Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து செல்வதாக செனல்4 ஊடகத்தின் பணிப்பாளர் கலம் மெக்ரே குற்றம் சுமத்தியுள்ளார். நாளுக்கு நாள் முன்னேற்றப்பாதையில் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், மோசமான திசையை நோக்கி நகர்வதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கருத்துச் சுதந்திரத்திற்கு இடமளிக்கப்படாமை வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை மற்றும் நல்லிணக்க விவகாரங்களில் மேம்பாடு ஏற்படுத்தப்பட்ட வருவதாக அரசாங்கம் தொடர்ச்சியாக அறிவித்து வரும் போதிலும், உண்மையில் அவ்வாறான ஓர் நிலைமையை காண முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காணாமல் போனவர்களை கண்டு பிடித்துக் கொடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரி போராட்டங்களை நடத்திய முன்னணி பெண் செயற்பாட்டாளர் ஒருவரு…

  2. கிளிநொச்சி, தர்மபுரத்தில் இடம்பெற்றதாகப் பொலிஸார் கூறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட தாயாரான பா.ஜெயகுமாரிக்குப் பாதுகாப்பு அமைச்சினால் 18 நாள்கள் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை பூஸா சிறைக்கு அனுப்ப உள்ள தாகப் பொலிஸார் நேற்று கிளிநொச்சி பதில் நீதிவான் எஸ். சிவ பாலசுப்பிரமணியத்திடம் தெரிவித்தனர். 13 வயதே நிரம்பிய அவரது மகள் விபூசி காவை, சிறுவர் இல்லத்தில் பாதுகாப்பாக வைத்துப் பராம ரிக்குமாறும் சிறுவர் நன்ன டத்தை அதிகாரிக்கு பதில் நீதி வான் உத்தரவிட்டார். தாம் சந்தேகநபர் ஒருவரைத் தேடிச் சென்ற சமயம் அவர் ஜெயகுமாரியின் வீட்டில் இருந்து பொலிஸாரைச் சுட்டு விட்டுத் தப்பிச் சென்றுவிட்டார் என்றும் வீட்டில் வசித்து வந்த தாய…

  3. இலங்கையின் ஏழு மாகாண வைத்தியசாலைகளுக்கு நவீன முதலுதவி வசதிகளுடன் கூடிய 86 அம்புலன்ஸ் வாகனங்களை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது . வடக்கு- வடமத்திய- வடமேல்- சப்பிரகமுவ- மத்திய- ஊவா மற்றும் கிழக்கு மாகாண மருத்துவமனைகளுக்கே இந்த அம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டது. இதனடிப்படையில் வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 7 அம்புலன்ஸ் வாகனங்களும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 6 வாகனங்களும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 5 வாகனங்களும் மன்னார் மாவட்டத்திற்கு 3 வாகனங்களும் கையளிக்கப்பட்டுள்ளன. மேற்படி சுகாதார வாரத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சு வழங்கியுள்ள இவ் அம்புலன்ஸ் வண்டிகள் ஜப்பான் சர்வதேச கூட்டுத்தாபன அமைப்பின் நிதியுதவியில் வழங்கப்பட்டுள்ளது. - See more at: http://onlineuthaya…

    • 6 replies
    • 561 views
  4. Balenderan Jayakumari campaigned to find her son, who went missing during Sri Lanka's civil war. Now she herself has been arrested, along with her 13-year-old daughter. http://www.channel4.com/news/sri-lanka-jayakumari-arrest-missing-civil-war-ltte கருத்துக்களை பதிவு செய்ய https://www.facebook.com/Channel4News

    • 0 replies
    • 721 views
  5. பிரித்தானியாவில் நீண்ட காலமாகத் தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுத்து வந்த மூத்த அரசியல்வாதியான ரொனி பென் அவர்கள் சாவைத் தழுவியுள்ளார் கடந்த சில மாதங்களாக சுகவீனமுற்றிருந்த ரொனி பென் அவர்களின் உயிர் இன்று காலை அவரது இல்லத்தில் பிரிந்துள்ளது. 1950ஆம் ஆண்டிலிருந்து 2001ஆம் ஆண்டு வரை பிரித்தானியாவின் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கிய ரொனி பென் அவர்கள், 1960களின் இறுதியிலும், 1970களிலும் பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்தவர். பிரித்தானியாவின் பிரபுக்கள் வம்சத்தை சேர்ந்த இவர் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் மேலவையில் பிரபுக்களின் வாரிசுமுறையை ஒழிப்பதற்காகப் பாடுபட்டவர். உண்மையான அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்து 2001ஆம் ஆண்டு நாடாள…

