Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் தொடரும் ரவுடித்தனங்களை அடக்க புதிய அணுகுமுறைகளை கண்டறிவாரா மேல் நீதிமன்ற நீதிபதி இழஞ்செழியன்? சிகரட் கொடுக்க தாமதித்ததால் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர்: குளோபல் தமிழ் செய்தியாளர்:- திருநெல்வேலி கலாசாலை வீதியில் உள்ள பலசரக்கு கடையொன்றில் மது போதையில் வந்த இருவர் சிகரட் கேட்டு தகாராறு பண்ணியதுடன் கடையில் வேலை செய்த இளைஞர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அத்துடன் இளைஞர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது தொடர்பில் பொலிசாருக்கு அறிவிக்க கோரிய வயதானவர் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த கடைக்கு இன்று மாலை மது போதையில் சென்ற இருவர் தமக்கு சிகரட் தருமாறு கோரியுள்ளனர் கடையில் கூட்டம் அதிகமாக கானபப்ட்டதனால் அவர்களுக்க…

  2. சட்ட மா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகள் குறித்து மீளவும் அதிருப்தி - குளோபல் தமிழ் செய்தியாளர் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகள் குறித்து மீளவும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைகளின் போது சட்ட மா அதிபர் திணைக்களம் மிகுந்த அசமந்த போக்கைப் பின்பற்றி வருவதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன உள்ளிட்ட ஆளும் கட்சியின் உறுப்பினர்களும் அரச அதிகாரிகளும் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஓர் பின்னணியில் ரக்னா லங்கா நிறுவனத்தின் ஆயுதங்கள் காணாமல் போன சம்பவம் குறித்த வழக்கு விசாரணைகளுக்கு சட்ட ம அதிபர் திணைக்களம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கோட்டே ஸ்ரீஜயவர்தனபுர மாநகரசபையில் காணப்பட்ட ரக்னா…

  3. தனியார் வங்கியில் ரூ. 5.5 மில்லியன் கொள்ளை 27-09-2015 09:04 AM கொழும்பு-02, தர்மபால வீதியில் உள்ள தனியார் வங்கியில் 5.5 மில்லியன் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் தரித்தவர்களே இன்றுக்காலை 7.10 க்கு கொள்ளையடித்து சென்றுள்ளனர். முகங்களை முழுமையாக மூடும் தலைக்கவசத்தை அணிந்திருந்த ஆயுததாரிகள், அந்த வங்கியின் பாதுகாப்பு ஊழியரை தாக்கிவிட்டே பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/155095/தன-ய-ர-வங-க-ய-ல-ர-ம-ல-ல-யன-க-ள-ள-#sthash.3LCCH9rs.dpuf

  4. பிரகீத்விவகாரம் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவுக்கும் இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கும் இடையில் மோதல் விவகாரம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவுக்கும் இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கும் இடையில் மோதல்: குளோபல் தமிழ் செய்தியாளர் கொழும்பு:- இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு சபையின் சமீபத்திய கூட்டத்தில் குற்றத்தடுப்பு பிரிவினரும் இராணுவ புலனாய்வு பிரிவினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காணமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பாக பாதுகாப்புசபை ஆராய்ந்த வேளையே இந்த வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முப்படையை சேர்ந்த அதிகாரிகள் என பலர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். பிரகீத் எக்னலிகொட விடுதலைப்புலிகளுடன் தொடர்பு…

  5. சட்டத்துக்கு முரணாக இயங்கும் மதுபானசாலைகள் மீது நடவடிக்கை யாழ்.மாவட்டத்தில் சட்டத்துக்கு முரணாகச் செயற்படும் மதுபான நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் மதுவரித் திணைக்களத்தினர் கலந்துரையாடல் நடத்தி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.மாவட்டத்தில் சட்டத்துக்கு முரணாக 60 மதுபான நிலையங்கள் செயற்பட்டு வருகின்றன என்று மாவட்டச் செயலக பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் கொழும்பிலுள்ள மதுவரித்திணைக்களத்தின் தலைமையகத்துக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதனடிப்படையில், குறித்த மதுபான நிலையங்கள் சட்டத்துக்கு முரணாக இயங்குகின்றனவா என்பது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது. …

