ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
தாம் இன்னமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நம்பத் தயாரில்லை என்று வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் தமிழ் மக்களின் பாரிய பிரச்சினைகளுக்கு இன்னும் புதிய அரசாங்கம் சிறந்த தீர்வுகளை முன்வைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அபகரிக்கப்பட்ட காணிகளை இராணுவம் பொதுமக்களிடம் மீள வழங்கி விட்டதாக உலகம் முழுவதும் பிரசாரம் செய்யப்படுகிறது. எனினும் ஒட்டகப்புலத்தில் மக்கள் வீதியோரங்களில் இருந்து கொண்டு தமது காணிகள் எப்போது விடுவிக்கப்படும் என்று ஏங்கிக் கொண்டிருப்பதாக அனந்தி குறிப்பிட்டுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்துள்ள அவர், சிறையில் பல வருடங்களாக அடைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்பதையு…
-
- 1 reply
- 508 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது சனிக்கிரக தோசம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்குப் பரிகாரகமாக விசேட யாகமொன்று செய்யப்படுவதாகவும் தெரியவருகிறது. நுவரெலியாவிலுள்ள ரம்பொடை, தவலம்தென்ன, Wawandam'' தோட்டத்தில் உள்ள அனுமான் ஆலயத்தில் இன்று (25) இந்த யாகம் செய்யப்படுகிறது. முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த யாகத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவுள்ளதாக தெரியவருகிறது. இந்த யாகத்திற்காக இந்தியாவில் இருந்து விசேட குருக்கள் சிலர் அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த யாகத்தில் சுமார் 500 பேர் வரை கலந்துகொள்கின்ற அதேவேளை, இவர்களுக்கான உணவு, தங்குமிட வசதிகளை '''தொண்டமான் நிதியத்தினால்'' செய்துகொடுக்கப்பட்டுள்ளது. ht…
-
- 5 replies
- 1.4k views
-
-
பூநகரி வாடியடிச்சந்தியிலிருந்து பூநகரியின் ஏனைய கிராமங்களுக்குச் செல்வதற்கான பஸ் வசதியை ஏற்படுத்தித் தருமாறு அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு அமைவாக தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரனின் முயற்சியால் வெள்ளிக்கிழமை (24) அந்தப்பகுதிக்கு இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பூநகரியின் அயல் கிராமங்களிலிருந்து வாடியடிச்சந்திக்கு வரும் மக்கள் இதுவரை நாளும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். அத்துடன் பாடசாலை மாணவர்களும் பாடசாலைக்குச் செல்வதில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர். மக்களின் பிரச்சினைகளுக்கு இந்தப் …
-
- 0 replies
- 404 views
-
-
கடந்த அரசாங்கத்தின் போது பொதுமக்களின் பணத்தைக் கொள்ளையிட்டு, ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் குறித்து நடத்தப்படும் விசாரணைகளை கண்காணிக்கும் பொறுப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணைகள் குறித்து பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கூடியபோது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் இதில் கலந்துகொண்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புயடைவர்கள் மீது தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது சந்திரிக்கா வலியுறுத்தியுள்ளார். இந்த விசாரணைகள் சட்ட ரீதியாக அமையவேண்டும் எனவும்…
-
- 1 reply
- 399 views
-
-
மைத்திரியைச் சந்திக்க மறுத்த மகிந்த – பின்னணி அம்பலம் APR 25, 2015 | 2:59by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராகவும், தனது ஆட்சியின் போது, முக்கிய பங்கு வகித்த அதிகாரிகளுக்கு எதிராகவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாலேயே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று நடத்தவிருந்த சந்திப்பை மகிந்த ராஜபக்ச ரத்துச் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து இன்று மாலை 7 மணியளவில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் தனிப்பட்ட பேச்சு நடத்த ஏற்பாடாகியிருந்தது. இந்தநிலையில், பசில் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வை…
-
- 2 replies
- 625 views
-
-
