Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தென்னிந்தியாவை தாக்குதல் மையமாகக் கொண்டு பாகிஸ்தானிய தீவிரவாதிகள் இலங்கையையும் மாலைதீவையும் பயன்படுத்துவதாக இந்திய புலனாய்வு பிரிவினர் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து இந்த இரண்டு நாடுகளையும் கண்காணிக்கும் நடவடிக்கைகளை அவர்களை மேற்கொண்டுள்ளனர் என்று செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை பிரஜையான சாகீர் {ஹசைன் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரத்துக்கு உளவு பார்க்கும் போது தமிழகத்தில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டார். அவர் வழங்கிய தகவலை அடுத்தே இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் மீது தமது கண்காணிப்பை திருப்பியுள்ளது. தாம், தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்க மற்றும் மேற்கத்தைய நாடுகளின் அலுவலகங்களையும் இந்திய நிலைகளையும் உளவு பார்த்ததை ஏற்றுக்கொண்டுள்…

  2. முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை பல்கலையில் அனுஷ்டிக்கமுடியாது என யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர்,பீடாதிபதிகள் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் ஆகியோருக்கும் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதிக்கும் இடையிலான சந்திப்பொன்றை இன்று காலை 9 மணியளவில் காங்கேசன்துறையில் உள்ள தல் செவன இராணுவ விடுதியில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின்போது மாணவர் ஒன்றியத் தலைவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வைக் குழுவாகச் சேர்ந்து எவரும் அனுஷ்டிக்கமுடியாது. அப்படி அனுஷ்டிப்பதாயின் அதனைத் தனித் தனியே வீடுகளில் முன்னெடுங்கள். பயங்கரவாதத்துக்க…

  3. இலங்கையில் மீன் மழை! - கெண்டை மீன்கள் கிடைத்ததால் மக்கள் கொண்டாட்டம். Top News [Wednesday, 2014-05-07 08:58:21] புத்தளம் மாவட்டத்தில் உள்ள, மாதம்பை கலஹிட்டியாவ பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் மழையோடு மீன்களும் வானத்தில் இருந்து விழுந்துள்ளன. பனையேறிக் கெண்டை எனப்படும் இந்த நன்னீர் மீன்கள் 3 அங்குலம் முதல் 5 அங்குலம் வரை நீளமானவை என்று பிரதேச மக்கள் கூறுகின்றனர். மழையில் கொட்டிய மொத்தம் 50 கிலோ வரையான கெண்டை மீன்களை மக்கள் பாத்திரங்களில் அள்ளிச் சென்றதாக அவர்கள் கூறினார். கடுமையான காற்றுடன் கூடிய மழையில் அள்ளுண்டு சென்ற மீன்கள் இப்படி தரையில் மழையாக பொழிந்ததாக பீடிஏ சந்திரசிறி என்ற மாதம்பை பிரதேசவாசி கூறினார். http://seithy.com/breifNews.php?newsID=108829&category=…

  4. போர் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்திக்கு பத்தாயிரம் கோடி நிதி ஒதுக்கீடு news இலங்கையில் சுனாமி மற்றும் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்திக்கு சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2015ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்த நிதி கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் தூதுவர் டேவிட் டெலி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஐரோப்பிய ஆணைக்குழுவின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையானது ஐரோப்பிய ஆணைக்குழுவுடன் நெருக்கமான நட்புறவைக் க…

  5. யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்வத்துடன் இரத்ததானம்! [Thursday, 2014-05-08 18:51:00] யாழ்.பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது. இன்று காலை 9 மணிக்கு மாணவர் பொது அறையில் ஆரம்பமாகியஇந்த நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர். பிற்பகல் 4 மணிவரை இரத்ததான முகாம் இடம்பெற்றது. யாழ்.போதனா வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிக்கு மாணவர்கள் தரப்பில் விடுக்கப்பட்ட அழைப்பினையடுத்து அவர்கள் நேரில் சென்று இரத்த சேகரிப்பில் ஈடுபட்டனர். முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை தடுத்து நிறுத்த யாழ்.பல்கலைக்கழகத்தை இழுத்து மூட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதுடன், மாணவர்களையும் விடுதிகளிலிருந்தும் வெளியேற உத்தரவிட்டுள…

