ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143520 topics in this forum
-
புலம்பெயர் தமிழருடனான பேச்சுக்களை வெளியில் இருந்து கவனிக்கிறதாம் சிறிலங்கா இராணுவம் JUN 19, 2015 | 2:23by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் புலம்பெயர் தமிழர்களுடன் சிறிலங்கா அரசாங்கம் நடத்திய பேச்சுக்களை வெளியில் இருந்து கவனித்து வருவதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், கருத்து வெளியிட்ட சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர, “ வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர , புலம்பெயர்ந்தோரை சந்தித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களுடன் அரசாங்கம் நடத்திய பேச்சு சிறந்த நகர்வாகும். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளில் பல அமைப்புகள் செயற்பட்டு வருகின…
-
- 2 replies
- 637 views
-
-
யுத்தத்தில் உயிரிழந்த படையினரை நினைவு கூரும் நிகழ்வினில் ஒரே நேரத்தினில் இந்திய மற்றும் சீன அதிகாரிகளை தருவித்து விலாங்கு மீன் சாதனையை சாதித்துள்ளனர் இலங்கை இராணுவ அதிகாரிகள். புதிய ஆளுநர் பளிஹகக்கார ஏற்பாட்டினில் நேற்;று புதன்கிழமை பலாலி இராணுவத் தளத்தில் ஆளுநர் செயலகத்தின் அனுசரணையுடன் நடைபெற்றிருந்த நிகழ்விலேயே இச்சாதனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பலாலி படைத்தளதில் அமைந்துள்ள படையினரின் நினைவுத் தூபிக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையும் பலாலியினில் இடம்பெற்றிருந்தது. வடமாகாண ஆளுநர் பளிஹக்கார தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அரசாங்க அதிபர்கள், இந்தியத்துணைத்தூதர் நடராஜன் மற்றும் இந்திய உளவு கட்டமைப்பின் அதிகாரிகள், முன்னாள…
-
- 1 reply
- 826 views
-
-
அமைச்சர் றிசாத் தடுத்து வைத்திருந்த நிதியே பிரதமர் ரணிலுடன் நடத்தப்பட்ட பேச்சினையடுத்து விடுவிக்கப்பட்டுள்ளதாக புதிய விளக்கமளித்துள்ளார் தமிழரசுக்கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா. இன்று ஊடகவியலாளர்களினை யாழில் சந்தித்த அவர் முதலமைச்சரது பதில் கடிதம் பற்றி பிரஸ்தாபித்தார். தன்னால் குறித்த வேலை முன்மொழிவுகள் முன்னதாக சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாகவும் அப்போது அமைச்சராக இருந்த் றிசாத் பதியுதீன் அதனை தடுத்து வைத்திருந்ததாகவும் இந்நிதியே தற்போது பிரதமர் ரணிலுடன் நடத்தப்பட்ட பேச்சினையடுத்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பனை அபிவிருத்திச்சபையின் கட்டுப்பாடு அப்போது றிசாத் வசமேயிருந்தது.தொடர்புடைய அமைச்சிடம் முன்வைக்கப்பட்ட வேலை முன்மொழிவுகள் தடு…
-
- 2 replies
- 689 views
-
-
யாழினில்; தொடரும் குழு மோதல்கள் காரணமாக சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்று தீயிட்டுக் கொழுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் மல்லாகத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் மல்லாகம் - ஏழாலையில் இரு இளைஞர் குழுக்களிடையே நீண்டகாலமாக வாள்வெட்டு, மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் அண்மை நாட்களாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சம்பவங்களால் இரு குழுக்களும் அமைதி காத்து வந்தன. இந்நிலையில் நேற்றைய தினம் தங்கள் பகுதியின் ஊடாக சென்ற பகைமை இளைஞர் குழுவைச் சேர்ந்த இருவர் மோட்டார் சைக்கிளில் செல்வதைக் கண்ட அப்பகுதி இளைஞர் குழு அவர்களை வாள்கள், பொல்லுகள் என ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிள்களில் துரத்திச் சென்றது. தப்பி ஓடிய குழுவினர் ஒழுங்கை ஒன்றுக்க…
