ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
எங்களுடைய நிலத்திற்கு செல்ல வேண்டும். இல்லையெனில் உயிரை துறப்போம்: வடக்கு மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் குதிப்பு: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:- யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மீள் குடியேற்றம் தொடர்பில் சாதகாமான பதிலினை அளிக்காத பட்சத்தில் 22ம் திகதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தீர்மானித்து உள்ளனர். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் , முகாம் தலைவர்கள் மற்றும் மக்களுடனான சந்திப்பு வெள்ளிக்கிழமை மாலை யாழ்.பாடி விடுதியில் நடைபெற்றது. அந்த சந்த…
-
- 6 replies
- 556 views
-
-
சம உரிமைக்காக போராடத் தலைப்பட்ட சமூகம் இன்று மூன்றாம் தரப் பிரஜைகளான துர்ப்பாக்கிய நிலை! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்:- சம உரிமைக்காக போராடத் தலைப்பட்ட சமூகம்இன்று மூன்றாம் தரப் பிரஜைகளாக வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். நா.யோகேந்திரநாதன் எழுதிய இறுதிப்போர் தொடர்பிலான நீந்திக் கடந்த நெருப்பாறு (நாவல்) நூல் வெளியீட்டு விழா நேற்று கிளிநொச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வின் பிரதம அதிதியான வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் சிறப்புரையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உரை முழுமையாக... நீந்திக் கடந்த நெர…
-
- 1 reply
- 232 views
-
-
உண்மை கண்டறியும் ஆணைக்குழு இந்த ஆண்டில் நிறுவப்பட உள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கொழும்பு வார இறுதி பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… வடக்கில் இறுதிக்கட்ட போரின் போது குற்றச்செயல்கள் இடம்பெற்றனவா என்பது குறித்து உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்று இந்த ஆண்டு நிறைவிற்குள் நிறுவப்பட உள்ளது. இதற்கான உறுப்பினர்களை நியமிக்கும் பணிகள் இன்னும் ஒரு சில வாரங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது. போரின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும் ஒர் பொறிமுறைமை உருவாக்கப்பட உள்ளது. போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த நீதிமன்றமொன்று நிறுவப்பட்டால் அதில…
-
- 2 replies
- 276 views
-
-
போர்க் குற்ற விசாரணையை மேற்கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டால் இலங்கையில் இராணுவச் சதி ஒன்று ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்பது அமெரிக்காவிற்கு நன்கு தெரியும். இந்தியாவும் இதையொத்த எண்ணப்பாட்டையே கொண்டுள்ளது. இவ்வாறு சிலோன் ருடே ஆங்கில நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தொடர்பாக, இலங்கைக்கான சீனத் தூதுவர் ஜி ஷியான்லியாங் இலங்கை அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இலங்கையின், உள்விவகாரங்களில் வெளிச்சக்திகள் தலையீடு செய்வதை சீனா எதிர்ப்பதாக தூதுவர் ஜி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார். சீனாவானது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆ…
-
- 2 replies
- 814 views
-
-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வு இடம்பெறும் நிலையில் பொலிஸ் மற்றும்படைத்தலைமைகளுக்கு கைதுகள் மற்றும் தடுத்து வைத்தல் தொடர்பில் புதிய அறிவுறுத்தல்கள்விடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார். இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் ஆணையாளர் செய்ட் ராட் ஹுசைன்எதிர்வரும் 27ம் திகதியன்று அறிக்கை சமர்ப்பிக்கவுள்ள நிலையிலேயே இந்தஅறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. கைதுசெய்யும் ஒருவர் அவரை தமது பதவி தரம் உட்பட்ட வகையில்அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும். பெண்கள் தொடர்பான கைது நடவடிக்கைகள், தேடுதல்கள் பெண் அதிகாரிகளாலேயேமேற்கொள்ளப்பட வேண்டும். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கே இந்த அறிவுறுத…
