ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாவிகளில் கடந்த ஒரு மாதமாக ஆத்துவாழை தாவரம் பரவிக் காணப்படுவதால், தோணிகளில் சென்றும் வீச்சு வலைகளைக் கொண்டும் மீன்பிடிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். மேலும், இத்தாவரம் பரவிக் காணப்படுவதினால் வாவிகளை நோக்கி பாம்புகளும் முதலைகளும் வருவதாகவும் இதனால், அச்சமாக உள்ளதாகவும் மீனவர்கள் கூறினர். இந்த நிலையில், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையேற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் கூறினர். இது தொடர்பில் கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ருக்ஸன் குரூஸிடம் கேட்டபோது, 'வருடம் தோறும் கச்சான் காற்று வீசும் காலப்பகுதியில் ஆத்துவாழை தாவரம் நன்னீருள்ள பகுதிகளிலிருந்து வாவிகளுக்கு தண்ணீரோடு அடிப்பட்ட…
-
- 0 replies
- 173 views
-
-
கிளிநொச்சி வன்னேரிக்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் போக்குவரத்து நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர். கிளிநொச்சி மேற்கின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள இக்கிராமம் 1953ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இக்கிராமத்தில் 1954ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வன்னேரிக்குளம் மகா வித்தியாலயத்துக்கு போக்குவரத்து பெரும் நெருக்கடியாகவுள்ளது. கிளிநொச்சியிலிருந்து வன்னேரிக்குளம் மருத்துவமனை வழியாக முழங்காவில் வரை பஸ்கள் பயணிக்கின்றன. வன்னேரிக்குளம் மருத்துவமனையிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலுள்ள பாடசாலைக்கு பஸ்கள் பயணிப்பதில்லை. இதன் காரணமாக மாணவர்களும் ஆசிரியர்களும் நடந்தே செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் வன்னேரிக்குளம் மகா வித்தியாலயம் வரை பஸ் வழித்தடத்தை வழங்குமாறு வன்னேர…
-
- 0 replies
- 205 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இந்த வாரம் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளதாக மஹிந்த அணி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரவித்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் 113க்கு மேல் ஆசனங்களை வெற்றி பெற்று மஹிந்த ராஜபக் ஷ இந் நாட்டின் பிரதமராவது நிச்சயமாகுமென்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில் ஏகாதிபத்தியவாதிகளின் திட்டத்திற்கு அமைய சந்திரிக்கா, ரணில் உட்பட அனைத்துவிதமான சதிகாரர்கள் இணைந்து ஏற்படுத்திய பொறி தகர்க்கப்பட்டுள்ளது. இன்று மைத்திரியும் மஹிந்தவும் ஓரணியில் இணைந்துள்ளனர். நுகேகொடையில் ஆரம்பமான மக்கள் போராட்டம் இன்று வெற்றி கண்டுள்ளது. ஜனநாயக ரீதியிலான மக்கள் பலத்தினால் ஏகாதிபத்திய வா…
-
- 0 replies
- 133 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அடிப்படைவாதிகளும் திருடர்களும் புதிய பாராளுமன்றத்திற்கு தெரிவானால் தேசிய அரசாங்கம் அமைக்கும் எமது திட்டம் ஒரு போதும் சாத்தியமாகாது. தேர்தலில் மஹிந்த போட்டியிட்டு வெற்றியிட்டினாலும் எதிர்கட்சி ஆசனத்திலேயே அவர் அமர்வார் என நிதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். மஹிந்தவிற்கு வேட்புமனு வழங்குவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்னும் தீரமானம் எடுக்கவில்லை. இவ்வாறான சதிதிட்டங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு போதும் உடன்போகமாட்டார். எமது நம்பிக்கைகளுக்கு மாறாக மஹிந்தவிற்கு அவர் வேட்புமனு வழங்குவாறேயானால் 63 இலட்சம் மக்களுக்கு பாரிய துரோகம் இழைத்தவராக வரலாற்றில் பெயர்பதிப்பா…
-
- 0 replies
