ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
யாழ். மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவையொட்டி புதிய கட்டடம் யாழ் மத்திய கல்லூரியில் ஞாபகார்த்த மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று இடம்பெற்றது. கல்லூரியின் 200ஆவது ஆண்டின் நிறைவை முன்னிட்டு ஞாபகார்த்த மண்டபம் ஒன்று கல்லூரியின் வளாகத்தில் அமைக்கப்படவுள்ளது. நிகழ்வின் பிரதம விருந்தினராக தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் கலந்துகொண்டிருந்தார். நிகழ்வின் ஆசியுரையை சர்வமத குருமாரும் வழங்கியிருந்தனர். இக் கட்டிடம் தந்தை செல்வா அறக்கட்டளை நிதியத்தின் முழுமையான நிதிப்பங்களிப்புடன் அமையப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/News_More.php?id=853564003227113865
-
- 4 replies
- 494 views
-
-
யாழ்ப்பாணத்தில் கைதான ஊடகவியலாளர் பயங்கரவாதியாம்! - பிணை வழங்க பொலிஸ் எதிர்ப்பு. [Monday 2015-04-27 20:00] யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் உள்ள வீட்டில் வைத்து கடந்த 23ம் திகதி நள்ளிரவு கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேரும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் கைதான ஊடகவியலாளரை பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர் என பொலிஸார் கூறி பிணை வழங்க எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கடந்த 23ம் திகதி கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரில் நள்ளிரவு மேற்படி ஊடகவியலாளர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீட்டை உடைத்த பொலிஸார் குறித்த நால்வரையும் கைது செய்து மறுநாள் நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர். இ…
-
- 0 replies
- 421 views
-
-
ஜனநாயகத்தை மீண்டும் கட்டியெழுப்ப 19ற்கு கையுயர்த்துங்கள்; ஜனாதிபதி அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு கையுயர்த்துவதை விட வெறொரு கௌரவம் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்த சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மீண்டும் பாதுகாத்து வரலாற்றுமிக்க கௌரவம், கட்சி பேதங்கள் இன்றி சகல கட்சிகளுக்கும் கிடைப்பதற்கு இன்றிலிருந்து இன்னும் ஒன்றைநாட்கள் இருகின்றன. அந்த அதிர்ஷ்டத்தை உதயமாக்கி கொள்ளுமாறு நான் சகலரிடமும் கேட்டுக்கொள்கின்றேன். …
-
- 1 reply
- 271 views
-
-
கழகங்களுக்கிடையிலான போட்டியில் அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழகம் வெற்றி நல்லூர் பிரதேச செயலகத்தில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களிற்கிடையிலான விளையாட்டு விழா யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் இன்று இடம்பெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண நிதித்துறை பிரதி பிரதம செயலாளர் இ.பத்மநாதன் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் எஸ்.எம்.ராஜாரணசிங்க, கௌரவ விருந்தினராக யாழ் இந்துக் கல்லூரி அதிபர் தயானந்தராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இவ் விளையாட்டு விழாவின் போது மழை குறுக்கிட்டதன் காரணமாக நிகழ்வு மிக எளிமையாக நடைபெற்றது. போட்டியின் இறுதியில் அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது. …
-
- 0 replies
- 291 views
-
-
33 மாணவர்களுடன் நேபாளத்தில் இருந்து திரும்புகிறது சிறிலங்கா விமானப்படை விமானம் APR 27, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் நேபாளத்துக்கு உதவிப் பொருட்களையும், மீட்பு அணியொன்றையும் ஏற்றிச் சென்ற சிறிலங்கா விமானப்படையின் சி-130 விமானம், காத்மண்டுவில் இருந்து 33 மாணவர்களுடன் இன்று கட்டுநாயக்கவுக்குத் திரும்பும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலஅதிர்வினால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு உதவுவதற்காக, 44 சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும், 4 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் மற்றும் உதவிப் பொருட்களை ஏற்றிய சிறிலங்கா விமானப்படை விமானம், நேற்று அதிகாலை 5.30 மணியளவில், கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்டுச் சென்றது. நேற்று மதியம் அந்த விமானம் காத்…
-
- 3 replies
- 576 views
-
-
