Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கனடாவின் முக்கிய இந்து ஆலயம் புலிகளுக்கு நிதி வழங்கியதாக குற்றச்சாட்டு- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்: 24 நவம்பர் 2015 கனடாவின் முக்கிய இந்து ஆலயங்களில் ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் ரொரன்டோவில் அமைந்துள்ள கந்தசாமி ஆலயம் இவ்வாறு புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. கனேடிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, கொழும்பில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ரொரன்டோ கந்தசாமி ஆலயம் இவ்வாறு பணம் வழங்கியமை தொடர்பில் கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் அந்நாட்டு மத்திய நீதிமன்றிற்கு இது குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும், இந்த ஆலயத்தினை உலகத் தமிழர் இயக்கம் நடத்திய வந்…

  2. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு என்று கூறி தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தனிஆட்களின் பட்டியலில் பல பெயர்களை இலங்கை அரசாங்கம், அகற்றியமையை பிரித்தானியா வரவேற்றுள்ளது. இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌரிஸ் இதனை தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது கலந்துரையாடல்களுக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தடைநீக்கத்தை இலங்கை அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமையன்று மேற்கொண்டது. இதற்கான வர்த்தமானியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், தகுதிவாய்ந்த அதிகாரி என்ற வகையில் கையொப்பம் இட்டுள்ளாhர் சிறிலங்கா அரசால் தடை நீக்கிய புலம்பெயர் அமைப்புகள், தனிநபர் பெயர்கள் இணைப்பு! எட்டு புலம்பெயர் அமைப்புகள் மற்றும், 269…

  3. அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாகவே வடக்கு மாகாண சபையை வினைத்திறனற்ற சபை என்கிறார்கள் வடக்கு மாகாண சபை வினைத்திறனற்ற சபை அதனால் மக்களுக்கு எதனையும் செய்ய முடியவில்லை என்று சிலா் அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக விமா்சனம் செய்து வருகின்றனர் என வடமாகாண விவசாய அமைச்சா் பொ.ஜங்கரநேசன் அவா்கள் தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் யுஎன்டிபி நிறுவனத்தின் 18.6 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீ்ட்டில் கிளிநொச்சி ஒருங்கிணைந்த பண்ணையாளா் சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் விதை உற்பத்தி சுத்திகரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவா் இவ்வாறு தெரிவித்துள்ளார். …

  4. பிளவுபட்டுள்ள சிங்கள, தமிழ் மக்களிடையில் நல்லிணக்க பாலத்தை ஏற்படுத்துவதே இலங்கைக்கு நன்மை பயக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு சென்றிருந்த அவர், செய்தியாளர்களிடம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். தற்போதைய இலங்கை அரசாங்கம் இரண்டு சமூகங்களுக்கு இடையிலும் நல்லுறவை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக நல்லிணக்க சபையின் தலைவியாக செயற்பட்டு வரும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார். 'இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் பிளவு உள்ளது. பாடசாலைகளும் இரண்டு சமூகங்களுக்கும் வெவ்வேறாக உள்ளன. இந்தநிலையில் இந்தியாவைப் போன்ற ஆங்கில மொழிக்கு ஊக்கம் அளிக்கப்பட்டிருந்தால் அது இரண்டு சமூகங்களுக…

    • 1 reply
    • 1.5k views
  5. உலகில் பயங்கரவாதத்துக்கு இறுதியான தீர்வு காணப்பட வேண்டும் என்பதை, கடந்த வாரம் பாரிஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம், வலியுறுத்தி நிற்பதாக இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன தெரிவித்துள்ளார். காலி கலந்துரையாடலில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். பயங்கரவாத தாக்குதல்களுக்கு நிலத்துக்கு அடுத்தபடியாக கடல் வழி பயன்படுத்தப்படுகிறது. இந்தநிலையில் ஐரோப்பியாவுக்குள் படகு அகதிகளாக பிரவேசிக்கும் பயங்கரவாதிகளே பாரிஸ் தாக்குதலை போன்ற தாக்குதல்களை நடத்துகின்றனர். எனவே சட்டவிரோத கடல்வழி படகு பயணங்களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று கடற்படை தளபதி குறிப்பிட்டுள்ளார். …

    • 1 reply
    • 1.3k views
  6. [ செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2015, 01:45.41 PM GMT ] பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு தமிழ் அரசியல் கைதிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன், அவர்களை புனர்வாழ்வுக்கு ஈடுபடுத்துமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் 39 தமிழ் அரசியல் கைதிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/show-RUmtzBRYSWnv5G.html

