ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
ஹம்பாந்தோட்டையிலிருந்து; குடியேறுபவர்களால் வவுனியாவில் வாழும் மக்களுக்கு காணிகள் இல்லாமல் போவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். காணி உறுதி கோரி வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் பாரதிபுரம், விக்ஸ்காடு மக்கள் வியாழக்கிழமை (30); நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். வவுனியா, பாரதிபுரம் விக்ஸ்காட்டுப் பகுதியில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த காணிகளற்ற மக்கள், கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக குடியிருக்கின்றார்கள். அவர்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் இன்னும் வழங்கப்படவில்லை. மீள்குடியேற்றத்துக்கான எந்தவித உதவிகளும் கிடைக்காது மிகவும் வறுமை நிலையில் தமது பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் வவுனி…
-
- 0 replies
- 442 views
-
-
கடந்த அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் சட்டவிரோதமாக சேர்த்த அரச சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு ஜனாதிபதியின் விசேட படையணியொன்று நேற்று (30) ஸ்தாபிக்கப்பட்டது. 13 பேரைக் கொண்ட இந்தப் படையணியில் இடம்பெற்றுள்ளவர்களுக்கான நியமனம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவில் வழங்கப்பட்டது. கடந்த ஆட்சிக் காலத்தில் தனிநபர்கள் கொள்ளையிட்டு வைத்துள்ள அரச சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கு விசேட படையணியொன்றை ஸ்தாபிக்க அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் தாக்கல் செய்த பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamil.srilankamirror.com/news/item/2441-2015-05-01-06-48-27
-
- 0 replies
- 354 views
-
-
உதயசிறி விடுதலையானார் சிகிரியா சுவரோவிய சுவரில் எழுதினார் என்ற குற்றச் சாட்டின் பேரில் சிறைப்பட்டிருக்கும் சித்தாண்டி யுவதி சின்னத்தம்பி உதயசிறி இன்று வியாழக்கிழமை காலை எட்டு மணிக்கு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் உதயசிறிக்கு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியன்றே ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். எனினும், உதயசிறியை உடனடியாக விடுதலை செய்வதற்கு அவர் சார்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று புதன்கிழமை வரை அவரது விடுதலைக்கு தடையாக இருந்து வந்தது. இந்நிலையில் உதயசிறி, சார்பில் வழக்குத் தொடர்ந்த நல்லாட்சிக்கான மனித உரிமைகள் இயக்கமும், மனித உரிமைகள் …
-
- 17 replies
- 1.4k views
-
-
மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும். 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழி லாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி ந…
-
- 0 replies
- 455 views
-
-
சம்பூரில் பொது மக்களுக்கு சொந்தமான 800 ஏக்கர் காணியை முதலீட்டு சபைக்கு வழங்கி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த காணிப்பரப்பு முதலீட்டு சபைக்கு வழங்கப்பட்டுள்ளதால், குடியேற்றத்தை மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்வதற்கான ஆவணம் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் வாரம் இந்த வர்த்தமானியை ஜனாதிபதி ரத்து செய்வார் என்றும், அதன் பின்னர் குடியேற்றம் இடம்பெறும் என்றும் தெரவிக்கப்பட்டுள்ளது.http://www.pathivu.com/news/39700/57//d,a…
-
- 0 replies
- 250 views
-
-
வலிகாமத்தில் மீள்குடியேற ஆரம்பிக்கின்ற மக்களுக்கான உதவிகளை வழங்க, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு தடை ஏற்படுபத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீள்குடியேற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள, ஜனாதிபதி செயலணி இதற்கு தடையாக இருக்கிறது. அங்கு பணியாற்றி வரும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. அங்குள்ள மக்களுக்கு குறித்த நிறுவனங்கள் உதவிகளை வழங்க வேண்டுமாக இருந்தால், ஜனாதிபதி செயலணியிடம் அனுமதி கோர வேண்டும் என்று அரசாங்க அதிபரினால் வலியுறுத்தப்படுகிறது. எனினும் ஜனாதிபதி ஆணைக்குழு இதற்கு அனுமதி வழங்க மறுக்கிறது. இராணுவம் மற்றும் அமைச்சிக்களின் செயலாளர்களை உள்ளடக்கியதாக இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http:/…