-
- 1 reply
- 501 views
-
-
பாடசாலை மாணவர்களை போதைப்பொருளில் இருந்து காப்பாற்றுவதற்கான விரிவான தேசிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். காலி ரிச்மண்ட் கல்லூரியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். மதுபாவனை மூலம் வடக்கிலிருந்தே அரசாங்கத்திற்கு அதிகப் பணம் கிடைப்பதாக இதன்போது தெரிவித்த ஜனாதிபதி, வித்தியாவின் கொலைச் சம்பவத்தின் பின்னர் இதுபற்றி பலரும் முக்கிய கருத்துக்களை முன்வைத்ததாகத் தெரிவித்தார். அத்துடன், திரைப்படங்களில் காண்பிக்கப்படும் காட்சிகள் மதுபாவனை விடயத்தில் செல்வாக்கு செலுத்துவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மனிதப் பண்புள்ள சமூகமொன்றை உருவாக்குவதற்கான பொறுப்பு தமக்கிருப்பதாகவும் கூறினார். http://ne…
-
- 2 replies
- 651 views
-
-
பச்சைச் சட்டையுடன் திரிந்த காலம் எங்களுக்குள் ஒரு மாற்றம். பச்சை வரி வரி உடுப்புக்கு என்ன மதிப்பு இருந்தது. வன்னியில் பச்சைக் காட்டில் பச்சைச் சட்டையுடன் திரிந்தோம். எம்மைப் பாதுகாத்தது பச்சை மரங்கள். பெண்கள் வெளிப்பட்ட அந்த நாள்கள் பொன்னானது. பெண் விடுதலை பெற்றுவிட்டதான ஓர் உணர்வு என்னில் ஓடிக்கொண்டே இருந்த காலம் அது. பஜிறோவில் ஏறிவரும் போது பெண்களுக்கு ஒரு சுதந்திரம் இருந்தது. என்னை விட கூடுதலாக மக்கள் என்னைப் பார்த்தார்கள். துப்பாக்கி ஏந்தி நாம் போராடும் போது மக்கள் எம்மை அன்பாக வரவேற்று வீடு வீடாக எமக்கு விருந்து கொடுத்தார்கள். தமது பிள்ளைகளைப் போலப் பார்த்தார்கள். மனதில் ஓர் துணிவு எமக்கு இருந்தது. வாழ்க்கைப் பயம் அற்றுப் போனது. எது வேண்டுமானாலும் நல்ல விடயங்கள…
-
- 64 replies
- 4k views
-
-
யாழ்.நெல்லியடி பகுதியில் அநாவசியமாகவீதிகளில் கூடி நின்று பாடசாலை மற்றும் தனியார் வகுப்புக்களுக்கு செல்லும் மாணவிகள், மற்றும் வீதியால் செல்லும் பெண்களுடன் சேஷ்டை புரிந்தவர்கள் வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தவர்கள் என 23 இளைஞர்களை புதன் கிழமை மாலை பொலிசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற பொலிசார் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன், இளைஞர்களின் பெற்றோர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அவர்கள் முன்னையில் இளைஞர்களை கடுமையாக எச்சரிக்கை செய்து விடுவித்தனர். அதன் போது காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியம் 2 க்கு பொறுப்பான பொறுப்பதிகாரி ஏ.எஸ்.பி,ஜவ்வர் பெற்றோருக்கும் இளைஞர்களுக்கும், அறிவுரைகளும் வழங்கி இருந்தார். அவர் பின…
-
- 4 replies
- 496 views
-
-
மஞ்சள் வெயிலாய் சிரித்தாய் , கொஞ்சும் குயிலாய் சிலிர்த்தாய் நெஞ்சில் புயலாய் அடித்தாய் மிஞ்சும் செயலை தடுத்தாய் . அடடா உன்னை பார்த்ததும் மனசெல்லாம் பறக்குதே அடியே ஒன்னும் புரியல என் அழகெல்லாம் மறக்குதே வள்ளுவன் சொன்னதை போல கண்களும் கண்களும் பார்க்க சொற்களில் சொற்களில் பேச அர்த்தமும் அர்த்தமும் ஏதோ .... உன் பேரில் என் பேரும் சேரத்தான் வேணும் தமிழ் மொழி கொஞ்ச கவிதைகள் மிஞ்ச ஆகாயம் தூளாகும் நீ பார்த்தால் என்காயம் இங்கு ஆறாதே நீ சிரித்தாலே என்ன மாயம் தனை செய்தாய் ஏ பெண்ணே கானலாய் மிதக்கிறேன் உன்னாலே உடைகிறேன் ஆலென்று இருக்கிறாய் வேராக துடிக்கிறேன் . வள்ளுவன் சொன்னதை போல கண்களும் கண்களும் பார்க்க சொற்களில் சொற்களில் பேச அர்த்தமும் அர்த்தமும் ஏதோ .... …
-
- 0 replies
- 509 views
-
-