- 136 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரிந்து செல்வது குறித்த தீர்மானமிக்க பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக மிகவும் நம்பரமான தரப்பிலிருந்து ஶ்ரீலங்கா மிரர் இணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அதிகாரத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான தரப்பினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், மகிந்த ராஜபக்சவிற்கு வேட்பு மனு வழங்கப்படும் என அந்தக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த இரண்டு காரணங்களையும் அடிப்படையாக வைத்தே தற்போது இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூட்டமைப்பின் நிறைவேற்றுச் சபையின் பெரும்பான்மை அதிகாரத்தை மகிந்…
-
- 0 replies
- 457 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கோ அல்லது ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கோ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையே நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது மைத்திரிபால இந்த உறுதியை வழங்கியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மகிந்த ராஜபக்சவிற்கு வேட்பு மனு வழங்கப்படும் என சுசில் பிரேம்ஜயந்த அண்மையில் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். எனினும், இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பின் தலைவர், ஜனா…
-
- 1 reply
- 284 views
-
-
வேட்புமனுத் தாக்கல் இன்று காலை ஆரம்பம்! - பேரணிகளுக்குத் தடை. [Monday 2015-07-06 07:00] ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் ஆரம்பமாகிறது. இதற்கமைய, எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணி வரையில் கட்சிகள், சுயேச்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். இதனையொட்டி இன்று முதல் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் ஆரம்பமாகிறது. இதற்கமைய, எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணி வரையில் கட்சிகள், சுயேச்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். இதனையொட்டி இன்று மு…
-
- 0 replies
- 291 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் உயிர் ஆயுதங்கள் என்று போற்றப்படும் கரும்புலிகளின் நினைவு தினம் இன்றாகும். கரும்புலி மாவீரர்களைப் போற்றி வணங்கும் இந்நாளில் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் கரும்புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி யாழ். பல்கலைக்களகத்திலும் கரும்புலிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. http://www.malarum.com/article/tam/2015/07/05/10862/கரும்புலிகளுக்கு-யாழ்-பல்கலையில்-அஞ்சலி-.html#sthash.IAgBxbE7.dpuf
-
- 6 replies
- 426 views
-
-
எமது தமிழ் மக்களைப் பார்த்து அன்று தோற்றுப் போனவர்கள் எனக் கூறிய மஹிந்த ராஜபக்ஷ இன்று எமது மக்களினாலேயே தோற்கடிக்கப்பட்டுள்ளார் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தென்மராட்சி நவபுரம் முன்பள்ளி வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில், பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:- விடுதலைக்காக ஜனநாயக முறைப் போராட்டங்கள் அடக்கி ஒடுக்கப்பட்டபோது, உலகில் நடைபெற்ற போராட்டங்களைப் போல, இங்கும் ஓர் ஆயுதப் பேராட்டம் இடம்பெற்றது. அந்தப் போராட்டத்தை அடக்கி, ஒடுக்கி விட்ட…
-
- 5 replies
- 1.3k views
-
-
அனந்தியின் பேட்டி 05.07.2015 சக்தி தொலைக்காட்சி -மின்னல்
-
- 0 replies
- 260 views
-
-
வட மாகாணத்திலுள்ள பல பாடசாலைகளின் அதிபர்களை இடமாற்றம் செய்வதற்கு அவசரமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. ஆண்டின் நடுப்பகுதியில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நெருங்கிவரும் நிலையில் ஏன் இந்த இடமாற்றங்கள் அவசரமாகச் செய்யப்படுகின்றன? பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் வட மாகாண முதலமைச்சர் நாட்டிலில்லாத சமயத்தில் பாரிய அளவிலான, பாடசாலைகளை நிலைகுலைய வைக்கக்கூடிய இடமாற்றங்கள் செய்யப்படுவதற்கு நோக்கங்கள் எதுவும் உள்ளதா? என்ற வினாக்கள் பாடசாலைகளின் நலன்விரும்பிகளால் முன்வைக்கப்படுகின்றன. வட மாகாணக் கல்வியமைச்சு வட மாகாணப் பாடசாலைகளில் உண்மையான அக்கறையோடுதான் செயற்படுகின்றதா? அல்லது வேறு ஏதாவது நோக்கங்களோடு செயற்படுகின்றதா? தமிழ்த் தேசி…
