Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 16பேர் கைது இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி – கட்டைக்காடு கடற்பரப்பில் இவர்கள் நேற்று இரவு 8 மணியளவில் கைது செய்யப்பட்டதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப்பணிப்பாளர் பாலசுப்பிரமணியம் ரமேஸ்கண்ணா தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மீனவர்கள் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய 3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த மீனவர்களும்,படகுகளும் இன்று காலை 10 மணியளவில் யாழ். நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் க…

  2. சர்வதேச நீதி விசாரணை வேண்டும் : வடமாகாண சபையில் சிவாஜி தனித்து போராட்டம் இறுதி போரின் போது இலங்கை அரச படைகள் மேற்கொண்ட மனித உரிமை மீறலுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார். வடமாகாண சபை அமர்வுகள் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகிய நிலையில் சபையின் வாயிற் பகுதியில் சிவாஜிலிங்கம் தனது கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தார். ‘சர்வதேச நீதி விசாரணை தொடர வேண்டும்’ ‘ கொலையாளியை நீதிபதியாக நியமிக்க முடியுமா?’ ‘ உள்நாட்டு விசாரணை எமக்கு நீதி பெற்றுத் தராது’ போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். மேலும் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு சபை …

  3. நாடாளுமன்றத்தில் மகிந்த - நாமல் செல்பி மஹிந்த ராஜபக்சவும் நாமல் ராஜபக்ஸவும் நாடாளுமன்றிற்குள் செல்பீ ஒன்றை எடுத்துக் கொண்டனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராகின்றார். முதல் வரிசையில் இரண்டாம் ஆசனத்தில் மஹிந்த ராஜபக்ஸ அமர்ந்துள்ளார். இந்நிலையில் மஹிந்த ராஜபக்சவும் அவரது மகன் நாமல் ராஜபக்சவும் நாடாளுமன்றத்தில் செல்பீ எடுத்துள்ளனர். அந்த செல்பீயை நாமல் ராஜபக்ச தனது சமூக வலைத்தளங்களான டுவிட்டர் மற்றும் முகநூலில் பகிர்ந்துள்ளார - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=889544236801644533#sthash.SzbVpDa9.dpuf

  4. புதிய சபாநாயகருக்கு பிரதமர் வாழ்த்து சபாநாயகர் பதவி என்பது இந்நாட்டு நாடாளுமன்றத்தின் உயரிய பதவியாகும். அதேபோல் நாட்டின் மூன்றாவது உயர்ந்த பதவியாகும் என புதிய சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கான வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்போது அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இரண்டு ஆண்டுகள் இணைந்து செயற்படவேண்டும். புதிய நாடாளுமன்றம் முறையாக செயற்பட சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் வழங்கிய ஒத்துழைப்பு பாராட்டத்தக்கவை. நாம் அனைவரும் இணைந்து செயற்பட முடியும். சபையில் நடத்தை தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல்களை எதிர்கால…

  5. யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு சர்வதேச விசாரணையே அவசியம்! -பா உ. ராதிகா சிற்சபேசன்[Monday 2015-08-31 20:00] இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையே மேற்கொள்ளப்பட வேண்டும் என கனேடிய புதிய ஜனநாயக கட்சியின் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வலியுறுத்தியுள்ளார்.கனேடிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அங்கு நடைபெற்ற யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், சர்வதேச விசாரணைகளின் ஊடாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும்…

  6. ஜெனிவாவில் ஆதரவு தேடும் பிரசாரத்தை தொடங்கியது இலங்கை! [Tuesday 2015-09-01 07:00] ஜெனி­வாவில் உள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வைக்கான இலங்­கைக்­கான வதி­விடப் பிர­திநிதி ரவி­நாத ஆரி­ய­சிங்க தலை­மை­யி­லான குழு­வினர் எதிர்­வரும் 30ஆவது கூட்டத்தொடரில் கலந்­து ­கொள்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை செய்­து­வ­ரு­கிறது. குறிப்­பாக, ஜெனி­வாவில் உள்ள ஐக்­கிய நாடு­களின் உறுப்பு நாடு­களின் வதி­விடப் பிர­தி­நி­தி­களை சந்­தித்து எதிர்­வரும் கூட்டத் தொடரில் இலங்­கைக்கு ஆத­ரவு தேடு­வது தொடர்பில் பிர­சாரப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்­கான புதி­தாக வெளி­வி­வ­கார அதி­கா­ரி­களும் ஜெனி­வாவில் இலங்கை வதி­விட பிர­தி­நி­தியின் அலு­வ­ல­கத்­துக்கு வர­வ­ழைக்­கப்­பட்­டுள்­ளனர். குறிப்­பாக நிய…

