Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'ஒரு செம்பு தண்ணி கொடுத்தவர்கள், தகவல் தெரிவிக்காதவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர், யுவதிகள் சிறைகளில் வாழ்கின்ற நிலையில், சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கிகள் மற்றும் வெடிபொருட்கள், வெள்ளவத்தைக்கு கொண்டு வரப்படவிருந்ததாக முன்னரே அறிந்தும் அரசாங்கத்துக்கு தகவல் தெரிவிக்காத முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை கைது செய்து புனர்வாழ்வளிக்க வேண்டும்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் வெள்ளிக்கிழமை (01) அவரிடம் கருத்துக்கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், …

  2. புங்குடுதீவு மாணவி கொலை. பன்னிரண்டாவது சந்தேக நபரும் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டார் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் பன்னிரெண்டவதகாவும் சந்தேகநபர் ஒருவர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) முன்னிலைப் படுத்தப்பட்டார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ள சந்தேக நபர்களின் வழக்கு விசாரணைகளுடன் இனைக்காது மேலும் ஒருவர் பதினோரவதாக சந்தேக நபராக கைது செய்யப்பட்டு , பிறிதொரு தினத்தில் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் பதினோராவது சந்தேகநபரின் வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் ம…

    • 0 replies
    • 425 views
  3. யாழ் கடலில்.... ஆயிரக் கணக்கில் கரை ஒதுங்கிய, "பென்குயின்" பறவைகள். இன்று காலை .... யாழ். பண்ணைக் கடல், அல்லைப்பிட்டி பகுதிகளில்..... பெருமளவில் வித்தியாசமான பறவைகள் நடமாடித் திரிந்ததை அப் பகுதியில் வசிக்கும் பலர் கண்டு அதிசயித்துப் போனார்கள். இப்படியான பறவைகள் யாழ்கடலில்..... முன்பு தென்பட்டதில்லை என்று அங்கு பல காலமாக கடற் தொழில் செய்து அனுபவப் பட்டவரான முதியவர் ஒருவர் தெரிவித்தார். இது என்ன பறவையாக இருக்கும் என்பதை அறிவதற்காக யாழ். பல்கலைக் கழக பேராசிரியர் ஒருவரை அணுகிய போது... இது, "பென்குயின்" என்றும், குளிர் நாட்டில் வசிக்கும் பறவை, இவை அண்டார்டிகா போன்ற குளிர்ப் பகுதிகளில் மட்டும் வாழ்பவை... இங்கு எப்படி வந்தது என்று ஆச்சரியப்பட்டார். பென்குயின…

  4. 100 கோடி ரூபா பெறுமதியான 101 கிலோ போதைப்பொருட்களுடன் சிக்கியது வெளிநாட்டுக் கப்பல்! [Saturday 2016-04-02 09:00] சுமார் 100 கோடி ரூபா பெறுமதியான 101 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் தென் கடற்பரப்பில் கப்பல் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது கடலில் வைத்து 11 சந்தேக நபர்களும், நிலப்பரப்பில் வைத்து மூவருமாக 14 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். சுமார் 100 கோடி ரூபா பெறுமதியான 101 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் தென் கடற்பரப்பில் கப்பல் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது கடலில் வைத்து 11 சந்தேக நபர்களும், நிலப்பரப்பில் வைத்து மூவருமாக 14 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக உதவி பொலிஸ் அத்தியட்ச…

  5. ஸ்ரீலங்காவுடன் இராணுவ கூட்டுப்பயிற்சிகளை மேற்கொள்ள தயாராகும் அமெரிக்கா [ Saturday,2 April 2016, 03:10:55 ] ஸ்ரீலங்காவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இராணுவ கூட்டுப்பயிற்சிகளை மேற்கொள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கடற்படை கப்பலான ப்ளு ரிட்ச் ஸ்ரீலங்காவை வந்தடைந்துள்ளதோடு, (USS Blue Ridge (LCC 19)) செவன்த் பிலீட் (US 7th Flee) என்ற கடற்படை இசைக்குழுவும் இந்த கப்பலில் வந்தடைந்துள்ளது. இந்நிலையில், இரு நாடுகளினதும் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இருதரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் இராணுவ பயிற்சிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. செவன்த் பிலீட் இசைக்…

