Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாலியல் வல்லுறவு குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியொருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தினால் நேற்று 10 வருட கடூழிய சிறைத்தண்டணை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 16 வயதுக் குறைந்த தனது மருமகள் முறையான பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கனகராயன்குளம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபரொருவருக்கே மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி.சந்தரமணி விஸ்வலிங்கம் இந்த தீர்ப்பினை வழங்கியிருந்தார். மேலும், குற்றவாளி 25000 ரூபா தண்டப்பணமும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 75000 ரூபாவும் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளதுடன் அதனை வழங்க தவறும் பட்சத்தில் மேலும் ஒரு வருடம் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்திருந்தார். - See more at: http://onlineuthayan.com/News_More.php…

  2. 'இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷி' இலங்கைக்கு விஜயம் செய்விருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐந்து நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 8 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரும் அவர் 13 ஆம் திகதி வரையிலும் இங்கு தங்கியிருப்பார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரையும் அவர் சந்தித்து கலந்துரையாடவிருக்கின்றார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாண சபைக்கான தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் யசூசி அகாஷி முதன்முறையாக இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதனால் அவருடைய விஜயம் முக்கியமானதாக அமையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், அவர் வடக்கிற்கு விஜயம் செய்வது தொடர்பில் எவ்விதமான தகவல்களும் வெ…

  3. யாழ்.மாவட்டத்திலுள்ள பெண்கள் அமைப்புக்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்.மல்லாகம் நீதிமன்றத்திற்கு அருகாமையில் சுமார் 25 இற்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘வழங்கப்படும் தண்டனைகளால் குற்றங்கள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்’, ‘எனது மரணமே இறுதியானதாகட்டும்’ போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்.புத்தூர் கிழக்கு மத்திய சனசமூக நிலையத்திற்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்து ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி இளம் பெண்ணான அமிர்தலிங்கம் மைதிலி (வயது- 27) என்பவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. இது தொடர்பில் அவரது காதலனான அமிர்தலிங்கம் கிருஷ்ணதீபன் சந்தேகத்தின் பே…

  4. 2013ஆம் ஆண்டு இலங்கை முழுவதிலும் 500பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தமயந்த விஜயசிறி இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் ஊடகவியலாளர்களினால் ‘யாழ். மாவட்டத்தில் மைக்ரோ பிஸ்டல் 2009ஆம் ஆண்டிற்கு முன்னரும், அதற்குப் பின்னரும் பாவனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சி தலைவரின் பாதுகாப்பாளர் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் பயங்கரவாதக் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.அந்த கைது தொடர்பான விசாரணைகள் எந்த மட்டத்தில் இருக்கின்…

  5. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையை வைத்து வியாபாரம் செய்துகொள்கிறார்கள். இவ்வாறு நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார். "மன்மோகன் சிங் இங்கு வருகை தருவதால் தமிழர்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை. ஆனால், இதன் மூலம் தமிழர்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்குமானால் அது சிறப்பானதே'' என்றும் அவர் கூறினார். அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றி போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: நாடு தற்போது பல்வேறுபட்ட அழுத…

  6. கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ள நீர் மேலோங்கியுள்ளதால் அங்கு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பாசிக்குடா பகுதியில் கூடுதலான மழைவீழ்ச்சி இதுவரை பதிவாகியுள்ளது. கல்லோயோ குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் பிரதான வீதியிலுள்ள கிட்டங்கி தாம்போதியின் மேலாக வெள்ளம் ஏற்ப்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பல பிரதான வீதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரி…

