ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
யாழ்.சுங்கவரித் திணைக்களத்திடம் வெங்காய விதை வழக்கு ஒப்படைப்பு இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குப் பெரிய வெங்காய விதைகளைக் கடத்தினர் என்ற குற்றச்சாட்டு வழக்கில், குற்றம் நிரூபிக்கப்படும் நிலையில் உள்ளதால் அது பற்றிய மேலதிக விசாரணைக்காக அந்த வழக்கை யாழ். சுங்கவரித் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு மன்னார் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்கள் 2 பேர் சேர்ந்து கடந்த வருடம் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாகப் பெரிய வெங்காய விதைகளை மன்னார் ஊடாகக் கடத்தியிருந்தனர் என்று குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக மன்னார் பொலிஸாரால் மன்னார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு மன்னார் நீதிமன்றில் நீதிவான் ஏ.ஜி. அலெக்ஸ்ராஜ…
-
- 0 replies
- 262 views
-
-
இலங்கை அரசுக்கு இது வரலாற்றுச் சந்தர்ப்பம் போரின்போதும், போருக்குப் பின்னரும், மோசமான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பதில ளிப்பதற்கு, இலங்கைக்கு ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகப் பேச்சாளர் ரவினா சம்தாசனி தெரிவித்துள்ளார்.ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நேற்று முன்தினம் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- இலங்கை தொடர்பான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் சபை நிறைவேற்றியுள்ளதன் மூலம், நீதி வழங்குவதிலும், மோசமான சர்வதேசச் சூழலில் இடம்பெற்ற குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவதிலும் சர்வதேசத் தலையீட்டின் மு…
-
- 0 replies
- 219 views
-
-
யாழ்ப்பாணம் வருகிறார் போக்குவரத்து அமைச்சர் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்றைய தினம் வடக்கிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார். இன்று காலை 5.30மணியளவில் கொழும்பு புறக்கோட்டையிலிருந்து விசேட ரயில் மூலம் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொள்ளும் அமைச்சர் நண்பகல் 12.30 மணியளவில் யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை சென்றடையவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. யாழ். புகையிரத நிலையத்தில் இடம்பெறும் விசேட கலந்துரையாடலில் பங்கெடுக்கும் அமைச்சர் தொடர்ந்து காங்கேசன்துறை ரயில் நிலையம் வரை பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் யாழ். கோண்டாவில் பிரதான பஸ் டிப்போவிற்கு விஜயம் செய்யும் அமைச்சர் நிமால் யாழ்ப்பாணத்து அரச பேரு…
-
- 0 replies
- 311 views
-
-
சர்வதேச அகிம்சை தினம் யாழில் அனுஸ்டிப்பு இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நேற்று யாழ். இந்துக் கல்லூரியில் சர்வதேச அகிம்சை தினம் கொண்டாடப்பட்டது. மகாத்மா காந்தியின் பிறந்த தினமான நேற்று சர்வதேச அகிம்சை தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் இந்திய துணைத்தூதர் நடராஜன், யாழ் மாவட்ட அரச அதிபர் வேதநாயகன், யாழ்-கிளிநொச்சி மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், சிறுவர் மற்றும் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஈழ மக்கள் ஜனநாயக கடசியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஜானம், சபையின் எதிர்க்கட்சித் தலைவர்…
-
- 0 replies
- 261 views
-
-
மார்கழிக்குள் முழுமையான மீள்குடியேற்றத்திற்கு முயற்சிப்பேன் : வளலாய் மக்களுக்கு உறுதியளித்தார் எதிர்க்கட்சித் தலைவர் இந்த வருடம் மார்கழி மாதத்திற்குள் வளலாய் பகுதி மக்களை முழுமையாக மீள்குடியேற்ற முயற்சிகள் எடுப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் உறுதியளித்தார். http://onlineuthayan.com/news/794
-
- 0 replies
- 199 views
-
-
வடமாகாணம் எதேச்சாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் இன்று காலை 9 மணிக்கு சேதனப் பசளைப் பிரயோகத்தினை ஊக்குவிப்பதற்கான நிகழ்ச்சி இடம்பெற்றது. அந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தென்னைப் பயிர்ச்செய்கை சபையானது தெங்குப் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்க பல திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தி வருகின்றது. இன்றைய இந்த நிகழ்வும் அப்பேர்ப்பட்டதே. அதாவது தெங்குப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்களிடையே சேதனப் பசளைப் பிரயோகத்தினை பிரபல்யப்படுத்தி ஊக்குவிக்கவும், மக்களிடையே சேதனப் பசள…
-
- 3 replies
