ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
பிரான்ஸ் நாட்டில் உள்ள புலிகள் உறுப்பினர்களையும் சில தலைவர்களையும் கைதுசெய்து இலங்கை அனுப்புமாறு, பாதுகாப்பு பிரிவினர் இன்ரர் போல் பொலிசாரிடம் புதுக் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக அறியப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்னர் பிரான்சில் செயல்பாட்டாளர் பரிதி அவர்கள் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கு இதுவரை முடிந்தபாடாக இல்லை. அத்தோடு குற்றவாளிகளையும் பிரெஞ்சுப் பொலிசார் இதுவரை கண்டுபிடிக்கவும் இல்லை. பிரான்சில் வாழும் தமிழர்களிடையே துப்பாக்கி கலாச்சாரம் ஓங்கியுள்ளதாகவும், முன் நாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரே அல்ஜீரியா நாட்டுக்குச் சென்று , கைத்துப்பாக்கிகளை வாங்கிக்கொண்டு பிரான்சுக்குள் நுளைவதாகவும் இலங்கை ஒரு அறிக்கை ஒன்றை தயாரித்து சர்வதேச பொலிசாரிடம் கையளி…
-
- 1 reply
- 837 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனக் குற்றம்சாட்டி வெளிநாடுகளில் இருந்து செயற்படுகின்ற 16 தமிழ் அமைப்புகளையும் 424 தனிநபர்களையும் இலங்கைக்குள் நுழைவதற்கு சிறீலங்கா அரசாங்கம் தடைவிதிப்பதாகக் கடந்தவாரம் வர்த்தமானி அறிக்கையன்றை வெளியிட்டிருந்தது. அத்துடன், இந்த அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணுவோரின் சொத்துக்களை அரசுடமையாக்கப்பட உள்ளதாக சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கடுமையாக எச்சரித்துள்ளார். அத்துடன், தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணினால் சட்டத்தை உச்ச அளவில் அமுல்படுத்த நேரிடு…
-
- 4 replies
- 593 views
-
-
ஒருபோதும் நம்பக்கூடாத நாடு இந்தியா! – விசனத்தை வெளிப்படுத்துகிறது சிறிலங்கா கார்டியன். [Wednesday, 2014-04-16 07:48:39] ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பின் போது இந்தியா நம்பக்கூடாத நாடு என்பதை உறுதிப்படுத்தியதாக சிறிலங்கா கார்டியன் இணையத்தளத்தில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுத்துவதற்கு முன்னர் அது தொடர்பாக மேலும் இரண்டு வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை நடத்துவதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் போதிய நிதி இல்லை என்ற ஒரு பிரேரணையை பாகிஸ்தான் முன்மொழிந்தது.இதற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்திருந்தது. …
-
- 2 replies
- 393 views
-
-
மீறல்கள் குறித்த விசாரணை விவகாரத்தில் முரண்படும் இலங்கை மனிதஉரிமை ஆர்வலர்கள்! [Wednesday, 2014-04-16 07:42:38] இலங்கையில் இறுதிப்போரில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவது தொடர்பாக, இலங்கையிலுள்ள மனிதஉரிமை காப்பாளர்களும் கல்வியாளர்களும் மாற்றுக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா, தம்மைப் பொறுத்தவரை சர்வதேச நியமங்களின் அடிப்படையில் உள்ளுர் விசாரணை முன்னெடுப்புக்கான வாய்ப்பு இன்னும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, உள்ளுர் முயற்சிகள் தோல்வியடைந்ததன் காரணமாகவே சர்வதேச அழுத்தம் ஏற்பட்டதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார். க…
-
- 0 replies
- 405 views
-
-
பொதுநலவாயத்தில் அங்கம் வகிக்கும் இலங்கையால் தமக்குப் பிரச்சினை என்கிறது பிரித்தானியா! [Wednesday, 2014-04-16 07:45:47] பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கின்ற இலங்கை தொடர்பில் தமக்கு பிரச்சினை தோன்றியிருப்பதாக பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான அலுவலக அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் சிவில் யுத்தத்தின் போது இடம்பெற்ற குற்றங்களை விசாரணை செய்யும் செயற்பாடுகளில் மிகவும் குறைந்தளவிலான முன்னேற்றமே காணப்பட்டதாக பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் இணையத்தளத்தில் வெளியாகியிருந்த கட்டுரையொன்றில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 21 ஆம் நூற்றாண்டிற்கான பொதுநலவாய அமைப்பு எனும் தொனிப்பொருளில் அந்த கட்டுரை வெளி…
-
- 0 replies
- 358 views
-
-
இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை 10 ஏப்ரல் 2014 இலங்கைக்கு பயணம் செய்யும் அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் மோசமாக காணப்படுவதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. எனவே, இலங்கைக்கு பயணம் செய்யும் பிரஜைகள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.ஏனையவர்கள் மீதான தாக்குதல்களுக்கு இடையில் அவுஸ்திரேலிய பிரஜைகள் சிக்கிவிடக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இலங்கையில் இடம்பெறும் பாரியளவிலான ஆர்பாட்டங்கள் போராட்டங்களில் அவுஸ்திரேலியர்கள் பங்கேற்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலகங்களை அடக்குவதற்கு கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு அரசாங…
-
- 1 reply
- 597 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனுக்கு தொலைபேசியூடாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. அவர் நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சமயமே குறித்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனைத் தொடர்பு கொண்டபோது, ""குறித்த அழைப்பு எனது கையடக்கத் தொலைபேசிக்கு மேற்கொள்ளப்பட்டிருந்தது. தமிழில் உரையாடிய ஒரு நபர், நீங்கள் தற்போது எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் எவ்வாறு போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேருகிறீர்கள் என்று பார்ப்போம் என்று அச்சுறுத்தும் பாணியில் பேசினார். 0779908892 என்ற இலக்கத்தில் இருந்தே அ…
-
- 0 replies
- 315 views
-
-
சுட்டுக்கொல்லப்பட்ட கோபிக்கு ஜெயக்குமாரி தனது வீட்டில் அடைக்கலம் வழங்கினார் - பிரிட்டன் பிரதமரிடம் போலி குற்றச்சாட்டை சுமத்தினார் - தடுப்பிற்கான காரணங்கள் அடுக்கப்படுகின்றன:- பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட கோபி என்பவருக்கு ஜெயக்குமாரி தனது வீட்டில் அடைக்கலம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல் பாலேந்திரன் ஜெயக்குமாரி, பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் இலங்கைக்கு பயணம் செய்திருந்த போது, போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தியவர் என கொழும்பு ஊடகம் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமருன் பங்கேற்ற போது வடக்கிற்கு பணயம் செய்த…
-
- 0 replies
- 602 views
-
-
-எஸ்.ரவீந்திரன் தமிழரின் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை அழியாமல் பாதுகாக்கும் ஒரு நிகழ்வாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தின் அம்பிளாந்துறையில் ஊஞ்சல் விழா இடம்பெற்றது. இந்நிகழ்வில் செவியேறல் ரீதியான ஊஞ்சல் பாட்டு பாடப்பட்டு 301 வருடம் பழமைவாய்ந்த நிழல்வாகை மரத்தில் ஊஞ்சல்கட்டி சிறுவர், பெரியோர் என்ற வேற்றுமை இன்றி கிராம மக்கள் ஊஞ்சல் ஆடினர். முற்காலத்தில் அம்பிளாந்துறையை ஆட்சிசெய்த சிற்றரசரான அருமைக்குட்டிப் போடியார் 1776 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஊஞ்சல் கட்டி ஆடிய மரமாக இந்த நிழல் வாகை இருந்ததாக வரலாறு கூறுகின்றது. இந்நிகழ்வில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரிய…
-
- 1 reply
- 518 views
-
-
தீக்குளித்த தமிழ் இளைஞர் தற்போதைக்கு நாடு கடத்தப்படமாட்டாராம்! – அவுஸ்ரேலியா கூறுகிறது. [Tuesday, 2014-04-15 09:07:31] அவுஸ்ரேலியாவில் அண்மையில் தீக்குளித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் தற்போதைக்கு நாடு கடத்தப்பட மாட்டார் என அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது. புகலிடம் மறுக்கப்பட்ட காரணத்தினால் குறித்த இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்டார். படுகாயமடைந்த குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தீக்குளித்த இலங்கையரின் உடல் தேறி வருவதாகவும், நீண்ட காலம் சிகிச்சை பெற்றுக்கொள்ள நேரிடும்…
-
- 1 reply
- 313 views
-
-
மந்திகையில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- இணைப்பு 2 மேலதிக படங்களுடன்:- வீரகேசரி மற்றும் தினக்குரலின் வடமராட்சி செய்தியாளர் சிவஞானம் செல்வசிவன் யாழ் புறாப்பொறுக்கியில் வைத்து இனம் தெரியாத இருவரால் வழிமறிக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர் இரும்புக்கம்பியினால் தாக்கப்பட்டுள்ளார் .உயிரிற்கு ஆபத்தான நிலையில் மந்திகை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் மீது கொலைமுயற்சி:- மயிரிழையில் உயிர் தப்பினார்:- வடமாராட்சியின் முன்னணி சுதந்திர ஊடகவியலாளரான சிவஞானம் செல்வதீபன் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வல்லை புறாப்பொறுக்கிச் சந்திக்கு அருகில் சென்று கொண்டு இருந்த இவரின் பின்னால் சென்ற இனம்தெரியாதோர் நீ ஊடகவியலாளரா? ஏன…
