ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
வடக்கு - கிழக்கு இணைப்பு உள்ளிட்ட ஏனைய அனைத்து விடயங்கள் குறித்தும் சாதகமாகப் பரிசீலிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவுள்ளது. இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்துணர்வுடன் செயற்பட முன்வர வேண்டும்.'' இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபைக் குழுத் தலைவர் ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார். 13ஆவது திருத்தச் சட்டத்தை வலுப்படுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி கிழக்கு மாகாண முஸ்லிம்கள் காட்டியுள்ள சமிக்ஞையைக் கருத்திற் கொண்டு சாதகமாக - பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டிய தார்மீகக் கடமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், வடமாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரனுக்கும் இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார். "வடக்கு - கிழக்கு இணைப்புக்கு கிழக்கு மாகாணம் இணக்கம…
-
- 34 replies
- 1.8k views
-
-
பாஜக தலைவர்களை சென்னையில் சந்தித்தார் இரா.சம்பந்தன் [ செவ்வாய்க்கிழமை, 22 ஒக்ரோபர் 2013, 06:08 GMT ] [ அ.எழிலரசன் ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களுடன் சென்னையில் இன்று காலை பேச்சுக்களை நடத்தியுள்ளார். பாஜகவின் தமிழ்நாடு தலைமையகமான கமலாலயத்தில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. பாஜகவின், தமிழ்நாடு மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் மற்றும் தமிழிசை சௌந்தர்ராஜன், வானதி சீனிவாசன் ஆகியோர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடனான சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக இன்னமும் எந்த விபரங்களும் வெளியாகவில்லை http:/…
-
- 7 replies
- 883 views
-
-
-மொஹொமட் ஆஸிக் ஹலாலுக்கு எதிரான போராட்டத்தை பொதுபல கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக இன்று நடத்தியதுடன் ஹலாலை ஒழிக்கும் வரையிலும் இந்த போராட்டத்தை தொடர போவதாகவும் எச்சரித்துள்ளது. கொழும்பிலிருந்து கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு வாகன ஊர்வலமாக வந்த பொது பல சேனாவின் உறுப்பினர்கள் ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக இன்று மாலை ஒன்றுகூடினர். பொதுபல சேனாவின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் அதன் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் உற்பட தேரர்கள் மற்றும் பொதுபல சேனாவின் அங்கத்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றிய பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர், ஹலால் நடைமுறை சம்பந்தமாக கடந்த காலத்தில் நாங்கள் ஒரு தீர்வு வழங்கப்பட்டிருந்தது. ஜம்மியதுல் …
-
- 2 replies
- 392 views
-
-
LLRC பரிந்துரைகள் பல இன்னமும் அமுல்படுத்தப்படவில்லை – பிரித்தானியா 23 அக்டோபர் 2013 உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளில் பல இன்மும் அமுல்படுத்தப்படவில்லை என பிரித்தானியா குற்றம் சுமத்தியுள்ளது. சில பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்ட போதிலும் பல இன்னமும் அமுல்படுத்தப்படவில்லை என உள்ளுராட்சி மற்றும் சமூகத் திணைக்கள சிரேஸ்ட அமைச்சர் பார்னோஸ் வார்ஸீ தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அமர்வுகளை பகிஷ்கரிப்பது உசிதமானதல்ல எனவும், அமர்வுகளில் பங்கேற்று மனித உரிமை விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்புவதே பொருத்தமானது என அவர் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 446 views
-
-