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை வடக்கு, கிழக்கு மக்கள் விரும்பவில்லை – தேசிய அரசுக்கே ஆதரவு JUN 19, 2015 | 2:06by கார்வண்ணன்in செய்திகள் நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்காவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பெரும்பாலானோர் கருத்துத் தெரிவித்துள்ள அதேவேளை, வடக்கிலும் கிழக்கிலும் அதற்கு போதிய ஆதரவு அளிக்கப்படவில்லை. ட்ரான்ஸ்பரன்சி இன்ரநசனல் அமைப்பினால் இந்தக் கருத்துக்கணிப்பு, எல்லா மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்ட எல்லாத் தரப்பு மக்களிடமும் இருந்து சேகரிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், 49 வீதமான மக்கள் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். 26 வீதமான மக்கள் எல்லா …
-
- 0 replies
- 459 views
-
-
மகிந்தவுக்கு இடமில்லை என்பது பொய்யாம் – ஜோன் செனிவிரத்ன கூறுகிறார் JUN 19, 2015 | 1:49by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்கப்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக, வெளியான செய்திகளை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான ஜோன் செனிவிரத்ன மறுத்துள்ளார். மகிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்கப்படாது என்றும், தேசியப்பட்டியலில் இடமளிக்கப்படாது என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்து விட்டதாக, நேற்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார். இதுகுறித்த கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்ப…
-
- 0 replies
- 403 views
-
-
திருகோணமலையின் தென்னைமரவடி கிராமத்திலுள்ள காணிகளையும் வயல் நிலங்களையும் அயல் கிராமமான பதவி சிறீபுர மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் முயற்சியாக கிழக்கு மாகாண காணி நிர்வாக திணைக்களம் காணிக்கச்சேரிகளை நடத்தி பலாத்காரமாக தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை பகிர்ந்தளிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. தென்னைமரவடி கிராமத்தில் 1984 ஆம் ஆண்டுக்கு முன் தமிழ் மக்களே வாழ்ந்திருந்தனர்.வேறு எந்த இனத்தவரும் குடியிருந்ததில்லையென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். வன்முறை காரணமாக இம்மக்கள் இடம்பெயர்ந்தமையை பயன்படுத்தி பதவியா சிறீPபுர கிராம சிங்கள மக்கள் காணிகளையும் வயல்களையும் கபளீகரம் செய்துள்ளனர். மீண்டும் மீள்குடியேற்றப்பட்ட தென்னைமரவடி மக்கள் தமது காணிகளுக்கோ வயல…
-
- 2 replies
- 807 views
-
-
புலிகளின் தாக்குதலில் மயிரிழையில் தப்பியவரே சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதி JUN 16, 2015by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள, உலங்குவானூர்தி விமானியாக போர்க்களப் பகுதிகளில் பணியாற்றியவர் என்றும், விடுதலைப் புலிகளின் ஆர்.பி.ஜி தாக்குதலில் மயிரிழையில் உயிர்தப்பியவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதியாக நேற்று நியமிக்கப்பட்ட, எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள, 1980களில் இருந்தே, போர்க்களப் பகுதிகளில் உலங்குவானூர்தி விமானியாகப் பணியாற்றியிருந்தார். 1986ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 18ம் நாள், பிளையிங் ஒவ்விசராக இருந்த போது, புலத்சிங்கள செலுத்திய பெல் 412 உலங…
-
- 0 replies
- 378 views
-
-
