Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆக்கிரமிப்பு வலயத்தில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2020ம் ஆண்டளவில் உலகின் பல நாடுகளை ஆக்கிரமிப்புச் செய்ய இந்த தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளது. மூன்று கண்டங்களை உள்ளடக்கிய பல நாடுகளை ஆக்கிரமிக்க தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளது. பி.பி.சீ ஊடகவியலாளர் அன்ட்றூ ஹோக்ஸ்சனின் புதிய நூலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் சில பகுதிகள், ஆபிரிக்காவின் சில பகுதிகள் மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122820/language/ta-IN/-----.aspx

  2. TNA நாங்கள் அமைச்சராக வரப்போகிறோம் என்று சொல்லுகிற கட்சி அல்ல.... பதவிக்காக பல்லு இழிக்கிற கட்சி அல்ல - பசீர் சேகுதாவுத்..... (தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பேரம்பேசும் சக்த்தியாக இந்தத் தேர்தலில் கிடைக்கப்போகிறது..., வருகிற அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசித்தான் ஆகவேண்டும்..., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாங்கள் அமைச்சராக வரப்போகிறோம் என்று சொல்லுகிற கட்சி அல்ல.... பதவிக்காக பல்லு இழிக்கிற கட்சி அல்ல....) தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பேரம்பேசும் சக்த்தி இந்தத் தேர்தலில் கிடைக்கப்போகிறது... இந்தப் பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன், வருகிற அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசித்தான் ஆகவேண்டும்...என முன்னாள் அமைச்சரும், சிறிலங்கா முஸ்லீம்காங்கிரஸ்…

  3. வன்னிப் பிரதேசத்தில் இராணுவத்தினர் நடத்தும் வர்த்தக நிலையங்களால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர் குறிப்பிடுகின்றார். வடக்கில் குறிப்பாக வன்னிப் பிரதேசத்தில் இராணுவத்தினர் மதுபானச்சாலைகளை நடத்துவதாகவும் காடுகளில் இராணுவ மதுபான விடுதிகளை அமைத்துள்ளதாகவும் வன்னி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார். இராணுவத்தினர் மதுபான விடுதிகளை நடத்துவதன் எதற்காக என்றும் அது குறித்து மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். இதேவேளை இராணுவத்தினர் நடத்தும் உணவகங்களால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ் உணவக உரிமையாளர்கள் கூறுகின்றனர். வன்னி நகரங்களில் தமிழ் உணவக உரிமையாளர்களுக்கு போட்டி போட…

  4. வடமாகாண முதலமைச்சரிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர கூட்டமைப்பின் ஒருசில தரப்புக்கள் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான சரவணபவனின் பத்திரிகையான உதயன் அலுவலகத்தில் இதற்கான கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதுவரை 18 மாகாணசபை உறுப்பினர்களது ஒப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தற்போதைய அவை தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் பங்கெடுப்புடன் இதற்கான முயற்சிகளில் அமைச்சர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் உள்ளடங்கிய அணியொன்று செயற்பட்டுவருவதாகவும் தெரியவருகின்றது. முன்னதாக இனஅழிப்பு பிரேரணை முதல் தனது தடாலடியால் அனைத்து மக்களதும் பெருவிருப்பதிற்குள்ளாகியிருக்கும் வடமாக…

    • 0 replies
    • 838 views
  5. இனஅழிப்பு போர்க்குற்றங்கள் தொடர்பினில் சர்வதேச விசாரணையே தேவை.உள்ளுர் விசாரணையென்ற பேச்சிற்கே இடமில்லை. அவ்வாறு உள்ளுர் விசாணை நடக்குமிடத்து அதில் வடமாகாணசபை எக்காரணம் கொண்டும் பங்கெடுக்காது. அதற்கு அனுமதிக்கவும் போவதில்லை.நடப்பதை பார்த்திருங்களென தெரிவித்துள்ளார் வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டினில் அவர் உரையாற்றுகையினில் ஜ.நா செயலாளர் நாயகத்திற்கு நான் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் நாம் எப்போதும் உள்ளக விசாரணையினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென்பதை தெளிவுபடுத்தியுள்ளேன். சர்வதேச மட்டத்தினில் சர்வதேச நீதிமன்றில் விசாரணைகள் நடைபெறவேண்டும். அதனை கண்காணிக்கும் தரப்பாக இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜரோப்பிய நாடு…

