட்டுள்ளார். இராணுவத்திடம் சரணடைந்த பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்…
-
- 0 replies
- 609 views
-
-
சமஷ்டி நிர்வாகம் உருவானால் ஈழம் உருவாகும் என்று எல்லே குணவன்ச தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு பொது நூலகத்தில் சமஷ்டி நல்லிணக்கம் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும்போதே எல்லே குணவன்ச தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.தேரர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்- பஞ்சமகா சக்திகளின் ஒன்றிணைந்த கட்சியாக திகழ்ந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தற்போது இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ரொஸ்மிட் பிளேஸ், வோர்ட் பிளேஸ் போன்ற சக்திகளின் கைக்கூலியாக மாறிவிட்டது. இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் தேர்தல் நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் எனக்கு கிடைத்தது. அதிலுள்ள விடயங்களின் அ…
-
- 2 replies
- 588 views
-
-
இலங்கை தமிழர் விடயத்தில் நேரடியாக தலையிடாது இந்தியா இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியா நேரடியாகத் தலையிடப் போவதில்லை. கடந்த 30 வருட கால அனுபவத்தில் நாம் கற்றுக்கொண்ட பாடம் அதிகமாகும் என இந்தியாவின் பாதுகாப்பு கற்கைகள் மற்றும் ஆய்வுக்கான நிபுணர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் தெரிவித்தனர். இலங்கையின் உள்ளக விடயத்தில் மாத்திரமின்றி புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திலும் நேரடியாக இந்தியா தலையிடாது எனவும் அந்த நிபுணர்கள் குறிப்பிட்டனர். இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சென்றுள்ள ஊடகவியலாளர் குழுவை நேற்று (திங்கட்கிழமை) புதுடெல்லியில் அமைந்துள்ள பாதுகாப்பு கற்கைகள் மற்றும் ஆய்வுக்கான மையத்துள் சந்த…
-
- 12 replies
- 821 views
-
-
யாழில் இராணுவத்தின் புதிய கண்டுபிடிப்பு கண்காட்சி யாழ் பாதுகாப்பு படைத் தலைமயகத்தின் ஏற்பாட்டில் புதிய கண்டுபிடிப்பு கண்காட்சி இன்று (29) காலை 9 மணிக்கு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது . பனங்காட்டில் புத்தி கூர்மை எனும் தொனிப்பொருளில் நடைபெறும் இப் ´புதிய கண்டுபிடிப்பு கண்காட்சி´ இன்றும் நாளையும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சி கூடத்தினை யாழ்.பாதுகாப்பு படைத்தளபதி மகேஷ் சேனநாயக்க மற்றும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோர் திறந்து வைத்ததுடன், காட்சிப்படுத்தப்பட்ட இலத்திரனியல் கண்டுபிடிப்புக்களையும் பார்வையிட்டனர். பாடசாலை மாணவர்களுக்கு பயன்பட…
-
- 3 replies
- 824 views
- 1 follower
-
-
இலங்கையின் இறையாண்மையை தாரை வார்த்துவிட்டது அரசு-தினேஸ் எம்.பி ‘ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும் மேற்கத்தைய நாடுகளிற்கும் இலங்கையின் இறையாண்மையையும் சுயாதீனத்தையும் அரசாங்கம் தாரைவார்த்துவிட்டது. இன்றைய ‘அரசுக்கு’ சொந்தக் காலில் நிற்பதற்கு திராணியில்லை என மஹிந்த ஆதரவு அணியான கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டதொடரில் இலங்கை தொடர்பிலான வாய்மூல அறிக்கை நாளை(புதன்கிழமை) வெளியிடப்படவுள்ளமை தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொட…
-
- 5 replies
- 544 views
-
-
25 வருடகால தடை நீங்கியது : காங்கேசன்துறை வீதி இன்றுமுதல் பாவனைக்கு! சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரின் உயர்கட்டுப்பாட்டு வலயத்திற்கு உட்பட்டு காணப்பட்ட வலி வடக்கு பிரதேசத்தின் ஒரு தொகுதி காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டதையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காங்கேசன்துறை புகையிரத நிலைய வீதி மக்கள் பாவனைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. குறித்த வீதியில் இதுவரை காலமும் காணப்பட்ட இராணுவத்தினரின் வீதித் தடைகள் முற்றாக அகற்றப்பட்டு, மக்கள் போக்குவரத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று காலை 9 மணிமுதல் குறித்த வீதியில் பேரூந்துகள் தமது சேவையை ஆரம்பித்துள்ளன. இதுவரை காலமும் மாவிட்டபுரத்திலிருந்…
-
- 25 replies
- 1.2k views
-
-
இருப்போர் இல்லாதோரின் இடர்களைக் களைய முன் வாருங்கள் வெளிநாட்டில் வாழ்பவர்கள் வெறும் ஆடம்பரச் செலவுகளுக்கு இடங் கொடுக்கக் கூடாது. இல்லாதோரின் இடர்களைக் களைய முன்வரவேண்டும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் "மணிமேகலை உணவுக்கூடம்" இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , எம் தமிழ் மக்களிடையே கொடுக்கும்…
