ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143515 topics in this forum
-
வவுனியா A/L மாணவி தற்கொலை..! வெளியாகிய கடிதம்…! சிக்கலில் அதிபர். August 07, 20154:28 pm வவுனியா நெளுக்குளம் குகன்நகர் பகுதியில் நேற்று (06.08.2015) இரவு 7.30 மணியளவில் பொதுக்கிணறிலிருந்து விபுலானந்தா கல்லூரியில் கல்வி கற்கும் குணசேகரம் திவ்யா என்ற 19 வயது மாணவியின் சடலம் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது….. வவுனியா விபுலானந்தா கல்லூரியில் கல்வி கற்று வந்த திவ்யா என்ற மாணவி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சை எழுதுவதற்கு தனது அனுமதி அட்டையினைப் பெறுவதற்காக பாடசாலை அதிபரிடம் சென்றுள்ளார். அதிபர் அனுமதி அட்டை கொழும்பிலிருந்து இரண்டு தினங்களில் வந்ததும் தருவதாக கூறியுள்ளா…
-
- 1 reply
- 495 views
-
-
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று கிடைக்கும் வரை அமைச்சர் பதவிகளையோ, வேறு சலுகைகளையோ தமிழ் தேசியக் கூட்டமைப்பினரோ நானோ பெறப்போவதில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை காலை திருகோணமலையில் உள்ள தனது இல்லத்தில் இளைஞர் அமைப்புக்களை சேர்ந்தவர்களை சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அரசியல் தீர்வை நோக்கிய எமது பயணம் எவ்விடத்திலும் தரிக்கப்போவதில்லை ஜனவரி 8 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன எத்தகைய வெற்றியை அடைந்தாரோ அந்த வெற்றியை உறுதி செய்யும் வகையில் நடைபெறவுள்ள பா…
-
- 29 replies
- 1.1k views
-
-
"இலங்கையின் தற்போதைய அரசியல் சாசனம் நீக்கப்படவேண்டும். புதிய அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட வேண்டும். அந்தப் புதிய அரசியல் சாசனத்தின் மூலம் தேசியப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிட்டவேண்டும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "நாங்கள் தற்போது ஒரு வரட்டுத்தனமான போக்கைக் கடைப்பிடிக்க முடியாது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எமது பிரச்சினை சர்வதேச மயமாக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை எமது பிரச்சினை தொடர்பாக 2012, 2013,…
-
- 3 replies
- 262 views
-
-
பிரகீத் கடத்தல் விவகாரத்தில் திருப்பம் – ஐந்து பேர் கைது செய்யப்பட்டு இரகசிய இடத்தில் விசாரணைAUG 09, 2015 | 1:53by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற் போனது தொடர்பாக, மின்னேரியா இராணுவ முகாமில் பணியாற்றிய இரண்டு சிறிலங்கா படையினர் உள்ளிட்ட ஐந்து பேரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று, இதுபற்றிய விசாரணைகள் மூடிய அறைக்குள் மிக இரகசியமாக இடம்பெறுவதாகவும், விசாரணையாளர்களின் விபரங்கள் வெளியிடப்படாது என்றும், குற்றப்புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக கூறியுள்ளது. இதுதொடர்பாக ஐந்து பேரிடம் விசாரணைகள் நடத்தப…
-
- 0 replies
- 403 views
-
-
சிறிலங்கா இராணுவத்தினருக்கு வாய்ப்பூட்டு – கிரிசாந்த டி சில்வா கடும் உத்தரவுAUG 09, 2015 | 1:37by கார்வண்ணன்in செய்திகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகளில் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபடுவதற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தடைவிதித்துள்ளார். இது தொடர்பாக அவர் படையினருக்கு நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். சில வேட்பாளர்களுக்கு ஆதரவாக இராணுவத்தினர் பரப்புரையில் ஈடுபட்டுள்ளதாகவும், சிலர் அரசியல் கட்சிகளின் பணியகங்களில் செயற்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சுக் கு கிடைத்த தகவல்களை அடுத்தே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு வடிவிலான தேர்தல் பரப்புரைகளிலும், இராணுவத்தில் உள்ள எந்தவொரு நிலையில் உள்ள அதிகாரியோ, சிப்பாயோ ஈடுபட…
