ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
யாழ்.குடாநாட்டு இளைஞர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்கின்ற சிறிலங்கா அரசாங்கத்தின் செயல் திட்டங்களில் ஒன்றாக தற்போது ஆவா குறூப் என்ற ரவுடிக் கும்பல் ஒன்று குடாநாட்டில் உருவாக்கப்பட்டிருப்பதாக சங்கதி24 இன் குடாநாட்டுச் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் யாழ்.குடாநாட்டின் சில இடங்களில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்கள் மற்றும் திருட்டுச் சம்பவங்களில் இந்த ரவுடிக் கும்பலே ஈடுபட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆவா குறூப் என்று கூறப்படுகின்ற மேற்படி குழுவினர் 10 தொடக்கம் 20 வரையான மோட்டார் சைக்கிள்களில் ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் என்ற அடிப்படையில் வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களுடன் வீதிகளில் வலம் வருகின்றனர். வீதிகளில் நிற்கின்ற அப்பாவி…
-
- 5 replies
- 2k views
-
-
-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நாளை புதன்கிழமை (08) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். எழுதுமட்;டுவாளில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 52ஆவது இராணுவப் படைப்பிரிவின் தலைமையகத்தினைத் திறந்து வைப்பதற்காகவே அவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/96008-2014-01-07-12-50-22.html
-
- 0 replies
- 443 views
-
-
கடுமையான மழைபெய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மாணவ மாணவியரை வெளியே நிற்க வைத்து கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன உரையாற்றியுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இப்பாகமுவ மத்திய கல்லூரி மாணவ மாணவியரே இவ்வாறு பலவந்தமான முறையில் கடும் மழையில் வெளியே நிற்க வைக்கப்பட்டுள்ளனர். உடற் பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில் நடாத்தப்பட்ட தேசிய நிகழ்வில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன பங்கேற்றார். இந்த தேசிய நிகழ்வு இப்பாகமுவ மத்திய கல்லூரியில் நடைபெற்றது. குறித்த பிரதேசத்தின் ஏனைய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவியரும் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். இரவு முழுவதிலும் கடும் மழை பெய்த போதிலும் ஏற்பாட்டாளர்கள் நிகழ்வினை பாடசாலை மைதானத்திலேயே நடத்தியிருந்ததாகத் தெரிவிக்க…
-
- 0 replies
- 428 views
-
-
இலங்கையில் சில்லறை நாணயங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டிலிருக்கும் தமது நாணயங்களை மீண்டும் நாட்டுக் கொண்டுவர இலங்கை முயற்சிகளை எடுத்து வருகிறது. அவ்வகையில் இந்தியாவிலுள்ள பல ஆலயங்களிலுள்ள சுமார் இருபது டன்கள் அளவுக்கான நாணயங்களை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவர மத்திய வங்கி முயற்சிகளை எடுத்துவருகிறது. இந்தியா மற்றும் நேபாளத்துக்கு இலங்கையிலிருந்து புனித யாத்திரை செய்யும் பௌத்தர்கள் அங்குள்ள உண்டியல்களில் தமது காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். அவ்வகையில் புத்தகயாவில் மட்டும் பத்து டன்கள் அளவுக்கு இலங்கை நாணயங்கள் உள்ளன என்று தங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் மத்திய வங்கியின் பேச்சாளர் தமாரா விஜேசூரிய பிபிசியிடம் தெரிவித்துள்ளார்…
-
- 1 reply
- 850 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார், திருக்கேதிஸ்வரம் பகுதியில் இதுவரை 26 இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் குறித்த பகுதியில் உள்ள மனித புதைகுழி தோண்டப்பட்டது. இதன்போது மேலும் 6 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ண ஆகியோர் முன்னிலையில் சனிக்கிழமை 6ஆவது தடவையாக தோண்டப்பட்டு மனித எழும்புக்கூடுகள்; மீட்கப்பட்டன. நேற்று வரை 26 எழும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் இன்று தொடர்ந்து தோண்டப்பட்டது. இதன்போது ஆறு எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.இ…