    • 0 replies
    • 609 views
  6. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரச்சாரத்தில் பயன்படுத்துவதில்லை என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரச்சார விளம்பரங்களில் மஹிந்த ராஜபக்சவின் புகைப்படங்களை பயன்படுத்துவதில்லை என கூட்டமைப்பின் பிரச்சாரக்குழு தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படக் கூடாது என்பதனை தடுக்க இவ்வாறு புகைப்படங்களை பிரசூரிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் புகைப்படங்களை இறுதி நேரத்தில் பிரச்சாரத்திற்காக ஒன்றாக பயன்படுத்திக் கொள்ள கடுமையான முயற்…

  7. எமது மக்கள் வன்முறையை விரும்பவில்லை! சம்பந்தன், கூட்டமைப்பின் தேர்தல் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கெடுப்பு [ சனிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2015, 05:28.03 PM GMT ] சித்தாண்டியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. சித்தாண்டி பொதுச் சந்தை கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இப் பரப்புரை கூட்டத்தில் மாவை.சேனாதிராஜா உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட உறுப்பினர்கள் மாவட்ட வேட்பாளர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் கட்சியின் அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர். மாவட்டம் தோறும் நடைபெறும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பரப்புரை கூட்டம்…

  8. எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியே கூடுதல் ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் என இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. நிகழ்தகவு அடிப்படையில் நடத்தப்பட்ட மூன்று வௌ;வேறு ஆய்வு முடிவுகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் ஐக்கிய தேசியக் கட்சியும் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ள சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 225 மொத்த ஆசனங்களில் 113 ஆசனங்களை எந்தவொரு கட்சியும் பெற்றுக் கொள்ளக்4டிய சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 முதல் 14 வரையிலான ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொள்ளும் எனவும், எந்தவொரு கட்சிக்கு ஆதரவளிக்காது கூட்டமைப்பு பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்கும…

  9. இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் ஆக்ஸ்ட் 17ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 225 உறுப்பினர்கள் தெர்வு செய்யப்படவுள்ளனர். கடந்த தேர்தலில் வாக்களிக்க, வட பகுதி வாக்குச் சாவடி ஒன்றில் கூடியிருந்த மக்கள் அதற்கான பிரச்சாரங்கள் 14ஆம் தேதி நள்ளிரவுடன் முடிவடைகின்றன. மற்ற தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் சற்றே வித்தியாசமானது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், போன்ற நாடுகளில் தொகுதிகளின் அடிப்படையில் தேர்தல் நடைபெற்று நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். வாக்குகளை பதிவு செய்வதில் மக்களிடையே ஆர்வம் உள்ளது இந்தியாவில் ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகளை வாங்கியவர் யாரோ அவரே தேர்வு செய்யப்படுவார். பாகிஸ்தானிலும் இதே போல தொ…

    • 0 replies
    • 2.3k views
  10. முன்னாள் பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய ஐக்கிய தேசியக்கட்சியில் நேற்று திங்கட்கிழமை இணைந்துகொண்டுள்ளார். அத்துடன், ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளரான சாஹல ரத்னாயக்கவை தான் ஆதரிக்க போவதாகவும் அறிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/151750#sthash.r0nd0xyv.dpuf