-
- 5 replies
- 735 views
-
-
மத்திய வங்கிக்கு புதிய ஆளுநர் மத்திய வங்கிக்கு புதிய ஆளுநரை இன்னும் சில மணிநேரத்தில் நியமிக்கவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பதுளையில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மத்திய வங்கியின் ஆளுநரான அர்ஜுன் மகேந்திரனின் பதவிக்காலம், நாளை 30ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். - See more at: http://www.tamilmirror.lk/175823/மத-த-ய-வங-க-க-க-ப-த-ய-ஆள-நர-#sthash.pVuHaSbn.dpuf
-
- 3 replies
- 514 views
-
-
முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு வழங்கப்பட்ட அரசாங்க கட்டிடம் ஒன்றை மட்டக்களப்பு அரசாங்க அதிபர் இன்னும் மீளப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வின்சன்ட் பாடசாலைக்கு அருகாமையில் அமைந்திருக்கும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான அரச உத்தியோகத்தர்களின் தங்குமிட விடுதியே இவ்வாறு மீளப்பெறப்படவில்லை என தெரியவந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தனது தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்தி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான விடுதி ஒன்றை கைப்பற்றியிருந்தார். …
-
- 0 replies
- 303 views
-
-
'3 ஏக்கரை விடுவித்தால் பிரச்சினைக்கு தீர்வு' -எஸ்.ஜெகநாதன், எம்.றொசாந்த் 'அச்சுவேலி – அராலி வீதியை திறப்பதற்கு, இராணுவத்தினர் இன்னமும் 3 ஏக்கர் காணியை விடுவித்தால் போதுமானதாக இருக்கும், இந்த நிலையில், எங்களுடைய காணிகளை ஊடறுத்து அமைக்கப்பட்டுள்ள புதிய வீதி எங்களுக்கு வேண்டாம்' என குரும்பசிட்டி மக்கள் கூறியுள்ளனர். வலிகாமம் வடக்கில் கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த 201.3 ஏக்கர் காணியை, கடந்த சனிக்கிழமை (25) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூகுரே ஆகியோர், உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயல…
-
- 15 replies
- 744 views
-
-
மஹிந்த ராஜபக்ஸவை தோற்கடிப்பதற்காக உதவி செய்ததற்காக இந்தியாவிற்கு நன்றிக்கடன் செலுத்துகிறது அரசாங்கம் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு இந்தியா உதவியது. இதற்கான நன்றிக் கடனாக இந்தியாவுடன் இலங்கை எட்கா உடன்படிக்கையை கைச்சாத்திடவுள்ளது. எட்கா உடன்படிக்கை பொருளியல் காரணங்களுக்காக கைச்சாத்திடப்படவில்லை., அரசியல் காரணங்களுக்காக கைச்சாத்திடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=160462&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 254 views
-
-
வீடுகள் இடிக்கப்பட்ட பகுதி விடுவிப்பு .இடிக்கபடாத வீடுகளில் இராணுவத்தினர் : காங்கேசதுறை புகையிரத நிலையத்திற்கு அருகில் வீடுகள் இடைத்தழிக்கப்பட்ட பகுதிகளில் மீள் குடியேற அனுமதித்த இராணுவத்தினர் வீடுகள் அழிக்கப்பட்டாத பகுதிகளில் தாம் தொடர்ந்து நிலைகொண்டு உள்ளனர். வலி.வடக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை அண்டிய பகுதிகள் கடந்த சனிக்கிழமை 26 வருடங்களின் பின்னர் மக்கள் மீள குடியமர அனுமதிக்கப்பட்டது. மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த வீடுகள் இடித்தழிக்கப்பட்டு உள்ளன. காங்கேசன்துறை வீதிக்கும் , புகையிரத பாதைக்கும் இடைபட்ட பகுதியில் முன்னர் இருந்த சந்தைக் கட்டட தொகுதி , கடைக்கட்டட தொகுதி மற்றும…
-
- 5 replies
- 616 views
-
-
வித்தியா கொலை வழக்கில் முக்கிய சாட்சியம்! பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது கொலை வழக்குடன் சம்பந்தப்பட்ட முக்கிய சாட்சியம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளதாகவும் அவரிடம் தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எம் றியால் முன்னிலையில் இடம்பெற்ற இந்த விசாரணைகளின் போது வித்தியா கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 12 சந்தேக நபர்களும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். …
-
- 0 replies
- 486 views
-
-
யாழ். போதனாவில் எச்.ஐ.வி பரிசோதனை. இலங்கை தேசிய பாலியல் நோயாக அறியப்பட்டுள்ள எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்திற்கு அமைய யாழ். போதனா வைத்தியாசாலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) எச்.ஐ.வி மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்றன. எச்.ஐ.வி தொற்று நிலமை குறித்து பரிசோதனை மேற்கொண்டு உடனயடியாக அறிந்து கொள்ளும் வகையில் யாழ் மாவட்டத்திலுள்ள 75 முகாம்களின் ஊடாக இந்த எச்.ஐ.வி மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றது. இது குறித்து யாழ் போதனா வைத்தியசாலையின் தொற்றுநோய் தடுப்பு சிகிச்சைப் பிரிவின் பொறுப்பதிகாரி விளக்கமளித்துள்ளார். இதன்போது, சுமார் 10 முதல் 12 வருடங்களுக்கும் எச்.ஐ.வி தொற்றுடன் ஆரோக்கியமாக இருக்கும…
