Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாணவன் செந்துரனின் வாழ்வும் சாவும் - பிறப்பில் இருந்து தண்டவாளம் வரை - "வேண்டாம் அரசியல் சுயலாபம்:" அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி தற்கொலை செய்து கொண்ட மாணவன் ஊடகத்துறையில் ஏற்பட்ட விருப்பு காரணமாக உயர் தரத்தில் ஊடக கற்கையினை ஒரு பாடமாக தேர்வு செய்து கற்று வந்துள்ளான். கோப்பாய் வடக்கை சேர்ந்த இராஜேஸ்வரன் செந்தூரன் எனும் 18 வயதுடைய மாணவன் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரி ஜனாதிபதிக்கு தனது பாடக்கொப்பியில் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டான். கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வியாழக்கிழமை காலை வந்து கொண்டிருந்த புகையிரதத்திற்க…

  2. வடமாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா அறிவித்துள்ளார். இன்று காலை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவன் தியாகி செந்தூரனை நினைவு கூரும் வகையிலும் அவரது தற்கொலை காரணமாக ஏற்படக்கூடிய நிலைமைகளை தவிர்க்கும் பொருட்டும் இவ் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் மாணவர்கள் பெற்றோருடன் வீடுகளில் தங்கி இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். http://onlineuthayan.com/news/3839

  3. "கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் கைதிகள் விடுதலை கிடையாது"- அமைச்சர் இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளவர்களில், கடுமையான குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகியிருப்பவர்கள் பிணையில் செல்லவோ அல்லது விடுவிக்கப்படவோ மாட்டார்கள் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ்க் கைதிகள் விடுதலைப் பிரச்சனை தொடர்கிறது கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள 204 பேரில், 59 பேர் கடுமையான குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகாதவர்கள் எனவும், அவர்கள் தொடர்பில் மட்டுமே இலகுவான நடவடிக்கைக…

  4. ரயில் கடவைகளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்துவது அரசின் கடமையாகும் : யாழ்.இந்தியத் துணைத்தூதுவர் வடக்கில் காணப்படும் பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் அனைத்திற்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உடனடியாக செய்யப்பட வேண்டும் என்று யாழ்.இந்திய துணைத்தூதுவர் நடராஜன் தெரிவித்தார். ரயில்வே புனரமைப்பிற்காக இரு நாட்டிற்கும் இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி இலங்கை அரசாங்கமே சம்பந்தப்பட்ட அமைச்சின் ஊடாக இச்செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கில் அதிகரித்துச் செல்லும் ரயில் விபத்துச் சம்பவத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வுயிரிழப்பிற்கான விபத்துக்களில் பெரும்பாலானவை பாதுகாப்பற்ற …

    • 2 replies
    • 676 views
  5. வடமாகாண சபையின் கவனத்திற்கு- குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்:- அண்மையில் பெய்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக கிளிநொச்சி இரத்தினபுரம் கிருஷ்ணன் கோயிலடியிலிருந்து வைத்தியசாலை செல்லும் வீதி மிகவும் கடுமையாக சேதமடைந்து வீதியில் உயிர் குடிக்கும் பாரிய கிடங்குகள் உருவாகியுள்ளன. கடந்த பல வருடங்களாக இந்த வீதி புனரமைக்கப்படாதிருப்பது குறித்தும் ஆயிரம் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் ஜனாதிபதியின் நிதி ஓதுக்கீடு குறித்த வீதியை புனரமைக்க வழங்கப்பட அதில் முறைகேடு இடம்பெற்றது குறித்தும் குளோபல் தமிழ் செய்திகள் ஏற்கனவே செய்திகளை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் …