தமிழ் தலைவர்கள் கொழும்பில் இருக்கக்கூடாது. சி. வி. விக்கினேஸ்வரன் வடக்கு மக்களுடன் வாழ்ந்து வருவதன் காரணமாகவே எனக்குள் மாற்றம் ஏற்பட்டது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் பிராந்திய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இனப்படுகொலைத் தீர்மானத்தை வெளியேற்றியமை, இராணுவ வெளியேற்றம் குறித்து பிரதமரிடம் கேள்வி எழுப்பியமை, 13ஆம்திருத்தச்சட்டம் இனப் பிரச்சினைக்கு தீர்வல்ல எனச் சுட்டிக்காட்டியமை உள்ளிட்ட பல கருத்துக்களால் அண்மைய காலத்தில் இலங்கை அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சி.வி.விக்கினேஸ்வரன்மீது சர்வதேச அளவில் கவனம் ஏற்பட்டுள்ளது. வடக்கில் பெரும் வெற்றியீட்டி மகிந்த ராஜபக்சவ…
-
- 8 replies
- 745 views
-
-
அன்று மகிந்த ஆட்சியிலே 18 ஆம் திருத்தம் என்ற அரசியலமைப்பு சட்ட திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக கையை தூக்கிய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், இன்று 18 ஆம் திருத்தத்தை இல்லாது ஒழிக்கும் 19 ஆம் திருத்தத்துக்கு ஆதரவாக கையை உயர்த்தி ஆதரவளித்து பாவமன்னிப்பு பெற வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு விவேகானந்தா மண்டபத்தில் நடைபெற்ற தந்தை செல்வா நற்பணி மன்ற நிகழ்வில் தலைமையுரை ஆற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, நல்லாட்சி, நீதிமன்ற சுதந்திரம், ஊடக சுதந்திரம், பொலிஸ் காவல்துறை சுதந்திரம் ஆகிய பல விடயங்கள் நமது ஆட்சியின் மூலம் மீண்டும் இந்த நாட்டில் இப்போது கொண்டு வரப்பட்டுள்ளன. இது போதாது. இந்…
-
- 1 reply
- 1.8k views
-
-
அரசாங்கம் கடும் நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றது? அரசாங்கம் கடும் நிதி நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. திறைசேரி தகவல்களை ஆதாரம் காட்டி கொழும்பு ஞாயிறு ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. செலவு செய்வதற்கு அரசாங்கத்திடம் போதியளவு நிதி இல்லை எனவும் கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அரச ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவின் பின்னர் ஏனைய கொடுப்பனவுகளுக்கு போதியளவு நிதி ஒதுக்கீடுகள் கிடையாது. நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அரசாங்கம் கூடுதலாக கடன் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது. எனினும் உள்நாட்டு வெளிநாட்டு கடன்களைப் பெற்றுக்கொள்வதில் அரசாங்கம் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது. இதனால் அதிகளவான கட்…
-
- 9 replies
- 620 views
-
-
பெரும்பான்மையினங்கள் மற்றையவர்களை எதிரிகள் என்றே பிரச்சாரம் செய்தனர்: சுமந்திரன் எம்.பி [ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015, 07:27.13 AM GMT ] பெரும்பான்மை இனங்கள் தங்களது அரசியல் பலத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மற்றையவர்கள் எதிரிகள் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். மற்றையவர்களை எதிரிகளாக சித்தரித்து பெரும்பான்மை பலத்தை தாங்கள் வைத்துக் கொள்கிற யுக்தியை கையாள்கிறதை பல நாடுகளிலும் காணக் கூடியதாக உள்ளது. இலங்கையிலும் இதுவே நடந்தது. இலங்கையில் சுதந்திரமடைந்த காலத்திலிருந்து வடக்கு கிழக்கு மக்கள் அனைத்திலும் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளார்கள். இதனாலும் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. உண்மையான ஐக்கியம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் வேற்றுமையை ஏற்றுக்கொண்டு, வேற்றுமையின் சிறப்பை வெ…
-
- 2 replies
- 642 views
-
-
கோட்டாப ராஜபக்ஷவை கைது செய்யுமாறு சிறிலங்காவின் சட்ட மா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களத்தில் கசிந்துள்ள ஆவணம் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்த உத்தரவை சட்ட மா அதிபர் திணைக்களம் வழங்கியுள்ளது. அவன்காட் நிறுவனத்தின் ஊடாக சிறிலங்காவிற்குள் அனுமதியின் ஆயுதங்களை இறக்குமதி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக அவரையும், மேலும் நான்கு பேரையும் கைது செய்ய பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே அவர்களை கைது செய்ய வேண்டாம் என்று தடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/39588/57//d,article_full.aspx
