Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்து நல்லையா குமரகுருபரன் நீக்கப்பட்டுள்ளார். இவர் கட்சியின் அங்கத்துசத்தில் இருந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல்குழு கட்சி தலைமையகத்தில் நேற்று மாலை கட்சி தலைவர் மனோ கணேசன் தலைமையில் கூடியது. வேலணை வேணியன், எஸ். ராஜேந்திரன், ஜெயபாலன், சண். குகவரதன், வேலுகுமார், எஸ். கணேசன், கே.ரீ. குருசாமி, எஸ். பாஸ்கரா, பிரியாணி குணரத்ன, லோரன்ஸ் பெர்னாண்டோ, எ. ராஜ்குமார், பிரதீப் ராஜகுமாரன், சண். பிரபாகரன், நந்தினி விஜேரத்தினம் உள்ளிட்ட கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவுகளை கட்சியின் ஊடக செயலாளர் சின்னத்தம்பி பாஸ்கரா…

    • 0 replies
    • 571 views
  2. வெளிநாடுகளில் செயற்படும், 16 புலம்பெயர் அமைப்புகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய 424 நபர்களைத் தடைசெய்யும் சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் சிறிலங்கா அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 21ம் நாளிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தலின் படி, விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளிட்ட 16 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளாக சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவினால் பட்டியலிடப்பட்டுள்ளன. அத்துடன், இவற்றுடன் தொடர்புடைய, 424 நபர்களும் தடைவிதிக்கப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தடைவிதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர் நாடுகளிலும், இந்தியா மற்றும் சிறிலங்காவிலும் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடைவிதிக்கப்பட்டவர்களினது தற்போதைய முகவரி, சிறிலங்…

  3. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்)! ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக மூன்றாவது தடவையாகவும் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் 2002ஆம் ஆண்டுக்கும் 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த மனிதஉரிமை மீறல்கள் மற்றும் அது தொடர்புடைய குற்றங்களை விசாரிக்கும்படி மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்துக்கு கூறப்பட்டிருக்கிறதே தவிர, அதற்கு முன்னர் இடம்பெற்ற, தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அநீதிகளுக்கு எந்தவொரு தீர்வையும் பெற்றுக் கொடுக்கக்கூடியதல்ல. அமெரிக்கா இவ்வாறானதொரு தீர்மானத்தை கொண்டு வருவதன் நோக்கம் தமிழ் மக்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவல்ல. மாறாக இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத…

  4. பலாலியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க படையினருக்கு அனுமதி வழங்கியது யார்? - சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி. [Monday, 2014-04-07 18:46:02] யாழ். வலிகாமம் வடக்கில் மக்களுடைய நிலத்தில் விமான நிலையம் அமைக்கும் படையினரின் நடவடிக்கையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட அவர்,மயிலிட்டி, தையிட்டி போன்ற கிராமங்களை விடுவிக்கப் போவதில்லை எனவும் அவற்றை உள்ளடக்கியதாக சர்வதேச விமான நிலையம் அமைக்கவுள்ளதாகவும், யாழ். கட்டளை தளபதி கூறியிருக்கின்றார். இதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதுடன்,…

  5. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையின் உள்ளகச் செயற்பாடுகளில் தலையீடு செய்வதற்கு இடமளிக்கப் போவதில்லை. நவிப்பிள்ளை அம்மையார் மட்டு மல்ல, அவரது நாய் கூட இலங்கைக்கு வந்து விசாரணை செய்ய அனுமதிக்க மாட்டோம் இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா. பதுளையில் நேற்று நடந்த வைபவம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: ""தற்போது ஜெனிவா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏன் நாம் அதனை எதிர்க்கின்றோம்?. எமக்கென்று மகத்துவம் உள்ளது. நாட்டில் உள்ள உள்ளக விவகாரங்களில் வெளித் தரப்பினர் தலையீடு செய்வதை நாம் விரும்பவில்லை. அதற்கு இடமளிக்கவும் மாட்டோம். எமது வீட்டில் பிரச்சினை இரு…