  6. ஆளுநர் அனுமதிக்கு காத்திருக்கும் வடமாகாண சபை நியதிச் சட்டங்கள் வடக்கு மாகாண சபையால் இது வரை நான்கு நியதிச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவற்றில் இரண்டு நியதிச் சட்டங்களுக்கு மாத்திரமே ஆளுநரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் வடக்கு மாகாண ஆளுநராக பளிகக்கார நியமிக்கப்பட்ட பின்னர் நிறைவேற்றப்பட்ட நியதிச் சட்டங்கள் இரண்டுக்குமே இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை. வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. மாகாணசபை நியதிச் சட்டங்கள் நிறைவேற்றப்படுவதன் ஊடாகவே அதிகாரசபைகள், திணைக்களங்கள் உருவாக்க முடியும். மாகாண சபையால் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் முதலாவது நியதிச் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. நிதி நியதிச் சட்டம், முத்திரை வரி கைமாற்றல்…

  7. மாதுங்கன் வசமானது ஜனாதிபதி சாரணர் விருது ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி (2வது திருகோணமலை சாரணர்குழு)யைச் சேர்ந்த சாரணன் மனோகரன் மாதுங்கன் ஜனாதிபதி சாரணர் விருதினை வென்றுள்ளார். இவருக்கான விருது அணிவிக்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை 22.09.2015 கல்லூரி பரிசளிப்பு விழாவின் போது இடம்பெற்றது. சாரணன் சத்தியபிரமானம் செய்வதையும். திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் சாரணனுக்கு விருதினை அணிவித்தார். மேலும் இந்நிகழ்வில் அதிபர் செ.பத்மசீலன், சாரணர் தலைவர் சி.சசிகுமார் உதவி சாரணர் தலைவர் ரூ.ஜனோச் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://o…

  8. ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையாளர் அல் ஹுசைன் அவர்களால் வெளியிடப்பட்ட இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கையில் துணை ஆயுதக் குழுக்களை வழிநடத்தியவர்களின் எதிர்காலம் எப்படி அமையும்? துணை ஆயுதக் குழுக்களில் ஒன்றான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரம்ப கால தலைவராகச் செயற்பட்ட கருணா மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ ஆகியவர்கள் மீது கணிசமான குற்றச்சாட்டு.... இதனால் இவர்கள் கைதாகும் சூழலா....? இவர்களைக் காப்பாற்றுவதில் இந்தியாவின் தந்திரம் என்ன? என்பன தொடர்பில் மறைக்கப்பட்ட உண்மைகளை ஆழமான ஆதாரத்துடன் தெட்டத் தெளிவாக லங்காசிறியின் அரசியற் களம் வட்டமேசையில் சிரேஷ்ட அரசியல் ஆய்வாளரும் சட்டவாளருமான எம்.எம்.நிலாம்டீன் அவர்கள் விளக்…

  9. மூன்று விசேட குழுக்கள் அமைக்­கப்­பட்டு உள்­ளகப் பொறி­மு­றை­யு­ட­னான விசா­ரணை நடத்­தப்­படும். சர்­வ­தேச விசா­ரணை என்று சிலர் பொய்­யான தக­வல்­களைப் பரப்­பு­கின்­றனர். இதில் எவ்­வித உண்­மை­களும் இல்­லை­யென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். நேற்று அலரி மாளி­கையில் நடந்த ஊட­க ஆசி­ரி­யர்கள் மற்றும் முக்­கி­யஸ்­த­ர்­க­ளு­ட­னான சந்­திப்பில் உரை­யாற்­றும்­போதே பிர­தமர் மேற்கண்டவாறு தெரி­வித்­துள்ளார். ஐ.நா. தீர்­மா­னத்­திற்கு அமைய உள்­ளகப் பொறி­மு­றை­யொன்று உரு­வாக்­கப்­படும். அவ் உள்­ளகப் பொறி­மு­றையில் மூன்று விசேடக் குழுக்கள் ஏற்­ப­டுத்­தப்­படும். காணாமல்போனோர் தொடர்­பாக கண்­ட­றியும் அலு­வ­லகம், விசேட சட்ட அலு­வ­லகம் மற்றும் உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக…

  10. குற்றச் செயல்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதாக சுன்னாகம் பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்த சில மணி நேரத்திலேயே சுன்னாகம் பகுதியில் சுமார் ஏழரை இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் அறுத்துச் செல்லப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப் படுகின்றது. சுன்னாகம் தெற்கு மூர்தியான் கூடல் பகுதியில் ஒரு தாலிக்கொடியும், சங்கிலியும், கந்தரோடை கற்பொக்கனைப் பகுதியில் ஒரு தாலிக்கொடி, உடுவில் கீழிச்சந்தைப் பகுதியில் ஒரு சங்கிலி ஒன்றும் பிற்பகல் மூன்று மணிக்கும் நாலரை மணிக்கும் இடையில் அறுத்துச் செல்லப் பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள பொதுமக்கள் பொலிஸாருக்குச் சவால் விடும் வகையில் ரவுடிகள், திருடர்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது என்றும் விசனம் தெரிவித்துள்ளனர். சுன்னாகம் …

