ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143554 topics in this forum
-
ஜிகாத்துக்கு எதிரான போராட்டத்தில் பொது பலசேனாவுடன் கைகோர்ப்பதாக விராது தேரர் அறிவிப்பு! [Monday 2014-09-29 08:00] இனிவரும் காலங்களில், இஸ்லாமிய ஜிகாத்துக்கு எதிரான போராட்டத்தில், பொது பல சேனா அமைப்புடன் மியன்மாரின் 969 அமைப்பு ஒன்றிணைந்து செயற்படும் என்று அந்த அமைப்பின் தலைவரும் நிறுவனருமான அஸின் விராது தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று இடம்பெற்ற பொதுபல சேனா அமைப்பின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “பொதுபல சேனா அமைப்பின் இந்த பௌத்த தேசிய மாநாடு பௌத்தர்களான எமக்கு மிகவும் முக்கியமானது.இன்று உலகம் முழுவதும் இஸ்லாமிய போராளிகளால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. பௌத்தர்…
-
- 1 reply
- 504 views
-
-
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு வடக்கில் பொலிஸார் பதிவு நடவடிக்கை! வடக்குக்கு இரண்டு நாள் பயணமாக எதிர்வரும் 12ஆம், 13ஆம் திகதிகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருகிறார். ஜனாதிபதியின் வருகையை ஒட்டி ஏற்கனவே வலி.வடக்கு பகுதிகளில் வீட்டு வேலிகள் இராணுவத்தினரால் அற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது பரவலாக பொலிஸார் ஆட்பதிவு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிவில் உடையில் வீடுகள், கடைகள், நிறுவனங்களுக்கு செல்லும் பொலிஸார் அங்குள்ளவர்களது விபரங்களை பெற்று வருகின்றனர். முன்னறிவிப்பற்ற இந்த செயற்பாடுகள் காரணமாக மக்கள் அச்சமடைத்துள்ளனர். எனினும் ஜனாதிபதியின் வருகையை ஒட்டி பாதுகாப்பு காரணங்களுக்காகவே தாம் பதிவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர…
-
- 0 replies
- 308 views
-
-
நல்லூரில் உண்ணாநோன்பு தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி எதிர்வரும் 3, 4, 5 ஆம் திகதிகளில் நல்லை ஆதீனத்துக்கு முன்பாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சி அறிவித்துள்ளது - See more at: http://malarum.com/article/tam/2014/09/29/5847/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-.html#sthash.WuGTGIQK.dpuf
-
- 0 replies
- 471 views
-
-
புலிகள் மனித கேடயங்களாகப் பயன்படுத்தினரா? – சாட்சியமளித்தோரிடம் ஆணைக்குழு கேள்வி. [Monday 2014-09-29 08:00] காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவினர், முழங்காவிலில் நேற்று நடத்திய இரண்டாவது அமர்வில், 43 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சாட்சியமளித்தவர்களில் அதிகளவானோர் படையிருக்கும், புலனாய்வாளர்களுக்கும் எதிராகவே குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணி வரையில் மேற்படி அமர்வு நடைபெற்றிருந்தது. இதில் கடந்த காலத்தில் நடைபெற்ற அமர்வுகளில் இவ் ஆணைக்குழுவினால் கேட்கப்படாத பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. குறிப்பாக 2009ம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் பொதுமக்கள் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென…
-
- 0 replies
- 521 views
-
-
மின்கட்டணக் குறைப்பு செப்ரெம்பர் 16ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்! [Monday 2014-09-29 08:00] மின்கட்டண குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று மின்வலு சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். நுரைச்சோலை அனல் மின் நிலையம் செயற்பட ஆரம்பித்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 25சதவீத மின்கட்டணம் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கருத்து தெரிவிக்கையில், 25 சதவீத மின்கட்டண குறைப்பானது குடியிருப்பாளர்களுக்கு பாரிய நன்மையைப் பெற்றுக் கொடுத்துள்ளது. 25வீத மின்சார கட்டண குறைப்பு இம்மாதம் (செப்டம்பர்) 16ம் திகதி முதல் அமுலாகும். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வ…
-
- 0 replies
- 234 views
-
-
