ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143449 topics in this forum
-
மற்றுமொரு தடையை நீக்கியது அரசாங்கம் முரண்பாடு மற்றும் அரசியல் காரணிகளால் நாட்டிலிருந்து கட்டாயத்தின் பேரில் வெளியேறிய இலங்கை பிரஜைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கடவுச் சீட்டுக்கான தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது. http://www.virakesari.lk/article/7057
-
- 0 replies
- 494 views
-
-
தமிழகத்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர்கள் இருவர் பலி இந்தியா, தமிழகத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இலங்கை பிரஜைகள் பலியாகியுள்ளனர். குறித்த இரண்டு இலங்கை பிரஜைகளும் பவானிசாகர் சீரங்கராயன் கரடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, வான் ஒன்றுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த திலகன் (23) மற்றும் அவரது நண்பரான ரவி (29). ஆகிய இருவரும் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர். பெயிண்ட் பூசும் தொழில் செய்யும் இவர்கள் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு சென்றுவிட்டு பவானிசாகர் நோக்கி பயணித்த போது, இந்த விபத்து சம்பவித்துள்ளது. சம்பவ இடத்திலேயே திலகன் உயிரிழந்ததுடன் ர…
-
- 0 replies
- 356 views
-
-
பிரபாகரன் இறந்து விட்டார் - விஜயகலாவின் கருத்துக்கு டக்லஸ் பதில் எமக்கு கிடைத்த தகவல்களின் படி, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என, முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் இரண்டாவது ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது. இதன்போதே டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் பிரபாகரனின் மரணச் சான்றிதல் இன்றும் வழங்கப்படவில்லை என்ற கருத்தை வௌியிட்டிருந்தார். இது குறித்து இன்று ஊடகவியலாளர் ஒருவர் முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், …
-
- 5 replies
- 792 views
-
-
சிறிலங்காவில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மற்றொரு தொகுதி உதவிப் பொருட்களை, ஏற்றிக் கொண்டு பங்களாதேஸ் கடற்படைக் கப்பல் ஒன்று நேற்றுமாலை கொழும்பு நோக்கிப் புறப்பட்டுள்ளது. ‘பிஎன்எஸ் பங்கபந்து’ என்ற இந்தப் போர்க்கப்பல், 105 தொன் எடையுள்ள உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு நேற்று பிற்பகல் சிட்டகொங் கடற்படைத் தளத்தில் இருந்து புறப்பட்டது. இந்தக் கப்பல், வரும் 5ஆம் நாள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் உயிர்காப்பு மருந்துகள், நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், குடிநீர், கூடாரங்கள், உணவுப் பொருட்கள், மின்பிறப்பாக்கிகள் என்பன, எடுத்து வரப்பட்டு சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளிடம் கையளிக்கப்படும். மூன்று நா…
-
- 0 replies
- 279 views
-
-
சுவிஸ் குமார் எவ்வாறு தப்பினார் என்பது தொடர்பான விசாரணை அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேக நபரான சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எவ்வாறு கொழும்புக்கு தப்பி சென்றார் என்பது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்று வருவதனால் , அது தொடர்பான விசாரணை அறிக்கையை அடுத்த வழக்கு தவணையின் போது மன்றில் சமர்ப்பிப்பதாக குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிசார் தெரிவித்து உள்ளனர் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் கருப்பையா ஜீவராணி முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் போது மாணவி கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு உள்ள பன்னிரண்…
-
- 0 replies
- 203 views
-
-
இரண்டு சட்டவிரோத ஆயுதக் களஞ்சியங்களை பொலிஸார் சுற்றி வளைத்து ஆயுத விற்பனையில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட 15 பேரை கைது செய்துள்ளனர். மனித படுகொலை உள்ளிட்ட பல்வேறு பாதாள உலகக் செயற்பாடுகளுக்கு, பாதாள உலகக் குழுவினருக்கு ஆயுதங்களை விநியோகம் செய்த இரண்டு முக்கிய ஆயுதக் களஞ்சியங்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன. நீர்கொழும்பு மற்றும் கம்பளை பகுதிகளில் இந்த ஆயுதக் களஞ்சியங்கள் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்துள்ளன. அண்மையில் கைது செய்யப்பட்ட முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களான ஆர்மி சம்பத் மற்றும் புளுமென்டல் சங்க ஆகியோரிடம் நடத்திய விசாரணைகளின் போது இந்த ஆயுதக் களஞ்சியங்கள் பற்றிய விபரங்கள் தெரியவந்துள்ளன. இதன்படி, பொலிஸ் மா …
-
- 5 replies
- 650 views
-
-
