Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. -குணசேகரன் சுரேன் யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து தேசிய கால்பந்தாட்ட அணிக்குழாமில் இணைந்ததன் மூலம் யாழ். பல்கலைக்கழகத்திற்கு தேசிய ரீதியில் அடையாளம் ஒன்றை பெற்றுக்கொடுத்துள்ளார் கலைப்பீட மாணவன் செபமாலை ஞானரூபன் (ஞானம்). 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள தெற்காசிய நாடுகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டிகளில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியின் 23 பேர் கொண்ட குழாமில் ஞானம் இடம்பிடித்துள்ளார். 32 பேர் கொண்ட தேசிய அணியில் இடம்பெற்றிருந்த ஞானம், 23 பேர் கொண்ட குழாமில் தெரிவு செய்யப்படாத நிலையில் இருந்தார். இருந்தும் இவரது தனித்திறன் தொடர்பில் அறிந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர், 23 பேர் கொண்ட அணிக்குழாமில் ஞானத்தை இணைத்து கொண்டதாக கடந்த வாரம் கடிதம் மூலம…

  2. 20 வருட சிறை தண்டனைக்கு பிறகு நளினிக்கு பரோல் கூட மறுக்கப்பட்ட அநீதியை பற்றி முணுமுணுக்காதவர்கள்தான் இப்போது ஜெயலலிதாவுக்கு அநீதி என்று ஆவேசப்படுகிறார்கள் என்று கூறியுள்ள அரசியல் விமர்சகரும் மூத்த பத்திரிகையாளருமான ஞானி, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து ஞானி கூறியிருப்பதாவது: ஊழல் ஒரு சமூக விரோத நடவடிக்கை, ஒரு மனித உரிமைக்கெதிரான குற்றச்செயல் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் உச்சநீதிமன்றக் கருத்தைக் காரணம் காட்டி ஜெயலலிதாவுக்கும் மூவருக்கும் ஜாமீன் மறுத்ததை வரவேற்கிறேன். இது எல்லா ஊழல் அரசியல்வாதிகளுக்கும் வரும் நாட்களில் பின்பற்றப்படவேண்டும். அதே சமயம் இறுதியில் நிரபராதி என்று ஒருவர் தீர்ப்பாகும் நிலை ஏற்பட்டால், தேவையற்…

  3. அமைச்சரவை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர்களான பி. திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன ஆகியோர் தமது செல்வாக்குகளை பயன்படுத்தி இவ்வருட வரவு- செலவு திட்டம் மலையக வீடமைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஆவண செய்யமுடியுமா என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் சவால் விடுத்துள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று வியாழக்கிழமை (09) கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள சமயத்தில், இந்த அரசாங்கத்துக்குள்ளே தமக்கு இருக்கின்ற செல்வாக்குகளை கூட்டாகவோ, தனித்தனியாகவோ பயன்படுத்தி, உரிய அழுத்தம் கொடுத்து, மலையகம் நீண்ட காலம…

  4. தற்போதைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஊடகங்களில் குறிப்பிடப்பட்டதனைப் போன்று துரித கதியில் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா தெரிவித்துள்ளார். சில ஊடகங்களில் நரேந்திர மோடி இலங்கைக்கு விரைவில் விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் துற்போதைய மோடி இலங்கைக்கு விஜயம் செய்யக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். சீன ஜனாதிபதி ஜப்பான் பிரதமர் ஆகியோர் இலங்கைக்கு விஜயங்களை செய்துள்ள நிலையில், இந்திய பிரதமரும் ஜனவரி மாதமளவில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்திய …

