ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143538 topics in this forum
-
வடக்கில் அஞ்சலி நிகழ்வுகளுக்கு மட்டுமல்ல ஆலயத் திருவிழாக்களுக்கும் தடை : 17 மே 2014 மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், யாழ். குடாநாட்டிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் ஆலயங்களில் வருடாந்த உற்சவங்களை நடத்துவதற்குப் படையினர் தடை விதித்திருப்பதுடன், பொது இடங்களில் ஒன்று கூடுவதற்கும், கூட்டங்களை நடத்துவதற்கும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. நாளைய தினம் 18 ஆம் திகதி வடக்கு மாகாணத்தில் பல இடங்களில், முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் யாழ். பல்கலைக்…
-
- 3 replies
- 511 views
-
-
இலங்கையின் யுத்த வெற்றி நிகழ்வு அழைப்பை நிராகரித்தது கனடா news இலங்கையில் நடைபெறவுள்ள யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என கனடா அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் வெற்றிக் கொள்ளப்பட்டதனை கொண்டாடும் வகையில் மாத்தறையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பிரதான நிகழ்வு எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ளது. இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்குமாறு தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், யுத்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என இலங்கைக்கான கனேடிய உயாஸ்தானிகர் ஷெல்லி வைட்டிங் தெரிவித்துள்ளார். ஆண்டு தோறும் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களை நடாத்துவது தேசிய நல்லிணக்கத்திற்க…
-
- 1 reply
- 819 views
-
-
வடக்கு கிழக்கில் உசார் நிலையில் படையினர்! 17 மே 2014 குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர் வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நிகழ்வுகளை தடுக்கும் நோக்கில் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். நினைவு நிகழ்வுகளில் ஈடுபடும் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்யுமாறு இலங்கை பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. ஈழத்தில் முள்ளிவாய்க்காலில் 2009ஆம் ஆண்டு இலங்கை அரசு மேற்கொண்ட பெரும் எடுப்பிலான யுத்தத்தில் ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. பல்லாயிரக் கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். இந்த யுத்தத்தில் வன்னிப் பெருநில மக்கள் முற்று முழுதான இழப்புகளுக்கு முகம் கொடுத்தனர். இந்நிலையில் குறித்த ய…
-
- 1 reply
- 526 views
-
-
அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கட்டாய பௌத்த கல்வி! - இராணுவம் மூலம் வழங்க அரசாங்கம் ஏற்பாடு. [Friday, 2014-05-16 08:52:41] News Serviceஇலங்கையில் அனைத்து இடைநிலைக் கல்வி நிறுவனங்களிலும் பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு ஒராண்டு பௌத்த தலைமைத்துவ பயிற்சியை இலங்கை இராணுவம் அளிக்கவுள்ளது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டின் இரண்டு அதியுயர் பௌத்த பீடங்களில் ஒன்றான அஸ்கிரியப் பீடத்தினர் இது குறித்து வைத்த பிரேரணைகளை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளதாக அந்த பீடத்தின் பேச்சாளரான மெதகம தம்மானந்த தேரர் பிபிசியின் சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார். "மாறுதலுக்குத் தயாராங்குகள்"என்னும் தலைப்பில் முன்னெடுக்கப்படும் அந்தப் பயிற்சியின் மூலம் இளைய …
-
- 4 replies
- 1.1k views
-
-
புதிய இந்திய அரசாங்கத்துடன் பேச கூட்டமைப்பு விருப்பம்! - விரைவில் புதுடெல்லி செல்கிறது. [saturday, 2014-05-17 09:39:35] News Service இந்தியாவில் அமையவுள்ள நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசுடன் பேச்சு நடத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழுவொன்று விரைவில் புதுடெல்லிக்குப் பயணமாகவுள்ளது. இந்தியாவில் அமையவுள்ள புதிய அரசுடன் இணைந்து இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே கூட்டமைப்பின் தூதுக்குழுவொன்று இந்தியா செல்லவுள்ளது. புதிய இந்திய அரசுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று, கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்திடம் கூட்டமைப்பினால் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://seithy.com/breifNews.php?newsID=109493&categ…