  7. பிரகீத் கடத்தல் குறித்த தமது நியாயத்தை வெளியிடப் போகிறதாம் இராணுவம்! [Tuesday 2015-09-01 07:00] ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான தமது பக்க நியாயங்களை வெளிப்படுத்தப் போவதாக இராணுவம் அறிவித்துள்ளது. தற்போது இந்த சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைகளுக்கு அதரவளிக்கும் அதேவேளை, விசாரணைகளின் அடிப்படையில் சில உண்மைகள் வெளியிடப்படும் என உயர் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். போர் இடம்பெற்ற காலத்தில் இராணுவத்தினால், போலி புலிப் புலனாய்வுப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வந்தது. இந்த நடவடிக்கைக்கு “ஒபரேசன் டபள் எட்ஜ்” என பெயரிடப்பட்டிருந்தது. பிரகீத…

  8. சமஷ்டி நிலைப்பாட்டில் இருந்து கூட்டமைப்பு ஒருபோதும் விலகாது! - சுமந்திரன்[Sunday 2015-08-30 09:00] இனப்பிரச்சினைக்கு சமஸ்டி மூலமே தீர்வு காண முடியும் என்ற நிலைப்பாட்டில் இருந்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு விலகாது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். ஆண் ஆதிக்க கட்சியாக வர்ணிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று தேசியப்பட்டியலில் பெண் ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்துள்ளது. எனினும் தேசியக்கட்சிகள், தேசியப்பட்டியலில் பெண்களுக்கு இடங்களை வழங்கவில்லை. தற்போதைய தேசிய அரசாங்கம் என்ற விடயம், இரண்டு பெரிய கட்சிகள் இணைந்து ஏற்படுத்திக் கொண்டமையாகும்…

  9. சர்வதேச விசாரணையை வலியுறுத்தி போராட்டத்துக்குத் தயாராகிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி! [Tuesday 2015-09-01 07:00] சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பொதுச் செயலாளரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அவ் அறிக்கையில், தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலைக் குற்றங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா அரசினால் முன்னெடுக்கப்படும் எந்த வடிவிலானதொரு உள்ளக பொறிமுறையூடான விசாரணை மூலமும் நீதி கிடைக்கப் போவதில்லை. மாறாக மேற்படி குற்றங்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை ஒன்றின் மூலம் மட்டுமே பாதிக்கப்பட்ட தமி…

  10. எட்டாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வுக்கு ஏற்பாடுகள் தயார்! [Tuesday 2015-09-01 07:00] இலங்கையின் எட்டாவது நாடாளுமன்ற அமர்வுகள் இன்று முற்பகல் 9.30க்கு ஆரம்பமாகின்றன. முற்பகல் 9 மணிக்கே உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு சமுகமளிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் முதலாவது கொள்கை பிரகடனம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிற்பகல் 3 மணிக்கு உரையாற்றுவார். அவர், தமது உரையை சபாநாயகரின் ஆசனத்தில் இருந்து மேற்கொள்வார். இதேவேளை நாடாளுமன்ற அமர்வுகள் முற்பகல் 9.25 முதல் 9.30 வரை மணியோசை ஒலிக்க ஆரம்பமாகும். இதனையடுத்து 9.30க்கு உறுப்பினர்கள் ஆசனங்களில் அமர்வர். இந்தநிலையில் மணியோசை நிறுத்தப்பட படைக்கள சேவிதர், செங்கோலுடன் நாடாளுமன்றத்துக்குள் பிரசேவிப்பா…