  6. சிறிலங்காவில் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம்! மே 7, 2014 சிறிலங்காவில் கடுமையான வரட்சி ஏற்பட்டதால்; தேயிலை உற்பத்தி தொடர்ந்தும் இரண்டாவது மாதமாகவும் வீழ்ச்சி கண்டுள்ளதால் சிறிலங்கா பெரும் நிதி நெருக்கடியை எதிர்நோக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முன்னைய ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் தேயிலை உற்பத்தி 21.9 வீதத்தினால் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை அபிவிருத்திச்சபை தெரிவித்துள்ளது. இதனால் இலங்கை முதன்மையான விவசாய ஏற்றுமதிப் பொருளான தேயிலை ஏற்றுமதி முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 9.9 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டில் தேயிலை உற்பத்தி 4.2 வீதத்தினால் அதிகரித்த…

  7. திடீர் பொதுத்தேர்தல் மூலம் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரசை பலவீனப்படுத்த அரசாங்கம் திட்டம்! [Thursday, 2014-05-08 09:56:44] நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் நோக்குடன் திடீர் பொதுத்தேர்தல் ஒன்றை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டே, நெருக்கடிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தை இயன்றளவு குறைப்பதே இந்த திடீர் பொதுத்தேர்தலின் முக்கிய நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ள சிறுபான்மை பிரதிநிதிகள் மூலமாக அரசாங்கம் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இவர்களை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றினா…

  8. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் தலைமையில் அனைத்துப் பீட பீடாதிபதிகளும் மாணவ ஆலோசர்களும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் சிலரும் நேற்று (07.05.14) யாழ் இராணுவத் தரப்பை சந்தித்துள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்குத் தெரியவருகிறது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு வாரத்தை முன்னிட்டு நேற்றைய தினம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டது. அத்துடன் பல்கலைக்கழக சமூகத்தை சேர்ந்த சிலருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாட்கள் தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் நினைவுகூரப்படுகிறது. யாழ் பல்கலைக்கழகத்திலும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். …

  9. இலங்கையுடன் நியூஸிலாந்து புதிய வான்வெளி ஒப்பந்தம் news நியூஸிலாந்து இலங்கை உட்பட 14 நாடுகளுடன் புதிய வான்வெளி ஒப்பந்தம் ஒன்றை செய்யவுள்ளது. இலங்கையை தவிர பின்லாந்து சவூதி எத்தியோப்பியா ஷம்பியா போன்ற நாடுகளும் இதில் உள்ளடங்குகின்றன. இதனையடுத்து நியூஸிலாந்தின் வர்த்தகத்துக்கு பாரிய வழி திறந்துவிடப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் போக்குவரத்து அமைச்சர் கெரி பிரௌன்லி தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி. எல் பீரிஸுடன் செய்துக்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் படி நியூஸிலாந்தின் நேரடி விமானங்கள் இலங்கைக்கு சேவைகளை மேற்கொள்ளும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 08 மே 2014, வியாழன் 10:00 மு.ப - See more at: http://www.onlineuthayan.com/News_More.php…

  10. வெளிநாடுகளின் அழுத்தங்களால், நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை! - ஐ.நா பொதுச்சபைத் தலைவரிடம் ஜனாதிபதி மஹிந்த எடுத்துரைப்பு. Top News [Thursday, 2014-05-08 09:51:06] வெளிநாடுகளின் தேவையற்ற அழுத்தங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளதாக, ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவர் கலாநிதி ஜோன் வில்லியம் ஆஷ்ஷிடம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலக இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ள கலாநிதி ஜோன் வில்லியம் ஆஷ், நேற்று அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்திருந்தார். இதன்போது, முப்பது வருட யுத்தத்தின் பின் வெற்றி கொண்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த தெளிவுபடுத்தினார். தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 வீதமாக அத…

  11. இலங்கையில் வன்முறைகள் அதிகரிக்கக் கூடுமென கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது. முரண்பாடுகளுக்கான காரணங்கள் உரிய விதத்தில் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான கனேடிய பிரதிநிதி தெரிவித்துள்ளார். சிவில் சமூகத்தின் மீதான தாக்குதல்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, வன்முறைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இலங்கை அறிவித்துள்ளது. இன்னர் சிற்றி பிரஸ் ஊடகத்தில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106580/language/ta-IN/article.aspx

