ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
2016: கூட்டமைப்பிடம் எதிர்பார்ப்பது என்ன? தெய்வீகன் 2015ஆம் ஆண்டு, தனது சகல பொறுப்புக்களையும் புதிய ஆண்டிடம் கையளித்துவிட்டு காலாவதியாவதற்கு காத்திருக்கிறது. தமிழர் அரசியலை பொறுத்தவரை மிகவும் முக்கியமான ஆண்டாக கருதப்படும் கடந்து செல்லும் இந்த வருடத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் என்ன சாதனைகளை படைத்தார்கள், அவற்றின் ஊடாக தமிழ் மக்கள் தங்கள் விடிவை நோக்கி எவ்வளவு தூரம் பயணித்திருக்கிறார்கள் என்பவற்றை ஆத்ம பரிசோதனை செய்து பார்த்தால், வெறும் கவலைகளையும் கண்ணீரையும் ஏமாற்றத்தையும்தான் அதிகம் எஞ்சிக்;கிடக்கிறது. இதுதான் யதார்த்தபூர்வமான பதிலாகவும் இருக்க முடியும். எல்லாமும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன…
-
- 2 replies
- 591 views
-
-
2015ஆம் ஆண்டு சிறிலங்காவிலும் உலகின் ஏனைய சில நாடுகளிலும், மிகவும் முக்கியமான ஜனநாயக வெற்றிகள் கிடைத்திருப்பதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு நிறைவடையும் நிலையில், பொஸ்டன் குளோப் இதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே ஜோன் கெரி இவ்வாறு கூறியுள்ளார். கொந்தளிப்பும், துன்பங்களும் இருந்த போதிலும், கடினமான பிரச்சினைகளையும் சமாளிக்க உலக சமூகம் ஒன்றிணையும் என்ற நம்பிக்கையைத் தந்த ஆண்டாக 2015 ஆம் ஆண்டு அமைந்திருக்கிறது. நைஜீரியா, பர்மா, சிறிலங்கா, வெனிசுவேலா உள்ளிட்ட நாடுகளில் மிகவும் முக்கியமான ஜனநாயக வெற்றிகள் கிடைத்திருக்கின்றன.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.puthinappalakai.net/2015/12/29/news/12318
-
- 0 replies
- 540 views
-
-
நித்தியபாரதி. புனர்வாழ்வு முகாமில் நடந்த போட்டி. போர் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்த போதிலும் தற்போதும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இவர்கள் சாதாரண மக்களாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதே மிகப் பாரிய பிரச்சினை. இவ்வாறு சண்டே லீடர் வாரஇதழில், Tharidu Jayawardana, Idunil Ussgoddarachchi, Udaya Karthikan, R Indumathi ஆகியோர் இணைந்து எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர். இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. சிறிலங்காவின் குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த போது செல்வியும் தனது ரி-56 ரக துப்பாக்கியைத் தூக்கியெறிந்தார். இதன் பின்னர் மீண்டும் தனது குடும்பத்துடன் இணை…
-
- 0 replies
- 501 views
-
-
தமிழரசு கட்சி விளக்கம் கேட்க முடியாது. - சித்தார்த்தன் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- 29 டிசம்பர் 2015 தமிழ் மக்கள் பேரவையில் கலந்து கொண்டமை தொடர்பில் தமிழரசுக்கட்சி விளக்கம் கேட்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பே கேட்க முடியும் அவ்வாறு கேட்டால் அதற்கான விளக்கத்தைக் கொடுப்பேன்.என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், புளெட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையயின் கூட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் விளக்கம் கோரப்படும் என பாராளுமன்ற உறுப்பினரரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிர…
-
- 2 replies
- 357 views
- 1 follower
-
-
இராணுவத்தினரின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடுருவப்பட்டு ருத்ரகுமாரின் படம் தரவேற்றம் இலங்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அடையாளம் தெரியாத ஹெக்கர்களால் ஊடுருவப்பட்டு சுமார் அரை மணிநேரம் அவர்க ளது கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. இதன்போது புலம்பெயர் தமிழ் அமை ப்பு ஒன்றின் தலைவரக கருதப்படும் வீ.ருத்ரகுமாரின் புகைப்படம் அந்த இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. சனிக்கிழமை இடம்பெற்றுள்ள இந்தச் சம்ப்வம் குறித்து இராணுவ மட்டத்திலான உயர் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் போது தமது இணையத்தளம் எவ்வாறு ஹெக் செய்ய்ப்பட்டது. மற்றும் இணைய பாதுகாப்பு விட…
-
- 3 replies
- 631 views
- 1 follower
-
-
கிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுகிழமை இரவு வீசிய பலத்த காற்று காரணமாக பளை இத்தாவில் பகுதியில் மக்களின் தற்காலிக வீடுகளின் கூரைகள் சேதமடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் துன்பங்களை சந்தித்துள்ளனா். இத்தாவில் கோவில் காடு பகுதியில் நள்ளிரவு வீசிய பலத்த காற்றினால் 12 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. காற்றுடன் பலத்த மழையும் பெய்துள்ளது. வீசிய காற்றினால் 12 குடியிருப்புக்களின் கூரைகளும் பிடுங்கப்பட்டுள்ளது குறித்த சம்பவத்தில் வீட்டில் இருந்தவா்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத போதிலும் வீடுகளும் பொருட்களும் சேதமடைந்துள்ளன. இதன் போது பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக தமது உறவினர் வீடுகளில…