-
- 0 replies
- 503 views
-
-
கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணித்தீவு வீதி இலுப்படிச்சேனை பிரதேசத்தில் ஈன்ற குழந்தையை நிலத்தில் அடித்து புதைத்த சம்பவம் நேற்றுமுன்தினம் (07) நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் பற்றி தெரியவருவதாவது, பெண்ணெருவர் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அங்கு நோயாளி பரிசோதிக்கப்பட்டபோது குழந்தையொன்றை பிரசவித்திருப்பது தெரரியவந்தது. பின்னர் பெண்ணின் தடுமாற்றத்தை அவதானித்த வைத்தியர்கள் பொலிஸாருக்கு இது பற்றி தெரிவித்தனர். குறித்த பெண்ணை கரடியநாறு பொலிஸார் விசாரணைக்குட்படுத்திய பொழுது தானும் தனது சகோதரியும் சேர்ந்து குழந்தையை அடித்து நிலத்தில் புதைத்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதன் பிரகாரம் குழந்தையின்…
-
- 1 reply
- 307 views
-
-
தேர்தல் விதிமுறைகளை மீறியதுடன் நோயாளிகளுக்கும் பொது மக்களுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் பரப்புரைக்கூட்டம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. குறித்த பரப்புரை கூட்டமானது தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறி நடத்தப்பட்டு இருந்தது. யாழில் தேர்தல் சட்ட விதிமுறைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் டக்ளஸ் தேவானந்தாவின் கூட்டத்திற்கு மட்டும் எவ்வாறு சட்ட விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்டது என பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். தேர்தல் சட்ட விதிமுறைகளின் பிரகாரம் பஸ் நிலையங்கள் , பொது வர்த்தக சந்தைகள் , புகையிரத நிலையம் போன்ற மக்கள் நடமாடும் இடங்களில், சட்டவ…
-
- 0 replies
- 313 views
-
-
ராஜபக்ஷவின் கொடூர ஆட்சிக்காலத்தில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என ஐ.நாவுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவும், இலங்கையில் 60 வருடங்களுக்கு மேலாகத் தொடரும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு 2016ஆம் ஆண்டில் கிடைக்கவேண்டும் என அரசையும் சர்வதேச சமூகத்தையும் வலியுறுத்தவும் ஓகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் வாக்காளர்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 'வீடு' சின்னத்திற்கு தவறாது வாக்களிக்கவேண்டும். - இவ்வாறு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்…
-
- 1 reply
- 369 views
-
-
சிறிலங்காவில் வன்முறைகள் நிகழலாம் – அமெரிக்கா எச்சரிக்கைAUG 08, 2015 | 13:25by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அங்கு தேர்தலை ஒட்டி வன்முறைகள் இடம்பெறலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்காவுக்குச் செல்லும், சிறிலங்காவில் வதியும் தமது நாட்டுக் குடிமக்கள் இத்தகைய தேர்தல் வன்முறைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உள்ளூர் ஊடகங்களை அமெரிக்க குடிமக்கள் தொடர்ச்சியாக கண்காணித்து வர வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அமைதியான முறையில் நடக்கின்ற பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக திரும்பமான என்பதால், இத்தகைய பேரணிகள், போராட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்துக் கொள்ளுமாற…
-
- 5 replies
