ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
புதிய அரசியலமைப்பைக் குழப்பிவிடுவாரா விக்னேஸ்வரன்? புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்வதையே, புத்தாண்டில் தாம் நிறைவேற்ற வேண்டிய அதி முக்கிய கடமையாக அரசாங்கம் கருதுவதாகத் தெரிகிறது. உண்மையிலேயே, புதிய அரசியலமைப்பென்று கூறப்பட்டாலும், பிரதானமாக மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பாகவே அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வரப்படப் போகிறது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக ஒழித்தல், தேர்தல் முறையில் சீர்த்திருத்தம் கொண்டு வருதல் மற்றும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் ஆகியனவே அந்த மூன்று விடயங்களாகும். தாம் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகும் எதிர்வரும் சனிக்கிழமையன்று, (ஜனவரி 9 ஆம் திகதி) அ…
-
- 0 replies
- 406 views
-
-
ஜனாதிபதி,பிரதமரை சந்திக்க வாய்ப்பு கோரி கைதிகளின் பெற்றோர் முதலமைச்சருக்கு கடிதம் [ Wednesday,6 January 2016, 03:20:43 ] யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரையும் சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான கோரிக்கை அடங்கிய கடிதமொன்றையும் தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் மன்னார் பிரஜைகள் குழு ஊடாக இன்று புதன்கிழமை வடக்கு முதலமைச்சரிடம் கையளிக்கவுள்ளனர். இது தொடர்பாக ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு கருத்து தெரிவித்த …
-
- 1 reply
- 361 views
-
-
ஸ்ரீலங்காவில் வெள்ளைவான்,சித்திரவதை கலாசாரம் தொடர்கிறது; யஷ்மின் சூகா தகவல் [ Wednesday,6 January 2016, 05:56:39 ] ஸ்ரீலங்காவில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடமாகின்ற போதிலும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் தொடர்பான ஆதாரங்கள் வெளிவந்தவண்ணம் இருப்பதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் தெரிவித்துள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தினால் நாளை வியாழக்கிழமை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கவலையளிக்கும் வகையில் ஸ்ரீலங்காவின் பெயர்போன வெள்னை வான்கள் இன்னும் செயற்படுவதாகவும், இது வழக்கமான நடவடிக்கையொன…
-
- 0 replies
- 371 views
-
-
இலங்கையின் கல்வித் திட்டத்தில் விரைவில் மாற்றம்! [Wednesday 2016-01-06 07:00] இலங்கையின் கல்வித் திட்டம் எதிர்வரும் 05 ஆண்டுகளுக்குள் மாற்றம் செய்யப்படுமென கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் விநியோகிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இலங்கையின் கல்வித் திட்டம் எதிர்வரும் 05 ஆண்டுகளுக்குள் மாற்றம் செய்யப்படுமென கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் விநியோகிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில…
-
- 0 replies
- 463 views
-
-
காட்டிக் கொடுத்த முன்னாள் இராணுவ உயர் அதிகாரிக்கு மீண்டும் பதவி! [ புதன்கிழமை, 06 சனவரி 2016, 12:48.48 AM GMT ] இராணுவத்தை காட்டிக் கொடுத்த முன்னாள் இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கு மீளவும் பதவி வழங்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கைப் படையினர் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அமெரிக்க சட்டநிபுணர் ஒருவருக்கு சத்தியக் கடதாசி வழங்கிய இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவர் மீளவும் சேவையில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளார். இந்த இராணுவ மேஜர் ஜெனரலை கடந்த அரசாங்கம் பணி நீக்கியிருந்தது. அரசியல்வாதி ஒருவரின் உறவினரான இந்த மேஜர் ஜெனரல் மற்றும் அவரது குடும்பத்திற்கு பிரிட்டன் அரசியல் தஞ்சம் வழங்கியிருந்தது. வன்னிப் போர…
-
- 0 replies
- 626 views
-
-