    • 7 replies
    • 777 views
  6. யாழ்ப்பாணத்துக்கு தனியார் சொகுசு ரயில் சேவையை ஆரம்பிக்கிறார் வர்த்தகர் துவாரகேஸ்வரன்! [Monday, 2014-04-07 18:48:47] கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கு இடையே தனியார் சொகுசு ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வர்த்தகரும், ஐ.தேக உறுப்பினருமான துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் 12.30 மணியளவில், யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். வடக்கிற்கான ரயில் சேவையினை மேற்கொள்ளும் நோக்கில் இலங்கை அரசாங்கமும் இந்திய அரசும் இணைந்து வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி தற்போது கொழும்பில் இருந்து பளை வரை ரயில் சேவை இடம்பெற்று வருகின்றது. விரைவில் தனியார்…

  7. ஜெனீவாத் தீர்மானம் தொடர்பில் தனி ஒருவர் உரிமை கோர முடியாது – சுரேஷ்! இலங்கை அரசு தொடர்பினில் ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பில் தனிநபரெவரும் உரிமை கோர முடியாதென கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையினிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான பத்திரிகைக்கு அக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வழங்கிய செவ்வியில் ஜெனிவா தீர்மானத்தை தனது சாதனையாக வெளிக்காட்டும் வகையில் பல கருத்துக்கள…

  8. கொழும்பு யாழ்ப்பாணத்திற்கு சொகுசு ரயில் சேவையினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வர்த்தகரும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவருமான துவாரகேஸ்வரன் தெரிவித்தார். துவாரகேஸ்வரனினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு இன்று பிற்பகல் 12.30 மணிக்கு ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. அதன்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். வடக்கிற்கான ரயில் சேவையினை மேற்கொள்ளும் நோக்கில் இலங்கை அரசாங்கமும் இந்திய அரசும் இணைந்து வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி தற்போது கொழும்பில் இருந்து பளைவரை ரயில் சேவை இடம்பெற்று வருகின்றது. விரைவில் தனியார் சொகுசு ரயில் சேவையை நான் ஆரம்பிக்கவுள்ளேன். இதற்கான அனுமதியை ஜனாதிபதி, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு அ…

  9. பாகிஸ்தான் - பங்களாதேஷ் பிரிவு போன்று இலங்கை - ஈழம் பிரிவு தவறில்லை! பொன்.ராதாகிருஷ்ணன் இலங்கை பிரச்சினையில் பாஜக இரட்டை நிலைப்பாடு- பாகிஸ்தான் மீது போர் தொடுத்து பங்களாதேஷத்தை பிரித்துக் கொடுத்தது போல் இலங்கையிலும் நடந்தால் அது தவறில்லை என பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்று அவர் அளித்த பேட்டியில் இலங்கை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விளும் அவர் அளித்த பதில்களும், இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்ன வென்று நினைக்கிறீர்கள்? இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு அந்த நாட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையில்தான் உள்ளது. தங்களது உரிமையைப் பாதுகாக்கக் கோரி கிழக்கு பா…

    • 0 replies
    • 767 views
  10. தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த, 32 பேர், இந்தியாவில் தங்கியுள்ளதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் இந்திய செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விடுதலை புலிகள் இயக்கத்தை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளதாக, இலங்கை அரசு சந்தேகிக்கிறது. இதன் காரணமாக, விடுதலை புலிகள் அமைப்பு, குளோபல் தமிழ் போரம் உள்ளிட்ட, 16 அமைப்புகளுக்கு, இலங்கை அரசு தடை விதித்துள்ளது. பல்வேறு அமைப்புகளின் பெயரில் செயல்படும் விடுதலை புலிகள், இலங்கைக்கு வந்தால், அவர்களை உடனடியாக கைதுசெய்ய, இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில், 422 விடுதலை புலிகள் தங்கியுள்ளதாகவும், இவற்றில், 32 பேர், இந்தியாவில் தங்கியுள்ளதாகவும், இவர்களை கைதுசெய்ய, சர்வதேச பொலிசாரிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும்…