  5. முல்லைத்தீவில் மட்டும் 34,191 ஏக்கர் நிலம் அபகரிப்பு! ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார் ரவிகரன்! வடமாகாணசபையின் காணி அபகரிப்பு தொடர்பான இன்றைய விசேட அமர்வில் 5 மாவட்டங்களிலும் காணிகள் அபகரிப்பு விபரங்களை மாகாணசபை உறுப்பினர்கள் அம்பலப்படுத்தினர். இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் குறைந்தது 34 191 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் புள்ளிவிபரங்களுடன் வெளிப்படுத்தினார். அவர் வெளிப்படுத்திய விபரங்களின் படி முல்லைத்தீவில் பிரதேச வாரியாக குறைந்தது, கரைதுறைப்பற்று 17919 ஏக்கர் ஒட்டுசுட்டான் 12585 ஏக்கர் புதுக்குடியிருப்பு 1008 ஏக்கர் துணுக்காய் 2350 ஏக்கர் மாந்தை கிழக்கு 329 ஏக்கர் என்றவாறாக காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. …

    • 0 replies
    • 486 views
  6. எதிர்வரும் தேசிய தேர்தல் ஒன்றில் எந்த கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தீர்மானிப்பதற்கு, பிரதான கட்சிகள் தமிழ் மக்களுக்காக முன்வைக்கப்படுகின்ற தீர்வுத் திட்டங்கள் குறித்து ஒப்பு நோக்கப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். சிறிலங்காவில் எந்த கட்சி ஆட்சி ஏறினாலும் அது தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் என்று நம்ப முடியாது. ஆனால் சில மாற்றங்கள் ஏற்படலாம். எனவே அந்த கட்சிகள் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் முன்வைக்கின்ற தீர்வுகளை முழுமையாக ஆய்வு செய்து, அதன் அடிப்படையிலேயே எந்த கட்சிக்கு …

    • 0 replies
    • 330 views
  7. சொந்த மண்ணில் நிலம் இன்றிய அனாதைகளாக தமிழ் மக்கள்:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்- வடக்கில் பியர் கம்பெனிகளிற்கும் நிலம் அரசால் ஒதுக்கி வழங்கப்படுகின்றது. இன்னொரு புறம் மூங்கில் தோட்டம் அமைச்சகம் எனவும் சிங்களவர் ஒருவருக்கு வவுனியாவினில் ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் சொந்த மண்ணில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணி அற்றவர்களாகவும் அகதிகளாகவும் இருப்பதாக குற்றஞ்சாட்டுக்களை வடமாகாண சபை உறுப்பினர்கள் எழுப்பியுள்ளனர். வடமாகாணசபையின் காணி சுவீகரிப்பு தொடர்பான காணி விசேட அமர்வு இன்று கைதடியிலுள்ள பேரவை கட்டடத்தில் இடம்பெற்றிருந்தது. கூட்டமைப்பு சார்பு உறுப்பினர்கள் பலரும் தமது மாவட்டங்களில் இடம்பெற்றுவரும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை புள்ளிவிபரங்களுடன் அம்பலப்ப…

  8. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சரவையில் மற்றுமொருவர் இணைந்து கொண்டுள்ளார். மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறைத் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பெ.இராதகிருஸ்ணன் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் இராதகிருஸ்ணன் பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். பொதுப்பொழுது போக்குதுறை மற்றும் தாவரவியல் பூங்கா ஆகிய துறைகளுக்கான பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை சமூகத்தின் ஆதரவினை திரட்டும் முனைப்புக்களில் ஒன்றாக இந்த பிரதி அமைச்சர் பதவி கருதப்படுகின்றது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சவால்களை எதிர்நோக்க நேரிடும் என்ற அச்சம் காரண…

  9. இலங்கை விமானமொன்று நடு வானில் இயந்திரக் கோளாறுக்கு உள்ளானது:- 09 அக்டோபர் 2014 இலங்கையின் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று நடு வானில் இயந்திரக் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சியிலிருந்து கொழும்பு புறப்பட்ட விமானமே இவ்வாறு நடு வானில் இயந்திரக் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் ஓர் என்ஜின் இயந்திரக் கோளாறினால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எயார்பஸ் ஏ320 ரக விமானமே இவ்வாறு இயந்திரக் கோளாறுக்கு உள்ளானது. இந்த விமானத்தில் 142 பேர் பயணித்துள்ளனர். விமானம் பறக்க ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே இயந்திர கோளாறை கண்டு கொண்ட விமான ஓட்டி மீளவும் விமானத்தை திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறக்கியுள்ளார். இதனால் ஆபத்துக்கள் …