  6. யாழ்.பல்கலையில் உயிர்நீத்த மாணவனுக்கு அஞ்சலியும், நல்லாட்சி அரசுக்கு எதிர்ப்பும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமது உயிரையே தியாகம் செய்த மாணவனுக்காக, யாழ். பல்கலைக்கழகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது பல்லைக்கழகத்தில் கறுப்புக்கொடி கட்டப்பட்டு, மாணவர்களால் எதிர்ப்பு நடவடிக்கையொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றுதிரண்ட மாணவர்கள், மாணவர் சக்தி மாபெரும் சக்தி, உண்ணாவிரதத்திற்கு பதில் சொல்லாத அரசே மாணவனின் உயிர் தியாகத்திற்கு பதில் சொல்வாயா?, மாணவனுக்கு புரிந்தது நல்லாட்சி அரசுக்கு புரியவில்லையா?, உரிமைகளுக்காக இத்தனை காலமும் ஈர்ந்த உயிர்த்…

  7. இறுதி யுத்தத்தின்போது சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வன்னிப் பெருநிலப்பரப்பில் இருந்து வெளியேறாமல் இருந்திருந்தால் பேரழிவுகள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று வடக்கு மாகாண முத லமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கூறியுள்ளார். வடக்கு முதலமைச்சர் கூறிய உண்மையை ஏற்று ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச தொண்டு நிறுவனங்கள் இலங்கைத் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். வன்னிப் பெருநிலப்பரப்பில் யுத்தம் நடந்த போது, சர்வதேச தொண்டு நிறுவனங்களை வெளியேறு மாறு இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்தது. அத்தகையதொரு உத்தரவை அரசு பிறப்பிக்கும் போது ஐ.நா சபை நிச்சயம் அது விடயத்தில் தலையிட்டு யுத்தகளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவுவதற்காக தாங்கள் அங்கு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி…

  8. குமரன் பத்மநாதனின் வங்கிக் கணக்கு விபரங்கள் பற்றி அறிவிக்குமாறு இந்தியா கோரிக்கை:- 26 நவம்பர் 2015 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனின் வங்கிக் கணக்கு விபரங்கள் தொடர்பில் அறிவிக்குமாறு இந்தியா கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்குத் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் இந்திய அதிகாரிகளினால் குமரன் பத்மநாதன் மற்றும் அவரது சில சகாக்கள் பற்றிய விபரங்கள் கோரப்பட உள்ளது. நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த அனுமதியளிக்குமாறு இலங்கையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விபரங்களை வழங்குமாறு ஏற்கனவே விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இலங்கை அர…

  9. அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் புதிய அரசியல் சாசனம்? குளோல்தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 26 நவம்பர் 2015 அடுத்த ஆண்டு நடுப்பகுதியளவில் புதிய அரசியல் சாசனமொன்று உருவாக்க அரசாங்கத் தரப்பினர் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். 1978ம் ஆண்டு இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட அரசியல் சாசனம், அடுத்த ஆண்டு நடுப்பகுதியளவில் கடந்த கால விடயமாக மாறக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தற்போதைய பாராளுமன்றத்தை அரசியல் சாசனப் பேரவையாக மாற்றி அதன் ஊடாக அரசியல் சாசனத்தை உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதமளவில் புதிய அரசியல் சாசனம் நடைமுறைப்படுத்தப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டள்ளது. …

  10. ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் கோத்தபாய பிரசன்னம் [ வியாழக்கிழமை, 26 நவம்பர் 2015, 03:42.28 AM GMT ] முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பாரிய நிதி மோசடிகள் விசாரணை குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரசன்னமாகியுள்ளார். சற்று முன்னர் அவர் இவ்வாறு ஆணைக்குழுவின் காரியாலயத்திற்கு சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ரக்னா லங்கா மற்றும் அவன்ட் கார்ட் நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் கோத்தபாயவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்கள் தொடர்பில் இன்றும் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilwin.com/show-RUmtzBRaSWnx0F…