    • 2 replies
    • 428 views
  11. இந்தியாவை வீழ்த்தியது இலங்கை! – வடக்கில் வெடிகொளுத்தி கொண்டாடுமாறு இராணுவம் அழுத்தம் [Monday, 2014-04-07 08:52:49] பங்களாதேசில் நேற்றிரவு நடந்த இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்,இந்தியாவை வீழ்த்தி இலங்கை வென்றுள்ளது. மீர்புரில் நடந்த இறுதியாட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை இலங்கை எளிதில் வீழ்த்தியது. இருபது ஓவர் கிரிக்கெட்டில் இலங்கை உலகக் கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை. இந்த ஆட்டத்தோடு சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுகின்ற குமார சங்ககா,ர தனது கடைசி ஆட்டத்தில் அரைசதம் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஓய்வுபெறுகின்ற மற்றொரு மூத்த ஆட்டக்காரரான மஹேல ஜெயவர்த்தனவும் 24 ரன்களை எடுத்து அணியை வெற்றிப் பா…

    • 2 replies
    • 473 views
  12. வளர்முக நாடுகள் மீதான மேற்குலகின் பொருளாதார ஒடுக்குமுறையின் ஒரு பகுதியே ஜெனிவா தீர்மானம்! – என்கிறார் அமைச்சர் பசில். [Monday, 2014-04-07 09:29:32] இலங்கை போன்ற வளர்முக நாடுகள் மீது மேற்கு நாடுகள் மேற்கொள்ளும் வழமையான பொருளாதார ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாகவே இலங்கை மீதான ஜெனீவா தீர்மானம் அமைந்துள்ளது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருநாகல், கேகாலை ஆகிய நகரங்களில் இடம்பெற்ற அரச அதிகாரிகளுக்கான மாநாட்டின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இலங்கையில் யுத்த நிலைமை நிலவிய போது கொண்டுவரப்படாத பிரேரணைகள் நாட்டில் சமாதானம் நிலவும் காலத்தில் கொண்டு வரப்பட்டுள்ளமை இதனை உறுதிசெய்கிறது. சிறிய நாடுகளின் வளர்ச்சியினை…

  13. டக்ளஸ் மீது நடவடிக்கை எடுக்க பொலிஸ் தயக்கம்; தன்னால் முடியாது என பகிரங்கமாக கைவிரித்தார் சிரேஷ்ட அத்தியட்சகர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராகச் செய்யப்பட்ட முறைப்பாட்டில் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறது பொலிஸ். தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தலைமையிலான ஈ.பி.டி.பி. குழுவினர் தனது வீட்டை விட்டு வெளியேற மறுக்கின்றனர் என்று அதன் உரிமையாளர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார். மானிப்பாயில் உள்ளது அவரது வீடு அதனை ஈபிடிபியினர் வலுக்கட்டாயமாகத் தன்னி…

  14. ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் போது நடுநிலை வகித்த நாடுகள் சிலவற்றின் இராஜதந்திரிகள், நம்பகமான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்கும்படி சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. அனைத்துலக விசாரணையைத் தவிர்ப்பதற்கு, நம்பகமான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதே ஒரே வழி என்று இவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக, இந்தியா, ஜப்பான், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளே இவ்வாறு அழுத்தம் கொடுத்து வருகின்றன. எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வலிமை மிக்க தரப்புகள் புதிய விசாரணைக்குழு உருவாக்கப்படுவதை விரும்பவில்லை. ஏற்கனவே அரசாங்கம், இதுதொடர்பாக நல்லிணக்க ஆணை…

