ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரியின் காணி தோண்டப்பட்டது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின், பிரதம பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில்கேவின், காணியில் பல இடங்கள் பெக்கோ இயந்திரத்தை கொண்டு தோண்டப்பட்டது. மெதமுலனயில் உள்ள காணியே இவ்வாறு தோண்டப்பட்டது. எனினும், தோண்டப்பட்ட இடங்களிலிருந்து, பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் பொருட்களோ அல்லது பெறுமதிவாய்ந்த பொருட்களோ மீட்கப்படவில்லை என்று அறியமுடிகின்றது. பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 20 பேர், இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பணம், தங்க நாணயங்கள் மற்றும் ஆயுதங்கள் இருப்பதாக இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களை அடுத்தே, அந்த காணி தோண்ட…
-
- 1 reply
- 357 views
-
-
வடக்கில் இராணுவ முகாம்கள் படிப்படியாக அகற்றப்படும்: புதிய ஆளுநர் உறுதி! வடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்கள் படிப்படியாக குறைக்கப்படும் என்ற உறுதிமொழியை வடமாகாணத்திற்காக புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் ரெஜினோல்ட் குரே வழங்கியுள்ளார். கொழும்பு பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் இன்று நடைபெற்ற பூஜை வழிபாட்டில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்படி உறுதிமொழியை வழங்கினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்கள் மற்றும் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பாக 6 மாத காலங்களில் ஆய்வு செய்து தீர்க்கும்படி ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதை ஆளுநர் இதன்போது…
-
- 0 replies
- 284 views
-
-
‘வடமராட்சி கிழக்கு நன்னீர் திட்ட சர்ச்சைக்கு’ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முதலமைச்சர், விவசாய அமைச்சர், மற்றும் வடமராட்சி கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் ஆகியோர் சந்தித்து ஒரு சுமூக தீர்வை எட்ட முயற்சி செய்யவேண்டும் என்ற துளியம் இணையத்தின் யோசனையை தான் ஏற்பதாகவும் அதற்கான முயற்சியை தாம் எடுப்பதாகவும் வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்துள்ளார். வடமராட்சி கிழக்கு மக்கள் அமைப்புக்களால் ஒழுங்குபடுத்தப்பட்டு இன்று (26-02-2016) நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டம் தொடர்பாகவும் வடமராட்சி கிழக்கின் நிலமைகள் தொடர்பாகவும் வடமராட்சி கிழக்கை பிரதிநிதிவப்படுத்தும் வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் துளியம் இணை…
-
- 1 reply
- 450 views
-
-
கஷ்டமான காரியத்தை செய்துகொண்டிருக்கின்றேன் : ஜனாதிபதி மைத்திரி (எம்.எம்.மின்ஹாஜ்) நாட்டின் ஏனைய ஜனாதிபதிகளை விடவும் மிகவும் கஷ்டமான காரியத்தை நான் செய்து கொண்டிருக்கின்றேன். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமல் அரசியலமைப்பு திருத்தம் செய்த முதலாவது நாடாக இலங்கையின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஆட்சியாளர் தனக்கு கிடைக்கபெற்ற அதிகாரம் எந்த சந்தர்ப்பத்திலும் தன்னைவிட்டு விலகும் என்பதனை மனதில் நிறுத்தி செயற்பட வேண்டும். ஆட்சி அதிகாரங்களை முழுமையாக மக்களின் நலனுக்காக பிரயோகிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மைத்திரி மிதுரோ என்ற அமைப்பினால் நேற்று கொழும்பி…
-
- 2 replies
- 365 views
-
-
நல்லாட்சியில் ஈடுபடுவர்களுக்கும் பிள்ளைகள் உண்டு : எச்சரிக்கை விடுக்கும் நாமல் நல்லாட்சியில் ஈடுபடுவர்களுக்கும் பிள்ளைகள் உண்டு. அவர்களின் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என நாமல் ராஜபக்ஷ தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் லெப்டினன் யோஷித ராஜபக் ஷ உள்ளிட்ட ஐவருக்கு 2 ஆவது முறையாகவும் பிணை வழங்க மறுத்த கடுவலை நீதிவான் தம்மிக ஹேமபால, அனைவரையும் எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நேற்று உத்தரவு பிறப்பித்தார். இ…