-
- 0 replies
- 379 views
-
-
பொது இடத்தில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம் பொதுவிடத்தில் புகை பிடித்தவர்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அறுவருக்கு நீதிமன்றத்தால் அபராதமும் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பொதுவிடத்தில் புகை பிடித்தவர்கள் மற்றும் சுகாதார அறிவுறுத்தலின்றி சுருட்டு விற்பனை செய்தமை போன்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அறுவருக்குத் தலா-250 ரூபா வீதம் அபராதம் விதித்து மல்லாகம் மாவட்ட மேலதிக நீதவான் ரி. கருணாகரன் நேற்று தீர்ப்பளித்து உத்தரவிட்டார். சங்கானைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கடந்த வாரம் சங்கானைப் பகுதியில் நடாத்திய திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கையில், சந்தைக் கட்டத் தொகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் சுகாதார விதிமுறைகளுக்கு மாறாகப் பொது…
-
- 0 replies
- 330 views
-
-
வற் வரி அதிகரிப்பிற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்பாட்டம்: போக்குவரத்து பாதிப்பு வற் வரிக்கு எதிராக நாட்டின் பல இடங்களிலும் ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. இதனடிப்படையில் கடவத்தை, களனி, அனுராதபுரம், பதுளை, பண்டாரவளை, கிரிபத்கொடை மற்றும் கட்டுகஸ்தோட்டை போன்ற நகரங்களின் பெருந்தொகையான கடை உரிமையாளர்கள் கடையடைப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் அப்பகுதியில் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கடை உரிமையாளர்களின் தொழிற்சங்கங்கள் ஆர்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி கிரிபத்கொடை பகுதியில் தற்போது ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகி…
-
- 0 replies
- 421 views
-
-
இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறுவனம் (SLGTI) கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்படவுள்ளது இலங்கை அரசாங்கத்துடனான பங்காண்மை அடிப்படையில் ஜேர்மன் அபிவிருத்தி கூட்டாண்மை (GIZ) அமைப்பினால் செயற்படுத்தப்பட்டிருந்த இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறுவனம் கிளிநொச்சியில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் திறன் விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஜேர்மன் உயர்ஸ்தானிகர் கலாநிதி. ஜுவெர்ஜென் மொர்ஹார்ட் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். கிளிநொச்சியில் நிறுவப்…
-
- 0 replies
- 322 views
-
-
புலிகளின் கணக்கில் காட்டாத தங்கம் முன்னாள் ரி.ஐ.டி தலைவரிடம் விசாரணை தீவிரவாத விசாரணைப் பிரிவின் (ரிஐடி) முன்னாள் தலைவர், ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் சந்திரா வகிஸ்ராவிடம், பொலிஸ் சிறப்பு விசாரணைப் பிரிவு நேற்று மூன்று மணிநேரம் விசாரணைகளை நடத்தியுள்ளது. முன்னைய ஆட்சிக்காலத்தில், கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட, கணக்கில் காட்டப்படாத தங்கம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள், தொடர்பாகவே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபருக்கு பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் ஒன்றை பரிமாற்றம் செய்தது குறித்தும், அவரிடம் கேள்விகள…
-
- 0 replies
- 239 views
-
-
வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அயூப்பிற்கு எதிர்ப்பு வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அயூப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்தும், மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 25 ஆம் திகதி சனிக்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கொழும்பில் நடைபெற்றபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் 4 கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர். கடந்த 3 வருடங்களாக மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினராக மாவனல்ல பகுதியைச் சேர்ந்த அஸ்மின் அயூப் பதவி வகித்து வருகின்றார். வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் …
-
- 0 replies
- 354 views
-