-
- 6 replies
- 1k views
-
-
விஜய்யின் கத்திப்படத்தை கருணாமூர்த்தியின் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனமும், சுபாஷ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்து வருகின்றன. இந்த லைகா நிறுவனம், ராஜபக்சவின் தொழில் கூட்டாளி, அவரின் பாசிச கரத்தை வலுப்படுத்தும் தமிழ் பங்காளியின் நிறுவனம் என ஏற்கனவே முத்திரை குத்தப்பட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. Lyca கத்தி படம் குறித்து விஜய்யும், முருகதாஸும் யோசிப்பதற்கு பல மாதங்கள் முன்பே லைகா நிறுவனம் ராஜபக்சவின் பாசத்துக்குரிய பங்காளி என்பதை ஈழத்தமிழர் நடத்தும் பல்வேறு ஊடகங்கள் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தின. Lyca இந்நிலையில் பிரச்சனை பெரிதாவதை அறிந்த ஐங்கரன் கருணாமூர்த்தி சென்னையில் நேற்று பேட்டியளித்தார். நானும் சுபாஷ்கரனும் 30 வருடங்களுக்கு முன்பே இலங்கையைவிட்டு …
-
- 0 replies
- 1.2k views
-
-
196 நாடுகளின் 1500 பிரதிநிதிகள் பங்கேற்கும் அனைத்துலக இளையோர் மாநாடு! - அடுத்தமாதம் இலங்கையில் நடக்கிறது. [Tuesday, 2014-04-15 17:46:07] அனைத்துலக இளையோர் மாநாடு மே மாதம் 06 திகதி முதல் 10 திகதி வரை இலங்கையில் நடத்தப்படவுள்ளது. இதன் தொடக்க நிகழ்வுகள் அம்பாந்தோட்டையில் உள்ள மகம் றுகுணுபுர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவிருக்கிறது. 196 நாடுகளிலிருந்து ஏறக்குறைய 1500 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்குகொள்ள இருக்கிறார்கள். இவ்வளவு பிரமாண்டமான தொகையில் இளையோர் பங்குபற்றும் மாநாடு ஆசிய நாடு ஒன்றில் நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும். 152 இளையோர்கள் இந்த மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள். அமை…
-
- 2 replies
- 520 views
-
-
அமைப்புகள் மீதான தடை இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளைப் பாதிக்கும்! – கனடாவின் நிழல் வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு. [Tuesday, 2014-04-15 17:59:10] சர்வதேச பொது அமைப்புக்கள் பலவற்றின் மீது இலங்கை அரசாங்கம் அண்மையில் கொண்டு வந்திருக்கும் தடை, ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதுடன், அது உடனடியாகவே மீளப் பெறப்பட வேண்டும் என்று கனேடிய எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. கனடாவின் அதிகாரபூர்வ எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் வெளிவிவகார நிழல் அமைச்சர் போல் டேவர் (Paul Dewar) மேலும் கருத்துத் தெரிவிக்கையில் "கனடாவில் இருக்கும் சில அமைப்புக்கள் உட்பட சர்வதேச தமிழ் அமைப்புக்கள் மீதான இந்தத் தடை, இலங்கையில் பொறுப்புடைமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை பலவீனப்…
-
- 2 replies
- 643 views
-
-
இலங்கைக்கு எதிரான சர்வதேச நடவடிக்கை தொடங்கியது! முதல் அடி கொடுத்தது கனடா! இலங்கையின் மனித உரிமைகள் மீறல் விவகாரம் காரணமாக பொதுநலவாய அமைப்புக்கான நிதியை தாம் இடைநிறுத்துவதாக கனடா அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பொறுப்பை இலங்கை வகிக்கின்ற காலப்பகுதிக்கே இந்த நிதி இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய அமைப்புக்கு 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க கனடா திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த நிதி சிறுவர் மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பான வேறு நோக்கங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என கனடா அறிவித்துள்ளது. கடந்த வருடம் இலங்கையில் நடந்த பொதுநலவாய அமைப்பு மாநாட்டை கனேடிய பிரதமர் ஸ் ரீபன் ஹாப்பர் புறக்கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்து. “இ…
-
- 5 replies
- 2.8k views
-
-