-
- 1 reply
- 181 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினை மீண்டும் ஆட்சி பீடத்தில் ஏற்றுவதற்கு சீன அரசாங்கம் கடும் பிரயத்தனம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீனத் தூதரகத்தின் இரண்டாம் அதிகாரியான அரசியல் பிரிவு பொறுப்பாளர் ரென் பகியான் இந்த நடவடிக்கைகளின் இணைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றார். ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க முக்கியஸ்தர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக சீன அரசாங்கம் நிதி உதவிகளை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அதனை வழங்குவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் போலியான தகவல்களை இந்த …
-
- 1 reply
- 552 views
-
-
'ஜனநாயக பலமே எம்மிடம் தற்போதுள்ளது. அதனை சரியான முறையில் பயன்படுத்துவதன் ஊடாகவே எமது எதிர்காலத்தை பாதுகாத்துக்கொள்ள முடியும். அதற்கான தீர்க்கமான தருணமே எதிர்வரும் பொதுத் தேர்தலாகும்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இந்நாட்டில் எமது உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் கடந்த காலங்களில் போராட்டங்களை முன்னெடுத்தோம். ஈற்றில் அவை பலமிழக்கச் செய்யப்பட்டன. தற்போது மீண்டும் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம். யுத்தம் நிறைவடைந்து …
-
- 2 replies
- 195 views
-
-
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. அவர், எந்த கட்சியில் போட்டியிடபோகின்றார் என்று தெரியவரவில்லை. இதேவேளை, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மீது சுமத்தப்பட்டுள்ள நிதிமோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக அவர், இம்முறை தேர்தலில் போட்டியிடமாட்டார் என்றும் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வருவார் என்றும் தெரியவருகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரமேஜயந்தவுக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றதாக கூறப்படும் சந்திப்பின்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தெரிவி…
-
- 1 reply
- 202 views
-
-
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அங்கத்துவ கட்சிகளுக்கான ஆசன பங்கீடு தொடர்பான இறுதி முடிவு எடுப்பதற்காக அந்தக் கட்சிகள் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாளை வவுனியாவில் கூடி முடிவெடுக்கவுள்ளன. நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கு ஆசனங்களைப் பகிர்ந்தளிப்பது தொடர்பில் இணக்கப்பாடுகள் இதுவரை எட்டப்படவில்லை. அங்கத்துவ கட்சிகளான தமிழரசுக் கட்சி, ஈபிஆர்எல்எப், ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளுக்கு ஆசனங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன. இதில் வன்னி மற்றும் மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களுக்கான ஆசன பகிர்வு தொடர்பில் நாளை இறுதி முடி எட்டப்படும் என தெரியவருகிறது. http://www.malarum.com/article/tam/2015/07/05/10860/கூட்டமைப்பின…
-
- 1 reply
- 269 views
-
-