அம்பாறை தெஹியத்தகண்டிய வில்கமுவ பிரதேச்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். 25 அகவையுடைய பந்துல என்ற சிங்கள இளைஞனே துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு தெஹியத்த கண்டிய பகுதியினை தாண்டி வில்கமுவ தேசிய பூங்காவிற்கு மூன்று இளைஞர்கள் சென்றுள்ளார்கள் இதன்போது யுதகனபிட்டிய பகுதியில் வைத்து அடையாளம் தெரியாதவர்கள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார்கள் இதன்போது ஒரு இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏனைய இருவர்களும் உயிர் தப்பியுள்ளார்கள் உயிரிழந்தவரின் உடலம் மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது குறித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். http://www.sankathi24.com/news/34800/64//d,fulla…
-
- 0 replies
- 498 views
-
-
கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ள சூதாட்ட விடுதிக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை கொம்பனித் தெரு பிரதேசத்தில் ஆர்ப்பட்டமொன்றும் இடம்பெற்றது. இந்த சூதாட்ட விடுதியின் விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கல் கிளார்கிற்கு எதிராகவும் இதன்போது கோஷங்கள் எழுப்பப்ட்டமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: பிரதிப் பத்திரன) http://tamil.dailymirror.lk/--main/86734-2013-10-22-12-46-10.html
-
- 2 replies
- 359 views
-
-
ஒலிக்கீற்று : இலங்கை இராணுவ சித்திரவதைகள் தொடர்பாக சுரேஸ்குமார் என்பவர் பீ.பீ.சிக்கு வழங்கிய செவ்வி click here.. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9685:2013-10-22-19-50-50&catid=1:latest-news&Itemid=18
-
- 0 replies
- 509 views
-
-
எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி இலங்கையில் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை பகிஸ்கரிக்குமாறு ஆபிரிக்க நாடுகளிடம் கென்யா பிரசாரம் செய்வதாக வெளிவந்த செய்தியை கென்ய அரசாங்கம் மறுத்துள்ளது. மேலும் இந்த மாநாட்டில் பங்கேற்க கென்யா தயாராகி வருவதாகவும் தாம் மிக உயர்மட்டத்தில் பங்கேற்பது உறுதி எனவும் கென்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுநலவாயத்தில் தனது அங்கத்துவத்தை கென்யா பெரிதும் மதிக்கின்றது எனவும் இந்த உறவை பாதிக்கும் எவ்வித நடவடிக்கையிலும் அது ஈடுபடாதெனவும் கென்ய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. கென்ய ஜனாதிபதி உகுறு கென்யாட்டா மற்றும் உப ஜனாதிபதி வில்லியம் றுட்டோ ஆகியோரை சர்வதேச குற்ற விசாரனை நீதிமன்றில் நிறுத்தியமைக்கு எதிராக தீர்க்கமான நிலைப்…
-
- 0 replies
- 414 views
-
-
யாழ். நாவற்குழிப் பகுதியில் வசிக்கின்ற தமிழ் மக்கள் தமது காணிகளை அளந்து அதற்குரிய ஆவணங்களை உடனடியாக வழங்கவேண்டும் எனவும் தவறின் தாம் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தனர். தமக்குரிய காணிகளை அளந்து ஆவணங்கள் வழங்கப்படும் என இராணுவத்தினர் தெரிவித்து வருகின்ற பொழுதும் அரசாங்க அதிகாரிகளும் சில அரசியல்வாதிகளும் திட்டமிட்ட வகையில் காணிகளை வழங்காது காலம் தாழ்த்துவதாகவும் தெரிவித்தனர். இவ்விடயம் தொடர்பாக அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் கடந்த நான்கு வருடங்களாக இப்பகுதியில் மீளக்குடியேறியுள்ளோம். எமக்கு இப்பகுதியில் குறித்த காணிகளில் வசிப்பதற்கான …
-
- 0 replies
- 292 views
-
-
எதிர்வரும் ஒக்டோபர் 28ம் நாள் திங்கட்கிழமை கனடியத் தலைநகர் ஒட்டாவா நாடாளுமன்றம் முன்றலில் மாபெரும் ஒன்றுகூடல் நடைபெற ஏற்ப்பாடாகியுள்ள நிலையில் ரொறொன்ரோவின் பல பகுதிகளிலிருந்தும் பேருந்துகள் புறப்பட தயாராகவுள்ளன. பெருமளவிலான தமிழ் மக்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டு கனடிய அரசிற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வொன்று உணர்வு புர்வமாக இடம் பெறவுள்ளதாகவும் பயணத்திற்கான முற்பதிவுகளை மேற்க்கொள்ள இலகுவாக பல வர்த்தக மையங்களை நிகழ்வு ஏற்ப்பாட்டாளா்கள் அறியத்தந்துள்ளனர். Markham மக்கள்: South Asiyan Super Market - Markham & Major Mackenze New Spiceland - Markham & Steeles Babu Catering - McCowan & Bur oak Scarborough மக்கள்:…
-
- 0 replies
- 482 views
-
-
