Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகளில் முதல் 10 இடங்களை பெற்றவர்கள் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ளது. இதன்படி அகில இலங்கை ரீதியில்... 1 ஆம் இடம் - சத்சரணி ஹெட்டியாராச்சி - விசாகா வித்தியாலயம், கொழும்பு 2 ஆம் இடம் - சாமல் புன்சர - நாலந்தாக் கல்லூரி, கொழும்பு 3 ஆம் இடம் - ஆர்.எம். ரத்நாயக்க - தேவி பாலிகா வித்தியாலயம், கொழும்பு 3 ஆம் இடம் - ஐ. ரத்நாயக்க - மாகாமாயா பெண்கள் கல்லூரி, கண்டி 4 ஆம் இடம் - எம்.எம். ரனிது அர்ஜூன ஹேரத் - நாலந்தாக் கல்லூரி, கொழும்பு 5 ஆம் இடம் - நெவிலி அமரஜித் வல்பிட்ட - ஆனந்தாக் கல்லூர…

  2. காணாமல்போனோரின் உறவுகள் சான்றிதழ் பெறுவதே நன்று! உறவினர்களை தொலைத்து விட்டு இருக்கின்றவர்கள் காணாமல்போனோர் தொடர்பான சான்றிதழ்களை பெற்றுக் கொள்வது பொருத்தமாக இருக்கும். காணாமல் போனோரின் உறவினர்கள் அரசாங்கம் வழங்கும் காணாமல்போனோர் குறித்த சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இவ்வாறு காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம தெரிவித்தார். மக்ஸ்வல் பரணகம இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், நாங்கள் கடந்த இரண்டு வருடங்களாக காணாமல்போனோர் குறித்து விசாரணைகளை நடத்தி வந்தோம். அந்த வகையில் இன்னும் சிறிது காலத்தில் எமது ஆணைக்குழுவின் செயற்பாடுகள் ந…

    • 3 replies
    • 347 views
  3. வடமாகாண சபையின் தீர்வுத் திட்டம் தாமதம்! முழுமை பெறாமையால் 29ஆம் திகதியே சபைக்கு வரும்! வடக்கு மாகாண சபையினால் தயாரிக்கப்பட்டு வரும் அரசியல் தீர்வுத் திட்டம், நாளை நடைபெறும் மாகாண சபை அமர்வில் சமர்பிக்கப்படாது என்று தெரிய வருகின்றது. அரசியல் தீர்வுத் திட்டம் இன்னமும் முழுமைப்படுத்தப்படாமையால் எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறும் விசேட அமர்விலேயே சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. அரசினால் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் வடக்கு மாகாண சபையும், புதிய அரசமைப்புக்கான கருத்துக்களை முன்வைப்பதற்காக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் குழு ஒன்றை நியமித்தத…

  4. மீள்குடியேறிய மக்களுக்கு ஏற்ற வகையில் வீட்டுத்திட்டம் இல்லை! மீள்குடியேற்ற அமைச்சினால் புதிய வீடுகள் பெறுவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் அதன் நிபந்தனைகள் மீள்குடியேறிய மக்களுக்கு கிடைப்பது அரிதாகவே உள்ளதாக வவுனியா வடக்கில் மீள்குடியேறிய மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், அண்மையில் மீள்குடியேற்ற அமைச்சினால் புதிய வீடுகளை பெறுவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது. இவை பத்திரிகை வாயிலாகவும் காட்சிப்படுத்தப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டது. எனினும் போர் காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறியோரில் பலர் இன்றுவரை வீடுகள் இன்றி கொட்டகைகளிலும், தற்காலிக கொட்டகைளிலும் வசித்து…

  5. தட்டாதெரு வாள்வெட்டு; இருவருக்கு விளக்கமறியல், ஒருவர் பிணையில் விடுவிப்பு! தட்டாதெருவில் நடைபெற்ற வாள் வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 3 மாணவர்களில் ஒருவர் ஓர் இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் மற்றைய 2 மாணவர்களையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரன் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார். தட்டாதெருவில் அமைந்துள்ள மரக்காலை ஒன்றில் நின்ற இளைஞர்களை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் குழு ஒன்று நடுவீதியில் கலைத்து கலைத்து வாளால் வெட்டிய சம்பவம் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. …

