Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பயணிகள் கப்பல் சேவைக்கு அவசரம் காட்டியது இந்தியா – ஆப்பு வைத்தது சிறிலங்கா MAR 08, 2015by கார்வண்ணன்in செய்திகள் இராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் சேவையை அடுத்தவாரமே ஆரம்பிக்க வேண்டும் என்று இந்தியா விடுத்த கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நடத்திய பேச்சுக்களின் போது, இருநாடுகளுக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பது குறித்து ஆராயப்பட்டது. இந்தச் சந்திப்புக் குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஏ.எம்.ஜே.சாதிக் கருத்து வெளியிடுகையில், அடுத்தவாரமே, இராமேஸ்வரம்- தலைமன்னார் பயணிகள் கப்பல் ச…

  2. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சாட்சியமளிக்கத் தயார் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். புதிய விசாரணைப் பொறிமுறைமையின் கீழ் சாட்சியமளிக்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்ததாகவும், அதேபோன்று புதிய உள்ளக விசாரணைப் பொறிமுறைமையின் கீழும் சாட்சியமளிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான உள்ளக விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச விசாரணைகளை எதிர்ப்பதாகவும் உள்ளக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினர் வேண்டுமென்றே தமிழ் மக்…

  3. போலி கடவுச்சீட்டை பயன்படுத்திய டுபாய் ஊடாக இத்தாலிக்கு செல்வதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகைதந்திருந்து பொத்துவிலைச்சேர்ந்த 32வயதான பெண்ணொருவரை குற்றப்புலானய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர், தனது உண்மையாக கடவுச்சீட்டு மற்றும் மாலைத்தீவுக்கு செல்வதற்கான பயணச்சீட்டு ஆகியவற்றை கடவுச்சீட்டு கருமப்பீடத்தில் கையளித்து பயணிப்பதற்கு தேவையான ஆவணங்களை பெற்று குடிவரவு, குடியகல்வு பிரிவுக்குச்சென்று மாலைத்தீவுக்கு செல்வதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளார். எனினும், விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் இருக்கின்ற கடைசி கருமப்பீடத்தில், தான் டுபாய் ஊடாக இத்தாலி செல்வதற்கு வருகைதந்ததாக தெரிவித்து அதற்கான ஆவணங்களையும் பிரிதொரு கடவுச்சீட்…

  4. சனல் 4 ஊடகவியலாளர் கலம் மக்ரேயின் இலங்கை தொடர்பிலான மற்றொரு காணொளி பிரித்தானிய நாடாளுமன்றில் எதிர்வரும் 10ம் திகதி காட்சிப்படுத்தப்படவுள்ளது. நோ பயர் ஸோன் என்ற காணொளியின் சிங்கள மொழியாக்கமே இவ்வாறு காட்சிப்படுத்தப்படவுள்ளது. லீ ஸ்கொட், ஸ்வலாக் மெக்டொனாவ் உள்ளிட்ட பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். நாடாளுமன்றின் 21ம் இலக்க அரங்கில் காணொளி காட்சிப்படுத்தப்படவுள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கமொன்று தொடர்பிலான காணொளியை காட்சிப்படுத்தக் கூடாது என பிரித்தானிய வாழ் இலங்கையர்கள் சிலர் கோரியதாகவும், அந்தக் கோரிக்கை பலனளிக்கவில்லை எனவும் சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரி…

  5. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை பிற்போடப்பட்டமையை கண்டித்தும் உள்ளக விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்பட வலியுறுத்தியும் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கண்டறியவும் அவர்களுக்கு நீதி கிடைக்கவும்இ இன அழிப்புக்கு நீதி கிடைக்கவும் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை வலியுறுத்தியும் ஈழத் தமிழ் இளைஞர் பேரவை முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்துள்ள நடைப்பயத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது முழுமையான ஆதரவை தெரிவித்து நடைப்பயணத்தில் இணைந்து கொண்டுள்ளது. மேற்படி நடைப்பயணத்தில் ஈடுபடும் இணைஞர்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணித் தலைவர் இன்னாசிமுத்து சத்தியசீலன் தலைமையிலான அணி நேற்றய நேற்றயதினம்6ம் த…

