Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்.ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை ஈ.பி.டி.பி. புறக்கணிப்பா ? குளோபல் தமிழ்ச் செய்தியாளா் யாழ்ப்பாணம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடந்த 13 மாதங்களுக்கு பின்னர் இன்று ஆரம்பமாகியுள்ளது. யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகி வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்று வருகின்றது. இக் கூட்டத்திற்கு ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந…

  2. பீகொக் மாளி­கையில் தங்கமில்லை முன்னைய அர­சாங்­கத்தின் இரா­ஜ­தந்­தி­ரியும் வர்த்­த­க­ரு­மான ஏ.எஸ்.பி.லிய­ன­கே யின் பீ கொக் மாளி­கையின் நீச்சல் தடா­கத்தில் நிரப்பப்பட்­டுள்ள மணல் நேற்று முற்­றாக அகற்றப்­பட்­டது. ஏ.எஸ்.பி.லிய­ன­கேயின் நாவல பீகொக் மாளி­கையில் மண­லால் நிரப்­பப்பட்­டுள்ள நீச்சல் தடா­கத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ராஜபக்ஷ­வுக்கு சொந்­த­மான தங்கம் உள்­ள­தாக கதைகள் உலா வரும் நிலையில் அது குறித்து அவர் பொலிஸ் மா அதி­ப­ரி டம் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக விசா ­ரணை இடம்­பெறும் நிலை­யி­லேயே அதன் ஒரு அங்­க­மாக இந்த மணல் அகற்­றப்­பட்­டது. இது குறித்து விசா­ரணை செய்து வரும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் அதி­கா­ரி­களின் மேற்­பா…

  3. பொலிஸார் தேடும் தேரர், திங்கட்கிழமை சரணடைவாராம்? ஹோமாகம நீதிமன்றத்தின் முன்னால் கலகம் விளைவிக்கும் வகையில் பிரசன்னமாகியிருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் திங்கட்கிழமை காலை, பொலிஸாரிடம் சரணடையவுள்ளதாக வண.மாகல்கந்த சுதந்த தேரர் தெரிவித்துள்ளார். சகோதர மொழி வானொலிக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இந்நாட்களில் சமய கடமைகள் சில இருப்பதன் காரணமாக திங்கட்கிழமை பொலிஸாரிடம் சரணடைவதாக அவர் கூறியுள்ளார். பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரை விளக்கமறியலில் வைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, குழப்பம் விளைவிக்கும் வகையில், நீதிமன்றத்துக்கு முன்னால் குறித்த தேரர் உட்பட சிலர் குழ…

  4. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நான்கு இணைத் தலைவர்கள் தலைமையில் இடம்பெறுகிறது. 29 ஜனவரி 2016 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஓருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. நான்கு இணைத்தலைவர்களின் தலைமையில் இடம்பெற்று வருகிறது. வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன்,அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில்இடம்பெற்று வருகிறது. இங்கு தலைமையுரை ஆற்றிய முதலமைச்சர் நான்கு இணைதலைவர்களின் நியம…

  5. தொடர்ச்சியாக இன அழிவைச் சந்தித்த இனமாக தமிழினம் காணப்படுகின்றது ; பா.அரியநேத்திரன் [ Saturday,30 January 2016, 05:54:53 ] தொடர்ச்சியாக இன அழிவைச் சந்தித்த இனமாக தமிழினம் காணப்படுகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு பல்லாயிரக்கணக்கான அப்பாவி உயிர்களை இழந்தும் எமக்காக இதுவரை எந்த தீர்வும் கிடைக்கப்பெறவில்லை. மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்துடன் நாட்டில் ஆட்சி மாற்றங்கள் வரும்போதும் எமக்கான தீர்வுகள் எட்டப்படும் என்ற கனவுகளும் எமக்குள் இருந்து கொண்டிருக்கின்றது. இதனால் சர்வதே…

  6. மஹிந்த ராஜபக்சவின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் கைது [ Saturday,30 January 2016, 05:52:21 ] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் ரோஹான் வெலிவிட்ட கைதுசெய்யப்பட்டுள்ளார். கிருலப்பனை பொல்ஹேன்கொட பிரதேசத்திலுள்ள வீட்டில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட அவர், நிதிக் குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சி எஸ் என் எனப்படும் கார்ட்டன் ஸ்போட்ஸ் நெட்வேக் நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட காலத்தில், அதில் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் குறித்து விசாரணை செய்வதற்கென அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹோரான் வெலிவிட்டவிற்கு எதிராக ஜனாதிபதி செயலாளர் அண்மையில் செய்த முறைப்பாட்டை அடுத்து அவர் அண்மையில் விசாரணைக்கு உட்படுத்தபட்டி…