அரசாங்க உதவிகள் ஒன்றும் வேண்டாம், பிள்ளையை தந்தாலே போதும்! – வெள்ளை வானில் கடத்தப்பட்டவரின் தாய் கதறல். [Monday 2014-09-29 08:00] வவுனியா அகிலன் லொச்சில் வேலை செய்து கொண்டிருந்த தனது மகனை 2009.01.08 திகதி வெள்ளை வானில் வந்தவர்கள் கடத்திச் சென்று விட்டனர் என ஆணைக்குழு முன் தாயொருவர் சாட்சியமளித்தார். காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப் பதிவுகள் முழங்காவில் மத்திய கல்லூரியில் நேற்று நடைபெற்றது. அதன்போதே தாயொருவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார். அவர் மேலும் சாட்சியமளிக்கையில், யாழ்ப்பாணம் போய் விட்டோம். வறுமை காரணமாக மகன் வவுனியா அகிலன் லொச்சில் இரவு நேரம் வேலைக்குப் போய் வந்தார். அந்த வருமானத்தில் தான் நாங்கள் வாழ்ந்து…
-
- 0 replies
- 514 views
-
-
ஆளும்கட்சி அமைச்சர்கள் ஐதேகவில் இணையத் தயாராகின்றனர்? [Monday 2014-09-29 08:00] ஆளும்கட்சியின் அமைச்சர்கள் பலரும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய உள்ளதாக ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரே தெரிவித்துள்ளார். மாத்தளை, மொரகொட பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் விரைவில் இணைந்து கொள்ள உள்ளனர். ஊவா மாகாணசபைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளன. ஆளும் கட்சியின் சில அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ஆளும் கட்சிக்குள…
-
- 0 replies
- 369 views
-
-
பொது பலசேனாவுக்கு ஒத்துழைக்க ரணில், அனுரகுமாரவுக்கு ஒரு வார கால அவகாசம்! – ஞானசார தேரர் அறிவிப்பு. [Monday 2014-09-29 08:00] ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அனுரகுமார திஸநாயக்கவுக்கும் ஒரு வாரகால அவகாசத்தை வழங்கியுள்ளார் பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர். அத்துடன் முஸ்லிம் கவுன்சிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மிரட்டல் விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற பொதுபல சேனாவின் மாநாட்டிலேயே அவர் இந்த மிரட்டல்களை விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அரசாங்கத்திற்கு எச்சரிக்கையை விடுத்துள்ளோம். இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தமிழர்களின் ஆதரவையும் பெற முயலுவோம். மியன்மார் மதகுரு விராதுவின் இலங்கை …
-
- 0 replies
- 492 views
-
-
ஜனவரி 7ம் திகதி ஜனாதிபதித் தேர்தல்! [Monday 2014-09-29 08:00] ஜனாதிபதித் தேர்தல் பெரும்பாலும் அடுத்த ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதி நடைபெறும் என கொழும்பு செய்தி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இத்தகவலை ஊர்ஜிதப்படுத்தியதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனவரி 2 ஆம் வாரத்தில் புனித பாப்பரசர் இலங்கைக்கு வருகிறார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பதாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்கும் என நம்பப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்க வசதியாக, அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டமும் நேரத்துடன் முன்கூட்டியே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அதன் மீதான வி…
-
- 0 replies
- 523 views
-
-
புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் மூவர் 192 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்றிரவு வெளியாகின. இதில் முதல் கிடைத்த தகவல்களின்டி யாழ். மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை, சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலை, அளவெட்டி அருணேதயாக் கல்லூரியின் மாணவர்கள் மூவர் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். இதேசமயம் கிளிநொச்சி மாவட்டத்தில் சேர்ந்த மூன்று மாணவர்கள் 183 புள்ளிகளை பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர். அவர்கள் திரேசா பெண்கள் கல்லூரி, வட்டக்கச்சி ம.வி., கண்ணகிபுரம் ம.வி. ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்தவர்களாவர். http://malarum.com/article/tam/2014/09/27/5810/%…
-
- 19 replies
- 1.1k views
-
-