இன்புளுவென்சா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை 24 பேர் பலி [ வியாழக்கிழமை, 18 யூன் 2015, 11:12.43 AM GMT ] நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் இன்புளுவென்சா எச்.1 என்1 வைரஸ் காரணமாக இதுவரை 24 பேர் பலியாகியுள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார். இவர்களில் 10 பேர் கர்ப்பிணி பெண்கள் எனவும் இது தாய், சேய் மரணம் எனவும் அவர் கூறியுள்ளார். காய்ச்சலுக்கான நோய் அறிகுறி தென்பட்டால், உடனடியாக மருத்துவர்களின் ஆலோசனையை பெறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சகல கர்ப்பிணி தாய்மாருக்கும் எச்.1என்1 எதிர்க்கும் வைரஸ் மருந்துகள் வழங்கப்படுகின்றனர். இதனை வைத்தியசாலையில் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 457 views
-
-
June 17, 2015 ஐ.நா மனித உரிமைச்சபை உப மாநாடு: சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தல் 0by tmdas5@hotmail.com • HRC சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துதாறு வலியுறுத்தும் உப மாநாடொன்று ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் செப்ரெம்பரில் சிறிலங்கா அறிக்கை ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் சமர்பிக்கப்படுமென ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசேன் அவர்கள் சபையில் தெரிவித்திருந்த நிலையில் இந்த உபமாநாடு இடம்பெற்றுள்ளது. சியரா லியோனில் நடந்த மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நாவினால் விசாரணைக்கு அமைக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்தின் முன்னாள் தலைவரும் பிரபல அனைத்துலக சட்டவாளருமான Geoffry …
-
- 0 replies
- 548 views
-
-
உலகின் மிக நலிந்த நாடுகளின் பட்டியலை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட அமைதிக்கான நிதியம் குழச வெளியிட்டுள்ளது. 178 நாடுகளிடையே நடத்தப்பட்ட அந்த ஆய்வில் 34 ஆவது இடத்தை பிடித்துள்ள இலங்கை அவதானத்துடன் இருக்க வேண்டிய நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக நலிவுற்ற நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் தென் சூடான் பட்டியலிடப்பட்டுள்ளது. இரண்டாம்,மூன்றாம், நான்காம் இடங்களை முறையே சோமாலியா, மத்திய ஆபிரிக்க குடியரசு, சூடான் ஆகிய நாடுகள் பெற்றுள்ளன. மிக உயர்ந்த நிலைபேண் தன்மை கொண்ட நாடாக பின்லாந்து தெரிவாகியுள்ளது. அடுத்து சுவீடன், நோர்வே, டென்மார்க், லக்ஸம்பேர்க, சுவிஸ்ஸர்லான்ட் பேர்னற 14 நாடுகள் நிலைத்திருக்கும் நாடுகளாக பட்டியலிடப்பட்டுள்ளன. வருடம் தோறும் இந்…
-
- 1 reply
- 566 views
-
-
கிளிநொச்சி மலையாளபுரம் அன்னை சாரதா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்திறப்பு விழா இன்று பாடசாலையின் அதிபர் கணேஸ்வரநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டடத்தை திறந்து வைத்து வடக்கு மாகாண முதலமைச்சர் சிறப்பு உரையாற்றினார். அவர் தனது உரையில் அதிபர் அவர்களே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களே, கௌரவ மாகாணசபை உறுப்பினர்களே, ஆசிரியர்களே, மாணவச் செல்வங்களே, சகோதர சகோதரிகளே, கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள அன்னை சாரதாதேவி வித்தியாலயத்திற்கான புதிய கட்டடம் ஒன்று உருவாக்கப்பட்டு இன்று அதனைத் திறந்து வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். இப்பாடசாலை மாணவர்கள் கிடுகினால் வேயப்பட்ட நீண்ட ஓலைக் கொட்டில்களில் கடந்த 3 ஆண்டுகளாக தமது கல்வி …
-
- 1 reply
- 545 views
-
-