- 1k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தனக்கும் ஒத்துழைப்பு தரவில்லை என வன்னியில் போட்டியிடும் வேட்பாளரான திருமதி சி.சாந்தி என்பவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஒரு பெண் வேட்பாளராக யுத்த சுமைகளை சுமந்தவள் என்ற வகையில் கூட்டமைப்பில் நான் போட்டியிடுகின்றேன். தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் அவ்வளவாக ஆதரவு தரவில்லை. ஒரு பெண் வேட்பாளர் போட்டியிடுகின்றார். அவர் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவள். அரச அதிகாரியாக இருந்தவள் என்பதை அவர்கள் வெளிப்படுத்தவில்லை. எனக்கு செல்வாக்கு உள்ள இடத்தில் அவர்கள் கூட்டுச் சேர விரும்புகிறார்கள். ஆனால் ஏனைய இடங்களுக்கு என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்த கூட்டமைப்பினர் தயாராகவில்லை. எனக்கு ஆதரவு அதிகரிப்பதை அவர்கள் பெரிதாக விரும்ப…
-
- 0 replies
- 1k views
-
-
கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தினில் இனப்பிரச்சினைக்கு தீர்வாக சமஸ்டி பிரேரிக்கப்பட்டுள்ள போதும் எந்தவகையான சமஸ்டி தீர்வென முடிவாகவில்லையென தெரிவித்துள்ளார் சுமந்திரன். சுமந்திரனின் முகநூல் சந்திப்பென நடத்தப்பட்ட நிகழ்விற்கு வாகனங்களினில் ஏற்றிவரப்பட்ட இளைஞர்கள் ஒருபகுதியினர் கலந்து கொண்ட நிகழ்வாக அது அமைந்திருந்தது.நிகழ்வினில் ஊடகவியலாளர்களிற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையினில் சுமந்திரனிடம் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றினில் எந்த வகை சமஸ்டி சாத்தியம் என்று கேட்கப்பட்டிருந்தது.அதற்கு பதிலளித்த சுமந்திரன் சர்வதேசத்தின் அழுத்தங்கள் ஏற்பட அப்பொழுது பேரம்பேச்சு ஆரம்பமாகும். அப்போதுதான் என்னவகையான சமஸ்டி என்பது பற்றி கூறமுடியும் என்றார். ஆனால், சமஸ்டிக்கான அடிப்படை ப…
-
- 0 replies
- 1k views
-
-
கடந்த 31ஆம் திகதி ஜ.தே.க அரசின் நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்க கலந்து கொண்ட தேர்தல் பிரசார பேரணி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்துக்கு தப்பி வந்துள்ளதாக கூறப்படுகின்றது. அவர்கள் வடமராட்சி கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளதாகவும் அதையடுத்து மாதகல் கடல் பகுதியிலிருந்து வடராட்சி கிழக்கு பகுதி வரையான கடலோர மார்க்கங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் வீதித்தடைகளை ஏற்படுத்தி சந்தேகத்துக்கிடமான வாகனங்களை சோதனைகளை ஆரம்பித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. சந்தேக நபர்களில் சிங்களவர்கள் மூவருடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவரும் அடங்குகின்றார். செல்வராஜ் கணேசன் (வயது 30), ஆர்.எஸ்.எஸ். ச…
-
- 0 replies
- 686 views
-
-
சிறிலங்கா அதிபர் பாதுகாப்பு பிரிவு கலைப்பு? – மைத்திரியின் பாதுகாப்பு சிறப்பு அதிரடிப்படையிடம்AUG 08, 2015 | 14:21by கார்வண்ணன்in செய்திகள் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற படுகொலைகளுடன் அதிபர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தொடர்புபட்டுள்ளதாக கிடைத்துள்ள அறிக்கைகளை அடுத்து மிக முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்புப் பிரிவை உடனடியாக மாற்றியமைக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து. உடனடியாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பாதுகாப்பு வழங்கி வந்த காவல்துறையின் அதிபர் பாதுகாப்புப் பிரிவு விலக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக சிறப்பு அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே மைத்திரிபால சிறிசேனவுக்கு சிறப்…
-
- 0 replies
- 666 views
-
-