-
- 2 replies
- 328 views
-
-
யாழ். மாணவர்களும் எதிர்காலத்தில் ஜனாதிபதியாகலாம்! மைத்திரி ஆரூடம்! யாழ்ப்பாண சாரண மாணவர்கள் ஒருவேளை எதிர்காலத்தில் இலங்கை ஜனாதிபதியாக தெரிவாக வாய்ப்பு உள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரூடம் தெரிவித்துள்ளார். பாடசாலை காலத்தில் நான் சாரணராக இருந்த காரணத்தினால் தனக்கும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 9ஆவது சாரண ஜம்பொறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, துணைத் தூதுவர் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இதன்போதே ஜனாதிபதி இந்த விடயத்…
-
- 9 replies
- 722 views
-
-
ஆசியாவின் ஒளியைத் திடீரெனச் சூழ்ந்த இருள்! ஆசியாவின் உண்மையான ஒளி என்று நியூசிலாந்து பிரதமர் பாராட்டிய 24 மணிநேரத்தில், இலங்கை முழுவதும் நேற்று மினசாரத் தடை ஏற்பட்டு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ நேற்றுமுன்தினம் இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் நடந்த வரவேற்பு நிகழ்வில், இலங்கை ஆசியாவின் உண்மையான ஒளி என்று புகழ்ந்திருந்தார். நேற்று நியூசிலாந்து பிரதமர் கண்டியில் பயணம் மேற்கொண்டிருந்த போது பிற்பகல் 2 மணியளவில் இலங்கை முழுவதும், மின்சாரத் தடை ஏற்பட்டது. அந்த வேளையில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொழும்பில் உள்ள சினமன் கிரான்ட் விடுதியில், ஆசிய ப…
-
- 0 replies
- 349 views
-
-
'கல்விச் சமூகம் முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும்' கிளிநொச்சி மாவட்ட பாடசாலையொன்றில் ஏற்பட்ட சம்பவமொன்றையடுத்து மாணவி ஒருவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ள விடயம் எமது சமூகத்தில் இடம்பெற்றுள்ள மிகவும் துரதிஷ்டவசமான சம்பவமாகும். எமது சமுதாயத்துக்கு வழிகாட்டிகளாகத் திகழ வேண்டிய கல்விச் சமூகமானது இவ்வாறான முறைகேடுகளில் ஈடுபடுவதானது, வன்மையாகக் கண்டிக்கத்தக்க விடயமாகுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், இச்சம்பவத்தில் தொட…
-
- 0 replies
- 332 views
-
-
புதன்கிழமைகளில் ஆளுநரைச் சந்திக்கலாம் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேவை ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பொதுமக்கள் சந்தித்து தமது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் தெரிவிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி புதன்கிழமை முதல் இது நடைமுறைக்கு வருகின்றது. வடமாகாணத்தைச் சேர்ந்த அனைத்து பொதுமக்களும் இன மற்றும் மத பேதமின்றி ஆளுனரைச் சந்தித்து கலந்துரையாட முடியும் என ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/166954/%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%B4%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%B3-%E0%AE…
-
- 0 replies
- 238 views
-
-
ஐங்கரநேசனுக்கு ஆதரவளிக்கும் முதலமைச்சரின் பிரேரணை "அவுட்' அமைச்சர் ஐங்கரநேசன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான சபைப் பதிவேடுகளை நீக்குமாறு கோரி முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சமர்பித்த பிரேரணைக்கு, பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு வழங்காமையால், அந்தப் பிரேரணை நிறைவேற்றப்படவில்லை. வடக்கு மாகாணசபையில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு எதிராக பதினொரு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரும் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்தப் பிரேரணை தொடர்பில் எழு குற் றச்சாட்டுக்களை முன்வைத்து, அந்தப் பிரேரணை மற்றும் அதனுடன் தொட…
-
- 0 replies
- 348 views
-
-
போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச பங்களிப்பு குறித்து ஆராயப்படுகிறது இலங்கையின் 26 வருடகால யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளின் போது சர்வதேச தரப்பினரை இணைத்துக் கொள்வது தொடர்பில் ஆராய்வதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளின் போது வெளிநாட்டு நீதிபதிகள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகளின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், போர்க்குற்றங்கள் குறித்த பாரபட்சமற்ற விசாரணைகளின் போது வெளிநாட்டவர்களின் பங்களிப்பு தேவையல்ல என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறியிருந்தார். இறுதி யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்…
-
- 0 replies
- 294 views
-
-
சமஷ்டிப் பயத்தை சிங்களத் தலைமைகளே போக்க வேண்டும்! - சிறிதரன் எம்.பி கோரிக்கை [Thursday 2016-02-25 07:00] சமஷ்டி வந்தால் நாடு பிரிந்துவிடும் என்று சிங்களவர்களுக்குள்ள பயத்தை சிங்களத்தலைவர்களே போக்கி, தமிழ் மக்களுக்கே உரித்தான இறைமைக்கு மதிப்பளித்து சமஷ்டி அடிப்படையில் தீர்வொன்று வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சிறிதரன் எம்பி இவ்வாறு தெரிவித்தார். சமஷ்டி என்பது இந்த நாட்டின் ஒற்றுமைக்கும் பலத்துக்கும் முக்கியமான கருதுகோள்…
-
- 1 reply
- 373 views
-
-
இலங்கையில் தமிழ் பிக்குகள் 11 பேர் உள்ளனர் இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் 22,254 பேர் உள்ளனர். அதில், 11 பேர் தமிழ் பிக்குகளாவர் என்று, நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஆற்றுப்படுத்தப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வாழ்கின்ற தமிழ் பௌத்தர்கள், தமிழ் பிக்குமார்களின் உள்ளிட்ட கேள்விகள் அடங்கிய கேள்வியொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான நேற்றைய நேரத்தின் போது கேட்டிருந்தார். இக்கேள்விகான பதிலை, வெகுசன ஊடத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, மன்றில் ஆற்றுப்படுத்தினார். அந்தப் பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன…
-
- 6 replies
- 596 views
-
-
சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தினாலும் விசாரணைகளைத் தடுக்கமாட்டேன்! தமது குடும்பத்தினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் குற்ற விசாரணைகளை மூடிமறைத்து கொள்ளும் நோக்கிலேயே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை இரண்டாக உடைத்து புதிய கட்சியை ஆரம்பிக்கப் போவதாக கூறி வருகிறார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இரண்டாக பிளவுபட்டாலும் விசாரணைகளை நிறுத்த தான் இணங்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக நடத்தப்படும் பொலிஸ் விசாரண…
-
- 2 replies
- 582 views
-
-
மனித உரிமைகள் நிலவரம்: இலங்கை மீது அம்னெஸ்டி விமர்சனம் 'காணாமல்போனவர்களுக்கு என்ன ஆனது என்பதை கண்டறிவதிலும் அவர்களை காணாமல் போகச் செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதிலும் முன்னேற்றம் காணப்படவில்லை' உலக நாடுகளின் மனித உரிமை நிலவரங்கள் பற்றிய இந்த ஆண்டுக்கான வருடார்ந்த அறிக்கையை வெளியிட்டுள்ள அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு, இலங்கை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. 'இலங்கையில் ஜனவரியில் பொறுப்பேற்ற புதிய அரசாங்கம் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை கொண்டுவந்தது. மனித உரிமைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னேற்றுவதாக உறுதியளித்திருந்தது. ஆனால், எதேச்சாதிகார கைதுகள் மற்றும் தடுத்துவைத்தல்கள், சித்திரவதைகள், திட்டமிட்டு காணாமல்போகச் செய்யும் ந…
-
- 5 replies
- 554 views
-
-