-
- 0 replies
- 406 views
-
-
இராணுவ வாகனம் புகுந்ததில் அறுவர் காயம் சனிக்கிழமை, 17 மே 2014 09:39 இராணுவ வாகனமொன்று வேகக்கட்டுப்பாட்டினை இழந்து யாழ்.கே.கே.எஸ் வீதி நாச்சிமார் கோவில் வாகனச்சாலைக்குள் இன்று சனிக்கிழமை (17) அதிகாலை புகுந்து விபத்துக்குள்ளானதில் 5 இராணுவ வீரர்களும் ஒரு பொதுமகனுமாக 6 பேர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இராணுவ வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்துச் சம்பவத்தில் ஆலய வாகனச்சாலை பலத்த சேதமடைந்தது. இது தொடர்பான விசாரணைகளை இராணுவப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/110742-2014-05…
-
- 0 replies
- 400 views
-
-
வடமாகாண சபை முன்னால் முள்ளிவாய்க்கால் நினைவினை காவல்துறையினர் குழப்பியுள்ளார்கள்! மே 16, 2014 யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபை அலுவலகத்துக்கு முன்னால் முள்ளிவாய்க்கால் நினைவினை எம்.கே.சிவாஜிலிங்கமும், அனந்தி சசிதரனும் நினைவுச் சுடரேற்ற முயன்ற சமயம் அது காவல்துறையினரால் குழப்பப்பட்டது. மே 18 நினைவேந்தலை ஒட்டி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு மாகாண சபை அலுவலக முன்றிலில் சுடரேற்றி அஞ்சலி செய்யும் நிகழ்வு இடம்பெறும் என சிவாஜிலிங்கம் நேற்றிரவு அறிவித்துள்ளார் அந்த அறிவிப்பை அடுத்து கைதடியில் மாகாண சபை அலுவலகத்தின் முன்னால் இன்று காலை முதல் பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். மாகாண சபை உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆக…
-
- 1 reply
- 691 views
-
-
சிறீலங்கா சீனா படைத்துறைக்கிடையில் மூன்று ஒப்பந்தம் ! மே 16, 2014 சிறீலங்காவிற்கு பயணம் மேற்கொண்ட சீன படைஅதிகாரிகள் குழுவிற்கும் சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளருக்கும் இடையில் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய றாஜபக்சவின் அழைப்பின் பெயரில் சீன படைத்துறையின் மூன்றாம் நிலை ஜெனரல் உள்ளிட்ட குழுவினர் சிறீலங்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் படைத்துறை பாதுகாப்புரீதியில் மூன்று புதிய ஒப்பந்தங்களில் கைச்சாதிட வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.http://www.sankathi24.com/news/41517/64//d,fullart.aspx
-
- 0 replies
- 592 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவுதின துண்டுப்பிரசுரம் வைத்திருந்தவர் கைது வெள்ளிக்கிழமை, 16 மே 2014 12:11 0 COMMENTS முள்ளிவாய்க்கால் நினைவுதின துண்டுப்பிரசுரம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுன்னாகம் வீதி, நிலாவரைப் பகுதியினைச் சேர்ந்த நபர் ஒருவர் இராணுவத்தினரால் நேற்று வியாழக்கிழமை (15) நள்ளிரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தனக்கும் மேற்படி துண்டுப்பிரசுரத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையெனவும் யாரோ வீட்டிற்கு வந்து எறிந்துவிட்டுச் சென்றதினையே தான் எடுத்து வைத்திருந்ததாக குறித்த நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். கைதான சந்தேகநபர், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும…
-
- 0 replies
- 311 views
-
-
இந்தியாவுக்கு தஞ்சம்கோரிச் செல்பவர்களுக்கு அகதி அந்தஸ்து இல்லை வெள்ளிக்கிழமை, 16 மே 2014 11:53 இந்தியாவுக்கு தஞ்சம் கோரிச் செல்லும் இலங்கையர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்போவதில்லை என்ற தீர்மானத்தை இந்திய மத்திய அரசு எடுத்துள்ளது. யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னரும் இந்தியாவில் அகதி அந்தஸ்து கோரி தஞ்சமடையச் செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்வதால் இந்திய மத்திய அரசு இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இந்தியாவில் தஞ்சம் கோரிச் செல்லும் இலங்கையர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்போவதில்லை என்ற தீர்மானத்தை கடந்த 2011ஆம் ஆண்டிலேயே இந்திய மத்திய அரசு எடுத்துவிட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியி…