  6. இலங்கை- இந்தியா இடையே பயணிகள் கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கிடையில் கலந்துரையாடப்பட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஏ.எம்.ஜே சித்திக் தெரிவித்துள்ளார். இரு வெளிவிவகார அமைச்சர்களுக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கப்பல் சேவையை மீளஆரம்பிப்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் இச்சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கு இருநாடுகளும் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் விவாதிக்கப்பட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது ஒப்பந்தம் …

    • 4 replies
    • 422 views
  7. லண்டனில் புலம்பெயர் தமிழர்களையும் சந்திக்கவுள்ளார் மைத்திரி MAR 08, 2015 | 2:28 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் மூன்று நாள் பயணமாக நேற்று பிரித்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, லண்டனில், புலம்பெயர் தமிழர்களையும் சந்திக்கவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. டுபாய் வழியாக லண்டன் செல்லும், எமிரேட்ஸ் விமானம் மூலம், நேற்றுக்காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன புறப்பட்டுச் சென்றார். அவருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளும், சிறிலங்கா அதிபரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள, பிரித்தானியாவுக்கான முன்னாள் தூதுவர் கிறிஸ் நோனிசும் லண்டன் சென்றுள்ளார். லண்டனில் தங்கியிருக்கும் போத…

  8. ரணில், மங்களவை அவசரமாக சந்தித்த சீன தூதுவர் – உடன்பாடுகளை மதிக்குமாறு அறிவுறுத்தல் MAR 08, 2015by கார்வண்ணன்in செய்திகள் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதையடுத்து, சீனத் தூதுவர் யி ஜியான்லியாங், அவசரமாக சிறிலங்கா பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது, சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட இருதரப்பு உடன்பாடுகள் வர்த்தக உடன்பாடுகளை மதித்து நடக்குமாறும், சீன முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்குமாறும், அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த தகவலை கொழும்பிலுள்ள சீன துதுரகம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. இருநாடுகளுக்கும் நன்மை தரக்கூடிய உடன்பாடுகளை சிறிலங்கா தொடர்ந்து மதித்து நடக்க வேண்டும…

    • 0 replies
    • 615 views
  9. கடந்த மாதம் 2 பயணிகளே வருகை – மூடப்படுகிறது மகிந்தவின் மத்தல விமான நிலையம் MAR 08, 2015 | 2:43 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் மத்தல மகிந்த ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தின் ஊடான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1ம் நாள் தொடக்கம், மத்தல விமான நிலையத்தில் பயணிகள் விமானங்களைத் தரையிறக்குவது முற்றிலுமாக நிறுத்தப்படவுள்ளதாக, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உதவித் தலைவர் சஞ்சீவ விஜேரத்ன தெரிவித்துள்ளார். மாதம் 250 மில்லியன் ரூபாவை இந்த விமான நிலையத்தின் பராமரிப்புக்காக செலவிட்ட போதிலும், கடந்த மாதம் இரண்டே இரண்டு பயணிகள் மாத…

    • 0 replies
    • 347 views
  10. சுஸ்மாவுக்கு இராப்போசன விருந்தளித்தார் மங்கள – சம்பந்தன், சந்திரிகாவும் பங்கேற்பு MAR 07, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் இரண்டுநாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கு,சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றிரவு இராப்போசன விருந்தளித்தார். இந்த இராப்போசன விருந்தில், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுடன், இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர். …

