Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு வாழ்த்துத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் புதன்கிழமை (06) சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'நல்லாட்சி அரசின் 100 நாள் வேலைத்திட்டம்' என தலைப்பிட்டு, வெள்ளைவான் கலாசாரம், கழிவு எண்ணெய் கலாசாரம், கசாப்புக்கடை அரசியல் கலாசாரம், இலஞ்ச ஊழல் கலாசாரம் ஆகியவற்றை நீக்கி, தமிழ் மக்களுக்கு அச்சமின்றி அடக்குமுறையின்றி, அடவாடித்தனமின்றி, கௌரவமாக, சுதந்திரமாக வாழ வழியமைத்த நல்லாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவித்து ஒட்டப்பட்டுள்ளது. சுவரொட்டியின் கீழ் வடபகுதி தமிழ் மக்கள் எனக்குறிப்பிட…

    • 1 reply
    • 992 views
  2. இலங்கையில் அடுத்து வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விடுத்த கோரிக்கையை மைத்திரிபால தரப்பினர் நிராகரித்துள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவுக்கும் இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே, மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பினரால் இந்தக் கோரிக்கை பிரதானமாக முன்வைக்கப்பட்டது. இந்த வேண்டுகோளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால தரப்பிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என, மஹிந்த ராஜபக்‌ஷவுடன் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் குமார வெல்கம செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அ…

    • 0 replies
    • 424 views
  3. தமிழ் மக்கள் சர்வதேச விசாரணை தவிர்ந்த வேறு எதனையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார்.பதிவு இணையத்திற்கு அவர் வழங்கிய செவ்வியினில் சர்வதேச விசாரணை வேண்டுமென்ற எமது கட்சியின் நிலைப்பாட்டினில் மாற்றமில்லை. ஆனால் சில தமிழ் தரப்புக்கள் சர்வதேச தரத்திலான உள்ளகவிசாரணையென்பதிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.ஆனால் அது மிகப்பெரிய ஏமாற்று வேலையாகும்.எந்தவகையினில் மக்கள் நம்பிக்கை கொண்டு உள்ளக விசாரணையினில் சாட்சியமளிப்பதெனவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக இலங்கையிலுள்ள எத்தரப்பும் தொடர்புபடாததாக விசாரணைகள் இடம்பெற்றால் மட்டுமே மக்கள் நம்பிக்கை கொள்வார்களெனவும் கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்தார். http://www.path…

    • 0 replies
    • 457 views
  4. யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களுக்கிடையே முறுகல்! - கையெழுத்தை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு. [Wednesday 2015-05-06 19:00] யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரிடம் பெறப்பட்ட கையொப்பத்தினை வைத்து மோசடி செய்துள்ளதாக அப் பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக பேரவையிடம் இன்று யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர். பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய பேரவை இன்று ஆரம்பிக்கப்படுகின்றது. இந்த பேரவைக்கு யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தினால், மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற…

  5. மஹிந்தவின் தலைமை பாதுகாப்பு அதிகாரியிடம் விசாரணை! [Wednesday 2015-05-06 18:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவு பிரதானியான கேணல் மஹேந்திர பெனாண்டோவிடம் இராணுவ விசேட விசாரணை பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குபற்றிய அங்குனுகொலபெலஸ்ஸ கூட்டத்தில் இராணுவ கோப்ரல் ஒருவர் துப்பாக்கியுடன் சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற இராணுவ கோப்ரல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவு உறுப்பினர் என்றும் அவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக அங்கு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டு…

  6. கோத்தபாயவுக்கு எதிராக ஜேவிபி முறைப்பாடு! - பெயரைக் கெடுக்கும் முயற்சி என்கிறார் கோத்தா. [Wednesday 2015-05-06 18:00] தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் மக்கள் விடுதலை முன்னணியினர் முறைப்பாடு செய்துள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். தன் மீதான குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்படுவது போல் தனது வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த 2013 ஆம் ஆண்டு அம்பாறையில் இடம்பெற்ற தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து, ஜே.வி.பியினர் ஊழல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை ப…

