Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜெனிவா தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், தெரிவித்துள்ளார். பொறுப்புக்கூறும் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளது குறித்துக் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜெனிவா தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதில் தவறான புரிந்துணர்வுக்கு வாய்ப்புக்கள் இல்லை. இதனை விடுத்து ஜெனிவா தீர்மானத்தை தளர்வு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது என்று குறிப்பிட்டார். http://www.seithy.com/breifNews.php?newsID=158474&category=TamilNews&language=tamil

  2. இலங்கையில் இந்துமத அடையாளங்கள் அனைத்தும் பௌத்த மத அடையாளங்களாக திட்டமிட்டு மாற்றப்பட்டு வருகின்றது என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். அகில இலங்கை இந்துமாமன்றத்தின் வைரவிழா நிகழ்வு இன்று கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதற்கமையவே கன்னியா வெந்நீரூற்று தற்பொழுது தேசிய அகழ்வாராட்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு பௌத்த தலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் தற்போது கதிர்காமம் இந்துமதத்தின் புனிதத் தன்மையை இழந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். http://thuliyam.com/?p=28530

  3. பொலிஸ் காணி தொடர்பில் : புதிய கோணத்தில் பரிசீலிக்க தயார்.! புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதில் அரசியல்தீர்வை உள்ளடக்கவும் அவ்வாறு உள்ளடக்கப்படும் அரசியல் தீர்வில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் புதிய கோணத்தில் பரிசீலிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக 6 உப குழுக்களும் ஒரு நிறைவேற்றுக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுக்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இடம்பெறுகின்றனர். இந்நிலையில் அரசியல்தீர்வுத்திட்டத்தில் கூட்டமைப்பின் கருத்துக்களும் உள்வாங்கப்படும். தேவை ஏற்படின் கூட்டம…

  4. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமெரிக்க இராணுவக் குழுவொன்றும் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. கொழும்பு-வெல்லம்பிட்டியவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சுத்திகரிக்கும் பணியில் அமெரிக்க இராணுவத்தின் கடெற் தர அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் கடெற் தர அதிகாரிகளுடன் இணைந்தே இவர்கள் இந்த சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கப் படைகள் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. http://thuliyam.com/?p=28402

  5. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் ஆதரவுடன் ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார் போல் தோன்றுகிறது என்றும், அந்தக் கட்சி கடும்போக்கு கொள்கைகளைப் பின்பற்றும் என்றும் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் கொழும்பிலுள்ள மத்திய அரசுடன் மோதும் விக்னேஸ்வரனின் கொள்கைகள் கொழும்பு அரசுடன் இணக்கப்பாட்டை பேணுவது என்ற தமிழ்த் தேசயக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு முரணானவை. வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ் மக்களின் அரச…

    • 5 replies
    • 491 views
  6. "கிழக்கு மாகாண முதலமைச்சர் நடந்துகொண்ட விதம் முற்றிலும் தவறானது. ஆனால், அவர் முஸ்லிம் என்பதனாலேயே இந்தளவுக்கு விவகாரம் பூதாகரப்படுத்தப்பட்டுள்ளது." - இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். "இதே இடத்தில் ஒரு சிங்களவர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஜப்பானின் நகோயா ஹில்டன் ஹோட்டலில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு நேற்று வழங்கிய பிரத்தியேக நேர்காணலின்போது, "கிழக்கு மாகாண முதலமைச்சர் - கடற்படை அதிகாரி இடையிலான முரண்பாட்டை எப்படிப் பார்க்கின்றீர்கள்?" என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் கூறினார். "உண்மையைச் சொல்வதென்றால் இலங்கையின் நிர்வாகத்தினர் மத்தியில் இத்தகைய மோதல்கள் ஏற்படுவதொன்றும் புதிய விட…

    • 2 replies
    • 388 views
  7. நேற்று முன்தினம் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் கருணாநிதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் வாழ்த்துச் செய்தி அனுப்பியதற்கு தமிழ் மக்கள் தமது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி யுத்தத்தை தடுத்து நிறுத்தும் நிலையில் இருந்தும் கூட அதற்கான முயற்சிகள் எதனையும் எடுக்காது வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்தார் என மக்கள் தெரிவித்துள்ளனர். முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்த முக்கிய நபர்களில் கருணாநிதியும் ஒருவர். இப்படியான ஒருவருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் த…