  11. கல்வியொன்றே வாழ்வின் எல்லாமும் என்று வாழும் எம்மினம் அதனைக் கண்ணாகப் போற்றிவாழ்ந்த ஓர் இளம் தளிர் காமுகர்களின் கயமைத்தனத்திற்குப் பலியாகி பாதிவழ்தன்னில் பரலோகம் அனுப்பிவைக்கப்பட்ட அநியாயச் செயலைக் கண்டிக்கின்றோம்.இந்த கொடிய தொற்று நோயானது ஏனைய கிராமங்களில் வாழும் எமது உறவுகளைப் பீடித்துவிடாதிருக்க எல்லோரும் ஓரணியில் திரண்டு குரல்கொடுப்போம் அக்கிரமக்காரர்களால் அழிக்கப்பட்ட அந்தச் செல்வமகளைப் பிரிந்து தவிக்கும் உறவுகளின் துயரத்தில் நாமும் பங்கெடுத்துக்கொள்வோம். அந்தக் கல்விக் களஞ்சியமான திருமளின் ஆத்மசாந்திக்காய் வேண்டுவோம். எமது பாகுபாடுகள் அனைத்தையும் களைந்து ஓரணியின் கீழ் அனைத்து மக்களையும் வருகைதருமாறு அன்போடு வேண்டுகின்றோம். இடம்: 50 Rue de torcy, 75018 Paris M Marx…

    • 14 replies
    • 1.4k views
  12. கஜேந்திரகுமாரின் புரியாத புதிருக்கு விடை என்ன? 08/09/2015 இனியொரு... 1 COMMENT கஜேந்திரகுமார்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்திற்குச் சென்று சில உரிமைகளைக் கேட்டுப் பெற்றுக்கொள்வதாகக் கூறுகின்றனர். அவர்களுடைய பேச்சுகளிலேயே ஒற்றையாட்சிப் பாராளுமன்ற எல்லைக்குள் தமக்குத் தேவையானதை கெஞ்சிக் கூத்தாடிப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம் என்று கூறுகின்றனர். பாராளுமன்றதால் எதையும் சாதித்துவிட முடியாது என்பதையே அவர்கள் தமது தேர்தல்கால வார்த்தைகளில் கூறுகின்றனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ‘அகில இலங்கை’ கட்சியைப் பொறுத்தவரை அப்பட்டமான கோமாளித்தனமான முழக்க்ங்களை முன்வைக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமக்கும் இடையேயுள்ள ஒரே வேறுபாடு என்று கஜேந்திரகுமார் பொன்…

  13. ஐக்கிய தேசியக் கட்சியுடன் எவ்வித இணக்கப்பாடுகளையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுகோகொடையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும், ஜே.வி.பியுடன் இணைந்து செயற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கடந்த வாரம் கூட அமைச்சரவையில் கூடியதாகவும், 17ம் திகதி தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஜே.வி.பி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதாக குற்றம் சுமத்திய போ…

  14. அம்பாறை மாவட்டம் கல்முனை நகரிலுள்ள வீதியொன்றுக்கு எம்.எஸ் காரியப்பரின் பெயரை அனுமதியின்றி சூட்டியதாக குற்றஞ்சாட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களும் ஆதரவாளர்களும், பகிரங்கமாக வீதியின் பெயரிடப்பட்ட கல்வெட்டை இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். வீதிக்கு காரியப்பர் பெயர் சூட்டியதை எதிர்த்த ததேகூ இன்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளும் தேர்தல் பிரச்சார கூட்டமொன்று சாத்தான்கேணி மைதானத்தில் நடைபெறுவதற்கு ஒரு சில மணித்தியாலயத்திற்கு முன்னதாக இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. கல்முனை தனியார் பஸ் நிலையத்திலிருந்து சாத்தான்கேணி மைதானம் வழியாக பொதுச் சந்தைக்கு செல்லும் வீதிக்கு கல்முனை மாநகர சபையினால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான முதலியார் எம். எஸ். காரியப்பர் வ…