-
- 0 replies
- 427 views
-
-
வடமாகாண சபையில் பதற்றம் வெள்ளிக்கிழமை, 16 மே 2014 11:59 வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை, வட மாகாணசபைக்குள் செல்ல பொலிஸார் அனுமதிக்காததை அடுத்து அப்பகுதியில் தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று (16) வடமாகாண சபைக்கு சென்றிருந்த போதே சிவாஜிலிங்கத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். எனவே வடமாகாண சபைக்கு வெளியே வைத்து அவர் தீபமேற்றி அஞ்சலி செய்த போது, பொலிஸார் அந்த தீபங்களை எடுத்து எறிந்து அஞ்சலி செலுத்துவதைத் தடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/110670-2014-05-16-06-31-04.html
-
- 0 replies
- 693 views
-
-
இந்தியாவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வது பிராந்திய வலயத்தின் நலனை பாதிக்கும் - ஐ.தே.க இந்தியாவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையானது பிராந்திய வலயத்தின் நலனை பாதிக்கக் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவிற்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் நாட்டின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் கேள்வி எழுந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார். 2013ம் ஆண்டு லோக் சபா அமர்வுகளின் போது இலங்கையிடமிருந்து ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அன்டனி ஒப்புக்கொண்டிருந்தார். இந்தியாவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வது பல்வேறு காரணிகளினால் பாதக விளைவுகளை ஏற…
-
- 8 replies
- 568 views
-
-
கோத்தபாய, சவேந்திர சில்வாவுக்கு எதிராக இலங்கையர் முக்கிய சாட்சி! [Friday, 2014-05-16 09:22:46] ஐ.நா மனிதஉரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட உள்ள விசாரணைக்குழு முன்பாக, இலங்கையர் ஒருவர், பிரதான சாட்சியாளராக சாட்சியமளிக்கவுள்ளதாக சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த இலங்கையர் ஐந்து பெயர்களில் தோன்றியவர் என ஐரோப்பாவில் கடமையாற்றி வரும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த இலங்கையர் வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பில் இரகசிய சாட்சியமளிக்க உள்ளார். நேபாளத்தில் இருந்த குறித்த நபரை ஐ.நா அதிகாரியொருவர் சுவிட்சர்லாந்தின் பேர்ன் நகரிற்கு அழைத்துச் சென்று அரசியல் புகலிடம் வழங்கியுள்ளார். மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா, பாது…
-
- 1 reply
- 632 views
-
-
முள்ளிவாய்க்கால் சோகத்தை அனுஸ்டிக்க மாகாணசபை முன்பாக சிவாஜிலிங்கமும் அனந்தியும் மட்டுமே: 16 மே 2014 முள்ளிவாய்க்கால் சோகத்தை அனுஸ்டிக்க மாகாணசபை முன்பாக சிவாஜிலிங்கமும் அனந்தியும் மட்டுமே: முள்ளிவாய்க்கால் சோகத்தை அனுஸ்டிக்க மாகாணசபை முன்பாக சிவாஜிலிங்கமும் அனந்தியும் மட்டுமேசமூகம் அளித்ததாகவும், மாகாணசபைக் கட்டடக் கதவுகள் அடைக்கப்பட்டு பாதுகாப்புக்கு இலங்கை கலகமடக்கும் பொலிஸாரும் புலநாய்வாளர்களும் - படையினரும் குவிக்கப்பட்டு உள்ளதாகவும் அங்கிருந்து குளோபலுக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவு கூர அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்த நிலையில் சிவாஜிலிங்கமத்தையும் அனந்தியையும் தவிர மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் அ…
-
- 0 replies
- 881 views
-
-
மே 18ஐ நினைவு நினைவுகூர்ந்தால் கைது வெள்ளிக்கிழமை, 16 மே 2014 10:56 -சொர்ணகுமார் சொரூபன் மே 18 நினைவு தினத்தினை பொது இடத்தில் நினைவு கூர்ந்தால் கைது செய்வோம் என யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன இன்று வெள்ளிக்கிழமை (16) தெரிவித்தார். யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அரசாங்கத்தின் உத்தரவிற்கமைய மே 18 நினைவு தினத்தினை பொது இடங்களில் அனுஷ;டிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் அவரது சகாக்களும் உயிரிழந்த தினமாகையினால் அவர்களை நினைவுகூருவார்கள் என்ற ரீதியிலே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்…
-
- 0 replies
- 584 views
-
-
