Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ் . போதனா வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட சுகதாரத் தொண்டர்கள் சிலருக்கு நாளை நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் இதன்போது கட்சிபேத அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது . யாழ் . போதனா வைத்தியசாலையில் தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வந்த தொண்டர்கள் கடந்த 13 நாட்கள் போராட்டங்களை மேற்கொண்டனர் . அத்தோடு நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி மொழி வழங்கப்பட்டதற்கு இணங்க தற்காலிகமாக தமது போராட்டத்தை கைவிட்டிருந்தனர் . இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பெயரால் அங்கஜன் இராமநாதனால் கொடுக்கப்பட்ட பெயர்பட்டியலில் உள்ள பலருக்கு நாளை நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது . இவர்களோடு போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர…

  2. இலங்கை அரசுடன் இப்போதைக்கு பேச்சு நடத்துவதற்கு தயாரில்லை என்றும், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்கமாட்டோம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள தீர்மானத்தை வரவேற்கிறோம். ஜெனிவாவை இலக்கு வைத்து ஜனாதிபதி மஹிந்த வெட்டிய குழிக்குள் கண்ணை மூடிக்கொண்டு போய் விழாமல் கூட்டமைப்பினர் தப்பிவிட்டனர் என்று வடக்கு, கிழக்கு கத்தோலிக்க ஆயர்கள், தெரிவித்தனர். இது குறித்து வடக்கு, கிழக்கு கத்தோலிக்க ஆயர்கள் வெளியிட்ட கருத்துக்கள் வருமாறு: மட்டக்களப்பு அம்பாறை ஆயர் பொன்னையா "ஏமாற்றத்தை முன்கூட்டியே அறிந்து இலங்கை அரசுடன் இப்போதைக்கு பேச்சில்லை என்றும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்கமாட்டோம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு உறுப்பினர்கள் ச…

  3. இலங்கையில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும் குற்றச் செயல்கள் தொடர்வதாக அல்ஜசீரா ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படையினர், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியீட்டியிருந்தனர். எனினும், கடத்தல்கள், காணாமல் போதல்கள், சித்திரவதைகள், முன்னாள் போராளிகளுக்கு, ஆதரவாளர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்கின்றன. கடந்த நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வுகளில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றதுடன், இலங்கை நிலைமைகள் குறித்து கருத்து வெளியிட்டிருந்தனர். யுத்தத்தின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அங்கீகரித்தே உலகத் தலைவர்கள் இலங்கைக…

  4. அரசுக்கு எதிர்ப்பு எதுவும் காட்டாத அதி மேதகு எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவிற்கு அன்பு வணக்கம். கடற்புலிகளின் முதுகெலும்பை முறித்தது நானே என்று நீங்கள் உரிமை கோரியிருந்ததன் காரணமாக இப்பகிரங்கக் கடிதம் எழுதப்படுகின்றது. இந் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தில் இருந்து கொண்டு அரசாங்கத்துடன் மிகவும் நெருக்கமான உறவைப் பேணுகின்ற ஒரே ஒரு எதிர்க்கட்சித் தலைவர் தாங்களாக மட்டுமே இருக்க முடியும். அதே நேரம் ஐக்கிய தேசிய கட்சித் தலை மைக்குத் தாங்கள் பொருத்தம் இல்லை என்று கட்சியின் மத்திய குழு பல தடவைகள் கூறி இருந்த போதிலும் கட்சித் தலைமைப் பதவியில் நிலைத்திருக்க அரசின் உதவியைப் பெற்ற ஒரு புதுவகை எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையும் தங்களையே சாரும். ஐக…

  5. வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கு ஐ.நா. அமைதிப் படையின் உதவியை வடக்கு மக்கள் கோரலாம். வடக்கிலிருந்து இராணுவ ஆளுநரை நீக்குவதற்காக கூட்டு எதிரணி தொடர்ந்தும் போராடும் என்று தெரிவித்துள்ளார் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரான கலாநிதி விக்கி ரமபாகு கருணாரட்ண. இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது ""ஒரு பிரதேசத்தை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருப்பதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு இராணுவத்தால் அச்சுறுத்தல்களோ அல்லது இடையூறுகளோ ஏற்பட்டால், இராணுவத்தை அங்கிருந்து வெளியேற்றுமாறு மக்களால் கோரிக்கை விடுக்கமுடியும். ஐ.நா. சாசனத்தின் பாதுகாப்பு உரிமை என்ற சரத்தின்கீழ் இந்தக் கோரிக்கையை விடுக்க முடியும். எனவே, வடக்கு மக்களுக்கும் இராணுவத்தால் தொடர் அச்சுறுத்தல்கள், இடை யூறு…