-
- 1 reply
- 258 views
-
-
யாழில் சர்வதேச யோகா தினம் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா தினம் இன்று சனிக்கிழமை யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதன்போது, பாதுகாப்பு கண்ணாடியால் அமைக்கப்பட்ட மேடையில் அமர்ந்திருந்து யோகா பயிற்சியை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பார்வையிட்டார். இந்நிகழ்வை, இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோர் செய்மதி மூலம் யோகா பயிற்சியினை பார்வையிட்டனர். இதில், இந்திய தூதுவர் வை.கே.சிங்க மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ரட்ணாயக்க, தமிழ்த்…
-
- 1 reply
- 410 views
-
-
'எங்களை சுட்டுக் கொன்று விடுங்கள்..!' இந்தோனேஷிய போலீஸிடம் கதறும் தமிழ் அகதிகள் (பதற வைக்கும் வீடியோ) இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்ததாக சொல்லப்படும் 44 இலங்கை தமிழ் அகதிகள், படகு கோளாறால் இந்தோனேஷியாவில் கடந்த 11ம் தேதி தத்தளித்து கொண்டிருந்தனர். அவர்களை இந்தோனேசிய கடற்படை மீட்டது. Aceh என்ற மாகாண கடற்கரையோரம் படகில் ஆறு நாட்களுக்கு மேலாக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பாஸ்போர்ட், பயண ஆவணங்கள் எதும் இல்லாததால் அகதிகளை கரையில் இறக்க இந்தோனேஷிய அரசு மறுக்கிறது. இந்த நிலையில் படங்களில் இருந்தவர்கள், எங்களை சுட்டுக் கொல்லுங்கள் என்று கதறினர். நேற்று படகில் இருந்து ஐந்து பெண்கள் வெளியே குதித்துள்ளனர். இவர்களை எச்சரிக்கும்…
-
- 8 replies
- 1.3k views
-
-
கிளிநொச்சியில் நிறுவப்பட்டுள்ள இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறுவனம் எதிர்வரும் ஜுலை மாதம் 18 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. இலங்கை அரசாங்கத்துடனான பங்காண்மை அடிப்படையில் ஜேர்மன் அபிவிருத்தி கூட்டாண்மை (GIZ) அமைப்பினால் செயற்படுத்தப்பட்டிருந்த இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறுவனம் கிளிநொச்சியில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதாக கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் திறன் விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஜேர்மன் உயர்ஸ்தானிகர் கலாநிதி. ஜுவெர்ஜென் மொர்ஹார்ட் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். …
-
- 2 replies
- 385 views
-
-
மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக இலங்கையில் கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிப்பது தொடர்பான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராட் அல் ஹூசைன் ஜூன் மாதம் 29ம் திகதி அறிவிப்பார் என தெரியவருகிறது. கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச நீதிபதிகளை கொண்ட கலப்பு நீதிமன்றம் அவசியம் என்ற நிலைப்பாட்டில், அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலும் இருப்பதாக கூறப்படுகிறது. இலங்கை தொடர்பான ஜெனிவா யோசனையின் இணை அனுசரணையாளர் என்ற வகையில், யோசனையை முழுமையாக செயற்படுத்தும் நிலைமை இலங்கைக்கு உருவாகியுள்ளது. இதனிடையே ஜெனிவா…
-
- 0 replies
- 302 views
-
-
மஹிந்தவை விட ரணில் அதிகமாகப் பொய் சொல்வதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நீல நிறத்தை அகற்றி விட்டு பச்சை நிறத்தைக் கொண்டு வந்தோம். ஆனால் எவ்வித மாற்றமும் இல்லை. இன்னும் சிறிது நாட்கள் செல்லும் போது மஹிந்தவை விட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகமாகப் பொய் சொல்வதை மக்கள் தெரிந்து கொள்வார்கள் எனவும் அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார். அத்துருகிரியவில் இன்று இடம்பெற்ற 'கடன் சுமை, வரி சுமை மற்றும் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரம்' என்னும் சொற்பொழிவு நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இப்போது பெரியப் பிரச்சினையாகவுள்ளது மத்திய வங்கி ஆளுநரின் பிரச்சினை. இவர் பத்து மில்லியனுக்கு அதிகமாக கடன் பத்திரத்தை வெளியி…