அரசியல் தீர்வு முயற்சிகளை எவரும் குழப்பக் கூடாது! நாடாளுமன்றில் சம்பந்தன் கோரிக்கை! புதிய அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வு காண்பதற்கான இணக்கப்பாடு காணப்பட்டுள்ள நிலையில், அந்தப் பணிகளை யாரும் குழப்புவதோ அல்லது காலதாமதப்படுத்துவதோ கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், கோரிக்கை விடுத்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றுவது குறித்த பிரேரணை மீது நேற்று இடம்பெற்ற விவாதத்தின் போது, ஆளும்கட்சிக்கும் ஜே.வி.பி உறுப்பினர்களுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது. இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிடுகையில், …
-
- 5 replies
- 508 views
- 1 follower
-
-
உடைக்கிறது தேங்காயவா? இல்லை மகிந்தவாயா? யாழ்ப்பாணத் தம்பி பாவியள் எப்பிடி இருந்த மனுசனை இப்பிடி ஆக்கிப்போட்டு திரும்பவும் விடுறாங்கள் இல்லை. சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை எண்டுற மாதிரி மகிந்தருக்கு சில வலக்கையள்.அதுகள் மகிந்தருக்கு தேங்காய் உடைச்சு ஆட்சி பிடிச்சு குடுக்கப் போகினமாம்.. என்னவொரு அறிவு. சும்மா சொல்லப்படாது. மகிந்தரைச் சுத்தி அப்பிடி அறிவான கூட்டம். கூட்டம் எண்டால் இரண்டு மூண்டு பேர்தான். ஆனால் பெரிய கூட்டம் மாதிரி சவுண்டு கேக்கும். ஆரால் கேடு, வாயால் கேடு எண்டுற மாதிரி. ஆட்சியை கவிழ்க்க சிங்கப்பூரிலை தேங்காய் உடைக்கப் போறம் எண்டுறினம்.. உடையுங்கோ! உடையுங்கோ!! ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்ப…
-
- 0 replies
- 671 views
-
-
நியூசிலாந்து பிரதமர் கண்டி விஜயம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ இன்று கண்டிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். கண்டி தலதா மாளிகைக்கு சென்ற அவருக்கு பாரம்பரிய முறைபடி வரவேற்பு அளிக்கப்பட்டது. மிகவும் மரியாதைக்குரிய முறையில் பாதணிகளை வெளியே கழற்றி வைத்து விட்டு மாளிகைக்குள் சென்ற அவர் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டார். அத்துடன் அங்கு இருந்த ஒரு அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார். இதில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் உடன் சென்றிருந்தார். அதன்பின்னர், நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ பேராதெனிய பூங்காவை பார்வையிடுவதற்கு சென்றார். அங்கு விசேட பிரமுகர்களுக்கான புத்தகத்தில் கையொப்பம் இ…
-
- 1 reply
- 374 views
-
-
மாணவி ஹரிஷ்ணவியின் படுகொலை அயல்வீட்டு குடும்பஸ்தர் கைது படுகொலை செய்யப்பட்டு வவுனியா, உக்குளாங்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 14 வயது மாணவியின் கொலை தொடர்பில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் அயல் வீட்டில் வசித்து வந்தவரான 35 வயதுடைய பாலசிங்கம் ஜனர்தன் என்ற குடும்பஸ்தரே விசாரணைகளுக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர உறுதிப்படுத்தினார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை டி.என்.ஏ.பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் ஊடாக நடவடிக்கை எடுக்க பொலிஸார் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் மேல…
-
- 0 replies
- 670 views
-
-
சொகுசு விமான அறைகளுக்கு மஹிந்த ஒப்பந்தம் : 1.4 மில்லியன் டொலர் இழப்பு - அமைச்சர் அதிர்ச்சி தகவல் நாட்டு மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் சூழலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய வெளிநாட்டு பயணத்திற்காக 4 பில்லியன் அமெரிக்க டொலரை செலவிடுவதற்காக எயார் லங்காவுடன் ஒப்பந்தம் செய்துள்ளாதாக சமூக நலன்புரிகள் இராஜங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். எயார் லங்கா நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ள போதும் குறித்த நிறுவனத்திற்கு அரசாங்கம் 1.4 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த வேண்டியிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார். மஹிந்த மக்களின் பணத்தின் மீது ஆசை கொண்டதன் பயனாகவே தற்போது சிறைச்சாலை மற்றும…