  7. புதிய அரசியல் யாப்பு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில்: ஏற்பாடுகள் பூர்த்தி [ Friday,29 January 2016, 23:42:13 ] புதிய அரசியல் யாப்பு தொடர்பான நகல் யோசனைகள் எதிர்வரும் மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தலைமையிலான குழுவினர் தயாரித்து வரும் நகல் யோசனைகள் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் நீண்ட விவாதத்தின் பின்னர் மேலும் திருத்தங்கள், மாற்றங்கள் செய்யப்பட்டு மே மாதம் நிறைவேற்றப்படும் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன. புதிய அரசியல் யாப்பை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் பெறப்பட வேண்டும் என்று…

  8. 13 ஆண்டுகளுக்கு முன்னரே சீதனம் வாங்கிய ரோஹித்த அபேகுணவர்தன! [ சனிக்கிழமை, 30 சனவரி 2016, 04:08.26 AM GMT ] மஹிந்தவின் ஆட்சியில் அமைச்சராக செயற்பட்ட ரோஹித்த அபேகுணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சமர்பிக்கப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. ரோஹித்தவினால் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட வாக்குமூலத்திற்கமைய அவரது திருமணத்திற்கு கிடைத்த சீதனம் தொடர்பிலே தகவல் வெளியாகியுள்ளது. மேரி என் அபேகுணவர்தனவுடன், அபேகுணவர்தன திருமண பந்தத்தில் இணைந்த நாளாக 2004.11.21ஆம் திகதி என பதிவு செய்யபட்டுள்ளது. திருமணத்திற்கு சீதமாக பணத்தில் ஆறு லட்சம், 85 ஆயிரம் பெறுமதியான நகைகள், பாணந்துரை - பின்வத்தை இலக்கம…

  9. யாழ்கள உறவுகளே இதனையும் ஒருதடவை பார்ப்போமா? சிங்களம் செய்யுமா? செய்யாதா என்பதற்கப்பால் எங்கள் ஆலோசனைகளை முன்வைத்தால் என்ன? சிறந்ததொரு எதிர்காலத்தின் நிமித்தம் அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு பங்களிப்பைச் செலுத்துவோம் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களால் 20 உறுப்பினாகள்; கொண்ட அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவொன்று உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை மக்களிடமிருந்து பெறுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளது. குழு உறுப்பினர்கள் சிலர் சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவஞ் …

    • 0 replies
    • 376 views
  10. இடமாறும் யாழ். பேருந்து நிலையம்! யாழ். மத்திய பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யும் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் ஊடாக வெளிமாவட்டத்துக்கான தூர சேவை பேருந்து தரிப்பிடம் யாழ். ரயில் நிலையத்துக்கு அருகில் இடமாற்றப்படவுள்ளது. நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அரச அதிபர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, முதற்கட்டமாக யாழ்.மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்க…

  11. பெப். 9 முதல் நாடாளுமன்றம் செல்கிறார் பொன்சேகா ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி, சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். காணி அமைச்சர் எம்.கே.ஏ.டீ.எஸ்.குணவர்தன, காலமானதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கே, சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/164974/%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%9F-%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%B1%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%B0-%E0%AE%AA-%…

  12. ரவிராஜ் படுகொலை வழக்கில் பொய் சாட்சி? தமிழ்த் தேசியக் கூட்டiமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அரச தரப்பு சாட்சியாளராக சாட்சியமளித்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ப்ரிதிவிராஜ் என்பவர், பொய்யான சாட்சியமளித்துள்ளார் என எதிர்த்தரப்பு சட்டத்தரணிகள், இன்று (29) கொழும்பு நீதவான் திலின கமகே முன்னிலையில் தெரிவித்தனர். முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் (கருணா) உதவியாளர் ஒருவரும் மேற்படி பொலிஸ் கான்ஸ்டபிளும், இந்த படுகொலையில் தொடர்புபட்டுள்ளனர் என்றும் தற்போது அவர்கள், அவர்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அரசாங்க தரப்பு சாட்சியாளர்களாக மாறியுள்ளனர் என்றும் சட்டத்தரணிகள், மன்றில் தெரி…

  13. சுதந்திர தினத்திலிருந்து தமிழ்,சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இயற்றப்படும் : அரசாங்கம் எதிர்வரும் சுதந்திர தினத்தில் இருந்து தமிழ், சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இயற்றும் புதிய சட்டம் நடைமுறைக்கு வருகின்றது என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சகல அரச நிகழ்வுகளிலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வைபவங்களிலும் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் இயற்றப்பட வேண்டும் என அரசாங்கம் …

