Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கில் உள்ள மேலதிகமான இராணுவ முகாம்களை அகற்றுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் வடக்கில் இருந்து இராணுவத்தினரை முற்றாக வெளியேற்ற வேண்டும் என்ற யோசனைக்கு தமது கட்சி இணங்காது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். வடக்கில் மக்களின் சொத்துக்களை இராணுவம் தொடர்ந்தும் பயன்படுத்தி வருவதாகவும் அது அவசிமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் இராணுவம் தொடர்ந்தும் விடுதிகளையும் வேறு வர்த்தகங்களிலும் ஈடுபட்டு வருகிறது. தேசிய பாதுகாப்புக்கு தேவையான முகாம்களை மாத்திரம் வைத்து கொண்டு ஏனைய காணிகளை பொதுமக்களிடம் மீள கையளிக்க வேண்டும் எனவும் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார். http://ww…

    • 0 replies
    • 309 views
  2. 'மஹிந்த, சர்வதேசத்துக்கு பொய் சொல்கின்றார்' முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையில் பொய் பிரசாரம் செய்தது போதாதென்று இப்போது சர்வதேச ரீதியில் பொய் கூறுகின்றார் என அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை(13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 'மத்தல சர்வதேச விமான நிலையம் இன்னும் நெற்களஞ்சியசாலையாக பயன்படுத்தப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ, ஜப்பானுக்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது தெரிவித்துள்ளார். ஆனால் அங்கிருந்த நெல், கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே அகற்றப்பட்டு விட்டன' என அமைச்சர் மேலும் கூறினார். …

  3. யாழ் நீதிமன்ற தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு:- யாழ். நீதிமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதம் 20ம் திகதி புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த முற்பட்ட போது, நீதிமன்ற வளாகத்தின் மீது இளைஞர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டனர். இதனுடன் தொடர்புடையதாக கூறப்படும் 130க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். இதன்படி, குறித்த வழக்கு இன்று திங்கட்கிழமை யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரன் முன்னிலையில் இரண்டு பிரிவுகளாக விசாரணைக்கு எடுத்துக்க…

  4. பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் - CHR பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமென மனித உரிமை மற்றும் ஆய்வுகளுக்கான நிலையம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. 20 பக்கங்களைக் கொண்ட நீண்ட அறிக்கையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32ம் அமர்வுகள் ஆரம்பாகியுள்ள நிலையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகள் சந்தேக நபர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதனை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது. சந்தேக நபர்களை புனிதர்களாக கருதி செயற்பட வேண்டுமென கோரவில்லை எனவும், ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட நியத…

  5.  'செய்திக்காக சிறுவர்களை பலிகொடுக்காதீர்கள்' 'சிறுவர்கள் தொடர்பில் செய்தி வெளியிடும்போது ஊடகங்கள் தம்மை பற்றி மட்டுமே சிந்தித்து செயற்படுவதுடன் அது தொடர்புடைய சிறுவர்களது எதிர்காலம் குறித்துச் சிந்திப்பதில்லை' என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சகல ஊடகங்களும் சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்களாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி கூறினார். பொலனறுவை ரோயல் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற தேசிய சிறுவர் சபை தேர்தல் மற்றும் தலைமைத்துவ பயிற்சி வேலைத்திட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூற…

  6. கல்லோயாப் படுகொலைகள் மட்டக்களப்பு அம்பாறை 11. Juni um 21:10 · இன்று ஜூன் 11 - கல்லோயா படுகொலை என்பது ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை விடுதலை பெற்றபின்னர் இலங்கையில் இடம்பெற்ற சிறுபான்மை இலங்கைத் தமிழர் மீதான பெரும்பான்மை சிங்களவரின் முதலாவது பெரும் இனவெறித்தாக்குதல்!! இந்த கோர வெறி தாக்குதல் 1956 ஆம் ஆண்டில் ஜூன் 11 ஆம் நாள் ஆரம்பித்து தொடர்ந்து ஐந்து நாட்கள் இடம்பெற்றது. இந்த கொடிய நிகழ்வில் உள்ளூர் பெரும்பான்மையின சிங்களக் குடியேற்றவாதிகள், மற்றும் கல்லோயாக் குடியேற்றத்திட்ட அவையின் ஊழியர்களும் இணைந்து அரச வண்டிகளில் வந்து நூற்றுக்கணக்கான …