  15. சானல் 4 அம்பலப்படுத்திய ஐ.நாவின் ஆவணம் குறித்த காணொளி. அதன் தமிழாக்கம் : "இந்த ஆவணம் பல காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அதிர்ச்சியளிக்ககூடியதாகவும் இருக்கின்றது. அறுபது ஆண்டு காலமாக விடுதலை புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நடந்த போரில் பல்லாயிர கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை புலிகள் மீதும் போர்குற்றங்கள் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் கொல்லப்பட்டது இலங்கை அரசின் ஷெல் தாக்குதலால் தான். பதினெட்டு மாதங்களுக்கு முன்னர் ஐநா மனித உரிமைகள் ஆணையம் போர் குற்றங்கள் மீது சுதந்திர சர்வதேச விசாரணை தொடங்க இருப்பதாக முடிவெடுத்தது. ஐநா மனித உரிமைகள் ஆணையம் வரும் செப்டம்பர் மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட இருக்கின்றது. அந்த அறிக்கையில் என்ன இருக்கும் எ…

    • 0 replies
    • 1.2k views
  16. நாட்­டைப்­ பி­ரிக்­கு­மாறு நாங்கள் கோர­வில்லை. ஆனால் கௌர­வ­மாக சுய­ம­ரி­யா­தை­யுடன் பக்­கு­வ­மாக பாது­காப்­பாக எமது நியா­ய­பூர்­வ­மான அபி­லா­ஷைகளை நிறை­வேற்றி சமத்­து­வ­மான மக்­க­ளாக நாங்கள் வாழ விரும்­பு­கின்றோம் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரிவித்தார். மட்­டக்­க­ளப்பில் நேற்றுமுன்தினம் சனிக்­கி­ழமை நடை­பெற்ற தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­சாரக் கூட்­டத்தில் உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். மட்­டக்­க­ளப்பு தனியார் பஸ் தரிப்பு நிலை­யத்­திற்கு முன்­பாக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி பிரேம்நாத் தலை­மையில் நடை­பெற்ற இக் கூட்­டத்தில் தொடர்ந்­து­ரை­யாற்­றிய சம்­பந்தன் நாட்­டைப்­பி­ரிக்­கு­மாறு நாங்கள் கோர­வில்லை. ஆனால் கௌர­வ­மாக சுய­ம­ர…

  17. ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னு­டைய வெற்றி உறு­திப்­ப­டுத்தப்பட்­டுள்­ள­மை­யினால், ஜன­வரி 8 ஆம் திகதி மக்­க­ளினால் தோற்­க­டிக்­கப்­பட்ட பின்பும் மீளவும் பிர­த­ம­ராக முனையும் மஹிந்த ராஜ­பக் ஷ இந்த தரு­ணத்­தி­லா­வது மெத­மு­ல­ன­விற்கு சென்று ஓய்வு எடுக்க வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எச்­ச­ரிக்கை விடுத்தார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து நல்­லாட்­சியை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு நிரந்­த­ர­மான அர­சாங்கம் ஒன்றை ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு ஒப்­ப­டைக்­கு­மாறும் அவர் கோரினார். இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் நிவித்தி­கல பிர­தே­சத்தில் நேற்று நடை­பெற்ற ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­சாரக் கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு …

    • 0 replies
    • 1.3k views
  18. பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் சடலம் சற்றுமுன்னர் கல்­கிஸை பிர­தான நீதிவான் முன்­னி­லையில் தோண்டி எடுக்கப்பட்டது. புதுக்­கடை 3 ஆம் இலக்க நீதிவான் நிஸாந்த பீரிஸ் வழங்­கிய அனு­ம­திக்கு அமை­வாக இந் நடவடிக்கை இன்று இடம்­பெற்றது.நீதி­மன்றின் உத்­த­ர­வுக்கு அமைய பள்­ளி­வாசல் மைய­வா­டிக்கு பொறுப்­பா­ன­வர்கள், கிராம சேவகர் மற்றும் கொழும்பு பிர­தான சட்ட வைத்­திய அதி­காரி அஜித் தென்­னகோன் ஆகியோர் இதன் போது சமுகமளித்திருந்தனர். வஸீம் தாஜு­தீனின் சட­லத்தை மீள் பிரேத பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்த வேண்டும் எனவும் அதற்­காக அவ­ரது சட­லத்தை அடக்­கஸ்­த­லத்­தி­லி­ருந்து தோண்டி எடுக்க அனு­மதி தரு­மாறும் புதுக்­கடை 3 ஆம் இலக்க நீதிவான் நிஸாந்த பீரி­ஸுக்கு குற்றப் புல­னாய்வுப் பிரி­வின…