    • 8 replies
    • 699 views
  6. ஜெனிவா தீர்மானம் பலவீனமடைந்து வருகிறதாம்! – அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கூறுகிறார். [Friday, 2014-03-14 09:43:30] ரஷ்யா, சீனா, கியூபா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அமெரிக்காவின் தீர்மானத்தில் உள்ள விடயங்களை நிராகரித்துள்ள நிலையில் ஜெனிவா தீர்மானம் பலவீனமடைந்து வருகிறது. இது இலங்கைக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியிருப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. அங்கு ஜெனிவா மாநாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர். இலங்கைக்கு எதிரான தீர்மானம் உண்மைக்கு புறம்பான விடயங்களினடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளத…

    • 2 replies
    • 475 views
  7. காணாமல் போனோர் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டு வந்த தாயும் மகளுமான குடும்பமொன்றினை இலங்கை படையினர் கடத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.நவநீதம்பிள்ளையின் யாழ்.பொதுநூலக விஜயத்தின் போதும் கமருனின் விஜயத்தின் போதும் தனது காணாமல் போன சகோதரர்களை கண்டுபிடித்து தரக்கோரி கதறிய விபூசிகா –வயது 13 என்ற அச்சிறுமியின் கதறல் அனைவரதும் மனங்களை கலங்க வைத்திருந்தது. இந்நிலையில் இறுதி யுத்தத்தின் பின்னராக எஞ்சிய தனது தாயுடன் முரசுமோட்டையினில் வசித்து வந்த குறித்த சிறுமியும் தாயுமே கடத்தப்பட்டுள்ளனர். எனினும் முன்னதாக படையினர் இளைஞன் ஒருவனை துரத்தி வந்ததாகவும் குறித்த இளைஞன் இவர்களது வீட்டினூடாகவே தப்பி ஒடியிருந்ததாகவும் அதை தொடர்ந்து வீட்டை சுற்றி வளைத்துள்ள படையினர் தாய் மற்றும்…

    • 24 replies
    • 2.1k views
  8. யாழ் கல்வி வலய மாணவர்கள் அனைவரும் இராணுவத்தினரால் வழங்கப்படும் தலமைத்துவப் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று இராணுவத்தரப்பு நிர்பந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி யாழ் பலாலி படைத்தளத்திலிலேயே இடம்பெறுகிறது. உயர்தர மாணவர்களே இதற்காக அழைக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வு நாளை காலை முதல் மாலை வரை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வுக்கு தமது பிள்ளைகளை அனுப்ப பெற்றோர் தயங்கி வருகின்றனர். எனினும் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும் என்று இராணுவத்தரப்பு வற்புறுத்தியது. இதனால் மாணவர்கள் அனைவரும் தவறாது சமூகமளிக்குமாறு கல்வி அதிகாரிகள் கட்டளை பிறப்பித்துள்ளனர். மாணவர்கள் நாளை இரவு பலாலியில் நடைபெறும் இரவு விருந்திலும் கலந்துகொள்ள வேண்ட…

  9. புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் இன்னமும் ஈழக்கனவு காண்கின்றனர்! – நாமல் ராஜபக்ஷ [Friday, 2014-03-14 17:25:36] புலம்பெயர்ந்து வாழும் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் தொடர்ந்தும் ஈழக்கனவு கண்டுவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். களனியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், விடுதலைப் புலிகள் வெற்றிகரமாக தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், புலம்பெயர்ந்து வாழும் சில தரப்பினர் தொடர்ச்சியாக இலங்கை மீது யுத்தம் மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு வழிகளில் தமிழீழத்தை நிறுவும் நோக்கில் இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியின் மூலம் நாட்டில் சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளது. புலம்பெயர் …

