Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்த நாட்டுக்கு தற்போது தேசியத் தலைவர் ஒருவரே தேவைப்படுகிறார். தவிர பொது வேட்பாளர் இல்லை. அதனால், அரசர்களை நியமிக்கும் வேலைத்திட்டமொன்றை பொது பல சேனா ஆரம்பித்துள்ளது என்று அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். அத்துடன், அமைச்சர்களோ அல்லது எம்.பி.க்களோ இனிமேல் காவியுடை மீது கைவைக்க முற்படுவார்களாயின், அதுவே அரசாங்கத்தின் அழிவாகும். அரசாங்கத்திலிருந்து குரைக்கும் நாய்களைக் கட்டிப்போடுமாறு ஜனாதிபதியிடன் கோருகிறேன் என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டார். பௌத்தம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டத்திலேயே நாங்கள் இப்போது இருக்கிறோம். நாம் இதுவரை பொருமை காத்தது போதும். வெளியிடங்களிலிருந்து வரும் அழுத்தங்கள், நாட்டை சூரையாடிக்கொண்டிருக்கின்றன எ…

  2. தொடர்புகளுக்கு நிமல்கா – சுனில் ஜெயசேகரவின் தொலைபேசி இலக்கங்கள் இணைப்பு:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு- இணைப்பு 2 (மகிந்த கோத்தாபய ராஜபக்ஸக்களின் அதி உச்ச ஊழித் தாண்டவமோ?) 07-08-2014 - 14:18 கொழும்பு புகையிரத நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நாய்க்குட்டிகள் விற்பனைக்கு என்ற சுவரொட்டிகள் புதன்கிழமை நள்ளிரவு முதல் காணப்படுவதுடன் நாய்க்குட்டிகளை வாங்க விரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசிகள் என குறிப்பிட்டு மனித உரிமை பணியாளா நிமல்ஹா பெர்ணாண்டோவினதும் சுதந்திர ஊடக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுனில் ஜெயசேகரவினதும் தொலைபேசி இலங்கங்களை இனந்தெரியாத நபர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது இருவரையும் அவமானப்படுத்தும் துன்புறுத்தம் நடவடிக்கையின் ஒரு பகுதி என சு…

  3. கண்டியில் நடைபெற்று வரும் ரந்தோலி பெரஹராவின் இரண்டாவது நாள் பெரஹரா ஊர்வலத்தின் போது யானை ஒன்று திடீர் என குழப்பம் விளைவித்ததில் யானை பாகன் உட்பட 12 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. பெரஹரா ஊர்வலம் வீதி வழியாக சென்று மீண்டும் தலாதா மாளிகைக்கு செல்லும் வழியில் இராஜ வீதி தேவ வீதி சந்தியில் வைத்தே யானை ஒன்று திடீர் என குழப்பம் விளைவித்துள்ளது. இதனால் யானை பாகன் நடனகாரர்கள் கர்ப்பிணி பெண் ஒருவர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து பேராதனை மிருக வைத்தியசாலை வைத்தியர் அழைக்கப்பட்டு யானைக்கு மருந்தேற்றப்பட்டதையடுத்து நிலைமை சுமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட…

  4. சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியிருந்த தமிழ் மாணவனொருவன் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வியாழக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் போது, இனவாதத்தை புகுத்தாதே என்ற கோஷத்தை எழுப்பிய வண்ணம் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியில் தங்கியிருந்த தமிழ் மாணவனொருவன் கடுமையாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணைகளுக்காக பொலிஸாரால் அழைத்து செல்லப்பட்ட இரு தமிழ் மாணவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகின்றனர். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முன்னால் ஆரம…