-
- 0 replies
- 234 views
-
-
இந்தியப்பிரதமர் திறந்து வைத்தார்... இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ்.துரையப்பா விளையாட்டரங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரினால் இன்று சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பிரஸ் மூலம் இணைந்து கொண்டு விளையாட்டரங்கத்தை திறந்துவைத்தார். - See more at: http://www.tamilmirror.lk/174974/இந-த-யப-ப-ரதமர-த-றந-த-வ-த-த-ர-#sthash.sNb4scHB.dpuf
-
- 17 replies
- 1.6k views
-
-
மனித உரிமை ஆர்வலரும் தமிழ்த் தேசப்பற்றாளருமான சேவியர் அவர்களின் மறைவையொட்டி இரங்கல் செய்தியினை வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரன் அவர்கள், இனப் பற்றாளர்களும், அர்ப்பணிப்போடு செயலாற்றும் திறன் கொண்டவர்களும் எமது இனத்தின் விடுதலைக்கு மிகவும் இன்றியமையாதவர்களாவர் எனத் தெரிவித்துள்ளார். ருத்திரகுமாரன் அவர்களது இரங்கல் செய்தியில் மனித உரிமை ஆர்வலரும் தமிழ்த் தேசப்பற்றாளரும் சிறந்ததோர் மனிதராக விளங்கியவருமான திரு பிரான்சிஸ் சேவியர் அவர்களது மறைவு பற்றிய செய்தியறிந்து நான் மிகவும் கவலையடைகின்றேன். அன்னாரை நான் கடந்த நான்கு தசாப்தங்களாக நன்கறிவேன். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளில் தமிழ் இளைஞர்கள் விரும்பியபடியெல்லாம் கைது செய்யப…
-
- 0 replies
- 274 views
-
-
யாழ் .துரையப்பா விளையாட்டரங்கு நாளை திறந்துவைப்பு. யாழ் .துரையப்பா விளையாட்டரங்கு நாளை திறந்துவைப்பு. வடக்கின் மாபெரும் விளையாட்டு மைதானமான யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு நாளை முதல் வழமைக்கு திரும்புகிறது. இந்திய அரசாங்கம் வழங்கிய 145 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ். துரையப்பா விளையாட்டரங்கு, நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தின் பிரதான மற்றும் இரண்டாம் நிலை பார்வையாளர் மண்டபங்கள் தவிர, உடற்பயிற்சி நிலையமொன்றும் இந்த விளையாட்டரங்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் இரவில் விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கான உயரமான மின்னொளி கம்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நாளையத…
-
- 14 replies
- 1.8k views
-
-
வடக்கு முதல்வர் சி.வியின் ஒத்துழைப்பு சிறப்பாகவுள்ளது போரினால் விதவையானவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும் என தெரிவித்த இலங்கைக்கான இந்திய தூதுவர் வை.கே.சின்ஹா யாழ்ப்பாணம் உட்பட இலங்கையின் அபிவிருத்திக்கு இந்தியா உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தார். யாழ்.பொது நூலகத்தில் உள்ள இந்தியன் கோணரில் முன்னாள் இந்திய ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாமின் திருவுருவ சிலை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றியதாவது, அபிவிருத்தி செ…
-
- 1 reply
- 404 views
-
-
ஒலிம்பிக் தடகள வீராங்கனை சுசந்திக்கா வைத்தியசாலையில் அனுமதி ; கணவர் கைது ஒலிம்பிக் தடகள வீராங்கனை சுசந்திக்கா ஜெயசிங்க கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தடகள வீராங்கனை சுசந்திக்கா ஜெயசிங்க, தனது வீட்டில் வைத்து தாக்குதலுக்குள்ளானதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் அவரது கணவர் தம்மிக நந்தகுமார பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சுசந்திகா ஜெயசிங்க, ஒலிம்பிக் தடகள போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakes…
-
- 1 reply
- 371 views
-
-