-
- 0 replies
- 246 views
-
-
இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை முன்வைத்தால் பரிசீலிக்கத் தயார்; மாவை எம்.பி தமிழ் மக்கள் பேரவை, இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை முன்வைத்தால் அது தொடர்பிலும் பரிசீலிக்கத் தயாரென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வலி கிழக்குப் பிரதேச அபிவிருத்தி ஆலோசனைக் குழுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை புத்தூரில் நடைபெற்றது, இதில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வை வழங்குமாறு தமிழரசுக் கட்சி தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்த…
-
- 1 reply
- 405 views
-
-
கண்டி, பல்லேகலே பிரதேசத்தில் நேற்றிரவு நில அதிர்வு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு 10. 16 அளவில் பல்லேகலே பிரதேசத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். நிலத்தின் கீழ் பாரிய சத்தம் கேட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் பிரதேச மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த சத்தம் நில அதிர்வாக இருக்கலாம் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, பல்லேகலே பிரதேசத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக பூகோளவியல் திணைக்களமோ அல்லது அனர்த்த முகாமைத்துவ மையமோ இதுவரையில் உறுதி செய்யவில்லை. http://www.seithy.com/breifNews.php?newsID=148061&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 311 views
-
-
போர்க்காலத்தில் ஊடகவியலாளர் கீத் நொயாரை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்ட குழுவினரே தாக்கியதாக தாய்நாட்டிற்கான இராணுவம் அமைப்பு குற்றஞ்சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பில் அந்த அமைப்பின் இணைப்பாளர் மேஜர் அஜித் பிரசன்ன இதனைத் தெரிவித்தார். கீத் நொயாரை சரத் பொன்சேகா உள்ளிட்ட குழுவினர் தாக்கியமைக்கான சாட்சியங்கள் உள்ளதாக, கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்றில் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார். இவர்கள் இன்று சுதந்திரமாக வெளியில் உள்ளனர். ஆனால் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட விடுதலைப் புலிகளுக்கு உதவியுள்ளமை குறித்து, அவரது மனைவி சந்தியாவின் மனைவியின் வாக்குமூலத்திலிருந்து தெரியவருகிறது. எனினும…
-
- 0 replies
- 251 views
-
-
அரசியலமைப்பு திருத்தம் – மக்களின் கருத்தறிய 24 பேர் கொண்ட குழு நியமனம் DEC 29, 2015 | அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கு, அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்றை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். 24 பேர் கொண்ட இந்தக் குழுவை அமைப்பதற்கான சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவைப் பத்திரத்துக்கு சி்றிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சட்டவாளர் லால் விஜேநாயக்கவைத் தலைவராக கொண்டு இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், பைசர் முஸ்தபா, பேராசிரியர் காமினி சமரநாயக்க, கலாநிதி நவரத்ன பண்டார, பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர், என்.செல்வக்குமரன், எஸ்.தவர…
-
- 0 replies
- 249 views
-
-
வடக்கில் மக்களுடன் சிங்கள மொழியில் பேசும் தமிழ் பொலிஸார்- 29 டிசம்பர் 2015 வடக்கில் இலங்கை பொலிஸில் கடமையாற்றும் தமிழ் பொலிஸார் தமிழ் மக்களுடன் சிங்கள மொழியில் உரையாடுகின்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் கடுமையான விசனங்களை தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு ஆளாகின்றனர். வடக்கிழக்கில் பெரும்பான்மையாக சிங்கள மொழிபேசும் பொலிஸாரே பெரும்பான்மையாக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கியமாக உயர் அதிகாரிகள் அனைவரும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.பொலிஸ் நிலையங்களில் ஒரு சில தமிழ் பொலிஸார் உள்ளனர். ஒரு சில தமிழ் பொலிஸார் கடமையாற்றுவதால் அதிகளவான மக்கள் பொலிஸ் நிலையங்களுக்குச் செல்லும்போது சிங்கள மொழிபேச…
-
- 0 replies
- 430 views
-
-
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவியில் ஒபாமாக்கான தமிழர் அமைப்பு தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பல பகுதிகளிலும் இலவச மருத்துவ முகாம்களை நடார்த்தி அதன் மூலம் இலவச மருத்துவ சிகிர்ச்சை மற்றும் இலவச மருந்துப்பொருட்களை அமெரிக்காவில் உள்ள ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு மற்றும் கிளங்டனுக்கான தமிழர் அமைப்பு ஆகியன அமைப்புக்கள் இணைந்து வழங்கியுள்ளது. …
