Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை நீதிமன்றங்களின் தீர்ப்புகளில் தலையிட்டு அதனை மாற்றுமாறு அச்சுறுத்தும், மிரட்டும் நீதிபதிகள் கும்பல் ஒன்று குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு செயலாளர் கோத்தாபயவின் ஆதரவுடன் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் புதிதாக முளைத்துள்ள நீதித்துறை ரவுடிக்கும்பல் குறித்து மேலும் தெரியவருவதாவது. இலங்கையில் நீதிமன்றமொன்றின் தீர்ப்பை குறிப்பிட்ட நீதிமன்றின் நீதிபதியே தீர்மானிப்பது வழமை. எனினும் தற்போது இதனை ஐந்து நீதிபதிகள் கொண்ட ரவுடிக்கும்பலொன்று தீர்மானிக்க தொடங்கியுள்ளது. குறிப்பிட்ட கும்பல் தொலைபேசி மூலமாக தீர்ப்பு எவ்வாறு அமையவேண்டுமென்பது குறித்து நீதிபதிகளுக்கு அறிவுறுத்த தொடங்கியுள்ளது. இவர்களது உத்தரவை செவிமடுக்காத நீதிபதிகள் மோசமான பின்விளைவுகளை எதிர்…

  2. இலங்கை மீது ஏன் அழுத்தங்களை கொடுக்கிறோம் என்பது இப்போது தெரிகிறதா என கிறிஸ் நோனிசிடம் பிரிட்டனின் அமைச்சர் கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது. சஜின் வாஸ் குணவர்த்தனாவினால் தாக்கப்பட்ட சம்பவத்திற்க்கு பின்னர், கிறிஸ் நோனிஸ், பிரிட்டனின் கொன்சவேர்ட்டிவ் கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார். அந்த மாநாட்டின் போது கிறிஸ்நோனிசை சந்தித்த பிரிட்டனின் பொதுநலவாய அமைச்சர் ஹியுகோ சுவைர் கிறிஸ் நாங்கள் ஏன் இலங்கை மீது சர்வதேச ரீதீயாக கடும் அழுத்தங்கை கொடுக்கிறோம் என்பது விளங்;குகின்றதா என பல இலங்கையர்கள் முன்னிலையில் கேட்டுள்ளார். அங்கிருந்தவர்கள் நொனிசின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்த போதிலும் அவர் பதில் எதனையும் தெரிவிக்காமல் வ…

  3. வட மாகாணசபைக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த வருட இறுதிக்குள் தனியாருக்குச் சொந்தமான காணிகள், கட்டடங்களில் இருந்து இலங்கை இராணுவம் உட்பட முப்படைகளும் வெளியேற வேண்டும் என்று வடக்கு மாகாண சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியான கூட்டமைப்பினால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் எதிர்க்கட்சி நடுநிலைமை வகித்திருந்தது. அதே வேளை வடக்கு மாகாணசபைக்கு காணி விவகாரங்கள் தொடர்பினிலுள்ள அதிகாரங்கள் தொடர்பில் கருத்தில் கொண்டு அவற்றை அமுல்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் வடமாகாண காணி ஆணையாளர் கூட்டத்திற்கு சமூகமளித்திராத நிலையில் அவர் யாரது அதிகாரத்திற்கு உட்பட்டவரென கேள்வி எழுப்பப்பட்ட போதும் இறுதி வரை பதில் கிடைத்திருக்கவில்லை. வடமாகாணசபையின…

  4. மீண்டும் ஓர் ஆபத்தான சூழலை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது – ஆனந்தன்! “சாத்வீக போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க முற்பட்டதால்தான் ஆயுதப்போராட்டம் வெடித்தது. யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்திருக்கும் நிலையில் மீண்டும் ஓர் ஆபத்தான சூழலை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது. இதனை உடன் நிறுத்த வேண்டும். இல்லையெனில் இதற்காக எதிர்காலத்தில் அரசாங்கம் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் ” – இவ்வாறு எச்சரித்திருக்கிறார் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன். வுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்று…