  14. மயில் மாளிகை நீச்சல் தடாகத்தில் மண் அகற்றப்பட்டது வர்தகரான ஏ.எஸ்.பி.லியனகேவுக்கு சொந்தமான நாவல பிரதேசத்தில் உள்ள மயில் மாளிகையில் அமைந்துள்ள மூடப்பட்ட நீச்சல் தடாகத்தில் உள்ள மண்ணை அகற்றும் பணிகள் இன்று இடம்பெற்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, இந்த மயில் மாளிகையை மஹிந்த ராஜபக்ஷ தங்குவதற்கு வழங்க லியனகே தயாராகியிருந்த போதும் பின்னர் அது கைவிடப்பட்டிருந்தது. மயில் மாளிகையை மஹிந்தவுக்கு வழங்குவதற்காக அங்கிருந்த நீச்சல் தடாகம் மண் கொண்டு மூடப்பட்டது. அதனையடுத்து, குறித்த நீச்சல் தடாகத்தில் தங்க கட்டிகள் புதைக்கப்பட்டுள்ளதாக வாய்வழி கதைகள் பரவியிருந்தன. அதற்கமைய, கொழும்பு க…

  15. திருகோணமலை இரகசியதடுப்புமுகாம்களில் மனிதஎலும்புக்கூடுகள் காணப்பட்டமை குறித்து விசாரணைக்கு உத்தரவு திருகோணமலை கடற்படை தளத்திலுள்ள நிலத்தின்கீழான இரகசியதடுப்பு முகாம்களில் மனித எலும்புக்கூடுகள் காணப்பட்டது குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினரிற்கு கொழும்பு பிரதான நீதவான் ஜிகான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தில் காணமற்போனோர் குறித்து விசாரணைசெய்யும் சர்வதேச குழுவொன்று அங்கு சென்றவேளையே அவர்கள் எலும்புக்கூடுகளை பார்த்துள்ளனர். இதேவேளை குறிப்பிட்ட நிலத்தின்கீழான சிறைச்சாலையில் 6021 என்ற இலக்கத்தை கொண்ட டொல்பின் மிட்சுபிசி ரக வாகனத்தை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக குற்றப்ப…

  16. சட்டம் அனைவருக்கும் சமன் என்பது தேரரின் கைதால் நிரூபணம்! பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் செயற்பட்ட விதத்துக்கு ஏற்ப கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை சட்டம் எல்லோருக்கும் சமமானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிரான முறைப்பாட்டுக்கு உரிய சாட்சிகள் இருக்கும் நிலையில் அவர் தொடர்பில் சட்டம் செயற்படுத்தப்பட்ட விதம் மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். க…

  17. சர்வதேச நீதிமன்றுக்கு ஒருபோதும் உடன்படோம்! : பிரதமர் ரணில் திட்டவட்டம்! போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் தொடர்பான நீதி விசாரணையை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிமன்றமொன்றுக்கு அரசு ஒருபோதும் உடன்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் உறுதிபடத் தெரிவித்தார். இதேவேளை, இந்த விசாரணைகளில் இலங்கையர் அல்லாத வெளிநாட்டவர் எவரேனும் பங்குகொள்வதாயின் அது தொடர்பாக தீர்மானம் எடுக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கே இருக்கின்றது என்றும் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பொலிஸார் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்ட விட…

  18. ஞானசாரருக்கு பிணை மறுப்பின் எதிரொலி! எதிர்ப்பு நடவடிக்கைக்கு தயாராகுமாறு சிஹல ராவய அழைப்பு [ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2016, 03:02.49 AM GMT ] ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்படாமை தொடர்பில், தீவிரமான நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகுமாறு சிஹல ராயவ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. சிஹல ராவயவின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். ஹோமாகம நீதிமன்ற வளவில் வெளியிட்ட கருத்துக்காக நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் நேற்று அவரை பிணையில் எடுக்க தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து கருத்துரைத்து…

  19. மே மாதமளவில் போர்க்குற்றப் பொறிமுறை நல்லிணக்கத்துக்கும் பொறுப்புக் கூறலுக்குமான பொறிமுறையொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மே மாதமளவில், ஐக்கிய நாடுகள் சபை, ஜெனீவாவில் சந்திக்கும் போது, இலங்கையின் முன்மொழிவுகள் தயாராக இருக்குமெனத் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். போர் முடிவடைந்து இவ்வளவு நாட்களாகியும், பொறுப்புக் கூறலுக்கான பொறிமுறை உருவாக்கப்படவில்லை என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். பொறுப்புக் கூறல் பொறிமுறையில், சர்வதேசப் பங்களிப்பு இருக்காது எனவும் அதை அனுமதிக்கப்…