  8. மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக போதைவஸ்துப் பாவனையும் போதைவஸ்து விற்பனையும் அதிகரித்துக் காணப்படுவதாகவும் இவற்றை ஒழிப்பதற்கு பொலிஸாருக்கு உதவியாக பொதுமக்கள் செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார். ஏறாவூர் நஜ்முல் உலூம் சர்வதேச பாடசாலைக்கு ஒருதொகுதி தளபாடங்களை கையளிக்கும் நடவடிக்கை சனிக்கிழமை (28) நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'குறிப்பாக, இலங்கையில் தற்போது சட்டபூர்வமான மது, சிகரெட் மூலம் அரசாங்கத்துக்கு அதிக வரி கிடைக்கும் மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இரணடாம் மூன்றாம் இடங்களில் உள்ளது. போதைவஸ்துப் பாவனைக்கு அடிமைப்பட்டு இளைஞர் சமூகம் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்ற …

    • 0 replies
    • 320 views
  9. . முலைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் வன்னிகுறோஸ் கலாச்சாரப் பேரவையின் ஏற்பாட்டில் மாபெரும் முத்தமிழ் கலைநிகழ்வு நடைபெற்று வருகின்றது. இந்நிகழ்வு இன்று மாலை 4.00 மணிக்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தலைமையில் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தென்னிந்திய நடிகரும், தென்னிந்தியத் நடிகர் சங்கத்தின் தலைவருமாகிய நாசர் கலந்து சிறப்பித்துள்ளதுடன் சண்முகராசா, இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, ஆகாஸ் குறுப் தலைவர் எஸ் இராமசுப்ரமணியம் மற்றும் வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். குறித்த நிகழ்வில் மாவீரன் பண்டாரவன்னியனின் உருவத்தை நினைவுப…

  10. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று உயிரிழக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிங்கள வார பத்திரிகை ஒன்று வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியதுடன் அவர் தெரிவித்துள்ள இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போர் முடிவடைந்து ஏழு வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும் விடுதலைப புலிகளின் தலைவருக்கான மரண அத்தாட்சி சான்றிதழை இன்னும் வழங்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மரண அத்தாட்சிப் பத்திரத்தை காட்டினால் மாத்திரமே தன்னால் பிரபாகரன் இறந்து போனார் என்பதை நம்ப முடியும் எனவும் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். http://www.tamilwin.com/politics/01/106002

  11. கிளிநொச்சியில் ஒரு தொகுதி கிளைமோர் குண்டுகள் மற்றும் கைக்குண்டுகள் கண்டெடுப்பு கிளிநொச்சி இரத்தினபுரம் 3ஆம் குறுக்குத் தெருவில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றிலிருந்து 10 கிளைமோர் குண்டுகள் மற்றும் 66 கைக்குண்டுகள் மற்றும் 42 மோட்டார் பியுஸ் என்பவற்றை 57ஆம் படைப்பிரிவினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் எடுத்துள்ளனர். இன்று (29) பிற்பகல் சுமார் 12 மணியளவில் 57ஆம் படைப்பிரிவினர் குறித்த தேடுதலை ஆரம்பித்து பிற்பகல் 5.30 மணியளவில் முடிவுக்கு கொண்டு வந்தனர் இந்த சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, குறித்த வீட்டின் உரிமையாளர் இல்லாத நிலையில் வீட்டைப் பராமரிக்கும் நபர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிணறு இறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.…

  12. வடக்கிலுள்ள மக்கள் தமது காணிகளையே கோருகின்றனர்! - ஜப்பானில் மைத்திரி [Saturday 2016-05-28 19:00] தமது காணியை மற்றுமொருவர் கையகப்படுத்துவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. வடக்கிலுள்ள மக்கள் கடந்த 27 வருடங்களாக தமது காணிகளையே கோரிநிற்கின்றனர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி, நகோயா நகரில் வாழ்ந்து வரும் இலங்கைப் பிரஜைகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இவ்வாறு குறிப்பிட்டார். அத்துடன் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி குறிப்பிடுகையில், இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்ந்தும் பலமான நிலையில் உள்ளதுடன், எந்தவகையிலும் அது வலுவிழந்து காணப்படவில்லை என சுட்டிக்காட்…

    • 8 replies
    • 694 views
  13. போருக்குப் பின்னர் வடக்கு மாகாணக்கல்வி பாரி­ய­ளவில் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது வடக்கு மாகாண கல்வி வளர்ச்­சி­யா­னது போர்க் காலத்தில் வீழ்ச்­சி­ய­டை­யாது காணப்­பட்­டி­ருந்­தது. எனினும் போருக்கு பிந்­திய ஏழாண்­டு­களில் கல்வி வளர்ச்­சி­யா­னது பாரி­ய­ளவில் வீழ்ச்­சியை எதிர்­நோக்­கி­யுள்­ளது என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனாதிராஜா தெரி­வித்­துள்ளார். யாழ்ப்­பாணம் இரா­ம­நாதன் மகளிர் கல்­லூ­ரியில் நேற்­றைய தினம் இடம்­பெற்ற வலி­காம வலய ஆசி­ரிய மாநாட்டில் பிரதம விருந்­தி­ன­ராக கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தி­ருந்தார். அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­றி­ய­தா­வது, எமது கல்வி வளர்ச்­சி­யா­னது போர்க் காலத்தில் கூட வீழ்ந்…

