ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
வடக்கே உள்ள மீனவர்கள் இனிமேல் கடலுக்குச் சென்று மீன்பிடிப்பதற்கு கடற்படையினரிடம் அல்லது இராணுவத்தினரிடம் பாஸ் பெறும் நடைமுறை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட உள்ளதாகத் தெரிகிறது. போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் படிப்படியாகவே, மிக மெதுவாகவே மீன்பிடிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இப்போது ஜெனிவாவில் இலங்கை அரசு மீது ஐக்கிய நாடுகள்சபை விசாரணை ஒன்று முன்னெடுக்கப்படுவதற்கான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகையில் மீன்பிடிக்கான பாஸ் நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்தப் போவதாகப் படையினர் தம்மிடம் தெரிவித்தனர் என்று மீனவர்கள் உதயன் பத்திரிகையிடம் தெரிவித்தனர். இதற்குக் கட்டியங்கூறும் வகையில் நேற்றுமுன்தினம் இரவு முதல் கரையோரப் பகுதிகளில் படையினரின் ரோந்து அதிகரிக்கப்பட்டிர…
-
- 0 replies
- 383 views
-
-
காணாமல் போன மலேசிய விமானத்தின், "கறுப்புப் பெட்டி" காலியில் கண்டுபிடிப்பு!!!! இன்று அதிகாலை... காலியிலிருந்து ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற , மீனவர்களின் வலையில்... விமானத்தின் கறுப்புப் பெட்டி சிக்கி, உலகின் கவனத்தை... ஸ்ரீலங்கா பக்கம் திருப்பியுள்ளது. கடந்த எட்டாம் திகதி, மலேசியாவிலிருந்து... சீனாவை நோக்கி 239 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த மலேசிய விமானம் காணாமல் போனது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த விமானம் காணாமல் போனதிலிருந்து... உலகின் பல் வேறு நாடுகளும்... தமது சற்றலைற், போர்க்கப்பல், ஆகாய விமானம் மூலம்... உலகின் பல பகுதிகளிலும் தேடிய போதும்... விமானத்தின் உடைந்த சில பொருட்கள் கடலில் மிதப்பதாக தெரிவித்திருந்தும், அப் பொருட்கள் காணாமல் போன, விமானத்தின் ப…
-
- 17 replies
- 1.8k views
-
-
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமானது – பான் கீ மூன் 02 ஏப்ரல் 2014 இலங்கையில் குற்றச் செயல்களக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மீண்டும் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவாவில் கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த அரசாங்கம் ஆக்கபூர்வமான வகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான்…
-
- 0 replies
- 245 views
-
-
யாழ்.மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சூழ தமிழ் மன்னர்களின் உருவச் சிலைகள் news யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சூழ சங்கிலியன், பண்டாரவன்னியன், எல்லாளன் ஆகிய தமிழ் மன்னர்களின் உருவச் சிலைகள் நிறுவப்படவுள்ளன. இரண்டாம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சிவகாமி சித்திர கோட்டம் சிற்பாலயத்திலேயே இச் சிற்பங்கள் வடிவமைக்கப்படுகின்றன. சிற்பங்களை உருவாக்கியுள்ள சிற்பக்கலைஞர் செல்லையா சிவப்பிரகாசத்திடம் இது குறித்து கேட்டபோது; ""மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சூழ சங்கிலியன், பண்டார வன்னியன், எல்லாளன் ஆகிய தமிழ் மன்னர்களின் உருவச் சிலைகள் வைப்பதால் வரலாறு பேணப்படுகின்றது. அத்தகைய ஒரு செயலுக்காக எனது சிற்பங்கள் பயன்படுத்தப்படுவது மிக்க மகிழ்ச்சி தருவதாக உள்ளது. குறித்த மூன்று …
-
- 18 replies
- 1.5k views
-
-
தான் இன்னும் பலமாகத் தான் இருக்கிறேன் என்கிறார் பிரதி அமைச்சர் கருணா! [Tuesday, 2014-04-01 08:06:14] சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்களையே முதன்முதலில் விசாரிக்கப்பட வேண்டும் என்று மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவருமாகன வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை திட்டமிடல் பிரிவின் புதிய அலுவலக திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர். இலங்கையிலே நடைபெற்ற அழிவுகளுக்கு மிகவும் பெரும் பங்காற்றியவர்கள் இன்று த.தே.கூட்டமைப்பில் இருக்கும் பாராளுமன்ற…
-
- 4 replies
- 652 views
-
-
மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் உயிரூட்டம் பெறுவதைத் தடுத்தும் நிறுத்தும் எதிர்ப்புரட்சி நடவடிக்கைளின் போர்வையில் தமிழீழ தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘புலிவேட்டையை’ புலம்பெயர்தேசங்களுக்கு விரிவுபடுத்துவதற்கான ஆயத்தங்களை சிங்களம் மேற்கொண்டுள்ளது. இதற்கான முன்னோடியாக புலம்பெயர் தேசங்களில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுமுக அமைப்புக்கள் எனக் கருதப்படும் அமைப்புக்களையும், அவ் அமைப்புக்களுக்கு தலைமை தாங்குபவர்கள் எனக் கருதப்படுவோரையும் தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தலை சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சு தயாரித்திருப்பதாக கொழும்பில் இருந்து வெளிவரும் டெய்லி மிரர் நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ் இளையோர் அமைப்பு, தம…
-
- 8 replies
- 1.1k views
-
-
ஜப்பான் போர்க் கப்பல்கள் கொழும்பில் செவ்வாய்க்கிழமை, 01 ஏப்ரல் 2014 17:50 ஜப்பான் கடற்படைக்குச் சொந்தமாக இரு போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் இன்று (01) நங்கூரமிட்டுள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் இந்த இரு போர்க் கப்பல்களும் இலங்கைக்கு வந்துள்ளன. இலங்கை கடற்படையினாரால் சம்பிரதாயபூர்வமாக இவ்விரு கப்பல்களும் வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/105416-2014-04-01-12-21-06.html
-
- 0 replies
- 396 views
-
-
ஒரு சர்வதேச அரசசார்பற்ற நிறுவனத்தின் ஏற்பாட்டின் கீழ் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி வகுப்பொன்று பொலநறுவை சுது அரலியா உல்லாச விடுதியில் நேற்று (28.03.2014) நண்பகல் ஆரம்பமானது இந்தப் பயிற்சி வகுப்பில் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் சிங்கள முஸ்லிம் ஊடகவியலாளர்கள் 30 பேர் கலந்துகொண்டிருந்தனர். நேற்று நண்பகல் ஆரம்பமான பயிற்சி வகுப்பு மாலை 6.00 மணிவரை நடைபெற்று ஒரு மணித்தியால இடைவேளையின் பின் மீண்டும் இரவு 7.00 மணிக்கு ஆரம்பிக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்களினால் அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அனைத்து ஊடகவியலாளர்களும் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது திடீரென விடுதிக்கு விரைந்து வந்த பொதுபலசேனா அமைப்பைச் சேர்ந்த 15 இற்கும் மேற்பட்ட…
-
- 0 replies
- 447 views
-
-
இந்தியாவால் இலங்கையைக் கட்டுப்படுத்த முடியவில்லை! – என்கிறது இந்திய ஊடகம். [Tuesday, 2014-04-01 08:02:14] இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மிகவும் பழமை வாய்ந்ததாக இருப்பதால், இலங்கையை கட்டுப்படுத்த முடியாது போய் விட்டது என்று இந்திய ஊடகமான த பிஸ்னஸ் ஸ்டான்டர்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது. அண்மையில் ஜெனீவா மனிதஉரிமைகள் மாநாட்டில் இடம்பெற்ற இலங்கை தொடர்பான அமெரிக்காவின் தீர்மானம் விடயத்தில் இந்தியா செயற்பட்ட விதம் இதனை எடுத்துக் காட்டுகிறது. 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த கால கட்டம் வேறு.இப்போது உலகம் பல்வேறு வழிகளில் மாற்றம் கண்டுள்ளது.ஆனால் அந்த கறுப்பு வெள்ளை காலத்தில் வகுக்கப்பட்ட அதே வெளியுறவுக் கொள்கையுடனேயே இந்தியா பயணிக்கிறது. இதனா…
-
- 1 reply
- 344 views
-
-
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது. 12 நாடுகள் ஆதரிக்கவில்லை. 12 நாடுகள் புறக்கணித்தன. அவற்றில் இந்தியாவும் ஒன்று. இலங்கைக்கு எதிராக இதற்கு முன் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை பல நெருக்கடியான நிலைகளில் ஆதரித்த இந்தியா, எது எப்படியும் போகட்டும் என்ற மனோபாவத்தில் மேற்கொண்ட அலட்சியமான முடிவு இது. இந்தப் புறக்கணிப்புக்காக இலங்கை அதிபர் ராஜபட்ச உளம் மகிழ்ந்து, பாராட்டி இருப்பதும், இதற்குப் பரிசாக 93 இந்திய மீனவர்களை விடுதலை செய்திருப்பதும், இந்தியாவை மேலும் கேலி செய்வதுதானே தவிர வேறு ஏதும் …
-
- 1 reply
- 290 views
-
-