    • 0 replies
    • 255 views
  11. கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT) மற்றும் கனடிய ஆர்வலர்களும் கனடாவில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தற்போதைய மனித உரிமைகள் மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக கனடிய அரசாங்கத்துடனும் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் அவர்கள் வெளிவிவகார அமைச்சர் ராப் நிக்கல்சன் (Rob Nicholson), புதிய ஜனநாயகக் கட்சியின் வெளியுறவுத் திறனாய்வாளர் Paul Dewar மற்றும் லிபரல் கட்சியின் வெளியுறவுத் திறனாய்வாளர் Marc Garneau அவர்களையும் சந்தித்திருந்தனர். கனடாவின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கத்திற்கும் தொடர்ச்சியாக இடம்பெறும் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், குறிப்பாக ஜனவரி 8 ல் அமைக்க…

  12. எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு இன்று இல்லை – கூட்டமைப்புக்கு குழுக்களின் பிரதி தலைவர் பதவிSEP 01, 2015 | 2:02by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு இன்று இடம்பெறாது என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு தொடர்பாக கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்படாத நிலையிலேயே, அதுதொடர்பான முடிவு இன்று அறிவிக்கப்படாது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமக்கே வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கோரி வருகின்றன. அதேவேளை, இன்றைய அமர்வில், சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் பதவி…

  13. கட்டுநாயக்கவின் ரமபோசாவுடன் இரகசியப் பேச்சு நடத்தப்பட்டதா? – மறுக்கிறது சிறிலங்காSEP 01, 2015 | 1:54by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தென்னாபிரிக்க துணை அதிபர் சிறில் ரமபோசா, சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவில்லை என்றும், அவருடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தவில்லை என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார். ‘தென்னாபிரிக்க துணை அதிபர் சிறில் ரமபோசா சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, தேசியப் பிரச்சினை தீர்வு தொடர்பாக நடுநிலை வகிப்பது குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டதாக வெளியான செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை. கடந்த 25ஆம் நாளும், அதற்கு முன்னரும் சிறிலங்கா ஊடாக சிறில் ரமபோசா பயணத்தை மேற்கொண்டிருந்தா…

  14. சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தரங்கு நாளை ஆரம்பம் – கொழும்பு வந்தார் ஹமீத் கர்சாய்AUG 31, 2015 | 13:50by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா இராணுவம் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் இன்று பிற்பகல் கொழும்பு வந்துள்ளார். சிறிலங்கா இராணுவம் ஆண்டு தோறும் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்கு நாளை கொழும்பில் உள்ள கலதாரி விடுதியில் ஆரம்பமாகவுள்ளது. நாளையும் நாளை மறுநாளும் – ‘வளர்ந்து வரும் உலகளாவிய அச்சுறுத்தல் சூழலில் தேசிய பாதுகாப்பு’ என்ற தொனிப்பொருளில் இந்தப் பாதுகாப்புக் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. 34 நாடுகளைச் சேர்ந்த 66 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம…

  15. ஜெனீவாவில் முடுக்கிவிடப்பட்டுள்ள சிறிலங்காவின் இராஜதந்திர நகர்வுகள்SEP 01, 2015 | 1:37by கி.தவசீலன்in செய்திகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது அமர்வு எதிர்வரும் 14ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஜெனீவாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் இராஜதந்திரச் செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த அமர்வில் சிறிலங்கா தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன், சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைக்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றும் முயற்சியில் அமெரிக்காவும் இறங்கியுள்ளது. உள்நாட்டு வி்சாரணைப் பொறிமுறைக்கு ஆதரவு தேடும் பரப்புரைகளை ஜெனீவாவில் உள்ள சிறிலங்கா தூதுரகம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளது. அங்குள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு ந…

  16. Audio தமிழ்த் தலைமைகளே உஷார்...! ஆபத்துக்கள் பல முனையில் இருந்து..? [ திங்கட்கிழமை, 31 ஓகஸ்ட் 2015, 07:59.56 PM GMT ] தமிழர்களின் வாழ்வியலோடும் இலக்கியங்களிலும், தூது என்னும் சொற்களை நாம் கண்டிருக்கின்றோம். நமக்கு வேண்டியவர்களிடம் நம்மால் பேச முடியாமல் போனால் நம் சார்பில் இன்னொருவரை அனுப்புவதை தூது என்கின்றோம். இத்தூதை தமிழர்களின் இலக்கியப்பரப்பில் அதிகம் காணலாம். சங்க காலத்தில் இருந்து இன்று வரை தூதுவிடும் வழமை நமது பண்பாட்டில் பட்டுத்தெறித்திருக்கின்றது. சங்ககாலத்தில் தலைவனை காணத்துடிக்கும் தலைவி தனது தோழியை தூதனுப்புவாள். தலைவியின் வேதனையை தலைவன்பால் அவள் கொண்ட காதலை தோழி தலைவனிடத்தில் விபரிப்பாள். இது சங்ககாலத்தில் நிகழ்ந்த தூது என்றால், பிற்காலப்பகுதிகளில் எ…