  7. இலங்கைக்குள் கடற்படைத் தளபம் அமைக்க எந்த ஒரு நாட்டுக்கும் இடமளிக்கப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சமுத்திர மற்றும் கடல் வழி பாதுகாப்பு தொடர்பாக ஆராயும் காலி பேச்சுவார்த்தை “ என்ற சர்வதேச கடல்சார் பாதுகாப்பு தொடர்பான இரண்டு நாள் மாநாடு நேற்று காலி லைட் ஹவுஸ் ஹோட்டலில் ஆரம்பமானது. “பாரிய சமுத்திரவியல் ஒத்துழைப்பு மூலம் கடல்களை பேணி பாதுகாத்தல்: அதன் சவால்கள் மற்றும் முன்னேற்ற வழி முறைகள்”(Secure Seas through Greater Maritime Cooperation: Challenges and Way Forward) என்ற தொனிப் பொருளில் இரண்டு நாட்கள் நடைபெற வுள்ள இந்த சர்வதேச மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன் பிரத…

  8. பாரிஸ் தாக்குதலின் எதிரொலி! நான்கு நாடுகளில் இலங்கையர்களுக்கு புகலிடம் மறுப்பு! [ திங்கட்கிழமை, 23 நவம்பர் 2015, 08:38.05 PM GMT ] ஐரோப்பாவின் போல்கன் பிராந்தியத்தைச் சேர்ந்த மெஸிடோனியா மற்றும் சேர்பியா உட்பட நான்கு நாடுகளில் இலங்கையர்களுக்கான புகலிடம் மறுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் பிரகாரம் மெஸிடோனியாவுக்கு இலங்கை, சூடான், ஸைபீரியா, கொங்கோ மற்றும் பாகிஸ்தானிலிருந்து புகலிடம் கோரி வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என சேர்பியாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் பேச்சாளர் மெலிடா சுன்ஜித் தெரிவித்துள்ளதாக ஐ.நாவின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் பிரசுரமாகியுள்ளது. தங்கள் நாடுகளில் வந்து குவியும் புகலிடக் க…

  9. மாவீரர் நாள் விளக்கு எரியும் : யாழ்.பல்கலையில் வாசகம் யாழ்.பல்கலை வளாகத்தில் உள்ள பல இடங்களில் இன்று மாவீரர் நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. குறித்த சுவரொட்டிகளில் பின்வருமாறு வாசகங்கள் பொறிக்கப்பட்டிருப்பதையும், எழுதப்பட்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. மறவர் படையின் புனித நாள், புலிகளின் தாகம் தமிழீழ தாயகம், மாவீரர் நாள் விளக்கு எரியும், தமிழனின் வீரம் காத்தீர் தமிழனின் மானம் காத்தீர் தமிழனை உலகறியச் செய்தீர் வீண்போகாது உங்கள் தியாகம் விதைக்கப்பட்ட வீரர்களுக்கு எங்கள் வீரவணக்கம் போன்ற வீர வாசகங்கள் அந்த சுவரொட்டிகளில் காணப்படுகின்றது. http://onlineuthayan.co…

  10. மகிந்தவின் பரப்புரைக்கு ரூ. 14 கோடி பணம் செலவு கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவுக்காக பரப்புரை விளம்பரங்களுக்கு மாத்திரம் கிட்டத்தட்ட 14 கோடி ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோறள தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தியினால் நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதற்கு மேலதிகமாக அணிவகுப்புக்காக கிட்டத்தட்ட 91 லட்சமும், தானம் வழங்குவதற்காக கிட்டத்தட்ட 35 லட்சமும், கட்டிடங்களுக்கு வரி செலுத்துவதற்காகக் கிட்டத்தட்ட 2 கோடி பணமும் கடந்த அரசாங்கத்தின் போது வெளிநாட்டு வேலைவாய…

  11. 42 ஈழத் தமிழர்கள் இந்தியாவிலிருந்து இன்று தாயகம் திரும்புகின்றனர் [ Tuesday,24 November 2015, 03:08:17 ] தமிழக அகதி முகாம்களில் தங்கியுள்ள அகதிகளில் 42 பேர் இன்று செவ்வாய்க்கிழமை தாயகம் திரும்பவுள்ளனர். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் வசதிப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலுடன் அகதிகள் நாடு திரும்பவுள்ளனர். நாட்டை வந்தடைவதற்காக இலவச விமான பயணச்சீட்டு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வழங்கப்படுவதாக சிறசை்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் சமூக ஒருங்கி…

  12. சிகிச்­சைக்­காக கொழும்­பி­லுள்ள தனியார் வைத்­தி­ய­சாலை ஒன்றில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள காணி அமைச்சர் கே.டி.எஸ். குண­வர்­த­னவை ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன பார்­வை­யிடச் சென்ற போது பிடித்த படம். இதன்போது அவர் பாது­காப்பு பிரி­வி­னரை அழைத்துச் செல்லவில்லை. - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=13417#sthash.l2NjVX1Z.dpuf