  7. வட மாகாணசபை உறுப்பினராக கந்தையா சிவனேசன்(பவன்) சத்தியப்பிரமாணம்: [Wednesday 2015-05-06 18:00] வட மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினராக நியமிக்கப்பட்ட புளொட் அமைப்பைச் சேர்ந்த கந்தையா சிவனேசன்(பவன்) அவர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்றுமுற்பகல் 10.35மணியளவில் வட மாகாணசபை பேரவையில் நடைபெற்றது. இதன்படி வட மாகாணசபை பேரவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் அவர்களின் முன்னிலையில் கந்தையா சிவனேசன் (பவன்) அவர்கள் வட மாகாணசபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இந்நிகழ்வில் புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், ராகவன், தவராஜா மாஸ்டர் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கலந்…

  8. இன்று பிற்பகல் மஹிந்த - மைத்திரி சந்திப்பு! [Wednesday 2015-05-06 08:00] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று பி.ப. 1.30 மணியளவில் நாடாளுமன்றத்திலுள்ள ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெறும். குறித்த சந்திப்பின் போது ஜனாதிபதி தரப்பிலிருந்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா, கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த மற்றும் எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி தரப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் குமார வெல்கம, நாடாளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன மற்றும் டளஸ் அழகப்ப…

  9. யாழ்.குடாநாட்டிற்கான விஜயமொன்றை மேற்கொண்டு சுவிஸ் தூதர் மற்றும் சிறப்பு பிரதிநிதிகள் குழுவொன்று வருகை தந்து திரும்பியுள்ளது. வடக்கு முதலமைச்சர் மற்றும் சிவில் சமூக அமைப்பு பிரதிநிதிகளை குழு சந்தித்துள்ளது.எனினும் சந்திப்புக்களினை தனிப்பட்ட இடங்களினில் இரகசியமாக குழுவினர் மேற்கொணடிருந்ததாக தெரியவருகின்றது.அத்துடன் வடமாகாணசபை உறுப்பினர்கள் சிலரையும் குழுவினர் சந்தித்து பேச்சுக்களினை நடத்தியுள்ளனர். குறிப்பாக புதிய அரசின் கீழான தமிழ் மக்கள் எதிர்பார்ப்புக்கள்,எதிர்கொண்ட பிரச்சினைகள் முடிவுக்கு வந்துள்ளதா,உயர்பாதுகாப்பு வலய மீள்குடியமர்வு ,காணாமல் போனோர் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பினில் கேட்டறிந்து கொண்டதாக சிவில் சமூக அமையப்பிரதிநிதியொருவர் கருத்து தெரிவித்தார். http://w…

  10. மட்டக்களப்பு மாவட்டம் தேசிய நெல் உற்பத்தியில் 04ஆவது இடத்தைக் கொண்டுள்ளபோதிலும் மாவட்டத்தில் இம்முறை 62,000 ஏக்கர் சிறுபோகச்செய்கை பண்ணப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட கமத்தொழில் அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பொறியியலாளர் என். சிவலிங்கம் தெரிவித்தார். வருடத்துக்கான உணவுத் தேவைகளுக்காக வருடாந்தம் மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் ஜூன் மாதம் வரையான மூன்றரை மாத கால நெல் பயிர்ச்செய்கை செய்வதில் மட்டக்களப்பு மாவட்டம் முன்னின்று வருகின்றது. சிறிய நீர்ப்பானக் குளங்களான கல்லடி வட்டை, தாந்தாமலை, நல்ல தண்ணி ஓடை ஆகிய குளங்களிலிருந்து மட்டும் சுமார் 10,000 ஏக்கருக்கு நீர் பாய்ச்சப்படுவதாக உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். தற்பொது நெல் வயல்களில் நீர் பாய்ச்சு…

