Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Started by nunavilan,

    வலி.வடக்கில்... யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகளின் சிறப்பு பிரதிநிதி சலோகா பெயானி வலி. வடக்கு கோணப்புலம் நலன்புரி நிலையத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்டார். இதன்போது பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்ததுடன் பொதுமக்களினால் மகஜரொன்றும் சிறப்பு பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டது. இதேவேளை, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்து அவர் பேச்சு நடத்தினார். (படங்கள்:சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்) http://tamil.dailymirror.lk/--main/91796-2013-12-03-11-58-12.html

  2. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் விரைவில் யாழ்ப்பாணம் சென்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனையும் வடக்கில் பாதிக்கப்பட்ட தமிழர்களையும் நேரில் சந்திப்பார் என்று இந்திய மத்திய நிதியமைச்சர ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/91514-2013-12-01-04-08-52.html

  3. மார்ச் மாதத்திற்கு முன்னதாக இலங்கை நிலைமைகளில் மாற்றம் ஏற்படும் என கனடா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் மனித உரிமை பேரவையின் அமர்வுகள் நடைபெறவுள்ளது. இந்த அமர்வுகளுக்கு முன்னதாக இலங்கை மனித உரிமை நிலைமைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என கனேடிய வெளிவிவகார அமைச்சின் மனித உரிமை விவகாரச் செயலாளர் தீபக் ஒபராய் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை விவகாரம் தொடர்பில் உலக நாடுகளின் குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் உரிய முறையில் பதிலளிக்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். மாறாக அவற்றை மூடிமறைப்பதில் அர்த்தமில்லை என அவர் சுட்டிக…

  4. நல்லிணக்க ஆணைக்குழு அமைப்பது தொடர்பாக பேச்சு நடத்த வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தென்னாபிரிக்கா அழைப்பு விடுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கு நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு உதவத் தயாராக இருப்பதாக, அண்மையில் கொழும்பு வந்திருந்த தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்திருந்தார். இந்த திட்டத்துக்கு தென்னாபிரிக்கா உதவியளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா கொழும்பில் சந்தித்து, இந்தத் திட்டம் குறித்து எடுத்துக் கூறியிருந்தார். அதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் த…

  5. இந்தியப் பெருங்கடலில் செயற்படும் தீவிரவாதக் குழுக்கள் மற்றும், கடற்கொள்ளைக்கு எதிராக நடவடிக்கைகளை இணைந்து முன்னெடுப்பது குறித்த கடற்படை ஒத்துழைப்புகளை வலுப்படுத்த இந்தியாவும் சிறிலங்காவும் இணங்கியுள்ளதாக ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய அரசாங்க உயர்வட்டாரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை புதுடெல்லியில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலருக்கும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனுக்கும் இடையில் நடத்தப்பட்ட – பகிரங்கப்படுத்தப்படாத சந்திப்பிலேயே இது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் பதற்றம் நிலவுகின்ற சூழலில், இதுபோன்ற…

  6. 2012 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டு அடிப்படையில் இலங்கையின் சனத்தொகை 20,263,723 (20.26 மில்லியன்) என என சர்வதேச நாணய ஒத்துழைப்புக்கான சிரேஷ்ட அமைச்சரும் பிரதி நிதி அமைச்சருமான சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். 2011 மற்றும் 2012 இல் இடம் பெற்ற இக்கணக்கெடுப்புக்கமைய சிங்களவர்கள் 15,173,820 (15.17 மில்லியன்), தமிழர்கள் 31,13,247 (3.11 மில்லியன்) உம் இலங்கைச் சோனகர் 18,69,820 (1.86 மில்லியன்), பேகர 37,061 (0.03 மில்லியன்), மலே 40,189 (0.04 மில்லியன்) வேறு இனத்தவர் 29,568 (0.02 மில்லியன்) ஆவார் என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இக்கணக்கெடுப்புக்காக 173 கோடி ரூபா செலவாகியுள்ளதுடன் 2013 ஓகஸ்ட் 19ஆம் திகதி வரை 1732,277,222.79 ரூபா செலவாகியுள்ளதோடு இதில் 868,742,666.72 ரூபா…