யாழ்ப்பாணத்தில் 7 ஆசனங்களையும் கைப்பற்றும் கூட்டமைப்பு – சுமந்திரன் நம்பிக்கைAUG 08, 2015 | 13:15by கி.தவசீலன்in செய்திகள் வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள 7 ஆசனங்களையும் கைப்பற்றும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார், கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், “யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 7 ஆசனங்களையும் வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கூட்டமைப்புக்கு இருக்கிறது. ஆசனம் ஒன்றைப் பெறுவதற்கான ஆகக்குறைந்த 5 வீத வாக்குகளை ஏனைய கட்சிகளால் பெற முடியாமல் போகும். இந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 வரையான ஆசனங்களைக் கைப்…
-
- 0 replies
- 444 views
-
-
வடக்கில் பாரம்பரியத்தை மாற்றாத அபிவிருத்தியே முக்கியம்! - முதலமைச்சர் விக்னேஸ்வரன் [Saturday 2015-08-08 19:00] வடக்கில் பாரிய செயற்றிட்டங்களை வகுத்து தொழிற் பேட்டைகளை உருவாக்கி எமது பாரம்பரியத்தையும் விவசாய பின்புலத்தையும் மாற்றியமைக்க நாங்கள் விரும்பவில்லை. எமது பாரம்பரியம் கலாசாரம், இயற்கை வளங்கள், சுற்றாடல் போன்றவற்றுக்கு அமைவாகவே சுற்றுலாத்துறை போன்ற விருத்தி செய்யப்பட வேண்டும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்து நகரமாக மாற்றுவதில் முகங் கொடுக்க வேண்டிய சவால்களை அடையாளப்படுத்தும் கலந்துரையாடல், முதலமைச்சர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே …
-
- 0 replies
- 363 views
-
-
பிரகீத்தை கடத்திய சத்யா மாஸ்டர், நகுலனுக்கு விளக்கமறியல்AUG 08, 2015 | 5:48by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள இருவரையும், விளக்கமறியலில் வைக்க ஹோமகம நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சத்யா மாஸ்டர் எனப்படும் கணபதிப்பிள்ளை சுரேஸ், நகுலன் எனப்படும் சுமதிபாலன் சுரேஸ் ஆகிய இருவருமே, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்ற சிறிலங்கா இராணுவ முகாமில் ஒப்படைத்திருந்தனர். இவர்கள் இருவரும், வவுனியாவில் கைது செய்யப்பட்டனர். நேற்று ஹோமகம நீதிமன்றத்தில் இவர்கள் நிறுத்தப்பட்டு, ஒரு மாதம் விளக்கமறியலில் வைத்து விசாரிக்க அனுமதி பெறப்பட்டுள…
-
- 5 replies
- 837 views
-
-
சிறிலங்கா தேர்தல்: வெற்றி பெறப்போவது யார்? – உபுல் ஜோசப் பெர்னான்டோAUG 08, 2015 | 13:44by நித்தியபாரதிin கட்டுரைகள் சிறிலங்கா தேர்தல் வரலாற்றின் பிரகாரம், தோற்கடிக்கப்பட்ட எந்தத் தலைவர்களும் அல்லது தோற்கடிக்கப்பட்ட எந்தவொரு அரசாங்கமும் தோற்கடிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் மீண்டும் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்பதே உண்மையாகும். இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. 1994ல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியுற்ற பின்னர், இதற்கு சில மாதங்களின் பின்னர் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் காமினி திசநாயக்க போட்டியிடத் தீர்மானித்தார். இது அன…
-
- 0 replies
- 574 views
-
-
யாழ்.முகாமையாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்.பல்கலைக்கழக பொறியியல்துறை தலைவர் பேராசிரியர் சுப்பிரமணியம் சிவகுமார் தலைமையில் பொதுத்தேர்தல் 2015 தொடர்பில் ஐந்து கேள்விக்கொத்துக்கள் அடங்கிய கேள்விநேரம் யூரோவில் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சிகள், சுயேச்சைக் குழுக்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கேள்விநேரத்தில் • முதலாவதாக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக, இலங்கையின் பெரும்பான்மை அரசியல் கட்சிகள் இரண்டும் ஒற்றையாட்சி முறைமையின் கீழேயே அரசியல் தீர்வு என்று கூறியிருக்கும் நிலையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கும் வகையில் எவ்வாறான அரசியல் தீர்வொன்றை நோக்கி நீங்கள் முன்னெடுக்கவ…
-
- 0 replies
- 274 views
-
-