  6. சம்பூர் பிரதேசத்தில் அனல் மின்சார நிலையம் அமைப்பதைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் மூதூரில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. மூதூர் பசுமைக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுப்பட்ட இந்தப் பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள், அனல் மின்சார நிலையம் அமைப்பதை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர். மூதூர் பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையச் சந்தியிலிருந்து ஆரம்பமாகிய பேரணி, மூதூர் பிரதேச செயலகம் வரை சென்றது. பேரணியில் ஈடுபட்டோர் பிரதேச செயலாளர் வீ.யுசூப்பிடம் மகஜரை கையளித்தனர். ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் தெரிவிக்கையில், 'சம்பூர் பிரதேசத்தில் …

    • 1 reply
    • 740 views
  7. போர் முடிவுக்கு வந்த பின்னர் வவுனியா மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளிலிருந்தும் 47.30 சதுர கிலோமீற்றர்கள் (4730 ஹெக்டயர்) காணி அபகரிக்கப்பட்டு, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவுக்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட எல்லைகள் மீள்நிர்ணய குழுக்கூட்டத்தில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்குறித்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வவுனியா பிரதேச செயலக பிரிவிலிருந்து 19.40 சதுர கிலோமீற்றர்களும், வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிலிருந்து 4.40 சதுர கிலோமீற்றர்களும், வவுனியா வடக்க…

  8. வடமாகாண சபையின் அரசியல் தீர்வு திட்ட யோசனை எதிர்வரும் 7 ஆம் திகதி வடமாகாண சபையில் சமர்ப்பிக்கப்படும் என முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசியல் யாப்பு மறுசீரமைப்பு ஒன்றிற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில் வடமாகாண மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்ட நிலையில், குறித்த குழுவினர் நேற்று இது தொடர்பில் சந்தித்து கலந்துரையாடினர். அந்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் தீர்வு திட்ட யோசனை தொடர்பில் உறுப்பினர்களின் கருத்துக்கள் பெறப்ப…

  9. தமிழீழ தேசியத் தலைமை ஆயுதங்களை மௌனிப்பதாக முடிவெடுத்த கணம் முதல் ஆயுதப்போர் ஓய்வுநிலைக்கு சென்றிருந்தாலும் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள இராணுவத்தினர் இன்றுவரை விலக்கிக்கொள்ளப்படவில்லை என்பதுடன் இராணுவ முகாம்களும் மூடப்படவில்லை. இராணுவ முற்றுகைக்குள் தமிழர்களை தொடர்ந்தும் அடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என்பதே சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளின் மாறா நிலைப்பாடாக இருந்துவருகிறது. ஆயுத முனையில் தமிழர்களை அடக்கியாளும் எதேச்சதிகாரப்போக்கின் வெளிப்பாடான இராணுவ இருப்பை நியாயப்படுத்துவதற்காக கடந்த ஆறு ஆண்டுகளாக இதுபோன்ற நாடக ஆயுத மீட்பு நிகழ்வுகள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றது. அதன் நீட்சியாகவே சாவகச்சேரி சம்பவமும் அமைந்துள்ளது. …

  10. சாவகச்சேரி பிரதேசத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் என்பன புலிகளினால் யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்டவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த வெடிபொருட்கள் தொடர்பில் பயங்கரவாத ஒழிப்பு பிரிவு தற்பொழுது விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் முன்னாள் புலி உறுப்பினர் என தெரிவித்த பதில் பொலிஸ் மா அதிபர், கொழும்பு தலைமையகத்தில் தடுத்து வைத்து அவர் விசாரணைக்கு உட்படுத்தபட்டு வருவதாகவும் குறிப்பிட்…

  11. யாழ். குடாநாட்டு ஆலயங்களில் விலங்குகள் வெட்டி வேள்வி நடத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை இன்று பிறப்பித்துள்ளது. ஆலயங்களில் விலங்குகளைப் பலிகொடுத்து நடத்தப்படும் வேள்விகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அகில இலங்கை சைவ மகாசபை தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின்போதே இந்த உத்தரவை நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்துள்ளார். இறைச்சிக்கடைச் சட்டத்தின் கீழேயே இந்த வேள்விகளுக்கான ஆடு கோழி என்பவற்றை வெட்டுவதற்கான அனுமதி வழங்கப்படுவதனால் ஆலயங்களுக்கு அத்தகைய அனுமதி வழங்குவது சரியானதா என்றும், மிருக பலி கொடுத்து வேள்வி நடத்தும் ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள் கோவில் நடத்துகின்றார்…