-
- 0 replies
- 294 views
-
-
புத்தரின் உருவப் படத்தைப் பயன்படுத்தி கலண்டர் அச்சடித்த இறைச்சிக்கடை உரிமையாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மொனராகல பிரதேசத்தில் பன்றி, கோழி இறைச்சி மற்றும் முட்டை விற்பனையாளர் ஒருவர் 2014ம் ஆண்டுக்கான கலண்டர் அச்சிட்டு, வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளார். தலதா மாளிகை மற்றும் கௌதம புத்தரின் உருவப்படங்கள் இந்தக் கலண்டர்களில் காணப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு கலண்டர் வழங்கிய கடை உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், கலண்டர்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கலண்டர் அச்சிட்டு வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்த இறைச்சிக்கடை உரிமையாளர் ஓர் பௌத்தர் எனவும், அவரது மனைவி வேறு மதத்தைச் சார்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID…
-
- 2 replies
- 569 views
-
-
எதிர்காலத்தில் அரசாங்கத்தை வீழ்த்துவதே சம்பந்தனின் இலக்கு. சர்வதேசம் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பே காரணம் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் ஆதரவினை ஐக்கிய தேசியக் கட்சிக்கே வழங்கும். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை விரட்டுவதே இவர்களின் குறிக்கோள் எனவும் அவ் இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவிக்கையில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவிற்கு செல்வதற்கான காரணமென்ன? இலங்கை அரசாங்கத்தை வீழ்த்தி தமிழ்த…
-
- 4 replies
- 573 views
-
-
தமிழ் மொழியில் வாக்கு மூலங்களை பதிவு செய்ய மறுக்கும் பொலிஸாருக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யுமாறு பொலிஸ் ஆணைக்குழு பொதுமக்களை கோரியுள்ளது. அவ்வாறான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. வட மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் தமது முறைப்பாடுகளையும் வாக்கு மூலங்களையும் தமிழ் மொழி மூலம் பதிவு செய்வதற்கு பொதுமக்களுக்கு உரிமை இருப்பதாக வடமாகாண பொலிஸ் ஆணைக்குழு பணிப்பாளர் கலாநிதி க.தியாகராஜா கூறினார். ஏதேனும் பொலிஸ் நிலையத்தில் தமிழில் வாக்குமூலத்தை பதிய மறுத்தால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் பெயர், முறைப்பாட்டை ஏற்க மறுத்த திகதி உள்ளிட்ட விபரங்களுடன் வடமாகாண பொலிஸ் குழுவில் முறையிடுமாறு அவர் கோரினார்…
-
- 1 reply
- 185 views
-
-
இந்தியாவின் புத்தகயா உள்ளிட்டவற்றுக்கு தல யாத்திரை செல்வோர் மூலம் கோயில்களில் மத வழிபாட்டு தலங்களில் காணிக்கையாக செலுத்தப்பட்ட சுமார் 20 தொன் இலங்கை நாணயக் குற்றிகளை இலங்கைக்கு திரும்பவும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான அடியார்கள் தல யாத்திரை சென்று புத்தகயா மற்றும் அறுபடை வீடு, மற்றும் ஏனைய மாநிலங்களிலுள்ள திருத்தலங்களுக்கும் சென்று வழிபடுவதுடன் காணிக்கையாக இலங்கை நாணயக் குற்றிகளையும் இடுகின்றனர். இவை சுமார் 10 முதல் 20 தொன் வரையில் இருக்கலாம் என மத்திய வங்கி கணிப்பீடு செய்துள்ளது. இந்த இலங்கை நாணயக் குற்றிகளை இலங்கைக்கு திரும்பவும் கொண்டு வந்து புழக்கத்தில் விடுவதற்கு…
-
- 0 replies
- 439 views
-
-
யாழ்.மாவட்ட செயலகத்திற்கு 44 சிங்கள, முஸ்லீம் முகாமைத்துவ உதவியாளர்கள் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த 44 முகாமைத்துவ உதவியாளர்களும் நேற்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். தென்னிலங்கையை சேர்ந்த சிங்களவர்களும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முஸ்லீம்களும் யாழ். மாவட்டத்திற்கு முகாமைத்துவ உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ் செயலகத்தில் தற்போது தமிழரல்லாத அதிகாரிகளை அரசாங்கம் அதிகளவில் நியமித்து வருகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=100832&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 435 views
-
-