    • 5 replies
    • 572 views
  11. இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை கொழும்பில் சந்தித்துப் பேசியுள்ளார். குறித்த சந்திப்பில் மீள்குடியேற்றம் மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். “முதலில் மீள்குடியேற்றங்கள் குறித்துப் பேசப்பட்டது. மீள்குடியேற்றம் என்பது முழுமையாக நடைபெற வேண்டும். சொற்ப காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் அறிவித்தபோதும் இதுவரை ஒரு துண்டு காணி கூட விடுவிக்கப்படவில்லை. இந்தியாவில் உள்ள எங்களுடைய உறவுகள், புலத்தில் வாழும் எம்மவர்கள் மீளவும் தங்கள் நிலத்தில் வாழ்வதற்கு முழ…

  12. அபிலாசைகளை நிறைவேற்றும் உரிமை தமிழர்களுக்கு இருக்க வேண்டும் – சுஸ்மாவிடம் சம்பந்தன் MAR 07, 2015 | 15:58by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தமிழ்மக்களின் பிரச்சினைக்கான இறுதி அரசியல் தீர்வின் ஒரு பகுதியாக, மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. சிறிலங்காவுக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இன்று பிற்பகல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந…

    • 0 replies
    • 319 views
  13. கொழும்புத் துறைமுக நகர நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துவதாக சீன நிறுவனம் அறிவிப்பு MAR 07, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் கொழும்புத் துறைமுக நகர திட்டத்தை இடைநிறுத்துவதாக அதன் நிர்மாணப் பணியில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனமான, சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது. கொழும்புத் துறைமுக நகர நிர்மாணப் பணிகளை உடனடியாக இடைநிறுத்தும், சிறிலங்கா அமைச்சரவை முடிவை ஏற்றுக் கொள்வதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி, தமக்கு துறைமுகங்கள், கப்பல்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலரிடம் இருந்து அதிகாரபூர்வ தகவல் கிடைத்துள்ளதாகவும், சீன நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த திட்டத்தை ஆரம்பிக்க முன்னர், சம்பந்தப்பட்ட அ…

    • 0 replies
    • 739 views
  14. சிகிரியா சுவரில் பெயர் எழுதிய மட்டக்களப்பை சேர்ந்த உதயசிறி என்ற பெண்ணுக்கு இரண்டு வருட சிறை தண்டனையை தம்புள்ளை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந் நிலையில் அந்த பெண்ணின் தயார் தனது மகளை விடுவித்து தருமாறு உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே அந்த சுவர்களில் பலருடைய பெயர்கள் எழுதப்பட்டிருந்த நிலையிலேயே தனது பெயரை அந்த சுவரில் அவர் எழுதியுள்ளார். தனது மகள் தெரியாமல்தான் பெயரை எழுதியதாகவும் தண்டனைக்குரியதென தெரிந்திருந்தால் எழுதியிருக்க மாட்டாள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். யாரும் உதவிக்கு இல்லாமல் தனிமையில் வாடுவதாக அந்த தாயார் குறிப்பிட்டுள்ளார். நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில் தான் இருப்பதாகவும் தனது மகள் வீடு திரும்பாவிட்டால் சாவதை தவிர வேறு எதுவும் தனக்க செய்ய முடியவ…

    • 1 reply
    • 1.5k views
  15. இலங்கை பிரதமர் ரணிலுக்கு அமைச்சர் சுஷ்மா பதிலடி: மீனவர் பிரச்னையை குழப்புவதற்கு கண்டனம் கொழும்பு: 'இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் ஊடுருவினால், அவர்களை சுடுவோம்' என, கூறிய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பதிலடி கொடுத்துள்ளார். 'மீனவர்கள் பிரச்னையை மனிதநேயத்துடன் அணுக வேண்டும். இத்தாலி கடற்படை வீரர் பிரச்னையுடன் இதை ஒப்பிடக் கூடாது' என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த வாரம், இலங்கையில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் செய்கிறார். அப்போது, மீனவர்கள் பிரச்னை, இரு தரப்பு உறவு, வர்த்தகம் உட்பட, பல பிரச்னைகள் குறித்து பேசுகிறார். பிரதமரின் பயணத்துக்கு முன், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ…