வாக்காளர் தினத்தை முன்னிட்டு பேரணி -சொர்ணகுமார் சொரூபன் வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தேர்தல்கள் திணைக்களத்தினால் இன்று புதன்கிழமை (01) காலை 8.30 மணிக்கு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமான இப் பேரணி மாவட்டச் செயலகம் வரை சென்றது. இந்நிகழ்வில், மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் மற்றும் யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர். - See more at: http://www.tamilmirror.lk/173561#sthash.HJhCymUx.dpuf
-
- 0 replies
- 253 views
-
-
104 குடும்பங்களுக்கு காணி பகிர்ந்தளிப்பு -செல்வநாயகம் கபிலன் பலாலி வடக்கில் மீளக்குடியமர பதிவு செய்து காணி இல்லாத 104 குடும்பங்களுக்கு மாவட்ட செயலக காணி பிரிவு ஊடாக தலா 2 பரப்பு காணி நன்கொடையாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. வலி. வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு, கடந்த டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு, தெல்லிப்பழை பிரதேச செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருந்தது. இதில், விடுவிக்கப்பட்ட அன்டனிபுரத்தில் 40 குடும்பங்களுக்கு நிரந்த காணிகள் உள்ளன. அக்குடும்பத்திலுள்ள அங்கத்தவர்கள் தற்போது திருமணம் செய்து தனித் தனிக் குடும்பங்களாக உள்ளனர். இதனடிப்படை…
-
- 0 replies
- 361 views
-
-
அறிவுசார் சமூகமொன்று தேடிக் கொண்ட கூட்டு தேட்டமாக நூலகங்கள் விளங்குகின்றன. யாழ்ப்பாண சமூகத்தினதும், அறிவுசார் பண்பாட்டு விருத்தியினதும் கூட்டு அடையாளமாக விளங்கவதே யாழ். பொது நூலகம் ஆகும். தமிழர்களின் தனித்துவ அடையாளமாக இது விளங்கியதால் காலத்துக்கு காலம் அரசியல் நீரோட்டங்களுக்குள் அடித்துச் செல்லப்பட்ட சம்பவங்களும், தீக்கிரையாக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்த வண்ணமே இருந்திருக்கின்றன. எதற்காக இந்நூலகம்? 1981 ஆம் ஆண்டு அவ்வாறானதொரு துயர சம்பவத்தை யாழ்.நூலகம் சந்தித்ததோடு அது முற்றாக அழிந்தும்போனது. தமிழரின் அறிவுசார் தேட்டத்தின் மீது சிங்கள அரசியல்வாதிகள் திட்டமிட்டு மேற்கொண்ட பண்பாட்டுப் படுகொலையாக வரலாறு இன்றும் அந்த சம்பவத்தை சிறைப்படுத்தி வைத்திருக்கின்றது. அந்த…
-
- 2 replies
- 593 views
-
-
ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் - வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் ஊழல் மோசடிகள் மற்றும் வரி ஏய்ப்புக்களை தடுக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரபல வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது. வரியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்தத் தீர்மானம் வர்த்தக வியாபார நடவடிக்கைகளை பெரிதும் பாதிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற பாரியளவிலான பொருளாதார நெருக்கடிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் செயற்பாடுகள் முக்கிய ஏதுவாக அமைந்துள்ளது என அந்த சஞ்சிகை தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்தி உரிய முறையில் வரி அறவீடு செய்து…
-
- 0 replies
- 246 views
-
-
வடக்கில் சென்றார் நோர்வே பிரதிநிதி மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே ஹேடர்ம் (Tore Hattrem) உள்ளிட்ட ஐவர் அடங்கிய குழுவினர்கள் இன்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். இவர் இன்று யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவகத்திற்கு விஜயம் செய்ததுடன் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, வட மாகாணத்தில் நோர்வே அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள், நோர்வே அரசாங்கத்தினால் புதிதாக ஆரம்பிக்கப்பட இருக்கும் உட்கட்டுமான பணிகள், சமூக நலன் மேம்பாட்டுத் திட்டங்கள், பொருளாதார ரீதியாக பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் வாழ்…
-
- 0 replies
- 268 views
-
-
பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு இந்தியா காணிகள் சுவீகரிக்காது! பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கென பொதுமக்களின் ஒரு துண்டு காணி கூட சுவீகரிக்கப்படமாட்டாது என தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இணைத்தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கென பொதுமக்களின் ஒரு துண்டு காணி கூட சுவீகரிக்கப்படமாட்டாது என தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இணைத்தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். தெல்லிப்பளை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று இணைத்தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, ராஜாங்க அமைச்சர் விஜயகலா ம…
-
- 2 replies
- 896 views
-
-