  19. யுத்தம் முடிவடைந்து ஆண்டுகள் ஆறாகியும் தீர்க்கப்படாத இனப்பிரச்சனையுடன் இலங்கை உலக அரங்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது. கெடுவோம் பந்தயம் பிடி என்கிற அரசியல் வாதிகள் வாழும் நாட்டில் இன்னும் 60 வருடங்கள் ஆனாலும் இப்பிரச்சனை தீராது சர்வேசா. அண்மையில் நான் எழுதிய “ அரசியல் வியாபாரமும் இராணுவ பலமும்” என்ற பத்திக்கு முக நூலில் எனது நண்பர் ஒருவர்: “ அரசியற் கடை நடத்துவதை விட இப்போதைக்கு வேறு என்ன வழி? மாற்றுவழி இருந்தால் கூறவும்”. எனக் கேட்டிருந்தார். அவருக்கு நான் (அரசியல்) வியாபாரத்தை ஊழல் இல்லாமல் கலப்படம் (பொய் பேசாமல்) இல்லாமல் மக்களைச் சுரண்டாமல் தொழிலாளர்களைச் சுரண்டாமல் செய்யும்படி கேட்கிறேன் எனப்பதில் அளித்தேன் அதற்கு அவர் : “வ…

    • 0 replies
    • 1.1k views
  20. வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனின் காணொளியில் சந்தேகம் இருப்பதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் மக்களோடு மக்களாக செயற்படுவதில்லை, தமது குடும்பங்களை இந்தியாவில் வைத்துக்கொண்டு செயற்படுகின்றனர் என, வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்தார். இதுதொடர்பிலான காணொளி சமூக வலைத்தளங்களில் ஒன்றான முகப்புத்தகத்தில் (பேஸ்புக்கில்) வெளியாகியூள்ளது. இதுதொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்தக்காணொளியின் உண்மைத்தன்மை பற்றி பெரியதொரு சந்தேகமிருப்பதாகவும், அது அவருடன் நடாத்தப்பட்ட நேர்காணலா அல்லது வேறு ஏதாவது கேள்வியை கேட்டுவிட்டு ஒரு பதிலை பெற்றார்களா, அந்தக் காணொளி அரைக…

  21. கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளரும் புளொட் அமைப்பின் தலைவருமான சித்தார்த்தன் நேற்று கரவெட்டிப் பகுதியில் வைத்து பொதுமக்களால் அசௌகரியங்களிற்கு உள்ளாகியிருந்தார். கரவெட்டி கிழக்கு பொது நோக்கு மண்டபத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளச் சென்ற போது அங்கு அதனை அறிந்து அங்கு திரண்ட மக்கள் இந்தப் பகுதிக்குள் எந்தக் கூட்டமைப்பு வேட்பாளர்களும் வரக் கூடாது எனத் தெரிவித்ததுடன் சித்தார்த்தன் சார்ந்த கட்சியால் நடத்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தனர். எதிர்பாராத மக்களது கேள்விகளால் சித்தார்த்தன் திண்டாடியே போயிருந்தார். மாமனிதர் சிவநேசனின் சொந்த ஊரான கரவெட்டி கிழக்கில் கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் தேர்தல் காலத்தில் மட்டுமே எட்டிப்பார்ப்பதாக கூறப்படுகின்றது.http://…