    • 0 replies
    • 525 views
  16. தமிழ் மக்களின் காணிகளை விடுவித்து அவர்களது மீள்குடியமர்வுக்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கை அரசு இதுவரை ஒரு துண்டுக் காணியைக் கூட விடுவிக்கவில்லை. இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ்மக்கள் மீளத்திரும்பி வாழ்வதற்கு முழுமையான மீள்குடியேற்றம் நடைபெறவேண்டும். இவ்வாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்சுவராஜுடம் எடுத்துக்கூறியுள்ளது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்சுவராஜுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன் செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண…

  17. கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற பெண் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் [ சனிக்கிழமை, 07 மார்ச் 2015, 12:10.02 AM GMT ] யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து விசாரணைக்குச் சென்ற பெண்ணொருவர் மூர்க்கத்தனமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பிணக்கு ஒன்றினையடுத்து குறித்த பெண் மீது மற்றொருவர் முறைப்பாடு செயதுள்ளார். இதனையடுத்து குறித்த பெண்ணை நேற்று முற்பகல் 11 மணிக்கு விசாரணைக்கு வருமாறு பொலிஸார் கடிதம் அனுப்பியுள்ளனர். இந்த விசாரணைக்கான கடிதமும் முறைப்பாடு செய்தவரிடமே பொலிஸாரினால் கொடுக்கப்பட்டு சம்பந்தப்ட்ட பெண்ணிடம் வழங்…

    • 2 replies
    • 347 views
  18. போரால் பாதிக்கப்பட்ட தாயக மக்களிற்கு ‘லெபாரா நிதியத்தினால்’ (Lebara Foundation) கிளிநொச்சியில் புதிய நவீன நூலகம் ஒன்று கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் வெளிநாட்டுத் தொலைபேசிச் சேவைகளை வழங்கும் ‘லெபாரா மொபைலின்’ அங்கமான லெபாரா நிதியம், இலங்கை, இந்தியா உட்பட பல உலக நாடுகளில் பல்வேறு தொண்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. வன்னியில் போரில் பாதிக்கப்பட்ட மக்களும், மாணவர்களும் மீள் குடியேறி, தமது வாழ்வை மீண்டும் கட்டியெழுப்ப முனையும் இந்தக் காலப்பகுதியில், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்களும், அவர்கள் வழிநடக்கும் மாணவர்களுக்கும் இந்த நூலகம் நிச்சயம் உதவும். கல்வி நூல்கள் மட்டுமன்றி 25 இற்கும் மேற்பட்ட கணினிகள், காணொளி, ஒலி அமைப்பு உட்பட உபகரண வசதிகள…

    • 16 replies
    • 1.7k views
  19. மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில், கடந்த காலங்களில் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொது மக்களுக்குச் சொந்தமான 11 யஹக்ரேயர் காணி சுவீகரிக்கப் பட்டு பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளு மாறு, யாழ்.மாவட்ட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் மருதங்கேணி பிரதேச செயலகத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். மருதங்கேணி பிரதேசத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான 11 யஹக்டேயர் காணியை, இராணுவத்தினர் விஜயபாகு ரெஜிமென்ட் படைத்தளம் அமைப்பதற்கு சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை மக்களின் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டிருந்தது. …

    • 4 replies
    • 994 views
  20. பிந்தி அனுப்பும் சாட்சியங்களையும் விசாரணைக்குழு ஏற்றுக் கொள்ளும்! – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் அறிவிப்பு. [sunday 2014-11-02 08:00] இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம், அமைத்துள்ள விசாரணை குழுவின் முன் சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்படும் கால எல்லை கடந்த வியாழக்கிழமையுடன் முடிவடைந்துள்ளது. எனினும் பிந்திக்கிடைக்கும் சாட்சியங்கள் மற்றும் சமர்ப்பிப்புக்கள் நிராகரிக்கப்படமாட்டாது என்று விசாரணைக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் கிடைத்த முறைப்பாடுகள் மற்றும் சாட்சியங்கள் என்பவற்றை உரிய முறைக்கு கொண்டு வர இன்னும் இரண்டு மாதங்களாவது செல்லும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் சமர்ப்பி…