  5. அனைத்துப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தமுடியாது – அரசாங்கம் திட்டவட்டம்! இலங்கையில் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்த எல்லாப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தயாராக இல்லை என்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற ஊடக சந்திப்பில் அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ள சுயாதீன ஆணைக்குழுக்களை அரசாங்கம் ஏன் இன்னும் அமைக்காமல் இருக்கின்றது என்று பிபிசி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பதில் அரசாங்கத்திற்கு சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்தார். இதன்போது, நல்லிணக்க ஆணைக்குழுவின் எல்லாத் தீர்மானங்களையும் நிறைவேற்று…

  6. இந்த வருடத்தின் சமாதானத்துக்கான நோபல் பரிசை பெறும் பான் கீ மூனின் கனவு ஈழத் தமிழர்களின் விடயத்தினால் கனவாகி போய் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச ஊடகத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. சமாதானத்துக்கான நோபல் பரிசு இந்த வருடம் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனுக்கு வழங்கப்படும் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தில் ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு கண்ட தோல்வி, ஹெய்ட்டியில் கொளராவை தடுக்க நடவடிக்கை எடுக்கா மை, வடகொரியா மற்றும் தென்கொரியாக்களுக்கு இடையிலான பிரச்சினையில் தென்கொரியாவுக்கு சார்பாக செயற்பட்டமை போன்ற காரணங்களால் அவருக்கு இந்த விருதை வழங்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோபல் பரிசின் ஆலோசகர்கள்…

  7. தன் சொந்தத் தம்பி போலவே திலீபனைக் கருதினார் பிரபாகரன். அண்ணனின் போராட்டத்துக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தார் திலீபன். ``நான் திலீபனை ஆழமாக நேசித்தேன். உறுதிமிகுந்த போராளியான அவன் மரணித்துக் கொண்டிருந்த போது, என் ஆன்மா கலங்கியது. காலத்தால் சாகாத மாபெரும் வரலாற்று நாயகனாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயர்ந்து நிற்கிறான் திலீபன்!``- இந்திய அமைதிப் படை இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து திலீபன் இறந்தபோது, அவர் நினைவாக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் நெகிழ்ந்து கூறியது இது! பிரபாகரனுக்கு, திலீபன் பற்றி ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என ஆசை. ஆனால், சூழ்நிலையும் அரசியலும் அப்போது இடம் தரவில்லை. இப்போது அதற்கு காலம் கனிந…

    • 8 replies
    • 1.5k views
  8. குளோபல்தமிழ்செய்தியாளா் கொழும்பு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், இந்திய பாதுகாப்புச் செயலாளர் ராத கிருஸ்ண மஹாதுருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. கண்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு சற்று முன்னர் நடைபெற்றுள்ளது. சந்திப்பு நடைபெற்றதனை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு உறுதி செய்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாதுகாப்புச் செயலாளர் மஹாதுர், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய…

  9. தொழில் தேடி கொழும்பு சென்ற யாழ்ப்பாணப் பெண் உயிருக்காகப் போராடும் பரிதாபம்!? யாழ் யுவதி ஒருவருக்கு உயிர்கொல்லி டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தும், அவர் பணியாற்றிய நிறுவனம் அவருக்கு மருத்துவ விடுமுறையை வழங்க மறுத்ததால், நோய் முற்றி இரத்தவாந்தி எடுக்கும் ஆபத்தான நிலையில் அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொடூரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது; கொழும்பு இரத்மலானையில் உள்ள ஆடைக் கைத்தொழில் நிறுவனமொன்றில் பணியாற்றும் யாழ்ப்பாணம் தென்மராட்சி, மீசாலையைச் சேர்ந்த யுவதி ஒருவருக்கு, சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் தொழிற்சாலை நிர்வாகம் அவருக்கான மருத்துவ விடுமுறையை வழங்க …

  10. இராணுவம் வெளியேறினால் புத்தரும் வெளியேறுவார் – சபையில் சிவாஜிலிங்கம்! — வடக்கிலிருந்து இராணுவத்தினர் வெளியேறினால் புத்தரும் அவர்கள் கூடவே சென்றுவிடுவார் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.வடமாகாண காணி பிரச்சினைகள் தொடர்பிலான விசேட அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபை கட்டிட தொகுதியில் வியாழக்கிழமை (09) நடைபெற்றது. இதில் முப்படைகளும் வடக்கிலிருந்து இவ்வருட இறுதிக்குள் வெளியேற வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், பொதுமக்களின் காணிகளில் இராணுவத்தினர் இராணுவ முகாம் அமைத்து இருக்கும் போது, புத்தர் சிலையொன்றையும் அதில் நிறுவி வழிபாடுகள் செய்து வந்தனர…