  6. பிரதமரின் பயணத்தை ஒளிப்பதிவு செய்தவர் கைது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வாகனப் பயணத்தை தமது கையடக்க தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்த இளைஞன் ஒருவர் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பிரதமர் கொள்ளுப்பிட்டி வழியாக சென்றுகொண்டிருக்கும்போது, குறித்த இளைஞன் அதனை ஒளிப்பதிவு செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட இளைஞன் கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதானவர் எனவும் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கொள்ளுப்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, விசாரணைகளைத் தொடர்ந்து அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க…

  7. காங். நடேஸ்வராக் கல்லூரி உட்பட்ட பாடசாலைகள் மிக விரைவில் சொந்த இடங்களில் இயங்கும்! யாழ். காங்கேசன்துறை, நடேஸ்வராக் கல்லூரி மற்றும் நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் மிக விரைவில் சொந்த இடங்களில் இயங்கும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்வரும் எப்ரல் மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகும் 2ஆம் தவணை முதல் இந்தப் பாடசாலைகளை சொந்த இடங்களில் இயக்குவதற்கு கல்வித்திணைக்களமும், பாடசாலைகளின் நிர்வாகத்தினரும் திட்டமிட்டு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நடேஸ்வராக்…

    • 1 reply
    • 354 views
  8. மகிந்தவுடன் தனிப்பட்ட ரீதியில் விரோதம் இல்லை! முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சடன் தமக்கு தனிப்பட்ட ரீதியில் எவ்விதமான வைராக்கியமும் இல்லையென அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். முழு நோன்மதி தினத்தை முன்னிட்டு நேற்று களனி ரஜமஹா விஹாரையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட பொன்சேகா, அதன் பின்னர் ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்தார். அத்தோடு, ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் தமக்கு களனி அமைப்பாளர் பதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொன்சேகா குறிப்பிட்டார். அவ்வாறு தெரிவானால் அப்பதவியை ஏற்று நாட்டுக்காக சேவை செய்ய தயாராக இருப்பதாகவும், யார் மீதும் தமக்கு எவ்வி…

  9. கஞ்சா கலந்த மாவாவுடன் மாணவன் கைது! யாழ்ப்பாணம் ஓட்டு மடப் பகுதியில் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் ஆனைக்கோட்டை பகுதியினைச் சேர்ந்த பாடசாலை மாணவன், இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். கைதான மாணவன், யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்விகற்பவர் என பொலிஸார் தெரிவித்தனர். இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் ஓட்டு மடப் பகுதிக்கு சிவில் உடையில் சென்ற பொலிஸார், சந்தேகநபரான மாணவனை கைது செய்ததுடன் 50 கிராம் நிறையுடைய கஞ்சா கலந்த மாவாவினை கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மாணவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத…

    • 2 replies
    • 517 views
  10. “காணி, பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கு­வதை எதிர்க்­க­வில்லை” வட மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கு­வதை எதிர்க்­க­வில்­லை­யெனத் தெரி­வித்த மஹிந்த அணி ஆத­ரவு எம்.பி. வாசு­தேவ நாண­யக்­கார அதி­கா­ரத்தை பர­வ­லாக்­கு­வதால் மட்டும் நாடு முன்­னேற்­ற­ம­டை­யாது என்றும் குறிப்­பிட்டார். இது தொடர்­பாக வாசு­தேவ நாண­யக்­கார எம்.பி.மேலும் தெரி­விக்­கையில், இலங்­கையில் ஒற்­றை­யாட்சி அர­சி­ய­ல­மைப்பே உள்­ளது. அதற்­க­மை­யவே தற்­போது அதி­கா­ரங்கள் பர­வ­லாக்­கப்­பட்­டுள்­ளன. எனவே இந்த அதி­கா­ரங்­களை மேலும் பர­வ­லாக்க வேண்டும். பலப்­ப­டுத்த வேண்டும். இதில் தவ­றில்லை. அதே­வேளை வடக்கு, கிழக்கு உட்­பட அனைத்து மாகாண சபை­க­ளுக்கும் காணி, பொ…