    • 6 replies
    • 596 views
  11. சிரச தொலைக்காட்சியில் சடன என்ற பெயரில் மிகவும் பிரபலமான அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்று நடைபெறுவது வழக்கம். கடந்த வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் இலங்கையில் பிரதிநீதியமைச்சர் சுஜீவ சேரசிங்க கலந்து கொண்டவர். (சுமந்திரனும் வந்திருந்தவர்) அவர் தன்ரை பேச்சிலை நான் இப்ப தான் ஜோன் கெரியுடனான சந்திப்பிலை கலந்து கொண்டு விட்டு வாறன். அவர் இனிமேல் இலங்கையின்ரை விவகாரங்களிலை அமெரிக்க தலையிடாது என எங்களுக்கு உறுதியாச் சொன்னவர். இது எங்களுக்குக் கிடைச்ச பெரிய வெற்றி எண்டு சந்தோசமாச் சொன்னவர். இதைப்பற்றி சுமந்திரன் ஐயா மூச்ச விட இல்லை. இதுக்குள்ளை தங்கடை பேச்சும் வெற்றி எண்டு சம்பந்தன்ரை ஆக்கள் சொல்லுகினம். இலங்கையின்ரை எந்த விவகாரத்திலையும் தலையிட மாட்டம் எண்ட…

    • 7 replies
    • 1.1k views
  12. சிங்கள வேட்பாளர் ஒருவரை அச்சுறுத்தியதாக தெரிவித்து, பிரித்தானிய சுதந்திர கட்சியின் வேட்பாளர் ரொபர்ட் ப்ளேஸ் நீக்கப்பட்டுள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளரான ரணில் ஜெயவர்தனவை சுட்டுக் கொல்வதாக அவர் பத்திரிகையாளர்களிடம் எச்சரித்திருந்தார். அவரை தாம் வெறுப்பதாகவும் கூறி இருந்தார். இதனை அடுத்தே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக, சுதந்திர கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/news/39828/57//d,article_full.aspx

  13. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆகிய இருவரும் சந்தித்து நடத்தும் பேச்சுவார்த்தையை, ரணிலை விரட்டியடிக்கும் ஒரு முயற்சி என்று ஸ்ரீல.சு.க. பேச்சாளர் டிலான் பெரேரா சொல்லியுள்ளார். இந்த சந்திப்பின் நோக்கம் இதுவென்றால் இதற்கு நாம் ஒருபோதும் உடன்பட முடியாது. மஹிந்தவின் காலம் முடிந்து விட்டது. அவர் இனி ஓய்வுபெற்று வீடு போக வேண்டும். மஹிந்த இல்லாத ஸ்ரீல.சு.க.வுடன் இணைந்து செயற்பட நாம் தயார். ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷ உள்வாங்கப்படும் எந்த ஒரு ஏற்பாட்டுக்கும் இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்கள் உடன்படமாட்டார்கள். எனவே இந்தப் பேச்சுவார்த்தையின் நோக்கம் ஒருமுறை பிரதமராகவும், இரு முறை ஜனாதிபதியாகவும் பதவி வகித்த மஹிந்த ராஜபக்‌ஷவை வீட்டுக்கு அனுப்பும் ப…

    • 0 replies
    • 438 views
  14. 'சமஸ்டி தீர்வை முன்வைக்க அமெரிக்கா அழுத்தம் கொடுத்திருக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பை இதன்மூலம் கூட்டமைப்பு தவறவிட்டுள்ளது' இலங்கையின் புதிய அரசாங்கத்தை எந்த அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நம்புகின்றது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்? அண்மையில் இலங்கை வந்த அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் ஹெரியுடனான சந்திப்பின்போது இனப்பிரச்சினையை தீர்க்க உகந்த சூழல் உருவாகியுள்ளதாக ஜோன் ஹெரி கூட்டமைப்புக்குத் தெரிவித்தார். அத்துடன் அவ்வாறு இனப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையை கூட்டமைப்பும் ஜோன் ஹெரிக்கு தெரிவித்துள்ள விடயம் தொடர்பிலேயே கஜேந்திரகுமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தி…

    • 2 replies
    • 654 views
  15. ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் வீதியில் தரையிறங்கியது! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக சென்ற குழுவினரும் பயணித்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர்கள் இரண்டு, வீதியில் தரையிறக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக சென்ற குழுவினரையும் ஏற்றிக்கொண்டு இரண்டு ஹெலிகொப்டர்கள் அம்பாந்தோட்டை சூரியவௌவுக்கு இன்று செவ்வாய்க்கிழமை சென்றன. கொத்தலாவல, பாதுகாப்பு பல்கலைக்கழக தெற்கு வளாகத்தை திறந்து வைப்பதற்காகவே ஜனாதிபதி அங்கு சென்றிருந்தார். அங்கு பெய்த கடும் மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாகவே, அந்த இரு ஹெலிகொப்டர்களும் பல்கலைக்…