    • 0 replies
    • 292 views
  17. எதிர்க்கட்சி தலைவர் பதவியில் கூட்டமைப்பின் நிலையில் மாற்றமில்லை; சுமந்திரன் கூறுகிறார் 2015-08-31 18:54:50 | General தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் கிடையாது எனவும் அவ்வாறு நிலைப்பாட்டை மாற்றுவதற்கான சூழ்நிலைகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்தில் இணைந்துகொள்ளும் நிலையில் அது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இணைந்துகொள்வதாகவே கருதப்படும் எனவும் இதன்படி எதிர்க்கட்சியில் அதிக ஆசனங்களை கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே எ…

    • 0 replies
    • 195 views
  18. ஐ.தே.க.வின் சிரேஷ்ட எம்.பி.க்களுடன் பிரதமர் ரணில் கலந்தாலோசனை ஐக்­கிய தேசியக் கட்­சியின் முக்­கிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்கி­ர­ம­சிங்க நேற்று சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். தேசிய அர­சாங்­கத்தின் எதிர்­கால செயற்­பா­டுகள் மற்றும் அமைச்சர் நிய­ம­னங்கள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து இதன்­போது விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அலரி மாளி­கையில் இடம்­பெற்ற இந்த சந்­திப்பில் முக்­கிய அமைச்சுப் பத­விகள் கிடைக்கும் என எதிர்­பார்க்­கப்­படும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கலந்­து­கொண்­டி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஐக்­கிய தேசியக் …

    • 0 replies
    • 184 views
  19. சர்வதேச விசாரணை நடைபெற்றிருக்கிறது: சம்பந்தர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணை நடைபெற்றிருப்பதாகவும், அந்த அறிக்கை சில நாட்களில் வெளிவரும் என்றும் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவான இணைப்புக் குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று ஞாயிறன்று கொழும்பில் கூடிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகள் (டெலோ, ஈபிஆர்எல்எஃப், பிளாட்) நான்காவது பெரிய கட்சியான தமிழரசுக் கட்சியிடம் கோரிக்கை விடுத்திருந்தன. நடந்து முடிந்த பொதுத் தேர்தலை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு தேசிய பட்டியல் இடங்களுக்கான ஆட்க…

  20. மத்தல விமான நிலையத்தினை நெற்களஞ்சியசாலையாக மாற்ற அனுமதி? முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்ட மத்தல மகிந்த ராஜபக்ச விமான நிலையத்தில் நெல்லை களஞ்சியப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிடமிருந்து கடனாக பெறப்பட்ட 210 மில்லியன் டொலர் கடன் மூலம் நிர்மாணிக்கப்பட்ட மத்தல மகிந்த ராஜபக்ச விமான நிலையத்தினால் எவ்விதமான பயணும் இல்லை என தொடர்ச்சியாக குற்றம் சுமத்தப்பட்டு வந்தன. இவ்வாறாதொரு சூழ்நிலையிலேயே மத்தல விமான நிலையத்தில் நெல்லை களஞ்சியப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தல சர்வதேச விமான நிலையத்தின் களஞ்சிய சாலைகளில், யால போக அறுவடையின் போது கொள்வனவு செய்யப்படும் நெல்லை …

  21. இடம்பெயர்ந்த முஸ்லிம்களை சொந்த இடங்களில் மீளக்குடியமர அழைக்கிறார் வடக்கு அமைச்சர்! [Monday 2015-08-31 20:00] மன்னார் மாவட்டத்தில் இருந்துர் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் மன்னாரில் உள்ள தமது பூர்வீக இடங்களில் விரைவாக குடியேறுங்கள் என வட மாகாண கிராமிய அமைச்சர் பா. டெனிஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். புத்தளம் தில்லையடி முஹாஜிரின் அரபுக்கலூரிக்கு விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் யுத்த காலத்தில் மன்னார் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களைசந்தித்து கலந்துரையாடும் போதே இதனைத் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்திலிருந்து யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களை விரைவாக மன்னார் மாவட்டத்தில் மீளக்குடியமருமாறு அழைப்பு வி…