சபாநாயகர் சமால் ராஜபக்ஸவை பிரதமராகக் கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கமொன்றை அமைக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண கோரியுள்ளார். பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னதாக நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய ஆட்சி மாற்றம் செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். சமால் ராஜபக்ஸவை பிரதமராக தற்காலிக அடிப்படையில் நியமிப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் எனவும் கட்சியை ஐக்கியப்படுத்தவும் இது உதவும் எனவும்அவர் தெரிவித்துள்ளார். நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் இதிலிருந்து நாட்டை காப்பாற்றுவதற்கும், அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கும் …
-
- 0 replies
- 300 views
-
-
மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள 3 உணவகங்களை மூட மன்னார் நீதிமன்றம் உத்தரவு- மன்னார் பஸார் பகுதியில் உள்ள பிரபலமான மூன்று உணவகங்களை மூடுமாறு இன்று வியாழக்கிழமை (18) மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் பஸார் பகுதியில் உள்ள நான்கு (4) வர்த்தக நிலைங்களில் சுகாதார சீர்கேடுகளுடன் உணவு விற்பனை செய்யப்படுவதாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்கனவே குறித்த உணவகங்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த வர்த்தக நிலையங்களில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மன்னார் நீதிமன்றம் ஏற்கனவே குறித்த நான்கு (4) வர்த்தக நிலைங்களுக்கும் கால அவகாசம் வழங்கி இருந்தது. இந்த நிலையில் குறித…
-
- 0 replies
- 337 views
-
-
அரசாங்கத்தினால் அண்மையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 20ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக எதிர்ப்பதாக சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் அறிவித்துள்ளன. தன்தோன்றித்தனமாக, அவசரமாக வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெறவேண்டும் எனவும் அந்தக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அவ்வாறு வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெறாவிட்டால் மக்களை வீதியில் இறக்கி போராடப்போவதாகவும் அறிவிக்கப்பட்டது. அத்துடன், இந்த அரசாங்கம் சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளை அழித்துவிட்டு பெரும்பான்மைக் கட்சிகளை மட்டும் நீடிக்கச் செய்யும் முயற்சியாகவே இது அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணிய…
-
- 0 replies
- 386 views
-
-
மகிந்த போட்டியிட முடியாது – மைத்திரி அறிவித்து விட்டதாக உறுதிப்படுத்தினார் ராஜித சேனாரத்ன JUN 18, 2015 | 10:28by கி.தவசீலன்in செய்திகள் நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, இடமளிக்கப்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்து விட்டதாக, அமைச்சரவை பேச்சாளரான, ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு தேசியப்பட்டியலும் இடம் வழங்கப்படாது என்று அதிபர் மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்து விட்டார். அதேவேளை, நாடா…
-
- 0 replies
- 578 views
-
-
சிறிலங்காவுக்கான இந்தியப் பிரதமர் மோடியின் சுற்றுப்பயணமானது ‘திருப்புமுனையாக’ உள்ள போதிலும் உறுதியாக எதையும் சாதிக்கவில்லை. சிறிலங்காவில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் வெற்று வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றன. இவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவ்வாறு புதுடெல்லியில் இருந்து வெளியாகும் the statesman நாளிதழில், சாம் ராஜப்பா எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. இன்னமும் சூழல் மாறவில்லை. தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள அரசலூர் அகதி முகாமிலேயே நந்தினி பிறந்தார். இவரது பெற்றோர்கள் சிறிலங்காத் தீவின் வடக்கு மாகாணத்தில் போர் மேகம் சூழப்பட்ட 1990 இல் அங்கிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்றனர். நந்தினி உயர்நிலைப் ப…