  7. விகாரை ஒன்றுக்கு நன்கொடை சேகரிப்பதாக கூறி, டிக்கெட்டுக்களை விற்பனை செய்து பணத்தினை சேகரித்து வந்த தேரர் உட்பட மூன்று பேரை சிலாபம் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். தான் சேவை புரியும் விகாரையில் கட்டுமான நடவடிக்கைக்காக பணம் தேவைப்படுகிறது எனக் கோரி டிக்கெட் புத்தகங்களை அச்சுபிரதி செய்து விற்பனை செய்துள்ளதால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் இவ்வாறான கட்டுமான நடவடிக்கை இடம்பெறவில்லை என விகாரையின் பங்களிப்பு சபை, பொலிஸாருக்கு அறிவித்துள்ளது. இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து அச்சுபிரதி செய்யப்பட்ட பல டிக்கெட் புத்தகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட தேரர் சிலாபத்தில் உள்ள விகாரை ஒன்றின் தேரர் என்ப…

    • 1 reply
    • 433 views
  8. இலங்கைப் படையினரின் வெடிபொருள் களஞ்சியங்களை தென்பகுதியில் இருந்து வடக்கு நோக்கி நகர்த்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. சலாவ சிறிலங்கா இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தை அடுத்து, அனுராதபுர மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிய வெடிபொருள் களஞ்சியங்களை அமைக்க இராணுவம் திட்டமிட்டுள்ளதாக அத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சன அடர்த்திமிக்க பகுதியில் அமைந்துள்ள வியாங்கொட மத்திய ஆயுதக் களஞ்சியத்தையும் அகற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெலிசறை, சாலாவ, வியாங்கொட ஆயுதக் களஞ்சியங்கள் மாத்திரம் பாதுகாப்பானவை என்று கருதப்பட்டன. எனினும் சாலாவ ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதால…

  9. இனி ஒருபோதும் யுத்தம் ஏற்படப்போவதில்லை என தான் நம்புவதாக யாழ். கட்டளைத் தளபதி மேஜர் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்தும் இராணுவத்தினர் வடக்கில் நிலைத்திருப்பது பொதுமக்களின் நன்மைக்காகவென்றும்,அவர்களின் நன்மைக்காக இராணுவம் முழுமூச்சுடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். படைத் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே கட்டளைத் தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் வடக்கில் நிகழும் அனர்த்த நிலைமைகள், வேறு அசம்பாவிதங்களின் போது இராணுவத்தினர் மக்களுடன் இணைந்து சேவையாற்றுகின்றனர். சாதாரண பொதுமக்களின் அனைத்து பிரச்சினைகளையும் அருகில் இருக்கும் படை முகாம்களில் முன்வைத்தால் தீர்வ…

  10. வீட்டு கழிவுப் பொருட்களுக்கு தீ வைத்த பெண் ஒருவர் அதே தீயினுள் கருகி உயிரிழந்துள்ளார் என வலிகாமம் வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வலிகாமம் வடக்கு மக்கள் தங்கிருக்கும் சபாபதிப்பிள்ளை முகாமில் குப்பை கொழுத்திய பெண் ஒருவர் உடம்பில் தீ பற்றிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த முகாமில் வசிந்து வரும் பிரபாகரன் அஸ்ரினா (23) என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 5ம் திகதி குறித்த பெண் குப்பை கொழுத்திவிட்டு அருகில் இருந்த தண்ணீர் தாங்கியில் மண்ணெண்ணை போத்தலை வைத்துள்ளார். இந்நிலையில் மண்ணெண்ணை போத்தல் காற்றினால் குறித்த பெண்ணின் உடலில் விழுந்த நிலையில் …