  11. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் ஐ.நா தீர்மானம் குறித்து பேசப்பட உள்ளது: 26 நவம்பர் 2015 மொல்டாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானம் தொடர்பிலும் பேசப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் இலங்கை விவகாரம் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாத போதிலும், இலங்கை விவகாரம் பற்றி பேசப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாளைய தினம் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன நேற்றைய தினம் மோல்டாவிற்கு புறப்பட்டுச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை யுத்தக…

  12. உடைகிறது மகிந்த அணி - ஐந்து எம்.பிக்கள் அரச தரப்புடன் இணையத் திட்டம்! [Thursday 2015-11-26 07:00] எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரச தரப்பில் இணைய தீர்மானித்துள்ளதை தொடர்ந்து மகிந்த ராஜபக்ச அணிக்குள் பிளவு ஏற்படுவது உறுதியாகியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்தில் அடுத்த சில நாட்களில் இணையவுள்ளதை அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்திருந்தார். அரசாங்கத்தில் இணைந்த பின்னர் அவர்கள் வரவுசெலவுதிட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார். எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐந்து…

  13. கூட்டமைப்பு அரசாங்கத்தின் 18 முக்கியஸ்தர்களுக்கு எதிராக வழக்கு [ வியாழக்கிழமை, 26 நவம்பர் 2015, 03:08.28 AM GMT ] ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 18 முக்கியஸ்தர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் நிதி மோசடிகள், ஊழல்கள் மற்றும் பல்வேறு மோசடிகள் தொடர்பில் இவ்வாறு வழக்குத் தொடர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக பதவி வகித்தர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளது. இவர்களில் சிலர் முக்கியஸ்தர்களின் புதல்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொலிஸ் நிதி மோசடிப் பிரிவ…

  14. தமிழகத்தில் இருந்து நாடு திரும்பிய 42 பேரிடம் விசாரணை [ செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2015, 11:59.09 AM GMT ] தமிழகத்தில் முகாம்களில் தங்கியுள்ள 42 அகதிகள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர். நாடு திரும்பியுள்ள அகதிகளிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் வழிக்காட்டலுடனும், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலுடனும் இவர்கள் நாடு திரும்பியுள்ளனர். அத்துடன் இவர்கள் நாடு திரும்புவதற்கான இலவச விமான பயணச்சீட்டை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வழங்கப்பட்டிருந்தது. …

  15. தமிழினத்தின் விடுதலையை இலட்சிய நோக்காகக் கொண்டு தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கியவர்கள் எமது இளைஞர், யுவதிகள். அவர்கள் வாழ்வு அனைத்தையும், தேச விடுதலைக்காக அர்ப்பணித்தவர்கள். உலகின் ஒவ்வொரு விடுதலைப் போராட்ட இயக்கங்களும், தமது போராளிகளின் வீரமரணத்திற்கு பின்னர் அவர்களை நினைவு கூர்ந்து அதனை நினைவு நாளாக அனுஷ்டிப்பார்கள். ஆனால் தமிழன் மட்டும் களத்தில் வீர மரணத்தை அடைந்தவனுக்கு கல்லறை எழுப்பி, அவர்களை கடவுளுக்கு நிகராக தமது காவல் தெய்வங்களாக நினைத்து வழிபடுவார்கள். இது இன்று நேற்று ஏற்பட்ட பழக்கம் அன்று. அது சங்ககாலத்திலேயே ஏற்பட்ட ஒன்று. ஆக தமிழன் கடவுளாக தன்னினத்திற்காக களமாடியவனை வழிபட்டுவந்திருக்கின்றான். ஆனால் காலப்போக்கில் அந்த …

  16. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரங்கள் நேற்று நள்ளிரவு வீசப்பட்டுள்ளன. இந்த துண்டுப் பிரசுரங்கள் விஸ்வமடு, சுண்டிக்குளம் பகுதி மற்றும் ஏ9 வீதியில் வீசப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. சுமார் 50 வரையான துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன. தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு 61 வது பிறந்தநாள் வாழ்த்து என வண்ணப்படத்துடன் இவை அச்சிடப்பட்டுள்ளன. நாளை தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 61 வது பிறந்தநாள், என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=145603&category=TamilNews&languag…