  7. கொழும்பு கல்கிசை படோவிட 2ம் வட்டார ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான காணிக்கை உண்டியல் நேற்று இரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஒரு வாரத்தில் நான்கு இந்து கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் மலையகத்தில் நடைபெற்றுள்ளன. வடபகுதியின் இந்து கோவில் அழிப்பு-கொள்ளை கலாச்சாரம் மலையகத்துக்கும் பரவி, இப்போது மேல்மாகாணத்துக்கும் வந்துவிட்டதா, என்ற கேள்வி இப்போது எம்மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். கொள்ளை சம்பவத்துக்கு உள்ளான கல்கிசை படோவிட 2ம் வட்டார ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்துக்கு நேரடியாக இன்று காலை சென்ற மனோ கணேசன், அங்கு ஆலய குருக்கள் மற்றும் அறங்காவலர் சபை உறுப்பினர்களிடம் நடந்த சம்பவம் பற்றி விசாரித்து…

  8. பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்திற்கு புதிய ஆவணப்படங்களை தயாரிப்பதற்கு அரசாங்கம் தகவல்களை வழங்கி வருவதாக லக்ஸ்மன் கிரியல்ல குற்றம் சுமத்தியுள்ளார். கைதிகள் கொலை செய்யப்படுகின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். வரவு செலவுத் திட்டம் தொடர்பில் பாராளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வெலிக்கடைச் சிறைச்சாலையில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அண்மையிலும் சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலி;ல் வைக்கப்பட்டிருந்த கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தப்பிச் செல்லும் போதும், ஆயுதங்களை காண்பி;க்கச் சென்று தாக்குதல் நடத்திய போதும் இவ்வாறு கைதிகள் …

  9. பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது நிழல் என்ற பிரமையில் இருந்த லக்ஸ்மன் குலுகல்ல? 1ஆம் இணைப்பு - 02-12-2013 - 13:17pm உடன் அமுலுக்கு வரும் வகையில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார். இதேவேளே இந்த நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் குலுகல்ல மகிந்த ராஜபக்ஸ சகோதரர்களின் நம்பிக்கைக்கு உரியவர் என்பதற்கு அப்பால், அவர்களில் ஒருவராக தன்னை நினைத்து செயற்பட்டவர். ஆயின் ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பினூடு திடிரென இந்த முடிவு எடுக்க…

  10. தாம் உள்ளிட்ட சிலருக்கு பத்து ரஷ்யர்களால் விசேட கொமாண்டோ பயிற்சி, வழங்கப்பட்டதாக அநுராதபுரம் வான்படை முகாம் மீதான தாக்குதலின் பிரதான சந்தேக நபரான தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ராசவல்லவன் தவரூபன் என்ற குகன் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் வான்படை முகாம் மீதான தரை மற்றும் வான் வழி தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று அநுராதபுரம் விசேட நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன் போது, பிரதான சந்தேக நபரான தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ராசவல்லவன் தவரூபன் என்ற குகன் என்பவர் நேரடியாக சாட்சியமளித்தார். தம்மால் வழங்கப்பட்ட தொலை தொடர்பு தகவல்களுக்கு அமைய யாழ்ப்பாண குடாநாட்டில், சுமார் 100 எறிகணை தாக்குதல்கள் மெற்கொள்ளப்பட்டதாக அவர் கு…