    • 1 reply
    • 501 views
  11. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளில் வெளிநாட்டு நீதவான்கள் பங்கேற்க மாட்டார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் போது வெளிநாடுகளின் தொழில்நுட்ப உதவி பெற்றக் கொள்ளப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தொழில்நுட்பசார் உதவியும் எவ்வித நிபந்தனைகளின் அடிப்படையிலோ அல்லது வேறும் உறுதிமொழிகளின் அடிப்படையிலோ பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32ம் அமர்வுகள் நாளைய தினம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பாக உள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். …

  12. யாழில் பெற்றோர்களால் கவனிப்பின்றி வளர்க்கப்படும் இளைஞர்களை சில அரசியல்வாதிகளே குற்றச் செயல்களில் ஈடுபடத் தூண்டி விடுகின்றனர் – யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ.வீரசிங்க யாழில் உள்ள இளை­ஞர்­களை அர­சி­யல்­வா­திகள் சிலர் குற்றச் செயல்­களில் ஈடு­ப­டு­வ­தற்கு பயன்­ப­டுத்தி வரு­வ­தாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி சி.ஐ.வீர­சிங்க தெரி­வித்­துள்ளார். மேலும் பெற்­றோர்­களால் கவ­னிப்­பின்றி வளர்க்­கப்­படும் இளை­ஞர்­களை அர­சி­யல்­வா­திகள் தூண்டி விடு­வ­தா­கவும் தெரி­வித்­துள்ளார். யாழ்ப்­பாணம் கொக்­குவில் கிழக்கு 3 கிராம சேவை­யாளர் பிரிவில் பொலி­ஸா­ருக்கும் பொது­மக்­க­ளுக்­கு­மி­டையில் இடம்­பெற்ற சந்…

  13. தமிழர் பிரச்சினைக்கு ஜெயலலிதாவின் தீர்வுத்திட்டத்தில் தங்கியில்லை தமிழர் பிரச்சினைக்கு ஜெயலலிதாவின் தீர்வுத் திட்டத்தில் தங்கியில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாக இந்தியன் எஸ்பிறஸ் தெரிவித்துள்ளது. தேர்தலில் வெற்றியீட்டியமைக்காக தாம் வாழ்த்து தெரிவித்ததாகவும் உள்நோக்கம் எதுவும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு முழுக்க முழுக்க ஜெயலலிதா தீர்வுத் தி;ட்டமொன்றை வழங்குவார் என தங்கியிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாம் வேறும் தரப்பினரில் தங்கியில்லை என அவர் தெரிவித்துள்ளார். பிரிவிணைவாதத்தை தாம் கோரவில்லை எனவும் அதற்கான போராட்டங்கள் நட…

  14. கிளிநொச்சி இரணைதீவு பகுதியை சேர்ந்த மக்கள் இரணைமாதா நகரில் வசித்து வருகின்றனர். இவர்கள் தமது சொந்த நிலமான இரணைதீவுப் பகுதியில் தம்மை மீள்குடியேற்றுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் அண்மையில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடமும் மகஜர் ஒன்றை கையளித்திருந்தனர். கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் இணைதீவு கிராமத்தில் சுமார் 183 குடும்பங்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 1992ஆம் ஆண்டில் அந்தப் பகுதியில் ஏற்பட்ட யுத்த நடவடிக்கை காரணமாக இரணைதீவு கிராம மக்கள் தமது சொந்த ஊரைவிட்டு இடம்பெயர்ந்தனர். தமது மீன்பிடி உபகரணங்களான வலைகள், படகுகள் முதல் கால்நடைகள் வரை அனைத்தையும் இழந்து இந்த மக்கள் அன்று அகதிகளாக்கப்பட்டதாக கூ…

  15. மன்னார் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்டத்தில் உள்ள பொது மக்களின் காணிகளில் தற்போது நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றி இடம் பெயர்ந்த மக்களை அக்காணிகளில் மீண்டும் மீள் குடியேற்றம் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள போதும், கடற்படையினர் குறித்த காணிகளில் இருந்து வெளியேற எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என இடம் பெயர்ந்துள்ள பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் கடற்கரையை அண்டிய பகுதியில், பொதுமக்களுக்கு சொந்தமான 25 வீட்டுத்திட்ட கிராமத்தில் உள்ள காணிகள் மற்றும் வீடுகளில் கடற்படையினர் முகாம்களை அமைத்துள்ளனர். கடந்த 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி இராணுவத்தினர் குறித்த வீட்டுத்திட்டத்தினுள் உட்புகுந்…