  11. தமிழ் மக்களுக்கு தற்காலத்தில் தேவைப்படுவது ஒழுங்கானதும், வினைத்திறன் மிக்கதும், விலைபோகாததும், நேர்மையானதுமான ஒரு அரசியற் கட்டமைப்பாகும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.யாழ்.இந்துக்கல்லூரியின் 125 ம் ஆண்டு நிறைவு விழாவில் இன்று மாலை முதலமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நொந்து போன சமூகத்திற்கு புலம்பெயர் உறவுகளின் உதவி தேவை .இன்றைய மாணவர்களே எதிர் காலத்தின் தலைவர்களாக மாறுகின்றார்கள் அல்லது மாற்றப்படுகின்றார்கள். தமிழினத்தைப் பொறுத்தவரையில் எமது மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்தது மட்டுமல்லாமல் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகின்ற போது மிகவும் பின்னடைந்த நிலையில் இருப்பதை நாம…

  12. முன்னைய ஆட்சியாளர்களின் கைக்கூலிகளுக்கு தீனி போடவும் வேண்டாம் அமைச்சர் ஹக்கீம்- சர்வதேச விசாரணையை மையமாக வைத்து தெற்கின் நாட்டுப்புற சிங்களவர்களை சூடேற்றி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னைய ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக செயற்பட்டுவரும் சில கழுகுக் கூட்டங்களின் திட்டங்களுக்கு தீனி போடும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படக்கூடாது. புழைய புண்களை சொறிந்து சொறிந்து இனியும் வங்குரோத்து அரசியலில் ஈடுபட வேண்டாமென நகர திட்டமிடல், நீர்வளங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று முன்வைக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின் தீர்மானங்களை நிறைவேற்றிக்கொள்ளும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போத…

  13. பான் கீ மூனிடம் மைத்திரி கொடுத்துள்ள வாக்குறுதி! [Monday 2015-09-28 08:00] ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலின் நிறைவேற்றப்படும் தீர்மானத்தில் அடங்கிய பரிந்துரைகள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அரசாங்கம் எப்போதும் மீள் நல்லிணக்கம் தொடர்பான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் உறுதியளித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலின் நிறைவேற்றப்படும் தீர்மானத்தில் அடங்கிய பரிந்துரைகள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அரசாங்கம் எப்போதும் மீள் நல்லிணக்கம் தொடர்பான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிப…

  14. உயிருடன் இருக்கும் அனைத்து புலி உறுப்பினர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சி? 28 செப்டம்பர் 2015 தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிருடன் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஜாதிக ஹெல உறுமய கட்சி ஈடுபட்டுள்ளது. புனவர்வாழ்வு அளிக்கப்பட்ட 12000 முன்னாள் போராளிகள், புனர்வாழ்வு அளிக்கப்படாது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்ந்து வரும் புலி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடிய சாத்தியங்கள் குறித்து கட்சியின் சட்டத்தரணிகள் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித படுகொலைகள், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, சமாதானத்தை சீர்குலைத்தமை, சிறுவர் போராளிகளை படையில் இணைத்தம…

  15. காங்கேசன்துறை துறைமுகத்தின் மீது மீண்டும் கண்வைக்கும் இந்தியா- தமிழில் குளோபல் தமிழ் செய்திகள் 28 செப்டம்பர் 2015 கொழும்பில் ஆட்சிபொறுப்பில் இந்தியாவிற்கு நெருக்கமான அரசாங்கம் காணப்படுவதை தொடர்ந்து இலங்கையில் துறைமுகமொன்றை அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்கு இந்தியா மறுபடி புத்துயுர் அளித்துள்ளது. சீனாவை இந்த விடயத்தில் நெருங்குவதே அதன் நோக்கம். இது வரை காலமும் யாழ்ப்பாணத்திலுள்ள தந்திரோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான பொறுப்பை தன்னிடம் அளிக்குமாறு கொழும்பை கேட்டுக்கொள்வதற்கான உரிய தருணத்திற்காக இந்தியா காத்திருந்தது. ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தற்செயலானவை அல்லது அதிர்ஸ்டத்தினால் ஏற்பட்டவை இல்லை என்பதை பாராளுமன்ற தே…