    • 1 reply
    • 690 views
  11. வழ­மைக்கு மாறாக நிலவும் கடும் உஷ்­ண­மான கால­நிலை இன்னும் சில நாட்­க­ளில் ­மேலும் அதி­க­ரிக்­கலாம் என எதிர்வு - 15 நிமி­டங்­க­ளுக்கு ஒரு முறை­யா­வது சிறி­த­ளவு நீரை­யேனும் பரு­கு­மாறு ஆலோ­சனை நாட்டின் பல பாகங்­களில் வழ­மைக்கு மாறாக நிலவும் கடும் உஷ்­ண­மான கால­நிலை இன்னும் சில நாட்­க­ளில்­ மேலும் அதி­க­ரிக்­கலாம் என எதிர்வு கூறப்­பட்­டுள்­ளது. இதன்கார­ண­மாக பகல் வேளை­களில் வெளியில் விளை­யா­டுதல் மற்றும் உடற்­ப­யிற்­சியில் ஈடு­ப­டுத்தல் போன்­ற­வற்­றுக்கு தற்­போது நிலவி வரும் கால­நிலை பொருத்­த­மா­ன­தன்று என வளி­மண்­ட­ள­வியல் திணைக்­களம் விடுத்­துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்­பிட்­டுள்­ளது. மேலும் பகல் வேள…

  12. க.பொ.த. (சா/த) பரீட்சையில் 6102 பேர் 9 பாடங்களிலும் “ஏ” க.பொ.த. சாதா­ரண தரப் பரீட்­சைக்கு பாட­சாலை மட்­டத்தில் தோற்­றிய மாணவ மாண­வி­களில் 6102 பேர் 9 பாடங்­க­ளிலும் “ஏ” சித்­தி­ய­டைந்­துள்­ளனர். இரண்டு இலட்­சத்து 70,224 பரீட்­சார்த்­திகள் க.பொ.த. சாதா­ரணதர பரீட்­சைக்குத் தோற்­றினர். இவர்­களில் ஒரு இலட்­சத்து 84,928 பேர் உயர்­த­ரத்தில் கல்வி கற்க தகு­தி­ பெற்­றுள்­ளனர். இது 69.33 சத­வீ­த­மாகும். 2014ஆம் ஆண்டு உயர்­த­ரத்­துக்கு 69.02 வீதத்தினரே தகுதி பெற்றிருந்தனர். - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=15679#sthash.BXAdxH2D.dp…

  13. சம்பூரில் 177 ஏக்கர் காணிகள் விடுவிப்பு -ஏ.எச்.ஏ. ஹுஸைன் 'திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் கடற்படை வசமிருந்த 177 ஏக்கர் காணிகளை விடுவித்து, அவை வெள்ளிக்கிழமை(25) பொதுமக்களுக்கு கையளிக்கப்படவுள்ளன. இவ்வாறு விடுவிக்கப்படும் காணியில் மொத்தமாக 546 குடும்பங்கள் மீள்குடியேறவுள்ளன' என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான என்.ஏ.ஏ. புஷ்பகுமார தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 'இதன்போது, சம்பூர் மகா வித்தியாலயம் அமைந்திருந்த காணியும் விடுவிக்கப்படும். இக் காணிகளை மக்களுக்கு கையளிக்கும் வைபவம் வௌ காலை 10 மணிக்கு சம்பூரில் நடைபெறவுள்ளது. இதில், எதிர்க்கட்சித் தலைவர்…

  14. வலிகாமம் வடக்கை தவறவிட்ட கூகுள் -எம்.றொசாந்த் கூகுள் வீதிப் படங்கள் இன்று புதன்கிழமை (23) வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலய பகுதிகளை பார்வையிட முடியாதுள்ளது. கூகுள் வீதிப் படங்கள் எடுப்பதற்கான கடந்த காலங்களில் யாழ்ப்பாண வீதிகளில் கூகுள் நிறுவன கார் ஒன்று வீதிகள் அனைத்திலும் சென்றது. ஆனால், அந்தக் கார் வலிகாமம் வடக்கின் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் செல்லவில்லையென்பது இன்று வெளியிடப்பட்ட கூகுள் வீதிப் படங்களின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தைத் தாண்டி வீதிப் படங்கள் கூகுளில் இல்லை. அதேபோல், எங்கெல்லாம் உயர்பாதுகாப்பு வலய எல்லைகள் தொடங்குகின்றதோ அங்கிருந்து உயர்ப…