    • 0 replies
    • 285 views
  16. உள்­ளக விசா­ர­ணை­யின்­போது சர்­வ­தேச நிபு­ணர்­க­ளுக்கு இட­மில்­லை.! யுத்தக் குற்றம் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள உள்­ளக விசா­ர­ணையின் போது எக்­கா­ரணம் கொண்டும் சர்­வ­தேச நிபு­ணர்­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது. வெளி­நா­டு­க­ளி­ட­மி­ருந்து எமக்கு தொழில்­நுட்ப உத­விகள் மாத்­தி­ரமே அவ­சி­ய­மாகும். இதனை தவிர எமது உள்­வி­வ­காரம் சார்ந்த பிரச்­சி­னை­களை எம்மால் தீர்த்­துக்­கொள்ள முடியும். மேலும் இந்த விட­யத்தின் போது சர்­வ­தே­சத்தின் நிபந்­த­னை­க­ளுக்கு அடி­ப­ணிய போவ­தில்லை என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்துள்­ளார். தற்­போது எம்­முடன் முரண்­பட்ட சர்­வ­தேச நாடு­க­ளுடன் சகோ­த­ரத்­து­வத்தை கட்­டி­யெ­ழுப்­பி­யுள்ளோம். அத்­…

  17. மாநகர கழிவை அகற்ற விசேட செயற்றிட்டம் செல்வநாயகம் கபிலன் 'யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் கழிவுகளை அகற்றுவதற்கான செயற்றிட்டத்தை மாநகர சபையுடன் இணைந்து நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேற்கொள்ளவுள்ளது. இதற்கான திட்ட வரைபுகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவகின்றது' என்று நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'குறித்த பகுதியிலுள்ள கழிவுகளை அகற்றுவது தொடர்புடைய செயற்பாடு, யாழ்ப்பாண மாநகர சபைக்கு பாரிய சவாலாக அமைந்துள்ளது. குறிப்பாக கரையோரப் பகுதியிலுள்ள கால்வாய்களின் நீரை அகற்றுவது சிக்கலான விடயமாக மாறியுள்ளது. இரணைமடு நீரை யாழ்ப்பாணத்துக்கு கொ…

  18. இன்று ஆரம்பமாகின்றது ஜெனிவா கூட்டத் தொடர் : 29 இல் வாய் மூல அறிக்கை; 28 இல் மங்கள பயணம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது. இந்தக் கூட்டத் தொடரில் அரசாங்கத்தின் சார்பில் கலந்துகொள்ளவுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளக விசாரணை பொறிமுறையின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் 29 ஆம் திகதியே உரையாற்றவுள்ளார். அந்தவகையில் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவா பயணமாகவுள்ளார். அத்துடன் இம்முறை ஜெனிவாக் கூட்டத்தொடரில் நல்லிணக்க செயலகத்தின் செயலாளர் மனோ தித்தவலவும் இலங்கையின் சார்பில் கலந்துகொள்ளவுள்ளார். இம்முறை ஜெனிவ…

  19. வடக்கில் இராணுவ முகாமகள் அகற்றப்படாது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கண்டி அஸ்கிரி மகாநயக்கரை சந்தித்தது ஆசி பெற்றுக்கொண்ட போது நேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… வடக்கில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளை மாவட்டச் செயலாளர் மேற்கொண்டு வருகின்றார். இராணுவ முகாம்கள் தொடர்ச்சியாக பேணப்படும். தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முன்னதாக வடக்கில் சிங்கள, முஸ்லிம்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த மக்களை விரட்டியடித்தனர். தற்போது வடக்கில் அமைதியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஜெர்மன் உதவியுடன் வடக்கில் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனமொன்று நிறுவப்பட உள்ளது, மஹ…