வடமாகாணசபை அமைச்சுக்கள், திணைக்களங்களின் பாதுகாப்பு பணியாளர் விபரங்களைத் திரட்டுகிறது இராணுவம்! [Tuesday, 2014-04-15 18:03:21] வடமாகாண சபை திணைக்களங்கள் மற்றும் அமைச்சுகளின் பாதுகாப்பு பணியாளர்களின் விவரங்கள் கடந்த சில தினங்களாகத் திரட்டப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக, வடக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மாகாண சபையின் திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்கள், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் அமைந்துள்ளன. அவற்றில் பாதுகாப்புக் கடமைகளில் தென்னிலங்கையைச் சேர்ந்த, தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு வாரகாலமாக வடக்கு மாகாணசபையின் சகல திணைக்களங்கள் …
-
- 0 replies
- 350 views
-
-
பூநகரி பிரதேசத்தில் சீனப் பிரஜை இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சட்டவிரோதமான முறையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த போது குறித்த பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். சுற்றுலா வீசாக்களின் மூலம் நாட்டுக்குள் பிரவேசித்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சீனப் பிரஜைகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. போலி நகைகளை குறித்த நபர்கள் விற்பனை செய்து கொண்டிருந்த போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.சந்தேக நபர்கள் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.சந்தேக நபர்களை எதிர்வரும் 24ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அட்டாளைச்சேனை விபத்தில் இளைஞர் பலி! அட்டாளைச்சேனையில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் …
-
- 0 replies
- 381 views
-
-
இலங்கை மீது உண்மையான கரிசனை பிரித்தானியாவுக்கு உள்ளது! – துணை வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் தெரிவிப்பு. [Tuesday, 2014-04-15 09:12:54] இலங்கை தொடர்பாக, தாம் உண்மையான கரிசனை கொண்டுள்ளதாக பிரித்தானிய துணை வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் தெரிவித்துள்ளார். இலங்கையில் பாரியளவிலான குற்றச்செயல்கள் தொடர்பிலான விசாரணைகள் சொற்ப அளவிலேயே இடம்பெற்றுள்ளன. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை. சிவில் யுத்தம் இடம்பெற்று ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் பாரியளவிலான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகளில் முன்னேற்றம் பதிவாகவில்லை. குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேசய சுயாதீன விசாரணைகள…
-
- 0 replies
- 311 views
-
-
ஐ.நா விசாரணையை இலங்கை ஏற்க மறுத்ததால் தான் பயணத்தை கைவிட்டேன்! – பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு. [Tuesday, 2014-04-15 09:10:19] ஐ.நா. விசாரணைக்கு ஒத்துழைக்க இலங்கை அரசாங்கம் மறுப்புத் தெரிவித்த காரணத்தால் தான், இலங்கைக்கான பயணத்தில் இருந்து தாம் விலக்கிக் கொண்டதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஷரோன் ஹட்க்சண் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனால் உருவாக்கப்பட்ட "நன்மைக்கான தளம்" என்ற நிறுவனத்தின் ஏற்பாட்டில் - அனைத்துச் செலவுகளும் அந்த நிறுவனத்தால் ஏற்கப்பட்ட- பயணம் ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் ஷரோன் ஹட்க்சண் மேற்கொள்ளவிருந்தார். அவரோடு பயணம் செய்யவிருந்த வேறும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பயணத்தை கடந்தவாரம் இரத்துச…
-
- 0 replies
- 213 views
-
-
சிறிலங்கா விவகாரம் குறித்து, அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வாலுடன், நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், சிறிலங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுக்களில் ஏற்பாட்டாளராகப் பணியாற்றியவருமான எரிக் சொல்ஹெய்ம் பேச்சுக்களை நடத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வொசிங்டனில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, எரிக் சொல்ஹெய்ம், சிறிலங்காவில் எல்லா சமூகங்களுக்குமான உரிமைகள் மற்றும் ஜனநாயகத்துக்கு ஆதரவாக அமெரிக்கா செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். அதேவேளை, எரிக் சொல்ஹெமுடனான சந்திப்புக் குறித்து திருப்தி வெளியிட்டுள்ள நிஷா பிஸ்வால், அவரது அறிவை விட…
-
- 0 replies
- 502 views
-
-