  16. கொழும்பில் அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர்! - சுவாமிநாதனுடன் சந்திப்பு. [Wednesday 2015-05-06 08:00] இலங்கைக்கு வந்திருந்த அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பீட்டர் டட்டன் மற்றும் அவரின் பிரதிநிதி ஆகியோர், மீள்குடியேற்ற அமைச்சர் எடி எம் சுவாமிநாதனை சந்தித்துள்ளனர்.இந்த சந்திப்பின் போது இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு இடம்பெறும் ஆட்கடத்தல் மற்றும் போருக்கு பின்னர் மீள்குடியேற்ற விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. எனினும் இதன்போது மனித கடத்தல் விடயமே முக்கியமாக ஆராயப்பட்டதாக அமைச்சர் சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=131563&category=TamilNews&language=tamil

  17. மகிந்த- மைத்திரி சந்திப்பால் ஐதேகவுக்கு பாதிப்பு நிகழாது! - லக்ஸ்மன் கிரியெல்ல [Wednesday 2015-05-06 08:00] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பானது கட்சியின் வாக்காளர் அடிப்படையில் மாற்றங்களை ஏற்படுத்தாது. ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் பலம் அண்மையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தல் வெளிப்படுத்தப்பட்டது. எந்தவொரு சக்தியினாலும் கட்சியின் மக்கள் பலத்தை சீர்குலைக்க முடியாது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு அறுதிப்பெரு…

  18. இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கவில்லை! - ஜனாதிபதி மைத்திரி [Wednesday 2015-05-06 08:00] அமெரிக்காவிடம் இருந்து இலங்கை எவ்வித அழுத்தங்களையும் எதிர்கொள்ளவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இலங்கை வந்திருந்த அமரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை பொறுத்தவரையில் இலங்கையில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் நிலைநாட்டுவதே நோக்கமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதனை அவர் தம்முடனான சந்திப்பின் போது தெளிவாக வெளிப்படுத்தியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இலங்கையுடனான அமெரிக்காவின் உறவு குறித்து அவர் எவ்வித சந்தேகத்தையும் வெளிப்படுத்தவில்லை என்றும் ஜ…

  19. மைத்திரியின் கூட்டத்துக்கு இராணுவ கோப்ரலை தானே அனுப்பினராம்! - என்கிறார் மகிந்த [Wednesday 2015-05-06 08:00] அரசியல் மற்றும் தனிப்பட்ட ஒப்பந்தங்களுக்கு இராணுவ வீரர்களை தொடர்புபடுத்தக் கூடாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட கூட்டத்தில் துப்பாக்கியுடன் வந்ததாக இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள விடயம் குறித்து விடுத்துள்ள அறிக்கையில் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார். கைதாகி சிறையில் வைக்கப்பட்டுள்ள இராணுவ கொப்ரால் சேனக குமாரகே தனது பாதுகாப்பு பிரிவு உறுப்பினர் என முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார். தன்னுடைய கோரிக்கையின்படியே அவர் நாமல் ராஜபக்ஷவுடன் ஹம்பாந்தோட்டை கூட…

  20. விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரை வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரியின் மகள் விபூசிகாவை மீண்டும் சிறுவர் இல்லத்தில் தங்கியிருப்பதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் புதன்கிழமை (06) அனுமதியளித்தார். பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் கோபி என்று அழைக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்தவருக்கு புகலிடம் கொடுத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டிருந்த ஜெயக்குமாரி ஒரு வருடத்துக்கு பின்னர் கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதி பிணையில் வ…