விசேட அதிரடிப் படையினருக்கு நாவற்குழியில் 5 ஏக்கர் காணி! [ புதன்கிழமை, 06 சனவரி 2016, 03:36.05 AM GMT ] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புக்கு அமைய விசேட அதிரடிப் படையினருக்கு நாவற்குழியில் 5 ஏக்கர் காணி தேசிய வீடமைப்பு அதிகார சபையினரால் வழங்கப்பட்டுள்ளது. நாவற்குழி 300 வீட்டுத்திட்டக் குடியிருப்புக்கு அருகில், கட லேரியை அண்டிய பகுதியில் விசேட அதிரடிப் படையினருக்கான முகாம் அமைக்கும் பணிகள் சில நாள்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக தேசிய வீடமைப்பு அதிகார சபையினரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, ஜனா…
-
- 0 replies
- 505 views
-
-
9 வருடங்களுக்குப் பின் நோர்வே அரச பிரமுகர் ஒருவர் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் [ Wednesday,6 January 2016, 03:35:32 ] ஸ்ரீலங்காவுடனான அரசியல் ரீதியிலான தொடர்புகளை புதுப்பித்துக்கொள்ளும் நோக்கில்நோர்வே நாட்டு வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பென்டா (Borge Brende) ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இவர் இந்த வார இறுதிக்குள் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொள்வார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டிற்குப் பின்னர் நோர்வே அரச பிரமுகர் ஒருவர் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஸ்ரீலங்காவுக்கு விஜயம் செய்யும் நோர்வே வெளிவிவகார அமைச்சர், தனது விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்…
-
- 0 replies
- 486 views
-
-
முன்னாள் போராளிகளின் அவலம்! மரணத்தின் பின்னர் இறுதிக்கிரியை செய்ய பணமில்லை! [ செவ்வாய்க்கிழமை, 05 சனவரி 2016, 12:46.41 PM GMT ] முன்னாள் போராளி ஒருவர் தீக்காயத்திற்கு இலக்காகி மரணமடைந்துள்ளார். ஆனால் அவரின் சடலத்தினைப் பெற்று இறுதிக்கிரியைகள் செய்வதற்கு பணமில்லாததால் அரச செலவில் அடக்கம் செய்யக்கோரியுள்ளார் மரணமடைந்தவரின் சகோதரி. தமிழினத்தின் விடிவிற்காக தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்தவர்கள் தமிழ் இளைஞர் யுவதிகள். கண்ட கனவுகளையும், நினைத்த வாழ்க்கையையும் வாழ முடியாமல், தன்னினத்தின் எதிர்கால சந்ததியினர் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் அவர்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கையே இன்று கேள்…
-
- 3 replies
- 719 views
-
-
இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கிடையாது – 215 சந்தேக நபர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படாது:06 ஜனவரி 2016 இலங்iகியல் அரசியல் கைதிகள் எவரும் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தி இந்து எனும் இந்திய ஊடகத்திற்கு செவ்வியளித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்த்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க்பபட்டுள்ள 215 சந்தேக நபர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்குமாறும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும் கோரப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், மேற்குலகின் பல நாடுகள் பயங்கரவாத பிரச்சினைகளை கடுமையாக எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச…
-
- 0 replies
- 319 views
-
-
புதிய அரசியலமைப்பு தனிஈழத்தை உருவாக்கும்! - என்கிறது பொது பலசேனா [Wednesday 2016-01-06 07:00] புதிய அரசியல் அமைப்பு தனிஈழத்தை அமைக்கும் அடிப்படையில் அமையும் என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பினால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவ் அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், புதிய அரசியல் அமைப்பு தனிஈழத்தை அமைக்கும் அடிப்படையில் அமையும் என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பினால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவ் அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுக…
-
- 0 replies
- 449 views
-
-