    • 1 reply
    • 284 views
  15. சட்டங்களுக்கு முரணாக பாகிஸ்தானிடம் நிதியுதவி பெற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன்! - கிளர்ந்தெளும் தென்னிலங்கை அரசியல்கட்சிகள். [sunday, 2014-04-06 19:55:00] வடக்கில் முஸ்லிம்களுக்கான வீட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு நிதி உதவி வழங்கும்படி கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விடுத்த கோரிக்கையை ஏற்று அவருக்கு நேரடியாக 1 மில்லியன் டொலர் (சுமார் 13 கோடி ரூபா) நிதியை அனுப்பி வைப்பதற்கு பாகிஸ்தான் அரசு இணங்கியுள்ளது. இது தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நிதி அமைச்சின் வெளிநாட்டு மூலவளங்கள் திணைக்களம் ஊடாக மட்டுமே அமைச்சுக்களும் அமைச்சர்களும் திட்டங்களுக்கான நிதி மற்றும் உதவிகளை வெளிநாட்டுத் தரப்புகளிடமிருந்து திரட்ட ம…

  16. வவுனியாவில் 40 டிகிரியைத் தொட்டது வெப்பம்! – தகிக்கும் வெயிலால் தவிக்கும் மக்கள். [Monday, 2014-04-07 09:03:01] இலங்கையின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. வட மாகாணத்தில் வவுனியாவில் அதிகூடிய வெப்பநிலையாக 40 டிகிரி வெப்பம் பதிவாகியிருப்பதாக காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் எஸ்.ஆர்.ஜயசேகர கூறியிருக்கிறார். இந்த வருடம் பல விவசாய மாவட்டங்கள் கூடுதலான வறட்சியை எதிர்நோக்கியிருப்பாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். வவுனியா, மன்னார், அனுராதபுரம், பொலன்னறுவை, குருணாகலை, புத்தளம், மொனராகலை ஆகிய மாவட்டங்கள் வறட்சியினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதேவேளை, இலங்கையின் …

  17. இலங்கை பிரச்சினையில் பாஜக இரட்டை நிலைப்பாடு- பாகிஸ்தான் மீது போர் தொடுத்து பங்களாதேஷத்தை பிரித்துக் கொடுத்தது போல் இலங்கையிலும் நடந்தால் அது தவறில்லை என பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்று அவர் அளித்த பேட்டியில் இலங்கை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விளும் அவர் அளித்த பதில்களும், இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்ன வென்று நினைக்கிறீர்கள்? இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு அந்த நாட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையில்தான் உள்ளது. தங்களது உரிமையைப் பாதுகாக்கக் கோரி கிழக்கு பாகிஸ்தான் இந்தியாவை அணுகியபோது, 1971-ம் ஆண்டு பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்து பங்களாதேஷத்தைப் …

  18. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க:- எதிர்க்கட்சிகள் ஜனநாயக ரீதியில் அரசாங்கத்தை கவிழ்க்காவிட்டால், மக்கள் கிளர்ச்சி நடத்தி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நிலைமை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சில நாடுகளில் இடம்பெற்ற கிளர்ச்சிகளைப் போன்று இலங்கையிலும் கிளர்ச்சிகள் வெடிக்க வாய்ப்பு உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உடவலவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த கால அரசியல் தலைவர்களின் சேவைகளை தற்காலத் தலைவர்கள் மறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். பெருமளவிலான அரசியல்வாதிகள் பொருளாதார நன்மைகளை அடிப்படையாகக் கொண்டே தேர்தலில் போட்டியிடுகின்றனர் என அவர் சு…

  19. ஐ.நாவில் சாட்சியமளிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை ஐக்கிய நாடுகள் அமைப்பில் சாட்சியமளிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்;ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை விசேட நிபுணர் குழு ஒன்றை நியமித்து விசாரணை நடாத்த உள்ளார். மூவர் அடங்கிய இந்த விசாரணைக் குழுவினர் எதிர்வரும் மே மாதத்தில் விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளனர், இந்த சர்வதேச விசாரணைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாட்டுக்கு வெளியே நடத்தப்பட உள்ள சர்வதேச வி…

  20. சிறிலங்கா அரசாங்கம் என்னை தன்நாட்டுக்குள் நுழைவதற்கு விதித்துள்ள தடை சட்டத்திற்கு முரணானது என்பதுடன் எனது உரிமையை மீறும் செயலாகும். எனினும் எவ்வாறான நெருக்கடிகளுக்கும் தடைகளுக்கும் நான் அஞ்சப்போவதில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சிறிலங்கா அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் 16 அமைப்புகள் உட்பட 424 தனிநபர்களை இலங்கைக்குள் செல்வதற்கு தடைவிதித்துள்ளது. அதில் நானும் அடங்குகின்றேன். என்னைப்பொறுத்தவரை நான் பிரித்தானியாவில் குடியமர்வதற்கோ அல்லது …