எங்கள் மண்ணில் வந்து குடியேறியுள்ள சிங்கள மக்களுக்குக் காணிகளை அளந்து கொடுத்துள்ள அதிகாரிகள், நான்கு வருடமாக இதே மண்ணில் இருக்கும் எங்கள் காணிகளை அளந்து வழங்காமல் புறக்கணிப்பது ஏன்? இவ்வாறு நாவற்குழி ஐயனார் கோயிலடிப் பகுதியில் அமைந்துள்ள புதுக்குடியேற்றத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நாவற்குழியில், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் காணியில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் அங்கு நிரந்தர வீடுகளை அமைத்துள்ளனர். இந்தக் குடியேற்றத்தில் 3 குடும்பங்கள் மட்டுமே நிரந்தரமாகத் தங்கியுள்ளன. இந்த நிலையில் சிங்கள மக்கள் தங்கியுள்ள காணிகளை அளவீடு செய்து அவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் கடந்த ஒரு வாரகாலமாகச் சீருடையினரின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டன. …
-
- 0 replies
- 286 views
-
-
133000 விருப்பு வாக்குகளை பெற்று முதலமைச்சரான எனக்கு ஆலோசணைகள் வழங்க வேண்டிய அவசியம் இல்லை:-விக்கி 21 அக்டோபர் 2013 "மகாநாட்டிற்கு முன் TNAயின் அங்கத்துவக் கட்சிகளின் ஆலோசனையைப் பெறவேண்டும்" மாவை கொழும்பில் நடைபெறவுள்ள முதலமைச்சர் மாநாட்டில் கலந்துகொள்வது என வடமாகாண முதலமைச்சர் சீ.வீ விக்னேஸவரன் தீர்மானித்து உள்ளதாகவும் ஆனால் தமிழத் தேசிய கூட்டமைப்பின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா அதற்கு முன் தமிழ்த் தேசியனக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என எதிர்ப்பு வெளியிட்டு உள்ளதாகவும் கூட்டமைப்பின் அதி உயர் பீட மூவரணிக்கு நெருங்கிய முக்கியஸ்த்தர் ஒருவர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார். முதலமைச்சர் மாநாட்டுக்கு செல்வதாக இருந்தால் அதற்கு …
-
- 20 replies
- 1.9k views
-
-
தமிழ் மக்களை புறக்கணித்து சிங்களவர்களுக்கு காணிகள்; நாவற்குழி புதுக்குடியேற்ற மக்கள் கவலை 23 அக்டோபர் 2013 'எங்கள் மண்ணில் வந்து குடியேறியுள்ள சிங்கள மக்களுக்குக் காணிகளை அளந்து கொடுத்துள்ள அதிகாரிகள்இ நான்கு வருடமாக இதே மண்ணில் இருக்கும் எங்கள் காணிகளை அளந்து வழங்காமல் புறக்கணிப்பது ஏன்'? என நாவற்குழி ஐயனார் கோயிலடிப் பகுதியில் அமைந்துள்ள புதுக்குடியேற்றத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் காணியில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் அங்கு நிரந்தர வீடுகளை அமைத்துள்ளனர். இந்தக் குடியேற்றத்தில் 3 குடும்பங்கள் மட்டுமே நிரந்தரமாகத் தங்கியுள்ளன. இந்த நிலையில் சிங்கள மக்கள் தங்கியுள்ள காணிகளை அளவீடு செய்து அவர்களுக்கு…
-
- 1 reply
- 380 views
-
-
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்குமாறு கென்யா கோரிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி இலங்கையில் ஆரம்பாகவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்குமாறு கென்யா கோரிக்கை விடுத்துள்ளது. அமர்வுகளை ஆபிரிக்க வலய நாடுகள் புறக்கணிக்க வேண்டுமென அமைதியான முறையில் கென்யா கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் கென்ய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் n;தாடரப்பட்டமைக்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பு கென்…
-
- 7 replies
- 902 views
-
-
கொமன்வெல்த் மாநாட்டுக்கு எதிரான பரப்புரைக்கு இந்தியாவில் பெரும் ஆதரவு [ புதன்கிழமை, 23 ஒக்ரோபர் 2013, 01:21 GMT ] [ தா.அருணாசலம் ] கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டை, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அனைத்துலக மன்னிப்புச்சபை ஆரம்பித்துள்ள பரப்புரைக்கு இந்தியாவில் இதுவரை 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அனைத்துலக மன்னிப்புச்சபையின், இந்தியாவுக்கான தலைமை நிறைவேற்று அதிகாரி அனந்தபத்மநாபன் வெளியிட்டுள்ளார். இந்தப் பரப்புரை கடந்த 5ம் நாள் தொடங்கப்பட்டது என்றும், கொமன்வெல்த் மாநாடு துவங்கும் வரை இது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொமன்வெல்த் மாநாட்டில் இருந்து இந்த…
-
- 0 replies
- 475 views
-
-