  13. பீரிசிடம் நேற்று 3 மணிநேரம் விசாரணை! - அஞ்சமாட்டேன் என்கிறார் [Tuesday 2015-11-24 07:00] முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் நேற்று விசாரணையை முன்னெடுத்தனர். வெளிநாட்டுத் தூதரகங்களில் கடமையில் இருந்தோரை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை இடம்பெற்றதாகவும் இது தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றினை பொலிஸார் பதிவு செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் நேற்று விசாரணையை முன்னெடுத்தனர். வெளிநாட்டுத் தூதரகங்களில் கடமையில் இருந்தோரை அரசியல் செயற்…

  14.  படி தாண்டிய விக்கி; பரிதாபமானது கட்சி ப.தெய்வீகன் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு சற்றுக் குழம்பிப்போயுள்ளது. அதற்கு காரணம், தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் அல்லாத இருவருக்கு இடையிலான உள் முரண்டுபாடுமட்டும்தான் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளபோதும், இப்போதைக்கு அந்த காயத்துக்கு மருந்து போட்டால், எல்லாவற்றுக்கும் தீர்வுவரும் என்று நம்புமளவுக்கு அந்த பிரச்சினையைத்தான் பிரதான பிணக்காக கரிசனைகொள்ள வேண்டியிருக்கிறது. விக்னேஸ்வரன் - சுமந்திரன் என்ற இரண்டு அரசியல்புள்ளிகளை மையமாக கொண்டு கடந்த சில வாரங்களாக பெரு வீச்சுடன் வீசுகின்ற ஓர் அரசியல் பெரும் புயல், பல…

  15. 2016 முதல் ஒரு எம்.பிக்கு 15 மில்லியன் ரூபா ஒதுக்கீடு நாடாளுமன்ற உறுப்பினரொருவருக்கு ஒதுக்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவுத் திட்ட நிதி விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறி அரசு செயற்படவில்லையெனத் தெரிவித்த பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா, 2015ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டை இணைத்து 2016 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினரொருவருக்கு 15 மில்லியன் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவுத்திட்ட நிதி ஒதுக்கப்படுமெனத் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றில் வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வருடாவருடம் வழங்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி விடயம் …

  16. வடக்கு மக்கள் சுதந்திரமான காற்றை சுவாசிக்கின்றனரா? : ஆராய யாழ்.வந்தது நிபுணர் குழு வடக்கு மக்கள் சுதந்திரமான முறையில் வாழ்கின்றனரா? என்பதனை ஆராய்வதற்கு இலங்கைக்கான பிரிட்டன் மற்றும் தெற்காசிய இரு நாடுகளின் பிராந்தியங்களின் நிரந்தர மற்றும் பாதுகாப்புக்களின் நிபுணர் சிமோன் போன்ட் அடங்கிய மூவர் குழுவினர் நேற்று யாழ்ப்பாணம் விஜயம் செய்திருந்தனர். இவர்கள் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்ததுடன் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகனை சந்தித்துக் கலந்துரையாடினர். இதில் யாழ்.குடாநாட்டு மக்களின் நிலைமைகள் மற்றும் இயல்பு வாழ்க்கை சுதந்திர நிலைப்பாடுகள், இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள், மீள்குடியேற்றம் …

  17. இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் அவதானமாக இருக்கும்படி எச்சரிக்கை! [Tuesday 2015-11-24 07:00] இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இலங்கையின் சகல பகுதிகளில் வாழ்கின்ற பொதுமக்களையும் விழிப்பாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஆகக் கூடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் மின்னல் தாக்கும் என்றும் அந்நிலையம் அறிவுறுத்தியுள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இலங்கையின் சகல பகுதிகளில் வாழ்கின்ற பொதுமக்களையும் விழிப்பாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஆகக் கூடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் மின்னல் தாக்கும் என்றும் அந்நிலையம் அறிவுறுத்தியுள்ளது. http://www.seit…

  18. திருகோணமலை இரகசியத் தடுப்பு முகாம்- 20 கடற்படை புலனாய்வு அதிகாரிகள் விரைவில் கைது? [Tuesday 2015-11-24 07:00] திருகோணமலை இரகசிய முகாம் தொடர்பாக 20 கடற்படை புலனாய்வு அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலவந்தமாக காணாமல் போதல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது அவர்களை புலனாய்வுப் பிரிவினர், குறித்த இரகசிய கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றிருந்தனர். திருகோணமலை இரகசிய முகாம் தொடர்பாக 20 கடற்படை புலனாய்வு அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலவந்தமாக காணாமல் போதல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் அண்மை…