ஜனாதிபதியின் உறுதிமொழி வரவேற்கப்பட வேண்டியது : சுமந்திரன் எம்.பி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காணி வழங்குதல் குறித்த உறுதிமொழி வரவேற்கப்பட வேண்டியது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். போர் காரணமாக வெளியேற்றப்பட்ட 100,000 பேருக்கு காணிகள் வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். ஆறு மாத காலப் பகுதியில் புதிய காணிகள் வழங்கப்படும் என ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட உறுதிமொழி வரவேற்கப்பட வேண்டியது எனவும் ஆரோக்கியமான நகர்வு எனவும் அவர் தெரிவித்துள்ளார். முதல் தடவையாக காணி வழங்குதல் தொடர்பில் கால நிர்ணயம் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசாங…
-
- 1 reply
- 509 views
-
-
“வடமாகாண முதலமைச்சரின் செயற்பாடுகளை மிகவும் கவனமாக அவதானித்து வருகிறேன்” வடமாகாண முதலமைச்சரின் செயற்பாடுகளை மிகவும் கவனமாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைர் சம்பந்தன் அவர் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்கட்சிகள் மற்றும் கொள்கைகளுடன் தன்னை இணைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். டெய்லி நியுசிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. கடுமையான மற்றும் பிடிவாதமான நிலைப்பாடுகளை எடுப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கிடைத்துள்ள இந்த அரியசந்தர்ப்பத்தை சிதைக்ககூடாது. அடாவடித்தனமான, இறுக்கமான, நிலைப்பாடுகள் உதவப்போவதில்லை, கடுமையான நிலைப்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் நாட்டிற்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்…
-
- 4 replies
- 857 views
-
-
வசீம் தாஜூடீனின் சிசிடிவி காட்சிகளை வெளிநாட்டு ஆய்வுகூடத்திற்கு அனுப்புவது சிறந்தது: 05 ஜனவரி 2016 ரக்பி வீரர் வசீம் தாஜூடீனின் கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகளை அமெரிக்காவிற்கு அல்லது சீனாவிற்கு அல்லது இங்கிலாந்தின் ஸ்கொட்லாண்ட் யார்ட்டின் நீதிமன்ற ஆராய்ச்சி சம்பந்தமான ஆய்வுகூடத்திற்கு அனுப்புவது சிறந்தது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞான பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் ரக்பி கொலை தொடர்பான வழக்கு இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்டபோது கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனி பிரிவினால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. குறித்த சிசிடி தொகுப்பில் சந்தேகத்திற்கிடமான வாகனமொன்றின் நடாமாட்டம் காணப்ப…
-
- 0 replies
- 655 views
-
-
ஜனவரி 8ம் திகதி வைபவத்தில் மகாத்மா காந்தியின் பேரன் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, இலங்கையின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடங்கள் பூர்த்தியடையவுள்ளது. இது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வைபவம் எதிர்வரும் 8ம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதே மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போது, மகாத்மா காந்தியின் பேரன் கோபால் கிருஸ்ணா காந்தி விஷேட உரையாற்றவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கோபால் கிருஸ்ணா காந்தி இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=75760
-
- 1 reply
- 467 views
-
-
இராணுவ அதிகாரிகள் பயன்படுத்திய வீடுகள் நல்ல நிலையில் -சொர்ணகுமார் சொரூபன் இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து கடந்த 29ஆம் திகதி விடுவிக்கப்பட்ட காணிகளில் இராணுவ அதிகாரிகள் பயன்படுத்திய வீடுகள் மிகவும் நல்ல நிலையில் காணப்படுகின்றன. அவ்வாறான வீடுகளின் சொந்தக்காரர்கள் அந்த வீடுகளை உடனடியாக தங்களின் மீள்குடியேற்றத்துக்கு பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த காணிகளில் வலிகாமம் வடக்கில் 468.5 ஏக்கர் காணிகளும், வலிகாமம் கிழக்கில் 233 ஏக்கர் காணிகளும் கடந்த 29ஆம் திகதி விடுவிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட காணிகளில் பெரும்பாலான காணிகளில் மக்களின் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 564 views