  22. எதிர்வரும் தினங்களில் மூவரின் உயிருக்கு ஆபத்து எச்சரிக்கை. August 10, 201512:26 am எதிர்வரும் தினங்களில் ஒரு முஸ்லிம் தலைவர் உற்பட மூவரின் உயிர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் …! புலனாய்வு எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்பு அதிகரிப்பு. பொது தேர்தலுக்கு இன்னும் எட்டு தினங்களே உள்ள நிலையில் ஐக்கிய தேசய முன்னணியின் மூன்று முக்கிய அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மஹிந்த அரசின் முக்கியஸ்தர்களாக இருந்து பின்னர் அதே மஹிந்த அரசில் இருந்து வெளியேறி மகிந்தவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அமைச்சர்களான ராஜித சேனாரத்ன ,சம்பிக்க ரணவக்க ,மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் ஆகியோரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் தினங்களுக்குள் குறித்த மூவருக்கும…

    • 0 replies
    • 402 views
  23. 3 மாதங்களில் ஆறரை இலட்சம் ரூபாவுக்கு சலவை செய்த முன்னாள் பிரதமர் டி.எம்AUG 10, 2015 | 1:02by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் பிரதமராக இருந்த டி.எம்.ஜெயரட்ண, ஐந்து நட்சத்திர விடுதியில் தமது உடைகளை சலவை செல்வதற்காக, கடந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் மட்டும், சுமார் ஆறரை இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளார். இந்த அதிர்ச்சித் தகவலை சிறிலங்காவின் பொருளாதார கொள்கை பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா வெளியிட்டுள்ளார். கொழும்பிலுள்ள சினமன் லேக்சைட் விடுதியில், முன்னாள் பிரதமர் எ.எம். ஜெயரட்ணவின் உடைகளைச் சலவை செய்வதற்கு, கடந்த 2014ஆம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் மட்டும், 632,575 ரூபா (4,600 டொலர்) செலவிடப்பட்டள்ளது. 2014ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 121…

    • 0 replies
    • 386 views
  24. தனது சுயசரிதையில் மகிந்தவின் திருகுதாளங்களை அம்பலப்படுத்தப் போகிறார் சந்திரிகாAUG 10, 2015 | 1:31by கார்வண்ணன்in செய்திகள் போரை வெற்றி கொண்டது தானே என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச உரிமை கோர முடியாது என மற்றொரு முன்னாள் அதிபரான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். குருநாகலவில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிக்க, அங்கு பரப்புரைகளை மேற்கொண்டு வரும் சந்திரிகா, நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். “போரை வெற்றி கொண்டவர் என்பதற்காக சில வாக்காளர்கள் மகிந்த ராஜபக்சவின் பின்னால் நிற்கின்றனர். போரை வெற்றி கொண்டவர் என்பதற்காக மட்டும், மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிப்பதானால், அவருக்கு வாக்களிக்கலாம். ஆனால், இராணுவத் தளபதியாக இருந…

    • 0 replies
    • 361 views
  25. தாஜுதீன் கொலை குறித்து மகிந்தவின் விசுவாசிகளான காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணைAUG 10, 2015 | 1:47by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்காவின் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக, சிறிலங்கா காவல்துறையின் முன்னாள் மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனநாயக்க மற்றும் அதிபர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பலர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். மகிந்த ராஜபக்ச குடும்பத்துடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்த அனுர சேனநாயக்கவே, தாஜுதீன் மரணம் தொடர்பான விசாரணைகளுக்குத் தலைமை தாங்கியிருந்தார். தாஜுதீன் மரணம் நிகழ்வதற்கு முன்னர், அதிபர் பாதுகாப்புப் பிரிவின் உணவகத்தில் தாஜுதீன் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக உயர்மட்ட வட…

    • 0 replies
    • 573 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.