-
- 0 replies
- 280 views
-
-
சர்வதேச யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு சிறிலங்காவை ஒத்துழைக்க செய்ய வேண்டும் என்று சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்காவின் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. அதன் 2015ம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கம் மத சுதந்திரத்தை பாதுகாக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கன. ஆனால் கடந்த காலத்தில் சிறுபான்மை மதத்தவர்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டனர். இந்த சம்பவங்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் சிறிலங்காவின் யுத்தக்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு சிறிலங்காவை ஒத்துழைக்க செய்ய அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/n…
-
- 0 replies
- 240 views
-
-
வரலாற்றில் இடம்பிடித்தவர் மைத்திரி! - சுமந்திரன் பாராட்டு [Wednesday 2015-04-29 08:00] நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய இணங்கிய முதல் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன வரலாற்றில் இடம்பிடித்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் 19ம் திருத்தச் சட்டம் குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 18ம் திருத்தச் சட்டத்தின் முதல் பேச்சாளராக உரையாற்றிய நான், ஜனநாயகத்தின் முடிவு இதுவெனக் குறிப்பிட்டேன்.இன்று 18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய விவாதம் நடத்தப்படுகின்றது அதில் பங்கேற்கக் கிட்டியமை மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.ஜனாதிபதி பதவியை ஏற்றுக் கொண்ட …
-
- 7 replies
- 664 views
-
-
விசாரணைக் குழுவிடம் பேசிய சிவில் சமூகப் பிரதிநிதிகள் இலங்கையில் காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு, முழுமையான விசாரணைகளை மட்டுமே நடத்தி அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று, ஜனாதிபதி ஆணைக்குழுவினரை வியாழனன்று கொழும்பில் சந்தித்துப் பேசிய வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரியிருக்கின்றனர். கொழும்பில் உள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு, காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கான அமைப்பு உட்பட பல்வேறு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு அந்த ஆணைக்குழு பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தத்தக்க வகையில் செ…
-
- 0 replies
- 441 views
-
-
கொழும்பிலிருந்து எமது விசேட செய்தியாளர்கள் அருணன் நிமலேந்திரா மற்றும் அம்ரித் பெர்னாண்டோ:- இந்தத் தலையங்கத்தைப் பார்த்ததும் உங்கள் நினைவுகள் 2009 இற்குச் சென்றுவிடும். இலங்கையில் மக்களுக்காகக் குரல்கொடுத்த பத்திரிகையாளர்கள் பலர் கொல்லப்பட்டார்கள்; பலர் காணாமற் போகச் செய்யப்பட்டார்கள். மகிந்த இராஜபக்சவும் அவரது சகோதரர்களும் தமிழர்களை மட்டுமல்ல அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள சிங்களவர்களையும் அழிப்பார்கள் என்று எழுதிய லசந்த விக்கிரமதுங்க 2009 சனவரி 8 இலே கொல்லப்படுகிறார். விடுதலைப் புலிகளின் ஆளுகைக்குள் இருந்த வன்னிப் பெருநிலத்தின் மீது மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் இந்த நூற்றாண்டின் இரகசியக் கொலைக்களங்களை விட்டுச் சென்ற மக்களுக்கெதிரான மிகவும் வெட்கக்கேடான …
-
- 0 replies
- 600 views
-
-