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் புதிய நாட்டில் வடக்கு உள்ளடக்கப்படாது எனவும், எதிர்காலத்தில் வடக்கிற்கு செல்ல வீசுh தேவைப்படும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஈழத்தை உருவாக்கிக் கொடுத்தே ரணில் புதிய நாட்டை அமைக்க உள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். அவ்வாறு செய்தால் தெற்கிலிருந்து வடக்கு செல்ல வீசா பெற்றுக்கொள்ள நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைய ரணில் விக்ரமசிங்க வடக்கு கிழக்கை ஈழ நடாக அறிவிப்பார் என அவர் தெரிவித்துள்ளார். அல்லது வடக்கு கிழக்கிற்கு சமஸ்டி ஆட்சியை வழங்கிவிடுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். மருதமடு தேவாலயத்தை வழிபாடு செய்யக் கூடிய சூழ்நிலையை தமது அரசாங்கம் உருவாக்கிக் கொடுத்துள்ளத…
-
- 0 replies
- 247 views
-
-
https://video-ord1-1.xx.fbcdn.net/hvideo-xfa1/v/t42.1790-2/11856194_478898175604285_1531373946_n.mp4?efg=eyJybHIiOjMwMCwicmxhIjoxOTI2fQ%3D%3D&rl=300&vabr=134&oh=967a8e80bc915e089453756202a6a36a&oe=55C601E3
-
- 0 replies
- 452 views
-
-
-
https://www.facebook.com/eelapriyan.balan
-
- 0 replies
- 529 views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்க புதிய அரசியல் சாசனம் இயற்றப்பட வேண்டும் என்று ரணில் கூறியுள்ளதாகவும் இனப்பிரச்சினை தொடர்பில் ரணிலுக்கு உள்ள தெளிவு சிவப்பு அங்கி தரித்த ஜே.விக்கு இல்லை என்றும் நவசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன கூறியுள்ளார். ஜே.வி.பி இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் மிகவும் மோசமான முடிவு எடுத்துள்ளதாகவும் இது கவலையளிப்பதாகவும் இனப்பிரச்சினை தொடர்பில் லெனின் மூன்று புத்தகங்களை எழுதியுள்ளபோதும் அந்த புத்தகங்களை ஜே.வி.பி குப்பையில் போட்டுவிட்டு இனப்பிரச்சினை பற்றி பேசிவருவதாகவும் அவர் கூறினார். நாட்டை பிரிவினையிலிருந்து நாமே காப்பாற்றினோம், வடக்கு கிழக்கு இணைப்பை நாமே துண்டித்தோம், சுனாமிக்குப் பின்னரான தன்னாட்சி அதிகாரக் கட்டமைப்பை நாம…
-
- 1 reply
- 518 views
-
-
புலிகளின் குண்டுதுளைத்த காருடன் சரத்பொன்சேகா: குளோபல் தமிழ் செய்தியாளர்:- முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யுத்த வெற்றியையும் விடுதலைப் புலிகளையும் பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள வேளையில் முன்னாள் இராணுவத்தளபதி பீலட் மார்சல் சரத்பொன்சேகாவும் புலிகளின் நினைவை பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் உத்தியை முன்னெடுக்கின்றார். திருகோணமலை நகரசபை மண்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்காக வந்திருந்த சரத்பொன்சேகா 2006ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான சரத்பொன்சேகாவின் காருடன் வருகை தந்திருந்தார். இலங்கை இராணுவத்தில் வகித்த முக்கியத்துவம் மிக்க பங்களிப்புக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் தன்னை கொலை செய்ய முனை…
-
- 1 reply
- 413 views
-
-
எமது தேசிய தலைவரின் கட்டளைக்காக நாம் முள்ளிவாய்க்கால் வரை சென்றோம்...! வடக்கு கல்வியமைச்சர் குருகுலராஜா [ வெள்ளிக்கிழமை, 07 ஓகஸ்ட் 2015, 08:51.39 AM GMT ] ஏழு வருடங்களுக்கு முன்னர் இதே மாதத்திலே எங்கள் மூட்டை முடிச்சுகளுடன் வாழ்விடங்களை விட்டு விலகிச் சென்றோம் என்பதை நினைவு கூரக் கடமைப்பட்டுள்ளேன். ஏன் அதைச் செய்தீர்கள், யார் உண்களைப் போகச் சொன்னார்கள். என்ன கட்டளைக்கு நீங்கள் அடி பணிந்து நீங்கள் அடி பணிந்து விலகிச் சென்றீர்கள். எங்கள் தேசிய தலைவரின் கட்டளைக் கூடாக எமது பிரதேசத்திலுள்ள அனைவருமே 2008ம் ஆண்டு ஆவணித் திங்கள் விலகிச் சென்றார்கள். ஒற்றுமையின் பலமாக இருக்க வேண்டுமென்பதற்காகவே முள்ளிவாய்க்கால் மட்டும் சென்றோம் என வடமாகாண கல்வியமைச்சர் குருகுலராஜா கூட்டமை…
-
- 0 replies
- 431 views
-