மஹிந்தவின் மாளிகையை கேட்கிறது வடமாகாண சபை காங்கேசன்துறை பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவினால் கட்டப்பட்டுள்ள மாளிகையினை வடமாகாண சபையின் பாவனைக்கு வழங்க ஏற்பாடு செய்யுமாறு வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார். யாழ்.மாவட்ட இரண்டாவது ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்ட இணைத்தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்ட போது, வடமாகாண சபையின் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த இடமாக காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள மாளிகை காணப்படுகின்றது. ஆகவே மகிந்தவினால் அமைக்கப்பட்டுள்ள குறித்த மாளிகையினை பெற்றுத்தருமாறு ச…
-
- 3 replies
- 435 views
-
-
யாழ்ப்பாணம் 10 வருடங்களுக்குள் தீவாக மாற்றமடையும் சாத்தியம் [ Wednesday,1 June 2016, 05:31:41 ] எதிர்வரும் 10 வருடங்களுக்குள் கடல் மட்டம் ஒரு மீற்றர் வரை உயரக்கூடும் என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் கலாநிதி செனவி ஏபிடவத்த தெரிவித்துள்ளார். தனது கருத்துக்கு எதிராக சில கலாநிதிகளும், பேராசிரியர்களும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், கடலில் மாற்றங்கள் ஏற்படுவதனை தற்போதே காணக்கூடியதாக உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோன்று கடந்த காலங்களில் ஏற்பட்ட சூழல் மாற்றங்களால் உஷ்னத்தன்மை, மழை வீழ்ச்சி மற்றும் காற்றின் வேகம் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமையை காணக்கூடி…
-
- 2 replies
- 716 views
-
-
வடக்கில் 400 ஏக்கர் காணியை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க இராணுவம் திட்டம் வடக்கில் 400 ஏக்கர் காணியை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்கு இராணுவம் திட்டமிட்டுள்ளது. யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் சுமார் 200 ஏக்கர் காணியும் இவ்வாறு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ள காணியில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் வடக்கில் 2175 ஏக்கர் காணியும், கிழக்கில் 1055 ஏக்கர் காணியும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உள்ளக இடம்பெயர்விற்கு உள்ளான மக்களை மீள் குடியேற்ற அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரியொரு…
-
- 0 replies
- 247 views
-
-
ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதிவேண்டி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ( சசி) மட்டக்களப்பில் வைத்து படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐ.நடேசனின் 12 ஆவது நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றிலில் இன்று முதலாம் திகதி கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் படுகொலை விசாரணையை மீள ஆரம்பிக்கக்கோரியும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைகளை துரிதப்படுத்தக்கோரியும் ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தியும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி திங்கட்கிழமை நடேசன், தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் அலுவலகத்திற்குச் சென்று …
-
- 0 replies
- 299 views
-
-
ஊடகவியலாளர் நடேசனின் 12 ஆவது நினைவேந்தல் நிகழ்வு -எம்.றொசாந்த் மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 12ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை (31) அனுஸ்டிக்கப்பட்டது. கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக யாழ். நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு முன்பாக இந்நிகழ்வு நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ். ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு சுடரேற்றி, தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். ஊடகவியலாளரான ஐயா…
-
- 0 replies
- 309 views
-
-
'அம்மா'வைச் சந்திக்க மங்கள கோரிக்கை? தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்க, இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அனுமதி கோரியுள்ளதாகவும், அதற்கு தமிழக அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மங்கள சமரவீர வாழ்த்துத் தெரிவித்திருந்தார். அதேபோல் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் வாழ்த்து தெரிவித்திருந்தார். சில நாட்களுக்கு முன்னர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு நன்றி தெரிவித்த ஜெயலலிதா, விரைவில் சந்…
-
- 0 replies
- 283 views
-
-
சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை இன்னும் நிறைவேற்றவில்லை – பிரித்தானியா சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் இன்னமும் நிறைவேற்றவில்லை என பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச பங்களிப்பு அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை இதுவரையில் நிறைவேற்றவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleI…