சிறிலங்காவில் வரட்சியால் தேயிலை உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலகளாவிய ரீதியாக தேயிலை விலை அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள வரட்சியால், இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் தேயிலை உற்பத்தி, முன்னைய ஆண்டை விடவும் பாதியாக குறைந்துள்ளது. இதனால், இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களின் சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் நான்கு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறிலங்காவில் உள்ள 206,104 ஹெக்ரெயர் தேயிலைத் தோட்டங்களில், 70 சதம் சிறுதேயிலை உற்பத்தியாளர்களுக்குச் சொந்தமானதாகும். 397,223 சிறுதேயிலை உறுபத்தியாளர்கள் கடந்த ஆண்டில், 1.5 பில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி செய்திருந்தனர். கடந்த பெப்ரவர…
-
- 0 replies
- 267 views
-
-
ஈழத்தில் தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை என நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இலங்கை நம் நட்பு நாடு என்று சொல்கிறது பாரதீய ஜனதா. இலங்கை நம் நட்பு நாடு. ராஜபக்ச நமது நண்பர் என்கிறது காங்கிரஸ் கட்சி. இலங்கை பகை நாடு என்று அறிவிக்க வேண்டும் என்கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா எனவே அதற்காகவே அவரை நாம் ஆதரிக்கின்றோம். ராஜபக்ச ஒரு போர் குற்றவாளி. அவரையும் அவருடைய சகாக்களையும் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனை வாங்கி தர வேண்டும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று நட்புறவை துண்டிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பவர் …
-
- 0 replies
- 256 views
-
-
இலங்கை ஜனநாயக குடியரசின் அதி மேதகு நிறைவேற்று அதிகாரம் கொண்ட கௌரவ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு …..? இலங்கை திரு நாட்டின் ஜனாதிபதியாக நீங்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு கொடூரமான யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தபோது முஸ்லிம்கள் நாங்கள் மிகவும் சந்தோசப்பட்டோம் ஏனெனில் தொடர் யுத்தத்தினால் தமிழ் முஸ்லிம் சிங்களம் என்று மூன்று சமூகமும் உயிர் பொருள் என்று இழந்து சொல்லெனா துயரத்தை அனுபவித்தனர். உங்கள் ஆட்சியிலான யுத்த வெற்றியானது உங்களை இரண்டாம் துட்டகைமுனுவாகவே சிங்கள மக்களைப்போலவே பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்களும் பார்த்தனர், அதனை நிறுவும் முகமாக நீங்களும் மேடைகளில் தமிழில் உரை நிகழ்த்தி எங்கள் மனங்களில் இடம்பிடித்தீர்கள் உங்கள் மேடைப்பேச்சில் தமிழர்களையும் முஸ்லிம்களை…
-
- 1 reply
- 599 views
-
-
சர்வதேச விசாரணைக்கான சாட்சியப்பதிவு செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது:- வில்லியம் ஹேக்:- 15 ஏப்ரல் 2014 சர்வதேச விசாரணைக்கான சாட்சியப்பதிவு செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது:- வில்லியம் ஹேக்:- ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான சர்வதேச விசாரணையை ஆரம்பிக்கும் முகமான சாட்சியப்பதிவு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார் என பிரித்தானிய வெளியுறவு அமைசசர் வில்லியம் ஹேக் அறிவித்துள்ளார். நவநீதம்பிள்ளையின் விசாரணையை பொறுத்தவரை, அதில், அனைத்து துறைசார்ந்தவர்களும் தகவல் மற்றும் சாட்சியப்பதிவு தொடர்பில் தெரிவுச்செய்யப்படுவர் என்று வில்லியம் ஹேக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்த விசாரணைகளின் முன்னேற்றம் தொடர…
-
- 0 replies
- 372 views
-
-
இந்தோனேசியா சிறையிலிருந்து விடுதலை கோரி 9 ஈழத்தமிழர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்!!! - வல்வை அகலினியன் 15 ஏப்ரல் 2014 கடந்தஒரு வருடங்களுக்கு மேலாக மிருகங்களை விட மிக மோசமாக எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி இந்தோனேசியா சிறையில் அடைத்து வைக்கப்படிருக்கும் 9 ஈழத்தமிழ் உறவுகள், தம்மை விடுதலை செய்து குடியேற்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கையினை முன் வைத்து வருகின்ற 21-04-2014 அன்று திங்கட்கிழமை சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள். ◆ இந்தோனேசியாவிற்கு எவ்வாறு ஈழத்தமிழர்கள் சென்றார்கள்? குறிப்பிட்ட 9 ஈழத்தமிழர்களும் 09-03-2013 அன்று 124 பேருடன் இலங்கை இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்குப் பயந்து உயிர் தப்பி சுதந்திரக் காற்றினை சுவாசிப்பதற்காக அகதிகளா…
-
- 0 replies
- 633 views
-