  11. இந்த வரவு செலவு திட்டத்திலாவது விடிவு வருமா??? http://youtu.be/ERRfXr4X7xA

  12. வடக்கு மாகாணசபையின் ஒரு வருட நிறைவையொட்டி மன்னார் பாலியாற்று விவசாயிகளுக்கு வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இலவசமாக விதைநெல்லை வழங்கிவைத்துள்ளார். நிகழ்வுகள் வெள்ளாங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றுள்ளது. மன்னார் மாவட்டத்தில் ஏறத்தாழ 20,000 ஹெக்டயர் பரப்பளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. எனினும் இந்த வருடம் நிலவிய கடும் வரட்சி காரணமாக நெல் உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னார் மாவட்டத்தில் விதைநெல்லுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதனைக் கருத்திற்கொண்டு, மானாவாரிச் செய்கையாக புழுதி விதைப்பை மேற்கொண்டுவரும் பாலியாற்று விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கப்பட்ட…

  13. வடமாகாணத்தில் ஜனாதிபதி பங்கெடுக்கும் நிகழ்வுகளில் கூட்டமைப்பு பங்குபற்றாது என வடக்கு மாகாண முதலமைச்சர் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். எதிர்வரும் 12,13,14 ஆகிய மூன்று தினங்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு வரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுக்கவுள்ளார். எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவர்கள் பார்வையாளர்களாக மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு சபையின் முன்னேற்றத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பல்வேறு உறுதி மொழிகள் ஜனாதிபதியினால் முதலமைச்சருக்கு வழங்கப்பட்டும் இதுவரை காலமும் அவை வழங்கப்படாது வடக்கு மாகாண சபை தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. இ…

  14. பல ஆண்டு காலமாக காரணமின்றித் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரியை விடுவிக்க கோரியும் வவுனியா பிரஜைகள் குழுவின் இன்று (10.10) வவுனியாவில் மௌன ஊர்வலம் இடம்பெற்றது. வவுனியா நகரசபை மைதானத்தில் ஆரம்பமான இவ் ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் வாயை கறுப்பு துணிகளால் கட்டியவாறு பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஊர்வலத்தில் பங்கேற்றிரந்தனர். வவுனியா நகரசபை மைதானத்தில் ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்டம் வவுனியா நீதிமன்ற வளாகம் வரை சென்றபோது நகரசபை பிரதான விதியில் பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர். எனினும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் சென்றமையினால் அவர்களை நீதிமன்றம் வரை செல்ல பொலிஸார் அனுமதித்திருந்தன…

  15. -நவரத்தினம் கபில்நாத் நீண்டகாலமாக வழக்குகள் எதுவுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் பாலேந்திரன் ஜெயக்குமாரியை விடுவிக்குமாறு கோரி வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்; இடம்பெற்றது. வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் நகரசபை முன்றலில் ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி, வவுனியா நீதிமன்ற வளாகம்வரை சென்றது. வவுனியா நகரசபை மைதானத்தில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, வவுனியா நீதிமன்ற வளாகம்வரை சென்றபோது நகரசபை பிரதான வீதியில் பொலிஸார் தடை ஏற்படுத்தினர். எனினும், அமைதியாக பேரணி சென்றமையால் அவர்களை நீதிமன்றம்வரை செல்வதற்கு பொலிஸார் அனுமதித்தனர். இந்த நிலையில், நீதிமன்றத்துக்கு முன்பாக கூடியவர்கள் பதாகைகளை தாங்கி…