இலங்கைத் தீவில் தமிழ், சிங்கள மக்களுக்கிடையே காணப்படும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண சர்வதேச சமூகத்தையும், ஐக்கிய நாடுகள் சபையையும் அழைக்கவேண்டும் எனக் கோரும் சிவாஜிலிங்கத்தின் பிரேரணை முதலமைச்சர் விக்னேஸ்வரனின் வேண்டுகோளுக்கமைய ஒத்திவக்கப்பட்டுள்ளது. பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் - மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் முன்மொழிந்திருக்கும் பிரேரணையில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. அதற்கமை இந்த பிரேரணை அதற்குரிய காலத்தில் வருவது மிக நல்லது. மேலும் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் ஐ.நா அறிக்கை வெளியாகவுள்ளது. அது வெளியானதும் அதன் ஊடாக இங்கே எவ்வாறான குற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பது தொடர்பாக அறிந்து கொள்ளலாம். அதற்குப் பின்னர் நாங்கள் வடமா…
-
- 0 replies
- 281 views
-
-
மூதூர் கிழக்கு சம்பூர் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள அனல் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மூதூரில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் வியாழக்கிழமை (30) மூதூர் கிழக்கு நாவலடி சந்தியில் எதிர்ப்பு ஆட்பாட்டத்தில் ஈடுப்படனர். இதற்கான ஏற்பாடுகளை மூதூர் பீஸ்ஹோம் மற்றும் கிறீன் றிங்கோ ஆகிய அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து முன்னெடுத்தன. மூதூர் கிழக்கு பிரதேசம் மிகவும் இயற்கை வளம் நிறைந்த பிரதேசமாகும். இங்கு அதிகமானோர் விவசாயத்தையும் மீன் பிடியையுமே நம்பி தமது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கொண்டு செல்கின்றனர். அப்படி இருக்கையில் மூதூர் கிழக்கு பிரதேசத்தில் அனல் மின்சார நிலையம் அமைக்கப்படுமாக இருந்தால், தமது இயற்கை வளங்களும் தொழிலும் பாதிக்கப்படும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர்…
-
- 0 replies
- 362 views
-
-
கோட்டபாய தேர்தல்களில் போட்டியிட முடியாது அண்மையில் நிறைவேற்றப்பட்ட 19 அவது சீர்திருத்த சட்டத்தின்படி கோட்டபாய ராஜபக்ச, இலங்கையில் நடக்கும் தேர்தல்களில் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்திருக்கிறார்கள். சிங்கள கடும்போக்குவாதிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் 19 ஆவது சீர்திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மேலத்தில சரத்துக்களின் பிரகாரம், இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள் இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிட முடியாது என்றுள்ளது. முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதர…
-
- 2 replies
- 688 views
-
-
வடக்கில் காணாமற்போனோர் பிரச்சினைக்கு 60 வீதம் புலிகளே பொறுப்பு! - என்கிறார் ஆணைக்குழுத் தலைவர் [Tuesday 2015-04-28 08:00] வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற யுத்த காலத்தின் போது காணாமல் போனோரில் 60 சதவீமானவர்கள், புலிகள் இயக்கத்தினரின் நடவடிக்கைகள் காரணமாகவே காணாமல் போயுள்ளனர். அதனால், காணாமல் போனோர் விவகாரத்தில் 60 சதவீதப் பொறுப்பை புலிகளே ஏற்க வேண்டும் என காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்துள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'காணாமல் போனோர் விவகாரத்தின் 30 சத…
-
- 8 replies
- 723 views
-
-
19ம் திருத்தச் சட்டத்தின் கீழ் இரட்டை குடியுரிமை பெற்றவர்களுக்கு வாக்களிக்க அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். முன்னைய அரசியல் அமைப்பில் இரட்டை குடியுரிமை பெற்றவர்களுக்கு வாக்களிக்க விண்ணப்பிக்க முடியாதிருந்தது. எனினும் இது தொடர்பான சரத்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதன்படி எதிர்வரும் காலத்தில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.http://www.pathivu.com/news/39645/57//d,article_full.aspx
-
- 2 replies
- 609 views
-
-