நல்லிணக்கத்துக்கான முயற்சிகளை மஹிந்த ஏன் ஆரம்பிக்கக்கூடாது? கேள்வி எழுப்புகின்றார் எரிக் சொல்யஹய்ம் இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே முதலில் ஆரம்பிக்க வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மீளெழுச்சி என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன? இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங்கையின் சமாதான முயற்சிகளில் ஏற்பாட்டாளராகச் செயற்பட்ட எரிக் சொல்யஹய்ம். நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான முயற்சிகளின் போது ஏற்பாட்டாளராகப் பணியாற்றியவருமான எரிக் சொல்யஹய்ம், அண்மையில் இலங்கை அரசால் தமிழீழ விடுதலைப்புலிகள் மீளுருவாக்கம் பெறுகின்றனர் என்று தெரிவித்து புலம்பெயர் அமைப்புகள் மீது விதித்துள்ள தடைதொடர்பாகத் தனது டுவீற…
-
- 0 replies
- 425 views
-
-
தமிழர்களுக்குத் தொடர்ந்தும் அநீதி இழைக்கின்றது அரசுவிக்கிரமபாகு கருணாரட்ண குற்றச்சாட்டு போரில் உயிரிழந்த இராணுவத்தினரை சிங்கள மக்களால் நினைவுகூர முடியுமாயின் ஏன் தமிழர்களுக்கு தமது உறவுகளை நினைவு கூர முடியாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நவசம சமாஜக்கட்சி தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண. இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ""போரில் உயிரிழந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உறவுகளை ஆண்டுதோறும் அவர்களுடைய குடும்பத்தவர்கள் நினைவு கூர்ந்து வருவது வழக்கம். போரில் மூவின மக்களும் உயிரிழந்தனர். இருப்பினும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் அப்பாவி தமிழ் மக்களே அதிகளவில் உயிரிழந்துள்ளனர். மே 18 ஆம் திகதி போர் வெற்றி கொண்டாடப்படும் அதே வேளை போரில் உயிரிழந்த இராணுவ…
-
- 0 replies
- 490 views
-
-
சட்டத்தை ஒரு குழுவினர் கையில் எடுப்பதால் நாட்டுக்கு பாதகம்: ரவூப் ஹக்கீம் இன்று நாட்டில் சட்டமும் ஒழுங்கும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. ஒரு குழுவினர் சட்டத்தைக் கையிலெடுத்து செயற்படுகின்றனர். இதனால் எதிர்காலத்தில் சர்வதேச ரீதியில் நாடு பாதிப்புகளை எதிர்நோக்க வேண்டியேற்படும் என்று அரசை எச்சரிக்க வேண்டியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் கேசரிக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் அமைச்சர் ஹக்கீம் கருத்துத் தெரிவிக்கையில், தம்புள்ளையில் நகர அபிவிருத்தி அதிகார சபையும் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் மேற்கொள்ள வேண்டிய பணிகளை ஒரு பௌத்த கு…
-
- 0 replies
- 295 views
-
-
தமிழர்களாக இருப்பினும் யுத்த வெற்றியினை கொண்டாட வேண்டும்:உதய கம்பன்பில விடுதலைப் புலிகளை நினைவு கூரும் வகையில் நிகழ்வுகளை வலியுறுத்தும் கூட்டமைப்பின் கோரிக்கை நியாயமற்றது. தமிழர்களாக இருப்பினும் யுத்த வெற்றியினை கொண்டாட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் மேல் மாகாண அமைச்சர் உதய கம்பன்பில தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலியினை செலுத்துவது விடுதலைப் புலிகளை ஆதரிப்பதற்கு ஒப்பானதெனவும் அவர் சுட்டிக்காட்டினார். மே 18 ஆம் திகதியினை முள்ளிவாய்க்கால் நினைவு தினமாக அனுஷ்டிப்பதாக தமிழ் கட்சிகள் வலியுறுத்திவரும் நிலைமையில் இது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில…
-
- 0 replies
- 319 views
-
-
இலங்கையைச் சேர்ந்த அல் கய்தா தீவிரவாதி மலேஷியாவில் கைது:- 16 மே 2014 இலங்கையைச் சேர்ந்த அல் கய்தா தீவிரவாதி ஒருவர் மNஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவின் புகிட் அமான் எனப்படும் பயங்கரவாத தடைப் பிரிவு குறித்த இலங்கையரை கைது செய்துள்ளது. இலங்கையர் உள்ளிட்ட நான்கு தீவிரவாதிகளை கைது செய்துள்ளதாக மலேஷியா அறிவித்து. இந்தியாவில் தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்கள் மீது தாக்குதல் நடாத்த குறித்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. கீபொங்கில் உள்ள வீடொன்றில் இலங்கையரை மலேஷிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர், அல் கய்தாவுடன் மறைமுகத் தொடர்புகளைப் பேணிய குறித்த இலங்கையர் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தேடப்பட்டு வந்தவர் எனத் தெரிவிக்கப்ப…
-
- 0 replies
- 326 views