    • 4 replies
    • 471 views
  10. ஓர் உரைக்கு 2 நிமிடங்களே வழங்கப்படும் நிலையில், தனது முதலாவது உரையில் சிறுவர் தொடர்பான விடயங்களை அனந்தி சசிதரன் ஐ.நா மனித உரிமை அவையில் ஆங்கில மொழியில் முன்வைத்தார். பலரும் அதிசயிக்கும் வகையில் ஒரு சில நிமிடங்களில் வேறொரு அரச சார்பற்ற நிறுவனத்தின் பெயரில் தனது இரண்டாது உரையையும் ஒரே நாளில் அனந்தி முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது. இறுதிவரை அமைதியாக இருந்து தனது உரையை அவர் முன்வைத்தமையால் சிறிலங்கா அரசால் அதைக் குழப்பமுடியாது போயிற்று. ஒரே நாளில் இரண்டு உரைகளை தனக்கெட்டிய ஆங்கில அறிவுடன துணிகரமாகவும் கச்சிதமாகவும் அவர் முன்வைத்திருந்தமை சபையில் பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின் மனதையும் தொட்டிருந்தது. தனது இரண்டாவது உரையில் இன அழிப்புக்கான நியாயம் கோரும் சர்வ…

    • 5 replies
    • 699 views
  11. அரசாங்கத்தை கவிழ்ப்பேன் - ரணில் சூளுரை ! [Friday, 2014-03-14 20:17:19] 2001ம் ஆண்டைப் போன்றே இந்த தடவையும் அரசாங்கத்தை கவிழ்க்கப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க சூளுரைத்துள்ளார். அவிசாவளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2015ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியே இந்த நாட்டை ஆட்சி செய்யும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் அரசாங்கத்தை கவிழ்ப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவா தெரிவித்துள்ளார். அனைவருக்கும் தொழி…

  12. காணாமல் போனவர்கள் தொடர்பான ஆர்பாட்டம் (ஆவணப்படம்) இலங்கையின் வடக்கே கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கைது செய்யப்பட்ட பெண் 3 மாத தடுப்புக்காவல் விதிக்கப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். அவரது 14 வயது மகள் விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை பகுதியில் வியாழனன்று பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பெரும் எடுப்பிலான சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி என்ற பெண்ணும், அவருடைய 14 வயதுடைய மகளும் வெள்ளியிரவு கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். தாயாராகிய ஜெயக்குமாரி 3 மாத தடுப்புக்காவல் விதிக்கப்பட்டு மேல் விசாரணைக்காக பூஸா தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப…

    • 0 replies
    • 783 views
  13. கோண்டாவில் பகுதியில் இராணுவ வாகனம் ஒன்று வீதியில் சென்றுகொண்டிருந்த இளைஞர்களை மோதித்தள்ளியதில் மூவர் படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.கோண்டாவில் டிப்போவுக்கு அருகில் இராணுவத்தின் அம்புலன்ஸ் ஒன்று எதிரே வந்த 3 துவிச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றில் பயணித்தவர்களைப் பந்தாடியது. இதில் மூவர் படுகாயமடைந்தனர். அதிலொருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தநிலையில் சம்பவ இடத்தில் குழுமிய இளைஞர்கள் சிலர் நோய்காவு வண்டியிலிருந்த இராணுவத்தினரை தாக்கமுற்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. குழப்பநிலை ஏற்பட்டதையடுத்து அங்கு சென்ற இராணுவத்த…

  14. ஆதவன் விடுதலைப்புலிகளின் மீள் இணைவு புலம்பெயர் தமிழர்களின் தேவையாக இருப்பதாக யாழ். கட்டளைத் தளபதி கனேடிய உயர் ஸ்தானிகருக்கு தெரிவித்தார். இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் செலீ விடின் நேற்று வியாழக்கிழமை பாதுகாப்புப் படை கட்டளைத் தலைமையகத்தில் வைத்து கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவை சந்தித்தார். தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் பற்றி அறிந்து கொள்வதே உயர் ஸ்தானிகரின் விஜயத்தின் நோக்கமாக அமைந்திருந்தது. பாதுகாப்பு நிலைமைகள் பற்றி தெளிவுபடுத்தும் போது கட்டளைத் தளபதி, சிலர் குடாநாட்டில் நிலவும் சமாதானத்தை இல்லாமலாக்க முயற்சிப்பதாக கூறினார். புலம்பெயர் தமிழர்கள் விடுதலைப் புலிகள் மீள் இணைவை மேற்கொள்வதற்காக சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு செயற்படுவதாகவும், …