இயக்குநர் ஆர்.சி.சக்திக்கும் கமலுக்கும் இடையிலான நட்பு மிகவும் ஆழமானது, அழுத்தமானது. தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்றான 'உணர்ச்சிகள்', கமலுக்கும் கதாநாயகனாக முதல்படம், சக்திக்கும் இயக்குநராக முதல்படம். சென்ற ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடந்த சக்தி சாரின் பவளவிழாவில் பேசிய கமலின் உரை, அரிதாரத்தை அள்ளி அப்பிக்கொள்ளாத அரிய உரை. "ஒரு அண்ணன் எனக்கு நண்பனாக வாய்த்ததும், ஒரு நண்பன் எனக்கு அண்ணனாக வாய்த்ததும் எனக்குக் கிடைத்திருக்கும் பெரும் பேறு' என்று கமல் குறிப்பிட்டபோது, விழா மேடையில் அண்ணன் சாருஹாசனும் இருந்தார், நண்பன் சக்தியும் இருந்தார். கமல் அப்படிப் பேசியபோது, சக்தி சார் முகத்தில் ஒரு மெலிதான புன்னகையை மட்டுமே பார்க்க முடிந்தது. சக்தி சாரின் நண்…
-
- 4 replies
- 1k views
-
-
ஜோன் கெரியின் பாதுகாப்புக்காக 40 மோப்பநாய்கள், 200 அமெரிக்கப் படையினர் இலங்கை வருகை! [Wednesday 2015-04-29 08:00] இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரிக்கு இலங்கையில் அதிகளவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 2ம் திகதி ஜோன் கெரி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அமெரிக்க நாட்டு ஜனாதிபதிக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விடவும், அதிகளவான பாதுகாப்பு ஜோன் கெரிக்கு வழங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜோன் கெரியின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் 200 அமெரிக்கப் படையினரும், வெடிபொருட்களை இனம் காணும் 40 பயிற்றப்பட்ட மோப்ப நாய்களும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜோன் கெரியின் இலங்கை விஜயம் தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுப…
-
- 3 replies
- 496 views
-
-
நிரந்தர அரசியல் தீர்வுக்கான எமது பயணம் தொடரும்! - இரா. சம்பந்தன் [Thursday 2015-04-30 08:00] 19ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சாதாரண மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மட்டுமல்லாமல், ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும். அவரின் முன்னேற்றகரமான பாதைக்கு இது நல்ல உதாரணமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலின்போது மக்களிடம் இருந்து வழங்கப்பட்ட ஆணையை ஜனாதிபதி மைத்திரிபால நிறைவேற்றியுள்ளார். அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றியே தீருவேன் என்று ஜனாதிபதி…
-
- 1 reply
- 353 views
-
-
போலிக் கடவுச்சீட்டு தயாரித்து விநியோகித்த இலங்கையர்கள் நால்வர் கைது போலி கடவுச்சீட்டு தயாரித்து விநியோகித்த குற்றச்சாட்டில் 4 இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக கியூ பிரிவு பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இடம்பெற்ற போர் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு (குறிப்பாக தமிழகம்) சென்ற இலங்கை அகதிகள், அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக கனடா பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு இவர்கள் செல்வதாகவும் இவர்களுக்கான சட்டவிரோத கடவுச்சீட்டுக்கள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதாகவும் பொலிஸாருக்கு கிட…
-
- 0 replies
- 561 views
-
-
உண்மைக்கு இடையூறு ஏற்படுத்தாதீர்கள் - ஊக்குவியுங்கள்! - ஜனாதிபதி மைத்திரியிடம் கெலம் மெக்ரே கோரிக்கை [Thursday 2015-04-30 08:00] இலங்கையின் இறுதிப்போர் தொடர்பில் தம்மால் தயாரிக்கப்பட்ட “நோ பயர் சோன்” விவரணப்படத்தில் விசேட சிங்கள பிரதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கியதாக தயாரிப்பாளர் கெலம் மெக்ரே தெரிவித்துள்ளார். லண்டனில் இலங்கையின் உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் ஏற்பாடு செய்த கூட்டம் ஒன்றின்போது இந்த பிரதி கையளிக்கப்பட்டதாக மெக்ரே குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் குறித்த பிரதியுடன் இலங்கை ஜனாதிபதிக்கு செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளார்.அதில், “உண்மை வெளியாகும் எனவே அதற்கு இடைஞ்சல் மேற்கொள்ள வேண்டாம். உண்மைக்காக ஊக்குவிப்பை வழங்கு…