    • 0 replies
    • 426 views
  5. குடிவரவு அமைச்சர் மொரிசனும் பிரதமர் டோனி ஹார்பட்டும் சேர்ந்து 157 புகலிடக் கோரிக்கையாளர்களை கடந்த சனிக்கிழமை நவ்ரு தடுப்பு காவலுக்கு அனுப்பி வைத்தமையை கண்டித்து இன்று அவுஸ்திரேலியா சிட்னியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. அகதிகள் அதிரடி கூட்டணி ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டம் சிட்னியில் உள்ள குடிவரவு திணைக்களத்துக்கு முன்பாக இடம் பெற்றது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த இயன் ரிண்டோல், அமைச்சர் மொரிசன் சிறுவர்களினது வாழ்க்கையில் அரசியல் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் இலங்கை தமிழர்களை மாத்திரம் குறி வைத்து நடத்தும் கடும்போக்கு சட்ட நடவடிக்கைகளை உடனடியாக கை விட வேண்டும் . நவ்ரு தடுப்பு காவலானது ஒரு சிறை கூடத்துக்கு சமமானது அகவே சிறுவர்களது நிலை…

    • 0 replies
    • 297 views
  6. தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கையில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கவுன்சிலுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனத்தில் இதுவரை கடைபிடிக்கப்பட்டுவந்த மரபு வழிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதன் மூலம் பல்கலைக்கழக கவுன்சிலில் முஸ்லிம்களின் பெரும்பான்மையை இல்லாமல் செய்ய இலங்கை அரசு முயல்கிறது என அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அதிருப்தியும் விசனமும் வெளியிட்டுள்ளது. இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகமே தமது உயர்கல்விக்கான உயிர் நாடி என கிழக்கு மாகாண முஸ்லிம்கள் கருதுகின்றார்கள். 11 பேரை உறுப்பினர்களாக கொண்டுள்ள இந்த பல்கலைக்கழக கவுன்சிலுக்கு பல்க…

    • 0 replies
    • 302 views
  7. "தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற எனது மகனைக் கடற்படையினரே அழைத்துச் சென்றனர். காணாமற்போன எனது மகனுக்கு இதுவரை என்ன நடந்தது என்பது தெரியாது." - இவ்வாறு தெரிவித்தார் விடத்தல்தீவைச் சேர்ந்த டொமினிக் செல்வரானி எனும் தாய். இன்று மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு முன்சாட்சியமளிக்கையிலேய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். காணாமற்போன தனது மகன் தொடர்பான முறைப்பாட்டை முன்வைத்து சாட்சியமளிக்கையில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- கடந்த 23.02.2007 ஆம் ஆண்டு எனது மகனும் மேலும் நான்கு பேரும் விடத்தல்தீவிலிருந்து தலைமன்னார் கடலுக்கு படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றனர். இப்படகு எனது மகனுடன் சென்றவர்களில் ஒருவருடையது. இவர்கள் நாளாந்தம் வழமை போன்று இந…

  8. வடமாகாணத்திற்கு ஐந்நூறு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட நிதி தந்துவிட்டனர் எனத் தம்பட்டம் அடிக்கிறார்கள். ஆனால் பெரும் பகுதி நிதி தரப்படவில்லை. அதனை அரசாங்கமே வைத்து விளையாடுகின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துர்ள்ளார். வவுனியா, ஓமந்தை, நவ்வி பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிரதேச வைத்தியசாலைக்கான அடிக்கல்லை நாட்டிய பின் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:- வடமாகாணம் என்பது சிறிய பிரதேசம் இல்லை. பலவிதமான இடங்கள், தொழில்கள், சூழல்கள், மக்கள் கூட்டங்கள், இயற்கை வளங்கள் என்று பரந்து கிடக்கும் ஐந்து மாவட்டங்களின் சேர்க்கை. சில சந்தர்ப்பங்களில் 40, 50 கிலோமீற்றருக்குள் பலவித வேற்றுமைகளைக் காண்கின்றோம். வவுனியா …