  10. பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சித்திரவதையில் இருந்து விடுதலை ( ப்ரீடம் ப்ரம் டோச்சர் ) என்ற அமைப்பு இலங்கையில் தொடர்ந்தும் சித்திரவதைகள் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தியுள்ளது. அமைப்பின் தலைவர் ஜூலியட் கொஹென் ஜெனீவா மனித உரிமைகள் குழுவின் அமர்வில் நேற்று பங்கேற்றபோது இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். எனினும் இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் கரிசனை கொள்ளாது இருந்து வருவதாக அவர் குற்றம் சுமத்தினார். இலங்கையில் தொடரும் பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் என்பன தொடர்பில் இலங்கை அரசாங்கம் மறுப்பை வெளியிட்டு வருகிறது. எனினும் அதற்கான ஆதாரங்களை தாம் மனித உரிமைகள் குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக கொஹேன் குறிப்பிட்டார். இலங்கையில் இடம்பெற்ற நெருப்பால் சுட்ட 73 …

    • 0 replies
    • 684 views
  11. பாரிய கட்டிடங்களை கட்டி அபிவிருத்தி நடப்பதாக காண்பிப்பதற்கே இலங்கை அரசு பாடுபடுகின்றது. ஆனால் எமது மக்களது அன்றாட வாழ்விலோ எந்தவொரு முன்னேற்றமும் கண்டிருக்கவில்லையென தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன். வடக்கிற்கு விஜயமொன்றை நேற்று வருகை தந்திருந்த அமெரிக்க இராஜங்க திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். வடமாகாண தேர்தலை சர்வதேச அழுத்தங்களையடுத்தே இலங்கை அரசு நடத்தியது. ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபையினை இயங்கவிடாது அதே இலங்கை அரசு தடுத்து வருகின்றதெனவும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கை அரசு வடமாகாணசபையினை இயங்கவிடாது முட்டுக்கட்டை போடுவது தொடர்கின்றது. ஆனால் மக்களிற்கு இயல…

    • 0 replies
    • 660 views
  12. மட்டக்களப்பு தமிழ்ச்சங்க கட்டட நிதிக்காக தமிழ்ச்சங்கம் வழங்கும் தென்னிந்திய விஜய் தொலைக்காட்சி கலைஞர்களின் 'சுப்பர்சிங்கர் இசை நிகழ்ச்சி' அக்டோபர் 5ம் திகதி மாலை 6.30 மணிக்கு மட்டக்களப்பு விபுலானந்தா இசைநடன பல்கலைக்கழக உள்ளரங்கில் நடைபெறவுள்ளது. இதில் உலக மக்களை வியக்கவைத்த விஜய் தொலைக்காட்சி கலைஞர்களான திவாகர், நித்தியஸ்ரீ, சரத்சந்தோஷ், சோனியா, வைஜெயந்தி, அழகேசன் ஆகியோர் பாடவுள்ளனர். தகவல்: battinews http://www.battinews.com/2014/09/ticket-center-super-singer-music-concert.html?m=1

    • 69 replies
    • 4.3k views
  13. தேசிய மாவீரர் நாள்தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கும் புனித நாள். 27.11.2014 வியாழக்கிழமை மதியம் 12:30 மணி Forum Fribourg, Route du Lac 12, 1763 Granges-Paccot எத்தகைய இடர்கள் , சூழ்ச்சிகள், சவால்களை எதிர்கொண்டாலும் எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுக்க உழைப்போமென இப் புனித நாளில் உறுதியெடுக்க தாங்கள் அனைவரும் கலந்து கொள்வதோடு, தேசப்புதல்வர்களின் தியாகத்தை உலகறியச் செய்யும் வகையில் உங்களுடன் கல்விகற்கும், வேலைபார்க்கும் வேற்று நாட்டு நண்பர்களையும் அழைத்து வருமாறும் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினர். http://www.pathivu.com/news/34420/57//d,article_full.aspx