  12. தேசியப் பாதுகாப்பு குறித்து மஹிந்த, ரணிலுக்கு ஆலோசனை: நாட்டின் தேசியப் பாதுகாப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். சாவகச்சேரியில் அண்மையில் மீட்கப்பட்ட க்ளைமோ குண்டுகள், தற்கொலை அங்கி மற்றும் ஏனைய வெடிபொருட்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி, பிரதமரிடம் கலந்துரையாடியுள்ளார். வெடிபொருட்கள் மீட்கப்பட்ட விடயம் குறித்து தொலைபேசி ஊடாக மஹிந்த, தகவல்களை கேட்டறிந்து கொண்டுள்ளார். பயங்கரவாதம் முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை எந்தவகையிலும் அனுமதிக்க முடியாது என மஹிந்த ராஜபக்ஸ தெ…

    • 1 reply
    • 447 views
  13. குமார் குணரட்னத்தை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: பலர் காயம் இலங்கையில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள சோசலிஷ கட்சியின் முன்னணி தலைவர் குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமையை பாதுகாக்கக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது காவல்துறை தடியடியில் அவரது ஆதரவாளர்கள் பலர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். குமார் குணரட்னம் ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்றவர். குமார் குணரட்னத்தின் ஆதரவாளர்கள், தலைநகர் கொழும்பு பொரளையில் அமைந்துள்ள குடிவரவு - குடியகல்வு திணைக்கள கட்டடத்தின் கண்ணாடிகளை உடைத்து, அதனுள் நுழைய முற்பட்டபோது அங்கு பெரும் பதற்றமான சூழல் காணப்பட்டது. குடிவரவு சட்டத்தை மீறி இலங்கையில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில், குமார் குணரட்னத்திற்கு ஒர…

  14. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகருக்கு சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில மற்றும் பந்துல குணவர்த்தனவின் பயணப் பொதிகள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டலஸ் அலகபெரும, கம்மன்பில் மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் தனி தனியாகவே ஜெனீவாவிற்கு சென்றுள்ளனர். அதற்கமைய உறுப்பினர்கள் மூவர் மூன்று விமானங்களில் ஜெனீவாவிற்கு சென்று கூட்டு எதிர்க்கட்சிகாக யோசனை ஒன்றை ஒப்படைத்துள்ளனர். தமக்கு எதிராக நிதி குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் அரசாங்கத்தினால் இடம்பெற்ற அநீதிகள் தொடர்பில் சர்வதேசத்திடம் அறிவிக்கவே சென்றுள்ளனர். உதய கம்மன்பில முதலாவதாக ஜெனிவாவை நெருங்கிய நிலையில் அங்கு தனது பயணப் பொதி காணாமல் போயுள்ளமை தொடர்பில் அறிந்துகொள்ள முடிந்துள்ளது. உ…

    • 1 reply
    • 582 views
  15. பொதுமக்கள் வாழும் பிரதேசங்களான புதுமத்தளன், முள்ளிவாய்க்கால், வெட்டுவாய்க்கால் ஆகிய இடங்களிள் தற்பொழுது தற்கொலை அங்கிகள் மற்றும் அபாயகரமான வெடிபெருட்கள் ஆங்காங்கே தேடுவாரற்று கிடக்கின்றது. பொதுமக்கள் விறகு எடுக்கச் செல்லும் போது இவற்றை தினமும் அவதானிக்கின்றனர் ஆனால் அவர்களுக்கு அது பழக்கமாகி விட்டது. எனினும் அதற்குள் என்ன இருக்கின்றது என்று எவரும் ஆராயவில்லை விசப்பாம்மை கண்டால் விலகிச் செல்வது போல் விலகிச் செல்கின்றனர். யுத்தம் முடிந்தபின் இராணுவத்தினர் தீவிரமாக வெடிபொருட்களை குறித்த பிரதேசத்தில் இருந்து அகற்றினார்கள். இருப்பினும் பின்பு அவர்கள் பெறுமதியான பொருட்களை மீட்பதிலேதான் அக்கறை செலுத்தியதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். தற்பொழு…