-
- 0 replies
- 651 views
-
-
மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். நாளை மறுதினம் தெமடகொடவில் உள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் காரியாலயத்துக்கு வருமாறு அவர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. சிங்கள மொழியிலேயே இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியாவின் சிரேஷ்;ட்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகர் உள்ளிட்ட 4 பேருக்கு இந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. http://www.pathivu.com/news/39587/57//d,article_full.aspx
-
- 0 replies
- 386 views
-
-
சுன்னாகத்தில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே நேற்றிரவு இடம்பெற்ற மோதலால் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்ற நிலை காணப்பட்டது. மோதலில் ஈடுபட்டவர்கள் பெற்றோல் குண்டுகள், வாள்கள் மற்றும் கைக்கோடரிகளுடன் மோதலில் ஈடுபட்டனர். இதில் இருவர் காயமடைந்தனர். பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மோதல் இடம்பெற்ற பகுதிக்குச் சென்ற பொலிஸார் நால்வரைக் கைது செய்தனர். ஏனையோர் தப்பியோடினர். பொலிஸார் அப்பகுதியிலிருந்து பெறறோல் குண்டுகள் சிலவற்றையும் 2 வாள்கள், 2 கைக்கோடரிகளையும் கைப்பற்றினர். கைதான நால்வரையும் இன்று திங்கட்கிழமை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார், தப்பிச் சென்றவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். http://www.malarum.com…
-
- 2 replies
- 383 views
-
-
சிராந்தி ராஜபக்ச, யோசித ராஜபக்ச அடுத்த சில நாட்களுக்குள் கைது? APR 27, 2015 | 2:25by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவையும், மகன் யோசித ராஜபக்சவையும், அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிராந்தி ராஜபக்சவுக்கு எதிராகவும், யோசித ராஜபக்சவுக்கு எதிராகவும், ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு ஏற்கனவே விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், அடுத்த சில நாட்களுக்குள் இவர்கள் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள…
-
- 1 reply
- 951 views
-
-
தனது தம்பி உட்பட கட்சித் தோழர்கள் பலரும் காணாமற்போயுள்ளனர். இவர்களைப் பற்றிய விவரங்களை தானும் தேடிக்கொண்டிருக்கிறேன். ஏனத்தெரிவித்துள்ளார் காணாமல் போதல் சம்பவங்களின் சூத்திரதாரிகளுள் முக்கியமானவரான டக்ளஸ் தேவானந்தா. கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட வன்முறைகள் போராட்டங்கள் காரணமாக எமது இளைஞர் யுவதிகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இரகசிய முகாம்கள் இருப்பதாகவும் அவற்றில் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சில தமிழ் அரசியல்வாதிகள் முறையிட்டு வருகின்றனர். இது தொடர்பில் நாம் அரசாங்கத்திடம் எழுத்து மூல கோரிக்கையை முன்வைத்திருந்தோம். அதுமட்டுமல்லாது, பிரதமர் ரணில் விககிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த போது, யாழ். மாவட்டச் செயலக…
-
- 0 replies
- 597 views
-
-
யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் இரண்டாம் வருட கலைப்பீட மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்தக்கோரியும் காலவரையறையற்ற பகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அறிவிப்பு விடுத்துள்ளது. சம்பவம் தொடர்பினில் தெரியவருகையினில் நேற்றுமுன்தினம் மானிப்பாயில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியொன்றை பார்வையிட சென்று கொண்டிருந்த ஒன்பது பேர் கொண்ட மாணவர்கள் அணி மீது இனந்தெரியாத சிலர் சுதுமலை சந்தியில் வைத்து வழிமறித்து வாளால் வெட்டியும்; ,போத்தல் மற்றும் கொட்டன்களாலும் சரமாறியாக தாக்கியுள்ளனர். இதனால் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் ஓடத்தொடங்கியிருக்கின்றார்கள். அந்த நேரத்தில் துரத்திவந்த சிலர் ஒரு மாணவனுக்கு வெட்டியதில் கை இரண்…
-
- 0 replies
- 379 views
-
-
பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது சிறிலங்கா நாடாளுமன்றம் – நிறைவேறுமா 19? APR 27, 2015 | 2:59by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று, பரபரப்பான சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த 19வது திருத்தச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கடந்த திங்கட்கிழமை விவாதிக்கப்படவிருந்த 19வது திருத்தச் சட்டமூலம், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டங்களால் கைவிடப்பட்டு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை மீண்டும் நாடாளுமன்றம் கூடும் போது, 19வது திருத்தச் சட்டமூலம், விவாத்ததுக்கு எடுத்தக் கொள்ளப்படும் என்றும், இன்றும் நாளையும் இந்த விவாதம் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து நாளை 19வது திருத்தச் சட்டமூலம் …
-
- 1 reply
- 532 views
-
-
19வது திருத்தத்துக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் குதிக்கிறார் சோபித தேரர் APR 27, 2015 | 3:15by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 19வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக கோட்டே நாக விகாரையின் விகாராதிபதி வண மாதுளுவாவே சோபித தேரர், இன்று 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார். 19வது திருத்தத்தை எல்லாக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மாதுளுவாவே சோபித தேரர், இன்று தொடக்கம், கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளார். இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில், 19வது திருத்தம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, நாள் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையிலேயே, இவர் இந்தப…
-
- 1 reply
- 505 views
-
-
கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்டதும் கட்சி தலைவர் சம்பந்தனின் வலது கரமுமான திருகோணமலை நகரசபை தலைவருக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணியும் கொடும்பாவி எரிப்பும் கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தின் முன் இன்று புதன்கிழமை இடம்பெறறுள்ளது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற தொழிலாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு, இன்று காலை 10 மணியளவில் திருகோணமலை மின்சார நிலைய வீதயில் அமைந்துள்ள நகரசபை வேலைப்பகுதியின் அலுவலகத்தின் முன் இருந்து இவ் எதிர்ப்பு பேரணி ஆரம்பமானது. இப் பேரணி, திருஞானசம்பந்தர் வீதி வழியாக சிவன் கோயிலடி ஊடாக உட்துறைமுக வீதியில் உள்ள கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தின் முன் அடைந்து, அங்கு வைத்து நகரசபை தலைவர் க.செல்வராஜாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. 25 வருடங்களுக்கு மேல் தொ…
-
- 14 replies
- 1k views
-
-
சிறிலங்கா பயணத்தை கடைசி நேரத்தில் ஒத்திவைத்தார் இந்திய இராணுவத் தளபதி APR 27, 2015 | 2:37by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், சிறிலங்காவுக்கு இன்று மேற்கொள்ளவிருந்த பயணத்தைப் பிற்போட்டுள்ளதாக, இந்திய இராணுவத் தலைமையகம் நேற்றிரவு அறிவித்துள்ளது. ஐந்து நாள் பயணமாக, இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், இன்று பிற்பகல் சிறிலங்கா வரத் திட்டமிட்டிருந்தார். அவருடன், ஐந்து உயர் மட்ட அதிகாரிகளும், சிறிலங்கா வரவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இவர்கள், சிறிலங்காவின் உயர்மட்ட அரச தலைவர்கள், பாதுகாப்பு அதிகாரிகளை சந்திக்கவும், பல்வேறு இடங்களுக்குச் சென்று பார்வையிடவும் திட்டமிட்டிருந்தனர். எனினும், நேபாளத்தில் ஏற்பட்ட நி…
-
- 0 replies
- 468 views
-
-
புதிய ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு வழங்கிய சிறு வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றவில்லை. இந்நிலையில் 19ஆவது திருத்தச்சட்டமூலம் இவ்வாரம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது. அச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்குவது குறித்து மீள்பரிசீலனை செய்யவேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் வினோநோகராதலிங்கம் ஆகியோர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக வன்னி மாவட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களுக்கான எந்தவொரு ஆரோக்கியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாது புறக்கண…
-
- 0 replies
- 394 views
-
-