    • 0 replies
    • 604 views
  14. இலங்கையின் பொதுபல சேனா இயக்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ராஸ்ட்ரிய ஸ்வாயம்செவக் சங்க என்ற இந்தியாவின் இந்து தேசியவாத அமைப்பு நிராகரித்துள்ளது. கடும்போக்குடைய பொதுபல சேனா இயக்கத்துடன் உறவுகளைப் பேணும் உத்தேசம் எதுவும் கிடையாது என அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இந்த இரண்டு அமைப்புக்களும் அந்தந்த நாடுகளின் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகித்து வரும் அமைப்புக்களாகவே கருதப்படுகின்றது. பொதுபல சேனா இயக்கத்துடன் தொடர்புகளை பேண எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என ராஸ்ட்ரிய ஸ்வாயம்செவக் சங்க என்ற அமைப்பின் பேச்சாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார். தமது அமைப்பு சர்வதேச உறவுகளையோ அல்லது கூட்டுறவினையோ பேணியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பொத…

  15. ஓமந்தைச் சோதனைச் சாவடியில் கெடுபிடிகள் அதிகரிப்பு- யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு கொழும்பில் இருந்து அனுப்பப்பட்ட சிறப்பு படை அணி ஒன்று பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் கிள்நொச்சி ஆகிய நகரங்களில் கடமையாற்றிய பொலிஸாருக்குப் பதிலாக கொழும்பு, மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அங்கு ஏற்கனவே பணியாற்றிய தமிழ் பொலிஸார் பலர் ஜனாதிபதி பயணம் செய்யாத வேறு பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும்; தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இருந்து அனுப்பப்பட்ட சிறப்பு படை அணி தற்போது யா…

  16. முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தில் யுத்தத்தினால் சுமார் 48 சிறார்கள் தமது தாய் தந்தையர்களை இழந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இலங்கை அரசு மேற்கொண்ட இன அழிப்பு யுத்தத்தால் பல ஆயிரக்கணக்கான சிறுவர்கள் தாய் தந்தையர்களை இழந்து அனாதையாகியுள்ளனர். இதுதொடர்பில் முழுமையான விபரங்கள் கணிப்பிடப்படவில்லை. பாடசாலைகள் தோறும் சுமார் எழுபது எண்பதுக்கு மேற்பட்ட மாணவர்கள் அனாதைகளாக்கப்பட்டுள்ளமையை தெரிய வந்தது. இந்த எண்ணிக்கை தமிழர் தாயகத்தில் பல்லாயிரத்திற்கும் அதிகமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தாய் தந்தையர்களை இழந்த சுமார் ஆயிரக்கணக்கான சிறார்கள் வாழ்ந்து வருகின்றனர். துணுக்காய் பிரதேச செயலகர் பிர…

  17. வடக்கில் சுமார் 1200 பாடசாலை சிறுவர் சிறுமியர் உடலில் குண்டு பாகங்களுடன் வாழ்ந்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்களின் இரும்புப் பாகங்கள் உடலில் காணப்படுவதாகவும், தளும்புகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் இந்தக் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வன்னியில் பெரும் எண்ணிக்கையிலான சிறுவர் சிறுமியர் பெற்றோரை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறான பாடசாலை மாணவ மாணவியர் கடுமையான உளவியல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தாக்குதல்களில் எறிகணைப் பாகங்களை இந்த சிறு…