  12. திருமலை மாவட்டத்திலுள்ள சம்பூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை சட்ட பூர்வமானதாக்குவதற்கு அரசாங்கம் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. ஆகிரமிக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புக்கு 30 கோடி ரூபாவை நட்டவீடாக வழங்குவதுதான் அரசின் திட்டம். இருந்த போதிலும் இடம்பெயர்ந்த மக்கள் இனை ஏற்க மறுத்திருப்பதால் அரசாங்கம் புதிய நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றது. இலங்கை அரசு, சம்பூரில் உயர் பாதுகாப்பு வலயத்துக்காக மேற்கொள்ளப்பட்ட நிலக்கையகப்படுத்தல் முயற்சியில் நிலமிழந்த மக்களுக்கு, இழப்பீடு வழங்க 300 மிலியன் ரூபாய் ஒதுக்கியிருப்பதாக இன்று புதன்கிழமை தெரிவித்திருக்கிறது. இலங்கை உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் அரசு இந்தத் தகவலைத் தெரிவித்தது. 2006…

  13. மத விவகாரங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் பிரிவு எதிர்வரும் வெசாக் தினத்திற்கு முன் கலைக்கப்பட வேண்டும் என ராவணா பலய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அப்படி செய்யாவிட்டால் வெசாக் தினத்திற்கு பின் பௌத்தசாசன அமைச்சுக்குள் சென்று 7வது மாடியில் குடிகொள்ளவுள்ளதாக ராவணா பலய அமைப்பின் பொது செயலாளர் இத்தேபான சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். இன்று பௌத்தசாசன அமைச்சுக்கு சென்று தமது கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் அதற்கு உரிய தீர்வு எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். இலங்கையில் மத பிரச்சினை இல்லை எனவும் விசேட பொலிஸ் பிரிவு அமைத்ததன் மூலம் இலங்கையில் மத சுதந்திரம் இல்லை என ஐநாவிற்கு முறைப்பாடு செய்ய வழ…

  14. யாழ் பல்கலைக்கழக சூழலில் எச்சரிக்கை சுவரொட்டிகள் - குளோபல் தமிழ் செய்தியாளர்:- 07 மே 2014 யாழ். பல்கலைக்கழக சமூகத்திற்கு இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவு மீண்டும் கொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளது:- யாழ்ப்பாப் பல்கலைக்கழக சூழலில் பல்கலைக்கழக சமூகத்தை எச்சரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டியில் பீடாதிபதி, பேராசிரியர்கள் மாணவத் தலைவர்கள் எனச் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகளை இராணுவத்தரப்பே ஒட்டியிருப்பதாக கூறப்படுகிறது. மே மாதம் யாழ் பல்கலைக்கழக மாவர்கள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கொண்டாடுவதைத் தடுக்கவே ஒட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் பல்கலைக்கழகம் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 20 ஆ…

  15. பொது வேட்பாளர் தொடர்பில் மனோ கணேசன்:- விக்னேஸ்வரனை பொது வேட்பாளராக எதிர்கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அரசியல் ஆய்வாளர் நண்பர் குசல் பெரேரா கூறியுள்ளார். இப்போது இங்கே பாராளுமன்ற உறுப்பினர் நண்பர் சுமந்திரன் அதை வழிமொழிந்துவிட்டு, விக்னேஸ்வரனை எதிரணி பொது வேட்பாளராக்கும் இந்த யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், அதற்கான காரணத்தை ஐக்கிய தேசிய கட்சி, ஜேவிபி, ஜனநாயக கட்சி ஆகிய பெரும்பான்மை கட்சிகள் பகிரங்கமாக கூற வேண்டும் என கேட்டுள்ளார். அவரது கேள்வி சரி. அதற்கான விடையை இந்த எதிரணி கட்சிகள் வழங்கும் என் நான் நம்புகிறேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். "விக்னேஸ்வரன் ஒரு தமிழர் என்பது எதிர்கட்சிகளுக்கு அவரை பொது வேட்பாளாராக ஏற்றுக்கொள்…