  21. வடபகுதி மீனவர்களின் பிரச்சினை குறித்து சுஸ்மாவுடன் பேசவுள்ளது கூட்டமைப்பு MAR 07, 2015 | 1:15by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுடனான பேச்சுக்களின் போது, வடபகுதியில் உள்ள மீனவர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். இதுகுறித்து இந்தியாவின் ‘தி ஹிந்து’ நாளிதழுக்கு கருத்து வெளியிட்டுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், “இந்தியப் பிரதமரின் பயணத்துக்கு முன்னோடியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சிறிலங்கா வந்துள்ள…

  22. கிண்ணியா, ஹிஜ்ரா வீதியில் மூன்று கோடி ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் சவூதி அரேபியாவைச் சேர்ந்த அஷ்செய்ஹ் காலித் இப்னு இப்றாஹிமால், வெள்ளிக்கிழமை(06) திறந்து வைக்கப்பட்டு இங்கு முதலாவது ஜ}ம்ஆ தொழுகையும் இடம்பெற்றது. திருமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பள்ளிவாசல் தலைருமான எம்.ஏ.எம்.மகரூபின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. வாழ்வும் மரணமும் என்ற தலைப்பில் குத்பா பிரசங்கத்தை அஷ்சேஹ் எம்.சி.அன்ஸாரும் ஜும்ஆ தொழுகையின் பின் சிறப்புரையினை சவூதி அரேபியாவைச் சேர்ந்த அஷ்சேஹ் அஸீஸ் குமைன் மற்றும் அஷ்சேஹ் என்.பீ.எம்.அபூபக்கர் சித்தீக் மதனி ஆகியோரும் நிகழ்த்தினர். http://www.tamilmirror.lk/141166#sthash.TM1Mhx2d.dpuf

  23. பயங்கரவாத தடை தட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விபூசியாவின் அம்மாவுக்கு இன்றும் பிணை வழங்காத நிலையில் அம்மாவுக்காக காத்திருந்த விபூசிகாவின் பூப்புனித நீராட்டு விழா அம்மா இன்றிய நிலையில் நடந்தது. தனது பூப்புனித நீராவிட்டு விழாவுக்காக அம்மா பாலேந்திரன் ஜெயக்குமாரியை பிணையில் அனுப்புமாறு விபூசிகா ஜனாதிபதி மைத்திரிக்கு கடிதம் எழுதியிருந்தாள். இந் நிலையில் விபூசிகாசின் தயார் ஜெயக்குமாரிக்கு இன்று பிணை வழங்க நீதிமன்றம் மறுத்திருந்தது. தனது தயார் பூப்பூனித நீராட்டு விழாவுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்த விபூசிகா இன்று ஏமாற்றம் அடைந்தாள். கிளிநொச்சியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் சிஐடியினரால் சேர்க்கப்பட்ட விபூசிகாவின் பூப்புனித நீராட்டு விழா இன்று இடம்பெற்ற…

    • 5 replies
    • 2.9k views
  24. கிளிநொச்சி தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் விழாவும், 12வது திருக்குறள் மாநாடும் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நேற்று இரண்டாவது நாளாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் திருக்குறல் கண்காட்சியை பார்வையிட்ட முதலமைச்சர், மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார். மங்கள விளக்கேற்றப்பட்ட பின்னர், திருவள்ளுவர் படத்திற்கு முதல்வர் மாலை அணிவித்ததுடன், தமிழ்த்தாய்க்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மலர் மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் தென்னிந்திய திருச்சபையின் ஓய்வுபெற்ற பேராயரும், யாழ். தமிழ் தொண்டருமான அதி வண. கலாநிதி எஸ்.ஜெபநேசன் அவர்கள் ஆசியுரை நிகழ்த்தினார். அண்மையில் ஜனாதிபதி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.