    • 0 replies
    • 303 views
  9. - யோ.வித்தியா, எம்.றொசாந்த், பொ.சோபிகா யாழ். காரைநகர் ஊரிப்பகுதியில் 11 வயதுச் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விடுமுறையில் சென்ற இரண்டு கடற்படைச் சிப்பாய்களையும் ஆஜர்படுத்த முடியாது என யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன தெரிவித்தார். யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மேற்படி சிறுமி துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில், விடுமுறையில் சென்றிருந்த கடற்படைச் சிப்பாய்கள் இருவரையும் மன்றில் ஆஜர்படுத்தும்படி நாங்கள் மன்றில் கோரியிருந்தோம். ஆனால், அதற்கு கடற்படை சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி மறுத்துள…

    • 0 replies
    • 314 views
  10. நல்லூர் ஆலய வளாகத்திற்குள் சப்பாத்துடன் செல்லக்கூடாது என மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா உண்மையில் அறிந்திருக்கவில்லை. ஆலயத்திற்குள் மட்டும் தான் சப்பாத்துடன் செல்லக்கூடாது என அவர் அறிந்திருந்தார் என்று யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன தெரிவித்தார். இருப்பினும் நல்லூர் ஆலயத்திற்குள் குட்டைப் பாவாடையுடன் செல்பவர்களைக் கவனிக்காமல் மேர்வின் சில்வா ஆலய வளாகத்தில் சப்பாத்துக்களுடன் சென்றிருந்ததினைக் கவனித்து செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அண்மையில் நல்லூருக்கு விஜயம் செய்த மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா சப்பாத்துடன் ஆலய வாயில் வரையில் சென்று சுவாமி தரிசனம் செய்தமை தொடர்பில் பத்திரிகைகளில் விமர்ச…

  11. மனித உரிமை, யுத்தக் குற்றங்கள் தொடர்பிலா விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க ஐ. நா கோரிக்கை! [Friday 2014-08-08 20:00] மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு முழுமையான பங்களிப்பினை வழங்க வேண்டுமென மனித உரிமைகள் பேரவை சிறிலங்கா அரசை கேட்டுள்ளது. மனித உரிமை ஆணையாளரின் விசாரணைக் குழுவினர் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறானதொரு கோரிக்கையை மனித உரிமைகள் பேரவை விடுத்துள்ளது. இதேவேளை, மனித உரிமைகள் பேரவையினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைகளில் சிறிலங்கா அரசை உள்ளீர்ப்பதற்கான முயற்சிகள் தொடரும் என்றும் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. http://www.seithy.com/breifNews.…

  12. -எம்.றொசாந்த், பொ.சோபிகா, யோ.வித்தியா பிரேஸிலில் தயாரிக்கப்பட்ட 5 வாள்களை யாழ். மாவட்டத்திலிருந்து அண்மையில் கைப்பற்றியதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன தெரிவித்தார். யாழ்;. பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெறும் மாதத் தொடக்கத்திற்கான ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (08) யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது, 'பிரேஸில் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 வாள்களை யாழில் அண்மையில் மீட்டுள்ளோம். அவை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், அந்த வாள்கள் யாரால், எங்கே, எப்போது கொண்ட…

  13. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் விசாரணைக்குழுவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழ், மற்றும் சிங்கள மொழியிலும் சாட்சியமளிக்கலாம் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது. குற்றச்செயல் இடம்பெற்ற 21.02.2002 முதல் 15.11.2011 வரை (அதனோடு தொடர்புடைய நிகழ்வுகள் அல்லது அதன் தொடர்ச்சி அதற்கு பின்னர் நடைபெற்றாலும் அது தொடர்பாகவும் முறைப்பாடுகள்) தெரிவிக்கலாம். முறைப்பாடுகள் ஒக்ரோபர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பப்படவேண்டும். மின்னஞ்சல் மூலம் அனுப்ப: OISL_submissions@ohchr.org அஞ்சல் மூலம் அனுப்ப OISL UNOG-OHCHR 8-14 Rue de la Paix CH-1211 Geneva 10 Switzerland முறைப்பாடுகள் அனைத்தும் 10 பக்கங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்…