  18. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தான வடக்குமாகாணத்தில் உள்ள சாலைகளுக்கு 70 புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம். காரைநகர், பருத்தித்துறை , கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய 7 சாலைகளுக்கும் என தலா 10 பஸ்கள் வீதம் 70 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து வடக்கு மாகாண பிரதான பிராந்திய முகாமையாளர் எஸ். அஸ்கரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, வடக்கு மாகாணத்தின் 7 சாலைகளிலும் ஏற்கனவே 200 பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் மேலும் 70 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு இருந்த பற்றாக்குறை நீக்கப்பட்டுள்ளது. குறித்த பஸ்கள் தற்போது உள்ளூர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.எனினும் 13 ஆம் திகதி …

  19. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:- பிரிட்டனில் இலங்கையர்கள் அடைக்கலம் பெறுவதற்காக சட்டத்தரணிகளின் ஆலோசனையுடன் தங்களை சித்திரவதைக்குட்படுத்தி கொள்வதாக பாதுகாப்பு அமைச்சு தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது. பிரிட்டனை இது குறித்து விசாரணைசெய்யுமாறும் அது கோரியுள்ளது. சட்டத்தரணிகளின் அறிவுறுத்தல்களுக்க ஏற்ப இலங்கையர்கள் அடைக்கலம் பெறுவதற்காக தங்களுக்கு காயங்களை ஏற்படுத்திக் கொள்வதாகவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு பிரிட்டனில் இது இடம்பெறும் இடங்களையும் குறிப்பிட்டுள்ளது. பின்னர் இவர்கள் தங்கள் புகலிடக்கோரிக்கைகளுக்கு வலுசேர்ப்பதற்காக மருத்துவர்களிடமிருந்து சான்றிதழ்களை பெறுவதாகவும், இலங்கையில் யுத்தத்திற்க்கு பின்னரும் சித்திரவதைகள் பரந்துபட்…

  20. இலங்கை அரசியல் யாப்பின் அடிப்படையில் ஒருவர் மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது. அரசியல் யாப்பையும் நாட்டின் சட்டதிட்டங்களையும் மீறி ஒருவர் செயற்படுவாராயின் அவர் தேசத்துரோகியாகவே கருதப்படுவர். அந்தவகையிலேயே ஜனாதிபதி மஹிந்தவும் அரசில் யாப்பிற்கு முரணான வகையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிட்டால் அவர் ஒரு தேசத்துரோகியாவார். எனவே தேசத்துரோகிகள் பட்டியலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே முதலிடத்தில் உள்ளார் என சுட்டிகாட்டியுள்ள ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா அவ்வாறானதொரு சட்டவிரோத தேர்தலில் ஜனநாயக கட்சி தேர்தலை புறக்கணிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சியினால் இன்று கோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந…

  21. கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஊவா மாகாண சபை தேர்தலின் போது, ஹாலி-எல பொலிஸ் சோதனைச்சாவடிக்கு அருகில் வைத்து, பதுளை பிரதேச அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படும், லங்காதீப பத்திரிகையின் ஹெடம்பிட்டிய பிரதேச ஊடகவியலாளர் சந்தன குறுப்பு ஆராச்சியை அமைச்சர் மேர்வின் சில்வா சந்தித்தார். தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் சிகிச்சை பெற்றுவரும் பன்னிப்பிட்டிய தனியார் வைத்தியசாலைக்கு சென்ற பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா, ஊடகவியலாளரிடம் நலம் விசாரித்தார். பின்னர், குறித்த ஊடகவியலாளரின் வைத்திய செலவுகளுக்காக 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலையை வழங்கினார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/129766--1-.html