  6. பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்‌ஷவின் வழிகாட்டலில் கொழும்பு வந்திருந்த முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் பதுமன், கொழும்பு வந்திருந்த நிலையில், ஒருவார காலமாக காணாமல் போயுள்ளதாக கொழும்பின் செய்தி முகவர் நிறுவனத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது; விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதப் படைப் பிரிவின் முன்னாள் தலைவரான கேர்ணல் பதுமன் என்ற சிவசுப்ரமணியம் வரதநாதன் தலைமையில் புலிகளை மீண்டும் உருவாக்க பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ இரகசிய திட்டம் தீட்டி வருவதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன. பதுமன் - கோத்தபாய ராஜபக்‌ஷ இரகசியத் திட்டம் குறித்து ஊடகங்களில் செய்திகள் வந்த நிலையில், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக…

  7. எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நடத்திய முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களும் கலந்து கொள்ளவில்லை. இந்தக் கூட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் மற்றும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இரா.சம்பந்தன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். எனினும், ரெலோ தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்…

  8. யாழ்ப்பாணத்திற்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விஜயம் செய்த போது ஆர்ப்பாட்டம் நடத்திய தான் உட்பட பலர் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக அனந்தி சசிதரன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திய நாள் முதல் தன்னை சிலர் பின்தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நானும் எனது பிள்ளைகளும் உயிர் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்திலேயே இருந்து வருகிறோம். வடக்கு மாகாண சபைத் தேர்தல் நேரத்தில் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் இதுவரை எமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/?q=node/359359

    • 18 replies
    • 925 views
  9. 2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விருந்துபசாரமொன்று சபாநாயகரின் இல்லத்தில் இடம்பெற்றது. (படங்கள்:சுதத் சில்வா) ' http://tamil.dailymirror.lk/--main/94098-2013-12-22-10-17-58.html

  10. யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும் குற்றச் செயல்கள் தொடர்கின்றன – அல்ஜசீரா தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- இலங்கையில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும் குற்றச் செயல்கள் தொடர்வதாக அல்ஜசீரா ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படையினர், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியீட்டியிருந்தனர். எனினும், கடத்தல்கள், காணாமல் போதல்கள், சித்திரவதைகள், முன்னாள் போராளிகளுக்கு, ஆதரவாளர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்கின்றன. கடந்த நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வுகளில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றதுடன், …

  11. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு சுற்றுலாத்துறையை மேம்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்த்தளவு அதிகரிப்பை பதிவு செய்யவில்லை. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வெறும் 2.8 வீதமான சுற்றுலாப் பயணிகளே அதிகளவில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். நவம்பர் மாதத்தில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் நடைபெற்றிருந்தது.. 2013ம் ஆண்டில் நவம்பர் மாதத்திலேயே குறைந்தளவு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு விஜயம் செய்துள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=99850&category=TamilNews&language=tamil

  12. சிறிலங்கா கடற்பரப்பில், எரிவாயு அகழ்வில் ஈடுபட பாகிஸ்தான் விருப்பம் வெளியிட்டுள்ளது. மன்னார் கடற்படுகையில், கெய்ன் இந்தியா நிறுவனம் எரிவாயு அகழ்வுக்கான துளையிடும் பணிகளை மேற்கொண்டிருந்தது. முதற்கட்டமாக துளையிடப்பட்ட இரண்டு இடங்களில், எரிவாயுப் படிமங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனினும், துளையிடப்பட்ட இடங்களில் கண்டறியப்பட்டுள்ள எரிவாயு படிமங்கள் வர்த்தக ரீதியான உற்பத்திக்கு ஏற்றதா என்பது தொடர்பாக இன்னமும் சாதகமான அறிக்கைகள் கிடைக்கவில்லை. இந்தநிலையிலேயே மன்னார் கடற்படுகையில், எரிவாயு அகழ்வில் ஈடுபடுவதற்கு பாகிஸ்தான் விருப்பம் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவுக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்ட பாகிஸ்தான் தேசிய சட்டசபையின் சர்தார் அயஸ் சாதிக் இதுகுறித்து தகவல் வெள…

  13. மன்னாரில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு அண்மித்த பகுதியில், கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழி குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். திருக்கேதீஸ்வரம் பகுதியில், நீர் விநியோக குழாய் பதிப்பதற்காக குழி தோண்டிய போது, கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் புதைகுழி கண்டுபிக்கப்பட்டது. இதையடுத்து மன்னார் நீதிவான் முன்னிலையில் அந்தப் பகுதியைத் தோண்டிய போது, இதுவரை 10 மனித சடல எச்சங்களும், மண்டையோடுகளும் மீட்கப்பட்டன. மீண்டும் இந்தப் பகுதியில் வரும் சனிக்கிழமை தோண்டும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. அதேவேளை, இந்தப் புதைகுழிப் பகுதியை பாதுகாக்க தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு சிறிலங்கா காவல்துறைக்கு மன்னார் ந…