    • 5 replies
    • 699 views
  14. இலங்கையர்களில் 90 வீதமானோர் உண்மையான அகதிகள்! - அவுஸ்ரேலிய சட்டத்தரணி வாதம். [Friday 2014-08-08 09:00] இலங்கை அகதிகள் 157 பேர் விடயத்தில் தாம் வெளிப்படையாக நடந்து கொண்டதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் கூறியிருப்பதை அகதிகளுக்கான சட்டத்தரணி ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார். 157 அகதிகளும் இரகசியமாக கடலில் தடுத்து வைக்கப்பட்டமை, உயிர்காப்பு அங்கிகளை வழங்கி இந்தியாவுக்கு அனுப்ப முயற்சித்தமை மற்றும் இரகசியமாக விமானங்களில் ஏற்றி நவுரு தீவுக்கு அனுப்பியமை போன்ற செயல்களை எவ்வாறு வெளிப்படையான செயல்கள் என்று கூறமுடியும் என்று சட்டத்தரணி ஜோர்ஜ் நியூகௌஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 1939 ஆம் ஆண்டில் ஜெர்மனிய யூத அகதிகள், கியூபாவில் அகதி அந்தஸ்து கோரி படகு மூலம் சென்றப…

  15. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பொருத்தமான வழிமுறைகள் கையாளப்படுமாம் – இந்தியா! சிறிலங்காவுடனான, உணர்வுபூர்வமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பொருத்தமான வழிமுறைகள் கையாளப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவர், தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்க, இஸ்ரேல் தூதரகங்களைத் தாக்குவதற்கு ஐஎஸ்ஐயுடன் இணைந்து சதி செய்ததாக வெளியான தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், “இந்தியாவும், சிறிலங்காவும் ஒன்று மற்றையதன் கவலைகளைத் தீர்ப்பதற்கு நிறைய வழிமுறைகளைக் கொண்டிருக்கின்…

  16. -ரஞ்சித் ராஜபக்ஷ, ஆர்.ராஜேஸ்வரன் 100 வருடங்கள் பழமையானது என நம்பப்படும் புரதான வாள் ஒன்றினை விற்பனை செய்ய முயன்ற மூவர் ஹட்டன் பொலிஸாரால் வியாழக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்கெலியா பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டதாக நம்பப்படும் வெள்ளி மற்றும் பித்தளை ஆகிய உலோகங்களைக் கலந்து செய்யப்பட்ட இந்த புரதான வாளை, சுமார் 36 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்படுகையிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வாளினை விற்பனை செய்யப்போவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அவ்விடத்திற்கு சிவில் உடையில் சென்று வியாபாரி போல் நடித்து சந்தேகநபர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களையும் தோண்டி எடுக்கப்பட்ட வாளையும்இன…

  17. -வடிவேல் சக்திவேல் 'தமிழ்மக்கள் போராடிப், போராடி உயிர் மற்றும் உடைமைகளை இழந்து தற்போது நடுத்தெருவில் நிற்கின்றார்கள் என்றால், அதற்குக் காரணம் இந்த அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கின்ற மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் பிரதி அமைச்சரும் அரசுடன் முட்டிக்கொண்டிருக்கின்ற முன்னாள் கிழக்கு முதலமைச்சரும்தான். இவர்கள் இருவரும் அவர்கள் விட்ட பிழைகளை உணர வேண்டும். அவர்கள் அவர்களின் மனதுகளுக்குள் இருக்கின்ற அழுக்குகளை நன்கு சலவை செய்ய வேண்டும். அவர்கள் தமிழ் மக்களை நேசிக்க வேண்டும்.' இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். களுவாஞ்சிக்குடி சாயி பாலர் பாடசாலையின் 14ஆவது ஆண்டு விளையாட்டு …