"மன்னாரில் மீட்கப்படும் எலும்புக் கூடுகள் குறித்து ஐ.நா. உடனடியாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும்" என நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார். போரின்போது படையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களே இவ்வாறு எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் இதுவரை 26 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, இன்னமும் இதன் விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. இந்த நிலையில் இது குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: "மன்னாரில் தொடர்ந்தும் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றமையை பார்க்கும் போது எமக்கு சந…
-
- 0 replies
- 294 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிருவாகத்திலுள்ள வெருகல் பிரதேச சபையின் திருத்தியமைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டம், இரண்டாவது தடவையாகவும் நேற்று திங்கட்கிழமை தோற்கடிக்கப்பட்டது. குறித்த பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம், கடந்த டிசெம்பர் 24ஆம் திகதி முதல் தடவை சமர்ப்பிக்கப்பட்ட போது அது உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை பிரதேச சபைத் தலைவர் எஸ்.விஜயகாந்த், இரண்டாவது தடவையாக திருத்தியமைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்தார். இந்த வரவு - செலவுத் திட்டத்திற்கு மூன்று பேர் ஆதரவாகவும் நான்கு பேர் எதிராகவும் வாக்களித்ததை அடுத்து அது தோற்கடிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபைத் தலைவர் விஜயகாந்த், உறுப்பினரா…
-
- 0 replies
- 429 views
-
-
ஜனாதிபதி தேர்தல் 2015ம் ஆண்டு நடைபெறும் 2015ம் ஆண்டு முற்பகுதியில் பெரிய தேர்தல் நடைபெறும் என்ற எதிர்வை இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வெளியிட்டுள்ளார். குடிசைப் பகுதியில் உள்ளவர்களுக்கான மாடிவீட்டு திட்டத்தின் இரண்டாம் பகுதியின் பணிகளை தெமட்டகொட பிரதேசத்தில் நேற்று பார்வையிட்டபோது அவர் இந்த எதிர்வை வெளியிட்டார். இந்த மாடிவீட்டு திட்டத்தை நீண்ட நாட்களுக்கு தொடரமுடியாது இந்த நவம்பருக்குள் முடித்துவிட வேண்டும் என்று அவர் இதன்போது அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார். 2015 ஆம் ஆண்டு தேர்தல்கள் நடத்தப்படவுள்ளதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.2014 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று இலங்கையின் எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. எனினும்201…
-
- 0 replies
- 533 views
-
-
இலங்கையில் மூன்று வெளிநாட்டவர்கள் சடலங்களாக மீட்பு! [Tuesday, 2014-01-07 07:54:27] மலேஷியா, ரஷ்யா மற்றும் நோர்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கொம்பனித்தெரு, ஹபரண மற்றும் ஹபராதுவ ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களிலேயே மூன்று வெளிநாட்டு பிரஜைகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் ஒருவர் ஹோட்டல் அறையிலிருந்தும் மற்றவர் நீச்சல் தடாகத்திலிருந்துமே சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பு , கொம்பனித்தெருவிலுள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றின் நீர் தடாகத்தில் இருந்து மலேஷிய நாட்டு பிரஜை ஒரு…
-
- 0 replies
- 541 views
-
-
விண்வெளிக்குச் ரொக்கெட் செலுத்தக்க சிறப்பானதோர் இடம் சிறீலங்கா - நாஸா ஜன 6, 2014 எதிர்காலச் செயற்பாடுகளில் குறைந்த எரிபொருள் பாவனையுடன் விண்வெளிக்குச் செலுத்தக்க சிறப்பானதோர் இடம் இலங்கைதான் என்கிறது நாஸா. இலங்கை தீவொன்றாக இருப்பது அதற்கான சிறப்பான காரணங்களில் ஒன்றாகும். அதுமட்டுமன்றி சுற்றாடல் மற்றும் இந்த நாட்டின் அமைப்புப் போன்றவை விண்வெளி ரொக்கெட்களின் மையமொன்றை அமைப்பதற்கு பெரிதும் பொருத்தமானது என்றும் நாஸா நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. புயல்கள், சுழல்காற்றுக்கள் இல்லாதிருப்பதும் எப்போதுமே தெளிவான வான் பரப்பொன்றைக் கொண்டிருப்பதும் விண்வெளி ரொக்கெட் ஒன்றை விண்ணுக்கு ஏவும் போது எதிர்பாராத விதமாக வெடிப்பு ஏதும் நிகழுமானால் கடலில் விழும் நிலை காணப்படுவதால் இலங…