-
-
துவாரகேஸ்வரன் மீது முறைப்பாடு -சொர்ணகுமார் சொரூபன் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் வர்த்தகருமான தி.துவாரகேஸ்வரன், தன்னைக் கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தல் விடுத்ததாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் திங்கட்கிழமை (04) யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அலைபேசியின் தன்னை தொடர்புகொண்ட துவாரகேஸ்வரன், கழுத்தை வெட்டிக் கொலை செய்வேன் என்றும், வீடு புகுந்து தூக்குவேன் எனவும் தன்னை மிரட்டியதாக ஊடகவியலாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - See more at: http://www.tamilmirror.lk/163105#sthash…
-
- 0 replies
- 501 views
-
-
வலி.வடக்கில் இராணுவத்தினரின் வதை முகாம் இருந்து இருக்கலாம் என சந்தேகம் கடந்த இருபத்தைந்து வருடங்களாக அதிஉயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வலிகாமம் வீமன் காமம் பகுதியில் உள்ள இரு வீட்டில் , இராணுவத்தினரின் வதை முகாம்கள் இருந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த பகுதி கடந்த 29ம் திகதி முதல் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதனை அடுத்து அப்பகுதிக்கு மக்கள் சென்ற போது அருகருகாக உள்ள இரு வீட்டின் உட்பகுதி கூரை பகுதி முட்கம்பிகள் கொண்டு வேயப்பட்டு காணப்பட்டது. …
-
- 6 replies
- 1.3k views
-
-
தமிழ் மக்கள் பேரவை தயாரிக்கப்போகும் தீர்வுத்திட்ட வரைபை அங்கீகரிக்கப்போவது யார்? அதை அடிப்படையாகக்கொண்டு தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்கப்போவது யார்? தமிழர்களின் உரிமைகளுக்காக – அவர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக நீண்ட காலமாகப் போராடிவரும் வடக்கு, கிழக்குத் தமிழரின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் புறந்தள்ளி பேரவையின் தீர்வு யோசனைகளை அரசோ அல்லது சர்வதேசமோ ஏற்றுக்கொள்ளுமா போன்ற கேள்விகள் எழுகின்றன. ……………………. வடக்கு, கிழக்குத் தமிழர்களின் அரசியல் தளம் இன்று நாளுக்குநாள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சர்ச்சைக்குரிய தமிழ் மக்கள் பேரவையின் உதயமே இதற்குக் காரணம். அதன் உதயம் – அதன் செயற்பாடுகள் தமிழர் அரசியல் அரங்கில் பெரும் …
-
- 5 replies
- 895 views
-
-
இலங்கை - பாகிஸ்தானிடையே 8 உடன்படிக்கைகள் கைச்சாத்து இலங்கை - பாகிஸ்தான் நாட்டு அரசாங்கங்களுக்கிடையில் எட்டு உடன்படிக்கைகள் இன்று கைச்சாத்திடப்பட்டன. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு கௌரவமளிக்கும் நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்தே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின. தகவல் தொழில்நுட்பம், சுகாதார மேற்பாடு, நிதி முகாமைத்துவம், கலாசார மேம்பாடு உட்பட்ட 8 உடன்படிக்கைகள் இன்றையதினம் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/163079/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%95-%E0%A…
-
- 1 reply
- 593 views
-
-
ஒரு இலட்சத்து 55 ஆயிரம் பேர் பல்கலைக்கழகம் செல்ல தகுதி ..!! 2015 உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் ஒரு இலட்சத்து 55 ஆயிரத்து 447 பேர் பல்கலைக்கழக பிரவேசத்திற்கான தகுதியை பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2014 ல் இதன் தொகை ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 483 ஆகும் . இவ்வருட உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றவர்களின் எண்ணிக்கை 6547 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 5960 பேர் பாடசாலை விண்ணப்பதாரிகள் என பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. 2015 ம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 55 ஆயிரத்து 191 பேர் விண்ணப்பித்து இருந்ததாகவும் , அதில் இரண்டு இலட்சத்…
-
- 1 reply
- 618 views
-
-