  16. -யோ.வித்தியா யாழ். நகர் பகுதிகளிலுள்ள 16,000 மலசலகூட கழிவுகளை அகற்றி கல்லுண்டாய் வெளிப்பகுதியில் உரிய முறையில் அழிக்கவுள்ளதாகவும் இதன்மூலம் 80,000 மக்கள் பயனடைவார்கள் என்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சமூக அணிதிரட்டல் அலுவலர் ரி.பாலசுப்பிரமணியம் இன்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாது, யாழ்ப்பாண தரைத்தோற்றம் சுண்ணாம்புக்கல் பாறையால் ஆனது. பொதுவாக மலசலகூட குழிகளுக்கும் கிணறுகளுக்கும் இடையே 30 அடி இடைவெளி இருக்க வேண்டும். யாழ் நகர் பகுதிகளிலுள்ள பல கிணறுகளுக்கும் மலசல கூட குழிகளுக்கிடையிலான இடைவெளி 4, 5 அடியாகவே உள்ளது. அது மாத்திரமன்றி இந்த குழிகளின் ஆழத்தில் வித்தியாசம் இல்லாதுள்ளது. இதன் காரணமாக மலசலகூட கழிவு நீர் (கநஉயட) கி…

  17. அன்புடையீர், வணக்கம் இலங்கை மீதான ஐ.நா மனித உரிமை ஆணையர் அலுவலக விசாரணைக்கு (OISL) சாட்சியங்களையும் ஆதாரங்களையும் அனுப்ப இன்னும் இரண்டு வாரங்களே மீதம் உள்ள நிலையில் – அது குறித்து சில முக்கியமான தகவல்களை அளிக்க விரும்புகிறோம்.. ஐ.நா விசாரணை ஆணையத்துக்கு அனுப்பப்படும் எல்லா தகவல்களையும் விசாரணை ஆணையம் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக, வெளியிலிருந்து யாரும் தகவல்களை கேட்டு அனுப்பத் தேவை இல்லை. சட்டத்தரணி எதிரில் கையொப்பம் இடப்பட்ட தகவல்கள் அவசியமற்றவை. ஏனெனில், ஐ.நா விசாரணை என்பது நீதிமன்ற விசாரணையோ, தீர்ப்பாய விசாரணையோ அல்ல. இது ஒரு உண்மை அறியும் விசாரணை மட்டுமே. விசாரணைக்கு தேவைப்படும் முக்கிய தகவல் எது? குற்றங்களை நேரில் பார்த்த அல்லது பாதிக்கப்பட்ட நேரடி சாட்சியங…

  18. வவுனியா மாவட்ட நீதிமன்றம் முன்பாக இன்று மேற்கொள்ளப்படவிருந்த கவனயீர்ப்புப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவர் கி.தேவராசா தெரிவித்தார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாலேந்திரன் ஜெயக்குமாரி உள்ளிட்ட அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று போராட்டம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக தொடர்ந்தும் வைத்தியசாலையில் தான் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த போராட்டம் இன்று காலை 10 மணிக்கு திட்டமிட்ட படி இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, நெடுங்கேணி பகுதியில் தேவராசா நேற்று முன்தினம் இனந்தெரியாத நபர்களினால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வைத்தியசாலை…

  19. அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கைக்கும் அரசுக்கும் எதிரான சேறுபூசும் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்கிறன இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான சிறப்பான திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என சிரேஷ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். ஆனால், இதனை கவனத்தில் கொள்ளாது அரச சார்பற்ற நிறுவனங்கள் சேறு பூசும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக சிரேஷ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேலும் தெரிவிக்கையில்; அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கைக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக சேறு பூசும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஓர் ஆக்கம் தான் ஐ.நா. மனித உரிமை பேரவைக் குழுக் கூ…

  20. 2016 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தக்கூடாது தற்போதைய ஜனதிபதி, மஹிந்த ராஜபகஷவின் பதிவிக்காலம் 2016ஆம் ஆண்டே நிறைவடைகின்றது. அவ்வராறன நிலையில் அதற்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தலை நடத்தப்படாது ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமாயின் அச்செயற்பாடனது சர்வாதிகார ஆட்சிக்கு வித்திடுவதாக அமையும் என எச்சரித்துள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா நிறைவேற்று அதிகார முறைமையை ஒழித்து ஜனநாயகத்தை நிலைநாட்டும் இலக்குக் கொண்ட அனைத்துச் சக்திகளுடனும் ஒன்றுபட்டு செயற்படத்தயார் எனவும் அறிவித்துள்ளார். அடுத்தடுத்து இரண்டு தேசிய தேர்தல்கள் இடம்பெறவுள்ளதாக வௌியான தகவல்கள், ஜனாதிபதி மூன்றாவது தடவையாக போட்டியிடுதல், நிறைவேற்று அதிகார ஒழிப்பு மற்றும் அவருடைய சமகால…