  21. சிறிலங்காவின் வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில், போரில் கணவனை இழந்த பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுவது மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்படுவது தொடர்பாக எழுதிய செய்திக்காக, ஏஎவ்பி செய்தி நிறுவனத்தின் புதுடெல்லி முகவர் Charlotte Turner மனிதஉரிமை ஊடக சிறப்பு விருதைப் பெற்றுள்ளார். ஹொங்கொங்கில் நேற்று நடந்த மனிதஉரிமைகள் ஊடக விருது விழாவில், தெற்காசியாவில் மனிதஉரிமைகள் தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரைகள் மற்றும் ஒளிப்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில், ஏஎவ்பி எனப்படும் பிரான்ஸ் செய்தி முகவரகத்துக்கு மூன்று விருதுகள் கிடைத்துள்ளன. அவற்றில் சிறிலங்காவின் வடக்கில் போரினால் கணவனை இழந்த பெண்கள் பாலியல் ரீதியாக எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் தொட…

  22. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு வழங்காதமைக்கு நன்றி தெரிவித்து, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கடிதம் எழுதியுள்ளதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 27ம் நாள் ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில், அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் கொண்டு வரப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு, 23 நாடுகள் ஆதரவு வழங்கியிருந்தன. 12 நாடுகள் மட்டும் எதிர்த்த இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பின் போது இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் நடுநிலை வகித்தன. இந்தியாவினது இந்த நிலைப்பாடு, சிறிலங்காவுடனான உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளதாக, ஊடகங்கள் கருத்து வெளியி…

  23. வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் முதலமைச்சர் சார்பில் முன்னிலையாகுவதற்கு சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். வலி.கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர், தனது பதவி நீக்கத்திற்கு எதிராகக் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், வலி.கிழக்குப் பிரதேசசபையின் செயலாளர், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், முதலமைச்சரினால் நியமிக் கப்பட்ட அதிகாரிகள் மூவரை உள்ளடக்கிய குழுவினர் வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிட்டிருந்தனர். குறித்த வழக்கு மீதான விசாரணை கடந்த மாதம் 19 ஆம் திகதி கொழும்பு மேன்முறையீட்டு நீதிம…

  24. 'எசியன் அவார்ட்ஸ்' அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் செல்வாக்கு மிக்க 100 ஆசியர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறது. இந்நிலையில்2014 ஆம் ஆண்டில் ஆசிய நாடுகளில் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 34 ஆவது இடத்தை பெற்றுள்ளார். முதலிடத்தை சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கும், இரண்டாம் இடத்தை இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், நான்காம் இடத்தில இந்திய பா.ஜ.க பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியும் தெரிவாகியுள்ளனர். http://www.virakesari.lk/articles/2014/04/07/34-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9…

  25. சீனாவின் கைக்குப் போகிறது நுரைச்சோலை அனல்மின் நிலையம்! [Monday, 2014-04-07 08:55:13] நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் செயற்பாடுகளை மூன்று ஆண்டுகளுக்கு சீனாவிடம் ஒப்படைக்க இலங்கை அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது, சீனாவின் இயந்திர பொறியியல் கூட்டுத்தாபனத்திடம் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் செயற்பாடுகளை மூன்று ஆண்டுகளுக்கு ஒப்படைப்பதற்கு அமைச்சரவையிடம் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. அமைச்சரவை அனுமதி பெறப்பட்ட பின்னரே புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்படுவது வழக்கம். ஆனால், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தைக் கைமாற்றும் புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொள்ளப்பட்ட பின்னரே, அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அனல்மின் நிலையத்தின் தொழில்நுட்ப வழிகாட்டுமுறைகள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.