இந்திய ரோலர்... முல்லைத்தீவு, வட்டுவாகலை சேர்ந்த இரு மீனவர்கள் முல்லைத்தீவுக்கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை மீன்பிடித்துகொண்டிருந்த போது, அவர்களின் படகை இந்திய ரோலர் மோதியதால் அப்படகு கடலில் மூழ்கியது. இச்சம்பவத்தை தொடர்ந்து முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துகொண்டிருந்த ஏனைய மீனவர்கள் மேற்படி இந்திய ரோலரை மடக்கிப்பிடித்துள்ளதுடன் அதிலிருந்த 8 இந்திய மீனவர்களையும் பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர். (படப்பிடிப்பு: நடராசா கிருஸ்ணகுமார்) - See more at: http://www.tamilmirror.lk/163047/%E0%AE%87%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B0-%E0%AE%B2%E0%AE%B0-#sthash.DfpyKdo3.dpuf
-
- 0 replies
- 475 views
-
-
மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் இலங்கையில் கண்டெடுப்பு இலங்கையில் மீட்கப்பட்ட மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் தங்களுடையது என, இலங்கையின் அழகுக்கல் நிபுணர்கள் உரிமை கோரியுள்ளனர். சபையர் என்ற மாணிக்கக்கல் வர்க்கத்தைச் சேர்ந்த இதன் நிறை 1404.49 கரட் என்று கொழும்பிலுள்ள அழக்குக்கல் நிறுவகம் உறுதிசெய்துள்ளது. அத்துடன் இதன் பெறுமதி குறைந்தது 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்தக் கல்லின் தற்போதைய உரிமையாளர் குறித்த மாணிக்கல்லை 175 மில்லியன் டொலர்களுக்கும் அதிக தொகையில் ஏலத்தில் விற்பனை செய்ய முடியும் என்று மதிப்பிட்டுள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும் இந்த மாணிக்ககல் இரத்தினபுரி பகுதியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக க…
-
- 0 replies
- 615 views
-
-
தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியாகச் செயற்படவேண்டும் என்கிறார் ஆனந்தசங்கரி! தமிழ் மக்கள் பேரவை ஓர் அரசியல் கட்சியாக மாற்றி செயற்பட வேண்டுமெனவும் அவ்வாறு செயற்பட்டால் அதற்கு தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்கக் தயாராக இருக்கின்றார் எனவும் தெரிவித்துள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி. அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழுவிவரம், தீவிர அரசியலில் 55 ஆண்டுகளுக்கு மேல் ஈடுபட்டிருக்கும் நான் தமிழ் மக்கள் மத்தியில் எனது செயற்பாடுகள் பற்றி எடுத்துக்கூற வேண்டிய அவசியமில்லை என நினைக்கின்றேன். 1960ஆம் ஆண்டு தொடக்கம் உள்ளுராட்சி மன்றங்கள் நாடாளுமன்றம் போன்ற ஸ்தாபனங்கள் மூலம் எனது மனச்சாட்சிக…
-
- 9 replies
- 654 views
-
-
எனக்கல்ல, நாட்டுக்கே சேவை செய்கின்றீர்கள்: மைத்திரி தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காகத் தனது செயற்றிறன் மற்றும் ஆற்றல் என்பன, சேவை மூப்பினைவிடப் பெறுமதி வாய்ந்தவையெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 'நீங்கள் சேவையாற்றுவது எனக்கு அன்றி, நாட்டுக்கே என்பதை நிதமும் மனதில் நிறுத்த வேண்டும்' எனவும் குறிப்பிட்டார். ஜனாதிபதி அலுவலகத்தில் புதுவருட கடமைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில். நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர், தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டின் அனைத்து நிறுவனங்களையும் நிருவகிக்கும் பிரதான மத்திய நிலையமாக …
-
- 0 replies
- 400 views
-
-
கறுப்பு ஆடையில் கம்மன்பில வந்தார் பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தலைமையிலான குழுவினர், நேற்று திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், முழுமையாக கறுப்பு ஆடையை அணிந்திருந்தனர். இந்த ஊடகவியலாளர் மாநாடு, கோட்டையில் நடத்தப்பட்டது. அதில், கலந்துகொண்டவர்களே இவ்வாறு கறுப்பு ஆடை அணிந்திருந்தனர். இங்கு கருத்துத் தெரிவித்த உதய கம்மன்பில, ஜனாதிபதி பதவியேற்று ஓராண்டு நிறைவை முன்னிட்டு தேசியக்கொடியை உயர்த்துமாறு அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அப்படியாயின் பதவியேற்பு, தேசிய வைபவமா என்றும் அவர் கேள்வியெழுப்பினார். தேசிய வைபவங்களில் மட்டுமே தேசி…
-
- 0 replies
- 399 views
-