  14. மகிந்த அரசாங்கத்தை ஒரு மணிநேரத்தில் வீழ்த்த முடியும். அரசாங்கத்தை வீழ்த்தும் போராட்டத்தை ஜே.வி.பி ஆரம்பித்துள்ளது என அக்கட்சியி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். ரணில் விக்மரசிங்கவை விரட்டி விட்டு மகிந்த ராஜபக்‌சவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என ஜே.வி.பி எடுத்த தீர்மானம் தவறானது. நாட்டை காப்பற்றியவர்களுக்காக மக்கள் வாக்களித்து வருகின்றனர் என்பது உண்மை, மகிந்த ராஜபக்ஷ, சரத் பொன்சேகா ஆகியோருக்கு அதற்காகவே மக்கள் வாக்களித்து வருகின்றனர். இந்த ஆதரவு ஜே.வி.பிக்கு மட்டுமே கிடைக்கவில்லை. இதனை மொத்தமாக நாங்கள் விற்றோம். ஜே.வி.பி மேற்கொண்ட தீர்மானங்கள் தவறானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1994 ஆம் ஆண்டு நாட்டின் இரண்டு கட்சிகளும் தவ…

  15. சர்வதேச பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் முனைப்புக்களை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை எடுக்கும் என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிடப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் ஆறாம் கமி;ட்டிக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் சட்ட விவகாரக் கமிட்டியின் தலைவராக பாலித கொஹணே கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத இல்லாதொழிப்பிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாத இல்லாதொழிப்பு தொடர்பில் சர்வதேச பிரகடனமொன்று வரையப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 2001 செப்டம்பர் 11 தாக்குதல்களின் போது பயங்கரவாத இல்லாதொ…

  16. வடமாகாண பிரதான செயலாளர் ரமேஷ் விஜயலட்சுமிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு உள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரிசிறி தெரிவித்துள்ளார். உள்ளூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து அச்சுறுத்தல் அழைப்புகள் எடுக்கப்பட்டு, பதவியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்த ஆளுநர் இதுதொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/100789/language/ta-IN/article.aspx

  17. 'வல்வெட்டித்துறையில் குலநாயகம் தலைமையிலும் வலிகாமம் கிழக்கில் ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து தமிழரசுக் கட்சியின் சிலரே வரவு - செலவுத் திட்டத்தினை தோற்கடித்தனர்' என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட கலந்துரையாடல் வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றுவருகின்றது. அதில் பங்கேற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் பங்கேற்றார். கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் வரவு - செலவுத்திட்ட தோல்விகள் குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 'வடக்கிலும் கிழக்கிலுமாக இவ்வாறா…

  18. இன்று வவுனியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்களையும் மாகாண சபை உறுப்பினர்களையும் கட்சியின் மூத்த முக்கியஸ்தர்களையும் மட்டும் கூட்டம் நடைபெறுகின்ற மண்டபத்திற்குள் இருக்குமாறும் ஏனையோரை வெளியேறுமாறும் தலைவர் சம்பந்தன் அறிவித்துள்ளார் .. இக்கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற மாகாண சபை உறுப்பினர்களுடன் , முதலமைச்சர் விக்கி மற்றும் அமைச்சர்களுடன் அவர்களுடைய செயலாளர்களும் மண்டபத்திற்குள் சென்று இருக்கைகளில் அமர்ந்துள்ளனர் . அதனை அவதானித்த தலைவர் சம்பந்தன் , இது கட்சியின் முக்கியஸ்தர்களின் கூட்டமெனவும் பணியாளர் கூட்டமல்ல எனவும் பணியாளர்களை விட கட்சிக்காகப் பாடுபட்ட பலர் வெளியில் காத்திருக்க அமைச்சர்களின் செ…

  19. இலங்கையின் தேசிய கொடியை தலைகீழாக பறக்கவிட்ட அவுஸ்திரேலிய பிரஜையான ஜெஃப்ரி டொப்ஸ் என்பவருக்கு இலங்கைக்குள் வருவதற்கு இன்று செவ்வாய்க்கிழமை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவருக்கு இலங்கையிலும் வேறு நாடுகளிலும் பல ஆடம்பர ஹோட்டல்கள் சொந்தமாக உள்ளன. பொதுநலவாய மாநாட்டிற்கு சற்று முன்னதாக இவர் காலியிலுள்ள தனது வீட்டின் முன்பாக சிங்ககொடிகள் நான்கை தலைகீழாக பறக்கவிட்டுள்ளார். இவர் விரும்பத்தகாத நபர். இவர் இலங்கைக்கு வருவரை நாம் அனுமதிக்க மாட்டோமென தென்மாகாண ஆளுநர் குமாரி பாலசூரிய கூறினார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/94374-2013-12-24-10-26-39.html