  15. காவலரன்களும் இராணுவ முகாம்களும் குறைக்கப்பட்டுள்ளதே தவிர இராணுவ எண்ணிக்கையில் குறைப்பு ஏற்படவில்லை. அவர்கள் வன்னிக் காட்டுப்பகுதிக்குள் முகாம் அமைத்து வாழ்ந்து கொண்டுள்ளனர் இந்த நிலையில் வடக்கில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட்டாதாக அரசாங்கம் தெரிவித்து வரும் கூற்றினை நாம் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம் என வடக்கு மாகாண அமைச்சர்கள் கூட்டாக இணைந்து ஆஸி.குழுவினரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார திணைக்களம் மற்றும் வர்த்தக பிரிவைச் சேர்ந்த ஜோன் பொனார் உள்ளிட்ட குழுவினர் வடக்கு அமைச்சர்களான குருகுலராசா மற்றும் ஐங்கரநேசன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர். அதன்போது படை குறைப்பு தொடர்பில் அவுஸ்திரேலிய குழுவினரால் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் …

  16. பாதுகாப்பு மற்றும் தொழில் வாய்ப்பு என்பன கேள்விக் குறியாக இருப்பதனால் தான் தமிழர் வாழ் பிரதேசங்களில் இருந்து இளைஞர் யுவதிகள் நாட்டைவிட்டு தப்பி ஓடுகின்றனர் என ஆஸி.குழுவினருக்கு வடக்கு மாகாண அமைச்சர்கள் விளக்கமளித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார திணைக்களம் மற்றும் வர்த்தக பிரிவைச் சேர்ந்த ஜோன் பொனார் உள்ளிட்ட குழுவினர் வடக்கு அமைச்சர்களான குருகுலராசா மற்றும் ஐங்கரநேசன் ஆகியோரை இன்று சந்தித்து கலந்துரையாடினர். அதன்போது அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து கேள்வியெழுப்பப்பட்ட போது அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டதாக விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் சந்திப்பினையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்தார். அவர் மேலும் …

  17. இலங்கை சிறைச்சாலைகளில் நிலவுகின்ற அலுகோசு பதவிக்கு அவுஸ்திரேலிய பிரஜைகள் இருவர் விண்ணப்பித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்திரானந்த பல்லேகம தெரிவித்துள்ளார். இவ்விருவரும் மின்னஞ்சல் மூலமாகவே விண்ணப்பங்களை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், இந்த பதவிக்கு வெளிநாட்டு பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரவில்லை என்றும் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/103160-2014-03-14-02-53-05.html

  18. இலங்கைக்கான கனடா தூதுவர் யாழ்.மாவட்ட அரச அதிபரைச் சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான கனடா தூதுவர் ஷலீ வைற் யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை சந்தித்து அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடினார். சந்திப்பினையடுத்து அரச அதிபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததாவது, வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமானவர்கள் கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். எனவே அவர்கள் மூலம் யாழ்ப்பாணத்தில் முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்று தூதுவர் என்னிடம் வினவியிருந்தார். அவ்வாறான முயற்சிகள் எவையும் இதுவரை இடம்பெறவில்லை. எனினும் நீங்கள் உங்கள் நாட்டில் உள்ள புலம்பெயர் தமிழர்களிடம் பேசுங்கள். அவர்கள் முதலீடுக…

    • 1 reply
    • 569 views
  19. "வவுனியாவில் கற்பித்த ஆசிரியர் கடத்தப்பட்டு தற்போது எழும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது" குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வவுனியா:- வவுனியாவில் கற்பித்த ஆசிரியர் கடத்தப்பட்டு தற்போது எழும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதை கண்டித்து வட மாகாண ஆசிரியர்களை ஒன்றிணைத்து பாரிய போராட்டமொன்றினை நடத்தவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். வவுனியா மாங்குளம் பாடசாலையில் கற்பித்த கார்த்திகேசு நிரூபனின் எழும்புக்கூடே முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், போர் முடிவடைந்து 3 வ…