- 430 views
-
-
தென்னிந்திய நடிகர் விஜய் நடித்து இன்று திரைக்கு வந்த புலி திரைப்படம் மொக்கை படம் என கூறியவரின் தலையில் விஜயின் ரசிகர் தாக்கியதில் மொக்கை படம் என கூறியவர் தலையில் காயமடைந்துள்ளார். யாழில் உள்ள ராஜா திரையங்கிலையே இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்று உள்ளது. அச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, தாவடி பகுதியை சேர்ந்த இளைஞர் குழு இன்று காலை திரைக்கு வந்த புலி திரைப்படத்தினை பார்வையிடுவதற்கு வந்திருந்தனர். அந்த குழுவில் விஜய் ரசிகர்களும் வேறு நடிகர்களின் ரசிகர்களும் இருந்துள்ளனர். புலி திரைப்படத்தின் காலை காட்சியினை பார்வையிட்ட பின்னர் குறித்த இளைஞர் குழுவில் இருந்த விஜய் ரசிகர் இல்லாத ஒருவர் "புலி படம் மொக்கை படம் " என கூறியுள்ளார். அதனை கேட்டவுடன் அக்குழுவில் இருந்த …
-
- 1 reply
- 996 views
-
-
02 அக்டோபர் 2015 யாழ்.இந்து கல்லூரி மாணவன் ஒருவர் கல்லூரிக்கு அருகில் உள்ள ஆட்களற்ற வீடொன்றில் இருந்து கை மணிக்கட்டில் வெட்டுக்காயத்துடன் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கச்சேரி நல்லூர் வீதியை சேர்ந்த தமிழகன் நிருஜன் (வயது 14) எனும் மாணவனே அவ்வாறு மீட்கப்பட்டு உள்ளான். மாணவன் மீட்கப்பட்ட வீட்டு கிணற்றில் இருந்து மாணவனின் பாடசாலை பை (bag) மீட்கப்பட்டு உள்ளது. அத்துடன் வீட்டு வளவில் இருந்து சோடா போத்தல், மாணவனின் கழுத்து பட்டி , இரத்த கறையுடன் பிளேட் ஒன்று என்பன மீட்கப்பட்டு உள்ளது. இது தொடர்பில் அயலவர் தெரிவிக்கையில், வீடு சில காலமாக ஆட்கள் அற்று பூட்டி உள்ளது. இந்த வழியாக செல்லும் போது வீட்டு முற்றத்தில் பாடசாலை சீருடையுடன…
-
- 1 reply
- 796 views
-
-
பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் 7 பேர் நேற்றிரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பருத்தித்துறையை அண்மித்த கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபட்ட வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று பகல் யாழ்ப்பாண கடற்தொழில் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=141470&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 223 views
-
-
இலங்கையில் ஆண்களை விடவும் 18 லட்சம் பெண்கள் அதிகமாக வாழ்ந்து வருவதாக கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் ஆண்களை விடவும் 1817000 அதிகமான பெண்கள் வாழ்ந்து வருவதாகவும் இது ஓர் பாரிய சமூகப் பிரச்சினை எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின மானுட வள அபிவிருத்தி நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் மொத்த சனத்தொகையில் 46 வீதமானவர்கள் ஆண்களாகும். இலங்கையின் மொத்த சனத்தொகையில் 1,04,45,000 ஆண்களும், 1,22,62,000 பெண்களும் வாழ்ந்து வருகின்றனர். ஆண்களை விடவும் பெண்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளமை பல்வேறு சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்தல், தொழில் வாய்ப்பு பெற்றுக் கொள்ளல், குடும்ப பிணக்குகள், உளவியல் அழுத்தங்கள் என பல்வ…
-
- 10 replies
- 1.9k views
-
-
-
பொறுமையாக இருங்கள், வெகுவிரைவில் தீர்வு : எதிர்க்கட்சித் தலைவர் வீமன்காமம் மக்களுக்கு உறுதி கடந்த 25 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி விடுவிக்கப்பட்ட வீமன்காமம் பகுதியை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் குறித்த மக்களுக்கு வெகுவிரைவில் தீர்வு கிடைக்கும் எனவும் உறுதியளித்தார். இன்றைய தினம் வலி.வடக்கு பகுதிக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிக்குச் சென்றார்.அதன்படி முதலில் வீமன்காமம் பகுதிக்குச் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டார். இதன்போது அப்பகுதி மக்கள் தமக்கு பிரதான பகுதிகள் விடுவிக்கப்படாதமையால் எமக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.எமது தொழில் கூலித…
-
- 0 replies
- 351 views
-
-
மகிந்தவின் மாளிகை : தொலைவிலிருந்து பார்வையிட்டார் எதிர்க்கட்சித் தலைவர் காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் மாளிகையை தொலைவில் இருந்து கொண்டு பார்வையிட்டார் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் 460 ஏக்கர் பரப்பில் மிகவும் நவீன வசதிகளுடன் 20 பில்லியன் ரூபா செலவில் இந்த மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. யாழ்.வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காங்கேசன்துறையில் அமைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் மாளிகையை பார்வையிடச் சென்ற போது முதலமைச்சர் விக்னேஸ்வரனும் சென்றிருந்தார். வடபகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான மாளிகையை வடமாகாணத்துக்கு வருமானத்தை ஈட்டித்தரத்தக்க வகையில் சுற்றுலா விடுதியாகப் பய…