  7. அதி­கா­ரத்தைப் பகிர்­வ­தாக சர்­வ­தே­சத்­திற்கு 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை காண்­பித்­து­விட்டு அதனை நடை­முறைப் படுத்­தாது விடு­வதே அர­சாங்­கத்தின் நோக்­க­மாக இருக்­கின்­றது. வடக்கு மாகா­ண­ச­பைக்கு மத்­திய அர­சாங்கம் போடும் முட்டுக் கட்­டைகள் இத­னையே காட்டுகின்றன என சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். வடக்கில் அதிபாதுகாப்பு வலயப் பகுதிகளுக்குள் அமைந்துள்ள ஆலயங்கள், வீடுகள் இடிக்கப்படுகின்றன. இதனை பார்வையிடச் சென்ற போது என்னை இராணுவத்தினர் திருப்பி அனுப் பிவிட்டனர். இந்த நிலை தொடர்ந்தால் இராணுவத்தினரின் தடையை மீறி நான் அப்பகுதிக்குச் செல்வேன் அப்போது இராணுவத்தினர் என்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினால் அந்த மண்ணில் விழுந்து உயிர் விடவும் நான் தயாராக உள்ளேன். அத்தகை…

  8. வடக்கின் உண்மை நிலைமைகள் பற்றி ஜனநாயக மக்கள் முன்னணி சிங்கள மக்களுக்கு எடுத்து கூறுவதை வரவேற்ற அவர், இந்த பணியை இன்னமும் வலுவாக முன்னெடுத்து, உண்மை தகவல்களை சாதாரண சிங்கள மக்களுக்கு எடுத்து கூறும்படி வேண்டுகோள் விடுத்தார். நேற்று வட மாகாணசபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனை கொழும்பில் சந்தித்த போது இந்த வேண்டுகோளை விடுத்தார். இச்சந்திப்பு கொழும்பிலுள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்றது. இந்த மரியாதை நிமித்த சந்திப்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல்மாகாணசபை உறுப்பினர்கள் நல்லையா குமரகுருபரன், எஸ். ராஜேந்திரன், மத்திய மாகாணசபை உறுப்பினர் வேலு குமார், கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் வேலணை வேணியன், சண். குகவரதன், பிரியாணி குணரத…

  9. அடுத்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை சமர்பிப்பதற்கு முன்னோடியாக, இங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே அமெரிக்க வெளிவிவகாரங்களைக் கையாளும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டேமியன் நேர்பி தலைமையிலான மூன்று சிரேஷ்டநிலை அதிகாரிகளும் வருகை தந்துள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கைக்கு நேற்று வருகை தந்த அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரையும், சிவில் சமூகத்தினரையும் சந்தித்தனர். அதன் பின்னர் நேற்றிரவு, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில், த…

  10. எம்.டி.லூசியஸ் பிச்சைக்காரர்கள் தனது காலில் ஏற்பட்ட காயத்தை ஆற்றிக்கொள்ளாமல் அதனை வைத்து பிச்சையெடுப்பதை போன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்காது அரசியல் பிழைப்பு நடாத்துகின்றது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரெரா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் தொடர்பில் அன்றும் இன்றும் என்றும் ஒரே நிலைப்பாடுதான். அதில் எவ்வித மாற்றமும் இல்லை. 13 ஆவது திருத்தம் தொடர்பில் சிறந்தவொரு முடிவை எடுப்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு சிறந்தவொரு இடமாகும். ஆனால் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ…

    • 4 replies
    • 720 views
  11. இராணுவத் தடையை மீறி வலி.வடக்கிற்குச் செல்வேன்! அ​ந்த மண்ணில் உயிர் பிரிவது பாக்கியம்: ​விக்னேஸ்வ​ரன் சவால் [ வெள்ளிக்கிழமை, 06 டிசெம்பர் 2013, 08:19.46 AM GMT ] Lankasri அதிகாரத்தைப் பகிர்வதாக சர்வதேசத்திற்கு 13வது திருத்தச் சட்டத்தை காண்பித்துவிட்டு அதனை நடைமுறைப்படுத்தாது விடுவதே, அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது. வடக்கு மாகாணசபைக்கு மத்திய அரசாங்கம் போடும் முட்டுக் கட்டைகள் இதனையே காட்டுகின்றன என சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கில் அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளுக்குள் அமைந்துள்ள ஆலயங்கள், வீடுகள் இடிக்கப்படுகின்றன. இதனை பார்வையிடச் சென்ற போது என்னை இராணுவத்தினர் திருப்பி அனுப்பி விட்டனர். இந்த நிலை தொடர்ந்தால் இராணுவத்தினரின் தடையை மீறி ந…