நடுநிலை வகித்தமைக்கு இந்தியா கூறும் காரணங்களை ஏற்க முடியாது! – நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவிப்பு. [Tuesday, 2014-04-01 07:58:30] அமெரிக்காவின் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகித்தமைக்காக இந்திய அரசாங்கத்தின் தரப்பில் முன்வைக்கப்படுகின்ற காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.இந்த தீர்மானத்தின் போது இந்தியா நடுநிலை வகிக்க வேண்டும் என்று இந்திய அமைச்சரவையிலோ, மத்திய செயற்குழு கூட்டத்திலோ தீர்மானிக்கப்பட்டிருக்கவில்லை. இதனை இந்திய வெளிவிவகார அமைச்சே மேற்கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியா இந்த தீர்மானத்துக…
-
- 2 replies
- 396 views
-
-
பௌத்த பிக்குகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முடியாது! -மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு. [Tuesday, 2014-04-01 07:56:14] பௌத்த பிக்குகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க விதிக்கப்பட்டுள்ள தடையை மேன்முறையீட்டு நீதிமன்றும் உறுதிப்படுத்தியுள்ளது. மூன்று பௌத்த பிக்குகளினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குமாறு கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் பௌத்த பிக்குகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்தை எதிர்த்து பௌத்த பிக்குகள் மேன்முறையீடு செய்திருந்தனர். அரசியல் சாசனத்தின் அடிப்படையில் பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டியது அவசியமானது என நீதிமன…
-
- 2 replies
- 496 views
-
-
தமிழ் உணர்வாளர்களின் மனக்கொதிப்பைப் புரிந்துகொண்ட லிங்குசாமிக்கு சீமான் நன்றி தெரிவிப்பு! [Tuesday, 2014-04-01 12:37:00] ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்த 'இனம்' படத்துக்கு தமிழ் மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து படத்தை எந்தத் தியேட்டரிலும் ஓடாதபடி நிறுத்திக் கொள்வதாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் லிங்குசாமி அறிவித்தார். இது குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: 'இனம்' படம் தமிழர்களுக்கு எதிரான சித்தரிப்புப் படம். கொஞ்சமும் உண்மையற்ற விவரங்களோடு இப்படியொரு படம் வேண்டுமென்றே வெளியிடப்பட்…
-
- 0 replies
- 762 views
-
-
வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பாதீர்கள்! இராணுவ சேவையில் இணைந்த, இணையவுள்ள தமிழ் பெண்களுக்கு வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் அறிவுரை. [Tuesday, 2014-04-01 11:08:03] இராணுவ சேவைக்கு புதிதாக இணைக்கப்பட்டுள்ள பெண்கள் பயிற்சியின் போது ஆண் படைச்சிப்பாய்களினால் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் காணொளியை ஊடகங்கள் வெளியிட்டுள்ளமை நீங்கள் யாவரும் அறிந்ததே. தற்சமயம் இந்த காணொளி உண்மையெனவும், சிங்கள பாசை பேசும் பெண்களுக்கு நடைபெற்ற கொடுமைகள் எனவும் அரச உயர்பீடம் ஏற்றுக்கொண்டுள்ளது. சர்வ சாதாரணமாக அது சிங்கள பெண்களுக்கு நடைபெற்றது என சிறீலங்கா அரசு கூறியுள்ளது. இங்கு எமக்கு மொழி ஒரு பிரச்சினையே இல்லை. ஆனால் குறித்த சம்பவம் மனிதாபிமானத்துடன் தொடர்புடைய …
-
- 0 replies
- 537 views
-
-
தமிழ்மக்களின் அபிலாஷைகளை அரசாங்கம் இன்னமும் சரியாக அடையாளம் காணவில்லை! – கண்டுபிடித்தார் அமைச்சர் ராஜித. [Tuesday, 2014-04-01 08:10:11] மேல் மாகாணத்தில் சிறுபான்மையினர் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது மிகக் குறைவாகவே காணப்படுகிறது என அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மேல் மற்றும் தென் மாகாண தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து வெளியிடும் போதே அமைச்சர் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 51 தொகுதிகளில் தனது பெரும்பான்மையை நிரூபித்து அமோக வெற்றியை ஈட்டியிருக்கிறது. தமிழ் மக்கள் தாம் எதிர்பார்க்கும் அபிலாஷைகளை அரசாங்கம் இன்னமும் சரியா…
-
- 0 replies
- 377 views
-
-