    • 3 replies
    • 1.2k views
  14. மஸ்கெலியாவில் மீண்டும் பாரிய மண்சரிவு : 200பேர் வெளியேற்றம்.! மஸ்கெலியா காட்மோர் கல்கந்த தோட்டபகுதியில் இன்று விடியற் காலை 07 மணியளவில் பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த அனர்த்ததினால் 47 குடும்பங்களை சேர்ந்த 200 பேர் இடம் பெயர்ந்துள்ளதாக அம்பகமுவ பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது. எனவே, இடம்பெயர்ந்துள்ள மக்கள் தோட்டத்திலுள்ள வெளிகல உத்தியோகத்தரின் விடுதியிலும் ஆலயங்களிலும் தங்கவைக்கபட்டுள்ளனர். மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த அனர்த்தம் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது. இன்றைய தினமும் பாரிய மண்மேடொன்று சரிந்து விழுந்துள்ளதாகவும் இடம்பெயர்ந்த மக்களுக்கு தற்காலிக கூடாரங்க…

  15. இலங்கைக்கு வருகின்றார் டொரே ஹேடர்ம்.! நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே ஹேடர்ம், இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அவர், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் கலந்துரையாடலில் ஈடுப்படவுள்ளார். இதன்போது, அவர் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம மற்றும் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்களையும் சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும், அறிவித்துள்ளது. அதேவேளை, அவர் ஜீன் 01 ஆம் திகதி வடமாகாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் மற்றும் ஆளுநர் ரெஜீனோல்ட் குரே ஆகியோ…

  16. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழக்கவில்லை என வெளியாகும் கருத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வின்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில், சிங்கள ஊடகமொன்று பாதுகாப்பு செயலாளரிடம் இந்த விடயம் குறித்து வினவிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். பிரபாகரன் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் விடயத்தை தான் நம்பவில்லை என விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பிரபாகரனின் மரணச் சான்றிதழை வெளியிடும் பட்சத்தில் மாத்திரமே தாம் அத…

  17. கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம் AJ Pradhap கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட் கடற்படை அதிகாரி ஒருவரிடம் தரக்குறைவாக நடந்துக்கொண்டமைக்கு எதிராக நுவரெலியா நகரசபை வளாகத்தில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது பொதுமக்கள் மதகுருமார்கள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர். இதன்போது கடற்படை அதிகாரியிடம் தரக்குறைவாக நடந்தமைக்கு முதலமைச்சருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது படையினருக்கு மரியாதை செலுத்தும் வகையில், “யுத்த வெற்றி வீரர்களை பா…

  18. அச்சுறுத்தல்களுக்குப் பயந்து மஹிந்தவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளமாட்டேன் என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். பெவிதி ஹண்ட அமைப்பின் தலைவரும், அரச தாதியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான முருத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு அண்மைக்காலமாக மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஞாயிறு வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவான செயற்பாடுகள் மற்றும் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த மேற்கொள்ளும் செயற்பாடுகள் காரணமாகவே எனக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றது. தொலைபேசி வழியாக நான்கைந்து தடவைகள் மற்றும் அநாமதேய கடிதங்கள் வாயிலாகவும் குறித்த அச்சுறுத்த…

  19. ஜூன் 3ஆம் திகதி நல்லாட்சி அரசின் முகத்திரையைக் கிழிக்க ஜே.வி.பி. மாபெரும் போராட்டமொன்றை கொழும்பில் முன்னெடுக்கவுள்ளது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். "வரி சுமை மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்க்கைச் செலவு பண்மடங்கு உயர்ந்துள்ளது. அவர்களின் வருமானத்தில் எவ்வித மாற்றும் இல்லை. ஆனால், வரி சுமையை மாத்திரம் சுமக்க வேண்டியுள்ளது. நல்லாட்சி என்று கூறிய மைத்திரி - ரணில் அரசு மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகரித்துள்ளது. வற் வரி அதிகரிக்கப்படுவதால் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாது எனக் கூறப்பட்டது. ஆனால், இன்று வற் வரியின் தாக்கத்தின் பெரும் பங்கு மக்கள் மீதுதான் சுமத்தப்பட்டுள்ளத…