  16. மறவன்புலவு தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகள் மீட்பு விடயம் தமிழ் மக்களை துன்புறுத்துவதற்கான நாடகம் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். தந்தை செல்வாவின் 118வது பிறந்த தினமான நேற்று தந்தை செல்வா சதுக்கத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அங்கு மீட்கப்பட்ட பொருட்கள் சிங்கள பத்திரிகையினால் பொதி செய்யப்பட்டுள்ளன. இதை தமிழ் மக்கள் மீது சுமத்தி, விடுதலைப் புலிகள் மீண்டெழுகின்றார்கள் என குற்றம் சாட்டி, தமிழ் மக்களை துன்புறுத்துவதற்கான நாடகமே இது. அத்துடன், எமது மக்கள் மீது இனவெறியினை தூண்டும் நோக்கத்துடன், இனவெறிச் செயலாக செய்கின்றார்கள்…

  17. ஜனாதிபதி செயலகத்தின் செலவுகள் அறுபது விகிதம் குறைக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டுப் பயணங்களுக்காக தான் சாதாரண பயணிகள் விமானத்திலேயே சென்று வந்துள்ளதாகவும் ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் புதிய கட்டடத் தொகுதியை நேற்று திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ‘நிதி ஒழுக்கம் மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அரசியல்வாதிகளைப்போன்று அரச அதிகாரிகளினதும் பொறுப்பாகும். வருடாந்த இலக்குகளை அடைந்து கொள்வதற்கு வருடத்தின் ஆரம்பம் முதலே பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் நிதி ஒழுக்கமும் சிற…

  18. அஸ்கிரிய மகாநாயக்க தேரர் பதவியில் சலசலப்பு..! அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரராக இருந்த கலகம அத்ததஸ்ஸி தேரர்அண்மையில் காலமானதையடுத்து, அஸ்கிரிய மகாநாயக்கதேரர் பதவியைப் பெறுவதற்கு இரண்டு மகாநாயக்கர்கள் களத்தில் குதித்துள்ளனர். மகியங்கனை விகாராதிபதியான வரகாகொட ஞானரத்னதேரரும் பொலனறுவை 12 தலங்களின் விகாராதிபதியான வெண்டருவே உபாலி தேரருமே இப்பதவிக்கான போட்டியில் குதித்துள்ளனர். தற்பொழுது அஸ்கிரிய பீடத்தின் துணை மகாநாயக்கர்களாக பதுளை மகியங்கனை விகாராதிபதியும் பொலனறுவை 12 தலங்களின் விராதிபதியும் உள்ளனர். இது தொடர்பாக அஸ்கிரிய பீடாதிபதி தேரர்கள் குழுவுக்கு இவர்கள் இருவரும் முறையாக அறிவித்துள்ளனர். இதற்குத் தகுதியான ஒருவரை தேர்ந்தெடுப்…

  19. மஹிந்தவுக்கு நாள் இல்லை புதிய அரசியலமைப்பு தொடர்பான யோசனைகளைப் பெற்றுக்கொள்ள, நாளொன்றை ஒதுக்கித் தருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டிருந்த போதிலும், இதுவரையில் அதற்கான பதில் கிடைக்கவில்லை என்று புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளைப் பெறும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க கூறினார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கொழும்பு - ஜனாதிபதி மாவத்தையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் வைத்து, புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை வழங்கினார் என்றும் விஜேநாயக்க கூறினார். - See more at: http://www.tamilmirror.lk/169308/%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A8-%E0%AE%B3-%E0%AE%…

  20. சிறுநீரக வியாபாரம் உறுதியானது; அறுவரிடம் அறுத்தெடுப்பு வெள்ளவத்தையில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் 8பேரின் அறுவரது சிறுநீரகங்கள் அகற்றப்பட்டுள்ளன என்று சட்டவைத்திய அதிகாரியின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுநீரக வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ், கொழும்பு, வெள்ளவத்தை பிரதேசத்தில் வைத்து கடந்த மாதம் 4ஆம் திகதி மேற்படி இந்தியர்கள் எட்டு பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் அறுவரது சிறுநீரகங்களே அகற்றப்பட்டுள்ளன என்று சோதனைகளின் போது தெரியவந்துள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (01…