-
- 0 replies
- 314 views
-
-
[ வெள்ளிக்கிழமை, 02 ஒக்ரோபர் 2015, 08:59.46 AM GMT ] யாழ்.மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்திருந்த எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இன்றைய தினம் காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயம், மற்றும் மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவில், ஆகியவற்றுக்கும் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட்டுள்ளார். இன்றைய தினம் காலை 8 மணி தொடக்கம் மேற்படி ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஆட்சி மாற்றத்தின் பின்னர் மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்ட வீமன்காமம், சந்தை சந்தி, ஒட்டகப்புலம் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். …
-
- 0 replies
- 900 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அரங்காற்றுகை அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கையில், தமிழ்த் தேசிய அரசியல் அரங்கின் பகுதியொன்று எந்தவித சலனமும் இன்றி ஆழ் அமைதியில் இருப்பது மாதிரியான தோற்றப்பாடு காணப்படுகின்றது. இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் 'சர்வதேச விசாரணை' தேவையெனும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கை, கிட்டத்தட்ட 'உள்ளக விசாரணை' எனும் நிலைக்குள் அமெரிக்காவினாலும், மைத்திரி - ரணில் அரசாங்கத்தினாலும் கொண்டு வரப்பட்டுவிட்டது. இப்படிப்பட்ட நிலையில், தமிழ்த் தரப்பின் சமூக- அரசியல் கூறுகள் தீர்க்கமான முடிவுகளோடு ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது. அது, நீதியான விசாரணைகளைக் கோருவதற்கான அடிப்ப…
-
- 0 replies
- 191 views
-
-
தமிழ் மக்களுக்கு பல சேவைகளை செய்து கொண்டு இருக்கின்றேன். இளைஞர்களுக்கு விழிப்பூட்டல் செயற்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டு வருவதாக கனடா தேர்தலில் பாராளுமன்ற வேட்பாளாராக போட்டியிடும் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார். இலங்கையில் இருந்து 2008,2009 ஆண்டு காலப்பகுதியில் கனடா வந்தவர்களை குற்றவாளிகளாக தான் பார்த்தார்கள். இதுதொடர்பாக லங்காசிறியின் 24 செய்திகளுக்கு கருத்து தெரிவித்தார். http://www.tamilwin.com/show-RUmtzATWSVho7J.html
-
- 0 replies
- 240 views
-
-
விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற, இதுவரை வெளிவராத போர்க்குற்றங்கள் குறித்து ராணுவச்சிப்பாய் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராணுவச் சிப்பாய் ஒருவரே குறித்த தகவல்களை உள்ளடக்கிய ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இறுதிக் கட்டப் போரின்போது மின்னேரிய ராணுவ முகாமின் புலனாய்வாளர்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட, இதுவரை வெளிவராத பாரியளவான போர்க்குற்றங்கள் குறித்த தகவல்கள் இவரது வாக்குமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த ராணுவச்சிப்பாயின் வாக்குமூலத்தைக் கொண்டு தற்போதைக்கு ராணுவ அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டு…
-
- 0 replies
- 255 views
-
-
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத்தை ஏமாற்றாத வகையில் நேர்மையான விசாரணைகள் நடைபெறும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பி.பி.சியின் சிங்கள சேவைக்கு ளித்துள்ள செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் உச்சநீதிமன்ற நீதிபதியொருவர் குறித்து மோசமான புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதன் காரணமாக கௌரவமான முறையில் அவரை பதவி விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளோம். அதனைச் செய்யத் தவறும் பட்சத்தில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பதவி பறிக்கப்படும். இவ்வாறான நீதிபதிகளை வைத்துக் கொண்டு இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை சர்வதேசத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையில் முன்கொண்டு செல்ல முடியாது. சர்வதேசப் புகழ்பெ…
-
- 0 replies
- 206 views
-
-