அனைத்துலக சமூகத்துடன் இந்த இறுதிக் கட்டத்திலாவது சிறிலங்கா அதிபர் பேச்சு நடத்த வேண்டும் என்று ஐதேக கோரியுள்ளது. ஐதேகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான காமினி ஜெயவிக்கிரம பெரேரா இதுகுறித்து தெரிவிக்கையில், மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு நாடு முகம் கொடுத்துள்ள நிலையில், நிலைமைகள் கையை மீறிச் செல்வதை தடுக்க வேண்டும் என்றால், சிறிலங்கா அதிபர் அனைத்துலக சமூகத்துடன் இப்போதாவது பேச வேண்டும். இல்லாவிட்டால் அதன் விளைவுகளை மக்களே அனுபவிக்க நேரிடும். தேர்தல்களில் வென்றுள்ளதால், ஐ.நா தீர்மானங்களைப் பற்றி தாம் கவலைப்படப் போவதில்லை என்று ராஜபக்ச சொல்கிறார். ஆனால், உண்மை என்னவென்றால், அரசவளங்களையும், ஊடகங்களையும் முறைகேடாகப் பயன்படுத்தியும் கூட, அவரது தலைமையிலான ஆளும்கட்சியின் வாக்கு…
-
- 1 reply
- 495 views
-
-
பூநகரி, முளங்காவில் மற்றும் புளியங்குளம் பகுதிகளிலுள்ள 24 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்தது. இருப்பினும் இந்த காணிகளின் உண்மையான உரிமையாளர்களைத் தேடுவதென்பது சாதாரண விடயமல்ல என்று வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார். கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தினால் இந்த காணிகள், அவற்றின் உரிமையாளர்களிடம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/105392-2014-04-01-09-45-23.html
-
- 0 replies
- 188 views
-
-
வடக்கில் பொது நிர்வாகம் முற்றுமுழுதாக செயற்படுத்தப்படுவதாகவும், மீள்குடியேற்றம் மற்றும் மீள்கட்டுமானப் பணிகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுவது தற்போது படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா அரசாங்கம் கூறிவருகிறது. சிறிலங்கா அரசாங்கத்தின் இந்தப் பரப்புரைகள் முற்றிலும் பொய்யானவையாகும். இவ்வாறு அனைத்துலக நெருக்கடிகளுக்கான ஆய்வுக்குழு [international Crisis Group] அண்மையில் வெளியிட்ட தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் 2009ல் உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் இதன் வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள இராணுவமயமாக்கல் தொடர்பாக உள்நாட்டு மற்றும் அனைத்துலக நாடுகள் மிகவும் விசனம…
-
- 0 replies
- 311 views
-
-
முள்ளியவளை முறிப்புப் பகுதியில் நேற்று இராணுவத்தினரால் பெரும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது இருவர் கைது செய்யப்பட்டனர் எனவும், ஒருவர் தப்பிச்சென்றுள்ளார் என்றும் கூறப்படுகின்றது. முள்ளியவளை முறிப்புப் பகுதியில் நேற்று காலை 7.30 மணியளவில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் வந்துள்ளனர். மூன்று வெள்ளை வான்களில் துப்பாக்கிகளுடன் வந்த அவர்கள், அந்தப் பகுதியிலிருந்து இருவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் முன்னாள் போராளி என்பதுடன் திருகோண மலையைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. மற்றையவர் அதேயிடத்தைச் சேர்ந்தவர். பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்ய முற்பட்டனர் என்று நம்பப்படும் மற்றொரு சந்தேக நபர் ஒருவர் அங்கிருந்து தப்பித்துச்…
-
- 0 replies
- 257 views
-
-
யாழ்.சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலியை சேர்ந்த இளைஞன் தன்னை பெண்ணொருவர் காதலித்து ஏமாற்றி விட்டதாக கூறி செய்தி தளங்களுக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்பிவிட்டு இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நீர்வேலியை சேர்ந்த நிரூபன் நவரட்ணம் (வயது 23) என்னும் இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார். குறித்த இளைஞன் வீட்டில் யாருமில்லாத நேரம் பாரத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். காலை 9.05 மணிக்கு செய்தி தளங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தன்னை ஒரு பெண் காதலித்து ஏமாற்றியதாகவும் அந்த பெண்ணின் சுயவிபரத்தையும் எழுதி அந்த பெண்ணை என்ன செய்யலாம் என கேட்டு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதேவேளை நேற்றிரவு தனது முகனூலில் குறித்த பெண்ணின் 188 படங்களையும…
-
- 8 replies
- 3.3k views
-
-