-
- 0 replies
- 498 views
-
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் முறைப்பாடு செய்துள்ளனர். லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகக் காணிகள் உரிய விதி முறைகளுக்கு புறம்பான வகையில் தனியார் நிறுவனமொன்றுக்கு சந்திரிக்கா வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, பத்து ஏக்கர் காணி இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவின் அடிப்படையில், இந்த கொடுக்கல் வாங்கல்களில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ந…
-
- 0 replies
- 344 views
-
-
'கணவன், பிள்ளை, சகோதரன் மீண்டும் வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையுடன் காணாமல் போனவர்களின் சொந்தகள் நாள் தோறும் செத்து பிழைக்கின்றனர்' காணாமல் போனவர்களின் உறவினர்கள் வெலிக்கடை மற்றும் பூசா தடுப்பு முகாம்களில் தங்களது உறவினர்களை தேடுவதற்கு அனுமதியளிக்கப்பட உள்ளது. சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். இதன்படி, கடத்தப்பட்டவர்கள் காணாமல் போனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள பூசா மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலை தடுப்பு முகாம்களுக்கு உறவினர்கள் நேரில் சென்று விபரங்களை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது. காணாமல் போனவர்களின் உறவினர்ளுக்கும் அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டிருந்தது. காணாமல் போனவர…
-
- 0 replies
- 303 views
-
-
இலங்கையின் புதிய அரசின் செயற்பாடுகளைப் பாராட்டுவதற்காகவே அமெரிக்க ராஜாங்க செயலர் ஜோன் ஹெரி இலங்கை வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோன் ஹெரி வெளிநாடுகளுக்கான தனது ஒருவார கால விஜயத்தின் ஒரு பகுதியாக சனிக்கிழமை இலங்கைக்கு வரவுள்ளார். 2004 சுனாமி அனர்த்தத்தின்போது அப்போதைய அமெரிக்க இராஜாங்க செயலாளர் கொலின் பவல் விஜயம் மேற்கொண்ட பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜோன் ஹெரி இந்த விஜயத்தின்போது சந்திப்பார். முன்னைய அரசாங்கத்தின் ஏதேச்சாதிகார பாணியிலான நிர்வாகத்தை மாற்றியமைக்கப்போவதாக சிறிசேன உறுதியளித்துள்ளார். ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை குறைப்பது உட்பட …
-
- 0 replies
- 479 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனுக்கும் மாவட்ட நகர அபிவிருத்திக் குழுவுக்கும் இடையிலான சந்திப்பு, செவ்வாய்க்கிழமை(28) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. முல்லைத்தீவு பேரூந்து நிலையம் அமைத்தல், நகர போக்குவரத்தை விரிவுபடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. நகர அபிவிருத்திக் குழுவினரால் மாவட்டச் செயலரிடம் மனுவொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, முல்லைத்தீவு உருவான காலத்திலிருந்து இன்றுவரை அபிவிருத்திப் பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருகின்றன. மக்களுக்கு தேவையான நிலையில் அபிவிருத்தித் திட்டங்கள் அமையவில்லை. மக்களுக்குத் …
-
- 0 replies
- 333 views
-
-
எல்லை தாண்டி மீன்பிடிக்கக் கூடாது, தடை செய்யப்பட்ட படகுகள், வலைகளைப் பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட மத்திய அரசின் கட்டுப்பாட்டுகளால் தமிழக மீனவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், இத்தகைய கட்டுப்பாடுகளை மீறும்பட்சத்தில், தமிழக மீனவர்களை இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தால், அதற்கு மத்திய அரசு பொறுப்பேற்காது என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டமாக கூறியிருப்பதும் அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. டெல்லியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் 21 பேர் கொண்ட குழுவினர் புதன்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது, மீன்பிடிப்பு முறைய…
-
- 0 replies
- 296 views
-