  20. கிளிநொச்சியில் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம்: விசேட தேடுதல் நடவடிக்கை:- இல்லாத புலிகளை இருப்பதாக காட்டும் அரசாங்கம்:- கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேகநபர் ஒருவரை தேடி விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சந்தேகநபரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்வதற்காக பொலிஸ் குழுவொன்று நேற்று பிற்பகல் தர்மபுரம் பகுதி வீடொன்றிற்கு சென்றிருந்ததாக பொலிஸ் ஊடக்ப்பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார். அந்த சந்தர்ப்பத்தில் சந்தேக நபர் பொலி…

  21. (Athiran) இலங்கைக்கெதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அரசுக்கு ஆதரவாகவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு நகரிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரம் அருகில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் திருமதி சிவகீதா பிரபாகரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் போராட்டத்தில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கறுப்புப் பட்டிகளை அணிந்திருந்ததுடன், ஆங்கில, சிங்கள, தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். இதன் போது கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் மேயர் திருமதி ச…

  22. வடக்கில் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் பாலியல் துஷ்பிரயோகங்கள், குற்றச் செயல்கள் மற்றும் மதுப்பாவனைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வடமராட்சி நெல்லியடிப் பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெல்லியடி நகர்ப்பகுதியில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகிய எதிர்ப்புப் போராட்டம் பேரணியாக நகர்ந்து கரவெட்டி பிரதேச செயலகத்தை சென்றடைந்ததுடன் செயலர் சிவசிறியிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், 'நீதி வேண்டும் நீதி வேண்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை நிறுத்து, சமூக விரோதிகளுக்கு நடவடிக்கை எடு, பெண்கள் என்ன போதைப் பொருளா?" என கோஷம…

  23. அமிர்தலிங்கத்தை ஜே.ஆர் நீக்கியது போன்ற நிலை விக்னேஸ்வரனுக்கு வரக்கூடாது! – இராதாகிருஷ்ணன் எம்.பி கோரிக்கை. [Friday, 2014-03-14 10:11:34] ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் அமிர்தலிங்கத்தை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கியதைப் போல் இந்த அரசாங்கம் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை வீட்டிற்கு அனுப்பி விடாமல் அவருடைய பிரச்சினைகளை நுணுக்கமாக கையாண்டு ஜனநாயக ரீதியில் அவருக்கு தனது கடமைகளை முன்னெடுக்க கூடிய சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஹேவாஎட்ட தோட்ட பகுதிகளுக்கு கூடாரங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்த…

  24. மகிந்த - ஹக்கீம் மோதல் ஒரு திட்டமிட்ட ஊடக நாடகம்! – கொழும்பு முஸ்லிம்களின் வாக்குகளை அபகரிக்கும் திட்டம். [Friday, 2014-03-14 09:52:26] ஜனாதிபதிக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், இருவரும் புரிந்துணர்வுடன் நடத்தும் ஊடக நாடகம் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் சகல சந்தர்ப்பங்களிலும் (உதாரணமாக கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல்) இந்த ஊடக நாடகம் அரங்கேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் முரண்பாட்டுடன் இருக்கின்றது என்று காண்பித்து முஸ்லிம் மக்களின் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு செல்வதை தடுப்பது மேற்படி ம…

  25. ஜெனிவாவில் அணிசேரா நாடுகளின் காலைப் பிடிக்கிறார் மகிந்த சமரசிங்க! [Friday, 2014-03-14 09:07:02] ஜெனிவாவில் இலங்கைக்கு, அணிசேரா நாடுகள் ஆதரவளிக்க வேண்டுமென அமைச்சர் மஹிந்த சமரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று ஜெனிவாவில் அணிசேரா நாடுகளின் தூதுவர்களை சந்தித்த அவர், ஐ.நா மனிதஉரிமைப் பேரவை அமர்வுகளில் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு அணிசேரா நாடுகள் தங்களது முழு அளவிலான ஒத்துழைப்பை வழங்க வேண்டியது அவசியமானது. இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கை இன்று எதிர்நோக்கியுள்ள நிலைமை அணிசேரா நாடு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.