வாழைச்சேனை வாகனேரி கிராமத்தில் பல நூறு ஆண்டுகளாக இந்து மக்களால் வழிபட்டப்பட்டு வந்த விநாயகர் ஆலய மூல விக்கிரகம் நேற்று உடைத்து எடுக்கப்பட்டு காட்டிற்குள் வீசப்பட்டுள்ளது. இந்த அக்கிரமத்தை முஸ்லீம்களே செய்துள்ளனர் என அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். வுhழைச்சேனை காகித ஆலைக்கு அண்மையில் அமைந்துள்ள பிரதான வீதியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. விக்கிரகத்தை வெளியில் எறிந்த விஷமிகளால் இவ்வாலயத்திற்குள் மதுபானம், கச்சா, சிகரட் என்பவற்றை உள்ளே போட்டு விட்டு, அதனுள் இறைவனுக்கு வைக்கப்பட்ட பூக்கள், பட்டுக்கள் என்பவற்றையும் வெளியே வீசியுள்ளனர். இவ்வாலய விநாயகர் விக்கிரகம் வீசப்பட்ட செய்தியை கேள்வியுற்ற மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.ய…
-
- 4 replies
- 853 views
-
-
(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்) நீண்ட காலமாகப் பணரமைக்கப்பட்டு வந்த நிந்தவூர் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் இன்று திறந்து வைக்கப்பட்டது. இதன்போது 40 ஆண்டுகளுக்கு முன்னர் நிந்தவூரில் இடம்பெற்றது போல் பாரிய கந்தூரி நிகழ்வும் இடம்பெற்றது. சுமார் 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பராக்கிரம பாகு மன்னன் காலத்தில் இலுக்கு ஓலையினால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வரலாற்றையுடைய பழம்பெருமை வாய்ந்த இப்பள்ளிவாசல் இன்று முழுக்க முழுக்க நிந்தவூர் மக்களின் பரோபகார சிந்தனையின் மூலமும் வள்ளல் குணத்தினாலும் சுமார் ருபாய் 100 கோடி செலவில் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. http://metromirror.lk/?p=32586
-
- 0 replies
- 735 views
-
-
இலங்கை மீதான விசாரணைக்கு 14 லட்சம் அமெ. டொலர் தேவை news இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா.மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 14 லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டொலர் தேவை என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கடந்த வாரம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறித்த தீர்மானம், இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள், போர்க் குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மேற்கொள்வதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரேரணையில் கூறப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்தி முடிப்பதற்கு 14லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டொலர் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்…
-
- 2 replies
- 753 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் மாவட்டச் செயலகம், பிரதேசச் செயலகங்கள், மன்னார் மாவட்ட அரச திணைக்களங்கள் மற்றும் முப்படையினரையும் இணைத்து மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 5 ஆம் திகதி மாபெரும் தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மன்னாரில் நடைபெறவுள்ள தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தின்; முன் ஆயத்த ஏற்பாடுகள் தொடர்பிலான அவசர கலந்துரையாடல் திங்கட்கிழமை(31) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறியவர்கள் முதல் அனைவருக்கும் ஏற்ற வகையில் பல்வேறு விளையாட்டுப்போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மன்னார் முருங்கன் மகா வித்தியாலய…
-
- 0 replies
- 329 views
-
-
முல்லைக் கடற்கரையில் குடித்துவிட்டு தொல்லை பண்ணுவது யார்? குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்:- முல்லை நகரின் கடற்கரையில் இரவுவேளைகளில் மது அருந்தியபின் தொல்லை செய்வது யார் என்று அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் தாம் இரவு வேளைகளில் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் அப்பகுமி மக்கள் குறிப்பிடுகின்றனர். முல்லை நகரத்தை அண்டிய அப் பகுதியில் தினமும் இரவு வேளையில் மதுபானங்களுடன் வரும் மர்ம நபர்கள் குடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள மக்களுடன் சேட்டை விட்டுத் தொல்லை பண்ணுகின்றனர். இதை காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை என்றும் மக்கள் குறிப்பிடுகின்றனர். முல்லை கடற்கரையின் சில பகுதிகள் மதுபான நிலையங்களைப் போல காணப்படுவதாக தெரிவிக்கும் மக்கள் தா…
-
- 0 replies
- 552 views
-