-
- 0 replies
- 432 views
-
-
சேவைக்கு வராமலே மூழ்கியது அனலைதீவு அம்புலன்ஸ் படகு! அனலைதீவு பகுதி மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக வடமாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் 60 இலட்சம் ரூபா செலவில் கொள்வனவு செய்து வழங்கப்பட்ட அம்புலன்ஸ் படகு சேவையை ஆரம்பிக்காமலேயே குறிகட்டுவான் துறைமுகப் பகுதியில் கடலில் மூழ்கியது. குறிகட்டுவான் துறைமுகத்தில் இந்தப் படகு தரித்து நின்ற நிலையில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாகவே மூழ்கியதாகத் தெரியவருகிறது. இந்நிலையில் சிறிய கடற்கொந்தளிப்பிற்கே ஈடுகொடுக்க முடியாத குறித்த படகை நோயாளர் சேவைக்கு எப்படி பயன்படுத்த முடியும் என அனலைதீவு பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளதுடன், இதுகுறித்த தமது அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். …
-
- 1 reply
- 589 views
-
-
தேசிய தைப்பொங்கல் விழா பலாலி அம்மன் ஆலயத்தில் தேசிய தைப்பொங்கல் விழா வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில், ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தேசிய தைப்பொங்கல் விழாவை, யாழ்.மாவட்டத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதியளவில் நடத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தேசிய தைப்பொங்கல் விழாவின் பொங்கல் நிகழ்வினை, வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. இராஜேஸ்வர…
-
- 1 reply
- 614 views
-
-
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சறுக்கல்களும் தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கமும் 2015-12-28 15:37:03 | General சதுர்வேதி கடந்த வார இறுதியின் மாலைப்பொழுதொன்றில் உருவாகிய தமிழ் மக்கள் பேரவை பற்றிய செய்திகளும் அதை ஒட்டிய அரசியல் பரபரப்பும் இன்னமும் அடங்கியபாடாகத் தெரியவில்லை. இது தொடர்பில் ஆதரித்தும், எதிர்த்தும் பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழ் அரசியல் பெருவெளியில் அண்மைக் காலங்களில் இடம்பெற்ற ஓர் குறிப்பிடத்தக்க நிகழ்வு இது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான ஓர் மாற்று அரசியல் சக்தியாக இது உருவாகும் எனவும் இதனை நோக்குபவர்களும் உண்டு. அதேநேரம் தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் என்பது பத்தோடு பதினொன்றாக இன்…
-
- 0 replies
- 395 views
-
-
புலிகள் சுட்டுவீழ்த்திய அன்டனோவ்-32: 12 முதல் வழக்கு விசாரணை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் வில்பத்து சரணாலயத்தில் வைத்துச் சுட்டு வீழ்த்தப்பட்ட அன்டனோவ்-32 விமானம் தொடர்பான வழக்கை, ஜனவரி 12ஆம் திகதி முதல் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி ரேமா ஸ்வரணாதிபதியே மேற்கண்ட கட்டளையை நேற்று திங்கட்கிழமை பிறப்பித்தார். சம்பவம் இடம்பெற்று 15 வருடங்களுக்கு பின்னர், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். பலாலியிலிருந்து இரத்மலானைக்கு பயணித்துகொண்டிருந்த அன்டனோவ்-32 வில்பத்துவ சரண…
-
- 1 reply
- 549 views
-
-
வடமாகாண சபைக்கும், தமிழ் மக்கள் பேரவைக்கும் எந்தவித தொடர்புமில்லை! அண்மையில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் பேரவைக்கும், வடக்கு மாகாண சபைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. என வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். பேரவை என்ற சொல்லை கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை அலுவலகத்துடன் தொடர்புபடுத்தி பொது மக்கள் நோக்குகின்ற நிலை காணப்படுகின்றது. இது தொடர்பாக பலர் என்னுடன் நேரிலும் தொலைபேசி மூலமும் கேட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். வலி.கிழக்குப் பிரதேச சபையின் புத்தூர் தலைமைக் காரியாலய கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்கிழமை மாகாண சபை உறுப்ப…
-
- 0 replies
- 499 views
-
-
புத்தாண்டில் ஐவர் இலங்கைக்கு! 2016ஆம் ஆண்டில் உலகத்தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலர், இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர், ஜனவரி மாதத்திலேயே இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அதனடிப்படையில் நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜி பரண்டே ஆகியோரே விஜயம் செய்யவிருக்கின்றனர் http://onlineuthayan.com/news/5820
-
- 0 replies
- 372 views
-
-