மன்மோகன் சிங் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்பதற்கு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு 23 அக்டோபர் 2013 இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்பதற்கு பல காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். தமிழக காங்கிரஸைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் இந்திய பிரதமர், இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்கக் கூடாது என கோரியுள்ளனர். மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜீ.கே.வாசன் அமர்வுகளில் பங்கேற்கக் கூடாது என கோரியிருந்தார். தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் கே.வீ. தங்கவேலுவும் அமர்வுகளில் பங்கேற்கக் கூடாது என கோரியுள்ளார். அமர்வுகளில் பங்கேற்கக் கூடாது எனக் கோரி கடிதமொன்றை ஏற்கனவே பிரதமருக்கு அனுப…
-
- 0 replies
- 509 views
-
-
மாகாண சபை அமர்வுக்கு முன்னர் TNAயின் உயர்குழுவைக் கூட்டக் கோரிக்கை 23 அக்டோபர் 2013 இலங்கையின் வடமாகாண சபை தனது முதலாவது அமர்வை வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்தவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் குழுவாகிய ஒருங்கிணைப்பு குழுவைக் கூட்ட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார். வடமாகாண சபையின் முதலாவது அமர்வில் சம்பிரதாயபூர்வமாக ஆற்றப்படவுள்ள முதலமைச்சரின் கொள்கைப் பிரகடன உரை தயாரிக்கப்படுவதற்கு முன்னதாக இந்தக்குழு கூட்டப்பட வேண்டும் என்று அவர் கோரியிருக்கின்றார். வரும் ஐந்து வருடங்களுக்குச் செயற்படவுள்ள வடமாகாண சபையின் செயற்பாடுகள் எப்படி இருக்க வேண்டும், எப்படிச்…
-
- 0 replies
- 303 views
-
-
கல்முனை மேயர் பதவியில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இழுபறிநிலை தொடர்கிறது - 23 அக்டோபர் 2013 மேயர் பதவியை இராஜினாமா செய்யுமாறு கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபிடம் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை காலை நீதி அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இதன்போதே மேயர் பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்முனை மாநகர சபை தேர்தல் 2011ஆம் ஆண்டு இடம்பெற்றது. இதனையடுத்து மேயரை நியமிப்பதில் சர்ச்சை ஏற்பட்டது. இதன்…
-
- 0 replies
- 350 views
-
-
யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை - மாமனார் உட்பட மூவர் கைது 23 அக்டோபர் 2013 யாழ்ப்பாணம், பழம் வீதி, ஆறுகால் மடம் பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (22.10.13) இரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். பழம் வீதி, ஆறுகால் மடத்தைச் சேர்ந்த 30 வயதான தர்மராசா சத்தியபாபு என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். குடும்ப பிரச்சினை காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. சடலம் கொலை செய்யப்பட்ட இடத்திலேயே வைக்கப்பட்டுள்ள அதேவேளை மரண விசாரணைகள் இன்று (23.10.13) இடம…
-
- 0 replies
- 383 views
-
-
பயங்கரவாதிகளுக்கு கல்லறை அமைக்க அனுமதிக்க முடியாது – மஹிந்த ஹத்துருசிங்க 23 அக்டோபர் 2013 பயங்கரவாதிகளுக்கு கல்லறை அமைக்க அனுமதிக்க முடியாது என யாழ்;ப்பாண கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு நினைவுத் தூபிகள் மற்றும் கல்லறைகளை அமைப்பதற்கு உலகின் எந்தவொரு ஜனநாயக அரசாங்கமும் அனுமதியளிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாய் நீதவானும் கல்வியலாளருமான வட மாகாணசபையின் முதல்வர் விக்னேஸ்வரன் இந்த விடயத்தை நன்கு அறிவார் எனத் தெரிவித்துள்ளார். அல் கய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்கத் துருப்பினர் கொலை செய்து பசுபிக் கடற்பகுதியில் புதைத்தனர் எனவும். எந்த இடத்தில் புதைத்தார்…
-
- 0 replies
- 251 views
-
-