  21. வித்தியா படுகொலை வழக்கு! அரச தரப்பு சாட்சியாக மாறிய சந்தேகநபர் இருவரின் விளக்கமறியல் நீடிப்பு! புங்குடுதீவு வித்தியா படுகொலை தொடர்பில் அரச சாட்சியாக மாறிய சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற பதில் நீதிவான் இ.சபேசன் உத்தரவிட்டார். வித்தியா படுகொலை தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் 10சந்தேக நபர்களைத் தவிர்ந்த இருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். ஆனால் அவர்கள் இருவரும் வித்தியா படுகொலைக்கு அரச தரப்பு சாட்சியாக மாறினர். அதனடிப்படையில் 10 சந்தேக நபர்களுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாது, அரச தரப்பு சாட்சியாக மாறிய சந்…

  22. போரின் போது காணாமல் போனோர் மாலைதீவில்! போரின் போது காணாமல்போனதாக கூறப்படும் நான்கு பேர் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்திருக்கும் காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம அவர்களில் இருவர் மாலைதீவு சிறைகளில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியாலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். காணாமல் போனோர் தொடர்பில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் நால்வர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அதுகுறித்து விரைவில் வெளிப்படுத்துவோம் எனவும், காணாமல் போனதாக கூறப்பட்ட இரண்டு பேர், மாலைதீவு சிறைச்சாலையிலும் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். …

    • 2 replies
    • 578 views
  23. சாவகச்சேரி வெடிபொருட்கள் – இனவாதிகளே கூச்சலிடுகின்றனர் என்கிறார் வடக்கு ஆளுனர் சாவகச்சேரியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்தை, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று இனவாதிகளே கூச்சலிடுவதாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டில் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளை நல்லாட்சி அரசாங்கம் துரிதமாக முன்னெடுத்து வரும் நிலையில், இனவாதிகளால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. போரை வென்றதை விடவும் கடினமான விடயம் மக்கள் மனங்களை வெல்வதேயாகும். அந்த இலக்கை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடைந்துள்ளார். அதிகம் மக்கள் ஆதரவைப் பெற்ற தலைவ…

  24. சாவகச்சேரி வெடிபொருட்களுடன் இராணுவச் சிப்பாய்க்குத் தொடர்பா? சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட வீட்டை, சந்தேக நபரான ரமேஸ் எனப்படும், எட்வேர்ட் ஜூலியனுக்கு, பெற்றுக் கொடுத்தவர், சி்றிலங்கா இராணுவத்தில் பணியாற்றும் ஒருவரின் சகோதரரே, என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சாவகச்சேரி வீட்டில், கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள், விடுதலைப் புலிகளால் கைவிடப்பட்டவை அல்ல என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2001ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட அந்தப் பகுதியில், பல முறை தேடுதல்கள் நடத்தப்பட்டிருந்தன. கடந்த ஆண்டு ஜனவரி மாதமே, சிவதர்சன் என்பவரின் உதவியுடன் ரமேஸ் இந்த வீட்டில் குடியேறியுள்ளார் என்ற விசாரணையில் தெரியவந்துள்ளது. …

  25. தற்கொலை அங்கி மீட்பு! சர்வசாதாரண விடயம் 25 தடவைகளுக்கு மேல் மீட்கப்பட்டுள்ளன என்கிறார்; வடக்கு ஆளுநர் போர் முற்றுப்பெற்றதிலிருந்து இன்று வரையில் இருபத்தைந்து தடவைகளுக்கும் அதிகமாக யாழில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. எனவே சாவகச்சேரியில் கிடைக்கப் பெற்ற தற்கொலை அங்கியும் வெடிபொருட்களும் அவ்வாறு மீட்கப்பட்டவையேயாகும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். இந்த விவகாரத்தை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலென காண்பிக்க தெற்கின் இனவாதிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இறுதிப் போரில் மக்களின் இருப்பிடங்கள் கைப்பற்றப்பட்டமை, காணாமல்போனோர் விவகாரம் போன்றவையில் புலிகளுக்கும் புலிகள் அல்லாத வேறு குழுக்களுக்கும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.