  15. ஜேர்மன் நிபுணர்கள் ஆய்வறிக்கை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு! மின் இணைப்பில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பில் ஜேர்மன் நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வறிக்கை இன்று நாடாளுமன்றில் மின்சக்தி மற்றும் எரிச்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இலங்கை வந்துள்ள ஜேர்மன் நிபுணர்கள் மின் இணைப்பு வெடிப்பு தொடர்பான ஆய்வுகளின் இறுதி அறிக்கையை நேற்று இலங்கை மின்சார சபை தலைவரிடம் கையளித்திருந்தனர். இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின் இணைப்பில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த விஷேட நிபுணர்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://onlineut…

  16. ஐ.நாவின் வழிகாட்டலிலேயே போர்க்குற்ற விசாரணை! மைத்திரியின் கருத்துக்கு பான் கீ - மூனின் பேச்சாளர் பதிலடி! இலங்கையில் இடம்பெற்ற போரின் போதான சம்பவங்கள் குறித்து நம்பத்தகுந்த விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐ.நாவின் வழிகாட்டுதல்களுக்கு அமைய நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பது இன்றியமையாத விடயம் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ - மூனின் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்கப்போவது இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் கருத்து வெ…

  17. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது! [ புதன்கிழமை, 23 மார்ச் 2016, 01:36.40 AM GMT ] மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிசான் தனசிங்க கொழும்பு பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்… நீதிமன்றங்களினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை தற்போது ஆயிரத்தை விடவும் அதிகரித்துள்ளது. அண்மைக் காலமாக மரண தண்டனை விதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சிறைச்சாலைகளில் இடப் பற்றாக்குறை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மரண தண்டனை கைதிகளை தடுத்து வைத்திருப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன என அவர் குறிப்…

  18. மைத்திரி அரசுக்கு ஆபத்து! மஹிந்த அணிக்கு தாவ தயாராகும் அமைச்சர்கள் [ புதன்கிழமை, 23 மார்ச் 2016, 03:32.20 AM GMT ] ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் ஐவர் மற்றும் பிரதி அமைச்சர் மூவர் உட்பட சிலர் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த இருவருடன் ரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமது அமைச்சு பதவியை கைவிட்டு செல்வதற்கு, குறித்த உறுப்பினர்கள் ஆயத்தமாக இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சி பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். அதற்கமைய எதிர்வரும் நாட்களில அரசியல் ரீதியில் தீர்மானமிக்க தினத்தில் இந்த கட்சி தாவல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இதற்கு முன்னர் முன்னணி…

  19. தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்பதனை தீர்க்கமான தீர்மானமாக உலகின் முன் உரைத்து நிற்கும் 'வட்டுக்கோட்டை தீர்மானம்' நிறைவேற்றப்பட்டதன் நாற்பதாவது ஆண்டாகிய இவ் ஆண்டை 'வட்டுக்கோட்டை தீர்மானம்' வலுவூட்டல் ஆண்டாக பிரகடனம் செய்து அதுகுறித்த செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம். அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை, நாடுகடந்த தமிழீழ அரசு, தமிழ் இளையோர்கள் ஆகியவை இணைந்து முன்னெடுத்துவரும் 'வட்டுக்கோட்டை தீர்மானம்' வலுவூட்டல் செயற்பாடுகளின் அடிப்படையில் பல்வேறுபட்ட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் சமநேரத்தில் கடந்த 12 ஆம் த…

  20. தமிழ் அரசியல் கைதிகளின் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அமைக்கப்பட்ட விசேட நீதிமன்றம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பாணை பிறப்பித்துள்ளது. எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி அவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு விசேட நீதிமன்ற நீதவான் ஐராங்கனி பெரேரா அழைப்பாணை பிறப்பித்துள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை இலக்குவைத்து கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பு - கொள்ளுப்பிட்டி, பித்தல சந்தியில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததது. இந்தத் தற்கொலைத் தாக்குதலுக்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 தமிழ் அரசியல் கைதிகள் மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு வ…