வடக்கு மாகாணத்தில் காணாமல் போதல் சம்பவங்களில் 60 வீதம் புலிகளால் மேற்கொள்ளப்பட்டவை என காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 30 வீதமான சம்பவங்களை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளதாகவும், 5 வீதமான கடத்தல்கள் ஆயுதக் குழுக்களாலும், மிகுதியானவை அடையாளம் தெரியாத குழுக்களினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் போர் நடைபெற்ற காலங்களில் அதிகளவு காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. கடந்த ஆட்சிக் காலத்தில் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணையை மேற்கொள்ள, மெக்ஸ்வல் பரணகம தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டது. இந்தக்குழு வடக்கு, கிழக்கு முழுவதும் மா…
-
- 2 replies
- 566 views
-
-
தமிழர்களின் இறையாண்மை ஏகாதிபத்தியவாதிகளால் பறிக்கப்பட்டது: ஆதித்தன் ஜெயபாலன் [ வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015, 04:27.02 PM GMT ] தமிழ் இயக்கத்தின் வரலாற்றை சுருக்கமாக விபரிக்க முடியுமா?. 2009 ஆம் ஆண்டில் இருந்து தமிழீழத்தில் உள்ள தமிழ் இயக்கத்தின் தற்போதை நிலைமை என்ன? இலங்கைத் தமிழர்களின் இறையாண்மையானது ஏகாதிபத்தியவாதிகளால் பறிக்கப்பட்டது. முதலில் 1619 ஆம் ஆண்டு போர்த்துகேயரால் தமிழர்களின் இறையாண்மை பறிக்கப்பட்டதுடன் பின்னர் டச்சுகாரர்கள் இறுதியாக பிரிட்டிஷார் தமிழர்களின் இறையாண்மையை பறித்தனர். கிழக்கு குர்திஷ்தான் தொடர்பிலான ரோஜாவா அறிக்கை குறித்து ஐரோப்பாவில் வாழும் தமிழ் செயற்பாட்டாளர் ஆதித்தன் ஜெயபாலனிடம் ஊடகம் ஒன்று நேர்காணல் நடத்தியுள்ளது. இந்த நேர்காணலில் தற்…
-
- 1 reply
- 551 views
-
-
பாதுகாப்பு, நீதி அமைச்சுகள் ஒத்துழைக்கவில்லை – அதிபர் ஆணைக்குழு குற்றச்சாட்டு APR 25, 2015 | 2:31by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் காணாமற்போனோர் குறித்த விசாரணைக்கு சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் நீதி அமைச்சுக்கள் ஒத்துழைக்கவில்லை என்று சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 10ம் நாள் சிறிலங்கா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக, ஆணைக்குழுவினால் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “சிறைச்சாலைகள், தடுப்பு முகாம்கள், அகதி முகாம்கள் அல்லது புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய விபரங்களை வெளியிட…
-
- 0 replies
- 246 views
-
-
நரேந்திர மோடிக்கு விக்னேஸ்வரன் எழுதிய கடிதம் – இந்திய அதிகாரிகள் அதிர்ச்சி APR 24, 2015 | 1:22by அ.எழிலரசன்in செய்திகள் பிரேமானந்தா ஆசிர வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவரை விடுதலை செய்யுமாறு கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் அனுப்பியுள்ளது இந்திய அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. பிரேமானந்தா ஆசிரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில், பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்ட கமலானந்தா, பாலன் எனப்படும் பாலேந்திரன், சதீஸ் எனப்படும் சதீஸ்குமார் ஆகிய மூவரையுமே விடுதலை செய்யக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வடக்கு மாகாண முதலமைச்…
-
- 11 replies
- 1.2k views
-
-
திருகோணமலையில் இடம்பெற்றுவரும் கிழக்கு மாகாண கலாசார விளையாட்டுப் போட்டியிலிருந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் நால்வர் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். இந்த விளையாட்டுப்போட்டி நடைபெறும் திடலில் தனிசிங்கள மொழியில் பதாதைகள் வைக்கப்பட்டுள்ளதுடன் தேசியகீதமும் சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப்பட்டுள்ளது இதனை கண்டித்தே அந்த நால்வரும் வெளியேறியுள்ளனர். கிழக்கு மாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான சித்திரை விளையாட்டுப் போட்டி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமாகியது. இதில் அதிதிகளாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, உட்பட மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராசா, ஞ…
-
- 1 reply
- 419 views
-
-
இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய அலுவலகம் வன்னி , யாழ்ப்பாணம் என இரண்டு பிராந்திய அலுவலகங்களாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று மாற்றப்பட்டுள்ளது. அரச அமைச்சரான விஜயகலா மகேஸ்வரனின்; தனிப்பட்ட காரணத்திற்காகவே இந்த மாற்றம் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து சபையினில் பெரும் சர்ச்சையை ஏற்பட்டு;ள்ளது. ஏற்கனவே வடபிராந்திய முகாமையாளராக இருந்த இருந்த ஏ.அஸ்கர் nஎன்பவர் கொழும்புக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய முகாமையாளராக நேற்று முன்தினம் முதல் சி.கேதீஸன் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் வடமாகாண போக்குவரத்து சபை இரண்டாக பிரிக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு கேதீஸன் முகாமையாளராகவும், வன்னிக்கு ஏ.அஸ்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்…
-
- 1 reply
- 965 views
-
-
தமிழர்கள் அதிகளவு வாழும் வாகரைப் பிரதேசத்தில் சுமார் 2,500 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிங்களுக்கு நிலங்கள் பங்கிடப்படுவதாகவும் இதன் பின்னணியில் சமுர்த்தி மற்றும் வீடமைப்புப் பிரதியமைச்சர் அமீர் அலி செயல்படுவதாகவும் வாகரை பொது அமைப்புக்கள் ஒன்றியத்தின் தலைவர் ரொபட் நிக்ஸன் குற்றஞ்சாட்டினார். காடுகள் அழிக்கப்பட்டுவது சம்பந்தமாக சட்டத்துக்கு முரணான காணி அபகரிப்பைக் கண்டிக்கின்றோம் எனும் தலைப்பில் வாகரை பொது அமைப்புக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் வியாழக்கிழமை (23), மட்டக்களப்பு மாநகர வாசிகசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒன்றியத்தின் தலைவர் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கை…
-
- 0 replies
- 556 views
-
-
மைத்திரியை சந்திக்க மகிந்தவுக்கு நேரமில்லையாம் – நாளைய சந்திப்பு ரத்து APR 24, 2015 | 9:16by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் நாளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எழுந்துள்ள நெருக்கடிகள் குறித்துப் பேசுவதற்காக, இந்தச் சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டது. மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான குமார வெல்கம உள்ளிட்ட சிலர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை ச…
-
- 0 replies
- 371 views
-
-
ஐ.நாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர் ரொகான் பெரேரா – பான் கீ மூன் சந்திப்பு APR 24, 2015by கி.தவசீலன்in செய்திகள் நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள அம்ரித் ரொகான் பெரேரா, ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். நேற்று முன்தினம் ஐ.நா தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரொகான் பெரேரா, தனது நியமனப் பத்திரங்களை ஐ.நா பொதுச்செயலரிடம் இதன் போது கையளித்தார். இதையடுத்து, சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் குறித்து குறுகிய நேரம் கலந்துரையாடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் தூ…
-
- 0 replies
- 609 views
-
-
ஜூலை இறுதியிலேயே உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை – மங்கள சமரவீர தகவல் APR 24, 2015 | 5:06by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்களைக் கையாள்வதற்கான உள்நாட்டுப் பொறிமுறை வரும் ஜூலை மாத பிற்பகுதியில் உருவாக்கப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். “இந்த உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்குவதற்கு வெளிவிவகார அமைச்சு நிறைய வேலைகளை செய்து வருகிறது. இந்த உள்நாட்டுப் பொறிமுறைக்கான வரையறைகளை தீர்மானிக்க வேண்டியுள்ளது. இதற்கு மூன்று நான்கு தெரிவுகள் உள்ளன. இவற்றில் எமக்கு எது சிறந்த்து என்று நாம் முடிவு செய்வோம். வரும் செப்ரெம்பர் மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத் தொடர…
-
- 0 replies
- 298 views
-
-