-
-
பொது வேட்பாளராக செயற்படும் எண்ணம் எனக்கு இல்லை:அநுரகுமார திஸாநாயக்க பொது வேட்பாளராக செயற்படும் எண்ணம் எனக்கு இல்லை.அரசாங்கத்தை வலியுறுத்தும் கட்சியாக செயற்படவே நாம் விரும்புகின்றோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். மூவின மக்களையும் பாதுகாத்து இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். இதனைத் தொடர்ந்தும் வலியுறுத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலொன்று இடம்பெறுமாயின் பொது வேட்பாளருக்கு அநுர குமார திஸாநாயக்க தகுதியானவர் என்ற கலாநிதி தயான் ஜயதிலகவின் கருத்து தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலொன்று தற்போதைய சூழ்நில…
-
- 0 replies
- 287 views
-
-
காணாமற்போனதாக கூறப்படுபவர்கள் தொடர்பான பெயர்ப்பட்டியலிலிருந்து 90 சதவீதமானவர்களின் பெயர்களை நீக்குவதற்கு பாதுகாப்பு தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. காணாமற்போனதாக கூறப்படுபவர்களில் அநேகமானவர்கள், வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்கள் தொடர்பில் சர்வதேச நாடுகளிடத் விபரம் கோரியுள்ளோம். அந்த விபரங்கள் கிடைக்கும் பட்சத்தில் 90 சதவீதமானவர்களின் பெயர்கள், காணாமற்போனோர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என இராணுவ மற்றும் பாதுகாப்பு ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் கே.தயாபரராஜா, தனது குடும்பத்தாருடன் இந்தியாவில் தஞ்சமடைந்திருப்பதன் மூலம் காணாமற்போனோர்கள், வெளிநாடுகளில் தங்கியிருக்கின்றமை உறு…
-
- 0 replies
- 327 views
-
-
வேல்சாமி தலைமையில் பாதையாத்திரை குழுவினர் இலங்கையில் ஊவா மாகாணத்திலுள்ள கதிர்காமம் முருகன் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்றம் மற்றும் தீர்த்த உற்சவம் தொடர்பாக சென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டும் நிர்வாகத்தினால் இந்துக்களின் பஞ்சாங்கம் மீறப்பட்டுள்ளதாக இந்து அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன. இந்துக்களின் வழிபாட்டுத் தலமாக மட்டுமன்றி சிங்களவர்களினாலும் வழிபாட்டுக்குரிய தலமாக விளங்கும் கதிர்காமம் முருகன் ஆலயம் பௌத்த சிங்களவர்களினால் றூகுனு தேவாலயம் என தற்போது அழைக்கப்படுகின்றது. இலங்கையில் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட தலமாக இந்துக்களால் கருதப்படும் கதிர்காமம் முருகன் ஆலயத்தில் ஆகம விதிகளுக்கு புறம்பான வழிபாட்டு முறைகளே பின்பற்றப்பட்டு வருவதாக நீண்டநாட்களாக இலங்கையில் இருக…
-
- 1 reply
- 387 views
-
-
வவுனியாவில் படைபுலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் மண்டப அனுமதி மறுப்பு! மே 16, 2014 வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டிக்க முற்பதிவு செய்யப்பட்ட முத்தையா மண்டபம். படை புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலால் அனுமதி மறுப்பு! வன்னி மண் மீதான சிறீலங்கா அரச படைகளின் தாக்குதல்களின் போதும், இறுதி போரின் போது முள்ளிவாய்க்காலிலும் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் தலைமையில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுக்களினதும், வவுனியா மாவட்ட சிவில் சமுக அமைப்புகளினதும் பங்களிப்புடன் வவுனியா வைரவபுளியங்குளம் முத்தையா கூட்டுறவு கலாசார மண்டபத்தில் (முத்தையா மண்டபம்) மே 18 அன்று ப…
-
- 0 replies
- 478 views
-
-
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) மற்றும் அதன் அரசியல் பிரிவான ஜனாநயக மக்கள் விடுதலை முன்னனி ஆகியவற்றின் பொதுக் கூட்டம்ட ஜூன் முற்பகுதியில் நடைபெறும் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் வடமாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது கழகத்தின் விசேட பொதுக்கூட்டத்தை ஜூன் முற்பகுதியில் நடாத்த கட்சியின் உயர் மட்டம் முடிவு செய்துள்ளது. இன்று இருக்கின்ற அரசியல் சூழ் நிலையில் எங்களுடைய கட்சியின் நிர்வாக கட்டுமானங்களை கட்டமைக்க வேண்டிய கடப்பாடும், கட்சியை பலப்படுத்த வேண்டியதொரு தேவையும், கட்சியின் வளர்ச்சியினை உறுதி செய்ய வேண்டியதன் அவசியமும் எமக்கு இருக்கின்ற காரணத்தினால் கட்சியினுடைய பொதுக்கூட்டத்தை எத…
-
- 48 replies
- 3.4k views
-