    • 0 replies
    • 362 views
  12. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி. அரியநேத்திரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கூட்டமைப்பிலிருந்து அரசாங்கத்தரப்புக்கு மாறியுள்ள அம்பாறை மாவட்ட எம்.பி. பியசேன ஆகியோருக்கிடையில் நேற்று சபையில் கடும் வாய்ச்சண்டை ஏற்ப்பட்டது. இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பியசேன எம்.பி.யும் அரியநேத்திரன் எம்.பி.க்கு இடையூறுகளை ஏற்படுத்திய அதேவேளை, அரியநேத்திரன் எம்.பி. பியசேன எம்.பி.யைப் பார்த்து கடுமையான தொனியில் பேசியதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைப் பார்த்து உங்களது மனவேதனை புரிகின்றது என்றும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வரவு - செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு அரியநேத்திரன் எம்.பி…

  13. -கெலும் பண்டார எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் கொலை தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் காரணமாக தனது கட்சியை சேர்ந்த கே.கமலேந்திரனை வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை துறக்குமாறு கேட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நேற்று வியாழக்கிழமை கூறினார். டானியல் றெக்ஷியன்; ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியமான செயற்பாட்டாளர். இவரது கொலை தொடர்பில் கமலேந்திரன் மற்றும் கொல்லப்பட்ட றெக்ஷியனின் மனைவி ஆகியோரின் பெயர்கள் சம்பந்தப்பட்டுள்ளன என அமைச்சர் தேவானந்தா கூறினார். கமலேந்திரனுக்கு எதிராக குற்றச்சாட்டு உள்ளது அவர் இப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவர் கட்சியிலும் வடமாகாண சபைய…

  14. பலம் பொருந்திய ஏகாதிபத்திய நாடுகளால் சர்வதேசத்தின் முன்னிலையில் எம்மை மண்டியிட வைக்கவே முடியாது. அவற்றின் அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அடிபணிய மாட்டோம். ஏனெனில் அவற்றுக்கு எதிரான சக்திகளுடன் கை கோர்த்தே நாம் பயணிக்கிறோம் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஜனாதிபதி செலவினத் தலைப்புகள் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: பலமிக்க நாடுகளுக்கு அடிபணியாது துணிவுடன் செயற்படுவதன் காரணமாகவே எமது ஜனாதிபதிக்கு எதிராக எதிர்ப்புகள் தலைதூக்குகின்றன. இவற்றை எம்மால் தோல்வியடையச் செய்ய முடியும். ஏனெனில் ஏகாதிபதியவாதிகளுக்கு எதிரான சக்திகளுடனேயே நாம் க…

  15. முதல்வர் விக்னேஸ்வரனுக்கு பகிரங்க கடிதம் – ஜெயபாலன் *‘போர்க்குற்ற விசாரணை நடத்தாவிட்டால் பொறுமை இழக்க நேரிடும்’’ என இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. *இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் அடையாளம் காட்டப்பட வேண்டும். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதுதான் நம்முடைய கோரிக்கை. தொடர்ந்து நாம் அந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம்.- நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் பாலியல் வன்முறைகள் இனக்கொலைகள் தொடர்பாக உலகின் எதிர்ப்பு வலுவடைந்து வருகிறது. விசாரணைகளுக்குக்கூட இலங்கை அரசு இன்னும் தயாராக இல்லை. தமிழ் மாணவ மாணவிகள் போரின் மனவடுக்களில் இருந்து இலங்கை இராணுவத்தின் கொலை பாலியல் வல்லுறவுப் பயத்தில் இருந்து இன்னமும் மீழவில்ல…