  16. நெடுந்­தீவைச் சேர்ந்த மக்­க­ளுக்கு தொடர்ச்­சி­யான குடிநீர் விநி­யோ­கத்தை மேற்­கொள்ளும் வகையில், தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்பு சபையின் யாழ்ப்­பாண கிளை மற்றும் UTE ஆகி­யன இணைந்து நீர் வழங்கல் மற்றும் இரு புதிய கடல் நீர் சுத்­தி­க­ரிக்கும் (Reverse Osmosis) நிலை­யங்­களை நிறுவ முன்­வந்­துள்­ளன. நெடுந்­தீவுப் பகு­தியில் தூய்­மை­யான குடி­நீ­ருக்­காக காணப்­படும் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், இந்த திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது. இந்த விட­யத்தைக் கவ­னத்தில் கொண்டு, 56 மில்­லியன் ரூபாய் பெறு­ம­தி­யான (Reverse Osmosis) நீர் சுத்­தி­க­ரிக்கும் நிலை­யங்கள் நிறு­வப்­பட்­டுள்­ளன. இந்த நிலை­யங்கள், நாளொன்­றுக்கு 100 கன மீற்றர் உப்பு நீரை தூய்­மை­யாக்கி குடி…

  17. இலங்கையின் பிரஜைகளுக்கு எதிராக வழக்கு தொடரவே தண்டனை கொடுக்கவோ வெளிநாட்டு நீதிமன்றம் ஒன்று நிறுவப்படுமாக இருந்தால், அது தொடர்பில் பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் இதனை; தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தின் 3ல்இரண்டு அறுதிப் பெரும்பான்மையையும் வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=141158&category=TamilNews&language=tamil

  18. தீர்வு எம் கையில் இருக்கிறது: பிரதமர் ரணில் உள்நாட்டு நீதிமன்ற பொறிமுறையில் அமையக்கூடிய விசாரணை முறைமையை இலங்கை அரசாங்கம் விரும்புகிறது. அதனை முன்னெடுப்பதற்கு வெளிநாட்டில் இருக்கின்ற சட்டத்துறை நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நீதிமன்ற பொறிமுறையின் கீழ், அடிப்படை நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இருக்கின்றன. அவற்றின் ஊடாக, காணாமல் போனவர்களின் பிரச்சினைகளுக்கு கூடியவிரைவில் தீர்வு காணமுடியும். அவ்வாறு செய்யாவிடின் அது பாரிய காயமாகிவிடும் என்றும் அவர் கூறினார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம், அலரிமாளிகையில் ஊடக பிரதானிகளை பிரத்தியேகமாகச் சந்தித்தபோதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.…

  19. இந்தியா தலையிட்டிருந்தால் இறுதிப் போரில் 40 ஆயிரம் மக்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும் இந்தியா உரிய நேரத்தில் தலையிட்டிருந்தால் இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பொது மக்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். இந்தியாவின் தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் சர்வதேச நீதிப் பொறிமுறைகைளைத் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றன. இந்தநிலையில், இலங்கை போர்க்குற்ற விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கவேண்டும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள…

  20. கூட்டு அனுசரணையாளர்களின் வரைவை வரவேற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை தொடர்பில் கூட்டு அனுசரணையாளர்கள் முன்வைத்த வரைவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாக தெரிவித்துள்ளது. இந்த வரைவை வரவேற்று அக்கட்சி விடுத்த அறிக்கையின் விவரம் முழுமையாக வருமாறு: கூட்டு அனுசரணையாளர்கள் முன்வைத்துள்ள இலங்கை மீதான தீர்மானம் தொடர்பான வரைவு ஆவணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது. குறிப்பாக இலங்கையில் நடைபெற்ற சர்வதேச குற்றச்செயல்கள் பற்றி விசாரணை நடத்துவதற்கு வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய நீதிபதிகள், வழக்கறிஞர்கள், விசாரணை அதிகாரிகள் உட்பட்ட ஒரு விசாரணைக் கட்டமைப்பு ஒன்றை இங்கு ஸ்தாபிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதை நாம் பெரிதும் வரவேற்கின்றோம். இது இலங்…