  17. போராட்டத்தில் உயிர் நீத்த என் மகனுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்த இந்த நல்லாட்சியில் அனுமதி கிடைக்குமா என ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் இருக்கின்றாள் இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த தாய். தனது இரண்டு பிள்ளைகளையும் இழந்த துயரத்தில் இருந்த தாய்க்கு தனது கணவனையும் இழக்க நேரிட்டது, இதனால் மிகவும் மனமுடைந்து தனது வீட்டு சுவரில் மாட்டியிருக்கும் படத்துக்கு கூட விளக்குகொழுத்த பயத்தில் இருப்பதாக தெரிவித்தார். நாங்கள் இந்த அரசாங்கத்திடம் கேட்பது இறந்த எங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமையை, என்னைப் போன்று இன்று எத்தனையோ தாய்மார்கள் கண்ணீர் விட்டு கதறுகின்றார்கள் தங்களின் மகள் மற்றும் மகன், கணவன்மார்களின் உருவப்படத்துக்கு ஒரு விளக்கு ஏற்றி அ…

  18. தமிழினத்தின் உலக முகவரி மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் என தமிழக இயக்குநர் கௌதமன் தெரிவித்துள்ளார். தமிழீழ தேசியத் தலைவரின் 61 வது பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், தலைவர் பற்றி மேலும் பல தகவல்களை வெளியிட்டிருந்தார். அவை முழுமையாக இங்கே இணைக்கப்பட்டுள்ளன. உலகத்தின் மூத்த இனம் தமிழினம். மூத்த மொழி தமிழ்மொழி. சில நூறு ஆண்டுகள் மட்டுமே வரலாறு கொண்ட பலநூறு மொழிகள் இருக்க, ஐம்பதினாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்த பேரினத்திற்கு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செறிவான இலக்கண நூலான தொல்காப்பியம் கோலோச்சிக் கொண்டிருந்தது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆற்றைத் தடுத்து அணையை கட்டி விவசாயம் செய்து உலகத்து உயிர்களை வாழ்விக்க விவசாய புரட்சியையே தொடங்கி வைத்தவன…

  19. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,ஆட்சியில் இருந்தபோது அவருக்கு பிடிக்காத நான்கு பெண்கள் இருந்தனர் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றின் ஆய்வுக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இதில் முதலாமவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, இரண்டாமவர் ஐக்கிய நாடுகளின் அமெரிக்காவுக்கான வதிவிடப்பிரதிநிதி சமந்தா பவர், மூன்றாமவர் ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, நான்காமவர் இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் மிச்செய்ல் ஜே சிசன் ஆகியோராவர். இதில் மஹிந்தவுக்கு மிகவும் பிரச்சினையை தரக்கூடியவராக சமந்தா பவர் கருதப்பட்டார். மஹிந்த தமது ஆட்சிக்காலத்தில் அமைச்சரவை அங்கத்தவர்களை சந்திக்கும்போதெல்லாம், அந்த வெள்ளை மாளிகையின் ஒல்லியான(மெலிந்த) பெண்ணே தமக்…

  20. அது மற்றொரு இருண்ட காலம்! இலங்கை இராணுவத்திற்குப் பதிலாக இந்திய இராணுவம் வடக்கையையும் கிழக்கையும் ஆக்கிரமித்துக்கொண்ட அச்சம் தரும் இரவுகள்!! சந்திகளிலும், சாலைத் திருப்பங்களிலும் மக்கள் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் சோதனைச் சாவடிகளைக் கடந்தே நடந்து போகமுடியும். அவர்கள் கண்களுக்கு எதிரி என்று தெரிகின்ற ஒவ்வொரு மனிதனும், கைது செய்யப்படலாம். விசாரணையின் பின் விடுவிக்கப்படலாம், சித்திரவதையின் பின் கொல்லப்படலாம்… இவை அனைத்திற்கும் மேலாக தனது பெயரில் புரட்சி என்ற சுமையை சுமந்துகொண்ட அருவருப்பில் உலா வந்துகொண்டிருந்தது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற ஈ.பி.ஆர்.எல்.எப். 1987 இல் இருந்து 1990 ஆம் ஆண்டு வரை அன்னிய ஆக்கிரமிப்புப் படையான இந்திய இராணுவம் தனது ஊழிக்க…