  16. இலங்கை மீதான போர்குற்றம் பற்றி ஜெர்மனியில் 7-ந் தேதி விசாரணை நடைபெறுகிறது. இலங்கை வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போர் என்ற பெயரில் சிங்கள ராணுவம் தமிழ் இனத்தையே அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. பல ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் குண்டு வீசி கொல்லப்பட்டார்கள். தமிழ்ப் பெண்களை பிடித்துச் சென்ற ராணுவம் அவர்களை ஈவு இரக்கமின்றி கற்பழித்து கொன்றது. ராணுவம் பிடித்துச் சென்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கதி என்ன என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. போருக்குப்பின் அமைதி ஏற்பட்டாலும் தமிழர்கள் தங்கள் வீடு, நிலம் போன்றவற்றை இழந்து தவிக்கிறார்கள். இலங்கை இராணுவத்தின் படுகொலை காட்சிகளை லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இது மேற்கத்திய நாடுகள் கவனத்தை ஈர்த்தது. இத…

  17. ஊழலில் மூழ்கும் சிறிலங்கா – ஆசியாவின் அதிசயம் ஊழல் பற்றிய அனைத்துலக பட்டியலில், சிறிலங்கா கடந்த ஆண்டைவிட 12 இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்பரன்சி இன்ரநசனல் வெளியிட்டுள்ள 2013ம் ஆண்டுக்கான பட்டியலில், வரிசைப்படுத்தப்பட்டுள்ள 177 நாடுகளில் சிறிலங்கா 91 வது இடத்தைப் பிடித்துள்ளது. சிறிலங்காவுக்கு100இற்கு 37 புள்ளிகள் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டைவிட சிறிலங்காவில் ஊழல்கள் மலிந்து போனதால், கடந்த ஆண்டில் 79 வது இடத்தில் இருந்த சிறிலங்கா இந்த ஆண்டு 91 வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பட்டியலில், டென்மார்க்கும், நியூசிலாந்தும் 91 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளன. ஆப்கானிஸ்தான், வடகொரியா, சோமாலியா, ஆகிய நாடுகள், வெறும் 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தை…

  18. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிளிவெட்டி மற்றும் பட்டித்திடல் உட்பட இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள சம்பூர் பிரதேச மக்கள் நெருக்கடிக்குள்ளாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமது பிரதேசத்திலிருந்து வெளியேறிய சம்பூர் மற்றும் அதனை அண்மித்த கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1200 குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. போருக்கு பின்னர் மீள்குடியேற்றம் பூர்த்தியடைந்துள்ளதாக அரசாங்கம் அறித்துள்ள போதிலும் சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு மற்றும் கடற்கரைச்சேனை ஆகிய கிராம மக்களை சேர்ந்த சுமார் 825 குடும்பங்களின் மீள்குடியேற்றம் தொடர்ந்தும் தடைப்பட்டுள…

  19. இத்தாலியின் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று இலங்கை படையினர் போர் குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பில் எதிர்வரும் 7ம் திகதி ஜெர்மனியில் வழக்கு விசாரணை ஒன்றை நடத்தவுள்ளது. இந்த வழக்கிற்காக 11 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு எதிரான இந்த வழக்கின் முறைப்பாட்டாளர் வட அயர்லாந்தின் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றை நடத்தும் ஜூட் லால் பெர்ணான்டோ என்பராவார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த வழக்கில் 10 பேர் சாட்சியமளிக்க உள்ளனர். வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 10ம் திகதி வெளியிடப்படும். ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஈழத் தமிழர்களை இலங்கை படையினர் கொலை செய்ததாக குற்றம் சுமத்தி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=98349&categ…