    • 2 replies
    • 420 views
  18. கட்டுப்படாத வெளிநாட்டுத் தூதுவர்களை நாட்டைவிட்டு விரட்டுங்கள்! - அரசுக்கு உசுப்பேற்றுகிறார் ரணில். [Friday 2014-08-08 09:00] வெளிநாட்டுத் தூதுவர்கள் கடப்பாடுகளை மீறிச் செயற்படுவார்களாயின், அது தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு அறிவித்து, எந்த நாட்டுத் தூதுவராக இருந்தாலும் அவரை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ரணில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றிய போது, பிக்குகள் குழுவினரை வைத்துக் கொண்டு வெளிநாட்டவர்களை விரட்டியடித்த அரசு, பின்னர் ஒவ்வொரு தூதரகங்களுக்கும் இரகசியமாகச் சென்று அங்குள்ளவர்களை வணங…

  19. ஆளுநர் நிதியம் எந்த சட்டத்தின் கீழ் செயற்படுகின்றது? - சந்திரசிறிக்கு கிடுக்கிப்பிடி போடுகிறார் முதல்வர் [Friday 2014-08-08 09:00] முதலமைச்சர் நிதியச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்றால், ஆளுநர் நிதியம் எந்த அடிப்படையில் நடைமுறையில் உள்ளது என்று, கேள்வி எழுப்பும் கடிதம் ஒன்றை, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கு அனுப்பி வைத்துள்ளார். வடமாகாண சபையின் நிதி நிர்வாகம் தொடர்பான மூன்று சட்டமூலங்கள் ஆளுநரின் பார்வை மற்றும் ஒப்புதலுக்காக முன்னர் அனுப்பப்பட்டிருந்தன. ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மாகாண முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டத்தை ஆளுநர் நிராகரித்திருந்தார். வடக்கு மாகாண நிதி நியதிச் ச…

  20. இந்த நாட்டுக்கு தற்போது தேசியத் தலைவர் ஒருவரே தேவைப்படுகிறார். தவிர பொது வேட்பாளர் இல்லை. அதனால், அரசர்களை நியமிக்கும் வேலைத்திட்டமொன்றை பொது பல சேனா ஆரம்பித்துள்ளது என்று அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். அத்துடன், அமைச்சர்களோ அல்லது எம்.பி.க்களோ இனிமேல் காவியுடை மீது கைவைக்க முற்படுவார்களாயின், அதுவே அரசாங்கத்தின் அழிவாகும். அரசாங்கத்திலிருந்து குரைக்கும் நாய்களைக் கட்டிப்போடுமாறு ஜனாதிபதியிடன் கோருகிறேன் என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டார். பௌத்தம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டத்திலேயே நாங்கள் இப்போது இருக்கிறோம். நாம் இதுவரை பொருமை காத்தது போதும். வெளியிடங்களிலிருந்து வரும் அழுத்தங்கள், நாட்டை சூரையாடிக்கொண்டிருக்கின்…

    • 1 reply
    • 253 views
  21. சலுகை, அபிவிருத்திக்காக வாக்களித்தால் உரிமைகளை வெல்ல முடியாது! - என்கிறார் அரியம் எம்.பி. [Friday 2014-08-08 09:00] அபிவிருத்திக்காகவும்,சலுகைகளுக்காகவும் வாக்களிப்பவர்களாக இருந்தால், எமது உரிமையை வென்றெடுக்க முடியாது. என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார். தாந்தாமலை மக்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்ட வேளையிலேயே இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் வீகிதாசாரம் 41 வீதமாகவே இருக்கின்றது. அந்த தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே சிந்தனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்திருந்தால் கிழக்கு மாகாணசபை த.தே.கூட்டமைப்பினர் வசம் வந்திருக்கும்…