வணக்கம் எப்பிடி சுகம்? என்ன எல்லாரும் முழுசிக்கொண்டு நிக்கிறியள். புலியள் இருக்கக்க நான் முழுசினன். இப்ப நீங்கள் முழுசிறியள் என்ன? விளங்குது. விளங்குது. மேடைக்கு கூப்பிடக்கூடாத ஆக்கள எல்லாம் புளியடியில விட்டது ஆர் எண்டு யோசிக்கிறியளோ? இல்லாட்டி இப்பவும் புலியடிபோடுவம் எண்டு நிக்கிறியளோ. எத்தினை கண்டங்களை தாண்டினாலும் கண்டம் இருக்கிற மாதிரித்தான் இருக்கு. சரி அதவிடுவம். மத்தியில கூட்டாட்சி மாகாணத்தில சுயாட்சி எண்டு சொன்னன். சந்திரிகாவோடயும் ஒட்டு மகிந்தவோடயும் வலு ஒட்டு. இணக்கஅரசியல் மூலம் தீர்வுகாணலாம் எண்டும் சொன்னன். அண்டைக்கு கூட்டமைப்பு தொடக்கம் எல்லாரும் என்னை பின்னி எடுத்தியள். ஆனா அண்டைக்கு நான் என்ன சொன்னனோ அதை அப்பிடியே கொப்பிபண்ணி இண்டைக்கு கூட்டமைப்பு செய…
-
- 0 replies
- 367 views
-
-
பொத்துவில் பிரதேசத்தில் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சந்தேக நபர்கள் பயணித்த லொறியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 7 கிலோகிராம் கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/articles/2015/07/05/கஞ்சாவுடன்-இருவர்-கைது
-
- 0 replies
- 147 views
-
-
முன்னாள் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் முக்கிய தருணத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் பகிரங்கப்படுத்தப் பட்டுள்ள, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மின்னஞ்சல்கள் மூலம் இது தெரியவந்துள்ளது. இலங்கைக்கான நிதியுதவியை இடைநிறுத்துமாறு ஹிலாரி கிளின்டன் விடுத்த வேண்டுகோளை சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் கடுமையாக கண்டித்துள்ளமையும் இந்த மின்னஞ்சல் மூலமாக தெரியவந்துள்ளது. உலகவங்கி மற்றும் சர்வதேசநாணய நிதியத்தை சேர்ந்தவர்கள் விடுதலைப்புலிகளை முற்றாக தோற்கடிக்கவேண்டும்,இதன்காரணமாக பொதுமக்களிற்கு மகிந்தராஜபக்ச அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படும் இழப்புகளை ஏற…
-
- 0 replies
- 260 views
-
-
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 256,852 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அம்மாவட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலரும் உதவித் தேர்தல்கள் ஆணையாளருமான சஜித் வெல்கம தெரிவித்தார். இந்த மாவட்டம் மூன்று தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கியது. திருகோணமலைத் தொகுதியில் 86,978 பேரும் சேருவில தொகுதியில் 74,070 பேரும் மூதூர் தொகுதியில் 95,804 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ், நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மாவட்டத்துக்காக தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதற்காக, ஒரு கட்சியிலிருந்தோ அல்லது சுயேட்சைக் குழுவிலிருந்தோ ஏழு வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தவேண்டுமெனவும் அவர் கூறினா…
-
- 0 replies
- 208 views
-
-
தேர்தல் பிரசாரங்களில் இருந்து ஒதுங்குகிறார் மைத்திரி! [Sunday 2015-07-05 08:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்களில் இருந்து ஒதுங்கியிருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மதானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பதற்றநிலை தோன்றியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்களில் இருந்து ஒதுங்கியிருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மதானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பதற்றநிலை தோன்றியுள்ளது. சிறிசேன பிரசாரங்களில் பங்கேற்காத நிலையில், மஹிந்த ராஜபக்சவை பிரசாரக்குழு தலைவராக…
-
- 3 replies
- 478 views
-
-
அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைக்க வாய்ப்பு [ ஞாயிற்றுக்கிழமை, 05 யூலை 2015, 02:55.01 AM GMT ] கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ரத்துச் செய்யப்பட்டிருந்த அமெரிக்காவின் வர்த்தக சலுகையான ஜி.எஸ்.பி மீண்டும் வழங்கப்படவுள்ளது. இதற்கான உறுதியை அமெரிக்கா அளித்துள்ளது. இதன்படி இந்த சலுகை இம்மாதம் 29ஆம் திகதி முதல் வழங்கப்படும் என்று பிரதியமைச்சர் ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார். இந்த சலுகையின் மூலம் இலங்கைக்கு பாரிய பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.tamilwin.com/show-RUmtyHTZSUetyC.html