  20. ஜெனீவா வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசு கடமைப்பட்டுள்ளது! -மனித உரிமைகள் கண்காணிப்பகம் [Sunday 2016-06-12 08:00] ஜெனீவாவில் ஏற்றுக்கொண்ட யோசனைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற கடமைப்பட்டிருக்கிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேள்வி எழுப்பியுள்ளது. இதில் ஏற்கனவே தமது கண்காணிப்பகம் வெளியிட்ட கருத்தை வலியுறுத்தியே மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் யோசனைப்படி இலங்கை ஏற்றுக்கொண்ட விடயங்களில் காணாமல் போனோர் அலுவலகமும் அடங்குகிறது. இந…

    • 1 reply
    • 387 views
  21. மட்டக்களப்பில் நடைபெறுகின்ற அத்துமீறிய சிங்கள குடியேற்றம் மற்றும் விகாரைகள் அமைப்பதற்கு மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மற்றும் உதவி அரசாங்க அதிபர்கள் துணைபோவார்களாக இருந்தால் நாங்கள் வீதிக்கு இறங்கி போராடுவோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்றுவருகின்ற சிங்கள குடியேற்றங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நல்லாட்சி அரசாங்கம் என்று கூறப்படுகின்ற தற்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திட்டமிட்ட பல நடவடிக்கைகள் அரசாங்கத்தின் பின்னணியிலும் கூட்டு எதிர்க்கட்சிகளின் பின்னணியிலும் திட்டமிட்டு குடியேற்றங்கள் மேற்க…

    • 0 replies
    • 315 views
  22. வடக்கு இராணுவ முகாம்களை அகற்ற வேண்டாம் என கண்டி அஸ்கிரி மாநாயக்க தேரர் வராகொட ஸ்ரீ ஞானரதன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். அஸ்கிரி மாநாயக்கரை அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று சந்தித்த போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இச் சந்திப்பின் போது அவர் தெரிவித்துள்ளதாவது, சாலாவ இராணவ ஆயுதக் களஞ்சியம் வெடித்துச் சிதறியதனைத் தொடர்ந்து வடக்கு இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது. எனினும் வடக்கின் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது.இராணுவ முகாம்களை அந்தந்த இடங்களில் பாராமரிப்பதன் மூலம் நாட்டையும் நாட்டு மக்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்து கொள்ள முடியும். நாட்டின் அனைத்து இன சமூகங்களுடனும் புரிந்துணர்வுடன் செயற்படு…

    • 1 reply
    • 337 views
  23. ரிவிர சிங்கள செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மீது இராணுவத்தின் புலனாய்வு உறுப்பினர்களே தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணைகளின் மூலம் இந்த விடயம் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தென்னக்கோன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தநிலையில் சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கும் உபாலிதென்னக்கோனின் தாக்குதலுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக விசாரணையாளர்கள்தெரிவித்துள்ளனர். http://www.tamilwin.com/crime/01/107469

    • 0 replies
    • 278 views
  24. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் உள்ள தற்காலிக பாடசாலைக்கட்டிடம் ஒன்று நேற்று சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்துள்ளது. இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இன்று காலை அப்பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். நேற்று பிற்பகல் குடியிருப்பு கனிஸ்ட வித்தியாலயத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டு அதில் நாளை திங்கட்கிழமை தரம் ஒன்று மற்றும் இரண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருந்த நிலையிலேயே இந்த தீச்சம்பவம் இடம்பெற்றுள்ளது…

    • 0 replies
    • 193 views
  25. வெளிநாடுகளிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருவோராலே பாலியல் துஷ்பிரயோகம் அதிரிகப்பு இலங்கை கடற்பரப்பில் சண்டித்தனம் காட்டும் இந்தியா, பாகிஸ்தான் கடற்பரப்பில் அணுவாயுதத்திற்கு பயந்து அத்துமீறுவதில்லை என ஜே.வி.பி. எம். பி. பிமல் ரத்னாயக்க நேற்று சபையில் தெரிவித்தார். வெளிநாடுகளிலிருந்து யாழ். குடா நாட்டுக்கு விடுமுறைக்காக வருவோரால் “பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்” அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் முன்வைத்த வடக்கு, கிழக்கு நிலைமைகள் தொடர்பாக சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே ஜே.வி.பி. எம்.பி. பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.