-
- 4 replies
- 429 views
-
-
கடற்படையினரின் பாதுகாப்பு சாவடியை இடமாற்றவும் : சம்பந்தன் பணிப்புரை திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கும்புறுப்பிட்டி காந்திநகரில் மீனவர்கள் படகுகளை தரித்து வைக்கும் கடற்கரைப் பகுதியில் உள்ள பாதுகாப்பு சாவடியை இடமாற்றுமாறு எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பணிப்புரை விடுத்துள்ளார். இது விடயமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜனாரத்தனன் மாவட்ட அபிவிருத்திக் குழுவில் முன்வைத்த கோரிக்கை சபையில் பரிசீலிக்கப்பட்டபோதே சம்பந்தன் அரச அதிபருக்கு இந்தப் பணிப்புரையை விடுத்தார். குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கும்புறுப்பிட்டி காந்திநகரில் மீனவர்கள் படகுகளை தரித்து வைக்கும் கடற்கரைப்பகுதியில் கடற்படையினரின் சிறிய பா…
-
- 3 replies
- 296 views
-
-
போர்க்குற்றங்கள் தொடர்பான பேச்சுக்கள் தற்போது இல்லை என்றும் யாரையும் போர்க்குற்றவாளியாக மின்சாரக் கதிரையில் அமர்த்த வேண்டிய தேவையில்லை எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜெனீவா தீர்மானங்கள் பற்றிய பேச்சுக்களும் இல்லை என்றும் இந்திய அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தற்போது நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வருவதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது. ஜப்பானில் நடைபெற்ற ஜீ-7 மாநாடு தொடா்பாக விளக்கமளிக்கும் செய்தியாளா் மாநட்டில் உரையாற்றிய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, பெருந்தோட்ட துறை அமைச்சர் நவீன் திஸநாயக்க ஆகியோர் கூட்டாக இவ்வாறு அறிவித்துள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நண்…
-
- 2 replies
- 532 views
-
-
தமிழர் பிரச்சினை தீர்வை சீர்குலைக்கும் விக்கி : வாசுதேவ நாணயக்கார ஜெயலலிதாவின் தலையீட்டைக் கோருவதன் மூலம் விக்கினேஸ்வரன் தமிழர் பிரச்சினை தீர்வை சீர்குலைக்கின்றார் எனக் குற்றம்சாட்டும் மஹிந்த அணி சார்பு எம்.பி. வாசுதேவ நாணயக்கார. ஜெயலலிதா – இந்தியா அல்ல. தமிழ் நாடு என்ற மாநிலத்தின் முதலமைச்சரே ஆகும் என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார எம்.பி. மேலும் தெரிவிக்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் மற்றும் அரசாங்கம் உட்பட எதிர்க்கட்சியில் எம்மைப் போன்ற சிலர் இணைந்து வடக்கு கிழக்கு தமிழர் பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு முயற்சிகளை முன்னெடுத்து வருவதோடு பிரச்சினைகள் தீரும் நிலை ஏ…
-
- 4 replies
- 542 views
-
-
கிளிநொச்சியில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட இந்தச் செய்தி குறித்து முரண்பாடுகள் இருப்பின் சம்பந்தப்பட்டவர்கள், தமது தரப்பு நியாயங்களை அனுப்பி வைத்தால் முழுமையாக பிரசுரிக்கப்படும்: கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் புனரமைப்புக்கு என இவ்வருடம் மத்திய அரசினால் ஒதுக்கப்பட்ட ஆயிரத்து நானூறு இலட்சம் திரும்பிச்செல்லும் நிலையில் இருப்பதாக மாவட்ட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு இவ்வருடம் மத்திய அரசிடமிருந்து 1400 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு மேற் கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஆயிரம் இலட்சம் ரூபாக்கள் வைத்தியசாலை புனரமைக்கும் மிகுதி 400 இலட்சம் மருத்துவ உபகரங்கள் கொள்வனவுக்கும் என ஒத…
-
- 0 replies
- 340 views
-
-
சாவகச்சேரியில் தற்கொலை அங்கி கைப்பற்றப்பட்டமை தொடர்பில் 2 பிள்ளைகளின் தந்தை கைது inShare அண்மையில் சாவகச்சேரி பகுதியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் இந்த நபர் நேற்று (30) மாலை கைது செய்யப்பட்டு, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செ…
-
- 2 replies
- 448 views
-
-
யாழ். நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு 35 ஆண்டுகள் i கம்பீரமாய்க் காட்சியளிக்கும் யாழ். நூலகத்தின் கருகிய புத்தகங்களின் மணத்தை வாசிப்பின் மீது தீராக்காதல் கொண்ட வாசகர்களால் மாத்திரமே நுகரமுடியும். அறியாமை இருளகற்றும் புத்தொளிக்கீற்றை இன்று போன்றதோர் நாளின் நள்ளிரவு வேளை, காரிருளில் மூழ்கடித்த கதையை மீட்ட மீட்ட சோகமே எஞ்சும். கவர்ந்து செல்லவோ சூறையாடவோ முடியாத தென்னாசியாவின் அறிவுப்பொக்கிஷத்தை தீது, நன்கறியாத தீ தீண்டி துவம்சம் செய்த துன்பியல் அனுபவத்தை வார்த்தைகளில் வசப்படுத்துவது அத்துணை எளிதன்று. 1933 ஆம் ஆண்டு …
-
- 2 replies
- 389 views
-