  21. லண்டனில் தமிழர்கள் செறிந்து வாழும் ரூட்டிங், மிச்சம் பகுதியில் நேற்று இரவு இரு தமிழ் ரவுடிக் குழுக்களுக்கிடையே மோதலை அடுத்து ஐந்து இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். ஒருவருக்கொருவர் தலைக்கு மேல் அடித்து கொல்ல கோடாரிகள் பயன்படுத்தி கொண்டனர் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடும் இளைஞர்களை இனம் கண்டு இவர்களின் வன்முறைகளை கட்டுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமிழ் மக்கள் அனைவரும் முன்வரவேண்டும். - See more at: http://www.paasam.com/news/495.html#sthash.OppqHhHo.d…

  22. மகிந்தராஜபக்ச அணிக்குள் பிளவு ஏற்படுவது நிச்சயமாகியுள்ளது: குளோல்தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு எதிர்கட்சி வரிசையில் அமர்வதற்கு தீர்மானித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொள்வதற்கு தீர்மானித்து உள்ளதை தொடர்ந்து மகிந்தராஜபக்ச அணிக்குள் பிளவு ஏற்படுவது நிச்சயமாகியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்தில் அடுத்தசில நாட்களில் இணையவுள்ளதை அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்திருந்தார், அரசாங்கத்தில் இணைந்த பின்னர் அவர்கள் வரவுசெலவுதிட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார். ஏனினும் அரசாங்கம் சில ப…

  23. மாவீரர் தின நிகழ்வுகள் நடத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - காவல்துறை மாவீரர் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் இன்றைய தினம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட பயங்கரவா அமைப்பாகவே காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான ஓர் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வகையில் பொது நிகழ்வுகள் நடத்தப்படுவதனை அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப…

  24. பிள்ளையான் கருணா யுத்த்திற்கு உதவியதை மறக்க கூடாது- காமினி லொகுகே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் மற்றும் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதி கருணா அம்மான் ஆகியோர் இலங்கை அரசின் யுத்தத்திற்கு உதவியை எவரும் மறக்க கூடாது என்று பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கருணா அம்மானும் பிள்ளையானும் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்காக புலனாய்வுப் பிரிவுக்கு பல தகவல்களை வழங்கியுள்ளதாகவும் அதனை எவரும் மறந்து செயற்படக்கூடாது என்றும் காமினி லொக்குகே கூறியுள்ளார். இதேவேளை யுத்தத்தின் இறுதியில் இரகசியப் பொலிசாருக்கு தகவல் வழங்கிய அடிப்படையில் பிள்ளையான் கைது செய்யப்பட்டிருப்பது ஒரு அ…

  25. சிங்கள இனத்தவர் அரசாங்க அதிபர்: வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக மறுபடியும் சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த ஓர் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதை ஆட்சேபித்துள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வவுனியா மாவட்ட வடமாகாணசபை உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்திற்கு அளித்துவரும் நல்லெண்ண அடிப்படையிலான ஆதரவை கூட்டமைப்பின் தலைமைகள் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என கோரியிருக்கின்றனர். புதன்கிழமை காலை வவுனியா சுவர்க்கா தங்ககத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்த அவர்கள், இது தொடர்பில் கூட்டு அறிக்கையொன்றையும் வெளியிட்டிருக்கின்றனர். கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றாகி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.