  21. வசாவிளான் மத்திய கல்லூரிக்கு அருகில் இருக்கும் பலாலி இராணுவமுகாமின் நுழைவு வாயிலுக்கு முன்பாக வயாவிளான் மக்கள் கற்பூரமேற்றி வைரவக் கடவுளை வழிபட்டனர். வசாவிளான் பலாலி இராணுவக்குடியிருப்பு என்று பொறிக்கப்பட்ட வளைவில் இருந்து உள்நோக்கி சுமார் 200 மீற்றர் தூரத்தினுள் வசாவிளான் ஞானவைரவர் ஆலயம் உள்ளது. பெரிய வைரவர் ஆலயங்களில் ஒன்று என்ற பெருமையைப் பெற்ற இந்த ஆலயத்தில் மே மாதத்தில் வைரவர் மடை பெரிய அளவில் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் வயாவிளானை இராணுவம் கையகப்படுத்திய பின்னர் இந்த ஆலயத்துக்கு மக்களால் சென்றுவர முடியவில்லை. புதிய ஜனாதிபதி பதிவியேற்ற பின்னர் கொண்டுவரப்பட்ட நூறு நாள் வேலைத்திட்டத்திலாவது வயாவிளான் ஆலயப்பகுதி விடுவிக்கப்படும்…

  22. அமெரிக்காவிடம் கூட்டமைப்பு தஞ்சம் புகுவது தவறாம்! அரசியல் நாகரிகம் குறித்து பேசுகிறார் வாசுதேவ! [Tuesday 2015-05-05 20:00] தமிழர் பிரச்சினைக்கு இலங்கைக்குள்ளே தீர்வைக் காண வேண்டுமே தவிர அமெரிக்காவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தஞ்சம் புகுவது அரசியல் நாகரிகம் அல்ல முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அமெரிக்காவுக்கும் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் எதிரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்து அமெரிக்காவின் கைப்பொம்மையான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஐ.தே. கட்சி ஆட்சி நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட அமெரிக்க ஆட்சி இலங்கையில் எவ்வாறு செயற்பாடுகளை முன்னெடுக்கின்றதென்பதை ஆராயவும் அதற்கான உதவிகள…

    • 6 replies
    • 592 views
  23. புதிய கட்சியை உருவாக்குகிறது பொது பல சேனா? தேர்தல் ஆணையாளருடன் இன்று பேச்சு புதிய அரசியல் கட்சி ஒன்றை பதிவு செய்வது தொடர்பில் பொது பலசேனா அமைப்பிற்கும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய விற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்று புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இன்று காலை 10 மணியளவில் இச்சந்திப்பை நடத்த பொதுபலசேனா அமைப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படும்பட்சத்தில் அடுத்த தேர்தலில் பொது பல சேனா போட்டியிடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுக் காலை பொதுபலசேனாவின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே இச்செய்தியை வெளியிட்டுள்ளார். “கட்சி ஒன்றை பதிவு செ…

    • 0 replies
    • 322 views
  24. நடராஜா குருபரன்.. மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களே, பிரதம மந்திரி றனில் விக்கிரமசிங்க அவர்களே, நல்லிணக்க அரசாங்கத்தினரே! ”மாற்றங்கள்” நிகழ்ந்து 100 நாட்களின் பின் இப்படி ஒருகடிதத்தை உங்களுக்கு எழுத வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மக்களிடமிருந்து உங்களுக்கு ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வரும்கடிதங்களை நீங்களோ உங்களது உதவியாளர்களோ படித்து பார்ப்பீர்களோ தெரியாது? தமிழில் யாராவது கடிதம் உங்களுக்கு எழுதுவார்களோ தெரியாது அவ்வாறு எழுதினாலும் அதை வாசிப்பீர்கள் என்ற நம்பிக்கையும் இல்லை. ஆதலினால் இக்கடிதத்தை ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழி பெயர்த்து வெளியிடுகிறேன். இலங்கையில் ராஜபக்ஸ குடும்ப ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என பலர் பல காரணங்களுக…

  25. "பொலிசாருக்கு அறிவித்த போதிலும் எந்த பயனும் இல்லை" யாழ்.பாடசாலைகளுக்கு அருகில் போதை பொருள் விற்பனையாளர்களின் நடமாட்டம் சுதந்திரமாக காணப்படுகின்றது. அது தொடர்பில் பொலிசாருக்கு அறிவித்த போதிலும் எந்த பயனும் இல்லை என வடமாகாண சிரேஸ்ட பிரதிபொலிஸ் மா அதிபரிடம் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திருமதி சுகுணவதி தெய்வேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை அதிகரித்து காணப்படுகின்றது. பாடசாலை ஆரம்பமாகும் நேரத்திலும் முடிவடையும் நேரத்திலும் பாடசாலை சூழலில் சுதந்திர…

    • 0 replies
    • 357 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.