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை ஜனாதிபதி தீயிட்டு அழிக்க வேண்டும் இலங்கை சுங்கத் திணைக்களத்தால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எங்கள் முன்னிலையில் தீயிட்டு அழிக்கவேண்டும் என இலங்கை சுங்க சேவையாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன் மூலம் சுங்கத்தினால் கைப்பற்றப்பட்டுள்ள பாரிய அளவிலான போதைப்பொருட்கள், போதைப்பொருள் வியாபாரிகளின் கரங்களிற்கு செல்வதை தடுக்க முடியும் எனவும் சுங்க சேவையாளர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் சங்கத்தின் செயலாளர் ஜே.ஏ.குணதிலக ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சுங்கத் திணைக்களத்…
-
- 0 replies
- 250 views
-
-
தாயை ஏற்றிச் சென்ற மகள் : மோதியது இராணுவ தண்ணீர் பவுசர் ; தாய் பலி, மகள் படுகாயம் - யாழில் பரிதாப சம்பவம் ( காணொளி இணைப்பு ) ( மயூரன், விரூஷன் ) யாழ்.நகரப்பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தொன்றில் திருமண வீட்டிற்கு சென்ற தாய் ஸ்தலத்தில் பலியானதுடன் அவரது மகள் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பரிதாப சம்பவம் இன்று காலை 8.45 மணியளவில் யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவில் மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. திருமண வீடு ஒன்றிற்கு செல்வதற்காக தாயை மகள் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளார். மோட்டார் சைக்கிளை ஒழுங்கையிலிருந்து பிரதான வீதிக்…
-
- 1 reply
- 227 views
-
-
அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை தடுப்புப் பட்டியலில் (black list) இணைத்துக் கொண்டுள்ளமையால் அமெரிக்காவுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தடுப்புப் பட்டியலில் பொன்சேகா இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு வெளிநாட்டு தூதரகம் கூறியுள்ளது. பொன்சேகா அண்மையில் அமெரிக்கா செல்வதற்காக விண்ணப்பித்திருந்தார், எனினும் வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற போர் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்ததாகவும், மனித உரிமைகள் மீறல் ஆகிய குற்றங்களினால் இவர் அமெரிக்கா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் தூதரக வட்டாரங்கள் குறிப்பிடுகின்றது. கடந்த 2009ம் ஆண்டு இடம்பெற்ற போரினை அடுத்து பொன்சேகாவிற்கு அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பி…
-
- 0 replies
- 333 views
-
-
முல்லைத்தீவு- கொக்கிளாய் கிராமத்தில் தமிழர்களுக்கு சொந்தமான நிலத்தில் பௌத்த பிக்கு ஒருவரினால் அடாத்தாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரையின் கட்டுமான பணிகளை நிறுத்தக் கோரி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கொடுத்த கோரிக்கைகளை உதாசீனம் செய்து நேற்றைய தினம் காலை தொடக்கம் மேற்படி விகாரை பகுதியில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கொக்கிளாய்- முகத்துவாரம் பகுதியை அண்டிய பௌத்தர்களே இல்லாத பகுதியில் எஸ்.மணிவண்ணதாஸ் என்ற தமிழர் உட்பட சில தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலத்தை போருக்கு பின்னர் அடாத்தாக பிடித்துக் கொண் ட பௌத்த பிக்கு ஒருவர் அந்தப் பகுதியில் விகாரை ஒன்றை அமைத்து வருகின்றார். இந்நிலையில் குறித்த நிலத்தின் உரிமையாளர…
-
- 1 reply
- 453 views
-
-
இலங்கை - இந்திய உறவு பாதிக்கப்படவில்லை : கடும்போக்காளர்களே தவறாக பிரசாரம் : யாழில் ஜனாதிபதி இலங்கை இந்திய உறவில் எவ்விதமான பாதிப்புக்களும் இல்லை. இந்திய இலங்கை மேம்பாட்டிற்காக கூட்டிணைந்து தேசிய, சர்வதேச ரீதியில் பல நடவடிக்கைகள் தொடரப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சில கடும்போக்காளர்களே இலங்கை இந்திய உறவை தவாறான பிரசாரம் செய்வதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சுட்டிக்காட்டினார். இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் புனரமைக்கப்பட்ட யாழ்.அல்பிரட் துரையப்பா விளையாட்டு மைதானத்தை இன்று சனிக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து திறந்து வைத்த பின்னர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங…