  20. தெற்காசியாவிலேயே முதல்முறையாக சீன நிறுவனம் ஒன்று சிறிலங்காவில் புத்தக விற்பனை நிலையம் ஒன்றை அமைத்துள்ளது. கன்மிங் சின்ஷி குழுமம் என்ற நிறுவனமே கொழும்பில் சீன புத்தக விற்பனை நிலையத்தை அமைத்துள்ளது. சீனாவின் மிகப்பெரிய தனியார் சில்லறை புத்தக விற்பனை நிறுவனமான இது, கொழும்பில் கடந்த நொவம்பர் மாதம் தமது விற்பனை நிலையத்தை ஆரம்பித்துள்ளது. இது இந்த நிறுவனம் சீனாவுக்கு வெளியே திறந்துள்ள ஐந்தாவது கிளையாகும். ஏற்கனவே இந்த நிறுவனம் நொம்பென், வியன்ரியன், கோலாலம்பூர், மியான்மரின் மண்டலே ஆகிய இடங்களில் தமது கிளைகளை அமைத்துள்ளது. திறப்பு விழா மற்றும் முதல் பத்து நாட்களில், சீன அகராதிகள், பழங்கால இலக்கியங்கள, நவீன நாவல்கள், மொழிப்பயிற்சி நூல்கள் நன்றாக விற்பனையானதாக இந்த நிறுவத…

  21. வடக்கு மாகாணசபை இரண்டு புதிய திணைக்களங்களை உருவாக்குவதற்கு முன்வைத்துள்ள யோசனைகளுக்குத் தேவையான, ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்குமாறு, சிறிலங்காவின் நிதியமைச்சிடம் வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, கோரியுள்ளார். வீடமைப்பு மற்றும் போக்குவரத்து திணைக்களங்களை புதிதாக உருவாக்கும் யோசனையை வடக்கு மாகாணசபையின் வரவு செலவுத்திட்டத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்மொழிந்திருந்தார். இது அரசியலமைப்புக்கு முரணானது என்று ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி, ஊடகங்களில் தெரிவித்த கருத்து சர்ச்சையை உருவாக்கியிருந்தது. இதையடுத்து, ஆளுனருக்கும், மாகாணசபைக்கும் இடையிலான பனிப்போர் தீவிரம் பெற்றது. இந்தநிலையில், வடக்கு மாகாணசபையின் வரவுசெலவுத்திட்டம் ஒருமனதாக ஏற்றுக…

  22. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த மார்ச் மாதம் தொடங்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கான மூலோபாயங்கள், இரணைமடு குடிநீர்த்திட்டம், பேச்சுக்கு வருமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விடுத்துள்ள அழைப்பு, வடக்கு மாகாண …

  23. நவம்பர் மாதம் 01ம்,02ம்,03ம் திகதிகளில் அமெரிக்க மாநாடு இடம் பெற்றது. அமெரிக்க தமிழ்ச்சங்கமும் அமெரிக்க தமிழர் நடவடிக்கை குழுவும் இணைந்து இம் மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தனர். அமெரிக்க தமிழர் சங்கம் ஒரு பழமையான தமிழர் அமைப்பாகும் இது தமிழ் மக்களின் கலாசார பண்பாட்டு விடயங்களில் அக்கறை கொண்டிருக்கின்றது. அமெரிக்க தமிழர் நடவடிக்கை குழு அரசியல் விடயங்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு இது. அமெரிக்க சட்டமன்றம் வெளிநாட்டு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு என்பவற்றுடன் தமிழர் விவகாரங்களுக்காக தொடர்ச்சியாக பேசிவருகின்றது. இம் மாநாட்டில் தாயகத்திலிருந்து கஜேந்திரகுமார், அனந்தி, சுமந்திரன், மாவைசேனாதிராசா, என்போரும் சிவில் சமூகத்திலிருந்து யாழ் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர் குருபரனும் ச…

    • 3 replies
    • 1.1k views
  24. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயரைப்பயன்படுத்தி யானைக்குட்டி பெற்றுத்தருவதாக கூறி ரூபா 33 இலட்சம் நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரிடம் மாட்டிக்கொண்டார். பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவுக்குக் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றையடுத்து மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைக்குப் பின்னரே தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை விஷேட விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஊடாக மியன்மாரிலிருந்து விலை மதிப்பு மிக்க யானைக்குட்டிகளை பெற்றுத் தருவதாகக் கூறி சந்தேக நபர் மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த டி. சி. ரா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.