இலங்கையின் புதிய அரசு பதவியேற்று 100 நாட்கள் முடிவடைந்துவிட்டன. இன்றைய ஈழத் தமிழர்களின் எரியும் பிரச்சினைகளில் ஒன்றான காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைக்கு இலங்கை அரசு கடந்த அரசைப் போன்றே எந்த விதமான பதிலையும் அளிக்கவில்லை. யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் வசித்து வருகிறார் ஜெயகலா. காணாமல் போன தங்கள் பிள்ளைகளை தேடி அலைந்து கொண்டு பல ஆயிரக்கணக்கானவர்களில் ஜெயகலாவும் ஒருவர். எனது பிள்ளை உயிரோடு இருக்கிறான் என்றபடி சாட்சியத்துடன் இந்தத் தாய் போராடிக் கொண்டிருக்கிறாள். ஜெயகலாவின் மகன் சுதன் ஒருநாள் கடைக்குச் சென்றபொழுது இராணுவத்தினரால் விசாரணைக்காக தடுக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டான். இந்த சம்பவம் 2006ஆம் ஆண்டில் இடம்பெற்றுள்ளது. அன்றைக்கு அழைத்துச்…
-
- 0 replies
- 373 views
-
-
தமிழ் இனவாதத்தைப்போல் பல மடங்கு பலமடைந்த இனவாத அரசாங்கமே மஹிந்த அரசாங்கம். தமிழ் தலைவர்களின் செயற்பாடுகளை விடவும் சிங்கள இனவாத செயற்பாடுகளே கடந்த ஆட்சியில் பலமடைந்து காணப்பட்டது. வரதராஜப்பெருமாளை போல் பல சிங்கள இனவாதத் தலைவர்கள் இருக்கின்றதை மறந்துவிடக்கூடாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். விடுதலைப் புலிகளை அழித்ததாக புகழாரம் சூட்டும் மஹிந்த அரசாங்கமே புலிகளை பாதுகாத்தது என்பதையும் மறந்துவிடக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். ஜாதிக ஹெல உறுமய கட்சியினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என கூறிக்கொண்டு வடக்கில் இனவாதம் பேசிய தமிழ் தலைவர்…
-
- 0 replies
- 276 views
-
-
நெதர்லாந்தில் விடுதலைப்புலிகளிற்கு எதிரான வழக்கின் உயர்நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு – எதிர்வரும் 30-04-2015, வியாழன் மதியம் 13.30 மணிக்கு. நெதர்லாந்தில் முக்கிய ஐந்து தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களிற்கு எதிரான வழக்கானது 'டென் காக்' உயர்நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நடைபெற்றுவருவது அனைவரும் அறிந்ததே. இவ்வழக்கில், நெதர்லாந்தின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர், தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் நெதர்லாந்துக் கிளைப்பொறுப்பாளர் என்பதை தெரிவித்திருந்தார். மேலும், ஈழத்தில் தமீழீழவிடுதலைப்புலிகளால் நடாத்தப்பட்டது பயங்கரவாதம் இல்லை, அது சிங்களஅரசின் அடக்குமுறைக்குள்ளும் இனஅழிப்புக்குள்ளும் வாழ்ந்த ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான விடுதலைப்போராட்டம், …
-
- 0 replies
- 356 views
-
-
தமிழ் தேசியக்கூட்டமைப்பினை கட்சி தலைமை கண்டுகொள்ளாது தமிழரசுக்கட்சி வளர்ப்பதில் ஈடுபட்டுள்ள நிலையில் சுரேஸ்பிறேமச்சந்திரனை தொடர்ந்து கிழக்கில் ரெலோ அமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ஜனா எனப்படும் கருணாகரனும் தனித்து கூட்டமைப்பு அலுவலகமொன்றினை நேற்று திறந்து வைத்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு இல்லம் எனும் பெயரில் மட்டக்களப்பினில் இடம்பெற்ற திறப்பு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அலுவலகத்தை திறந்து வைத்திருந்தார். கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழரசுக்கட்சி பிரமுகர்களும் நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர். இதே வேளை திறப்பு விழா நடந்த பகுதியில் காணப்பட்ட துண்டுபிரசுரங்கள் சல பரபரப்பினை தோற்றுவித்திருந்தது. இந்திய அமைதிப்படை காலத்தில் ஜனாவினால…
-
- 0 replies
- 659 views
-
-
சிறுபான்மை இனமொன்று வெற்றியடைய வேண்டுமானால் அவ்வினத்திற்கு ஒற்றுமை என்பது அவசியம் மிக்கதொன்றாகும். எனவே சாதி, மத, பேதத்தால் பிரிந்து கிடக்காது ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசன் தெரிவித்துள்ளார். தந்தை தந்தை செல்வாவின் 38 ஆவது நினைவு நாள் தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் நேற்றுக் காலை தந்தை செல்வா அறங்காவற் குழுத்தலைவர் பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நினைவுப்பேருரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் உரையாற்றுகையில், தந்தை, தம்பி என்றதும் ஈழமும் அம்மா, அண்ணா என்றதும் தமிழகமும் தான் ஞாபகம் வரும். பிறந்த நாளிற்கும் இறக்கப்போகின்ற நாளிற்கும் இடையில் ஒரு இடைவ…
-
- 0 replies
- 439 views
-