-
- 0 replies
- 322 views
-
-
நாடு பூராகவும் ஏற்பட்ட மின்தடைக்கு காரணம் தெரியுமா? பொல்பிடிய தொடக்கம் கொலன்னாவ பகுதியிலுள்ள ட்ரான்ஸ்மிஷன் லைனில் (transmission line) மின்னல் தாக்கியமையே நாடு பூராகவும் ஏற்பட்ட மின்சாரத் தடைக்கு காரணமாக இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் இலங்கை பூராகவும் மின்சாரம் தடைப்பட்டது. தற்போது சில பகுதிகளுக்கு மின்சார விநியோகம் வழங்கப்பட்டுள்ளதோடு, இன்று மாலை 06.00 மணியளவில் நிலைமை முழுவதுமான வழமைக்குத் திரும்பும் எனவும் கூறப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=77415
-
- 0 replies
- 390 views
-
-
மனைவியைக் கோடரியால் தாக்கி கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை : நீதிபதி இளஞ்செழியன் அதிரடித் தீர்ப்பு மனைவியை கோடரியால் அடித்து கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை குறித்த வழக்கு நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த 2006 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09ம் திகதி திருநெல்வேலி பாற்பண்ணை வீதியில் உள்ள வீட்டில் வைத்து நாகராசா சிவசீலன் என்பவர் தனது மனைவியான சிவசீலன் யேசுதா (வயது 28) வை கோடரியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். மதுபோதையில் தினமும் மனைவியை துன்புறுத்தி …
-
- 0 replies
- 317 views
-
-
சபை அமர்வுக்கு செல்லாமல் ஆலோசனை -எம்.றொசாந்த் வடமாகாண சபையின் அமர்வு வியாழக்கிழமை 9.30 மணிக்கு ஆரம்பமாகவிருந்த போதும், சபையை கூட்டாது சில உறுப்பினர்கள் குழுவாகப் பிரிந்து வெளியில் நின்று ஆலோசனை செய்தனர். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (25) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவிருந்தது. எனினும், அந்த நேரத்தில் சபை அமர்வு ஆரம்பமாகாமல் உறுப்பினர்கள், சபை மண்டபத்துக்கு வெளியில் கூடி ஆலோசனை செய்தனர். வடமாகாண சபையின் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, அவர் மீது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விசாரணை நடத்த வேண்டும் என கடந்…
-
- 0 replies
- 309 views
-
-
இலங்கை மீனவர்கள் 9 பேர் கைது இந்தியக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த 9 இலங்கை மீனவர்கள் நேற்று புதன்கிழமை (24) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது. நாகப்பட்டினம் - கன்னியாக்குமாரி ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களைக் கைது செய்த இந்திய கடலோரக் காவல்படையினர், இலங்கை மீனவர்களின் இரண்டு படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது. கைதுசெய்யப்பட்டவர்கள் எந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் எதுவும் தெரியவரவில்லை. - See more at: http://www.tamilmirror.lk/1…
-
- 0 replies
- 306 views
-
-
அவைக்குள் நுழைந்த இரண்டு விருந்தாளிகள் விளக்குகளை அணைத்து விரட்டியடிப்பு 19 வேட்டுகள் தீர்த்து அரச மரியாதை நந்தி யானைக்கான பத்திரம் கையளிப்பு 2 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன அழகன் கனகராஜ் இலங்கைக்கு விஜயம்செய்துள்ள நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ, தலைமையிலான குழுவினருக்கு, காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செலயகத்துக்கு முன்பாக வைத்து நேற்று புதன்கிழமை செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டதுடன் 19 வேட்டுகள் தீர்க்கப்பட்டு அரச மரியாதையளிக்கப்பட்டது. இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு, நியூசிலாந்துப் பிரதமர் ஜோன் கீ தலைமையிலான குழுவினர், எஸ்கியூ468 என்ற விசேட விமானத்தின் மூலம், செவ்வாய்க்கிழமை இரவு 11.55க்கு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்…
-
- 0 replies
- 314 views
-