  16. யாழ்ப்பாணத்தில் எத்தகைய ஆட்சேர்ப்பினை செய்வதாயினும் ஒன்றில் நான் செய்யவேண்டும். அல்லாவிடின் வடமாகாணசபை செய்யவேண்டும். அவ்வாறில்லாமல் முன்னெடுக்கப்படும் ஆட்சேர்ப்புக்கள் சட்டரீதியானவையல்ல என யாழ்ப்பாண அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். இன்று மாவட்ட செயலகத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரது நல்லிணக்க அமைப்பெனும் பெயரில் ஆட்சேர்ப்பு முன்னெடுக்கப்படுவதாகவும் அதற்கு வீடு வீடாகப்பதிவு ஒலிபெருக்கி மூலம் விளம்பரமென சிலர் ஈடுபட்டுள்ளார்களே என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் படையினரிற்கான ஆட்சேர்ப்பு பற்றி தனக்கு எந்தவ…

  17. இலங்கையில் விடுதலை புலிகளுக்கும் ராணுவத்துக்கும் சண்டை முடிவுக்கு வந்த பிறகும், அங்குள்ள தமிழர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். விசாரணை என்ற பெயரில் தமிழர்களை ராணுவத்தினர் அழைத்து சென்று கொடுமைப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. ராணுவத்துக்கு பயந்து தமிழர்கள் பலர், படகுகளில் தமிழகத்துக்கு வரத் தொடங்கி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, இலங்கை தலைமன்னாரில் இருந்து முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த தவேந்திரன், கணேஷ் சுதாகரன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த தயாபர ராஜ் ஆகியோர் மனைவி, குழந்தைகள் என 10 பேர் 2 படகில் தனுஷ்கோடி வந்து இறங்கினர்.அவர்களை பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் தனுஷ்கோடி போலீசார் கைது செய்தனர். நேற்று இரவு ராமேஸ்வரம் மாஜிஸ்திரேட் சரவணக்குமார் முன்னிலையில் அவர்களை ஆஜர்பட…

  18. அளுத்கமவில் இரு ரயில்கள் விபத்து: சேவைகள் பாதிப்பு புதன்கிழமை, 07 மே 2014 08:05 அளுத்கம ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதால் தென் கரையோர ரயில் சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்தள்ளது. சிலாபம் நோக்கி புறப்பட்ட ரயிலே, அளுத்கம ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் ரயிலுடன் இன்று அதிகாலை 3.50 மணியளவில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் ரயில் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்பெட்டிகள் சில தடம்புரண்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/109480-2014-05-07-02-36-17.html

    • 1 reply
    • 376 views
  19. கொழும்பில் போராட்டங்களை நடாத்தக் கூடாது என நீதிமன்றம் தடை 07 மே 2014 கொழும்பில் போராட்டங்களை நடாத்தக் கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இன்றைய தினம் கொழும்பின் கொம்பனித்தெரு பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடாத்தக் கூடாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொம்பனித்தெரு காவல் நிலையப் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோட்டை மாஜிஸ்திரேட் நீதவானினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை நடாத்த வேண்டுமாயின் நீதிமன்றம் அதற்காக சில வழிமுறைகளை அறிவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.15ம் உலக இளை…

  20. இலங்கையில் நாடுதழுவிய அளவில் முஸ்லீம் மக்கள் மீது சிங்கள பெளத்த பேரினவாத இலங்கை அரசு திட்டமிட்ட வகையில் இன்று கடும் அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுபல சேன, ஜாதி கெல உறுமய, ராவண பலய என்னும் அமைப்புகளில் சிலவற்றை இலங்கை அரசே உருவாக்கியும் மற்றவற்றிற்கு முழு ஆதரவளித்தும் முஸ்லீம் மக்கள் மீதான இவ்வொடுக்குமுறையை காவல் துறை மற்றும் இராணுவ பிரிவுகளின் நேரடி ஆதரவுடன் பகிரங்கமாக நிறைவேற்றி வருகிறது. முஸ்லீம் மக்கள் இலங்கை தீவின் ஒரு மக்கள் அல்லர் என்னும் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவது, அவர்களது இன, மத கலாச்சார அடையாளங்களை இழிவுபடுத்துவது என்னும் வகையில் ஓர் சமூக, இன அழிப்பு நடவடிக்கைகள் தூண்டிவிடப்பட்டுள்ளன. அவர்களது குடியிருப்பு, விவசாய நிலங்கள் பறிக்கப்படுகின்றன, பள்ள…