  20. இலங்கையில் உள்ள இனங்களுக்கு இடையில் மீண்டும் ஒரு பேரினவாதத்தை உருவாக்கும் வகையில் பொதுபலசேனாவின் கருத்துக்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவையாக காணப்படுவதாக யாழ்.மாவட்ட தமிழ் – பௌத்த சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், எமது நாட்டில் நடைபெற்று முடிந்த யுத்தத்திற்கு பின் ஜனாதிபதி எமது நாட்டில் இன, மத வேறுபாடற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காக தன்னை அர்ப்பணித்து செயலாற்றிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் ஜனாதிபதிக்கும் எமது நாட்டிற்கும் கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இனவாத கருத்தை தெரிவித்துள்ள பொதுபலசேனாவின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறோம். எமது இலங்கை நாட்டை பொறுத்தவரை பல இனத்தவர்கள் இருந்தாலும் முக்கிய இனத்தவர்களாக சிங்களவரும்,…

  21. கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தை சமையல் கூடமாக இராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். எருக்கலை மரங்கள் அடர வளர்ந்த துயிலும் இல்லக் காட்டிற்குள் இராணுவத்தினர் சமையல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் கரைச்சிப் பிரதேச சபையில் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தை புனரமைப்பது தொடர்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்;ந்து மாவீரர் துயிலும் இல்லத்தை தமது கட்டுப்பாட்டில் இராணுவத்தினர் கொண்டுவந்தனர். கடந்த சில நாட்களின் முன்பு வந்த மாவீரர் தினத்தின் பொழுதும் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தின்மீது பாதுகாப்பு அதிகரித்திருந்தனர். இல்ல நிலப்பரப்பை சுற்றி இராணுவத்தினர் முள் வேலி அமைத்துள்ளனர். மாவீரர் துயிலும் இல்லங்கள் இராணுவத்தினரால் சிதைக்கப்பட்ட …

  22. வன்னிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கருத்தடை, கட்டாய கருத்தடை அல்ல பாதிக்கப்பட்ட பெண்களது சுயவிருப்பத்தின் பேரினிலேயே மேற்கொள்ளப்பட்டதாக சான்றாதராப்படுத்த முழு அளிவில் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளதாக வன்னியில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பிரகாரம் சுகாதார அமைச்சு அதிகாரிகள் மட்டத்தினர் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி பெண்களிடமிருந்து ஒப்புதல் கடிதங்களை சேகரித்து வருவதாக கூறப்படுகின்றது. இவ்வாறு கட்டாயப்படுத்தப்பட்டு கட்டாய கருத்தடைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணொருவர் நோய் தொற்று காரணமாக அண்மையில் உயிரிழந்திருந்தார். அவரது மரணம் ஏனைய பெண்களிடையேயும் ஒரு புறம் அச்சத்தினை தோற்றுவித்திருக்க மறுபுறத்தே கடுமையான விமர்சனங்கள் மருத்துவத்துறை மீத…

  23. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் இடம்பெயர் மக்களுக்கான விசேட பிரதிநிதி டொக்டர் சாலோகா பியாணி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இரு தரப்பு விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. பியாணி வடக்கு கிழக்கு மகாhணங்களுக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளார். பாதுகாப்புச் செயலாளருடன் நடைபெற்ற சந்திப்பில் எவ்வாறான விடயங்கள் குறித்து பேசப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/Artic…

  24. "வடக்கிலுள்ள உள்ளூராட்சிச் சபைகளின் செயற்பாடுகளைச் செயலாளர்களினூடாக வடமாகாண அபிவிருத்திக் குழுத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியும் தடுத்துநிறுத்துகின்றனர். அத்துடன், வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தாண்டிய ஆதரவையும் அவகள் மறுத்துரைக்கின்றனர். எனவே, இனியும் அடிவருடிகளை நம்பி அரசு செயற்படுவது நாட்டை மீண்டும் சேற்றுக்குழிக்குள் தள்ளுவதற்கு ஒப்பானதாகும்.'' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று சபையில் தெரிவித்தார். வடக்கிலுள்ள உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்களும் உத்தியோகத்தர்களும் மக்களால…

  25. சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிஸ்டர் ஜெனரலான ஜனாதிபதி சட்டத்தரணி புவனெக்க அலுவிகாரே உயர்நீதிமன்ற நீதியரசராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார். அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துக்கொண்டார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/92068-2013-12-05-08-09-44.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.