காணாமற்போனோர்: புதிய அரசினாலும் தீர்க்கப்படாத பிரச்சினை – கொழும்பு ஆங்கில நாளிதழ் APR 24, 2015 | 4:51by நித்தியபாரதிin செய்திகள் 1971லிருந்து நாட்டில் இடம்பெற்ற பல்வேறு கிளர்ச்சிகளின் போதும் மோதல்களின் போதும் மக்கள் காணாமற் போவதற்கு அரச பயங்கரவாதமே காரணமாகும். தனது சொந்த நாட்டு மக்களுக்கு என்ன நடந்தது என்பதை விசாரணை செய்வதில் சிறிலங்கா அரசாங்கம் தாமதம் காண்பிக்கிறது. இவ்வாறு ‘சிலோன் ருடே’ நாளிதழின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’. கடந்த ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற சிறிலங்கா அதிபர் தேர்தலில் சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன 12.1 மில்லியன் மொத்த வாக்குகளில் 52 சதவீத வாக்குகளை…
-
- 0 replies
- 337 views
-
-
வடக்கு, கிழக்கில் உடல் உறுப்புகளை இழந்த 3,402 முன்னாள் போராளிகள் APR 24, 2015 | 14:35by கி.தவசீலன்in செய்திகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளில், 3,402 பேர், போரில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள் என்றும், இவர்களில் 900 பேர், வாழ்நாள் முழுவதும் பராமரிக்க வேண்டியவர்கள் என்றும் சிறிலங்காவின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் உள்ள உடல் உறுப்புகளை இழந்த 3.402 முன்னாள் போராளிகளில், 33 வீதமானவர்களுக்கு சிறப்பு கவனிப்புத் தேவைப்படுகிறது. இவர்களில், மோசமான காயங்களுக்கு உள்ளாகி, உடல் உறுப்புகள் அகற்றப்பட்டவர்கள், முற்றாக பார்வைத்திறன் இழந்தவர்கள், முற்றாக செவித்திறன் இழந்தவர்கள், முழுமையாக உட…
-
- 0 replies
- 368 views
-
-
என்னை எல்லோரும் கழுத்தறுத்து விட்டனர் – மகிந்த ராஜபக்சவின் புலம்பல் APR 24, 2015 | 13:48by கார்வண்ணன்in செய்திகள் சிங்களத் தேசியவாத அமைப்பான பொது பலசேனா, தன்னைத் தோற்கடிப்பதற்கான மேற்குலகத்தின் சதி என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஏஎவ்பி செய்தி நிறுவனத்துக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “சிறுபான்மை முஸ்லிம்களைப் பகைத்துக் கொள்ளவும், என்னைத் தோற்கடிக்கவும், மேற்குலகத்தின் சதியால் உருவாக்கப்பட்டதே பொது பல சேன. எனக்கோ, கோத்தாபய ராஜபக்சவுக்கோ, பொதுபல சேனாவுடன் எந்த தொடர்பும் இல்லை. பொது பலசேனா நோர்வே, அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டது. இதிலிருந்து இது ஒரு எதிர்க்கட்சி சதி என்பது தெளிவாகிறது. சிறுபான்மை …
-
- 0 replies
- 468 views
-
-
சர்ச்சைக்குரிய வகையினில் கதிரைகளினில் ஒட்டிக்கொண்டிருந்த ஈபிடிபி பேரவை உறுப்பினர்கள் குழு அகற்றப்பட்டு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவ்வகையினில் யாழ்.பல்கலைக்கழகத்திற்கான புதியபேரவை உறுப்பினர்கள் 14 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கடந்த சில மாதங்களாக இழுபறியில் இருந்து வந்த பேரவை உறுப்பினர்கள் தெரிவு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. பல்கலைக்கழகங்களின் அதியுயர் சபையாக கருதப்படும் பேரவையில், உள்வாரி உறுப்பினர்களாக இருக்கும் துணைவேந்தர், பீடாதிபதிகள், மூதவை பிரதிநிதிகள் உள்ளிட்ட புலமையாளர்களுடன், வெளிச்சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, சமூகத்தில் மதிப்பார்ந்த சேவையை வழங்கிவரும் கல்வி, தொழில்சார், வணிக, கைத்தொழி…
-
- 0 replies
- 562 views
-
-
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளப்படுத்தி படைத்தரப்பு அமைத்துள்ள புதிய பாதுகாப்பு வேலி அமைப்பிற்கும் மீண்டும் பொதுமக்களது எஞ்சிய வீடுகள் இடித்தழிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பொதுமக்களது காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி மரக்கட்டை, முட்கம்பி வேலிகளை அமைத்திருந்தனர். தற்போது அவ்வேலிகள் அகற்றப்பட்டு அவ்விடத்தில் கொங்கிறீட் தூண்கள் நாட்டப்பட்டு முட்கம்பி வேலிகள் போடப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி, வலிகாமம் வடக்கு பகுதியில் 9 கிராமஅலுவலர் பிரிவுகளில் பகுதி பகுதிகளாக மக்கள் மீள்குடியமர்வதற்கு அனுமதிக்கப்பட்டது. இதன்போது அனுமதிக்கப்படாத பகுதிகள், மரக்கட்டை வேலிகளால் அடைக்கப்பட்டிருந்தன.…
-
- 0 replies
- 377 views
-
-