  21. மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதி பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். மீனவர்களின் காணிகள் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மனித கழிவுகள் நிலையம் அமைக்கும் பணியை நிறுத்தக்கோரியும் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பாலமீன்மடு பகுதியில் உள்ள மூன்று ஆலயங்களுக்கு அருகில் மனித கழிவுகள் மற்றும் மனித சடலங்களை எரிக்கும் நிலையம் அமைக்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை, நாட்டில் இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தின் போது இந்த பகுதியில் இருந்த ஐம்பது மீனவர்களின் காணிகளை சுற்றுலா விடுதி அமைப்பதற்காக நிறுவனம் ஒன்றிற்கு குத்தக…

  22. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் தாம் பேணி வந்த உறவுகள் குறித்த விமர்சனங்களை நிராகரிப்பதாக கொமன்வெல்த் நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் விவகாரங்களை சர்மா கண்டு கொள்வதில்லை என மனித உரிமை அமைப்புக்களும் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு தரப்புக்களும் குற்றம் சுமத்தியிருந்தன. இந்தநிலையில் இந்தக் குற்றச்சாட்டுக்களை கமலேஷ் சர்மா நிராகரித்துள்ளார். அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இணைந்து அதன் கொள்கைகள் கோட்பாடுகளை மேம்படுத்துவதே பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=153938&cat…

  23. பொலிசாரின் தவறும், நீதிமன்றின் தீர்ப்பும், பிணையாளியின் சிறைவாசமும்.. சிறை கைதி வழக்கு தவணைகளுக்கு சமூகம் அளிக்கவில்லை எனக் கூறி பிணையாளியை சிறைக்கு அனுப்பிய கிளிநொச்சி பொலீஸார்: கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புபட்ட, முசுறன்பிட்டியில் வசிக்கும் ஜெகன் என்பவரை தருமதபுரம் பொலீஸார் கைது செய்தனர். அதே இடத்தில் வசிக்கும் மு.சிவா என்பவர் இவருக்கு பிணை கையெழுத்திட்டு, பொலீஸ் நிலையத்தில் இருந்து விடுவித்தார். வெளியில் சென்ற ஜெகன் பதினைந்து நாட்களில் மீண்டும் சகிப்புடன் பிடிப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு ஆறு மாதம் சிறையும், ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப…

  24. நம்பகமான விசாரணையே எமக்குத் தேவை! இலங்கையில் இடம்பெற்ற போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக நம்பகமான விசாரணைகளையே ஐ.நா வலியுறுத்துவதாக ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின் பின்னர், நீதிச்செயற்பாடுகளில் வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்கப் போவதில்லை என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளது தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விசாரணைகள் எவ்வாறு போகின்றன என்பதை ஐ.நா மனித உரிமைகள் பேரவை மதிப்பீடு செய்யும். ஆனால் இது நம்பகமான விசாரணையாக என்பதை உறுதிப்படுத்துவதே எமக்குத் த…

  25. இலங்கையில் அறிமுகமானது Street View இலங்கை பாதை படம்(Street view) இப்போது கூகுள் வரைப்படத்தில்(Google Maps) கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்தது. இலங்கை மற்றுமல்ல உலகம் முழுவதும் வசிக்கும் உள்ள மக்கள் அனைவரும் இப்போது தங்கள் கையடக்கத்தொலைபேசி அல்லது கணினியில் இருந்து 360-டிகிரியில் அழகான படங்களில் இலங்கையை பார்வையிட முடியும். கூகுள் இன்று இலங்கையில் வெளியிட்டுள்ள இந்த வசதி உலகில் 76 நாடுகளிலே பாவணைக்கு உள்ளது. கிடைக்கும் பாதை படத்தை(Street view) மக்கள் ஆராய்ந்து தங்கள் செல்ல விரும்பும்இடங்களுக்கு செல்ல முடியும் என்று கூகுள் வரைப்படம்(Google Maps) தெரிவிக்கிறது. கூகுள் வரைபடத்தில் ஒரு இடத்தை பெரிதாக்குவதன் மூலம் வீதி நி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.