  21. 90ம்ஆண்டு வலி வடக்கில் தனது காணியில் புதைத்து வைத்த தங்க நகைகளை உரும்பிராய் பெண் மீட்டார் 90ம்ஆண்டு வலி வடக்குப் பிரதேசத்தில் உள்ள தனது காணியில் புதைத்து வைத்த தங்க நகைகளை உரும்பிராயைச் சேர்ந்த பெண் மீட்டெடுத்துள்ளார். 1990ம் ஆண்டு யுத்தம் ஆரம்பித்த வேளையில் வறுத்தலைவிளான் பகுதியில் இருந்து குடும்பமாக வெளியேறியவர் தனது தங்க நகையின் பாதுகாப்புக் கருதி வளவினுள் புதைத்து வைத் திருந்த நிலையில் இடம்பெயர்ந்து சென்றுள்ளார். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் உரும்பிராய்ப் பகுதியில் வசித்து வரும் சூழலில் தாயாரும் காலமாகிவிட்டார். குறித்த யுவதியும் திருமணமாகி பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் சூழலில் வலிவடக்கில் அண்மையில் விடப்பட்ட ஆயிரம் ஏக்கருக்கு அருகில் உள்ள வேலியோரமே குறித்த காண…

  22. சர்வதேசம் என்ற சொல்லை நீக்குவதற்கு தீவிர முயற்சிகளை மேற் கொண்ட பிரதமர் றணில் விக்கிரமசிங்க இலங்கை படையினரும் விடுதலைப்புலிகளும் யுத்தகுற்றங்களில் ஈடுபட்டனர் என்பது விசாரணை அறிக்கை மூலம் வெளியானதை தொடர்ந்து கடந்தவாரம் அரசாங்கம் பல முனைகளில் தீவிரநடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதேகாலப்பகுதியில் இலங்கை தொடர்பான அமெரிக்க தீர்மானத்தின் முதலாவது நகல்வடிவம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலின் உறுப்பு நாடுகள் மத்தியில் இடம்பெற்ற உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலின் போது சில மாற்றங்களிற்குள்ளானது. இதில் அனேக மாற்றங்கள் இலங்கைக்கு சாதகமாக காணப்பட்ட அதேவேளை பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்கள் பற்றி குறிப்பிடப்பட்ட விடயங்கள் நீடிக்கின்றன.…

  23. இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சவுக்கடி கடலோர கிராமத்தில் ஒரே தினத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 31 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்ட 25 வது ஆண்டை அந்த ஊர் மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை நினைவு கூர்ந்தனர். சவுக்கடி படுகொலை 25வது ஆண்டு ஆண்டுகள் பல கடந்தும் இதுவரையில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனவும் அவர்கள் கவலையுடன் கூறுகின்றார்கள். 1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி காலை 8.30 மணியளவில் இராணுவ சீருடை அணிந்த குழுவொன்றின் தாக்குதலிலே இவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. துப்பாக்கியால் சுட்டும், கூரிய ஆயுதங்களினால் வெட்டியும் கொலைகளை செய்த பின்னர் இரு குழிகளுக்குள் சடலங்களை போட்டு தீ வைத்து எரித்து தடயங்களை கூட அழித்துவிட்டே அந்தக் குழு…

  24. இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு அவுஸ்திரேலியா ஆதரவளிக்க உள்ளது இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு அவுஸ்திரேலியா ஆதரவளிக்க உள்ளது. இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் மனித உரிமை விவகாரங்களை மேம்படுத்தல் ஆகியனவற்றை வலியுறுத்தி சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச தீர்மானத்திற்கு அதவரளிக்கப்படும் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசொப் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அறிவித்துள்ளதாகவும் இந்த விடயம் குறித்து அவுஸ்திரேலியா கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நம்பகமான…

  25. சர்வதேச விசாரணையை கோருவதற்கு இலங்கை அரசாங்கங்களே காரணம்- தர்மலிங்கம் சித்தார்த்தன் யாரையும் பழிவாங்கும் எண்ணம் எமக்கில்லை. பழி வாங்குவதனால் பிரச்சினைகள் தீர்ந்துவிடப் போவதில்லை. உண்மைகள் வெளியில் கொண்டுவரப்படவேண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். இந்த நாட்டில் யுத்தம் ஏன் ஏற்பட்டது என்பது கண்டறியப்பட்டு அதற்கான நியாயம் கிடைக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், கடந்தகால இலங்கை அரசுகளின் போலித்தனமான செயற்பாடுகளினால் தான் சர்வதேச விசாரணை யொன்றை கோரி நிற்கின்றோம் எனவும் தெரிவித்தார். ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவருடன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.