மின்சார கதிரைக்கு அஞ்சேன் என்றோர் இலஞ்ச விசாரணைக்கு பயப்படுவது ஏன்?: பிரதியமைச்சர் எரான் விக்ரமரட்ன நாட்டுக்காக மின்சாரக் கதிரை தண்ட னையை யும் ஏற்கத் தயார் என்றவர்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணையிலிருந்து கூட தப்பிக்க முயற்சிப்பதேன் என பிரதியமைச்சர் எரான் விக்ரமரட்ன கேள்வியெழுப்பினார். முன்னாள் ஜனாதிபதி என்பதற்காக சட்டத்திலிருந்து தப்பிக்க முயலக்கூடாது. சட்டம் சகலருக்கும் சமம் அதற்கு அனைவரும் அடிபணிவது முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார். பசில் ராஜபக்ஷ விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை முன்மாதிரியானது என குறிப்பிட்ட பிரதியமைச்சர் எனினும் அவரது குடும்பத்தில் மற்றவர்கள் சட்டத்திலிருந்து. தப்பிக்கவே முயற்சிக்கின்றனர் என்றும் தமது கையாட்களை ஏவிவிட்டு அநாவசிய…
-
- 5 replies
- 462 views
-
-
முன்னாள் அமைச்சர்களான டளஸ் அழகப் பெரும, பந்துல குணவர்தன உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 18 பேரையும் எதிர்வரும் 8ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு, புதுக்கடை மாவட்ட நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தை அவமதித்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச நேற்றைய தினம் லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தார். இதன்போது குறித்த இடத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படக் கூடாது என நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. எனினும், இந்த உத்தரவையும் மீறி கோதாபய ராஜபக்சவிற்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற …
-
- 2 replies
- 646 views
-
-
சிறிலங்கா குறித்த அறிக்கையைப் பார்த்து திகைத்தாராம் ஜோன் கெரி APR 24, 2015 | 1:46by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் 100 நாள் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்த அறிக்கையைப் பார்த்து அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி திகைத்துப் போனதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளராக ராஜித சேனாரத்ன. இந்தக் குறுகிய காலப் பகுதிக்குள் ஒரு அமெரிக்க அதிபரால் கூட, இதுபோன்ற பெரும் எண்ணிக்கையான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்றும் ஜோன் கெரி தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். சில வாரங்களுக்கு முன்னர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்த பின்னரே ஜோன் கெரி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் உள்ள தமது…
-
- 7 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் இணைந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தம்மை 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தோற்கடித்தார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சியில் நடைபெற்ற சத்தியாக்கிரகம் என்ற செவ்வி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2005ம் ஆண்டு பிரபாகரனுடன் இணைந்து கொண்ட மஹிந்த அதன் பின்னர் குமரன் பத்மநாதனுடன் இணைந்து கொண்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக தமக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு நாட்டை பிளவுபடுத்த நினைத்திருந்தால் ஆட்சி; அதிகாரத்தை தாம் பிர…
-
- 5 replies
- 724 views
-
-
சிறுபான்மைக் கட்சிகளின் தற்போதைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்கும் வகையில் தேர்தல் முறைமை மாற்ற யோசனை ஒன்று தேசிய நிறைவேற்றுச் சபையில் நேற்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்தவொரு தரப்பும் எதிர்ப்பை வெளியிடவில்லை என்றும், தமது கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர் இறுதி முடிவை அறிவிப்பதாகவும் தெரிவித்தன என்றும் அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறினார். தேசிய நிறைவேற்றுச் சபையில் ஜாதிக ஹெல உறுமயவின் உறுப்பினர் வண. அத்துரெலிய ரட்ண தேரரால் முன்வைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய யோசனையின் பிரகாரம், 225 ஆக இருக்கும் எம்.பிக்களின் எண்ணிக்கையை 238 ஆக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தற்போதுள்ள தேர்தல் முறைமையில் மாற்றம் எதுவும் ஏற்படாது. தேர்தல் தொகுதிகளும் அப்படியே …
-
- 4 replies
- 589 views
-