வட மாகாணசபையின் புதிய கட்டடத் திறபு குறித்த இரகசிய ஏற்பாடுகள் முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றுள்ளது: 23 அக்டோபர் 2013 முதலாவது அமர்வுக்கான ஏற்பாடுகளை மட்டும் கவனிக்க அதிகாரிகளுக்கு பணிப்பு:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வட மாகாணசபையின் பிரதிநிதிகளுக்கான பிரதான அமர்வுக்;கட்டடத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூலம் திறந்து வைக்க மாகாணசபையின் பிரதம செயலாளர் மேற்கொண்ட முயற்சி முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றுள்ளது. சுமார் 450 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கைதடியில் கட்டப்பட்டு வரும் பிரதிநிதிகள் சபைக்கான அமர்வுக் கட்டடத்தின் முதலாம் தளம் அவசர அவசரமாக கட்டி முடிக்கப்பட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. குறித்த புதிய கட்டட தொகுதியிலேயே வடக்கு மாகாண…
-
- 0 replies
- 353 views
-
-
யுத்த வலய பெண்களை அரசாங்கம் உதாசீனம் செய்கின்றது – MRG - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் 23 அக்டோபர் 2013 "யுத்த வலயத்திற்குள் பிரவேசிக்கும் புலம்பெயர் தமிழர்கள் சிலரும், தங்களது பிள்ளைகளை பாலியல் போகப் பொருளாக நோக்குகின்றனர்" யுத்த வலயத்தைச் சேர்ந்த பெண்களை அரசாங்கம் உதாசீனம் செய்து வருவதாக பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் சிறுபான்மை உரிமைகள் குழு குற்றம் சுமத்தியுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த பெண்கள் ஒடுக்கப்படுவதுடன், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டில் நாட்டில் இடம்பெற்று வந்த 26 ஆண்டு கால யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் யுத்த வலய பெண்கள் மீதான பாலியல…
-
- 0 replies
- 307 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்னணியில் உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை மேற்குலக நாடுகளில் இயங்குவதற்கு அனுமதித்திருப்பதானது, பயங்கரவாதத்திற்கு துணைபோகும் செயற்பாடென இலங்கையின் இராணுவ மேஜர் ஜெனரல் உதய பெரேரா குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழர் தாயகத்தில் தமிழ் பெண்கள் எதிர்கொள்கின்ற பாலியல் அச்சுறுத்தல்களுக்கு இலங்கை இராணுவத்தினரே காரணமாக அமைகின்றனர் என்ற குற்றச்சாட்டொன்றுக்கு பதில் அளிக்கும் பொழுதே இக்கருத்தினை இராணுவ மேஜர் வெளிப்படுத்தியுள்ளார். தமிழர் பகுதிகளில் இடம்பெறும் தமிழ் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை அங்குள்ள சமூக விரோதிகளே மேற்கொள்கிறார்கள் என்றும் அதனை சாதகமாக வைத்து இலங்கைக்கு எதிரான வெளிநாட்டு சக்திகளும், புலம்பெயர் தமிழ் பிரிவினை சக்திகளும்…
-
- 9 replies
- 986 views
-
-
பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அடுத்து நடக்கவுள்ள தேர்தலில் தொழிற்கட்சியின் சார்பில் உமா குமரன் என்ற இலங்கைத் தமிழ்ப் பெண் போட்டியிடவுள்ளார். உமா குமரனின் பெற்றோர் சிறிலங்காவில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரினால், லண்டனுக்கு குடிபெயர்ந்தனர். லண்டனில் பிறந்த உமா குமரன், ஹரோ தொகுதியில் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி சார்பில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். லண்டன் குயீன்ஸ் மேரி பல்கலைக்கழகத்தில், அரசியலில் கலைப்பட்டம் பெற்ற உமா குமரன், பொதுக் கொள்கையில், முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார். தமிழ், சிங்களம், ஆங்கிலம், பிரெஞ், ஜேர்மன் ஆகிய ஐந்து மொழிகளைப் பேசும் திறன் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://akkinikkunchu.com/new/index.php
-
- 41 replies
- 2.5k views
-
-
இந்திய பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது: சம்பந்தர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இன்று (அக்டோபர் 22,2013) செவ்வாய்க்கிழமை காலை தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களை சென்னையில் சந்தித்து இலங்கைத் தமிழர் நிலை தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சம்பந்தன், இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்வதை இலங்கைத் தமிழர்கள் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். "இந்தியா வேண்டுமானால் அங்கு கலந்து கொள்வதன் வழியே அந்நாட்டுத் தமிழர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படக்கூடும் என நினைக்கலாம், …
-
- 1 reply
- 644 views
-