'தீர்வு வழங்கப்படாவிட்டால் அடக்கு முறைக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்து நாம் சாத்வீக போராட்டத்தில் குதிப்போம்' என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளைக்கான புதிய நிர்வாகிகளுக்கு வரபேற்பளிக்கும் நிகழ்வு, மட்டக்களப்பு, துளசி மண்டபத்தில் சனிக்கிழமை(28) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்தகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தீர்வு வழங்காவிட்டால் எமது கட்சியின் மாநாட்டு பிரகடனத்தின் பிரகாரம் நாம் எமது சாத்வீகப் போராட்டத்தை தொடங்குவோம். இதற்காக தமிழ் மக்கள் அனைவரும் எமக்கு பின்னால் அணிதிரள வேண்டும். இந்…
-
- 6 replies
- 644 views
-
-
திருகோணமலையில் இன்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கையாள்வதற்காக இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையில் அரசியல் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கட்சியின் பேச்சாளராக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பி. தலைமையில் திருகோணமலை நகரசபை பொதுநூலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் மேற்படி இரு தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. காலை 10 மணியிலிருந்து இரவு 7 மணி வரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இம்மாதம் வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 15 தீ…
-
- 1 reply
- 589 views
-
-
யாழ்ப்பாணத்தில் தற்போது சுத்தமான குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர் சுத்தமான குடிநீர் பிரச்சினைக்கு இரு காரணங்களை மக்கள் கூறுகின்றனர். ஒன்று- கல்சியத்தின் படிவு யாழ்ப்பாண நிலகீழ் (கிணறு) தண்ணீரில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை. இரண்டாவது- கடும் வரட்சி. இந்த இரண்டு காரணங்களிலும் முதலாவது காரணம் பெரும் பிரச்சினையாக யாழ்ப்பாணத்தில் தற்போது உருவெடுத்துள்ளது. யாழ்ப்பணத்தில் நிலகீழ் குடிநீரில் கல்சியப் படிவுகள் ஆரம்பகாலம் முதலே இருந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக குடிநீரில் கல்சியத்தின் படிவு நாளுக்கு நாள் அதிகரிப்பதாகவும் இதனால் கிணறுகளில் இருந்து எடுக்கும் நிரை குடிக்க முடியாமல் உள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர். அத்துடன் தேநீர் வை…
-
- 0 replies
- 437 views
-
-
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான இரண்டாவது அமர்வின் இன்றாம் நாள் இன்றாகும். முழங்காவில் மத்தியக் கல்லூரியில் இன்று நடைபெற்ற அமர்வின்போது 43 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்றைய அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்குமாறு 50 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய அழைப்பு விடுக்கப்பட்டிருந்தவர்களில் 40 பேர் சமூகமளித்து இன்று தமது சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர். இதுதவிர மேலும் 25 பேரின் புதிய முறைப்பாடுகளையும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பதிவு செய்துள்ளதுடன் அவர்களில் மூவரின் சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் 30 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக…
-
- 0 replies
- 347 views
-
-
பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில், மியன்மாரின் பௌத்த பயங்கரவாதியான ஆசின் ஆரத்து சிறிலங்காவுக்கு வருகைத் தந்துள்ளார். பர்மாவில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை அவர் கொலை செய்துள்ளார். இதனால் அவருக்கு வீசா வழங்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. எனினும் இதனையும் மீறி சிறிலங்கா அரசாங்கம் அவருக்கு வீசா வழங்கி இருந்தது. சிறிலங்காவில் இயங்கும் பௌத்த பயங்கரவாத அமைப்பான பொதுபல சேனாவினால் நடத்தப்படும் மாநாடு ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக அவர் சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருக்கிறார். இந்த மாநாட்டில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பௌத்தர்களின் ஏக பிரதிநிதியாக பொது பலசேனாவால் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.http://www.pathivu.com/news/34188/57//d,article…
-
- 0 replies
- 563 views
-
-
வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு தொடர்பில் ஐ. நா வின் மனித உரிமைகள் பேரவையின், முக்கிய உயரதிகாரி ஒருவரிடம் ஆவணங்களுடன் நேரில் சாட்சியமளித்துள்ளார். ஜெனீவாவில் கடந்த 19/09/2014 அன்று பிற்பகல் 2.30 தொடக்கம் பிற்பகல் 4.45 வரை வாய்மூல சாட்சியம் வழங்கியதோடு 40 பக்க ஆதாரங்களும் வழங்கப்பட்டதாக தெரியவருகிறது. நேற்றைய தினம் தாயகம் திரும்பிய ரவிகரனிடம் பெற்றுக்கொண்ட தகவல்களின் படி, இறுதிப்போரில் தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் , காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விடயங்கள், புலனாய்வுத்துறையால் தொடரும் அச்சுறுத்தல்கள், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், நில அபகரிப்பு விடயங்கள்,கிழக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் ப…
-
- 0 replies
- 495 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நியூயோர்க்கில் நேற்று சந்தித்து உரையாடியுள்ள அதேவேளை இந்த சந்திப்பின்போது 13 திருத்தம் குறித்து ஏதும் பேசப்படவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பின் பின்னர் பி.ரி.ஐ. செய்யதியாளர்களிடம் தெரிவித்தார் என்று கூறப்படுகின்றது. இரு தரப்புக்கும் முக்கியமான பலவிடயங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய பிரதமருடனான தமது இந்த இரண்டாவது சந்திப்பு சுமூகமான முறையில் இடம்பெற்றதாக சந்திப்பின் பின்னர் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா 13ஆவது திருத்தத்தை துரிதமாக அமுல்படுத்துமாறு அழுத்தம் கொடுத்து வருகிறதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு இந்த விடயம் குறித்து இந்த சந்திப்…
-
- 1 reply
- 673 views
-
-
ஜெயலலிதா ஜெயராம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் மகிழ்ச்சி வெளியிட்டிருக்கிறது. அண்மைக்காலமாக சிறிலங்காவுக்கும் ,தமிழ் நாட்டுக்கும் இடையில் முறுகல் நிலை காணப்பட்டமைக்கு, ஜெயலலிதா ஜெயராமே காரணம் என்று அரசாங்க அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். எனினும் தற்போது ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதுடன், அவரது பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இனி தமிழ் நாட்டுடன் சிறிலங்காவுக்கு சிறந்த உறவை பேண வாய்பு ஏற்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.http://www.pathivu.com/news/34179/57//d,article_full.aspx
-
- 0 replies
- 580 views
-
-
அன்பான தமிழீழமக்களே ! புலம்பெயர்ந்த தமிழீழ மக்களின் வாழ்வியலில், ஊடகங்கள் ஒரு வளர்ச்சிப்பாதையில் இருக்கின்றன. இன்றைய கணனி உலகில் ஒரு தனிமனிதன்; தனது கருத்துகளை இலகுவாக மற்றவருக்கு எடுத்துச்செல்கின்ற நிலையில், ஒரு பத்திரிகையின் கருத்தை கருத்து ரீதியாக எதிர்கொள்ளாது மிரட்டல் வன்முறை மூலம் எதிர்ப்பதை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவானது முற்றும் முழுதாக நிராகரிக்கின்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவானது பிரான்சு நாட்டில் பதிவு செய்ததோர் அமைப்பாக பிரெஞ்சு நாட்டு சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து அதற்குட்பட்ட அரசியல், சனநாயக மனிதநேய தொண்டர் அமைப்பாக அனைத்து செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது என்பதை பிரெஞ்சு அரசும், எமது மக்களும் நன்கு அறிவார்கள். இந்த அரசியல் ரீதியான செயற்பாடுகள…
-
- 4 replies
- 641 views
-
-
சர்வதேச ஆதரவை இழக்கிறது இலங்கை அரசு! – அம்பலப்படுத்துகிறார் தயான் ஜயதிலக [sunday 2014-09-28 09:00] சர்வதேச மட்டத்திலான ஆதரவை இலங்கை பெருமளவில் இழந்துள்ளதாக, சிரேஸ்ட ராஜதந்திரியும் பிரான்ஸிற்கான முன்னாள் தூதுவருமான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 22 நாடுகள் ஆதரவளித்துள்ளதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் யதார்த்தமற்றது. இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் சர்வதேச ரீதியான விசாரணை நடாத்துவது அவசியமற்றது எனவும், தேவையற்ற தலையீடு எனவும் தெரிவித்து 22 நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. இலங்கையில் உள்நாட்டு ரீதியான விசாரணைப் பொறிமுறைம மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள…
-
- 0 replies
- 370 views
-
-