  11. பருவமழை பொய்யதுள்ளமையினால் தற்போது இரணைமடுக்குளத்தினுடைய நீரின் அளவு குறைந்து காணப்படுகின்றது. கிளிநொச்சியிலுள்ள இந்த இரணைமடுக்குளம் வழமையாக நவம்பர் மாத காலப்பகுதியில் நீர் நிறைந்து வான் பாயும் நிலையில் காணப்படும். ஆனால் தற்போது நவம்பர் மாதம் முடிவடைந்த நிலையிலும் மழை பொய்த்துப் போயுள்ளதால் இரணைமடுக் குளத்தினுடைய நீரின் அளவு குறைந்து காணப்படுகின்றது. இவ்வருடம் இரணைமடுக்குளத்தில் போதுமானதளவு நீர் தேக்கி வைக்கப்படாமல் போனால் 2014ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கையிலும் பாதிப்பு ஏற்படும் நிலைமை காணப்படும். என தெரிவிக்கப்படுகின்றது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99753/language/ta-IN/article.aspx

    • 2 replies
    • 727 views
  12. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- ஆளணி வெற்றிடங்களிற்கு ஆட்களை நியமிக்கும் வடமாகாணசபையின் ஆளுநரது நிகழ்வினை தனது தனிப்பட்ட காரணங்களிற்காக பங்கெடுக்க முடியாதிருப்பதாக தெரிவித்து முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் புறக்கணித்துள்ளார். இன்று கோப்பாய் கல்வியியல் கல்லூரியினில் இடம்பெற்ற நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சியினிலேயே அவர் இவ்வாறு சமூகமளிக்காதிருந்துள்ளார். வடமாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னராக அவசர அவசரமாக வெற்றிடமாகவுள்ள ஆளணிகளிற்கு தமது ஆதரவாளர்களை நியமனம் செய்ய ஆளும் தரப்பு அமைச்சர்கள் முதல் சுதந்திரக்கட்சி அமைப்பாளர்கள் வரை ஆளுநருடன் கைகோர்த்து செயற்பட்டிருந்தனர். அவ்வாறாக ஆயிரக்கணக்கான வெற்றிடங்கள் நிரப்பப்பட்ட போதும் கடைசி நேரத்தில் சில நியமனங…

  13. "நிமால்கா உள்ளிட்ட மனித உமைவாதிகள் ஆபாச வார்த்தைகளால் திட்டி தீர்க்கப்பட்டனர்' சமீபத்தில் ஒரு நேரடி வானொலி உரையாடல் நிகழ்ச்சி போது மனித உரிமை ஆர்வலரும் பெண்ணியல்வாதியுமான நிமால்கா பெனான்டோ மீது கொலை மிரட்டல் விடுத்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவர் ஹட்சன் சமரசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட அமைதியான எதிர்பு ஊர்வலம் இலங்கை அரசாங்க காவற்துறை குண்டர்களால் ஒடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதனை மாற்றுக் கொள்கைகளுக்கான நிறுவனத்தின் விகல்ப்ப ஊடக குழுவினர் காணொளியாகப் பதிவு செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை குழப்பிய சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் றங்கல (SSP) தலமையிலான காவற்துறையினர் மற்றும் அரசாங்க ஆதரவு தரப்பினர் பெண்களுக்கு எதிராக கடுமைய…

  14. பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது நிழல் என்ற பிரமையில் இருந்த லக்ஸ்மன் குலுகல்ல? ஆவணப் படம் உடன் அமுலுக்கு வரும் வகையில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார். இதேவேளே இந்த நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் குலுகல்ல மகிந்த ராஜபக்ஸ சகோதரர்களின் நம்பிக்கைக்கு உரியவர் என்பதற்கு அப்பால், அவர்களில் ஒருவராக தன்னை நினைத்து செயற்பட்டவர். ஆயின் ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பினூடு திடிரென இந்த முடிவு எடுக்கப்பட்டதன் பின்னணியில் உள்…

  15. இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து இந்திய மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்திருந்தார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற குற்றச் செயல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார். இலங்கை விவகாரம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை அமைச்சர் சிதம்பரம் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளத…