  21. சர்வதேச மட்டத்தில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்ற தம்புள்ளை பள்ளிவாசலின் ஒருபகுதி நேற்றிரவு வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளால் இடிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிவாசல் கட்டடத்தை அண்டிய கட்டடங்கள் பாதை அபிவிருத்திக்காக பெக்கோ இயந்திரங்கள் மூலம் அகற்றப்படுவதாகவும், பெக்கோ இயந்திரங்கள் பள்ளவாசலை அண்டியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவற்றை பொலிசாரின் பாதுகாப்புடன் இனாமளுவே சுமங்கல தேரர் நேரடியாக நின்று வழிநடத்தி வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புனித பூமி அபிவிருத்தி என்ற பெயரில் தம்புள்ளைப் பள்ளிவாசலை ஊடறுத்துச் செல்லும் வகையில் வீதியொன்றை திட்டமிட்டு, தற்போது பள்ளிவாசலின் இரு மருங்கிலும் இயந்திரங்களைக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளதாக அப்பள்ள…

  22. -எஸ்.றொசேரியன் லெம்பேட் முள்ளிக்குளம் கிராம மக்களை வடமாகாண அமைச்சர்களான பொ.ஜங்கரநேசன் மற்றும் பா.டெனிஸ்வரன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை (06) நேரில் சென்று சந்தித்துள்ளனர். முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீண்டும் கடந்த 2010 ஆம் ஆண்டி தமது சொந்த கிராமத்திற்கு திரும்பினர் இதன்போது, அம்மக்களை கடற்படையினர் மீள்குடியேற அனுமதிக்கவில்லை. இதனால் முள்ளிக்குளம் கிராமத்துக்கு அண்மித்த மலக்காடு காட்டுப் பிரதேசத்தில் அம்மக்கள் நான்கு வருடங்களாக தற்காலிக கொட்டில்களில் வசித்து வருகின்றனர். இம்மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக கடந்த இரண்டாம் திகதி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் விசேட குழுவினர் அங்கு சென்று அம் மக…

    • 0 replies
    • 348 views
  23. -ற.றஜீவன் கடந்த 3 ஆம் திகதி காணாமல்போனதாக கூறப்படும் யாழ்ப்பாணம், தும்பளைப் பகுதியினைச் சேர்ந்த பேரின்பநாதன் தேவகி அம்மன் என்ற பெண் புதன்கிழமை (7) கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு மயக்கமான நிலையில் மீட்கப்பட்டதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.புலோலி புளியங்கியான் இந்து மயானத்திற்கு அருகிலிருந்தே இவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்து மயானத்திற்கு அருகில் பெண்ணொருவரின் சடலமொன்று இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்குச் சென்ற பொலிஸார் குறித்த பெண்னை மீட்டுள்ளனர். இது பற்றித் தெரியவருவதாவது, மேற்படி பெண்ணின் வீட்டிற்கு கடந்த 3 ஆம் திகதி காலையில் சிவிலில் வந்த மூவர், தாங்கள் காங்கேசன்துறைப் பொலிஸார் என்று அட…

    • 0 replies
    • 690 views
  24. இலங்கைப் போர்க்குற்ற விசாரணைக்கு மேற்கு நாடுகள் நிதியுதவி! [Wednesday, 2014-05-07 09:22:43] இலங்கையின் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை மேற்கொள்ள 15 லட்சம் டொலர் நிதி தேவைப்படுவதாக ஐ.நா அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுக்கவே இந்தத் தொகை தேவைப்படுவதாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை கணக்கிட்டுள்ளது. இலங்கை நாணயத்தின் பெறுமதியில் சுமார் இருநூறு மில்லியன் ரூபா பெறுமதியான இந்தத் தொகையை திரட்டிக் கொள்வது மற்றும் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை எவ்வாறு முன்கொண்டு செல்வது என்பன தொடர்பில் ஐ.நா தலைமையகத்தில் அண்மையில் கலந்துரையா…

  25. புலிகள் இயக்கம் மீதான தடையை நீடித்தது அமெரிக்கா! - தொடர்ந்து இயங்குவதாகவும் கூறுகிறது. [Thursday, 2014-05-01 09:12:12] தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பதாக அமெரிக்காவின் வருடாந்த பயங்கரவாதம் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இலங்கையில் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும் அவர்கள் சர்வதேச வலையமைப்புகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தன. 2013ம் ஆண்டுக்கு பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களை கொள்வனவு செய்ய ஆரம்பித்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வட அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் பாரிய அளவு புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் நிதித…

    • 28 replies
    • 2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.