-
- 13 replies
- 1.1k views
-
-
18வது திருத்த சட்டத்திற்கமைய ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுமாயின் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். ஜெயசிக்குறுவை நடாத்திய சந்திரிகா குமாரதுங்கவோ அல்லது இறுதிக்கட்ட யுத்தத்திற்கு தலைமை வகித்த சரத் பொன்சேகாவோ ஜனாதிபதியாகத் தெரிவாகும் சூழ்நிலை இல்லை என்று முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். துறைநீலாவணை சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் மாடிக்கட்டிடத் தொகுதி திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சிவநேசத்துரை சந்திரகாந்தன் அங்கு மேலும் பேசுகையில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பாரிய பிளவுகள் உள்ளமையை காணலாம். ஜோசப் பரராஜசிங்கத்திற்கு மட்டக்களப்பில் இரு அணிகள…
-
- 1 reply
- 482 views
-
-
அரசாங்கத்தை கவிழ்க்கும் முனைப்புக்களில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தில் மாற்றம் செய்யும் வகையில் அமெரிக்கா செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில், அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் என்பது தெளிவாகத் தெரிகின்றது என அவர் தெரிவித்துள்ளார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை பயன்படுத்தி இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா முயற்சிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு அதிகளவு சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ஏனெனில், அமெர…
-
- 0 replies
- 493 views
-
-
பிரதமர் போதைப் பொருள் இறக்குமதி செய்கின்றார், காவல்துறைப் பொறுப்பதிகாரி விநியோகம் செய்கின்றார். பிரதமர் டி.எம். ஜயரட்ன போதைப் பொருள் இறக்குமதி செய்வதாவும், காவல்துறை பொறுப்பதிகாரி போதைப் பொருள் விநியோகம் செய்து வருவதாகவும் ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. பிரதமரின் ஒத்துழைப்புடன் கொள்கலனின் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளதாக ஜே.வி.பியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானிய போதைப் பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் இணைந்து இந்தப் போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். தெரிந்தோ தெரியாமலோ குற்றச் செயலில் தொடர்புபட்டிருப்பதனால் பிரதமர் பதவியை விலக வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் குற்றத்தை ஒப்புக்கொண்டு ம…
-
- 0 replies
- 392 views
-
-
இலங்கையில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் பணியை கடந்த டிசம்பர் 31ம் தேதியுடன் நிறுத்திக் கொள்வதாக , இந்தச் சேவையை இதுவரை செய்து வந்த அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபை அறிவித்துள்ளது. ஜம்இயத்துல் உலமா சபை, இலங்கையில், இது போல் உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களுக்கு ஹலால் முறையில் தயாரிக்கப்பட்டவை என்று சான்றிதழ் வழங்குவதற்கு எதிராக, சில வலது சாரி பௌத்த அமைப்புகள் வன்முறை கலந்த எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டிலிருந்து இலங்கையில் துறை சார்ந்தோர் மூலம் நிறுவப்பட்ட உத்தரவாதமுள்ள நிறுவனமொன்று , ஹலால் சான்றிதழ் வழங்கும் வேலையையும், தயாரிப்பு, செயற்பாடு தொடர்பான கண்காணிப்பு உட்பட அனைத்து விஷயங்களையும் செ…
-
- 0 replies
- 474 views
-
-