  20. வடக்கு மாகாண சபையின் நிலைகண்டு தமிழ் மக்கள் தாங்கொணாத் துயரம் கொண்டுள்ளனர். ஏன் தான் இப்படி இவர்கள் நாசகாரம் செய்கின்றனர். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு உதவுவதை விடுத்து வடக்கு மாகாண சபையை தங்களின் சுய பதவிக்காக பயன்படுத்துகின்றனரே! என்ற வேதனை மக்களிடம் இருக்கவே செய்கிறது. இது ஒருபுறம் இருக்க, தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைக் கொண்டுள்ள வடக்கு மாகாண சபை முதல்வர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு எதிராக கூட்டமைப்பின் கொழும்புத் தலைமை தொடர்ந்தும் சதித்திட்டம் தீட்டி வருகின்றது. முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் உபத்திரவம் தாங்கமுடியாமல் பதவியைத் தூக்கி எறிந்து விட்டுப்போக வேண்டும். இதற்காக வடக்கு மாகாண சபையில் இருக்கக் கூடிய சி…

    • 0 replies
    • 329 views
  21. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகம் கடந்த 2015 ஆம் ஆண்டு 677 கோடி ரூபா நஷ்டத்தை எதிர்நோக்கியதால் இலங்கை துறைமுக அதிகார சபை இவ்வருடம் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது என கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இத்துறைமுகத்தில் எண்ணைத்தாங்கி தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கும் துறைமுக நிர்வாகம் மற்றும் பராமரிப்புக்காக செலவிட்டதால் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கணக்காளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.virakesari.lk/article/6922

    • 0 replies
    • 223 views
  22. பக்க வேர்களை மட்டும் கத்தரிப்பதனால், மூலங்கள் அழிந்துவிடப் போவதில்லை - நடராஜா குருபரன்:- 28-05-2016 - 01:54 யாழ்ப்பாணத்தை திருத்துவது என்பதும் யாழ்ப்பாணம் திருந்தும் என்பதும் வெறுமனே இளையவர்களை தண்டிப்பதனாலோ, அடக்கி ஒடுக்குவதனாலோ, 6 மணிக்குப் பின் வீதிகளில் நிற்கக் கூடாது எனவும், வீதிகளில் காரணம் இன்றி, காரியம் இன்றி, திரிபவர்கள், நிற்பவர்களை கட்டுப்படுத்துவதனாலோ? சாத்தியம் ஆகும் என நான் நினைக்கவில்லை. 30 வருட போர் வடக்கில் ஒரு வன்முறைசார் கலாசாரத்தையும் விதைத்துச் சென்றிருக்கிறது.. எடுத்ததற்கு எல்லாம் ஆயுதம் தான் தீர்வு என்ற மனோநிலையும், பழக்கமும், நடைமுறையாகிப் போன காலமாய் 3 தசாப்தம் எம்மை விட்டு அகன்று இருக்கிறது… மறுபறம். 3 …

    • 0 replies
    • 408 views
  23. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வது குறித்து புதிய வழிகாட்டல்கள் அறிமுகம்? பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வது தொடர்பில் புதிய வழிகாட்டல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கைதுகள் தொடர்பில் புதிய சில அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த அறிவுறுத்தல்களின் அடிப்படையிலேயே எதிர்வரும் காலங்களில் கைது செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்படும் நபர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் நோக்கில் இந்த அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. சர்வதேச மனித உரிமை சட்டங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. கைது செ…

  24. பிக்குகளுக்கு உரிமையில்லை : ராஜித.! நாட்டினுள் இனவெறி கட்டியெழுப்பப்படுவது தேர்தலில் வெற்றிப்பெறுவதற்காக மாத்திரமேயெனவும் பிக்குகளுக்கு இனத்தைப்பற்றி பேச எவ்வித உரிமை இல்லையெனவும் அமைச்சர் ராஜித சேனாரத்தின தெரிவித்துள்ளார். நேற்று மருதானையில் இடம்பெற்ற அவரது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். http://www.virakesari.lk/article/6927

  25. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணையே நடைபெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அண்மையில் படையதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதவான்களின் பங்களிப்பு இருக்காது என அவர் தெரிவித்துள்ளார். தென் ஆபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அடிப்படையில் இலங்கையில் உண்மை ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்கள் தொடர்பில் தனிப்பட்ட ரீதியிலா அல்லது கூட்டு அடிப்படையிலா படையதிகாரிகள் தண்டிக்கப்படுவர் என, இராணுவத் தளபதி கிருஸாந்த டி சில்வா பிரதமரிடம் கேள்வி எழ…

    • 0 replies
    • 210 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.