வடமாகாண சபையில் மருத்துவர் பற்றாக்குறை பெரும் பிரச்சனை: அமைச்சர் இலங்கை வடமாகாணத்தில் போதுமான மருத்துவர் இல்லாமை பொதுமக்களை பாதிப்பதாக அமைச்சர் கவலை இலங்கை வடமாகாணத்தில் மாகாணசபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட வைத்தியசாலைகளில் வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், தாதியர்கள் என்று அனைத்துப் பிரிவுகளிலும் பெரும் ஆளணி பற்றாக்குறை நிலவுவதாக வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம் கூறியுள்ளார். இங்குள்ள 110 வைத்தியசாலைகளில் 102 வைத்தியசாலைகளே செயற்படுகின்றன. அவற்றில் 29 வைத்தியசாலைகளில் ஒரு வைத்தியர் கூட கடமையில் இல்லாத நிலைமையே நிலவுவதாகவும் அவர் பிபிசி தமிழோசையிடம் கூறினார். தாதியர்கள் பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலைகளில் புதிதாக ஆரம்பிக்கப்ப…
-
- 0 replies
- 881 views
-
-
பெப்ரவரியில் இலங்கை வருகிறார் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயத்தின் போது அவர் அரசாங்க தரப்பின் முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் வட பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. அத்துடன் வடக்கு விஜயத்தின்போது வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனையும் சந்தித்து ஐக்கிய நாடு கள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். விசேடமாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணை பொறி…
-
- 0 replies
- 535 views
-
-
ஒளிந்து விளையாடும் காவி அரசியல் மப்றூக் 'நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை' மேலே உள்ளது திருக்குறளாகும். அறத்துப் பாலில் வருகிறது. 'பயனில்லாத பேச்சு, அறிவு கெட்டவன் என்பதைக் காட்டி விடும்' என்பது, அந்தக் குறளின் பொருளாகும். 'குர்ஆனைத் தடைசெய்ய வேண்டும்' என்று சில நாட்களுக்கு முன்னர், பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தார். குர்ஆனைத் தடைசெய்வதன் மூலமே இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் கூறியிருந்தார். ஞானசார தேரரின் இந்தக் கூற்று, முஸ்லிம்களிடையே கொதி நிலையினை ஏற்படுத்தியிருந்தது. இறைவனின் திர…
-
- 0 replies
- 636 views
-
-
இராணுவத்தினரை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இராணு வீரர்கள் சகலரையும் விடுவிக்குமாறு கோரி, கொட்டாவ போதிக்கு அண்மையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின், ஜனாதிபதி ஆலோசகர் பெங்கமுவ நாலக்க தேரர், ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில உள்ளிட்ட பிரிவினரே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/162565/%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A9%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F…
-
- 0 replies
- 378 views
-
-
கட்சியில் தொடர்ந்தும் இருப்பதா இல்லையா; மகிந்த பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா இல்லையா என்பதனை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர் என்ற ரீதியில் கட்சியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதா அல்லது கட்சியை விட்டு விலகி புதிய கட்சியொன்றை தொடங்குவதா என்பதனை மகிந்த ராஜபக்சவே தீர்மானித்து, இந்த விடயம் தொடர்பில் நாட்டுக்குப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். …
-
- 0 replies
- 341 views
-
-
'பலவீனப்படுத்துகின்ற நோக்கம் இருந்தால் பேரவையிலிருந்து வெளியேறுவோம்' -சொர்ணகுமார் சொரூபன் தமிழ் மக்கள் பேரவையானது பரந்துபட்ட அளவில் மக்கள் பங்குகொள்ளும் அமைப்பாகவே உருவாக்கப்பட்டிருக்கின்றது. இவ் அமைப்பானது மக்களின் அபிப்ராயங்களைப் பெற்றுக் கொண்டு தீர்வை ஏற்படுத்துகின்ற நோக்கத்தின் அடிப்படையிலையே தற்போது உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த அமைப்பில் நாங்கள் மிகத் தெளிவான நிலைப்பாட்டிலேயே இணைந்து கொண்டிருக்கின்றோம் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையில் அவர் இணைந்து கொண்டமை தொடர்பில் இன்று(29) தமிழ் மிரருக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்…
-
- 1 reply
- 440 views
-
-
தமிழ் மக்கள் பேரவையில் துரோகிகள்- எதிரிகள் கூட்டு : ஒருபோதும் இணையோம் என்கிறார் ரெலோவின் தலைவர் செல்வம் எம்.பி எதிரிகள்- துரோகிகள் கூட்டுடன் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுலை இயக்கம் (ரெலோ) ஒருபோதும் இணையாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார் அந்த இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன். வவுனியாவில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ரெலோவின் தலைமைக் குழுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மேலும் பலப்ப…
-
- 0 replies
- 434 views
-