  16. நான் எமது தேசியத் தலைவரை சந்தித்தது உண்மை. அவ் வேளையில் அவரின் ஆதங்கம் அனைத்தும் அமெரிக்காவின் பங்களிப்புப் பற்றியதே என கூறியதை என்னால் இன்றும் மறக்க முடியாதுள்ளது. என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் குறிப்பிட்டார். மேலும் எமது போராட்டத்தில் இன்றைய நிலையில் அனைத்து திசைகளிலும் பற்பல அமைப்புக்கள். இவைகள் ஒன்றுபட்டு ஒரே திசையில் பயணிக்க வேண்டும் என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் குறிப்பிட்டார். http://www.seithy.com/breifNews.php?newsID=98131&category=TamilNews&language=tamil

  17. வடக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை வெளியேறக் கோருகின்ற நாம் எமது விவசாய நிலங்களை ஆக்கிரமித்துள்ள இந்தப் பச்சை இராணுவத்தையும் உடனடியாக விரட்டவேண்டியவர்களாக உள்ளோம் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். வட மாகாண விவசாய அமைச்சினால் பார்த்தீனிய ஒழிப்பு மாதம் நேற்று ஆரம்பமாகியது. அதன்படி புத்தூர் நிலாவரையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து பார்த்தீனியம் ஒழிப்புச் சிரமதானப் பணியை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், பார்த்தீனியம் ஒரு சாதாரண செடி அல்ல. ஆக்கிரமிப்புக்களை ஒரு பிரதேசத்தைத் தாயகமாகக் கொண்ட ஓர் இனம் இன்னொரு பிரதேசத்திற்கு வலுக்கட்டாயமாக இடம்மாறும்போது சில வேளைகளில்…

  18. யுத்தத்தின் போது பாலியல் வன்முறை இடம்பெறுவதனைத் தடுக்கும் வகையிலான தனது பூர்வாங்க நடவடிக்கைக்கு இலங்கை ஆதரவு வழங்குமா என்பது குறித்து அதனது பதிலை தான் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானியப் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினரொருவரின் கேள்விக்கு வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் வில்லியம் ஹேக் பதிலளிக்கையில், இலங்கை வெளிவிவகார அமைச்சுருடன் தங்களின் பிரத்தியேகமான பூர்வாங்க செயற்பாடு குறித்து கலந்துரையாடியதாகவும், இதற்கு அவர்கள் ஆதரவளிப்பார்களா என்பது குறித்த அவர்களின் பதிலுக்காக தாங்கள் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். இலங்கை மீதான அவரின் முழுமையான அறிக்கை பின்வருமாறு: இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய அர…

  19. மஹிந்தவும் கோட்டாபயவும் ரணிலின் படத்திற்கு காலை, மாலை மலர்தூவி வணங்க வேண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரரான பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் புகைப்படத்தை வைத்து காலையும் மாலையும் மலர்தூவி வணங்க வேண்டும் என ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க அன்று ரோம் பிரகடனத்தில் கைச்சாத்திடாதிருந்தமை அதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றம் புரிந்தவர்களை சர்வதேச நீதிமன்றுக்கு அழைத்துச் செல்ல முடியும் என அந்த பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் அதில் கைச்சாத்திட ரணில் விக்ரமசிங்க அன்று மறுப்பு தெரிவித்ததாகவும் கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர…

  20. ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வளங்கள் அகழப்படுவதனால் மக்களுடைய இருப்பு பாதிக்கப்படுகின்றது என வடக்கு மாகாண உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வரலாற்றுச் சிறப்பு மிக்க வாவெட்டிமலை,கொடிதூக்கி மலை ஆகியவற்றின் சுற்றுப்புற பிரதேசங்களில் உள்ள மலைகள் சட்டவிரோதமான முறையில் உடைக்கப்பட்டு வளங்கள் அள்ளப்படுவதால் அந்தப் பகுதியின் இயற்கைச் சமநிலை மோசமாகப் பாதிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. அதன்படி இந்த சட்டவிரோத நில அகழ்வால் அருகிலுள்ள தமிழ் மக்களின் வீடுகள் மற்றும் கிணறுகளில் வெடிப்புக்கள் ஏற்படுகிறது.இதனால் அப்பகுதியில் மக்களின் இருப்பு உறுதிப்படுத்தப்படமுடியாத சூழ்நிலை நிலவுகிறது. பிரதேச மக்களின் தகவலையடுத்து அங்கு நேரில் சென்று சம…