-
- 2 replies
- 175 views
-
-
வலி. வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கீரிமலை நகுலேஸ்வரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள சுமார் 35 ஏக்கர் காணி மக்களின் மீள்குடியேற்றத்துக்கு சனிக்கிழமை (04) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வலி. வடக்கு பிரதேச செயலாளர் க.ஸ்ரீமோகனன் மற்;றும் வலி. வடக்கு பிரதேச சபையின் தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். கீரிமலை மாவிட்டபுரம் வீதியில் அமைந்துள்ள குறிப்பிட்ட காணிகள் கடற்படையினர் வசம் இருந்து வந்தது. சனிக்கிழமை (04) காலை கடற்படையினரால் குறிப்பிட்ட பிரதேசத்தில் மக்கள் மீளக் குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளதாக வலி. வடக்கு பிரதேச செயலாளர் க.ஸ்ரீமோகனன் மற்றும் வலி வடக்கு பிரதேச சபையின் தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உடனடியா…
-
- 1 reply
- 293 views
-
-
சிறிலங்காவின் முன்னாள் கூட்டுப்படைகளின் தளபதியும், பிரேசிலுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளவருமான, போர்க்குற்றவாளி ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கு, அமெரிக்கா நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனிப்பட்ட பயணமாக ஜூன் 30ஆம் நாள் அமெரிக்காவுக்குச் செல்வதற்கு, போர்க்குற்றவாளி ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவும் அவரது மனைவியும் கடந்த மே மாதம், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் விண்ணப்பித்திருந்தனர். போர்க்குற்றவாளி ஜெனரல் ஜெயசூரியவின் மனைவிக்கு, கடந்த மே மாதமே அமெரிக்கா செல்வதற்கான நுழைவிசைவு வழங்கப்பட்டு விட்டது. ஆனால், போர்க்குற்றவாளி ஜெனரல் ஜெயசூரியவின் கடவுச்சீட்டு இன்னமும், அமெரிக்கத் தூதரகத்தினால் மீள ஒப்படைக்கப்படவில்லை. இதுகுறித்து, கொழும்பிலுள்ள அமெரிக…
-
- 1 reply
- 324 views
-
-
மகிந்தவுக்கு முடியுமானால், அவர் தான் ஜனவரி எட்டு அன்று பெற்ற 58 இலட்சம் வாக்குகளில் 25 இலட்சத்தையாவது பெற்று காட்டட்டும். அவரை சுற்றி இன்று இருக்கும் அரசியல் கோமாளிகள், இனவாதிகள், மதவாதிகள், கூட்டுக்களவாணிகள், தமிழ்-முஸ்லிம் துரோகிகள் ஆகியோரை வெற்றி பெற செய்துக்காட்டட்டும். இந்த முறை மகிந்தவுக்கு கிடக்கப்போவது பிரியாவிடை இல்லை. அது அதிர்ச்சிவிடை. அதை தரப்போவது, தமிழ் பேசும் மக்கள் அல்ல. மகிந்தவுக்கு எதிர்வரும் தேர்தலில் அதிர்ச்சி தரப்போவது, இந்நாட்டு சிங்கள மக்கள் ஆகும் என தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். நாட்டின் அரசியல் நிலவரம் தொடர்பில் கட்சி தலைமையகத்தில் நேற்று மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் உரையாற்றிய மனோ கணே…
-
- 2 replies
- 264 views
-
-
காங்கேசன்துறை வீதியிலுள்ள மருந்தகமொன்றில் மதன மோதகம் என்னும் போதைப் பொருளை மாணவர்களுக்கு விற்பனை செய்த ஒருவரை வியாழக்கிழமை (02) கைது செய்ததாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். 5ஆம் வட்டாரம் மண்கும்பான் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய சந்தேகநபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, குறித்த கடைக்கு சென்ற பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்தனர். சந்தேகநபரிடமிருந்து 638 கிராம் நிறையுடைய மதனமோத உருண்டைகளை கைப்பற்றியதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - http://www.tamilmirror.lk/149653#sthash.h5npxgig.dpu கஞ்சா விற்றவர் கைது கொழும்புத்துறை பகுதியில் பொலிஸாருக்கு கஞ்சா விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவரை வி…
-
- 3 replies
- 716 views
-