  22. போர் வெற்றியை நினைவுகூரும் தாதுகோபத்தை அனுராதபுரத்தில் அமைக்கும் பணிகள் தீவிரம்! [Wednesday 2014-10-08 07:00] 30 வருட யுத்தத்தில் அரசாங்கத்தினால் பெறப்பட்ட வெற்றியை நினைவு கூரும் வகையில், அநுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் “சந்தஹிரு சாய” (சூரியர் சந்திரர் தூபி) வுக்கு புனித தாதுக்களை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு எதிர்வரும் நவம்பர் 23ம் திகதி நடைபெறவுள்ளது. பெறுமதி வாய்ந்த மாணிக்கக் கற்கள் மற்றும் 12 கிலோ எடை கொண்ட சுமார் 1 1/2 அடி உயரமான புத்தர் சிலை மற்றும் தங்கத்தினாலான அரச மரம் என்பனவும் தாது கோபுரத்துள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. யுத்தத்தில் உயிரிழந்த இருதரப்பினரையும், அயல்நாட்டிலிருந்து வந்து இந்த யுத்தம் காரணமாக உயிரிழந்த படையினர்,…

  23. - நா.நவரத்தினராசா பொறியியலாளர் வேலை செய்கின்றேன் எனக்கூறி வெளிநாடுகளில் கழிவு அறைகளை சுத்தப்படுத்திவரும் பணத்தில் பெரும் பகுதியை இங்கு (இலங்கை) தமது உற்றார்களுக்கு அனுப்பும் இளைஞர்களை வெளிநாடுகளில் சந்தித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கைதடி அரச முதியோர் இல்லத்தில் நடைபெற்ற சர்வதேச முதியோர் தின கொண்டாட்ட நிகழ்வுகளின் இறுதிநாள் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (07) மாலை கைதடி அரச முதியோர் இல்ல வளாகத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'கழிவு அறை எந்திரிகள் என்றுதான் அவர்களை அங்கு கூப்பிடுவார்கள். ஆகவேதான் அவர்கள் தங்களை பொறியியலாளர்கள் என்று கூறுகின்றனர். அதில் தவறு ஏதும் இல்லை. அவ…

  24. நாட்டு மக்களிடையே சமத்துவம், இணக்கப்பாடு, விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வு, மதிப்பளிப்பு போன்றவை இருந்தால் மட்டுமே நாடு வளம் பெறும். முன்னேற்றமடையும். இதைவிடுத்து இனப்பகை, எதிர்ப்புணர்வு, புறக்கணிப்பு, அடக்குமுறை போன்றவை மேலோங்கி செயற்பட்டால் நாடு அல்லல்படும். அவலப்படும். இதற்கு நமது நாடும் சான்றாகவுள்ளது. எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, முடிவுகட்ட நாட்டு நலனில் அக்கறை கொண்டோர் முன்வர வேண்டும். நாட்டின் இன்றைய தேவையும் அதுவாகவேயுள்ளது. இதற்குத் தடையாக இருப்பவர்கள், ஊறு செய்பவர்கள், அதிகார நோக்கம் ö0காண்டவர்கள் அதிலும் முக்கிய பங்கு வகிப்பவர்கள் அரசியல் வாதிகள் என்பதை மறைக்க முடியாது. நாடு என்பது நிலப் பரப்பு கட்டிடங்கள், பாலங்கள், பாதைகள், துறைமுகங்கள் போன்ற…

  25. இந்து சமூகத்தை முஸ்லிம் மற்றும் கிறிஸ்த்தவ சமூகங்களுக்கு எதிராக திருப்பி விடும் முயற்சியில் பௌத்த அடிப்படைவாத அமைப்பான பொதுபல சேனா ஈடுபட்டுள்ளது. இதற்காக இந்துவாத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக பொதுபல சேனாவின் பிக்குகள் அறிவித்துள்ளனர். சிறிலங்காவில் பொதுபல சேனா அமைப்பு முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்த்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வந்துள்ளது. அவர்கள் பயங்கரவாத அமைப்பு என்று ஏற்கனவே அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்;துக்களையும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்த்தவ சமூகங்களுக்கு எதிராக தூண்டிவிட பொதுபல சேனா தீர்மானித்துள்ளது. இதன் மூலம் இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதே அதன் திட்டமாக இருக்கிறது.http://www.pathivu.com/news/34412/57//d,art…

    • 0 replies
    • 478 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.