  21. சர்வதேச மிரட்டலுக்கு இலங்கை ஒருபோதும் அடிப்பணியாது - இலங்கை திட்டவட்டம் இலங்கை சர்வதேசத்தின் மிரட்டலுக்கு ஒருபோதும் அடிப்பணியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. பாராளுமன்றில் இன்று (02) உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார். மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்துமாறு இலங்கைக்கு வலியுறுத்தும் சர்வதேச நாடுகள் அதனை குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிக்க வேண்டும் என கட்டளையிட முடியாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். எந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அது உள்நாட்டுக்குள்ளேயே முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை, தேசிய செயற்திட்டம் போன்றவற்றை அரசாங்கம் தற்போ…

  22. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- முதலமைச்சரின் அழைப்பில் இந்தியப்பிரதமர் யாழப்பாணம் செல்வதை எதிர்ப்பதாக ஐக்கியதேசிய கட்சி நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது. கட்சியின் பிரதம கொறடாவான ஜோன் அமரதுங்க இன்று முற்பகல் நாடாளுமன்றத்தில் கூறினார். சர்வதேச நாடுகளின் தலைவர்களை அழைப்பதற்கு மாகாண அரசுகளுக்கு உரிமை இல்லை. இந்த நிலையில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸவரன் யாழ்ப்பாணத்திற்கு வருமாறு இந்திய பிரதமருக்கு எவ்வாறு அழைப்பு விடுத்தார் என்று ஜோன் அமரதுங்க கேள்வி எழுப்பினார். அரசாங்கம் இதற்கு அனுமதிக்கக்கூடாது. பொதுநலவாய மாநாட்டுக்கு வருமாறு அரசாங்கம் அழைப்பும் விடுத்தபோது கொழும்புக்கு வருகை தரமறுத்த பிரதமர் மன்மோகன் சிங்க எவ்வாறு யாழ்ப்பாணம் செல்ல முடியும் என்று கேள்வி தொடுத்தா…

  23. கொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறை மற்றும் வன்னியில் உள்ள இரண்டு வீடுகளும் அரசுடமையாக்கப்பட உள்ளதாக இலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போருக்கு பிறகு சொத்து மற்றும் உயிர் சேதங்கள் தொடர்பான கணக்கெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பின்போது, பிரபாகரனால் பயன்படுத்தப்பட்ட இரண்டு வீடுகள் உள்ளிட்ட பல அவரது சொத்துக்கள் உரிமை கோரப்படாத நிலையில் காணப்பட்டுள்ளது. பிரபாகரனின் சொத்துக்களுக்கு உரிமை கோர அவரது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் உயிரோடு இல்லாத காரணத்தினால், இவ்வாறு அவரது சொத்துக்களும், போர் காரணமாக முழுமையாக நாட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வரும் மக்களின் சொத்துக்களும் அரசுமையாக்க…

  24. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் விரைவில் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்னர் இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவராக அமைச்சர் பஸில் ராஜபக்ச டில்லிக்குச் செல்லவுள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் இந்தியப் பயணத்தையும், பிரதமர் மன்மோகன் சிங்கின் யாழ். வருகையையும் டில்லி இராஜதந்திர வட்டாரங்கள் நேற்று உறுதிப்படுத்தின. வடக்கு முதலமைச்சரின் அழைப்பின் பிரகாரம் பிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணத்துக்கு வருவதற்குத் திட்டமிட்டுள்ளார் என்றும், ஆனால், அதற்கான திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் தமிழக காங்கிரஸின் தலைவர் ஞானதேசிகன் நேற்றுத் தெரிவித்தார். அதேவேளை, இந்திய மத்திய நிதியமைச்சரான ப.சிதம்பரமும் பிரதமரின் யாழ். பயணத்தை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.