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கான பொறிமுறை குறித்த ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானம் இலங்கை அரசுக்கு சாதகமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்ி அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவர் டி சித்தார்த்தன். இது இலங்கை அரசுக்கு சாதகமான தீர்மானம். இந்த பொறிமுறை நியாயமாக செயற்படமுடியுமா என்பது குறித்து எமக்கு இன்னமும் ஏராளமான சந்தேகங்கள் இருந்தாலும், இதை இப்போதைக்கு எதிர்க்கப் போவதில்லை. இந்த விசாரணை பொறிமுறை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் நிலவினாலும் தாமும் தமது கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தொடருவதாகவும் அவர் கூறினார். http://www.seithy.com/breifNews.php?newsID=141471&category=TamilNews&lang…
-
- 0 replies
- 265 views
-
-
பணிப்பெண்களுக்கு பதிலாக பயிற்சி பெற்ற ஆண் சேவையாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்கு பெண்களை பணிப்பெண்களாக அனுப்புவதன் ஊடாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி யுள்ளது என்றும், அவற்றை நிவர்த்தி செய்யும் வகையிலேயே இவ்வாறான நடவடிக்கைகள் குறித்துஆலோசிக்கப்படுகின்றது என்றும் அவர் கூறினார். அதேவேளை, கடந்த காலங்களில்வெளிநாடுகளுக்கு குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணியாள்களாக செல்லும் பெண்கள் பல்வேறான பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாகியமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியிருந்தன. http://onlineuthayan.com/news/755
-
- 0 replies
- 320 views
-
-
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் நல்லூர்க் கந்தனை தரிச்சித்தார். மேலும் எதிர்க்கட்சித் தலைவருடன் யாழ், கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் கலந்து கொண்டு நல்லூர்க் கந்தனைத் தரிசித்தனர். இதேவேளை தெல்லிப்பழைத் துர்க்கை அம்மன் ஆலயத்திற்குச் சென்று பூஜை வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர். http://onlineuthayan.com/news/756 படங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள இணைப்பை அழுத்தவும்.
-
- 0 replies
- 159 views
-
-
அரசியல் சாசனத்திற்கு அமைவான வகையிலேயே விசாரணைப் பொறிமுறைமை அமையும் - ஜனாதிபதி நாட்டின் அரசியல் சாசனத்திற்கு அமைவான வகையிலேயே அனைத்து விசாரணைப் பொறிமுறைமைகளும் அமையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யுத்தக் குற்ற செயல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பிலான அனைத்து நீதிமன்ற விசாரணைகளும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்ட வகையிலேயே அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை நீதிமன்றங்களில் வெளிநாட்டு சட்டத்தரணிகள் கடமையாற்ற அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.நாட்டின் அரசியல் சாசனத்தில் திருத்தங்களைச் செய்யாது புதிய சர்வதேச நீதிமன்றமொன்றை அமைக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் ரீதியாகவும் இந்த விடயம் மிகவும் சவால் மிக…
-
- 0 replies
- 449 views
-
-
தென்னாபிரிக்கா-கம்போடிய நாடுகளின் அனுபவங்களை இலங்கையின் விசாரணைபொறிமுறைக்கு பயன்படுத்துமாறு கோரிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் உட்பட முக்கிய தலைவர்கள் சிலரிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதமொன்றில் தென்னாபிரிக்கா ,மற்றும் கம்போடியா போன்ற நாடுகளின் அனுபவங்களை இலங்கையின் விசாரணை பொறிமுறைக்கு பயன்படுத்துமாறு இலங்கையின் கல்விமான்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரம் சமீபகாலத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால்,முழுமையான உள்நாட்டு பொறிமுறை மூலம் நீதியை நிலைநாட்ட முடியாது, பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை பெற முடியாது என நாங்கள் கருதுகின்றோம்,மேலும் வெறுமனே சர்வதேசபிரதிந…
-
- 0 replies
- 203 views
-
-
-
வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்புடனான விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை உருவாக்க இலங்கை இணக்கம்? வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்புடனான விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை உருவாக்க இலங்கை இணங்கியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிராக சட்ட மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி தண்டனை விதிக்கும் விசாரணைப் பொறிமுறைமையில் வெளிநாட்டு நீதவான்கள், பொதுநலவாய நாடுகள் நீதவான்கள், வெளிநாட்டு சட்டத்தரணிகள் மற்றும் விசாரணைகளின் பங்களிப்பும் உள்ளடங்கும் என தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங…
-
- 0 replies
- 451 views
-