  22. தேசிய அரசில் 5 தமிழ் அமைச்சர்கள்? - விஜயகலா, அங்கஜனுக்கு இடமில்லை [Saturday 2015-08-29 08:00] தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் அமைச்சர்கள் தொடர்பான இணக்கப்பாடு தற்போது எட்டப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் 50 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 10 இராஜாங்க அமைச்சர்களும், 30 பிரதி அமைச்சர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதில் 10 முஸ்லிம் மற்றும் 5 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம் பிடித்துள்ளனர். எனினும் இவர்களுக்கு ஒதுக்கப்படவுள்ள அமைச்சுக்களின் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எதிர்வரும் நான்காம் திகதியளவில் அமைச்சர்களின் பதவிப் பிரமாண வைபவம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற தேசிய அரசாங்கத்த…

    • 13 replies
    • 1.1k views
  23. மின்சார நாற்காலியில் இருந்து மகிந்தவை மைத்திரியும், ரணிலும் காப்பாற்றிவிட்டனர்! - சிங்கள ஊடகம் தெரிவிப்பு [Monday 2015-08-31 20:00] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்லும் முயற்சியில் இருந்து காப்பாற்றியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. யுத்தம் நடைபெற்ற போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என குரல் எழுப்பிய அமெரிக்கா, அது சம்பந்தமாக உள்நாட்டு விசாரணையை நடத்த இலங்கை அரசாங்கத்திற்கு உதவி வழங்க தீர்மானித்துள்ளது.அமெரிக்காவின் இந்த தீர்மானம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த …

    • 1 reply
    • 553 views
  24. போரில் காலை இழந்த நான் மக்களின் வலிகளை அறிவேன்! - நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா [Monday 2015-08-31 20:00] இறுதிப்போரின்போது முள்ளிவாய்க்கால் வரை சென்று தன் காலை இழந்தும் தமிழ் தேசியத்துக்காக குரல்கொடுக்க பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள முல்லைத்தீவின் மங்கை சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவுக்கு வற்றாப்பளை கண்ணகி ஆலய நிர்வாக சபை தலைவர் மு.குகதாசன் தலைமையில் நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதுடன் புதிய பெண் பாராளுமன்ற உறுப்பினரை வாழ்த்தி உரைகளும் ஆற்றினர். இந்த நிகழ்வின்போது இராணுவ ஆக்கிமிப்பில் உள்ள, பொது மக்களுக்கு சொந்தமான கேப்பாப்பிலவு நிலத்தை விடுவித்து தர மகஜர் ஒன்றும் அப்பகுதி மக்களால் சாந்தி ஸ்ரீஸ்க…

  25. காரைநகர் வேணன் அணை புனரமைப்பு ஆரம்பம்! [Monday 2015-08-31 20:00] காரைநகரின் பிரசித்தி பெற்ற வேணன் அணைக்கட்டைப் புனரமைக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. இதனை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று சம்பிரதாய பூர்வமாகத் ஆரம்பித்து வைத்துள்ளார். காரைநகர் குடிநீர்ப்பற்றாக்குறைவு நிலவுகின்ற ஒரு பிரதேசம். இதனால், மழைநீரை வீணாகக் கடலினுள் கலக்கவிடாது தேக்கி நிலத்தடிநீரை அதிகரிக்கச் செய்யும் நோக்குடன் வேணன் அணைக்கட்டு உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு விவசாயிகள் சிலர் வேணன் அணைக்கட்டைச் சேதமாக்கியதால், தேக்கப்பட்டிருந்த மழைநீர் கடலுடன் கலந்தது. இது, விவசாய அமைச்சின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து ஏறத்தாழ 7000 மணற்பைகளின் உதவியோடு சேதமாக்கப்பட்ட அணைக்கட்டுப்பகுதி அப்போது த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.