இளம்பிள்ளைகள் தனித்து வாழ கொழும்பு பொருத்தமான இடமல்ல! – ஆணைக்குழுத் தலைவர் அறிவுரை. [sunday 2014-09-28 08:00] பெற்றோரது கண்காணிப்பு இல்லாமல் இளம் பிள்ளைகள் தனித்து வாழ்வதற்கு கொழும்பு பொருத்தமான இடமல்ல என்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்தார். கொழும்பில் மகன் இருந்தபோது வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டார் என்று தாயொருவர் சாட்சியம் அளித்தார். அதன்போதே ஆணைக்குழுத் தலைவர் மேற்கூறப்பட்ட அறிவுரையை தாயாருக்கு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சில பிள்ளைகள் பெற்றாரை விட்டு தூர விலகிப் போனால் அங்கு போதைவஸ்துக்களை பயன்படுத்துவதும் குறுக்கு வழிகளிலும் சென்று வருகின்றனர். இதனால் பெரிய பாதிப்பு ஏற்படும். …
-
- 0 replies
- 468 views
-
-
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோரை வறிய நாடான கம்போடியாவில் குடியேற்றுவதற்கு ஒப்பந்தம் 2014-09-27 20:26:33 அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியவர்களை கம்போடியாவில் குடியேற்றுவதற்கான ஒப்பந்தமொன்றில் அவுஸ்திரேலியவும் கம்போடியாவும் நேற்றிரவு கையெழுத்திட்டுள்ளன. ஆசியாவின் மிக வறுமையான நாடுகளில் ஒன்றாக கம்போடியா இருப்பது குறிப்பிடத்தக்கது. கம்போடிய தலைநகர் பினோம்பென்னில் வைத்து அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிஸனும் கம்போடிய உள்துறை அமைச்சர் சார் கேங்கும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியநிலையில் தற்போது நவுறு நாட்டின் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளவர்களில் உண்மையான அகதிகள் மாத்திரம் கம்போடியாவுக்கு அனுப்பப்படுவர் என அறிவிக்க…
-
- 0 replies
- 393 views
-
-
பா.கிருபாகரன், டிட்டோகுகன் வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் தையிட்டி மற்றும் மயிலிட்டி பகுதிகளில் இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் இருக்கும் மக்களின் காணிகள் விமான நிலைய விஸ்தரிப்பு அபிவிருத்திப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படவிருப்பதாக அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை சபையில் அறிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. அப்பாத்துரை விநாயகமூர்த்தி எழுப்பியிருந்த கேள்விக்கு மீள்குடியேற்ற அமைச்சின் சார்பாகப் பதிலளிக்கும்போது ஆளுந்தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன மேற்கண்ட தகவலைக் குறிப்பிட்டார். வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் தையிட்டி பகுதியைச் சேர்ந்த 2705 பேரும் மயிலிட்டி பகுதிய…
-
- 1 reply
- 612 views
-
-
சர்வதேச பாடசாலைகளில் 4 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் 'மம்ஸ் நியூ போய் பிரண்ட்" என்ற பாடம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையின் கலாசார மத விழுமியங்களோடு இணைந்த குடும்பப்பின்னணி சீரழியும் பயங்கரம் தோன்றியுள்ளதாக தெரிவித்த பொதுபலசேனா இது தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு சர்வதேச பாடசாலைகள் தொடர்பில் கடுமையான சட்டங்களை பிறப்பிக்க வேண்டுமென்றும் தெரிவித்தது. கொழும்பு கிருலப்பனையிலுள்ள பொதுபலசேனா அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நாட்டின் கல்வித்துறை எமது கலை, கலாசார, மத மற்றும் வரலாற்றுப்பின்னணிகளோடு அமைந்ததாக வகுக்கப்பட வேண…
-
- 2 replies
- 529 views
-
-
அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும், அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவுக்கும் இடையில் வாய்தர்க்கம் ஒன்று இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஊவா மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் சந்தித்த பின்னடைவுக்கு ராஜபக்ச குடும்பத்தினர் மேற்கொண்ட தீர்மானங்களே காரணம் என்று அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்திருந்தார். இது தொடர்பில் பசில் ராஜபக்ச ஜனாதிபதியின் முன்னால் வைத்து சுசில் பிரேமஜெயந்தவை திட்ட முற்பட்டுள்ளார். எனினும் ஜனாதிபதி நிற்பதையும் பொறுட்படுத்தாக அமைச்சு சுசில் பிரேமஜெயந்த, ராஜபக்சவின் குடும்பத்தாருக்கு இனியும் அஞ்சிக் கொண்டிருக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். மேலும் தமக்கு இந்த அமைச்சர் பதவி இல்லாது போனால், மீண்டும் சட்டத்தரணியாக நீதிமன்றத்தில் தம்மால் செயற்பட முடிய…
-
- 0 replies
- 363 views
-