இலங்கையின் சரித்திரத்தை - வரலாற்றை - பக்கச் சார்பின்றி மீண்டும் எழுத வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் வடமாகாண சபை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். எதிர்காலத்தில் இனக் கிளர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பதற்கான யோசனையாக அவர் இதனை முன்வைத்துள்ளார். ஆதரவற்ற சிறுவர்களை வீட்டுச் சூழலில் வளர்க்க உதவும் எஸ்.ஓ.எஸ் எனும் பன்னாட்டுத் தொண்டு நிறுவனத்தின் சிறுவர் கிராமம் யாழ். புறநகர் பகுதியான நாயன்மார் கட்டில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் திஸ்ஸகரலியத்த கலந்து கொண்டிருந்தார். நிகழ்வில் பேசிய வடமாகாண சபை முதலமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, மத்திய - மாகாண அரசுகளிடையே புரிந்துணர்வும் கூட்டுறவும் நிலவினால்தான் நாடு முன்னேறும். மக்கள் நலம் பெறுவார்கள். மத…
-
- 1 reply
- 512 views
-
-
மாவீரர் நாளுக்காக தீபங்கள் ஏற்றும் போது எங்கள் மாவீரர்களுக்காக பாடப்படும் புனிதமான பாடலை.... ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, விடுதலைப்புலிகள் கூட வேறு எந்தத் தேவைகளுக்கும் பயன்படுத்துவதில்லை..! அவ்வாறானதொரு புனிதமான மாவீரர் பாடலை இந்தக் கேவலங்கெட்ட ஈனப்பிறப்பிற்கு பயன்படுத்தலாமா??? அகலினியன் https://www.facebook.com/photo.php?fbid=672355556149416&set=a.122011254517185.22451.100001249344210&type=1&theater
-
- 9 replies
- 881 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில், உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று இலங்கை வரும் சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்ரீபன் ஜே.ராப், நாளை செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். நாளைமறுதினம் புதன்கிழமை வடபகுதிக்குச் செல்லும் அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வட மாகாண சபையின் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனையும் சந்திக்கவுள்ளார். இந்தத் தகவல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று யாழ் "உதய' னிடம் உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட…
-
- 1 reply
- 573 views
-
-
தெற்காசியாவில் பன்முகத்தன்மையின் சவால்கள் எனும் தலைப்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆய்வாளர்கள் கலந்துகொள்ளும் விசேட கருத்தரங்கு ஒன்று நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது . தெற்காசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் நடைபெறவுள்ளது. அத்துடன் இந்தக் கருத்தரங்கில் பேராசிரியர் ராதிகா குமாரசுவாமி , இந்தியாவின் , பேராசிரியர் ரஜீவ் பார்கவா , பிரான்ஸ் நாட்டின் கலாநிதி கிறிஸ்டோபி ஜெப்ரீலோட் பாகிஸ்தானின் அஸ்மா ஜஹாங்கீர் ஆகியோர் உரையாற்றவுள்ளனர். அமைதியான ஒத்திணங்கிய வாழ்வு , மத சகிப்புத்தன்மை …
-
- 1 reply
- 409 views
-
-
ராதீகா சிற்சபேசன் இந்தியாவிற்கு விஜயம் 04 ஜனவரி 2014 கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதீகா சிற்சபேசன் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ராதீகா இன்று காலை இந்தியா நோக்கிப் பயணித்தார் என குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சிற்சபேசன் கடந்த டிசம்பர் மாதம் 28ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். ராதீகா சிற்சபேசன் சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ராதீகா சிற்சபேசன் வீட்டுக் காவலில் தடுத்து வைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன. பின்னர் அந்தத் தகவல் மறுக்கப்பட்டிருந்ததுடன், தம்மை எச்சரித்ததாக ராதீகா அறிவ…
-
- 21 replies
- 3.5k views
-
-
நீண்ட காலமாகக் கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் சந்தித்துப் பேசவுள்ளார் என்று தெரிய வருகிறது. இந்தச் சந்திப்பு எதிர்வரும் 12 ஆம் திகதி மகஸின் சிறைச் சாலையில் இடம்பெறவுள்ள தாகத் தெரிவிக்கப்பட்டது. மகஸின் சிறைச்சாலைக்கு செல்லும் வடக்கு மாகாண முதலமைச்சர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய் வார் என்று தெரியவருகிறது. கடந்த 2 ஆம் திகதி அலரிமாளி கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வைச் சந்தித்துப் பேசி யதன் பின்னணியில் வடக்கு முதலமைச்சர் தமிழ் அரசி யல் கைதிகளைச் சந்திக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. மகஸின் சிறைச்சாலைக்கு வர…
-
- 0 replies
- 400 views
-