-
- 0 replies
- 354 views
-
-
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்செயல்களை கண்டித்தும் அதனை தடுக்கும் வகையிலும் காவல்துறை சைக்கிள் ரோந்து சேவை எனும் பெயரினில் ஆயுதம் தரித்த காவல்துறையினர் பகிரங்கமாக இன்று களம் இறக்கப்பட்டுள்ளனர். யுத்தம் ஓய்வுக்கு வந்திருந்த பின்னர் நிராயுதபாணியாகவே காவல்துறையினர் சேவையினில் ஈடுபடுத்தப்பட்டு வந்திருந்தனர்.அவர்கள் மீண்டும் தற்போதைய சூழலை காரணம் காட்டி ஆயுத மயப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த சேவையினூடாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்செயல்களை கட்டுப்படுத்தும் முகமாகவும்,போதைப் பொருட்களை மாணவர்கள் மத்தியில் விநியோகிப்பவர்களை மறைமுகமாக கண்டுபிடிக்கவும், சட்டவிரோத மதுபான விற்பனை போன்றவற்றுடன் முக்கியமாக வீதிகளில் செல்லும் பெண்களுக்கு இடையூறு மற்றும் தகாத வார்த்தை பிர…
-
- 0 replies
- 571 views
-
-
யாழ்ப்பாணத்தினில் படைக்குறைப்பு மற்றும் பொதுமக்களது காணிகள் விடுவிப்பென புதிய மைத்திரி அரசு மேற்கொண்டுவந்திருந்த பொயப்பிரச்சாரம் அம்பலமாகியுள்ளது.இலங்கை இராணுவ தலைமைகமே இதனை போட்டுடைத்துள்ளது. தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த விட்டுக் கொடுப்பும் கிடையாது எனத் தெரிவித்துள்ள இராணுவத் தலைமையகம்,யாழ்ப்பாணத்தில் இருந்த புறக்காவல் நிலைகள் மட்டும் மூடப்பட்டன என்று தெரிவித்துள்ளது. புதிய அரசு அமைந்த பின்னர் வடக்கில் 59 இராணுவ முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த தரப்பினர் சிங்கள் மக்கள் மத்தியில் பரப்புரை செய்து வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுக்கு இராணுவத் தலைமையகம் பதிலளித்துள்ளது. அது விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2009ஆம் …
-
- 0 replies
- 356 views
-
-
யாழில் போதைப்பொருள் வைத்திருந்த 4 பாடசாலை மாணவர்களை மடக்கி பிடித்தனர் சிறுவர் நன்நடத்தை அதிகாரிகள் யாழ்.கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் நால்வர் மாவா என்ற போதைப் பொருளை வைத்திருந்த குற்றசாட்டில் அவர்கள் சிறுவர் நன்நடத்தை அதிகாரிகளால் மடக்கி பிடிக்கப்பட்டனர். குறித்த சம்பவம் இன்று காலை கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, மாவா என்ற போதைப் பொருளை பாடசாலையில் வைத்திருந்த 4 மாணவர்கள் தொடர்பில் சிறுவர் நன்நடத்தை அதிகாரிகளுக்கு இரகசியமாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் போதைப் பொருளை பாடசாலைக்கு கொண்டு வந்த குற்றச்சாட்டில் அவர்களை மடக்கி ப…
-
- 0 replies
- 454 views
-
-
மாணவர்களே அவதானம்! விழிப்பாக இருக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது : யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் யாழ்.மாவட்டத்தில் ஏற்படும் சமூக சீரழிவுகள் தொடர்பாக மாணவர்களை விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தால் பாடசாலை மட்டத்தால் மாணவர்களை விழிப்பூட்டும் செயற்திட்டம் ஒன்று ஆரம்பமாகி செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று யாழ்.இந்து மகளிர் கல்லூரியில் குறித்த கருத்தரங்கு இடம்பெற்றது. குறித்த கருத்தரங்கிற்கு யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான வழிகாட்டல்களை வழங்கினார். மேலும் குறித்த மாணவர்களுக்கான வழிகாட்டல்கள் தொடர்பில் யாழ்.பொலிஸ் நி…
-
- 0 replies
- 518 views
-