  21. வவுனியா பிரஜைகள் குழுத் தலைவர் கிருஸ்ணபிள்ளை தேவராசா கொலை முயற்சி தாக்குதல் ஒன்றிலிருந்து உயிர் தப்பியுள்ளார். நெடுங்கேணியிலுள்ள தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை இன்றிரவு மோட்டார் சைக்கிளில் சென்றவர்களால் அவர் தாக்கப்பட்டிருந்தார். எதிர்வரும் 10ம்; திகதி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றைச் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற் கொண்டிருந்ததற்காக அவர் இருமீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. ஆர்ப்பாட்டமா செய்யப் போகின்றாய், அதற்கிடையில் உன்னைக் கொல்லுவோம் என்று கொச்சை தமிழினில் மிரட்டி அச்சுறுத்தியே மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் அவரைத் தாக்கியிருக்கின்றார்கள். காயமடைந்த அவர், நெடுங்கேணியில் அனுமதிக்கப்பட்டு இப்போது, வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று …

  22. மகிந்த ராஜபக்ச அடுத்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள நிலையில் நகரின் முக்கிய பகுதிகள் படையினராலும்,மாநகர சபையினராலும் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக நீண்ட காலமாக பராமரிக்கப்படாமல் இருந்த புல்லுக்குளம் தற்போது யாழ்.மாநகர சபையினரால் துப்பரவு செய்யப்பட்டு வருகிறது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=512193529609174089#sthash.miyiowvo.dpuf

  23. மஹிந்த கிளிநொச்சியில் கையளிக்கவுள்ள காணி உறுதிகள் படையினரது குடும்பங்களிற்காவென சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. எனினும் இது வரை யாரிற்கு இந்த காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளதென்ற தகவல்கள் இல்லாதேயுள்ளது. வடமாகாணத்தில் கடந்த 30 வருடங்களாக காணி உறுதிகள் வழங்கப்படாத 18 ஆயிரத்து 958 பேருக்கான காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளதாக வடமாகாண காணி ஆணையாளர் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்படி காணி உறுதிகள் எதிர்வரும் 12ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால், கிளிநொச்சி மத்திய கல்லூரியில் வைத்து வழங்கப்படவுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 3886 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த 3642 பேருக்கும், மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 7202 பேருக்கும், வவுன…

  24. இலங்கை ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவின் வடக்கிற்கான வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வீதிகளில் இராணுவத்தினர் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு வீதி சோதனைகளும் இடம்பெற்று வருகின்றன. அத்துடன் அவர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் பங்கெடுக்கவுள்ளோர் பெயர் விபரங்கள் பாதுகாப்பு தரப்பினால் திரட்டப்பட்டுள்ளது. குறிப்பாக அவரது பாடசாலை விஜயத்தின் போது அவருக்கு சிற்றுண்டி தயாரிக்கும் பணியினில் ஈடுபடுத்தப்படவுள்ள ஆசிரியைகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. தாம் தேவையற்று கல்வி திணைக்கள அதிகாரிகளால் அழுத்தங்களை எதிர்கொண்டிருப்பதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக ஜனாதிபதியின் மைத்துனரான நடேசன் வட்டுக்கோட்டையில் தனது பல…

  25. -குணசேகரன் சுரேன் யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து தேசிய கால்பந்தாட்ட அணிக்குழாமில் இணைந்ததன் மூலம் யாழ். பல்கலைக்கழகத்திற்கு தேசிய ரீதியில் அடையாளம் ஒன்றை பெற்றுக்கொடுத்துள்ளார் கலைப்பீட மாணவன் செபமாலை ஞானரூபன் (ஞானம்). 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள தெற்காசிய நாடுகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டிகளில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியின் 23 பேர் கொண்ட குழாமில் ஞானம் இடம்பிடித்துள்ளார். 32 பேர் கொண்ட தேசிய அணியில் இடம்பெற்றிருந்த ஞானம், 23 பேர் கொண்ட குழாமில் தெரிவு செய்யப்படாத நிலையில் இருந்தார். இருந்தும் இவரது தனித்திறன் தொடர்பில் அறிந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர், 23 பேர் கொண்ட அணிக்குழாமில் ஞானத்தை இணைத்து கொண்டதாக கடந்த வாரம் கடிதம் மூலம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.