  19. ஜெனிவா தீர்மான விவகாரத்தில் அரசாங்கம் மீது அமெரிக்கா அதிருப்தி! [Tuesday 2015-11-24 07:00] இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளில் இலங்கை அரசாங்கத்தின் முனைப்புக்கள் திருப்தி அளிக்கவில்லை என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளில் இலங்கை அரசாங்கத்தின் முனைப்புக்கள் திருப்தி அளிக்கவில்லை என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் இன்னமும் அடிப்படை பொறிமுறைமை ஒன்றை உருவாக்கவில்லை என இலங்கைக்கு விஜ…

  20. தேரர்களைக் காணவில்லை பொலன்னறுவை – அரலகங்வில பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில், தேரர்களாக பணிபுரிந்து வந்த நான்கு பேர் நேற்று காணமல் போய் உள்ளனர். விகாரைக்கு அருகில் உள்ள வனப்பிரதேசம் ஒன்றுக்கு சென்று, மாலை வரை திரும்பி வராமையினால், ஏனைய தேரர்களும் விகாரை சங்க உறுப்பினர்களும் அவர்களைத் தேடி உள்ளனர். பின்னர் பொலிஸாரும், பிரதேச மக்களும் ஒன்றிணைந்து, நேற்று இரவு வரை தேடிய போதும் அவர்களை காணவில்லை என்று அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர். http://onlineuthayan.com/news/3580

  21. கிளிநொச்சி, அறிவியல் நகரில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியற்பீடத்தின் கட்டடத் தொகுதி, உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரயெல்லவினால் ஞாயிற்றுக்கிழமை (22) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் ஏற்கெனவே அறிவியல் நகரில் திறந்து வைக்கப்பட்ட நிலையில், பொறியியற் பீடத்தின் கட்டடங்கள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்து, தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியற்பீடமானது 2015 -2016 கல்வியாண்டு மாணவர்களை முதன்முதலாக உள்வாங்கி ஆரம்பிக்கவுள்ளது. http://www.tamilmirror.lk/159761/%E0%AE%95-%E0%AE%B3-%E0%AE%A8-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%AA-%E0%AE%B1-%E0%AE%A…

  22. அப்பம் சாப்பிட்டுவிட்டு வரலாற்று தீர்மானம் எடுத்தேன் : 21ஆம் திகதியை நினைவு கூர்ந்த ஜனாதிபதி இந்த நாள் எனக்கு மறக்க முடி­யாத நினைவு நாள். கடந்த ஆண்டு இதே­தி­னத்தில் அரசை விட்டு வெளி­யேறி ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்கும் செய்­தியை வெளி­யிட்டேன். அதற்கு முதல் நாள் முன்னாள் ஜனா­தி­ப­தி­யுடன் ஒன்­றாக இணைந்து அப் பம் சாப்­பிட்டு விட்டு வர­லாற்றுத் தீர்­மா­ன த்தை எடுத்தேன் என நவம்பர் மாதம் 21 ஆம் திக­தியை நினைவு கூர்ந்தார் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, எனக்கு சிறப்­பான பின்­புலம் கிடை­யாது…

  23. போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உதவியதால் தான் நிம்மதியாக வாழ முடிகிறது! - என்கிறார் மைத்திரி [Monday 2015-11-23 07:00] இலங்கையில் நடைபெற்ற கொடிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர அண்டை நாடான இந்தியா உதவி செய்தமையினால் தான் இன்று நாம் அனைவரும் நிம்மதியாக வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்ற கொடிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர அண்டை நாடான இந்தியா உதவி செய்தமையினால் தான் இன்று நாம் அனைவரும் நிம்மதியாக வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மாத்தளை நகரில் பத்து கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்ட மகாத்மா காந்தி சர்வதேச மத்திய நிலைய கட்டடத் திறப்பு விழா நேற…

  24. ஜனாதிபதி மைத்திரி உலகத்திற்கு முன்னுதாரணம்: சமந்தா பவர் இலங்கையின் புதிய அரசாங்கம் கடந்த 10 மாதங்களில் நாட்டில் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொண்டுள்ள அர்ப்பணிப்பை பாராட்ட வேண்டும் என ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய வேலைத்திட்டங்கள் குறித்து சர்வதேச சமூகம் கடும் அக்கறையும் அவதானித்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆசியா மற்றும் ஆபிரிக்க தலைவர்கள் பெரும்பாலும் அதிகாரத்தை தம்மிடத்தில் வைத்து…

  25. தமிழருக்கான நிரந்தரதீர்வு வேண்டும் ; சமந்தா பவரிடம் சம்பந்தன் வலியுறுத்து தமிழருக்கான நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என ஐநாவுக்கான அமெரிக்க பிரதிநிதி சமந்தா பவரிடம் சம்பந்தன் வலியுறுத்தினார். ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நிறைவடைந்துள்ளது. இந்த சந்திப்பு அமெரிக்க தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பின்போது தமிழர் பிரச்சினை தொடர்பாகவும் மீள்குடியேற்றம் தொடர்பாக பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.