-
- 0 replies
- 184 views
-
-
இந்த உலகில் மனித உயிர்களை இழந்தும் எதனையும் பெறமுடியாமல்போன இனமாக நம் ஈழத் தமிழினத்தை அடையாளப்படுத்த முடியும். மிகப் பெரும் பேரிழப்புக்களை எம் இனம் சந்தித்தது. முப்பது ஆண்டுகால மண் மீட்புப் போராட்டத்தின் முடிவு தமிழ் மக்களுக்கு தாளமுடியாத வேதனையாயிற்று. மண் மீட்புப் போர் என்பது வலிந்து மேற்கொள்ளப்பட்டதன்று. மாறாக தமிழினத்தை இலங்கை ஆட்சியாளர்கள் எத்துணை தூரம் நசுக்க முடியுமோ அந்த அளவுக்கு நசுக்கி அடிமைப்படுத்தியதனால் ஆத்திரமுற்ற தமிழ் இளைஞர்கள் விடுதலை ஒன்றுதான் தமிழ் மக்களுக்கான உரிமையைத் தரும் என்று முடிவு எடுத்தனர். அந்த முடிவானது தமிழ் தலைவர்களின் அகிம்சைவழிப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதனாலும் ஏற்பட்டது என்று சொல்வதை எவரும் மறந்துவிடக் க…
-
- 1 reply
- 310 views
-
-
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வலி. வடக்கு மக்கள் கடிதம் கடந்த டிசம்பரில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு மாதங்களுக்குள் சகல மக்களையும் மீள்குடியேற்றுவேன் என்று கூறியிருந்தார். எனினும், எதிர்வரும்-22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையுடன் அவர் கூறிய ஆறு மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. நீங்கள் வழங்கிய உறுதிமொழியை நம்பி இருந்தோம். தற்போதும் நம்பிக்கையுடனிருக்கின்றோம். அந்த நம்பிக்கைக்கு ஏமாற்றம் தந்துவிடாதீர்கள் என வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து 26 வருடங்களுக்கு மேலாக ஏதிலிகளாகவுள்ள மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஜனாதிபதி மற்று…
-
- 0 replies
- 221 views
-
-
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் தரைதட்டி நிற்கும் படகில் இருந்த இலங்கைத் தமிழ் அகதிகளை தரையிறங்குவதற்கு இந்தோனேசிய அரசாங்கம் இன்று அனுமதி அளித்துள்ளது. கடந்த சனிக்கிழமை தொடக்கம், ஒருவாரகாலமாக ஆச்சே மாகாண கடற்கரையில் படகில் இருந்த அகதிகள் 44 பேரும் இன்று தரையிறங்க அனுமதிக்கப்பட்டனர். படகில் உள்ள அகதிகளை தரையிறங்க அனுமதிக்குமாறு இந்தோனேசிய உதவி அதிபர் யூசுப் கல்லா, ஆச்சே மாகாண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை அடுத்தே, அகதிகள் கரையில் இறக்கப்பட்டனர். அகதிகளை ஒளிப்படம் எடுத்து அடையாளங்களை பதிவு செய்யும் பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக அங்குள்ள ஏஎவ்பி செய்தியாளர் தகவல் வெளியிட்டுள்ளார். பெண்கள், குழுந்தைகளை உள்ளடக்கிய அகதிகள் படகை மீண்டும…
-
- 0 replies
- 272 views
-
-
ராணுவ முகாமில் இன்னும் 1 லட்சம் பேர்! ஈழம் இன்று - நமது நிருபரின் நேரடி ரிப்போர்ட்அலசல் இலங்கை இறுதிப் போரை நிச்சயம் எவராலும் மறக்க முடியாது. ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன, எழுத்தில் வடிக்க முடியாத துயரம் நிகழ்ந்து. இப்போது எப்படி இருக்கிறார்கள் தமிழ் மக்கள்? அவர்கள் கோரிக்கையாக என்னவெல்லாம் இருக்கிறது? அவர்களது வாழ்வாதாரம் மேம்பட்டு இருக்கிறதா? அவர்கள் தமிழக மக்களிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கி றார்கள்?... இந்தக் கேள்விகளுக்கான விடை தேடி இலங்கைக்குப் பயணமானோம். யாழில் பரவிய தமிழகக் கலாசாரம்! தீவு தேசத்துக்குச் சென்றபோது, மழை வெள்ளத்தைத் தாண்டி, கொழும்பு நகரமே உற்சாகமாக விசாக் திருவிழாவைக் கொண்டாடிக்கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்தின் வீதிகளில் ராணுவத்தி…
-
- 1 reply
- 483 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்குரிய அழுத்தத்தை வழங்கவேண்டுமென. ஐ.நா.உறுப்பு நாடுகளிடத்தில் வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று நேற்று வாசிங்டனில் நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண் டார். இக்கலந்துரையாடல் குறித்துஅவர் கூறுகையில், ஐக்கிய நாடுகள…
-
- 1 reply
- 180 views
-