  22. கம்போடியாவில் இனப்படுகொலை செய்த கெமர்ரூச் ஆட்சியாளர்கள் இருவருக்கு ஆயுள் முழுவதும் சிறை வாசம் அனுபவிக்குமாறு தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது ஐ.நாவின் சர்வதேச விசாரணை நீதிமன்றம். 30 வருடங்களாக நடந்த இந்த வழக்கில் போர்க் குற்றாவளிகளாக இனங்காணப்பட்ட 88 வயதான நௌவான்சியா, 83 வயதான கெஹியூசம்பான் ஆகியோருக்கே நேற்று வியாழக்கிழமை இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 1975 -79 கள் வரை கம்போடியாவை பொல்பொட் தலைமையில் இயங்சரே, நௌவான்சியா, கெஹியூசம்பான் ஆகியோர் ஆட்சி செய்தனர். வியட்நாமில் இருந்து பிழைப்புத் தேடி சென்ற மக்கள் இவர்களின் ஆட்சியை எதிர்த்திருந்தனர். தம்மை எதிர்த்துப் போராடிய அந்த மக்களில் 17 இலட்சம் பேரை இந்த ஆட்சியாளர்கள் கொன்று குவித்திருந்தனர் என்று கூறப்பட்டது. மிகப்பெர…

    • 2 replies
    • 425 views
  23. அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெற்றால் பொலிஸாரைக் கொண்டு தடுக்காது தனக்கு ஆதரவான பாஸிஸ குழுவைக் கொண்டு நிறுத்தும் புதிய பாணியொன்றை அரசாங்கம் கையாள்வதாக தெரிவித்திருக்கும் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ண, மருதானையில் சிவில் அமைப்புகள் நடத்திய கூட்டத்திலும் இது தான் நடந்ததாகவும் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் விளக்கமளிக்கையில் தெரிவித்ததாவது; அளுத்கம கலவரத்தையடுத்து அங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு தைரியத்தையளிக்கு முகமாக ஐக்கிய சோஷலிச கட்சி அண்மையில் கொழும்பிலிருந்து அளுத்கமவுக்கு சமாதான வாகனப் பேரணியொன்றை நடத்தியது. இப்பேரணியை தாக்கும் நோக்குடன் குழுவொன்று தயாராகவுள்ளதாகக் கூறி பொலிஸார் இடைநடுவில் தடுத்து நிறுத்த…

  24. -ஏ.எச்.ஏ.ஹுஸைன் இஸ்ரேலிய நாட்டினதும் யூதர்களினதும் உற்பத்திப் பொருட்களை பகிஷ்கரிக்குமாறு வேண்டுகோள் விடுத்து ஏறாவூர் நகரில் பிரசாரம் செய்யப்படுகின்றது. ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரசாரத்தின் ஓரங்கமாக நகரெங்கும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 'யூதப் பயங்கரவாதிகளின் உற்பத்திப் பொருட்களை பகிஷ்கரிப்போம்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'அன்பார்ந்த நெஞ்சங்களே! இஸ்லாமிய பெருமக்களே! பாலஸ்தீனத்தில் இஸ்ரவேலர்களின் மிலேச்சத்தனமான தாக்குதல்களால் சஹீதாக்கப்பட்ட மற்றும் காயமடைந்து போதிய வைத்திய வசதியின்றி அவதியுறும் எமது உறவுகளுக்காக தொடர்ந்தும் ந…

  25. வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 3 மாடிகளைக் கொண்ட வைத்திய நிபுணகளுக்கான விடுதி இன்று காலை 10 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கட்டடத்தை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார். வடமாகாண சபையால் குறித்தொதுக்கப்பட்ட 22 மில்லியன் ரூபா கொடை நிதியில் இந்த மூன்றுமாடி விடுதிக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சந்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராஜா, வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் மற்றும் வைத்திய நிபுணர்கள், தாதியர்கள், உத்தியோக…

    • 0 replies
    • 248 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.