  20. கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரில் அதிகளவான போர்க்குற்றங்களை செய்து ஈழத் தமிழ் மக்களை கொன்றொழித்தவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என அமெரிக்க வழக்கறிஞர் ப்ரூஸ் ஃபெயின் இந்திய ஊடகம் ஒன்றுக்கு குறிப்பிட்டிருந்தார். உள்நாட்டுப் போர் உக்கிரமடைந்த காலகட்டமான 2009ல் இலங்கையில் அதிக மனிதவுரிமை மீறல்கள் இடப்பெற்றன. இது மிகவும் காட்டுமிராண்டித்தனமான செயல் என அவர், 2009ம் ஆண்டு இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் அந்த நேர்காணலில், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்சவையும், முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவையும் கடுமையாக சாடியிருந்தார். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் நிரந்த வாழ்வுரிமை…

  21. முஸ்லிம்கள் இலக்குவைக்கப்பட்டால் மிகப் பெரிய தவறாகிவிடும்!; எச்சரிக்கின்றார் துருக்கிநாட்டுத் தூதுவர் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் இணைந்துள்ளதாக கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த சில தனிப்பட்டவர்களின் சட்டவிரோதச் செயற்பாடுகளைக் காரணம் காண்பித்து இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகம் இலக்குவைக்கப்படுமானால் அது மிகப் பெரிய தவறாகிவிடும் என இலங்கைக்கான துருக்கி நாட்டுத்தூதுவர் டுன்ஜயா ஒகசுகதார் இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சுடர் ஒளிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். 36 இலங்கையர்கள் சிரியாவிற்கு சென்றுள்ளதாகவும் அவர்களில்…

  22. குடிநீர் விவகாரத்தில் திகைத்துப் போயுள்ள சுன்னாகம் மக்கள்! [Friday 2016-01-29 06:00] சுன்னாகம் பகுதியில் குடிநீர் மாசடையவில்லை என தெரிவி்த்து வெளியிடப்பட்ட அறிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிடட்டுள்ளதையடுத்து சுன்னாகம் பகுதியிலுள்ள குடிநீரைப் பருக முடியுமா, இல்லையா என்பதில் மீண்டும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலுள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ளதாக 2014 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் தகவல்கள் வெளியாகின. சுன்னாகம் பகுதியில் குடிநீர் மாசடையவில்லை என தெரிவி்த்து வெளியிடப்பட்ட அறிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிடட்டுள்ளதையடுத்து சுன்னாகம் பகுத…

  23. இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க கோரிக்கை! [Friday 2016-01-29 07:00] இலங்கையின் 68வது சுதந்திரதினத்தை தமிழ்மொழி பேசும் மக்களின் பூர்வீக வாழ்விடங்களான வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ‘கரிநாளாக’ அனுஸ்டிக்குமாறு- கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் வடக்கு கிழக்கு மாகாண சங்கங்கள் நேற்று அழைப்பு விடுத்துள்ளன. வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த, கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கங்களின் பிரதிநிதிகள் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் கூடிக் கலந்தாலோசித்து இந்த முடிவை அறிவித்துள்ளனர். இலங்கையின் 68வது சுதந்திரதினத்தை தமிழ்மொழி பேசும் மக்க…

  24. ஞானசார தேரரின் சொத்துக்கள் குறித்து விசாரணை - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 29 ஜனவரி 2016 பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரரின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. ஞானசார தேரருக்கு எவ்வாறு பணம் கிடைக்கப் பெறுகின்றது என்பது குறித்து விசாரணை நடாத்த காவல்துறையினர் தீர்மானித்துள்ளனர். ஞானசார தேரர் பயன்படுத்தி வரும் வாகனங்கள் அவருக்கு பணம் கிடைக்கின்றது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. பொதுபல சேனா இயக்கத்திற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆதரவளித்து வருவதாக கடந்த காலங்களில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid…

  25. தமிழீழம்- தமிழரின் கனவு. தமிழர் போராட்டம் தீராநதியென பெருக்கெடுத்து ஓடிய பின்னரும் விடுதலைக் கனவு மீதி இருக்கிறது. விடுதலையைக் காதலித்த எண்ணிக்கையற்ற போராளிகள் அதற்காக மடிந்தார்கள். எந்தக் கனவினைச் சுமந்து போராளிகள் இறக்கிவைக்காமல் நடந்தனரோ, அந்தக் கனவின் மீதி இன்னும் இருக்கிறது. புதைக்கப்படுவது என்பதினும் விதைக்கப்படுவோராய் போராளிகள் ஆகியிருந்தனர். ஈழப்பிரதேசமெங்கும் நிறைந் திருந்தன மாவீரர் துயிலுமில்லங்கள். இலங்கை இராணுவத் தால் இன்று சிதைக்கப்பட்ட துயிலும் இல்லங்கள் நம்மை நோக்கிக் கேள்வியெழுப்புகின்றன- எங்கே எமது கனவின் மீதி? ஒரு வித்து நல்வித்து எனத் தெரிகிறது. நல்வித்தை நடவேண்டும். மண்ணுக்குக் கீழும் மண்ணுக்கு மேலும் தன் காரியங்களை நிகழ்த்திக்கொண்டு ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.